Monday, 9 May 2016

இறுதியான உறவை நாடுங்கள்! *






                 "ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன்
                  வீட்டாரே."
                                         (மத்தேயு 10:36)

                 "தகப்பனையாவது தாயையாவது என்னிலும்
                  அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன்
                  அல்ல; மகனையாவது மகளையாவது  என்னிலும்
                  அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன்
                  அல்ல."
                                         (மத்தேயு 10:37)

                  "யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன்
                    தகப்பனையும் தாயையும் மனைவியையும்
                    பிள்ளைகளையும்  சகோதரரையும் சகோ
                    தரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்கா
                    விட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
                                        ( லூக்கா 14:26)
         
                  "அப்படியே உங்களில் எவனாகிலும்
                   தனக்கு உண்டானவைகளையெல்லாம்
                   வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச்
                   சீஷனாயிருக்கமாட்டான்."
                                       ( லூக்கா 14:33)

ஆன்மிகத்தில் தீவிரமாக ஈடுபடவிரும்பும் ஒருவனுக்கு, வாழ்க்கையை
மேலோட்டமாக வாழ்ந்து சென்றிடாமல் வாழ்க்கையின் உட்பொருளை
அர்த்தத்தை    உண்மையை   மெய்ம்மையை அறிந்திடத் தீவிர ஆர்வம்
கொண்ட  ஒருவனுக்கு  இயல்பாகவே  'குடும்பம்'  எனும் அமைப்பானது
சாதகமாக இருக்காது!    மேலும்    அதிகமானோருக்கு ஆன்மீக நாட்டம்
என்பதே    ஏற்படுவதில்லை என்பதற்கும்  குடும்ப-அமைப்பே காரணம்
எனலாம்!

இன்னும், குடும்பஅமைப்பு என்பது சமூகஅமைப்பின் ஒரு சிறுபகுதியே
ஒரு சிறு உறுப்பே  என்பதால்  அது  தனது மட்டுப்பாடான அம்சங்களை
சமூக அமைப்பிலிருந்தே  சுவீகரித்துக்கொண்டுள்ளது   எனலாம்!    இவ்
வகையில் சமூகஅமைப்பும் தனிமனிதர்களின் ஆன்மீகநாட்டத்திற்கும்
வளர்ச்சிக்கும் சாதாகமாக அமைந்திடாது!

ஏனெனில்,  குடும்ப அமைப்பும்  சமூகஅமைப்பும்    ஒரு தனிமனித ஜீவி
யைப்போன்று    வாழ்க்கையை    நேரே   அணுகக்கூடிய   உணரக்கூடிய
தன்மையைப் பெற்றிருக்கவில்லை.    வாழ்க்கையை    அதன் ஆழமான
உண்மையை   ஒவ்வொரு   தனிமனிதனாலும்  மட்டுமே  உணரமுடியும்!

சமூகஅமைப்பு  என்பது பல தனிமனிதர்களால்தான் ஆனது என்றாலும்
எல்லாரும்    சமமான   ஒரே அளவிலான    உளவியல்   மற்றும்    ஆன்மீக
வளர்ச்சியைப்  பெற்றிருப்பதில்லை!    ஆக    ஒவ்வொரு  தனிமனிதரும்
வாழ்க்கையை        ஒவ்வொரு விதமாகவே   காண்பர்   புரிந்துகொள்வர்.
அதில்   யாதொரு  ஒற்றுமையையும்   ஒத்தகருத்தையும் எட்ட முடியாது!
குடும்ப அமைப்பின்  நிலையும் இதுவே!    வாழ்க்கையின் அசலான தன்
மையை  அதன் ஆழமான அர்த்தத்தை  உண்மையை    உணர்வுத் துடிப்
புள்ள ஒவ்வொரு தனிமனிதனாலும் உணரமுடியும். ஆனாலும் அத்தனி
மனிதனின் கருத்தை  பார்வையை  சமூகத்தின்   அனைவரும்   ஏற்றுக்
கொள்வர்   என்று  சொல்லமுடியாது.   ஏனெனில்,    தாங்கள்  கண்டிராத
அனுபவம் கொள்ளாத   உணராத  ஒரு  விஷயம்  குறித்த  அறிவை புரித
லை பிற தனிமனிதர்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது;  அதைப்பகிர்ந்து
கொள்ளவும் முடியாது.

அப்படி   சமூகத்திலுள்ள     குடும்பத்திலுள்ள    எல்லா உறுப்பினர்களும்
ஏற்றுக்கொள்ளக்கூடியதாக  பகிர்ந்துகொள்ளக்கூடியதாக அனைவருக்
கும் பொதுவான ஒரு வாழ்க்கை உள்ளதென்றால் அது   அடிப்படையான
அன்றாட ஜீவித்தல் மட்டுமேயாகும்!

ஆம் புத்தரின் இயேசுவின் கருத்துகளை  வாழ்க்கைப் பார்வையை   நம்
எல்லோராலும்   எளிதாகப்   புரிந்துகொள்ளவோ   பகிர்ந்துகொள்ளவோ
இயலாது!   ஆனால்  அவர்களுடைய  உணவை பொருட்களை அறையை
நாம் பகிர்ந்துகொள்ள முடியும்!

சமூகத்திற்கு வெறும் உயிர்-வாழ்தலும் அதற்குரிய தேவைகளின் நிறை
வேற்றமும் மட்டுமே தெரியும். அதற்குமேல் ஆன்மீகரீதியான வாழ்க்கை
இன்னும் மனிதவாழ்க்கையின் அசலான குறிக்கோள்  இலக்கு குறித்தும்
எதுவும் தெரியாது!  அவை குறித்த  அவசியமும்  முக்கியத்துவமும் அதற்
குப்புரியாது!

ஆனால் இயேசு,  நமக்கும்   உலகிற்கும்  சொல்ல வந்தது  நாமனைவரும்
அறிந்த  இந்த அன்றாட உயிர்வாழ்க்கையைக்கடந்த உணர்வுபூர்வமான
தொரு "உயர்-வாழ்க்கை"யைப் பற்றியே ஆகும்.

ஆம்  இயேசுவின் பார்வையில் வாழ்க்கை என்பது முற்றிலும்  சுத்தமான
தாக  சுதந்திரமானதாக கலப்படமில்லாததாகத் திகழ்கிறது. பொதுவாக
நாமெல்லோரும் வாழ்க்கையை ஒரு நெடிய பயணமாகக் கருதுகிறோம்.
ஆனால்  இயேசுவோ பயணத்தின் முடிவாகப்   போய்ச்சேருமிடத்தையே
வாழ்க்கையாகக்    காண்கிறார்!    அவ்வாறே  அவர்  அந்த  இலக்கையும்
சென்றடைந்து விட்டார். அவர் அடைந்தது  வாழ்க்கையின் "உச்ச நிலை"
யாகும்! அங்கிருந்துதான் அவர் நமக்கு உபதேசிக்கிறார்!   நாம் ஒவ்வொ
ருவரும்   அந்த    'உச்ச-நிலையை'   முழுமையை   அடையவேண்டுமென
நமக்கு நேர்வழியைக் காட்டுகிறார்!

இது   மிகவும்  முக்கியமானது!   எந்தவொரு பயணமும்  அதன் முடிவிடத்
தைக்கொண்டுதான் அர்த்தம் பெறுகிறது. வாழ்க்கையும் அப்படித்தான்.
போய்ச்  சேருமிடம்  அறியாத     முடிவிடமில்லாத  பயணம்    அர்த்தமற்ற
தாகும்!    நாம் பயணிக்கிறோம்,    அதாவது   'வாழ்கிறோம்'  என்கிறோம்!
ஆனால் நாம் எங்கே எதை நோக்கிச்செல்கிறோம் என்பது நமக்குத்தெரி
யாது!    அதைத்  தெரிந்து  கொள்ள  நாம்  பெரிதாக  ஆர்வமும்   கொள்வ
தில்லை முயற்சியும் மேற்கொள்வதில்லை.  நாம்    உண்மையில் போய்ச்
சேரவேண்டியஇடத்தை அறியாததால் "மரணம்" நம்மை வந்துசேர்கிறது!
ஆனால்  முறையாக  உண்மையாக  நாம் பயணித்தோமெனில் 'மரணம்'
நம்மை  நெருங்குவதற்குள்   நாம்   நித்தியவாழ்வை   அடைந்திடுவோம்!
ஏனெனில் உண்மையான உணர்வார்ந்த வாழ்க்கை மரணத்தில் முடிவது
இல்லை!   மாறாக  முழுமையான   அழிவில்லா   நித்திய   வாழ்க்கையில்
தான்  அது  நிறைவடையும்!   உண்மையான வாழ்க்கை ஒரு போதும் அழி
வதோ,  முடிவடைவதோ  கிடையாது!!  மாறாக  வாழ்க்கை முழுமையடை
யவே செய்கிறது!

உயிர்-பிழைத்திருத்தலைத்தவிர மனித-வாழ்க்கை பற்றி எதுவுமே தெரி
யாத ஒரு பெரும் சமூகத்திற்குள்,  அதன் பகுதியான குடும்ப-அமைப்பிற்
குள்தான் (தனி)மனிதர்கள் பிறந்து வளர்ந்து வாழ்ந்து கரையேறவேண்டி
யுள்ளது என்பது துரதிருஷ்டவசமானதாகும்!

மேலும்  ஆன்மீகரீதியாக வளர்ச்சியடைந்த தனி மனிதர்களுடன் ஒப்பிடு
கையில்     சமூகமும்   குடும்பமும்  மிகவும்  பின்தங்கிய    பிற்போக்கான
ஜந்துக்களின்    கோட்டையாகவே   உள்ளன எனலாம்!ஆகவே அன்றாடம்
கடந்த 'ஆன்மீகவாழ்க்கை' என்பது இந்த சமூக-ஜந்துக்களுக்கும் குடும்ப
ஜந்துக்களுக்கும் ஒரு மாபெரும் 'அச்சுறுத்தலாகவும்' 'வாழ்க்கைவிரோத'
மான விவகாரமாகவே தெரியும்!

ஆன்மீகவளர்ச்சியின் உச்சத்தையடைந்த இயேசு போன்ற ஒரு தனிமனி
தரானவர்  அன்றாட வாழ்க்கை  நடைமுறைகளையும் மட்டுப்படுத்துகிற
அதன்   சுற்றினையும்     கடந்து  செல்வதன்  அவசியத்தைப்  போதிக்கும்
போது   அவர்   ஒட்டு மொத்தமாக    இந்த    அடிப்படை வாழ்க்கையையே
தகர்ப்பவராகவே மறுப்பவராகவே தெரிவார்!   இயேசுவின் தனிச்சிறப்பு
மிக்க 'வாழ்க்கைப்பார்வை' யின் சாரம் என்னவென்றால் :
           வாழ்க்கை என்பது உணவு உடை உறைவிடம்
           மற்றும் உறவுகள் குறித்த விவகாரம் அல்ல!
என்பதே யாகும்! இவ்விவகாரங்களுக்கும்  வாழ்க்கையில் இடம் உள்ளது
என்றாலும் அதற்கான இடம் மிகமிகச் சிறியதே என்கிறார்! ஆகவேதான்
அவர்     "என்னத்தை உண்போம்   என்னத்தைக் குடிப்போம்  என்னத்தை
உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள் . . .முதலாவது தேவனின்ராஜ்
யத்தை தேடுங்கள். ." என்கிற வசனத்தின் மூலம் வாழ்க்கையை வெறும்
"சோற்றுப் பிரச்சினை"யாகவும் தேவைகளுக்குச் சேவைபுரியும்  விவகா
ரமாகவும்  காண்கிற  சுருக்கி விடுகிற மட்டுப்பாட்டிலிருந்தும் வெளிவரு
மாறு நம்மைக் கோருகிறார்!  ஆகவே தான் :
                    "ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள்
                     அவன் வீட்டாரே."          (மத்தேயு 10:36)                                          
என்றுசொல்லி நம்மை எச்சரிக்கிறார்!   ஆம்,  'ஒரு மனிதனுக்கு எதிரிகள்
அவன் குடும்பமே குடும்பத்தாரே' என்பதை நாம் அப்படியே எடுத்தஎடுப்
பிலேயே புரிந்துகொள்ளமுடியாது!

முதலில்  வீடு குடும்பம் என்பவை   எவற்றைக்குறிக்கின்றன பிரதி நிதித்
துவம்  செய்கின்றன  என்பதைக்காண்போம்.   வீடு  குடும்பம்   என்பவை
மிகவும்  பாதுகாப்பான  சௌகரியமானதொரு   கூடு  எனலாம். பெரிதும்
அடிப்படையானதும்   உடனடியானதுமான  தேவைகளை மட்டுமே மைய
மாகக்கொண்டதொரு 'வாழ்க்கை' யை மட்டுமே அவை பிரதிநிதித்துவம்
செய்கின்றன.    அடுத்து   பிராணித்தனமான   இன்பங்களையும்   இச்சை
களையும்     பாசப் பிணைப்புக்களையும்   பிரதானமாகக்   கொண்டவை.
அடுத்து  பழமை  பாரம்பரியம் பிற்போக்குத்தனம் ஆகியவற்றைப்பேணு
கிற அமைப்புமாகும்!

அடுத்து    ஒரு குடும்பத்திலுள்ள   அங்கத்தினர்களைப் பாதுகாத்துப் பரா
மரிப்பதற்கு  குடும்பத்தலைவராக  விளங்குபவர் உத்தியோகம் தொழில்
என்று வெளியேசென்று சம்பாதித்துவரவேண்டியுள்ளது. அதற்காக அவர்
தமது உழைப்பையும் சக்தியையும் நேரத்தையும்முழுமையாகச்செலவிட
வேண்டியிருப்பதால்   அவரால்    அன்றாட வாழ்க்கைக்குரிய  தேவைகள்
பொருட்கள் அலுவல்கள் விவகாரங்கள் பரிவர்த்தனைகள்ஆகியவற்றை
கடந்து  வேறு எந்த விஷயத்திலும்  ஈடுபடுவது என்பது     இயலாத காரிய
மாகும்! அதில் எந்தவித பொருட்-பயனும் இல்லாத  உயரிய ஆன்மீக விஷ
யங்களில் ஈடுபடுவது என்பது  நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத காரிய
மாகும்!

இன்னும்    பலரது குடும்பங்களில்      பொருளாதாரக் காரணங்களுக்காக
குடும்பத்  'தலைவரும்'   'தலைவியும்' வெளியேசென்று பணி புரியவேண்
டியுள்ளது!   குழந்தைகளுக்கோ பள்ளி கல்லூரி செல்வது பிழைப்புக்கான
கல்வியையும்   திறமைகளையும் கற்பது   போன்ற  ஈடுபாடுகள் உள்ளன.
இவ்வாறு குடும்பத்திலுள்ள அனைத்துஅங்கத்தினர்களும் - சிறியவர்கள்
பெரியவர்கள்   என எல்லோருமே  அன்றாட உயிர்வாழ்த்லுக்கான  பொரு
ளியல்    சம்பந்தமான   விவகாரங்களில்  மட்டுமே    முழுவதுமாக  மூழ்கி
யிருக்க   வேண்டியுள்ளது!    இதனால்   மனிதஜீவிகள்   என்கிற வகையில்
மனிதஜீவிக்குரிய    உயரிய-ஆன்மீக வாழ்க்கைத்  தொடர்பான விஷயங்
களில்  ஈடுபட இயலாமல்  எப்போதும் புறத்தே பொருட்கள் மற்றும் சமூக
நிகழ்வுகளின்  உலகத்தைச் சார்ந்திருக்குமாறு  ஆகிவிடுகிறது! அதாவது
வீடு  குடும்பம்  குடும்பத்தார் என்றாலே உடலின் நலம் உள்ளிட்ட உடலின்
வாழ்க்கையை   மட்டுமே    பிரதிநிதித்துவம் செய்வதாயுள்ளது. ஆக ஆன்
மீகம் சேராத  வெறும்  உடலின்-வாழ்க்கை  என்பது  பிராணித்தனமானது
அதாவது   மனிதத்தரத்திற்குக் குறைவானது    என்பதை பிரத்யேகமாகக்
குறிப்பிடத் தேவையில்லை!

வீடு குடும்பம் எனும் சூழலில் லௌகீகம் மட்டுமே பெருகிவளரும்! அதில்
ஆன்மீகம்  என்கிற  பேச்சுக்கே இடமில்லை   என்பது தான் அப்பட்டமான
உண்மை நிலையாகும்!   இத்தகைய  சூழலில் ஒருசில மனிதஜீவிகளுக்கு
எவ்வாறேனும்   ஆன்மீக-நாட்டம் தோன்றிவிடுகிறது   என்றாலும் குடும்ப
அங்கத்தினர்களின்   எதிர்ப்புகளையும்   தடைகளையும் தாண்டி  அவர்க
ளால்  ஆன்மீகத்தில் முன்னேறுவது முழுமையடைவது என்பது சாதாரண
விஷயமல்ல!    ஆகவே தான்,    "ஒரு   மனுஷனுக்கு    சத்துருக்கள்    அவன்
வீட்டாரே" என்று இயேசு குறிப்பிடுகிறார். மேலும்,

                  "தகப்பனையாவது தாயையாவது என்னிலும்
                   அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன்
                   அல்ல; மகனையாவது மகளையாவது  என்னிலும்
                   அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன்
                   அல்ல."                                         (மத்தேயு 10:37)
                                       
எனவும் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் தனது தகப்பனையோ, தாயையோ        
மகனையோ   மகளையோ  அதிகமாய் நேசிப்பதில்  பெரிய தவறு எதுவும்
இல்லை!   ஆனால்  இவ்வாறு  தனது குடும்பத்தாரை அதிகமாய் நேசிப்பது
என்பது  வெறும் 'நேசிப்போடு'  நின்றுவிடக்கூடிய விஷயமல்ல!  நாம் யார்
யாரையெல்லாம்     அதிகமாய்  நேசிக்கிறோமோ  அவர்களுடைய    நலன்
களையும்   தேவைகளையும்   ஆசைகளையும் விருப்பங்களையும்   நிறை
வேற்றுவதும் அதில் அடங்கியுள்ளது - சில சமயங்களில் அவர்களது விருப்
பம்  நியாயமற்றதாகவும்   பிறர்க்குத்  தீங்குவிளைவிப்பதாகவும் தவறான
தாகவும்   அர்த்தமற்றதாகவும் கூட அமைந்து விடலாம்!    ஒருவன்     தனது
மனைவியின்    விருப்பங்களைப் பூர்த்தி செய்வதற்காக   கொலை   களவு
போன்ற தீய காரியங்களையும்  செய்திடத் துணியலாம்!  ஆக நாம் அதிக
மாய்   நேசிப்பவர்களை    மகிழ்விக்கும் பொருட்டு அவர்களது விருப்பங்க
ளுக்கும்  வழிமுறைகளுக்கும்  இணங்கிச்செல்வதும் அவர்களுக்குச் சேவ
கம்   புரிவதும்   தவிர்க்க இயலாத தாகிவிடும்!    இவ்வகையில்   உறவுகள்
யாவும் பினைக்கும் தளைகளே சங்கிலிகளே எனலாம்!
ஆக,            " தகப்பனையாவது   தாயையாவது   என்னிலும்
                       அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன்
                       அல்ல; மகனையாவது மகளையாவது  என்னிலும்
                       அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல."                        
என்று   இயேசு சொல்லிடும் போது   அவர்  தன்னை முன்னிலைப்படுத்துவ
தாகவும் பிரதானப்படுத்துவதாகவும் தெரியலாம்!  ஆனால் அவர் ஓர் உயர்
ஆன்மீகவாழ்க்கையைப் பிரதிநிதித்துவம்செய்வதால் மேலும் அத்தகைய
உயரிய வாழ்க்கையையே அவரும் வாழ்ந்து கொண்டிருந்ததால் அதையே
அவர்    நமக்கும்   உபதேசிப்பதால்    பிற  சாதாரண மனித உறவுகளையும்
பொருட்களையும்   விஷயங்களையும்விட அதிகமாய் நாம் இயேசுவையும்
அவர்  உபதேசிக்கும் உயரிய ஆன்மீக வாழ்க்கையையும் நேசிப்பது பிரதா
னமாகிறது!

உயரிய   ஆன்மீக வாழ்க்கை என்பது    "கடவுளுடனான"   உறவைப்பற்றிய
தாகையால்  நாம்   குடும்பம்  மற்றும்   பிற உறவுகளில்  சிறைப்பட்டிராமல்
அவற்றைக்கடந்து  செல்வது அவசியமாகிறது!   ஏனெனில் குடும்ப உறவுக
ளைப்போல   வேறு   எந்த உறவும்   நம்மைப்  பெரிதாகச்   சிறைப்பிடிப்பது
இல்லை! மேலும் குடும்ப உறவுகள்   யாவும்   குறுகியவையும்   சுயநலமான
வையும்   ஆகும்! ஆகவே அனைத்திற்கும் மூலமாகவும் முடிவாகவும் விளங்
குகிற கடவுளைத்தேடுகிற,   கடவுளுடனான உறவு  மட்டுமே   முக்கியமான
தாகும்.    ஏனெனில்  அது மட்டுமே   மனிதனை   நிறைவுசெய்து  முழுமைப்
படுத்தி "விடுதலை" செய்வதாகும்!

ஆனால்   கடவுளை ஏன் மனிதன் முதலில் தேடிடவும் நாடிடவும் வேண்டும்?
சாதாரணமாக  பொதுவாக எல்லோரும் எண்ணுவது போல கடவுள் என்பது
படைப்புக்கு  மூலகாரணமாக  அமைந்திட்ட  ஒன்று  மட்டுமல்ல!  அதாவது
கடவுள்  உலகைப்படைத்துவிட்டு  பொறுப்பில்லாமல்   எங்கோ காணாமல்
போய்விடவில்லை! அல்லது அவர் மேலே சொர்க்கத்தில்அமர்ந்துகொண்டு
கீழே      உலகில்   நிகழ்பவைகளை    கண்காணித்துக்கொண்டும்   இருக்க
வில்லை!   மாறாக   கடவுள்  படைப்பினுள்  உள்ளடங்கியுள்ளார்!   அதாவது
கடவுள்  உலகைப் படைக்கவில்லை;   மாறாக  அவரே  உலகமாக உருமாறி
யுள்ளார்!   உலகமாக உருமாறிய கடவுளைத்தான் நாம் 'படைப்பு' 'சிருஷ்டி'
'உலகம்' என்றெல்லாம் அழைக்கிறோம்!

உலகமாக   உருமாறிய கடவுள்  மனிதஜீவியின் வழியாக  மனிதனின்  உள்
ளேயும் ஊடேயுமாக எழுந்து (வெளிப்பட்டு) மீண்டும் தனது அசலானநிலை
யை அடையும்விதமாகத்  திட்டம் கொண்டுள்ளார்!

                  "தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச்
                    சிருஷ்டித்தார்,அவனைத் தேவசாயலாகவே
                    சிருஷ்டித்தார்.ஆணும் பெண்ணுமாக
                    அவர்களைச்  சிருஷ்டித்தார்."
                                     (ஆதியாகமம் 1 :27) / பழைய ஏற்பாடு

என்ற    வசனத்தின்   உள்ளார்ந்த  அர்த்தம்  இதுதான். சிருஷ்டியாக மாறிய
கடவுள் சிருஷ்டியின் நிலையிலிருந்து மீண்டும் தனது அசலானநிலைக்குத்
திரும்பிடும்  வழிமுறையைத்தான் நாம்  "பரிணாமம்"  என்றழைக்கிறோம்.
அதில் கடவுள் தனது  அசலான நிலைக்குத் திரும்புவது என்பதும்   மனிதன்
கடவுளின்  மீது நேசம்  (தேவ அன்பு)  கொண்டு  அவரைத் தேடிக்  கண்டடை
வது என்பதும் ஒன்றேயாகும்.

கடவுளின் மீது நேசம் கொள்வது,   'தேவஅன்பு'  கொள்வது என்பது  ஞானத்
தாகம் கொண்டு      உண்மையைத் தேடுவது,    மெய்ம்மையைத்  தேடுவது
தன்னையறிவது, வாழ்வின் அர்த்தத்தைத் தேடுவது,  மூலத்தைத்தேடுவது
முழுமையைத் தேடுவது என்பவற்றையே குறிக்கின்றது.   ஆம்   மனிதஜீவி
யானவன் ஒரு எலியைப் போன்றவனோ,  அல்லது    தவளையைப் போன்ற
வனோ    அல்லவெனில்,     அவன்  தனது  உணவைத்தேடுவதற்கு முன்பாக
உண்மையைத் தேடுபவனாக இருக்கவேண்டும்!அவன் தனது 'இரை'யைத்
தேடுவதற்கு  முன்பாக,   "இறை"யைத் தேட வேண்டும்!  ஏனெனில்  கடவுள்
என்பது நமது "உயிரின் உயிர்,"  "ஆன்மாவின் ஆன்மா" ஆகும். அனைத்தின்
சாரம்  ஆகும்.     'மெய்ம்மையின் மெய்ம்மையாக'   விளங்குவது   கடவுளே!
ஆகவேதான் எல்லா உறவுகளையும் கடந்து நாம் கடவுளைத்  தேடிக்கண்ட
டைவது அவசியமாகும்!

இயேசு நம்மிடம் நமது தாய் தந்தையை நம் குழந்தைகளை நேசிக்கவேண்
டாம் என்று சொல்லவில்லை!   மாறாக  நமது  "நேசிப்பின்"  இலக்கு  எதைக்
குறிவைத்ததாக  உள்ளது என்பது குறித்து கவனம் கொள்ளச்  சொல்கிறார்.
அதாவது  நாம் நமது தாய் தந்தையை குழந்தைகளை நேசிப்பதன் வழியே
நாம் அவர்களை எங்கு கொண்டு சேர்க்கிறோம்?   அல்லது    நமது     தாயும்
தந்தையும்   அவர்களது    நேசத்தினால்  நம்மை எங்கு கொண்டு  சேர்த்துள்
ளார்கள்?   மேலும்   நம்முடைய   'சுய-நேசம் '  (ஒருவன் தன்மீது கொள்ளும்
நேசம்) என்பது நம்மை எங்கு கொண்டுசேர்க்கிறது? இவைகுறித்தெல்லாம்
என்றாவது நாம் யோசித்திருக்கிறோமா? நம்முடைய   'சுய-நேசம்'  நம்மை
உண்மையில் கரை சேர்க்கிறதா?   நம்மை  நாம்  அவ்வளவு  அதிகமாகவும்
முழுமையாகவும் நேசிக்கிறோம்!   ஆனால்  முடிவில்  மரணத்தில் அல்லவா
நாம் முடிந்து போகிறோம்?  அப்படியானால் நேசம் அன்பு என்பது பயனற்ற
விஷயமா?  அன்பைவிட  மரணம்  வலியதா?   அப்படியானால்  எது அல்லது
எதனுடனான  நேசம்  அல்லது  உறவு  நம்மை  பாதுகாப்பான இறுதிக் கரை
யில் கொண்டு சேர்க்கும்?

நம்    பெற்றோர்கள்  நம்மை அன்பைக் கொட்டி  சீராட்டிப் பாராட்டி வளர்க்
கிறார்கள்!    ஆனால்   அவர்கள்  நம்மை  எதற்குத் தயார்படுத்துகிறார்கள்?
நாமும் நம் குழந்தைகளை அன்பைப்பொழிந்து வளர்த்து அவர்களை எதற்
குத்  தயார்படுத்துகிறோம்?    நமது  அன்பு  நேசம்  யாவும்   நம்மையும்  நம்
சொந்தங்களையும் வாழ்க்கையிலிருந்து அழிவிலா நித்தியவாழ்க்கைக்கு
கொண்டு சேர்ப்பதாகவுள்ளதா?  அதாவது 'நித்திய-ஜீவனை' அடைவதற்கு
நம்மைத்  தயார்படுத்துவதாகவுள்ளதா?  அல்லது   மரணத்திடம் கொண்டு
சேர்ப்பிக்கிறதாகவுள்ளதா?   அப்படியானால்   அதாவது மரணம் தான் முடி
வான முடிவு என்றால் நம்முடைய அன்பு நேசம் பாசம்  யாவும் பயனற்றதே!
அர்த்தமற்றதே! மிகவும் மட்டுப்பாடானதே! ஆம் நம்முடையஅன்பில் ஏதோ
பெருங்குற்றம் உள்ளது.

அன்பு   என்பது   மிகவும் மையமானது! அன்பு இல்லாமல் ,  நாம் மட்டுமல்ல
புழு பூச்சிகள் பறவைகள் விலங்குகள்  எதுவும் வாழ முடியாது! "வாழவேண்
டும்"  எனும் விருப்பம்,    "தம்மைப்  பாதுகாத்துக் கொள்ளவேண்டும்"  எனும்
உந்துதல் இன்றி எவரும் எதுவும் உயிர்வாழ முடியாது! மானிட ஜீவிகளாகிய
நாம்  தற்போது   வாழ்ந்துகொண்டிருக்கிற  அர்த்தமற்ற  உணர்வற்ற   இலக்
கற்ற  மேலோட்டமான இந்த அரைகுறையான வாழ்க்கையும்கூட மிகஅடிப்
படையான, சுய-நலம் மிகுந்த 'சுய-அன்பினால்' தான் சாத்தியமாகிறது!

'வாழவேண்டும் எனும் விருப்பமும்' மற்றும் 'தம்மைப்பாதுகாத்துக்கொள்ள
வேண்டும்  எனும்  உந்துதலும்'   தான்       அன்பிற்கான     அடிப்படையாகும்!
ஆனால்    நம்முடைய   அன்பைக்கொண்டு  நம்மால்  உயிர்-பிழைத்திருக்க
மட்டும் முடிகிறதேயொழிய முழுமையாக வாழவும் முழுமையாக நம்மைப்
பாதுகாத்துக்கொள்ளவும் முடிகிறதா?  'மரணம்' சம்பவிக்கும் வரை மட்டும்
வாழமுடியும்! மரணம்வந்ததும் நம் கதை முடிந்துவிடும்! அதாவது முழுமை
குறைவான  முதிராத 'பிஞ்சு' அன்பைக்கொண்டு நாம் ஏதோ வாழ்கிறோம்!
ஆனால்  அதைக்கொண்டு  நம்மை   முழுமையாகக்   காப்பாற்றிக்கொள்ள
முடிவதில்லை! அப்படியானால் முழுமையான அன்பு நம்மிடமிருந்தால்  நம்
மால்   முழுமையாக    வாழவும்   முழுமையாக மரணத்திடமிருந்து நம்மைக்
காப்பாற்றிக்கொள்ளவும் முடியும்!

ஆகவேதான்  இயேசு "தேவனின் ராஜ்யம்" பற்றியும்,  "இரட்சிப்பு"  பற்றியும்,
"நித்தியஜீவன்"  மற்றும்,  "தேவஅன்பு"   பற்றியும்    உபதேசிக்கிறார்!    ஆம்
இவை ஒன்றோடொன்று தொடர்பு கொண்டவையாகும்!  இரட்சிப்பு என்பது
பாவத்திலிருந்தும்  அதன் விளைவுகளிலிருந்தும்  ஆன்மா  காப்பாற்றப்படு
தலைக்குறிக்கிறது.   "பாவத்தின் சம்பளம் மரணம்" (ரோமர் 6:23).  அதாவது
மரணத்திலிருந்து      காப்பாற்றப்படும்   ஆன்மா   அழிவற்ற "நித்தியஜீவன்"
எனும் நிலையை அடைகிறது; அதாவது "தேவனின் ராஜ்யத்தினுள்"அடைக்
கலம் புகுகிறது! ஆம் மரணத்திற்குமாற்றாக இயேசு முன்வைக்கும் அம்சம்
தான்  "இரட்சிப்பு"  என்பதாகும்!    ஆனால்,      இயேசுவின்  உபதேச வசனங்
களின்படி   'இரட்சிப்பு'   என்பது   'இலவசமாக'வோ,   அல்லது  'பரிசாக'வோ
கிடைக்கவழியில்லை!!

ஆனால்,   'பதிமூன்றாம் அப்போஸ்தலர்' என்று சொல்லப்படும் பவுல் என்ப
வருடைய   திரிக்கப்பட்ட பிரச்சாரத்தில்,   "இயேசு நம்முடைய பாவங்களுக்
காக மரித்தார்!"  எனவும், "இயேசு மனித குலத்திற்காக தன்னைத் தியாகம்
செய்தார்!" எனவும் சொல்லப்படுவது இயேசுவின் உபதேசங்களுக்கு விரோ
தமானதாகும்!    மேலும், அப்போஸ்தலனாகிய யோவான் எழுதிய முதலாம்
நிருபத்தில்(கடிதத்தில்) ,
          "  நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற
             கிருபாதாரபலி அவரே(இயேசுவே); நம்முடைய
             பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின்
             பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியா
             யிருக்கிறார்"        (1யோவான்2:2)
என்று எழுதப்பட்டிருக்கிறது! ஆனால், இவ்வசனம்,  இயேசுவின் மையமான
போதனைக்கு முற்றிலும் முரணானதாகும்! எவ்வாறென்றால்,

            "பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன்
             என்பதின் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால்,
             குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்த
             மாட்டீர்கள்"  
                                              (மத்தேயு 12:7)
என்பதாக    இயேசு  சொல்லியிருக்கிறார்! அதாவது "பலியையல்ல இரக்கத்
தையே    விரும்புகிறேன்"   என்று  சொன்ன  இயேசுவை;    குற்றமில்லாதவர்
களை நீங்கள் குற்றப்படுத்த மாட்டீர்கள்"   என்று   அறிவுறுத்திய  'குற்றமில்
லாத'  இயேசுவை,  'நம்முடைய குற்றங்களுக்காகவும்,பாவங்களுக்காகவும்'
"பலிகடாவாக"   ஆக்கிடுவது   அப்பட்டமான   சுய நலமும்    கயமைத்தனமு
மாகும். மேலும், இயேசு சொல்லியிருக்கிறார் :
            "ஒருவன் என் வார்த்தையைக்  கைக்கொண்டால்,
              அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்ப
              தில்லை என்று மெய்யாகவே  மெய்யாகவே
              உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்."
                                            (யோவான்8:51)
"ஒருவன் என் வார்த்தையைக்  கைக்கொண்டால்,"  என்பதன் அர்த்தம் 'என்
உபதேசங்களைக்   கடைப்பிடித்தால்'    என்பதே தவிர வெறுமனே என்னை
'நம்பினால்',   'விசுவாசித்தால்'  போதும்   உங்களுக்கு   'இரட்சிப்பு'   பரிசாக
அல்லது    இலவசமாகக் கிடைத்துவிடும்    என்று    எந்த இடத்திலும் இயேசு
சொன்னதில்லை!   மேலும்,
            "அப்பொழுது ஒருவன் அவரை நோக்கி:
              ஆண்டவரே,இரட்சிக்கப்படுகிறவர்கள்
              சிலபேர்தானோ என்று கேட்டான்;
              அதற்கு அவர்:"                (லூக்கா 13:23)
         
              "இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப்
               பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க
               வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும்
               என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்."
                                                            (லூக்கா 13:24)

              "பரலோகத்திலிருக்கிற என் பிதாவின்
               சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக
               ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல்,
               என்னை நோக்கி : கர்த்தாவே!  கர்த்தாவே!
               என்றுசொல்கிறவன் அதில் பிரவேசிப்பதில்லை."
                                                           (மத்தேயு 7 :21)
இவ்வாறு,  இயேசுவின் அனைத்து உபதேச வசனங்களும், விசுவாசத்துடன்
நில்லாமல்,   நாம் செய்யவேண்டிய  கிரியைகளையும், நாம் கடைப்பிடிக்க
வேண்டிய கற்பனைகளையும்(கட்டளைகளையும்), நிறைவேற்றவேண்டிய
நிபந்தனைகளையும் வலியுறுத்துவதாயிருக்கையில்,   'இரட்சிப்பு   இலவச
மாய்க் கிடைக்கும்'   என்று   சொல்வது   படு அபத்தமாகும்!  இப்போது நாம்
மேலே சொல்லப்பட்ட வசனத்தைப் பற்றிச்செல்வோம். "பரலோகத்திலிருக்
கிற என்பிதாவின் சித்தத்தின்படி" செய்தல் என்றால் என்ன? 'பிதா' என்பது
தேவனை, கடவுளைக் குறிக்கிறது. ஆனால், பிதாவின் சித்தத்தை எவ்வாறு
அறிவது?  ஒவ்வொரு மனிதனும் பிதாவின் 'உயர்-உணர்வு'க்கு  உயருவதன்
மூலம்  அறிந்து  கொள்ளலாம்!   உண்மையில்,  'பிதா',  'கடவுள்'  என்பது ஒரு
பேருணர்வே தவிர வேறல்ல!
               "தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத்
                தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும்
                உண்மையோடும் அவரைத்தொழுது
                கொள்ளவேண்டும் என்றார்."
                                             (யோவான் 4:24)
'ஆவி'  என்பது உணர்வையே (பிரக்ஞையையே) குறிக்கிறது. ஆக, மனிதன்
தனது  'அகந்தை' எனும் சிற்றுணர்வைக்கடந்து வளர்ந்திடும் போது அவன்
உணர்வின்   உச்சமான   பேருணர்வை,   கடவுளை  அடைகிறான். அதாவது
கடவுளுடன் ஒன்றாகிறான்! இயேசு அறிவித்தது போல,

              "நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்"
               என்றார்.                         (யோவான்10:30)

இவ்வாறு மனிதனும் கடவுளும் ஒன்றாயிருக்க இயலாது;அது இயேசுவைப்
போன்ற விதிவிலக்கான ஓரிருவருக்கு மட்டுமே சாத்தியமாகும் என்று எவ
ரேனும்  சொன்னால்,   அவர் பைபிளை முறையாக, முழுமையாக வாசிக்க
வில்லை,  புரிந்து  கொள்ளவில்லை என்றுதான்  சொல்ல வேண்டும்.   ஏனெ
னில், இத்தகைய சாத்தியத்தை இயேசு   தன்னில் அடைந்ததோடல்லாமல்
எல்லோராலும் அடையமுடியும் என்று அறிவிக்கிறார். இதோ வசனம் :

           "ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள்
             பிதா பூரண சற்குணராயிருக்கிறது போல;
             நீங்களும் பூரண சற்குணராயிருக்கக் கடவீர்கள்."
                                                          (மத்தேயு5:48)

இவ்வசனத்தில், அவர் வெறும் சாத்தியப்பாட்டைப்பற்றி மட்டும் அறிவிக்க
வில்லை; நீங்கள் ஒவ்வொருவரும்அவ்வாறு இருக்கவேண்டும் என ஊக்கப்
படுத்துகிறார்.  ஆனால், ஒவ்வொரு  மனிதனும் உணர்வுக்கு வராமல், மேன்
மேலும் உணர்வில் பெருகி உயராமல், கடவுளின் சித்தத்தைஅறிந்துகொள்
ளவோ,படைப்பின்(பரிணாமத்தின்) திட்டத்தையும்,மானிடவாழ்க்கையின்
இலக்கையும்  உணர்ந்தடையவோ இயலாது!  இவை வெறும் அறிவு சார்ந்த
அணுகுமுறையின்  மூலமாக  அடையக்கூடியவையல்ல!   மாறாக, பிரதான
மாக உணர்வு சார்ந்த அணுகுமுறையைக்கோருபவையாகும்! ஆகவேதான்
யோவான்ஸ் நானனும்,  இயேசுவும்  " மனந்திரும்புங்கள்" பரலோகராஜ்யம்
சமீபித்திருக்கிறது   என்று   உபதேசித்தார்கள்!    இவ்வசனம்     மனிதனின்
உணர்வில்  ஏற்பட வேண்டிய பெரும் மாற்றத்தைப் பற்றியதாகும். உணர்வு
மாற்றத்திற்கு "தேவ அன்பு" வேண்டும்!  "தேவ அன்பு" என்பது இடை-நிலை
மெய்ம்மைகளைத் தாண்டிய    "இறுதி-மெய்ம்மை"    மீதான   நாட்டத்தைக்
குறிப்பதாகும்!

ஏற்கனவே,  நாம்  'முழுமைக்குறைவான' அன்பு பற்றியும்,    'முழுமையான'
அன்பு பற்றியும் பார்த்தோம். அதாவது நம்முடைய அன்பு 'முழுமைக்குறை
வாக  இருப்பதற்குக் காரணம்,   நாம் விரும்புகிற,    நேசிக்கிற விஷயங்கள்
யாவும்  நம்மைச் சுற்றியுள்ள மேலோட்டமான விஷயங்களும், உறவுகளும்,
பொருட்களுமாகத்தான் உள்ளன!   அந்தப்பட்டியலில்    மெய்ம்மை     இடம்
பெறுவதில்லை!அதாவது நாம் மேலோட்டமான  விஷயங்களையும், , உறவு
களையும்,  பொருட்களையும்  தேடுகிற விரும்புகிற,  நேசிக்கிற  பட்சத்தில்,
நமது உணர்வும்  அவைகளைத்தழுவி, அவைகளுக்கேற்ப மேலோட்டமான
தாகச் சுருங்கி  விடுகிறது!  ஆனால்,  நாம் மெய்ம்மையைத் தேடுகிற, நாடு
கிற, நேசிக்கிற பட்சத்தில் நமது உணர்வானது மெய்ம்மைக்கேற்ப விரிந்து
பரந்து முழுமையைத்தழுவி ஒன்றுபடுகிறது! "எண்ணம் போல் வாழ்வு"என
சாதாரணமாகச் சொல்வதுண்டு. ஆனால், "உணர்வு போல் வாழ்வு" என்பது
தான் மிகச் சரியானது.  ஏனெனில், எண்ணம், மனம் யாவற்றுக்கும் அடிப்ப
டையானது  உணர்வு.  அதாவது,  உணர்வு  மாறினால்  வாழ்க்கையின் தரம்
தன்மை யாவும் மாறிவிடும்! ஆம், உணர்வு மாற்றத்தினால் (பெற்றதினால்)
தான் குரங்கு மனிதனாயிற்று! தன்உணர்வின் 'மையத்துவத்தையும்,'  'முக்
கியத்துவத்தையும்  உணரும் மனிதன் கடவுளாகிறான்!     ஆம்   அஞ்ஞானி
ஞானியாவதும்,   கெட்டவன்  நல்லவனாவதும்,  'மரணம்'  நித்தியவாழ்வாக
மாறுவதும்,    யாவும்   உணர்வு- மாற்றத்தையே   சார்ந்துள்ளன!  ஏனெனில்,
முழுமையான உணர்வு தான் கடவுள் ('தேவன் ஆவியாயிருக்கிறார்')!

ஆம்,  பொருட்களுக்கும், உறவுகளுக்கும்  வாழ்க்கையில்   உரிய இடம்  உள்
ளது.  ஆனால்  கடவுளைத்தவிர   வேறு  எந்த உறவும்  இறுதியானதோ  முழு
மையானதோ அல்ல! ஆகவேதான், இயேசு இவ்வாறு

                   " யாதொருவன் என்னிடத்தில் வந்து,
                     தன் தகப்பனையும் தாயையும் மனைவியை
                     யும் பிள்ளைகளையும் சகோதரரையும்
                     சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்கா
                     விட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்"
                                                            (லூக்கா14:26)

என்று பிறிதொரு இடத்தில் சொல்லுகிறார். இவ்வசனத்தில், "எவனொருவன்
தனது 'குடும்பத்தாரை' வெறுக்காவிட்டால்"  என்று,    'குடும்பத்தாரை' எனும்
ஒற்றைச் சொல்லைக்கொண்டு குறிப்பிடாமல்,    ஒவ்வொரு உறவாக பட்டிய
லிட்டுச் சொல்லுகிறார்!    அப்பட்டியலில்   கடைசியாக       "தன் ஜீவனையும்"
வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான் என்று மிகத் துல்லிய
மாகவும்     தெளிவாகவும்   விதிவிலக்கின்றி     அனைவரையும்     அடியோடு
துடைத்துத்தள்ளுவதாகவும் குறிப்பிடுகிறார்.

ஒருவகையில்,   பிற உறவுகளனைத்தையும்  'வெறுக்கவேண்டும்'  என்பதை
நாம் எளிதாகப் புரிந்து கொள்ளலாம் என்று வைத்துக்கொள்வோம்! ஆனால்,
ஒருவன் தனது சொந்தஜீவனையும் வெறுக்கவேண்டும் என்று இயேசு சொல்
வதன் அர்த்தம் என்ன?

ஒருவன் தனது சொந்த ஜீவனுக்காக வாழ்வது என்பது 'சுய-அன்பை'க் குறிப்
பதாகவும்,   உடலின் தேவைகளையும்  இச்சைகளையும்  இன்னும்  லௌகீக
சுக போகங்களையும்  பூர்த்தி செய்துகொள்வதற்காக வாழ்வது  என்பதைக்
குறிப்பதாகவுமே  உள்ளது!    மேலும்,  பிறவனைத்து   உறவுகளும்,     ஒருவன்
தனது சொந்த ஜீவனுக்காக வாழ்தல் என்பதையே அடிப்படையாகக்கொண்
டுள்ளது!    இது  மிகவும்  மட்டுப்பாடான,  மனிதத்தரத்திற்குக்  கீழானதொரு
வாழ்க்கையாகும்!     இத்தகைய      வாழ்க்கையில்    மூழ்கியிருக்கும்   வரை,
மெய்ம்மை,  உண்மை, கடவுள் குறித்த தேடலுக்கு இடமிராது என்பதாலேயே
பிற உறவுகளோடு, ஒருவன் தன் 'சொந்த-ஜீவனுடன்' கொண்டுள்ள சுய-உற
வையும்  வெறுக்கவேண்டும்;  அதாவது,  தனது ஜீவனையும் வெறுக்கவேண்
டும், கடந்து செல்லவேண்டும் என இயேசு வலியுறுத்துகிறார்.

இந்த வசனம் இயேசுவினுடைய சீடர்களுக்காக மட்டும் சொல்லப்பட்டதல்ல.
அப்படி   அவர்   தனது  சீடர்களுக்கு மட்டும்தான் சொன்னார் என்றால், இந்த
வசனத்தையும்,  மொத்த பைபிளையும்  நாம்   வாசிக்கவோ புரிந்துகொள்ள
வோ,   அவை  குறித்து   சிந்திக்கவோ,  தியானிக்கவோ   தேவையில்லையே!
"யாதொருவன் என்னிடத்தில் வந்து . .   " என  இயேசு சொல்லும்போது எவரெ
லாம் இயேசு விடம் செல்கிறார்களோ   அவர்களுக்கு மட்டுமே  இந்த வசனம்
பொருந்துகிறது என்று அர்த்தமல்ல!மாறாக,  'இயேசுவிடம் செல்வது' என்பது
எவரெலாம்   'அசலான,   உண்மையான,   அர்த்தமுள்ள வாழ்க்கையை  வாழ
விரும்புகிறார்களோ;'  அன்றாட  ஜீவிதத்திற்குத்  தேவையான  புறப் பொருட்
களை  நாடித்தேடாமல், முதலில் வாழ்க்கையின் உட்பொருளைத்தேடுவதில்
நாட்டம் கொள்கிறார்களோ அவர்களெல்லோருக்கும்  இந்த வசனம் பொருந்
தும்.   'இயேசுவின் சீடனாயிருப்பது'  என்பது,    'அசலான  ஆன்மீகபூர்வமான
வாழ்க்கைக்குத் தகுதியுள்ளவனாயிருப்பது' என்பதையே குறிக்கிறது!

மேலும்,      ஒவ்வொரு  மனிதனும்   தமது  நெருக்கமான குடும்ப  உறவுகளின்
மையமாக விளங்குவதாகத்தெரிந்தாலும் , ஒருவன் தனது மையத்தில் "தான்
யார்?"   எனத் தெரியாத  ஒரு ஜந்துவாகவே விளங்குகிறான்.   அந்த ஜந்துவின்
தேவைகளையும்   இச்சைகளையும்   விருப்பங்களையும்    சிரமேற்கொண்டு
நிறைவேற்றிடும்  ஒரு  ஊழியக்காரனாகவே  அவன்   திகழ்கிறான்   என்பதா
லேயே   ஒருவன் தனது ஜீவனையும் வெறுக்கவேண்டும் என்று இயேசு சொல்
கிறார்.

அடுத்ததாக, இயேசு சொல்கிறார்:

                 "அப்படியே உங்களில் எவனாகிலும்
                  தனக்கு உண்டானவைகளையெல்லாம்
                  வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச்
                  சீஷனாயிருக்கமாட்டான்."
                                                  (லூக்கா 14:33)

எவ்வெவ்விஷயங்கள் ஆன்மீகப்பூர்வமான வாழ்க்கைக்கு,அதாவது உண்மை
யான அர்த்தமுள்ள வாழ்க்கைக்குத் தடைகளாகவிளங்குகின்றனவோ அவற்
றையெல்லாம்      இனம்கண்டு  விலக்கிக்  கடந்து   முன்னேறிச்   செல்லுமாறு
இயேசு  அறிவுறுத்துகிறார்.  இந்த  வசனத்தின் மூலம்  இன்னும் விலக்கவேண்
டிய,  கடந்து செல்லப்படவேண்டிய  தடைகளாக   ஒருவனுக்கு  "உண்டானவை
கள்"   எல்லாவற்றையும்   வெறுக்கவேண்டும்  என இயேசு அறிவுறுத்துகிறார்.
ஒருவனுக்கு   'உண்டானவைகள்'   எவையெவையென  இயேசு  பட்டியலிட்டுச்
சொல்லவில்லை  என்பதிலிருந்து  அவற்றில்  'விதிவிலக்கு'  எதற்கும்  இல்லை
என்பதையே  குறிக்கிறது!  ஆம், நமக்கு  'உண்டானவைகள்' என்பவை  யாவும்
புறம்சார்ந்த, புறத்தேயுள்ள விஷயங்களும் பொருட்களும்தான். அவை பணம்
பொன்,  நிலம், சொத்து, சுகம், மற்றும் பிறபொருட்கள்; அடுத்து சமூகரீதியான
புகழ், நற்பெயர், செல்வாக்கு, அந்தஸ்து;    அரசியல்ரீதியான பதவி, அதிகாரம்,
ஆள்பலம் ஆகியவையும்; ஆளுமைசார்ந்த தனிப்பட்ட தோற்றம், அழகு, நிறம்,
பாணி, விசேடதிறமைகள், மனப்பான்மைகள், விருப்பங்கள், ஆசைகள், இலட்
சியங்கள் . . . ஆகிய எல்லாவற்றையும் ஒருவன் வெறுக்கவேண்டும். அப்போது
தான்,  இயேசு சொல்கிற  உண்மையான  வாழ்க்கையின் விதிகளை முழுமை
யாகப்  பின்பற்றி, நிறைவேற்றி வாழ்ந்திட இயலும்.

ஒருவனுக்கு  'உண்டானவைகள்' என்பவை யாவும் ஒருவனை புறத்தே கட்டிப்
போடுகிற பிணைப்புக்களே, தளைகளே என்பதால் அவை ஒருவனை அகரீதி
யான   ஆன்மீக   வாழ்க்கைக்குள்  விரவேசிக்க விடாது. மாறாக, அவனை புற
வாழ்க்கை எனும் மேலோட்டமான    அன்றாட விவகாரங்களில்     மூழ்கடித்து
விடும். மேலும், அகரீதியான  ஆன்மீக   வாழ்க்கைக்கு   சிதறாத,   முழு-கவன
நிலை மிகவும் அவசியமாகும்.  ஆகவேதான்  இயேசு   ஒருவனுக்கு உண்டான
வைகளையெல்லாம்  வெறுக்கவேண்டும்,  அதாவது  கடந்து சென்றிட வேண்
டும் என்று வலியுறுத்துகிறார்.

மேலும், ஒருவனுக்கு உண்டானவைகள் என்பவை யாவும் மட்டுப்பாடானவை
சாதாரணமானவை;  அவை பயன்பாட்டுக்குரியவை  என்றாலும்  இறுதியான
முழுமையான பயனை,   "பிறவிப்பயனை"ப்  பெற்றுத்தருபவையல்ல.  அவை
எதுவும்     முக்கியமானவையோ,  மனிதனை  நிறைவுசெய்யக்கூடியவையோ
முழுமைப்படுத்தக்கூடியவையோ அல்ல. ஆகவே, ஒருவனுக்கு உண்டானவை
களையெல்லாம் வெறுப்பது, கடந்து செல்வது முன்தேவையாகிறது.   இவைக
ளையெல்லாம்  ஒட்டுமொத்தமாக வெறுக்கவேண்டும் என்று இயேசு சொல்வ
தற்கான மிகமுக்கியமான காரணம், இன்னும் ஒருவனுக்கு "உண்டாகாதவை"
களை கைப்பற்றிடவே யாகும்!

இன்னும்  "உண்டாகாதவை"  என்பவை  அர்த்தம், உண்மை, ஆனந்தம், முக்தி,
மோட்சம்,  நித்தியஜீவன், தேவனின்ராஜ்யம்,  இரட்சிப்பு,  விடுதலை,  மரணம்
கடந்த பெருவாழ்வு, . . . . .ஆகியவையே!

               <><><><><><>
* "பட்டயத்தைக்கொண்டு வந்தவனின் செய்தி!"
(இயேசுவை மறு-கண்டு பிடிப்பு செய்தல்)
தொகுப்பிலிருந்து.

மா.கணேசன்/ 02.08.2011 & 02.05.2016



Tuesday, 3 May 2016

மரித்தோரின் உலகிலிருந்து வெளியேறுங்கள்!*



       "அவருடைய  சீஷர்களில் வேறொருவன்
         அவரை நோக்கி : ஆண்டவரே! முன்பு நான்
         போய், என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு
         உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்."
                                  (மத்தேயு 8 : 21)
       "அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை
        அடக்கம்பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா
        என்றார்."
                                 (மத்தேயு 8 : 22)

ஆம், அறியப்படாத,அசலான வாழ்க்கையை அறிந்து கொள்ளவும்,
வாழ்ந்திடவும் வேண்டி,   இயேசு நம்மை,   அறிந்த   மட்டுப்பாடான
அன்றாட வாழ்க்கையை  விட்டுவிட்டு  வரச்சொல்கிறார்.   இதைத்
தானே  தமது  அன்றாடபிழைப்புக்காக    மீன்  பிடிக்கிறவர்களான
பேதுரு, அந்திரேயா, யாக்கோபு,  மற்றும் யோவான் ஆகியோரிடம்,
         "என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்
          களாக்குவேன்." (மத்தேயு 4:19)
என்று சொல்லி அழைத்தார்.

மேலும்,  வாழ்க்கை என்றால்  என்னவென்றே அறியாத நிலையில்,
உணர்வற்ற  தன்மையில்,    அன்றாட வாழ்க்கை  விவகாரங்களில்
மூழ்கிக்   கிடப்பவார்களைத்தான்,   இயேசு, "மரித்தோர்" அதாவது
"வாழாதோர்" என்று குறிப்பிடுகிறார்!

இறந்து போன   தந்தையை     மற்றவர்கள் - அங்கே சுற்றிலுமுள்ள
"வாழாதோர்"  பார்த்து   அடக்கம்பண்ணட்டும்;      உனக்கு     வேறு
'முக்கியமான'   வேலை உள்ளது.   ஆகவே,    'நீ என்னைப்பின்பற்றி
வா'  என்பதாக  இயேசு அந்த சீடனிடம் கட்டளையிடுகிறார்.

இயேசுவைப்  பொறுத்தவரை,    அவர்    நம்மை  முதலில்,   அறிந்த
அன்றாட   வாழ்க்கை  விவகாரங்களைக்    கடந்து         வருமாறும்,
வாழுமாறும்    அழைக்கிறார்.    இரண்டாவதாக, அதன் தொடர்ச்சி
யாக,   மரணத்தில் ஒரு நாள் நிச்சயம் முடிந்துவிடக்கூடிய உடலின்
வாழ்க்கையையும் கடந்து,    மரணம் தீண்டவியலாத,    உணர்வின்
"நித்திய வாழ்க்கைக்குள்"   பிரவேசிக்குமாறும்,அதன் முக்கியத்து
வத்தையும்,அவசர அவசியத்தையும் வலியுறுத்துகிறார்.

ஏனெனில், இந்த உலகில் நாம் வாழ்வது மிகக்குறுகியகாலத்திற்கு
மட்டுமே!  ஆகவே,  நாம் உயிரோடிருக்கும்   காலத்திற்குள்ளாகவே
அழிவில்லாத நித்திய ஜீவனையும், வாழ்க்கையையும் அடைந்திடு
வது  அவசர-அவசியமாகும். எனவேதான்,

              "என்னத்தை உண்போம்,என்னத்தைக் குடிப்போம்,
               என்னத்தை உடுப்போம் என்று கவலைப்
               படாதிருங்கள்."      (மத்தேயு6 : 31)

             "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும்
              அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது
              இவைகளெல்லாம் உங்களுக்குக்
              கூடக்கொடுக்கப்படும்."
                                                  (மத்தேயு 6 : 33)

என இயேசு அறிவுறுத்துகிறார். உணவைவிட வாழ்வின் உண்மையே
பிரதானமானது  என்பதை    நாம் புரிந்து கொள்ளாவிட்டால்,    இயேசு
வின்  தனிச்சிறப்புவாய்ந்த செய்தியை நாம்  தவறவிட்டுவிடுவோம்!

நாம்  உயிரோடிருப்பது  முக்கியம் தான்;   ஆனால்,  உயிரோடிருப்பது
எதற்காக   என்பதை    அறியாமல்   உயிரோடிருப்பது   அர்த்தமற்றது!
ஆம், உயிரோடிருந்தும் உணர்வுக்கு வராமலும், உணர்வில் நிலைத்து
முழு-உணர்வை அடையாமலும் இருப்போமெனில்,    நாம் ஒரு விலங்
கைப் போலவே  வாழ்ந்து மடிந்து போவோம்.     ஆம்,ஆரோக்கியமாக,
திடகாத்திரமாக உயிரோடிருக்கலாம்; ஆனால்,  உணர்வுக்கு வராமல்
இருந்தால் நாம் ஆன்மீக ரீதியாக இறந்தவர்களே!

இவ்வாறு,      உணர்வற்ற  தன்மையில்     உணவு,  உடை,  உறைவிடம்,
உறவுகள்  என்று உழன்று கொண்டிருப்பவர்களைத் தான்,  அதாவது,
ஆன்மீக ரீதியாக உயிர்ப்பற்றவர்களைத் தான்,  இயேசு, "மரித்தோர்"
எனக் குறிப்பிடுகிறார். மனித சமூகம் முழுவதும்   இத்தகையோரால்
நிரம்பிவழிகிறது!

ஆகவேதான்,   'முதலில்  போய்  தனது    தகப்பனை அடக்கம்பண்ண
அனுமதி கொடுக்குமாறு கேட்ட சீடனிடம், "மரித்தோர் தங்கள்  மரித்
தோரை   அடக்கம்பண்ணட்டும்  நீ  என்னைப்  பின்பற்றி வா"   என்று
சொல்லி அனுமதி கொடுக்க மறுத்துவிட்டார்  இயேசு!

பொதுவாக, மனிதர்களது வாழ்க்கை என்பது அன்றாட நிகழ்வுகளை,
சம்பவங்களைச்  சார்ந்ததாகவே  உள்ளது!     ஒரு  சிறு அசம்பாவிதம்
நிகழ்ந்துவிட்டால்  உடனே   வாழ்க்கை    துன்பமயமாகி     விடுகிறது!
ஒரு   குழந்தை  பிறந்துள்ளது,   அல்லது   வேறு    ஏதாவதொரு    'நல்ல'
காரியம் என்றால், வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாகத்தோன்றுகிறது!
ஆக, கல்யாணம், காட்சி, நல்லது, கெட்டது, வாழ்வு, சாவு . . .இப்படியே
திரும்பத்திரும்ப அதே விஷயங்கள், விவகாரங்கள்  இவற்றைத்தான்
நாம்  'வாழ்க்கை'  என்கிறோம்!    அந்தந்த    நேரத்துப் பிரச்சினைகள்,
தேவைகள்,  அலுவல்கள் - இவைதான் வாழ்க்கை! இவற்றைக்கடந்து
ஒன்றுமில்லை! உண்பது, உறங்குவது, உறவு கொள்வது - இவைகளுக்
காக உழைப்பது; பிறகு நோய், மூப்பு, மரணம்.   முடிந்துவிட்டது மனித
வாழ்க்கை!

இத்தகைய  விவகாரங்களின்  மத்தியில்,  பிரத்யேகமாக,  வாழ்க்கை
யின்  "அர்த்தம்"  என்று    எதையும் தேட வேண்டாம்!      வாழ்க்கைக்கு
"குறிக்கோள்" என்று ஏதும் உண்டா என்று அறியவேண்டாம்!வாழ்வின்
இலக்கை   அடைய   வேண்டாம்!       வாழ்க்கை    பற்றியும்,   உண்மை,
மெய்ம்மை, கடவுள் பற்றியும்  சிந்திக்க(வும்)நேரமில்லை!     இதுதான்,
பொதுவான,  சாதாரண,  பெரும்பான்மையான  மனிதர்களின் வாழ்க்
கையாகும்!

ஆனால், இயேசு குறிப்பிடுகிறவாழ்க்கை இதுவல்ல. ஏனெனில், உணர்
வுள்ள, சிந்திக்கும் மனிதனுக்கு இவற்றைவிட அதிமுக்கியமான வேறு
வேலை  உள்ளது!   அது  என்னவென்றால்,   தன்னையறிவது,    அல்லது
கடவுளை உணர்வது, அல்லது உண்மையை, மெய்ம்மையை,வாழ்வின்
உட்-பொருளான  அர்த்தத்தை  அறிவது!  இதையே,  இயேசுவின் சொற்
களில்     சொன்னால்,     "தேவனின்   ராஜ்யத்தை" த் தேடுவது,   மற்றும்
தேவனின் ராஜ்யத்தைக் குறித்து பிறருக்குப் பிரசங்கிப்பது!

"மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்" எனும்இயேசு
வின்   இந்த வசனம் மிகவும்  "அதிரடி"யான  ஒன்றாகத் தோன்றுகிறது!
ஆனால்,அது மிகவும் "ஆழமான"உண்மையைதன்னுள்கொண்டுள்ளது.
மனிதனுக்கும்,  மூலமும்-முடிவுமான மெய்ம்மையான, "சொர்க்கத்தில்
இருக்கும் நமது தகப்பனான," கடவுளுக்கும் இடையேஇருக்கவேண்டிய
உன்னதமான    உறவின்   முதன்மையான    தேவையைப்  பற்றி    இந்த
வசனம் கூறுகிறது!

தந்தைக்கு  மகன்  ஆற்ற வேண்டிய கடமைகளைச்  செய்யவேண்டாம்,
தகப்பனை மதிக்கவேண்டாம் என்று இயேசு சொல்லவில்லை! மாறாக,
                  "உன் தகப்பனையும், உன் தாயையும்
                    கனம் பண்ணுவாயாக."
                                         (மத்தேயு 19:19)
என்று ஒரு வாலிபனுக்கு இயேசு அறிவுரை கூறியுள்ளதையும் நாம் அறி
வோம். அதேநேரத்தில்,பெற்றவர்கள்,உடன்பிறந்தவர்கள்,பிறஉறவுகள்,
நண்பர்கள்   என்று   எல்லோருடனும்   உறவு  இருந்தாலும்,   மனிதர்களு
டனும்,   பொருட்களுடனும்    கொள்ளுகிற   உறவுகள்    எவ்வகையிலும்
முழுமையானதோ, இறுதியானதோ அல்ல!

ஒருவன் தனது தகப்பனையும், தாயையும் கனம்பண்ணுவது  எவ்வளவு
அவசியமோ, முக்கியமோ; அதைப்போல,  இந்த பூமி,  வானம்,  சூரியன்,
சந்திரன்,  நட்சத்திரங்கள் என  இந்த மொத்தப்பிரபஞ்சமும், அதிலுள்ள
அனைத்தும் உருவாகக் காரணமான -   தகப்பனை, அதாவது கடவுளை
கனம் பண்ணுவது  ஆயிரமாயிரம் மடங்கு  அவசியமல்லவா,     முக்கிய
மல்லவா? இவ்வாறு செல்கிறது இயேசுவின் தர்க்கம்!

மேலும், கடவுளைக் கனம் பண்ணுவது என்பது பல கடமைகளில் ஒன்று
அல்ல.   ஏனென்றால்,   நமக்கு   உயிர் கொடுத்த தகப்பனும், தாயும் ஒரு
நாள் உயிரைவிட்டு மாண்டுபோவார்கள்! எல்லாஉறவுகளும் குறிப்பிட்ட
ஒரு  கட்டம்  அல்லது  எல்லை  வரைதான்;       எந்த  உறவும்  இறுதிவரை
வராது, நிலைக்காது! ஆனால், கடவுளுடனான உறவுஅப்படிப்பட்டதல்ல!
அதுவே இறுதிவரை வருவது,முழுமையானது, நித்தியமானது. கடவுளுட
னான உறவு மட்டுமே மனிதனை மரணத்திலிருந்து மீட்பதும்,மரணமில்
லாப் பெருவாழ்வு தருவதுமாகும்!  ஆகவேதான்,
                             " மரித்தோர் தங்கள் மரித்தோரை
                               அடக்கம்பண்ணட்டும், நீ என்னைப்
                               பின்பற்றி வா."      (மத்தேயு 8 : 22)
என்பதாக தனது சீடனுக்கு இயேசு கட்டளையிட்டார்!

இறந்து போன    தகப்பனின் உடலை  அடக்கம் பண்ணுவது என்பது ஒவ்
வொரு மகனின் தவிர்க்கமுடியாத ஒரு கடமையாகும்.ஆனால், 'தவிர்க்க
முடியாதது',    'நிர்ப்பந்தமானது'  என்பது    இந்த  ஒரு கடமை மட்டுமல்ல!
மனிதர்களின்  அன்றாடவாழ்வின்  ஒவ்வொரு விஷயமும்  'தவிர்க்கமுடி
யாதது',     'நிர்ப்பந்தமானது'    என்பதாகவே   மனிதர்களைச் சிக்கவைக்
கிறது!  'தேவையானது',   'அவசியமானது',   'அடிப்படையானது', 'தவிர்க்க
முடியாதது',   'நிர்ப்பந்தமானது'   என்கிற   விஷயங்களே     மனிதர்களை
இயக்குகின்றன,    விரட்டிச்செலுத்துகின்றன!     இந்த  அறிந்த  அன்றாட
விஷயங்கள் மட்டுமே மனிதர்களின் வாழ்க்கையாக உள்ளது!

ஆனால்,   மிகவும்   உண்மையான,    அசலான   மனிதவாழ்க்கைஎன்பது
எல்லா அன்றாடவிஷயங்களையும், தேவைகளையும்,எல்லாவித உறவுப்
பிணப்புகளையும் கடந்ததாக உள்ளது.    ஆகவே,     இத்தகைய அசலான
வாழ்க்கையானது பெரும்பாலானமனிதர்களுக்கு அந்நியமானஒன்றாக
வே உள்ளது! ஆக, புத்தர்,இயேசு போன்று தமது "விழிப்பினால்" தம்மைத்
தாமே   உருவாக்கி   முழுமைப்படுத்திக் கொண்ட    ஒருவர்    சமூகத்தில்
புகுந்து எதிர்ப்படுகிற மனிதர்களை அன்றாடஉலகியல்எனும்'புதை சேற்
றிலிருந்து', பல(வந்த)மாக வெளியே பிடித்து  இழுத்து விடுவிக்க வேண்டி
யுள்ளது.   இல்லாவிடில்,   அவர்களை   ஒன்றுமே  செய்ய  இயலாது!     ஆம்,
கழுத்து வரை புதைச் சேற்றில் சிக்கியவர்களால் தாமாகவே அதிலிருந்து
தம்மை  விடுவித்துக்கொள்ள இயலாது!   வெளியே  இருக்கும்   ஒருவரால்
தான் அவர்களைப்பலமாகப் பிடித்து வெளியே இழுக்க முடியும்!

உலகியலில்   சிக்கிய  மனிதர்கள்  உண்மையான  வாழ்க்கைக்கு   எதிர்த்
திசையில்,   எதிர்க்கோடியில் உள்ளதால்,  அவர்களிடம் சென்று உண்மை
யான வாழ்க்கையைக்குறித்து சொல்லப்படும்    எந்த உண்மையும் "தீவிர
வாதம்" (Extremism)போலத்தான்தோன்றும்!  அது   அவர்களின், சமூகத்
தின் வழக்கமான  வாழ்க்கைக்கு 'விரோதமான' ஒன்றாகவே தெரியும்!

ஆம்,    அசலான வாழ்க்கைக்கு   அந்நியர்களான      பெரும்பான்மையான
மனிதர்கள்தான்    சாக்ரட்டீஸை 'விஷம்' குடிக்கச் செய்து கொன்றார்கள்!
இயேசுவை   'சிலுவை'யில்  அறைந்து  கொன்றார்கள்!     ஆக, இயேசுவின்
இந்த உபதேசம் மட்டுமல்ல; பிற உபதேசங்களும் சரி,  நம்மைப்பொறுத்த
வரை, அவை வழக்கத்திற்குமாறானவையாகவும், நடைமுறைக்கு ஒவ்வா
ததாகவும் தான்தோன்றும்!  ஆனால்,  நம்முடைய வழக்கமும், நடைமுறை
யும் உண்மையான வாழ்க்கையுடன் சிறிதும் பொருந்துவதில்லை  என்பது
தான் உண்மை!

ஏனெனில், நமது 'நடைமுறையில்' உயிர்-வாழ்தல் மட்டுமே நிறைவேற்றப்
படுகிறது! உயிர்வாழ்தலின் நோக்கமும், அர்த்தமும், இலக்கும் தொடப்படு
வதேயில்லை! உயிர்வாழ்தல் என்பது உடலின் நச்சரிப்பானதேவைகளைப்
பூர்த்திசெய்து கொள்கிற விலங்கையொத்த வாழ்க்கையாகும்! அது,மனித
மனதின் மற்றும்  உணர்வின்  "உயர்-நிலை" வாழ்க்கையல்ல. ஆகவேதான்,
இயேசு நம்மை "மரித்தோர்" என்று குறிப்பிடுகிறார்!

ஆம்,  நாம் உயிரோடிருக்கிறோம்;  ஆனால், உணர்வோடில்லை.ஆன்மீகரீதி
யாக  நாம் 'மரித்தோராகவே' உள்ளோம்!  "மரித்தோர்"   என இயேசு யாரை
யோ, அல்லது அவரது காலத்து மனிதர்களை மட்டுமோ குறிப்பிட்டுச்சொல்
லவில்லை.  மாறாக,  எவரெல்லாம் ஆன்மீக ரீதியாக உயிர்ப்பற்றவர்களாக,
உணர்வற்றவர்களாக உள்ளனரோ அவர்கள் எந்த தேசத்தில்,  எந்தக்காலக்
கட்டத்தில் வாழ்ந்தாலும்  அவர்களனைவருக்கும்  அது பொருந்தும்!   அதில்,
இயேசுவின்  சீடர்கள்  மட்டுமே விதிவிலக்கு.   ஏனெனில், தமது  சீடர்களாக,
தமது வழியைப் பின்பற்றுகிறவர்களாக,   அவர் தெரிந்தெடுத்துக்கொண்ட
வர்களை, அவர் ஏற்கனவே சமூகச்சகதியிலிருந்து தனியே பிரித்தெடுத்துக்
கொண்டுவிட்டார்!

மேலும்,  முற்றிலும்  புதியதும்,  மிகவும் அசலானதுமான வாழ்க்கைக்கு வழி
காட்டும்  விதமாகத்தானே  இயேசு   அவர்களைத் தமது    சீடர்களாக தேர்ந்
தெடுத்துக் கொண்டுள்ளார். ஆக, அவர்களைஅவர் அந்தப் பழைய தேய்ந்து
போன பாதையில் பயணிக்க ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்!     அதனால்
தானே தனது தகப்பனை அடக்கம் பண்ண அனுமதி கேட்ட சீடனிடம்,
                           (லூக்கா எழுதியசுவிசேஷத்தின்படி) :
                           "மரித்தோர் தங்கள் மரித்தோரை
                           அடக்கம்பண்ணட்டும்; நீ போய்,
                           தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப்
                           பிரசங்கி என்றார்."
                                                       ( லூக்கா 9 : 60)
என்று  சொல்லி அனுமதி  மறுத்ததோடு   அச்சீடனுக்கு புதிதாக ஒருமுக்கிய
பணியைச் செய்யுமாறு கட்டளையும் இடுகிறார். ஆம்,  மனிதனாய்ப் பிறந்த
ஒவ்வொருவனுக்கும்   ஒரு    முக்கியமான    ஆன்மீகப்பணியும்,   தலையாய
கடமையும் உள்ளது! மேலும்,   தனது ஆன்மீகப்பணியை இனம் கண்ட பிறகு,
ஒருவன்  அப்பணியைச்செய்யாமல்  வேறு பணி எதையும் செய்ய இயலாது!
இந்த    அதிமுக்கியமான  வாழ்க்கைப்  பணியைக்   குறித்த உபதேசத்தைக்
கேட்டபிறகு, அதில்உடனே தீவிரமாக ஈடுபடுவதன்அவசியத்தையும் இயேசு
வலியுறுத்துகிறார்:

                            "பின்பு வேறொருவன் அவரை நோக்கி:
                              ஆண்டவரே, உம்மைப் பின்பற்றுவேன்,
                              ஆனாலும் முன்பு நான் போய் வீட்டிலிருக்
                              கிறவர்களிடத்தில் அனுப்புவித்துக்கொண்டு
                              வரும்படி எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும்
                              என்றான்.      
                                                      ( லூக்கா 9 : 61)
                                                     
                             "அதற்கு இயேசு : கலப்பையின்மேல் தன்
                               கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற
                               எவனும் தேவனுடையராஜ்யத்துக்குத்
                               தகுதியுள்ளவன் அல்ல என்றார்.
                                                      ( லூக்கா 9 : 62)

ஆம், கலப்பையின்மேல் தன் கையை வைத்தபிறகு ஒருவன்முன்னிட்டுத்
தான் பார்க்க வேண்டும், செல்லவேண்டுமே தவிர  பின்னிட்டுப்பார்ப்பது
கூடாது!    இவ்வாறே,  மனிதவாழ்க்கையின்   முழுமையும்,    இலக்குமான
தேவனுடையராஜ்யத்தைக் குறித்த உபதேசத்தைக்கேட்டபிறகு,அதற்குள்
பிரவேசிப்பதற் குரிய   செயல்பாட்டில்   இறங்காமல்    பழைய     அன்றாட
வாழ்க்கை விவகாரங்களில் கவனம் செலுத்துவது  அசலானவாழ்க்கைக்
குப்புறம்பானதாகும்.     இத்தகைய   ஒரு   மனிதன்       "தேவனின்ராஜ்யத்
திற்குள்," அதாவது மரணம்கடந்த நித்திய வாழ்க்கைக்குள்பிரவேசிக்கும்
தகுதியை இழந்து விடுபவனாகிறான்!

இயேசுவின் உபதேசத்தை நேரடியாகக் கேட்டபிறகு,    "ஆண்டவரே,    உம்
மைப்பின்பற்றுவேன்,   ஆனாலும்    முன்பு நான் போய் வீட்டிலிருக்கிறவர்
களிடத்தில்   விடைபெற்று    வரும்படி   எனக்கு அனுமதிதாருங்கள்"    என
இயேசுவிடம்    கேட்கும்  மனிதனின் மனதில் சிறிது 'தயக்கம்' இருப்பதை
யும், அசலான வாழ்க்கைக்குள் பிரவேசிக்க   அவனுக்கு விருப்பம் இருந்த
போதிலும்,   அவனது  உணர்வில் அது ஆழமாகத் தைக்கவில்லை;  அவனி
டம் 'ஊசலாட்டம்' இருப்பதையும், இன்னும் அவன் முழுமனதுடன்அதற்குத்
தயாராகவில்லை  என்பதையும் புரிந்து கொண்ட இயேசு,   "கலப்பையின்
மேல் தன்கையை  வைத்துப்பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய
ராஜ்யத்துக்குத்   தகுதியுள்ளவன் அல்ல" என்று எச்சரிக்கிறார்.

ஏனெனில், உண்மையான வாழ்க்கையின் அழைப்பை எவ்வழியிலேனும்
உணர்ந்த   ஒருவன் அதற்குள் பிரவேசிப்பதற்காக    தனது வீட்டாரிடமும்,
தாய் தந்தையாரிடமும்,     மனைவி மக்களிடமும்,   இன்னும்   எவரிடமும்
விடைபெறவேண்டிய  அவசியமோ,   அவர்களின்  ஒப்புதலை,       அல்லது
அனுமதியைப் பெறவேண்டியகட்டாயமோ, நிர்ப்பந்தமோ எதுவுமில்லை!
அவர்களும் அதற்குச்சம்மதிக்கவும்  மாட்டார்கள்!    ஏனெனில்,  அசலான
வாழ்க்கைபற்றி அவர்களுக்கு எதுவும்தெரியாது! அவர்களுக்குத்தெரிந்த
தெல்லாம் அன்றாடத் தேவைகளைத் தேடிப்பெறும் வாழ்க்கை மட்டுமே!
ஆகவே, அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு வருவது என்பது இயலாத
காரியமாகும்!

ஆகவேதான்,    இயேசுவின் காலத்திற்கும்  500 ஆண்டுகளுக்கும் முன்னே
மனித வாழ்க்கையின்   "நிலையாமை"  பற்றிய  கேள்வியினால்    கிளறப்
பட்டு 'வாழ்க்கையின் புதிரை' விடுவிக்கும்பொருட்டு தனது மனைவியை
யும், பிறந்து ஏழு நாட்களேயான  தனது மகனையும், அரண்மனையையும்,
அரசவாழ்க்கையையும்,   இன்னும் மற்றவர்களையும்,  நாட்டையும் விட்டு,
யாரிடமும்   சொல்லாமல்   நள்ளிரவில் கிளம்பி காட்டிற்குச்  சென்று  விட்
டான்,  கௌதம சித்தார்த்தன்   எனும்  இளவரசன்.    அடுத்த ஆறு ஆண்டு
களாகமேற்கொண்ட இடைவிடாத ஆன்மீகப்பயிற்சிகள், முயற்சிகள் எது
வும்    வாழ்வின்  புதிரை விடுவிக்க   உதவிடாத நிலையில்,    அனைத்துப்
பயிற்சிகளையும் கைவிட்டு, தனித்துதன்னுடன் தானமர்ந்து,  தன்னுணர்
வின்  உள்ளாழ்ந்து "ஞான-விழிப்பு" பெற்று "புத்தர்"  என அகில உலகமும்
அறியப்பட்டார்

இதேபோல, பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், பதினாறுவயதே
யான சிறுவன், வேங்கடராமன் தமக்கு ஏற்பட்ட அக-மாற்றத்தின் விளை
வாக  தனது வீட்டார் எவரிடமும் சொல்லாமல் வீட்டையும்,  தனது ஊரான
மதுரையையும்  விட்டு  300 மைல்களுக்கு  அப்பால்  உள்ள  திருவண்ணா
மலைக்குச் சென்றுஅங்கிருந்த மலையில் ஒரு குகையினை தனது இருப்
பிடமாகக்கொண்டுவிடுகிறான். அச்சிறுவனே பின்னாளில், பகவான் ஸ்ரீ
ரமணர் என்று அறியப்பட்ட ஆத்ம ஞானியாவார்.

இவ்வாறு உலகிற்குஅறியப்பட்ட உதாரணபுருஷர்கள், ஞானிகள், புத்தர்
கள், சித்தர்கள் வெகுசிலரே. உலகிற்குத் தெரியவராத ஞானிகள், புத்தர்
கள் எத்தனை பேரோ! ஆனால், அசலானஆழமான மனிதவாழ்க்கையை
வாழும்பொருட்டு  ஒருவர்  காட்டிற்குச்  செல்லவேண்டும்,  மலைக்குகை
யில் வசிக்கவேண்டும் என்பதில்லை! மாறாக, ஒருவர் நாட்டிலேயே, தன்
வீட்டிலேயே,   தோட்டத்தைக் காடாகவும்,   தனது படிப்பறையைமலைக்
குகையாகவும் கொண்டு;    இன்னும்,    அனைத்து  உறவுகளுக்கும் மத்தி
யிலேயே வாழ்க்கையை முழுமையாக வாழமுடியும்! விஷயம் இதுதான்:
உண்மையான வாழ்க்கையை வாழ்வதற்கு குடும்பத்தாருடைய   ஒப்புத
லும்,  அனுமதியும், சம்மதமும்  தேவையில்லை!    தேவை என்னவெனில்,

        கேள்வியின்றி, சிந்தனையின்றி, உணர்வின்றி; ஏதோ பிறந்தோம்,
        வாழ்ந்தோம்     என்றில்லாமல்;      மானிடப் பிறவியின்     ஒப்பற்ற
        நோக்கத்தை    அறிவதன்    வழியாக,     "வாழ்க்கை"    எனும் மகா
        புதிரை      விடுவிக்க வேண்டும்  எனும் "பேரார்வம்" மட்டுமே!
 
               <><><><><><><><><>

   * "பட்டயத்தைக்கொண்டு வந்தவனின் செய்தி"
         (இயேசுவை மறு-கண்டுபிடிப்பு செய்தல்)
       தொகுப்பிலிருந்து.
                 ** ** ** **
மா.கணேசன்/ (02.08.2011 & 02.05.2016)


                     
                             









Monday, 2 May 2016

முக்கியமானது முதலில்! *



          "இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய
           ஒருவனாலும் கூடாது: ஒருவனைப் பகைத்து,
           மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப்
           பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்;
           தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய
           உங்களால் கூடாது.
                                (மத்தேயு 6 : 24)

என அறிவுறுத்திய இயேசு, உடனே அவ்வசனத்தைத் தொடர்ந்து,

        "ஆகையால், என்னத்தை உண்போம்,
         என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள்
         ஜீவனுக்காகவும்;  என்னத்தை உடுப்போம்
         என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்
         படாதிருங்கள் என்று, உங்களுக்குச்
         சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்பார்க்கிலும்
         ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும்
         விசேஷித்தவைகள் அல்லவா?"
                               (மத்தேயு 6 : 25)  

என்பதாக அறிவுறுத்துகிறார்.எப்படிப்பட்ட மனிதர் இந்த இயேசு!
தாம் என்ன பேசுகிறோம் என்பதை அறியாமலேயே பேசுகிற ஒரு
மனம் குழம்பிய மனிதரா அவர்? இன்னும் சாதாரணரும், யாவரும்
அறிந்த இயற்கை மற்றும் உயிரியல் நியதிகளைக்கூட அறிந்திரா
மூடரா அவர்? உணவில்லாமல் உயிர் வாழ முடியாது என்பதை
அவர் அறியாதவரா என்ன?

இல்லை, இல்லை; அவர் உயிர்-வாழ்தலைப் பற்றி இங்கு சொல்ல
வில்லை. உயிர்-வாழ்தலைக் கடந்த உண்மையான, நித்திய
வாழ்க்கையைப்பற்றியே அவர் சொல்கிறார். மேலும்,

         "அழிந்து போகிற போஜனத்திற்காக அல்ல,
           நித்தியஜீவன்வரைக்கும் நிலை நிற்கிற
           போஜனத்திற்காகவே கிரியை நடப்பி
           யுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்
           குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய
           தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்."
                                   (யோவான் 6 : 27)

இவ்வாறு இன்னொரு இடத்தில் இயேசு கூறியுள்ளார். ஆம், இயேசுவி
னுடைய "வாழ்க்கை-தரிசனம்" எப்படிப்பட்டதாக இருந்தால், இவ்வாறு
      "என்னத்தை உண்போம்,என்னத்தைக் குடிப்போம்,
       என்னத்தை உடுப்போம் என்று கவலைப் படாதிருங்கள்."
என்று சொல்ல முடியும்? வாழ்க்கையை அதன் அடியிலிருந்து அதன்
கொடுமுடியான உச்சம் வரை முழுமையாகத் தரிசித்த ஒருவரால்
மட்டுமே இப்படிச் சொல்லமுடியும்!

பொதுவாக, நாமனைவரும்  வாழ்க்கையை உணவு, உடை, உறைவிடம்
எனும் அதன் அடித்தளத்தில் மட்டுமே அறிந்தவர்களாயுள்ளோம்!
அதற்குமேல், ஒரு அங்குலம் கூட நாம் மேலே நிமிர்ந்து கண்டதில்லை!
அவ்வாறு காண்பதற்கான தேவையைக்கூட நாம் உணர்ந்தது கிடை
யாது! அந்த அளவிற்கு நாம் உடலின் பசி, தாகம், பாலுணர்வு போன்ற
இயல்பான தூண்டுதல்களுக்குப் பதிலளிக்கும் உணர்வற்ற விலங்கு
களாகவே விளங்குகிறோம்! இவ்வாறு வாழ்க்கைக்கு நாம் பதிலளிக்
கும் உணர்வற்ற தன்மையிலிருந்தும், நமது விலங்குத்தனமான அணுகு
முறையின் மட்டுப்பாட்டிலிருந்தும் நம்மை விடுவிக்கவே இயேசு
         "என்னத்தை உண்போம்,என்னத்தைக் குடிப்போம்,
          என்னத்தை உடுப்போம் என்று கவலைப் படாதிருங்கள்."
என்று சொன்னார். மனித ஜீவிகள் என்கிற வகையில் வாழ்க்கையை
நோக்கிய நமது பிரதான அணுகுமுறையும், நமது பதிலளிப்பும்
(response)எவ்வாறு இருக்க வேண்டும் என்கிற மிகவும் முக்கிய
மான அடிப்படையான பாடத்தையே இயேசு இந்த வசனத்தின் மூலம்
புகட்டுகிறார். இயேசுவானவர் வாழ்க்கையைப் பார்க்கும் பார்வை
முற்றிலும் வேறானது! அது எவ்வளவு முழுமையானதோ, அந்த
அளவிற்கு முற்றிலும் சரியானது! ஆம், அவர் "வாழ்க்கை" என எதைக்
காண்கிறார், சுட்டுகிறார் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளா
மல்,அவரையும் அவரது உபதேசங்களையும் நாம் முழுமையாகப்
புரிந்து கொள்ள முடியாது!

இயேசு, உண்மையில் நம்மை உண்ண வேண்டாம், உடுக்கவேண்டாம்,
என்று சொல்லவில்லை. மாறாக, மனிதஜீவிகள் என்ற வகையில் நாம்
கவலைப்பட வேண்டியது உண்பது, குடிப்பது, உடுப்பது பற்றியல்
லாமல் வாழ்க்கையின்  அர்த்தம், குறிக்கோள், இலக்கு, மற்றும்
வாழ்க்கையின் சாரமான உண்மை பற்றியே நாம் பிரதானமாகக்
கவலைப்பட வேண்டும், அக்கறை கொள்ளவேண்டும் என்கிறார்.

உணவு, உடை, உறையுள் இவையெலாம் தேவை என்பதை இயேசு
மறுக்கவில்லை. உணவு இல்லாமல், மனிதன் உயிர்வாழ முடியாது
என்பது புரிந்தமைந்த விஷயம். ஆனால், எது இன்னும் பலராலும்
புரிந்து கொள்ளப்படாத விஷயம் என்றால், உணவுடனும் இன்னும்
இதர அன்றாடத் தேவைகளுடனும் மனித-வாழ்க்கை முழுமை
யடைந்து விடுவதில்லை என்பது தானாகும்! ஆகவேதான் பிறிதொரு
இடத்தில்,
      "மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல,
       தேவனுடைய  வாயிலிருந்து புறப்படுகிற
       ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்
       என்று எழுதிருக்கிறதே"
                                  (மத்தேயு 4: 4)

என்று "பழைய ஏற்பாடு" நூலிலிருந்து மேற்கோள்காட்டுகிறார்
இயேசு. ஆக, "என்னத்தை உண்போம்,என்னத்தைக் குடிப்போம்,
                            என்னத்தை உடுப்போம் என்று கவலைப்
                            படாதிருங்கள்."
என்று சொன்னதோடு,

        "இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள்
         நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம்
         உங்களுக்கு வேண்டியவைகள் என்று
         உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்."
                                  (மத்தேயு 6: 32)

என்பதாகவும் சொல்கிறார் இயேசு.  ' இவைகளெல்லாம் நமக்கு
வேண்டியவைகள்' என்பது ஒட்டுமொத்த வாழ்க்கையில் இவை
யும் அடக்கம் என்பதைத்தான்.  இந்தத் தேவைகள் யாவும்
இயற்கையானவை, உயிருள்ள அனைத்து தாவரங்களுக்கும்,
விலங்கினங்களுக்கும் பொதுவானவை. ஆகவே, இவை பிரதான
மாக நாடிடுவதற்கும், தேடிடுவதற்கும் உரியவை அல்ல என்ப
தாலேயே, ' இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள்  நாடித்தேடு
கிறார்கள்' என்பதாக இயேசு குறிப்பிடுகிறார்.

உணவு, உடை, உறைவிடம் இவையெல்லாம் எல்லா மனிதர்களுக்
கும் வேண்டியவைகளே என்றாலும், இவை பிரதானமாக நாடித்
தேடிடக்கூடியவைகளல்ல. குறிப்பாக ஞானமுள்ள மனிதர்கள்,
அதாவது வாழ்க்கையின் ஆழமான அர்த்தத்தையும், குறிக்
கோளையும், இலக்கையும் புரிந்து கொள்வதை தமது பிரதான
ஆர்வமாகக் கொண்டுள்ளவர்கள், உணவு, உடை . . .போன்றவற்றை
முதலாவதாகத் தேடுவது இல்லை!  இவர்களுக்கு மாறானவர்களை,
அதாவது வாழ்க்கையின் உண்மையை விட உணவுக்கு முதல் இடம்
கொடுத்து தேடுகிறவர்களைத்தான்  "அஞ்ஞானிகள்"  என்று
இயேசு கூறுகிறார்.

இயேசுவின் தர்க்கம் வித்தியாசமானது. அது, "மேலிருந்து கீழ்" நோக்
கிக் காண்கிற (Top-Down),முழுமையான பார்வை மற்றும்
புரிதலின் தர்க்கமாகும். நம்மைப் போன்ற சாதாரண, மேலோட்டமான
புரிதலின் "கீழிருந்து மேலே" (Bottom-Up)காணும் தர்க்கம் போன்ற
தல்ல அவருடையது!

மனிதஜீவிகள் என்ற வகையில், நாம் அனைவரும் வாழ்க்கையின்
"உட்- பொருளை"த்தான் தேடிட வேண்டுமே தவிர, விலங்குஜீவி
களைப்போல வாழ்க்கையின் மேற்புறத்திலுள்ள புறப்பொருள்
களைத் தேடிக்கொண்டிருக்கக்கூடாது! இது தான் மனிதஜீவி
களுக்கும், விலங்குஜீவிகளுக்கும் உள்ள பெரும் வித்தியாசம் ஆகும்.
வாழ்க்கையின் உட்- பொருளையல்லாமல் புறப்பொருள்களைத்
தேடுகிறவர்களை, இயேசு "அஞ்ஞானிகள்" என்று குறிப்பிடுகிறார்.

"உண்வில்லாமல் மனிதன் வாழமுடியுமா?" என்று நாம் கேட்கலாம்.
உணவில்லாமல்  மனிதன் உயிர் வாழ முடியாதுதான்; ஆனால்,
"வாழ்க்கையின் உட் பொருளை அறியாது, அர்த்தமில்லாமல்
நம்மால் எப்படி வாழமுடிகிறது?" என்ற கேள்வியை ஏன் நாம்
கேட்பதில்லை? வாழ்க்கை பற்றிய, அதன் அர்த்தம் பற்றிய
கேள்வியும், விசாரமும் நம்மிடம் இல்லையெனில், நாமும்கூட
அஞ்ஞானிகளே, வெறும் விலங்கு ஜீவிகளே! மனிதஜீவிகள் என்ற
வகையில், முதலாவதாகவும், பிரதானமாகவும் நாம் தேடிட
வேண்டியது "வாழ்க்கையின் உட் பொருளை"த்தான்! ஏனெனில்,
இதுதான் 'மனிதத்தரத்திற்கேற்ற "தேடு-பொருள்" ஆகும்.
ஆகவேதான் இயேசு,

             "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும்
              அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது
              இவைகளெல்லாம் உங்களுக்குக்
              கூடக்கொடுக்கப்படும்."
                                    (மத்தேயு 6 : 33)

என்பதாகச் சொன்னார். ஆம், மனிதர்கள் முதலாவதாகத் தேட
வேண்டிய "தேவனின் ராஜ்யம்" எனும்  வாழ்க்கையின் இலக்கு
நிலையான "முழுமை"யை, "முக்தி"யைத் தேடினால், அம் முழுமை
யின் பகுதிகளான பிற விஷயங்களும் நமக்குக் கொடுக்கப்படும்.
ஏனெனில், முழுமையினுள் பகுதிகள் அடக்கம். பெரியதில்
சிறியதுஅடங்கும். பெரியதும், முக்கியமானதும், மையமானது
மான விஷயங்களைத் தேடிப்பெறுகின்ற வழிமுறையிலேயே
சிறியதும், அவசியமானதும், அத்தியாவசியமானதுமான
பொருட்களும்,விஷயங்களும் சுலபமாக அடையப்பட்டுவிடும்.

மனிதவாழ்க்கையின் உன்னதமான இலக்கை மறந்து, உயிர்
பிழைத்தலின் அன்றாடத்தேவைகளுக்காக அனுதினமும்,
வாழ் நாட்கள் முழுவதும் தமது சக்தியையும், அறிவையும்,
நேரத்தையும் செலவழித்து, முடிவில் உணர்வற்ற விலங்கு
களைப்போல மனிதர்கள் மாண்டு போகத்தேவை இல்லை!
உண்மையில் சொல்லப்போனால், அடிப்படையான, அத்தியா
வசியத் தேவைகளை விட அடிப்படையற்ற, 'தேவையில்லா'
தேவைகளுக்காகவும், போலியான மதிப்புக்களுக்காகவும்தான்
மனிதர்கள் அதிகமாய் உழைக்கவேண்டியுள்ளது! இந்த
'சாபக்கேடான நிலை' மனிதர்கள் தமக்குத்தாமே ஏற்படுத்திக்
கொண்டதேயாகும். வாழ்க்கையைச் சிறிதும் புரிந்துகொள்ளாத
உணர்வற்ற தன்மைதான் இதற்குக் காரணம்.

உண்மையில், அடிப்படையான, உண்மையான வாழ்க்கைத்
தேவைகள் என்பவை மிகச் சிலவேயாகும்.  ஆனால், இந்த ஒரு
சில தேவைகள் எவ்வாறு மனிதர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கை
யையும் ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டன?வாழ்க்கையைவிட
வாழ்க்கைத்தேவைகள் எங்ஙணம் முக்கியத்துவம் பெற
முடியும்? ஆம், அடிப்படைத்தேவைகள் என்பவை அடிப்படை
யானவை மாத்திரமே தவிர அவையே அனைத்துமாக ஆகிட
முடியாது! ஆனால், துரதிருஷ்டவசமாக, நம்மைப்பொறுத்த
வரை அவையே அனைத்துமாகிவிட்டன!  

வாழ்க்கையானது தொடக்க நிலையில், தேவைகளின் வழியாகத்
தான் நம்மையும், வாழ்க்கையையும் உணரச்செய்கிறது! ஆனால்,
நாமோ தேவைகளை மட்டுமே உணர்கிறோம்; அதற்கு மேல்,
'நம்மை'யும் உணர்வதில்லை! 'வாழ்க்கை'யையும் உணர்வதில்லை!

ஆம், தேவைகளைத் தாண்டி நாம் இன்னும் வாழ்க்கைக்கு விழிக்க
வில்லை!! தேவைகள்,தேவைகள்தான்-அவை உயிர்பிழைத்திருக்க
உதவுகின்றன. ஆனால், உயிர்பிழைத்திருத்தல் என்பது அதன
ளவில் (முழு)வாழ்க்கையுமல்ல, வாழ்க்கையின் இலக்குமல்ல!
ஆகவேதான்,  "இவைகளெல்லாம்  உங்களுக்கு வேண்டியவைகள்
என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். " எனவும், ஆனால்,      
"இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்."
எனவும்  இயேசு குறிப்பிடுகிறார்.

உணவில்லாமல் உயிர்வாழமுடியாது என்பது உண்மைதான்.
நேற்று மூன்று வேளை உண்டோம்; ஆனால், வேறு என்ன நேற்று
சாதித்தோம்? இன்றும் மூன்று வேளை உண்போம்,அதற்காக
உழைக்கவும் செய்வோம். இவ்வாறே தினம்தினம், மாதம், வருடம்
எனத்தொடரும்; ஆனால், என்று நாம் வாழ்க்கையை உணர்ந்து,
அறிந்து, புரிந்து வாழத்தொடங்கப்போகிறோம்?  வாழ்க்கையின்
மிக மையமான, சாரமான, முக்கியமான அம்சத்தை என்றேனும்
தேடுவோமா??  இதுதான் நம்முடைய பிரச்சினையும் மட்டுப்
பாடும் ஆகும்!

ஆகவேதான்,  வாழ்க்கையின் மிக முக்கியமான அம்சத்தை
முதலில் தேடுமாறு இயேசுநமக்கு அறிவுறுத்துகிறார்.முக்கிய
மானதை , இறுதியானதை முதலில் தேடாவிடில், பிறகு அது
குறித்து யோசித்துப்பார்க்கவும் கூட நமக்கு அவகாசமும்
வாய்ப்பும் கிட்டாமல் போய்விடக்கூடும்.

ஏனெனில், நம்மைச் சுற்றியுள்ள சமூகமானது வாழ்க்கை
யல்லாத வற்றுக்காக நம்மை தயார்படுத்திக்கொண்டிருக்
கிறது! மேலும், ஒருமுறை நாம் 'அன்றாடம்' எனும் தேவைகளின்
வாழ்க்கையாகிய காட்டாற்றில் இறங்கினோமேயானால், பிறகு
உண்மையான வாழ்க்கையின் கரையின் பக்கம் ஒதுங்கக்கூட
முடியாமல் அடித்துச்செல்லப்பட்டுவிடுவோம்!

அன்றாட வாழ்க்கை எனும் காட்டாற்றில் சிக்குண்டு அதிலிருந்து
தப்பிக் கரையேறுபவர்கள் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய ஒரு
சிலரேஆவர்! அதில், புத்தர் தலைமையானவர். தனது 29ம் வயது
வரை அரச-வாழ்க்கை வாழ்ந்து வந்த அவர் ஒரு நாள் மானிட
வாழ்க்கையின் "நிலையாமை"யை உணர்த்துகின்ற வகையில்
அமைந்த 'நோய்', 'மூப்பு', 'மரணம்' ஆகிய நிலைமைகளைக்கண்ட
தும், துன்பமயமானதும், நிரந்தரமற்றதுமான 'வாழ்க்கையின்
புதிரை' விடுவிக்கும் தீவிரத்தேடலார்வத்தினால், அரசையும்,
வீட்டையும், நாட்டையும் விட்டு காட்டிற்குச் சென்று தியான-தவப்
பயிற்சிகளைச் செய்தார்; கடுமையான விரதங்களையும் மேற்
கொண்டார். அவரது ஆன்மீகப்பயிற்சிகள் அவருடைய இலட்சிய
நிலையை அடைய உதவிடவில்லை என்பதை அறிந்துஅனைத்
தையும் கைவிட்டு ஒரு மரத்தடியில் அமர்ந்து,  தன்-உணர்வில்
ஆழ்ந்து நிலைத்து "ஞான-விழிப்பு" எனும் முழுமை நிலையை
அடைந்தார். ஆனால், ஞானமடைந்தபிறகு அவர் தனது பழைய
அரச-வாழ்க்கைக்குத் திரும்பிச் செல்லாமல் இறுதிவரை பிச்சை
யேற்று உண்டார். அதற்கு பதிலாக, ஞானப்பொக்கிஷங்களான
தனது உபதேசங்களை உலகிற்கு இலவசமாய் வழங்கினார்!

புத்தர் நினைத்திருந்தால் ஞானமடைந்த பிறகு அவர் தமது
பழைய அரச-வாழ்க்கைக்குத் திரும்பிருக்கலாம்! ஆனால், அவர்
அப்படிச்செய்யவில்லை. ஏனெனில், அடிப்படைத்தேவைகள்
என்பவை வெறுமனே அடிப்படைத்தேவைகள்தானே தவிர,
அவையே அனைத்துமல்ல என்பதைப்புரிந்து கொண்டவர்
புத்தர். மேலும், "நிர்வாணம்" எனும் மனிதவாழ்க்கையின்
முழுமை நிலையான "மறுகரையை" அவர் அடைந்து விட்டார்!
இதையே, இயேசுவின் சொற்களில் சொன்னால் : "தேவனின்
ராஜ்யம்". ஆம், புத்தரின் 'நிர்வாணா' என்பதும்,  இயேசுவின்
"தேவனின்ராஜ்யம்" என்பதும் ஒன்றே!

ஆம், மனிதர்கள் முதலாவதாகத் தேட வேண்டியது "தேவனின்
ராஜ்யம்" எனும் வாழ்க்கையின் இலக்கு நிலையான "முழுமை"
யையே ஆகும். 'தேவனின்ராஜ்யம்' என்பது இங்கு, இந்திய மற்றும்
தமிழக ஆன்மீகத்தில் கூறப்படும் "முக்தி", வீடுபேறு" ," மரணமிலா
பெருவாழ்வு"  என்றெல்லாம் வெவ்வேறு சொற்களைக்கொண்டு
குறிப்பிடப்படும் நிலையே தவிர வேறல்ல!

'தேவனின்ராஜ்யம் என்பது 'இந்தியராஜ்யம்', 'இங்கிலாந்துராஜ்யம்'
போன்றதல்ல! மாறாக, அது ஒரு"முழுமை" நிலையாகும். இன்னும்
துல்லியமாகச் சொன்னால் "முழு உணர்வு" நிலையே அது!      

  "ஆகையால்,என்னத்தை உண்போம்,என்னத்தைக் குடிப்போம்,
        என்னத்தை உடுப்போம் என்று கவலைப் படாதிருங்கள்."
              <<<><<><><>><>>>

    * "பட்டயத்தைக்கொண்டு வந்தவனின் செய்தி"
         (இயேசுவை மறு-கண்டுபிடிப்பு செய்தல்)
       தொகுப்பிலிருந்து.
                 ** ** ** **
மா.கணேசன்/ (18.7.2011 & 02.05.2016)

Sunday, 1 May 2016

அசலான வாழ்க்கைக்கான அழைப்பு *



         
"இயேசு   கலிலேயாக்  கடலோரமாய்   நடந்து போகையில் மீன்
பிடிக்கிறவர்களாயிருந்த இரண்டு சகோதரராகிய பேதுரு என்
னப்பட்ட சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும் கடலில்
வலை போட்டுக் கொண்டிருக்கிற போது, அவர்களைக் கண்டு :
                                    (மத்தேயு 4 :18)
என் பின்னே வாருங்கள், உங்களை
மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.
                                   (மத்தேயு 4 :19)
உடனே அவர்கள் வலைகளை விட்டு,
அவருக்குப் பின் சென்றார்கள்.
                                   (மத்தேயு 4 :20)
அவர் அவ்விடம் விட்டுப்போகையில், வேறே இரண்டு
சகோதரராகிய செபதேயுவின் மகன் யாக்கோபும்,
அவன் சகோதரன் யோவானும் தங்கள் தகப்பன்
செபதேயுவுடனே படவிலிருந்து, தங்கள் வலைகளைப்
பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக்
கண்டு, அவர்களையும் அழைத்தார்.
                                   (மத்தேயு 4 :21)
உடனே அவர்கள் படவையும் தங்கள் தகப்பனையும்
விட்டு, அவருக்குப் பின் சென்றார்கள்.
                                   (மத்தேயு 4 :22)
               --+--
எப்படிப்பட்ட மனிதர் இந்த இயேசு! தமது  அன்றாட ஜீவித்தலுக்
காக மீன் பிடித்துக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து, தன் பின்
னே வரும்படி அழைக்கிறார்! அதோடு,எப்படிப்பட்ட மனிதர்கள்
இந்த பேதுருவும்,  அந்திரேயா;  யாக்கோபு மற்றும் யோவானும்!
அவர்களும்   இயேசு அழைத்தவுடனேயே    தமது மீன் பிடிக்கும்
வலைகளையும்,தங்கள் தகப்பனையும்,படகையும் விட்டுவிட்டு
இயேசுவின் பின்னே சென்று விடுகிறார்கள்!

சாதாரணமாக,  நாம் நம் அன்றாட வாழ்வில்,  ஒருவர்   முனைப்
பாக தனது தொழிலை, வேலையைச் செய்து   கொண்டிருக்கும்
போது,  அதை விட்டுவிட்டு வருமாறு  நாம் அழைக்கமாட்டோம்.
மிகவும்    அவசரமான,   ஆபத்தான  நிலைமைகள்  ஏதுமிருந்தா
லொழிய,     வேலை   செய்து   கொண்டிருக்கும்    ஒருவரை  அவ்
வேலையை நிறுத்திவிட்டு  வருமாறு நாம்  அழைக்கமாட்டோம்.
வேலை ஏதுமில்லாமல் சும்மா உட்கார்ந்திருப்பவரைத்தான் நம்
முடன் வருமாறு அழைப்போம்.

ஆனால், இயேசுவோ,  பேதுரு,   அந்திரேயா,  யாக்கோபு மற்றும்
யோவான்   ஆகியோரை   தன் பின்னே    வருமாறு அழைத்தார்.
அப்படி   அவர்கள் செய்து கொண்டிருக்கும்   வேலையை விட்டு
விட்டு வருமாறு அழைப்பதற்கு என்ன அவசரமான, அதி முக்கி
யத்துவம் வாய்ந்த காரணத்தை இயேசுகொண்டிருந்தார்?

ஆம்,   பேதுரு,  அந்திரேயா,  யாக்கோபு, மற்றும் யோவான் ஆகி
யோரை அழைப்பதற்கான உண்மையிலேயே மிக அவசரமான,
அதிமுக்கியத்துவம் வாய்ந்த காரணம் இயேசுவிடம்  இருந்தது!
இந்த அழைப்பு அவர்களுக்கு மாத்திரமானதல்ல!   இன்று வாழ்
கின்ற நம் ஒவ்வொருவருக்குமே உரியதாகும்!

ஆம்,    "அறியப்படாத",  "அசலான",  "ஆழமான" வாழ்க்கையை
அறிந்து கொள்ளவும், வாழ்ந்திடவும் வேண்டி, 'அறிந்த', 'மட்டுப்
பாடான',   'மேலோட்டமான'    அன்றாட வாழ்க்கையை   விட்டு
விட்டு வரச் சொல்கிறார்  இயேசு!

ஆகவேதான், இயேசு மீன் பிடிப்பவர்களாகிய பேதுரு, . .     .முத
லானவர்களை நோக்கி,   " என் பின்னே வாருங்கள்,   உங்களை
மனுஷரைப்பிடிக்கிறவர்களாக்குகிறேன்." என்றார்.  என்ன ஒரு
அருமையான, அதிரடியான அழைப்பு இது!

இந்த உலகில்,   மீன் பிடிக்கிறவர்கள் இருக்கிறார்கள்;  பறவை
களையும், காட்டு விலங்குகளையும் பிடிக்கிறவர்களும்  இருக்
கிறார்கள். இன்னும் பல்வேறு விதமான தொழில்களைச்  செய்
கிறவர்களும் இருக்கிறார்கள்.    ஏன், பிள்ளை  பிடிக்கிறவர்கள்
கூட இருக்கிறார்கள்.   இன்னும்,  'கொத்தடிமைக்கு'   ஆள்பிடிக்
கிறவர்கள் கூட இருக்கிறார்கள்.  ஆனால்,    'மனுஷரைப் பிடிக்
கிறவர்கள்'  இருக்கிறார்களா?        மனுஷரைப்   பிடிப்பதனால்
என்ன பயன்?

ஆம், மனுஷரைப் பிடிக்கிறவர்கள், மிக அரிதாக, இயேசுவைப்
போல மிகச் சிலரே இருக்கிறார்கள்! மீன் பிடிக்கிறவர்கள் மீன்
களைப்பிடித்து மனிதர்களுக்கு இரையாகும்படிவிற்கிறார்கள்.
ஆனால், மனுஷரைப்பிடிக்கிறவர், 'உலகியல்'எனும் சமுத்திரத்
தில்    தத்தளித்துக் கொண்டிருக்கும்    மனுஷர்களைப்பிடித்து,
"கடவுள்' எனும் பாதுகாப்பான கரையில் சேர்ப்பிக்கிறார்! ஆம்,
'மனுஷரைப்பிடிப்பதே'   இயேசுவின்   ஆன்மீகப்   பணியாகும்!
அனைத்துப்பணிகளையும்விட மனுஷரைப்பிடிக்கிறபணியே
மிக    உயர்வானதும்,    உன்னதமானதுமான   ஆன்மீகப்   பணி
யாகும்!    ஆகவே தான்,     இயேசு,   "என்   பின்னே   வாருங்கள்,
உங்களை    மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன்"      என்று
பேதுருவிடமும், அந்திரேயா, யாக்கோபு, யோவான் ஆகியோரி
டமும் சொன்னார்.   அதாவது,    அவர்களை தமது "சீடர்களாக"
ஆக்கிடுகிறேன் என்பதும் அதில் அடங்கியுள்ளது!

உண்மையில், பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான் ஆகி
யோர்     மிகவும்   எளிமையான,   அருமையான மனிதர்களாக
இருந்திருக்கவேண்டும்!  அதனால்தான், இயேசு அழைத்ததும்
அப்படியே அவர் பின்னே வந்துவிட்டார்கள்.       இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு   முன்   இவர்கள்    வெறும்   மீன்  பிடிக்கிறவர்
களாக, குறிப்பாக, பகட்டும் ஆடம்பரமுமான பொருட்களிலும்
போலியான மதிப்புக்களிலும்   தங்கள் மனதைப் பறி கொடுத்
திடாத     சாதாரணர்களாக,     ஊழலற்றவர்களாக  இருந்திருக்
கிறார்கள்!

அதோடு,    இயேசுவின்  அழைப்பைக்கேட்டதும்,   அவருடைய
கண்களில்   எதையோ   பார்த்திருக்க வேண்டும்!  இயேசுவின்
குரலில் மிகவும் உண்மையான, கம்பீரமான,  மறுக்க முடியாத
ஒரு  ஈர்ப்பை  அவர்கள்  உணர்ந்திருக்கவேண்டும்!  அவையே
அவர்களை    இயேசுவின்   பின்னே  செல்லுமாறு செய்திருக்க
வேண்டும்!

இன்று,   இருபது நூற்றாண்டுகளுக்குப்  பிறகு   கிறித்துவமதம்
பல்வேறு பெயர்களில், பல பிரிவுகளாக உள்ளன. பல இலட்சம்
கிறித்தவர்கள்  இருக்கின்றனர்.    எண்ணற்ற   தேவாலயங்கள்
உள்ளன.   போப்புகள்,  பிஷப்புகள்,  பாதிரியார்கள்  உள்ளனர்.
ஆனால்,  இயேசு போன்ற ஒருவர் இல்லை. மீனவர்கள் இருக்கி
றார்கள்;   ஆனால்,  பேதுரு,  அந்திரேயா, யாக்கோபு, யோவான்
போன்றவர்கள் இன்று இல்லை.

அப்படியே,    இயேசு  நேரில்  வந்தாலும்  எவரும் அவர் பின்னே
செல்லமாட்டார்கள்!இன்னும், கிறித்தவர்கள் என்று  சொல்லிக்
கொள்கிறவர்கள்  கூட   இயேசுவின்   பின்னே செல்லமாட்டார்
கள்! ஏனெனில், கிறித்தவர்கள் அனைவருமே இலவசமாகவும்,
சுலபமாகவும்,  வலியின்றி,   தங்கள்  சிலுவையை எடுக்காமல்
அப்படியே  ஆகாயத்தின் மத்தியிலிருந்தே தங்களை  இரட்சித்
துக்கொள்ளக்கூடிய ஒரு இயேசுவுக்காக காத்துக்கொண்டிருக்
கிறார்கள்!

ஆம்,    கிறித்தவர்களுக்கு   இயேசுவின்  ஒரு வருகை, அதாவது
-முதல் வருகை- போதவில்லை! ஆகவே, அவர்கள்  இயேசுவின்
"இரண்டாவது- வருகை" க்காகக்  காத்துக் கிடக்கிறார்கள்!

ஆனால்,    உண்மையிலேயே  இரண்டாவது முறையாக  இயேசு
பூமிக்கு வந்தாலும், அவர் மீண்டும் பழைய பாடங்களிலிருந்தே
தொடங்குவார்!     ஏனெனில்,   அவரது     பாடங்கள்,  வாழ்க்கை
பற்றிய அவரது உட்-பார்வைகள், உண்மைகள்,  அவர் சொன்ன
உவமைக்கதைகள்,    நற்செய்திகள்,   அவற்றுடன்    இணைந்த
நிபந்தனைகள் யாவும்  மாறிடக்கூடியவை அல்ல!முக்கியமான
உண்மை என்னவென்றால், நாம் இன்னும் மாறவில்லை!  கிறித்
தவர்கள்     என்போர்    இன்னும்    மாறவில்லை!      மனிதகுலம்
இன்னும்   மாறவில்லை!     ஏனெனில்,   அவரது     உபதேசங்கள்
இன்னும் கடைபிடிக்கப்படவில்லை!முறையாக முழுமையாகப்
புரிந்து கொள்ளப்படவில்லை!  இந்நிலையில்,  இயேசு மீண்டும்
வந்தால்,
    "இன்னும் சிந்தியாமலும்,உணராமலும்
     இருக்கிறீர்களா? இன்னும் உங்கள்
     இருதயம் கடினமாயிருக்கிறதா?
                  (மாற்கு 8 :17)
என்று,     தான் ஏற்கனவே  சொன்ன  வசனத்தையே   மீண்டும்
சொல்ல வேண்டியிருக்கும்!  இந்த நிலைமையில், தான் சொன்
னதையே திரும்பத்திரும்பச் சொல்வதற்காக இயேசு மீண்டும்
இன்னொரு முறை வர வேண்டுமா?

இயேசு மீண்டும் பூமிக்கு வந்தால், மீண்டும்  அவர் கலிலேயாக்
கடலோரமாய்   நடந்துபோய்   அங்குள்ள  மீனவர்களைத்  தான்
அழைத்திடுவாரா?  ஏன்,   அவர்கள் மட்டும் தான் மனிதர்களா?
வானளாவியகட்டடங்கள் நிரம்பிய நியூயார்க், லண்டன்,பாரீஸ்
நகரத்திற்குச்சென்று அங்குள்ள பெரியதொழிலதிபர்களையும்
மென்-பொருள் பொறியாளர்களையும்,  ஹாலிவுட் புள்ளிகளை
யும்; அல்லது நேரே வாடிகன் நகருக்குச்சென்று,  போப்  மற்றும்
பிஷப்புகள், கார்டினல்களையும் சந்தித்து, "என்பின்னேவாருங்
கள், உங்களை மனுஷரைப்பிடிக்கிறவர்களாக்குவேன்."  என்று
அல்லது,     "நீங்கள் போய்,  தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்து
பிரசங்கியுங்கள்" என்று சொல்லி அழைத்தால்,அவர்கள்எவரும்
இயேசுவின் பின்னே செல்வார்களா? அல்லது, நாம்தான்அவரது
அழைப்பை மதித்து ஏற்று அவர் பின்னேசெல்வோமா? முதலில்
'கிறித்தவர்கள்'  என்று  சொல்லிக்கொள்கிறவர்கள் கூட செல்ல
மாட்டார்கள்!

ஏன்,   இயேசு    நேரில்  வந்து  அழைத்தால் தான்   அவர் பின்னே
செல்லவேண்டுமா?     இயேசுவின்  பின்னே  செல்வது   என்றால்
என்ன?

       "ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது
       ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச்
       சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும்
       ஜீவனாயும் இருக்கிறது."
                                (யோவான் 6 :63)

என்று,       இயேசு      சொல்லியிருக்க வில்லையா?    இயேசுவின்
வசனங்கள் தான்   நம்மிடம் "புதிய ஏற்பாடு" புத்தகத்தில் உள்ள
னவே! "ஆவியாயும் ஜீவனாயும்"  இருக்கிற அவரது    வசனங்கள்
போதாதா?  அவ்வசனங்களைப் புரிந்து கொண்டு   கடைப்பிடித்
தால் நாம் கடைத்தேற மாட்டோமா? இயேசு இன்று இப்பொழுது
இல்லையா?

இயேசு மீண்டும், மீண்டும், மீண்டும் வர வேண்டுமா? அப்படியே
அவர் வந்தாலும் அவருடன் செல்ல எந்த விதத்தில் நாம் ஆயத்த
மாயிருக்கிறோம்? அவருடைய உபதேசங்களில் ஒன்றையாவது
உருப்படியாகக் கடைப்பிடித்திருக்கிறோமா?

மாறாக ,   "இயேசுவை   நான்    என்  சொந்த இரட்சகராக ஏற்றுக்
கொண்டுள்ளேன்!" ,     " இயேசுவை   நான்   விசுவாசிக்கிறேன்! "
"ஞாயிற்றுக்கிழமைதோறும்  நான்    தேவாலயத்துக்குச்  செல்கி
றேன்!", "அனுதினமும் ஜெபிக்கிறேன்!", "பைபிள் வாசிக்கிறேன்!"
"தசம பாகம் செலுத்துகிறேன்!" என்றெல்லாம் சொல்கிறீர்களா?
இயேசுவின்     வாக்குத் தத்தங்களை        மட்டும்      ஞாபகத்தில்
கொண்டு, அவருடைய நிபந்தனைகளை சௌகரியமாக மறந்து
விடுகிறவர்களை   நோக்கித்தான்  இந்த வசனம் சொல்லப்பட்டு
இருக்கிறது :

    "பரலோகத்திலிருக்கிற என் பிதாவின்
     சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக
     ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல்,
     என்னை நோக்கி : கர்த்தாவே!  கர்த்தாவே!
     என்றுசொல்கிறவன் அதில் பிரவேசிப்பதில்லை."
                               (மத்தேயு 7 :21)

அடுத்து,

         "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே!
          நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்;
          நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்."
                              (மத்தேயு 11 :28)

என   இயேசு  சொல்லியிருப்பது உண்மைதான்; ஆனால், அதற்கு
அடுத்த வசனத்தில் :

           "நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய்
            இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல்
            ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்
            கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள்
            ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல்
            கிடைக்கும். "
                            (மத்தேயு 11 :29)
          "என் நுகம் மெதுவாயும், என் சுமை
           இலகுவாயும் இருக்கிறது என்றார்."
                            (மத்தேயு 11 :30)

என்று சொல்லியிருக்கிறாரே! "என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்
கொண்டு,   என்னிடத்தில்   கற்றுக் கொள்ளுங்கள்;      அப்பொழுது,
உங்கள்   ஆத்துமாக்களுக்கு  இளைப்பாறுதல்  கிடைக்கும். "   ஆம்,
இயேசுவின்    நுகத்தை   நம் மேல்  ஏற்றுக்கொண்டு,  அவரிடத்தில்
கற்றுக்கொள்ளவேண்டும் என்பதுதான் 'நிபந்தனை'!  இந்த நிபந்த
னையை  நிறைவேற்றாமல்,  இளைப்பாறுதலும் இல்லை;  இரட்சிப்
பும் இல்லை!   என்பதை  நாம்  மறந்துவிடலாகாது!   ஆம், இரட்சிப்பு
இலவசமாய்க் கிடைப்பதில்லை; எளிதாயும் அது கிடைக்காது!

மேலும், தன்னைப் பின்பற்றுவது குறித்த முக்கியமான நிபந்தனை
களையும்  இயேசு தெள்ளத்தெளிவாகச் சொல்லியிருக்கிறார்:

          " . . . . ஒருவன் என்னைப் பின் பற்றி
          வர விரும்பினால், அவன் தன்னைத்
          தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்
          துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்."
                                (மத்தேயு 16 :24)

          "தன் ஜீவனை ரட்சிக்க விரும்புகிறவன்
          அதை இழந்து போவான்; என்னிமித்த
          மாகத் தன் ஜீவனைஇழந்து போகிறவன்
          அதைக் கண்டடைவான்."
                               (மத்தேயு 16 :25)

ஆம்,  இவை தான் முக்கியமான நிபந்தனையும், எச்சரிக்கையும்
ஆகும். ஒருவன் இயேசுவைப் பின்பற்றிவர விரும்பினால், அவன்
தன்னைத்தானே வெறுத்திடவேண்டும்!             "தன்னைத்தானே
வெறுப்பது"   என்றால்,    ஒருவன்   மனுஷருக்கு ஏற்றவைகளைச்
சிந்திக்காமல்,  தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கவேண்டும்
என்பதுதான்.  தனக்கென ஒரு சொந்த வாழ்க்கையும்,  இலட்சிய
மும்,  ராஜ்யமும்,  அலுவல்களும்  இருக்கக்கூடாது!      பொதுவாக,
வாழ்க்கை  என்றாலே  'புசிப்பது',  'குடிப்பது', 'அனுபவிப்பது', 'சுக
போகமாக இருப்பது' ;    இவற்றுக்காக   உழைப்பது    என்பதாகத்
தான் நாம் எண்ணுகிறோம், வாழ்கிறோம் !

அதாவது,    வாழ்க்கை பற்றியும்,    அதன் அர்த்தம்,    குறிக்கோள்
குறித்தும்;     வாழ்க்கையின் சாரமான உண்மை  மற்றும் இலக்கு
குறித்தும்   நாம்   அக்கறை   கொள்வதில்லை,   சிந்திப்பதில்லை!
உண்மையில், வாழ்க்கையின் இலக்கு தேவனே; தேவன் அல்லது
கடவுளை அறிவது,  அல்லது அடைவதே!  ஆக,  மனுஷருக்கு ஏற்ற
வைகளைச்   சிந்திக்காமலும்,    செயல்படுத்தாமலும்  இருப்பதே,
தவிர்ப்பதே   'தன்னைத்தானே வெறுப்பது'  என்பதாகும். அடுத்து
'தன் சிலுவையை  எடுத்துக் கொண்டு'  என்பது ஒருவன் தான் பட
வேண்டிய பாடுகளைக் குறிக்கின்றது.   'சிலுவை'  என்பது பொது
வாக பாடுகளைக் குறிக்கின்றது என்லாம்.  இதை நாம் ஒருவனது
'கர்மவினைகள்'  என்றும்  கொள்ளலாம்.   ஆழமான அர்த்தத்தில்,
ஒருவன் தனது உள்ளார்ந்த  "நிழல்-சுயத்தை", தன்னகத்தேயுள்ள
இருளான பகுதியை(Shadow),உணர்வுப்பூர்வமாக இனம் கண்டு
அதைப் புரிந்து கொள்வதன் வழியாக, இணக்குவித்தலைக்குறிக்
கின்றது.

நல்லது, உண்மையில் இயேசுவைப்பின்பற்றுவது என்றால்என்ன?
கிறித்துவ மதத்தில் இணைவதோ, அல்லது,   தினமும் ஒரு சடங்கு
போல பைபிளைவாசிப்பதோ அல்ல!மாறாக, அரிதினும்அரிதான
இந்த மானிடப் பிறப்பின் உண்மையான குறிக்கோளையும், இலக்
கையும்  அறிந்து,   உணர்வுப்பூர்வமாக   வாழ்க்கையை   வாழ்வது
என்பதும்,   இயேசுவைப்  பின்பற்றுவது  என்பதும்  வேறுவேறல்ல!
ஆம், உண்மையிலேயே  சிந்திக்கிற மனிதனுக்கு இயேசுவின் உப
தேச வசனங்கள் அந்நியமாயிருப்பதில்லை!    ஏனெனில்,   வாழ்க்
கையின்  விதிகளைத்தான்  இயேசுவின் வசனங்கள் எடுத்துரைக்
கின்றன!

ஆனால்,  இயேசு காட்டும் வாழ்க்கை,  வெறுமனே  உணவு,  உடை,
உறையுள், உறவுகள் குறித்த விவகாரங்கள் பற்றியதல்ல! மாறாக,  
இயேசு   முழுமையான  வாழ்க்கையாகவும்  அதன்  குறியீடாகவும்
திகழ்கிறார்!

                <><><><><><>
* "பட்டயத்தைக்கொண்டு வந்தவனின் செய்தி!"
(இயேசுவை மறு-கண்டு பிடிப்பு செய்தல்)
தொகுப்பிலிருந்து.

மா.கணேசன்/ 30.04.2016
         

வழக்கத்திற்கு மாறான கேள்விகளும் அசாதாரணமான பதில்களும் - 1

              கேள்வி - 1 நீங்கள் இறந்தபிறகு, அந்த, வாழ்க்கைக்குப் பிறகான வாழ்க்கையில் (In the After Life) உங்களுக்கு மிகவும் பிடித்த, தாய், ...