Saturday, 18 February 2017

இயற்கையுலகிலிருந்து மனிதன் தனித்தவனா? (பகுதியும் முழுமையும் பற்றிய பிரச்சினை)



               •••
            பரிணாம (மாற்ற)த்திற்கு உட்பட்டதொரு நிஜம்
            தொடக்கத்திலிருந்தது போல
            இடையிலும், இடையிலிருப்பதைப்போல
            இறுதியிலும் இருப்பதில்லை!
               •••
இயற்கையுலகிலிருந்து மனிதன் தனித்தவனா? அதாவது, இயற்கையுலக
மும் மனிதனும் வேறு வேறா? இக்கேள்வி சிந்தனை தொடங்கிய திலிருந்து
இன்றுவரை தொடர்ந்து நீடித்துவரும் பகுதியும் முழுமையும் பற்றிய பெரும்
(தத்துவப்) பிரச்சினையாகும்.

ஒருவகையில், மனிதன் இயற்கையுலகிலிருந்தும், இப்பிரபஞ்சத்திலிருந்தும்
தனித்தவனல்ல! அவனது பரிணாமத் தோற்றத்தினடிப்படையில் அவன்
பிரபஞ்ச இயற்கையின் ஒரு பகுதியே ஆவான்.

இன்னொரு வகையில், அவனது பரிணாம உட்பொதிவு, மற்றும் ஒட்டு
மொத்த பரிணாமத்திட்டத்தின் நோக்கிலிருந்து காணும் போது, மனிதன்
இயற்கையுலகின் முக்கியத்துவமற்ற ஏதோவொரு பகுதியோ அல்லது நிரந்
தரமானதொரு  பகுதியோ  அல்ல! இப்பார்வையின் கடை முனையிலிருந்து
காண்கையில், இயற்கையுலகம், பிரபஞ்சம் என்பது மனிதனின் பகுதியாக
மாறிவிடுவது அவசியமாகும்! எவ்வாறு கம்பளிப்புழுவானது வண்ணத்துப்
பூச்சியாக மாறிய பிறகு, அக்கம்பளிப்புழு வண்ணத்துப்பூச்சியின் பகுதி
யாக மாறிவிடுகிறதோ அவ்வாறு!

இவ்விடத்தில், இயற்கையும் மனிதனும் வேறு வேறு அல்ல என்று பழம்
தத்துவம் பேசுபவர்கள் கவனிக்கவேண்டிய முக்கிய விஷயம் என்னவென்
றால், இயற்கையும் மனிதனும் நிச்சயம் வேறு வேறு தான்! ஏனெனில்,
மனிதனே தற்போதைய "புதிய இயற்கை"யாவான்! மேலும், அவனே இயற்
கையின் உள்ளார்ந்த விழைவை உணர்ந்து பிரதி நிதித்துவம் செய்பவனும்,
அவ்விழைவு சுட்டும் இலக்கை நிறைவேற்றக் கூடியவனுமாக இருக்கிறான்!
மனிதனை "மூன்றாம் இயற்கை",  அல்லது "மூன்றாம் பிரபஞ்சம்" என்று
அழைப்பதே மிக்கப் பொருத்தமானதாகும்! அதாவது பௌதீகச் சடப்பொரு
ளாலான தொடக்க நிலை பிரபஞ்சத்தை நாம் "முதலாம் இயற்கை", அல்லது
"முதலாம் பிரபஞ்சம்" என்று அழைப்பது தான் முறையாகும்! ஏனெனில்,
பௌதீகச் சடப்பொருளானது ஒரு கட்டத்தில் உயிர்-ஜீவியாக எழுந்து விட
வில்லையா? ஆம், உயிர்-ஜீவியின் (அல்லது உயிரியல்) கோளம் தான் அந்த
"இரண்டாம் இயற்கை", அல்லது  "இரண்டாம் பிரபஞ்சம்" ஆகும்! உயிர்த்
தோற்றத்தை அடுத்து, மனிதஜீவியுடன் தொடங்கிய  உணர்வியல் கோளம்
தான் நாம் குறிப்பிடும் அந்த "மூன்றாம் பிரபஞ்சம்" அல்லது "மூன்றாம்
இயற்கை"யாகும்! இயற்கையானது பண்பு ரீதியாக, சடமாகத்தோன்றி,
உயிராக எழுந்து, தற்போது மனிதனாக, மனிதனுள் உணர்வாகவும் உயர்ந்
துள்ள இந்நிலையில், எங்கிருக்கிறது இயற்கைவாதிகளும், பொருள்முதல்
வாதிகளும், இன்னும் விஞ்ஞானிகளும் சொல்லுகிற அந்த ஆதி இயற்கை!
தன் இறுதி இலக்கை அடையும் வரை தொடர்ந்து பண்பு ரீதியாக மாற்றம
டைந்து செல்வது தான் இயற்கையின் இயற்கை (இயல்பு) ஆகும்! தற்போது
இயற்கை  எப்பண்பு நிலையை எட்டியுள்ளதோ அப்பண்பைக் கொண்டு
தான் இயற்கையானது சுட்டப்படவும், குறிக்கப்படவும் வேண்டும்!

'லிபரேஷன் அன்லீஷ்ட்' குழுவினர் போன்ற பலர், இந்த உலகத்தின் இயற்
கையிலிருந்து நாம் தனித்தவர்கள் என்ற மாயையிலிருந்து விடுபட
வேண்டும் . . . என்பதாக புதிதாக,  'தலை கீழ்' தத்துவம் பேசி வருகிறார்கள்!
ஆனால், உண்மையில், மனிதஜீவிகளாகிய நாம் இயற்கையிலிருந்தும்,
பிரபஞ்சம் என்பதிலிருந்தும், தனித்தவர்கள், வேறுபட்டவர்கள் மட்டுமல்ல;
இன்னும் நாம் அசலான மனிதன் என்பவனிலிருந்தும் வேறுபட்டவர்களே!
அதாவது நாம் இன்னும் அசலான மனிதனாக எழவில்லை என்பதுதான்
உண்மை நிலையாகும்! ஆகவே, நாம் விடுபடவேண்டுமெனில், அது,
'மனிதனும் இயற்கையும் வேறு வேறு அல்ல' எனும் சிறு பிள்ளைத்தனமான
பிணைப்பிலிருந்தும், அறியாமையிலிருந்தும்தான் அவசரமாக விடுபட்டாக
வேண்டும்!

ஏனெனில்,மனிதன் இயற்கையுலகிலிருந்து  தனித்தவன் மட்டுமல்ல!அவன்
இன்னும் தனது மிகவும் மட்டுப்பாடான தற்போதைய  நிலையிலிருந்தும்
வேறுபட்டவனாவான்! தற்போதைய மனிதன் உண்மையான மனிதனின்
நிழல் போன்றவனே!

மனிதன் இயற்கையுலகிலிருந்து தோன்றியவன் எனக்காண்பது அவனைப்
பற்றிய மேலெழுந்தவாரியான உண்மையே தவிர, அதுவே முடிவான இறுதி
உண்மையல்ல! ஏனெனில், இயற்கையுலகின் ஒரு விசேடமான "அவதாரம்"
தான் மனிதன்! இதன் அர்த்தம், பிரபஞ்சம் அல்லது இயற்கையுலகம் தான்
பரிணாமம் எனும் வழிமுறையின் மூலமாக மனிதனாக மாறியுள்ளது!
அதாவது, மனிதன் என்பவன் பிரபஞ்சத்தின் புதியதொரு வடிவமாவான்.
இவ்வகையில், மனிதன் வேறு பிரபஞ்சம் வேறு அல்ல! அதே வேளையில்,
பிரபஞ்சப் பரிணாமம் மனிதன் எனும் புதிய வடிவத்துடன் நிறைவடைந்து
விடுவதில்லை! மாறாக,மனிதனையடுத்த, அல்லது மனிதனைக்கடந்த ஒரு
இறுதி வடிவத்தை அடையவேண்டியுள்ளது! இந்த அரிய, இறுதி மாற்றத்தை,
உணர்வுள்ள ஒவ்வொரு மனிதனும்தான் தன்னுள் கொணர்ந்திடவும்,
நிகழ்த்திடவும் வேண்டியுள்ளது! ஆம்,தொடர்ந்து தன்னை மறுகண்டுபிடிப்பு
செய்பவனே, தொடர்ந்து தன்னை மறு உருவாக்கம் செய்பவனே மனிதன்!

நதியானது தனது முழுமையை, இலக்கு நிலையை அடையும் போது அது ஒரு
நதியாக இருப்பதில்லை!அவ்வாறே, மனிதனும் தனது  முழுமையை, இலக்கு
நிலையை அடையும் போது மனிதனாக இருக்கவியலாது!

இயற்கையிலிருந்து தோன்றியவனே மனிதன் என்றாலும், அவன் இயற்கை
யை மீறிச் செல்லும் இயற்கையை, பேரியற்கையைச் சேர்ந்தவனாவான்!
மேலும், இயற்கை சுய-உணர்வு பெற்றிடும் போது அது தொடர்ந்து பழைய
இயற்கையாக இருப்பதில்லை! அதாவது, இயற்கை மனிதனாகி, மனிதனுள்
உணர்வாகிடும் பட்சத்தில், மனிதன் என்பவன் சுய-உணர்வு பெற்ற புதிய
வகை இயற்கையாவான்! அதாவது, இயற்கையின் உள்ளார்ந்த இயற்கை
யின்படி (இயல்பின்படி), இயற்கையானது இயற்கையாகவே இறுதிவரை
தொடரவோ, நீடிக்கவோ இயலாது! ஏனெனில், இயற்கை என்பது மாறாத
இயற்கை அல்ல; மாறாக, அது  தொடர்ந்து வளர்ந்து தம்மைத்தாமே கடந்து
செல்லக்கூடிய, பண்பு ரீதியான மாற்றத்திற்கு உட்பட்டதொரு  பரிணாம
நிஜமாகும்!

இயற்கை, உலகம், பிரபஞ்சம்  என அதை எவ்வாறு அழைத்தாலும், பிரதான
மாக  அது ஒரு ஒப்பற்ற இலக்கைக் குறிவைத்து முன்னேறிச்செல்லும் ஒரு
பரிணாம இயக்கமாகும். அது தன் அர்த்தத்தை, தனது நீடித்த இருப்பிலிருந்
தல்லாமல் தனது அந்த ஒப்பற்ற இலக்கை அடைவதிலிருந்தே பெறுகிறது!
ஆக,மனிதன் உட்பட பிரபஞ்சத்தின் வெவ்வேறு பகுதிகளும் அந்த ஒப்பற்ற
இலக்கை அடைவதற்கான கருவிகளாக தத்தம் பங்கு பணியை ஆற்றுவதற்
கென உருவான பிரபஞ்சத்தின் நீட்சியும் வளர்ச்சி நிலைகளுமே யாகும்!

பகுதியும் முழுமையும் பற்றிய பிரச்சினையில், பலர் இயற்கையுலகை,
பிரபஞ்சத்தை ஒரு முழுமையெனக் கருதிக்கொண்டு தங்களது வாதங்களை
முன் வைக்கிறார்கள். ஆனால், அது ஒரு முழுமை அல்ல; அது பலவித பகுதி
களைத் தம்முள் கொண்டஒரு அமைப்பு மாத்திரமே! உண்மையில், உலகம்,
பிரபஞ்சம் என்பது ஒரு அமைப்பு மட்டுமல்ல, அது ஒரு இயக்கமும் ஆகும்.
அந்த இயக்கத்தை  நாம் பரிணாமம் என்கிறோம். அதாவது, பிரபஞ்சம்
என்பது நிலையானதும், முழுமையானதுமான ஒரு அமைப்பு அல்ல. மாறாக,
அது முழுமையை நோக்கிச் செல்லும் ஒரு இயக்கம் ஆகும்!

அடுத்து, உலகம் எனும் அமைப்பை ஒரு முழுமையெனக்கொண்டால், அதன்
பகுதிகள் யாவும் ஒரேமாதிரியாகவோ,ஒரே தரத்திலமைந்ததாகவோ, இருப்
பதில்லை. ஒரு கடிகாரத்தைப்பொறுத்தவரை, சந்தேகமின்றி அதை ஒரு
முழுமையான அமைப்பு என்று சொல்லலாம். ஆனால், அதே வேளையில்,
அக்கடிகாரத்தின் அனைத்துப்பகுதிகளும் ஒரே மாதிரியாக இருந்தால், அது
ஒரு கடிகாரமாக, நேரம் காட்டும் கருவியாக இயங்கவியலாது!

அடுத்து, எவ்வொரு அமைப்பைப் பொறுத்தவரையிலும், அதன் பகுதிகள்
அந்த அமைப்பை (முழுமை) யும், அம்முழு-அமைப்பு அதன் பகுதிகளையும்
சார்ந்திருப்பது என்பது தவிர்க்கவியலாததாகும். நாம் இடம்பெறும்(வாழும்)
இப் பிரபஞ்சம் எனும் அமைப்பைப் பொறுத்தவரை, நாம் அதன் பகுதிகளே
என்றாலும்,நாம் ஏதோ அதன் முக்கியத்துவமற்ற சாதாரணபகுதிகள் அல்ல!
மேலும், ஒரு மனித இனம் அல்லது மனித சமூகம் என்கிற வகையில்,  நாம்
அனைவரும் ஒரு உருப்படியோ, அல்லது ஒரு படித்தானவர்களோ அல்ல.
மாறாக, ஒவ்வொரு தனிமனிதனும் இப்பிரபஞ்சத்தின் முழுமையாக ஆகக்
கூடியவனும், இப்பிரபஞ்சத்தை முழுமைப்படுத்தக்கூடிய பிரதிநிதியும்
ஆவான்!  எவ்வாறு ஒரு மரத்திற்கு, கிளைகள், சிம்புகள், இலைகள், பூக்கள்,
பிஞ்சுகள், காய்கள் என பல பகுதிகள் இருந்தாலும், அம்மரத்தின் முழுமை
யைப்பிரதி நிதித்துவம் செய்யக்கூடியதாக, அதாவது, கனியாகக்கூடியதாக
அதன் ஒவ்வொரு பிஞ்சும் காயும் பிரத்தியேகமான பகுதியாக விளங்கு
கிறதோ அவ்வாறே ஒவ்வொரு மனிதனும் பிரபஞ்ச விருட்சத்தின் முழுமை
யைக்குறிக்கும் கனியாக மாறக்கூடியவனாக விளங்குகிறான்!

இவ்விடத்தில் நாம் தெளிவாகப்புரிந்துகொள்ளவேண்டிய விஷயம் என்ன
வெனில், ஒரு கடிகார அமைப்பின் முழுமை என்பது வேறு; பிரபஞ்ச அமைப்
பின்முழுமை என்பது வேறு!சரியாக இயங்கக்கூடிய ஒரு கடிகாரஅமைப்பை
நாம் ஒரு முழுமை என்று கொள்ளலாம்; ஒரு கடிகாரத்தைப்பொறுத்தவரை
அதன் பகுதிகள் இல்லாமல் முழுமை இல்லை;மேலும்,பகுதியும் முழுமையும்
பரஸ்பரம் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன எனலாம். இதையே பிரபஞ்ச
அமைப்புக்கும் நாம் பொருத்திக் கூறலாம். ஆனால், ஒரு கடிகாரத்தைப்
போலல்லாமல், பிரபஞ்சஅமைப்பு என்பது வளரக்கூடிய,பரிணமிக்கக்கூடிய
தொரு அமைப்பு ஆகும். பிரபஞ்சமானது மனிதனாகப்பரிணமித்து, மனித
னின் உள்ளேயும், ஊடாகவும் சென்று தன் இலக்கு நிலையான முழுமையை
அடையும் போது அந்நிலையில், பிரபஞ்சமும் இருப்பதில்லை, மனிதனும்
இருப்பதில்லை!  மாறாக, பிரபஞ்சம், மனிதன் எனும் இரண்டு மெய்ம்மை
களும் முழுமை எனும் ஒருமையில் கரைந்து, இறுதியான அந்த  மெய்ம்மை
யோடு மெய்ம்மையாகக் கலந்து விடுகின்றன!

ஆகவே, இனியும், மனிதனை, பிரபஞ்சத்தின் முக்கியத்துவமற்ற ஏதோ ஒரு
பகுதியாகக் குறைத்துக்கூறுவது என்பது பொருத்தமற்றதும்,அறியாமையின்
வெளிப்பாடுமே ஆகும்! இன்னும், மனிதன் என்பவன் பலவகை உயிரினங்
களில் அவனும் ஒரு உயிரினமோ, அல்லது ஒரு விலங்கு ஜீவியோ அல்ல!
மனிதன் அவனது சாரத்தில் ஒரு உணர்வேயாவான்.  இன்னும் சொல்லப்
போனால், மனிதன் என்பவன் உடல் எனும் விலங்குஜீவியினுள் தற்காலிக
மாகத்தங்கி வாழும் முற்றிலும் வித்தியாசமானதொரு மெய்ம்மை ஆவான்!

மேலும், பண்பு ரீதியாக,  இயற்கை அல்லது பிரபஞ்சம் அடைய வேண்டிய
இலக்கு நிலையான இறுதி மாற்றத்தைப்பொறுத்தவரை அவை மனிதனை,
ஒவ்வொரு தனி மனிதனையுமே சார்ந்திருக்கிறது!

ஆகவே,பிரபஞ்ச இயற்கை,மனிதன், இவ்விரண்டுக்கும் பொதுவான இலக்கு,
என இம்மூன்றும் ஒரே பரிணாம நிகழ்வுமுறையின் வெவ்வேறு நிலைகளை,
கட்டங்களைக் குறிக்கும் மெய்ம்மைகளே! மேலும், பரிணாம நிகழ்வுமுறை
யானது இறுதிக்கட்டத்தை,நிலையை அடையும்போது அங்கே இயற்கையோ,
பிரபஞ்சமோ, இன்னும் மனிதனோ எதுவும் இருக்காது! இறுதி மெய்ம்மை
மட்டுமே இருக்கும்! அந்த இறுதி மெய்ம்மையை ஒவ்வொரு மனிதனும்
நேரடியாக உணர்ந்தடைய முடியும்! அவ்வாறு உணர்ந்தடையும் போது
நீங்கள் ஒவ்வொருவரும் அம்மெய்ம்மையை என்ன பெயர் வைத்து வேண்டு
மானாலும் அழைத்துக் கொள்ளலாம்!


மா.கணேசன்/ நெய்வேலி/  15.02.2017
----------------------------------------------------------------------------


Wednesday, 15 February 2017

எதற்காக வந்தோம் பூமிக்கு?




இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்.

இது தமிழின் முன்னோடிக் கவிஞர்களில் ஒருவரான நகுலன் அவர்களின்
"கோட்ஸ்டாண்ட் கவிதைகள்' தொகுதியில் இடம்பெற்ற ஒரு கவிதை யாகும்.

'இக்கவிதையை பெரும்பாலான வாசகர்கள் நிலையாமையின் துக்கமாகவே வாசித்திருக்கிறார்கள். சில மரணங்களுக்கு உதாரணமாகவும் இந்தக்
கவிதை காட்டப்பட்டுள்ளது.'  என்பதாக   ஷங்கர்ராமசுப்ரமணியன்-ன்,
"இல்லாமல் இருப்பதன் இனிமை" என்ற தலைப்பில்,  தமிழ் இந்து நாளிதழ்,
12.02.2017, ஞாயிறு அன்று வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், நாம் இக்கவிதையை, வெறும் கவிதையாகப் பார்க்காமல், தத்துவ
சிந்தனைக்கான ஒரு பயிற்சியாக விரித்துப் பார்க்கப்போகிறோம். ஆகவே,
இந்தக்கட்டுரை,நகுலனின் கவிதைமீதான விமர்சனமோ,பொழிப்புரையோ
அல்ல என்பதை நினைவில் கொண்டு மேலே செல்வோம்.

"இருப்பதற்கென்றுதான் வருகிறோம் இல்லாமல் போகிறோம்." எனும் இக்
கவிதை வரி ஒற்றை வாக்கியம்தான் என்றாலும், நமது சிந்தனை வெளியில்
அது ஒரு பெரும் பிரபஞ்சமாக விரிவடையக்கூடியதாக உள்ளது.

இக்கவிதை வரி, இரண்டு கூற்றுகளின் இணைவாக உள்ளது. முதல் கூற்று, "இருப்பதற்கென்றுதான் வருகிறோம்" என்று சொல்கிறது. ஆனால்,உண்மை
யில், நாம் இங்கு பூமிக்கு 'இருப்பதற்கென்றுதான் வருகிறோமா?' என்றால்,
ஆம், இல்லை; இரண்டும் தான் என்று சொல்லவேண்டும்! ஆம், சில காலம்
மட்டுமே இருப்பதற்காக வருகிறோம்! இல்லை, சாசுவதமாகவோ, நிரந்தர
மாகவோ  இருப்பதற்காக இங்கு வரவில்லை!

பொதுவாக, கவிதை வாசிப்பில் உள்ள பிரச்சினை, கவிஞன் கூறிய வரிகளை
சிந்திக்காமல் அப்படியே எடுத்துக்கொள்வதில் தான் அடங்கியுள்ளது என
லாம்! கவிஞன் தனக்கு ஏற்பட்ட தாக்கத்தை வாசகர்களுக்குத் தொற்ற
வைக்கும் வகையில், சில வரிகளைப்போடுகிறான்; அது பலரது விஷயங்க
ளில் ஏடாகூடமாக ஆகிவிடுகிறது! இதற்கு, ஒருவகையில், கவிஞனும்,
கவிதை பற்றிய பொதுவான கோட்பாட்டும், இன்னும் கவிதைப்பார்வையும்
தான் காரணம்!

அப்படியானால், "இருப்பதற்கென்றுதான் வருகிறோம்" என்ற கூற்றை நாம்
அப்படியே எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில், நாம் இங்கு வருவதற்கு
முன் எங்கிருந்தோம், எவ்வாறிருந்தோம், இங்கு எதற்காக வந்தோம் என்பன
போன்ற கேள்விகளைக்கேட்டு  சிந்தித்து அவற்றுக்கான பதில்களைப்
பெற்றாக வேண்டும்! அதாவது, "எதற்காக நாம் பூமிக்கு வந்தோம்?" என்ற
கேள்வி அதி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில், இக்கேள்விக்கான
சரியான பதிலைப் பொறுத்தே நம்முடைய வாழ்வும், அதன் அர்த்தமும்,
சிறப்பும், முக்கியத்துவமும்; நம்முடைய மரணத்தின் தன்மையும் அமையும்!

இப்போது, நாம் நகுலனின் கவிதை சுட்டிய அதே பிரச்சினையைச் சுட்டுகிற
வேறு சில சிந்தனை வரிகளை என்னுடைய "கடைசியாக நீங்கள் எப்போது
இறந்தீர்கள்?" எனும் தொகுப்பிலிருந்து எடுத்துக்காண்போம்.

     இல்லாமலிருந்தோம்!
     பிறப்பு எனும் கதவின் வழியாக
     இருப்பு பெற்றோம்!
     இறப்பு எனும் கதவின் வழியாக
     மீண்டும் இல்லாமல் போகிறோம்!
     அதற்கு ஏன் இவ்வளவு ஒப்பாரி?*

கவிதை வரிகளைப்போலத்தெரியும் இவை உண்மையில் கவிதைகள் அல்ல!
அதாவது இவ்வரிகளை கவிதை போல மட்டும் வாசிப்பது போதாது, இவ்வரி
களைக்கொண்டு சிந்திக்கவும், தியானிக்கவும்(Contemplation)வேண்டும்!
எவ்வொரு கூற்றையும், விஷயத்தையும், கருத்தையும், கோட்பாட்டையும்
சிந்திக்காமல் அப்படியே எடுத்துக் கொள்வது என்பது தவறான புரிதலுக்கும்,
முடிவுகளுக்கும் இட்டுச் செல்வதாக அமைந்துவிடும்.  

அதாவது, "இருப்பதற்கென்றுதான் வருகிறோம்"  என்ற கூற்றை அப்படியே
எடுத்துக்கொண்டு, அடுத்த கூற்றான "இல்லாமல் போகிறோம்" என்பதை
இணைத்து வாசிக்கும் போது, ஷங்கர்ராமசுப்ரமணியன் குறிப்பிட்டவாறு,
'நிலையாமையின் துக்கம்' மட்டுமே நமது அனுபவமாக, வாழ்க்கை தரும்
பரிசாகத் தெரியும்!

"இருப்பதற்கென்றுதான் வருகிறோம்" என்பது நமது பிறப்பைக்குறிக்கிறது.
அதாவது, " பிறக்கிறோம்" என்ற சொல்லுக்குப் பதிலாக, "வருகிறோம்" என்ற
சொல் போடப்பட்டுள்ளது. பிரச்சினை இதில் இல்லை; மொத்தப்பிரச்சினை
யும் "இருப்பதற்கென்றுதான்" எனும் சொற்றொடரில் தான் அடங்கியுள்ளது!
இதில் மறைந்திருக்கும் பிரச்சினை, அல்லது,  'அபாயம்' என்னவென்றால்,
"எதற்காக வந்தோம்?" என்ற கேள்வியை இருட்டடிப்பு செய்ததோடல்லாமல்,
அது குறித்து ஆழமாகச் சிந்திப்பதன் அவசியம், முக்கியத்துவம் ஆகியவற்
றையும் காலிசெய்துவிடுவடுவது தானாகும்! நகுலனும் இவ்விஷயம் குறித்து
ஆழமாகச்சிந்தித்து எழுதியதாகத் தெரியவில்லை என்பதுதான் அவருடைய
வாழ்க்கைப் பார்வையில், புரிதலில் உள்ள பெரும் ஓட்டையாகும்!

இங்கே நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால்,
நிச்சயமாக நாம் இங்கே "வருகிறோம்", சில காலம் இருக்கவும் செய்கிறோம்;
ஆனால், சாசுவதமாகவோ, நிரந்தரமாகவோ  "இருப்பதற்கென்று" நாம் வர
வில்லை!அப்படியானால்,பிறகு "எதற்காக வந்தோம்?" என்பதற்கான பதிலை
பிறகு அதற்குரிய இடத்தில் பார்ப்போம்!

இப்போது, வாழ்க்கை குறித்த நமது பார்வை, அணுகுமுறை எப்படியுள்ளது
என்பதைப் பார்ப்போம். நாம் பிறப்பதற்கு முன்பு  இல்லாமலிருந்தோம்! ஒரு
கட்டத்தில், பிறப்பு எனும் கதவின் வழியாக இருப்பு பெறுகிறோம்! ஆனால்,
நாம் பிறப்பதற்கு முன்பு இல்லாமலிருந்தது குறித்து நாம் எவருமே கவலைப்
படுவதோ, துக்கப்படுவதோ கிடையாது! ஆனால், சில காலத்திற்குப்பிறகு,
இறப்பு வரும்போது நாம் இல்லாமல் போகப்போகிறோம் என்பது குறித்து
மட்டும் அஞ்சுகிறோம், கவலைப்படுகிறோம்! இல்லாமலிருந்ததற்கும்,
மீண்டும் இல்லாமல் போவதற்கும், இந்த இரண்டு 'இன்மைக்கும்'   உள்ள
வித்தியாசம் என்ன? ஏன் இந்த முரண்பாடு என்பது குறித்து நாம் யோசிப்ப
தில்லை! ஒருவேளை, சில காலம் நாம் இருந்து இருப்பின் ருசியைச் சுவைத்
ததனால்  தான் இந்தத் தடுமாற்றமா?

இல்லாமலிருந்தோம், திடீரென இருப்புக்கு வருகிறோம், பிறகு மீண்டும்
இல்லாமல் போகப்போகிறோம் என்பதில் உள்ளடங்கியிருக்கும் புதிர் என்ன
என்பதை நாம் ஏன் ஆராய்ந்து கண்டுபிடிக்கக்கூடாது? கொஞ்சகாலம் தான்
நம் புவி வாழ்க்கை என்றாலும், நாம் எதற்காக இங்கே பூமிக்கு வருகிறோம்?
வெறுமனே உண்டு,உறங்கி,இனம்பெருக்கி விலங்கு ஜீவிகளைப்போல, ஏன்,
எதற்காக என்று தெரியாமல் உயிர்-பிழைத்திருந்து பிறகு ஒரு நாள் மாண்டு
போவதற்காகவா? இதன் அர்த்தம் என்ன? சிறிதாயிருந்தாலும், பெரிதாயி
ருந்தாலும் அர்த்தம் ஏதுமில்லாமலா இப்பிரபஞ்சமும், நாமும், எல்லாமும்
தோன்றியிருக்கின்றன?

ஒன்று மட்டும் நிச்சயம், நிச்சயமாக, நாம் இங்கே நிரந்தரமாக இருப்பதற்
கென்று வரவில்லை!அப்படியானால், எதற்காக,எந்த நோக்கத்திற்காக, எந்த
குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக,எந்த இலக்கை அடைவதற்காக நாம்
இங்கு வருகிறோம்? உய்த்துணர்ந்து பார்க்கும் போது, இன்னொன்றும் நிச்ச
யம், அது என்னவென்றால், இறுதியாக  இல்லாமல் போவதற்காகவும் நாம்
இங்கே வரவில்லை!

ஆக, நகுலனுடைய கவிதையில் இடம்பெறும் இரண்டு கூற்றுகளில் இரண்
டாவது கூற்றான "இல்லாமல் போகிறோம்" என்பதும் தவறானதே! ஏனெனில்,
வழக்கமாக, நாம் எண்ணுவது போல :

       பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட காலத்தில்
       அடைபட்ட இருப்பு அல்ல வாழ்க்கை!
       இருப்பை எவ்வாறு உணர்வு கொண்டு
       முழுமைப்படுத்துகிறோம் என்பதே  வாழ்க்கை!*

அதாவது, நாம் இங்கு பூமிக்கு வருவது என்பது, கொஞ்ச காலம் இங்கிருந்து
விட்டு பிறகு மாண்டு மறைந்து போவதற்காக அல்ல! பிரபஞ்சத்தின் படைப்
புத்திட்டம் இதுவல்ல! மாறாக, நாம் இருப்பு பெறுவதென்பது இருப்பிலிருந்து,
மேலுயர்ந்து பேரிருப்புக்குச் செல்வதற்காகத்தான்! எவ்வாறு, "இன்மை",
"இருப்பு"  என்பவை புதிரானவையோ அவ்வாறே "பேரிருப்பு" என்பதும்
புதிரானதே! சில காலம் நாம் இங்கு இருப்பது பேரிருப்புக்குச் செல்வதற்கு
நம்மை ஆயத்தப் படுத்திக் கொள்வதற்காகத்தானே தவிர, யாதொரு குறிப்
பிட்ட இலக்கும் இல்லாமல், உயிர்-பிழைத்திருப்பதற்காகவோ,உயிர்-பிழைப்
புக்குரிய பொருட்களை, சொத்துக்களாக எண்ணிக் குவிப்பதற்காகவோ,
சொந்த சாம்ராஜ்யத்தை நிறுவுவதற்காகவோ அல்ல! ஏனெனில், பேரிருப்பு,
அல்லது முழுமையான இருப்பு தான் உண்மையான, அழிவில்லாத நிரந்தர
மான சாம்ராஜ்யமாகும்! தேவனின் ராஜ்ஜியம், இரட்சிப்பு, விடுதலை, முக்தி,
மோட்சம், வீடுபேறு, மரணம்கடந்த பெருவாழ்வு,ஞானமடைதல்,நிர்வாணம்
என்று குறிப்பிடப்படுபவையும் இதுவே!

"பேரிருப்பு" என்பது 'இருப்பு', 'இன்மை' இவ்விரண்டையும் கடந்த மெய்ம்மை
யாகும்! இவற்றை சொற்களைக்கொண்டு விளக்குவது கடினம், விளக்கிச்
சொல்ல முடிந்தாலும் அதனால் யாதொரு பயனும் விளையாது! ஏனெனில்,
இவை உணர்வுப்பூர்வமாக நேரடியாக ஒவ்வொருவராலும் உணர்ந்தறியப்பட
வேண்டிய மெய்ம்மை நிலைகளாகும்! இந்நிலைகள் உணர்வு நிலைகளுடன்
சம்பந்தப்பட்டவை என்பதால், 'இன்மை' என்பது முற்றான உணர்வின்மை
யையும், 'இருப்பு' என்பது அரைகுறை உணர்வையும், 'பேரிருப்பு' என்பது
முழுமையான உணர்வு நிலையையும் குறிக்கும் அம்சங்களே எனலாம்!

உணர்வின் சொற்களில் சொன்னால்,முற்றிலும் உணர்வற்ற இன்மை நிலை
யிலிருந்து அரைகுறையாக உணர்வு பெற்ற இருப்பு நிலைக்குள் பிரவேசித்
துள்ள நாம் ஒவ்வொருவரும் உணர்வில் பெருகி உயர்ந்து முழு-உணர்வு
எனும் பேரிருப்பை அடைந்திடும் உணர்வுப்பயணமே "வாழ்க்கை" என்ப
தாகும்!

*காண்க:  "கடைசியாக நீங்கள் எப்போது இறந்தீர்கள்?" முழுதொகுப்பு
  வலைத்தளம் vicharamarg.blogspot.in

மா.கணேசன்/ நெய்வேலி/ 14.02.2017
----------------------------------------------------------------------------

Tuesday, 14 February 2017

உங்கள் உரைகல்லைத் தூக்கி எறியுங்கள்!
















(விசார மார்க்கப் பங்கேற்பாளர்களுக்காக
விசேடமாகச்சொல்லப்பட்டது.)
                                   •••

தங்கத்தின் தரம் அறிய அதை எவரும்
செங்கல் மீது உரசிப்பார்ப்பதுண்டா?
அதற்கென உள்ள உரைகல்லில் தான்
உரசிப்பார்ப்பர் அல்லவா!
ஒவ்வொன்றின் தரம் அறிவதற்கும்
ஒரு உரைகல் உள்ளது!
உங்களது 'விருப்பம்' எனும் உரைகல்
உங்களை உத்தமன் என்றும்
உத்தமனை பொல்லாதவன் என்றும்
மாற்றிச் சொல்லக்கூடும்!
ஆகவே தான் சொல்லுகிறேன்:
உங்கள் உரைகல்லைத் தூக்கி எறியுங்கள்!
இவ்வளவு காலம் நீங்கள் வளராததற்கும்,
முழுமையடையாதிருப்பதற்கும்
காரணம் உங்களது உரைகல் தானாகும்!
                                      •••
அட, உங்களுக்கு இணக்கமாக இருக்கும் வகையிலான தோழமையை,
நட்பை, உங்கள் ஆசிரியரிடமிருந்து நீங்கள் எதிர்பார்ப்பதன் நோக்கம்
என்ன?

உங்களுடைய வீட்டுப்பாடங்களை நீங்கள் முறையாகச்செய்வதை விடுத்து
அதை இங்கே என் முன்னிலையில் செய்து காட்ட விரும்புவது என்ன?

அட, நீங்கள் நிகழ்த்தும்   எந்த சாதனை, சாகசம், செயற்பாட்டிற்கு என்னை
சாட்சியாக நிற்கவேண்டும் என விரும்புகிறீர்கள், சொல்லுங்கள்?

ஆம், உங்களுடைய பரீட்சார்த்தமான விசாரப்பயிற்சிகளை,சார்புத்தன்மை
கொண்ட உங்களது கருத்துகளை, அபிப்பிராயங்களை, முடிவான உண்மை
களைப்போல நீங்கள் முன் வைப்பதை வரவேற்கவும், பாராட்டவும், ஊக்கு
விக்கவும்  நான் செய்யவேண்டும் என விரும்புவதன் அர்த்தம் என்ன?

அர்ச்சுனன் கிருஷ்ணனின் பிரியமான நண்பனாக இருந்தவரை அவன்
தெளிவடைந்தானில்லை, பக்குவமடைந்தானில்லை! அதாவது, சமமாகப்
பழகினால் ஆலோசனை கிடைக்கலாம்; உபதேசம் கிடைக்காது. தூண்டுதல்
பெறலாம்; "இப்படிச் செய்" என்ற கட்டளை  கிடைக்காது. "எனக்கு அறிவுரை
யோ, தூண்டுதலோ போதாது. எனக்கு ஒரு குரு வேண்டும். அவர் உபதேசம்
எனக்கு வேண்டும். அவர் "இப்படிச் செய்" என்று கட்டளையிட வேண்டும்.
"இதுதான் உனக்கு சிரேயஸ் (நன்மை)" என்று வழிகாட்டுபவர் வேண்டும்
என்றுணர்ந்து தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி கிருஷ்ணனிடம்,
"நான் உங்கள் சீடன். சரணமடைந்த எனக்குப் புத்திமதி கூறுங்கள்" என்று
கூறி அர்ச்சுனன் சரணடைந்தான். அதாவது, அர்ச்சுனன் "நான் உங்கள்
சீடன்." எனக் கூறியதுடன் நிறுத்திக்கொள்ளவில்லை. "வேறு புகல் எனக்குக்
கிடையாது" என்று மனத்திடத்துடன் கூறினான் என ஸ்ரீமத் பகவத்கீதை -
தத்துவ விவேசனீ எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்து, சீடர்களாக தானே தேர்ந்தெடுத்த பன்னிருவரிடமும், இனி நீங்கள்
என் ஊழியக்காரர்கள் அல்ல; நீங்கள் என் சிநேகிதர்கள் என்று இயேசுவை
சொல்லவைத்த அந்த அம்சம் எது என்று நினைக்கிறீர்கள், சொல்லுங்கள்?

நட்பையும், தோழமையையும், இணக்கத்தையும்  என்னிடமிருந்து வலிந்து
பெற விரும்பும் நீங்கள் எத்தனை பேருடன் உண்மையில் நட்பில், தோழமை
யில், இணக்கத்தில் இருக்கிறீர்கள்; குறைந்தபட்சம் ஒரே ஒருவருடனாவது
ஆழ்ந்த நட்பில் இருக்கிறீர்களா, சொல்லுங்கள்? நட்பின் இலக்கணம்,
தர்க்கம், விஞ்ஞானம் யாவும் அறிந்தது போல நீங்கள் பேசுவதென்ன?

உங்களுக்குச் சமமானவர்களிடமிருந்து, சகாக்களிடமிருந்து நீங்கள் எதை
யும் கற்றுக்கொள்ளமுடியாது! அவ்வளவு ஏன், உங்களுக்கு இணக்கமாக,
உங்களைவிட வேறு எவர் இருக்கமுடியும்? அத்தகைய உங்களிடமிருந்தே
நீங்கள் கற்றுக்கொண்ட பேருண்மைதான் என்ன, சொல்லுங்கள்? நீங்கள்
ஏன் இவ்வளவு மந்தமாக, உணர்வற்றவர்களாக உள்ளீர்?

ஆகவே, நீங்கள் உண்மையிலேயே சிந்திக்கிறீர்  என்றால், உங்களுடைய
ஆய்வில் குறுக்கிட்ட  உண்மையான சந்தேகங்களைத்  தீர்த்துக்கொள்வதற்
காக இங்கே வாருங்கள்!

இங்கே விசார மையத்தில், என்னிடம் கொண்டுவரப்படும் கருத்துக்களை
யும், கொள்கை கோட்பாடுகளையும் இறுதியானதும், பூரணமானதுமான
ஒரு உரைகல்லில் உரசிப்பார்த்து அவை தவறானவை, அல்லது மட்டுப்பாடா
னவை என ஒதுக்கித்தள்ளிவிடுவதாக நீங்கள் சொல்வதில் என்ன நியாயம்
உள்ளது என நினைக்கிறீர்கள்? ஒரு நியாயமும் இல்லை! தங்கத்தின் தரம்
அறிய அதை உரசிப்பார்க்க ஏதாவது ஒரு கல்லைப் பயன்படுத்துவது முறை
யாகாது; அதற்கென உள்ள உரைகல்லை மட்டுமே பயன் படுத்த வேண்டும்!

ஆம், எவ்வொரு கருத்து, கொள்கை, கோட்பாடு ஆயினும் அவை மிகச்
சரியாக, துல்லியமாக, தெளிவாக, அசலாக, உண்மையாக, மாசில்லாத
பொன் போலவே தான் இருக்கவேண்டும்!

உண்மையில், சராசரி உண்மை, ஏறத்தாழ உண்மை, ஓரளவிற்கு உண்மை
என்றெல்லாம் இருக்கமுடியாது! உண்மை உண்மையாக மட்டுமே இருக்க
வேண்டும்! உண்மை உண்மையாக இருக்கும் பட்சத்தில், அது எவருக்கும்
இணக்கமாகவோ, நெருக்கமாகவோ; எவரையும் திருப்திப்படுத்தும் வகை
யிலோ,மகிழ்ச்சியூட்டும் வகையிலோ இருக்கவேண்டிய அவசியம் உள்ளதா
என்ன? சொல்லுங்கள்!

உங்களுடைய பேச்சுகளில், கோரிக்கைகளில் அர்த்தம் ஏதுமுள்ளதா என்று
பாருங்கள்! விசாரத்தின் இலக்கு உங்களுக்கு முக்கியமானதாய் இருந்திருந்
தால் இத்தகைய கோரிக்கைகளை நீங்கள் வலியுறுத்துவீர்களா?

உண்மையிலேயே உண்மை மீது உங்களுக்கு நாட்டம் இருப்பின் நீங்கள்
இவ்வாறு பொறுப்பில்லாமல் பேசுவீர்களா?

தனது உண்மையைச் சிறிதளவேனும்  உணர்ந்த நதி தேங்கி நிற்பதில்லை;
மாறாக, பாய்ந்தோடிடும் தனது தன்மையைப் பற்றிச் செல்வதாயிருக்கும்!
ஆகவே, தேங்கிக்கிடக்கும் குட்டையும், பாய்ந்தோடிடும் நதியும் நட்பு
கொண்டாட முடியாது!

உண்மையில் நீங்கள் நட்பை, தோழமையை வேண்டவில்லை, மாறாக,
அங்கீகாரத்தையும், சமமான இருக்கையையும்தான் வேண்டுகிறீர்!

ஆசிரியர் எப்போதுமே சிறந்த ஒரு மாணவனாக கற்றுக்கொண்டேயிருக்
கிறார்; அவர் தொடர்ந்து முன்னேறிச்செல்லும் கற்றலின் அனுபவத்தை தன் மையமாகக்கொள்கிறார்! ஆகவே அவர் அறிவிலும்,தெளிவிலும், பக்குவத்
திலும் வளர்ந்து கொண்டே இருக்கிறார்! ஆனால், சிந்தித்தறியாத மாணவர்
களாகிய நீங்களோ உங்களை மையமாகக்கொள்கிறீர்! உயர்-சுயத்தை
வெளிப்படுத்தும் ஒரு கருவியாக அல்லாமல், உங்கள் சுய-புராணத்தை
அரங்கேற்றி மகிழவே விரும்புகிறீர்! அதற்கான களமாக, மேடையாக இந்த
விசார மையம் அமைய வேண்டுமென விரும்புகிறீர், வாதம் செய்கிறீர்!

நீங்கள் எவ்வளவு மொண்ணையாக, உணர்வற்றவராக, நேர்மையற்றவராக,
உண்மையற்றவராக இருந்தாலும் உங்களை நீங்கள் எவ்வாறோ சகித்துக்
கொண்டுவிடுகிறீர், ஏற்றுக்கொண்டுவிடுகிறீர்! ஆனால், அடுத்தவர்கள்
எவ்வளவு சிறந்தவராக இருந்தாலும் உங்களால் அவர்களை ஏற்றுக்கொள்ள
முடிவதில்லை! பிரச்சினையும், மட்டுப்பாடும் அடுத்தவர்களிடம் இல்லை;
உங்களிடம், உங்கள் அறிவின்மீது நீங்கள் கொண்ட அதீத நம்பிக்கையிலும்,
அவ்வறிவை உரசிப்பார்க்கும் உங்களது உரைகல்லிலும்தான் உள்ளது! அந்த
உரைகல் வேறு எதுவும் இல்லை, அது உங்களுடைய பிரமைகளுக்கு ஆட்பட்ட
"உணர்வு" தான்! ஆகவே, முதலில் பிரமைகளிலிருந்து உங்களது உணர்வை
விடுவியுங்கள்! கருத்தூன்றிச் சிந்தியுங்கள்! சிந்தித்தறியாமல், உணராமல்
எதையும் வெளிப்படுத்தாதீர்! உங்களது சொந்த அபிப்பிராயங்களை,
கூற்றுகளை சீரிய வெளிப்பாடுகள், அரிய உட்-பார்வைகள் என்றெண்ணிப்
பேசாதீர்!

உங்களது பேச்சுத்திறமை, மொழிவளம், விவரிப்புத்திறன் ஆகியவை
முக்கியமானவையல்ல! உண்மையை உணர்ந்தறிவது, உணர்ந்தறிந்ததைப்
பகிர்ந்து கொள்வது மட்டுமே முக்கியமானவையாகும்! எதையேனும் பேசுவ
தற்காக, பொழுதைப் போக்குவதற்காக, உங்கள் அறிவுச் சேகரங்களைக்
காட்டுவதற்காகப் பேசாதீர்! இந்த விசாரச் சிந்தனைப் பள்ளியில், பேச்சுக்
கலைப் பயிற்சியோ, போட்டியோ எதையும் நான் அளிக்கவில்லை! நானோ,
அல்லது உங்களது சக-விசாரப் பங்கேற்பாளார் எவருமோ உங்களுக்குப்
போட்டியாளர் அல்ல! உண்மையான போட்டி உங்களுக்கும் உங்களுக்கும்
தான்! என் அளவிற்கு நீங்கள் சமமாக இல்லை என்பது தேவையற்ற ஒப்பீடு!
உங்கள் அசலான அளவிற்கு நீங்கள் சமமாக இல்லை என்பதுதான் உங்க
ளுடைய உண்மையான பிரச்சினை!

நீங்கள் கேட்டறிந்தவைகளையும், படித்தறிந்தவைகளையும் கொண்டு
கதாகாலட்சேபம் செய்யாதீர். எதிரும் புதிருமான கருத்துக்களை, கோட்
பாடுகளைக்கொண்டு கட்டைப் பஞ்சாயத்து பண்ணாதீர். மொத்தத்தில்,
உண்மையை உணர்வதற்காக எஞ்சியிருக்கும் சொற்ப காலத்தையும்
வீணே விரயம் செய்யாதீர்!

நீங்கள் சொல்லவரும் விஷயங்கள், கூற்றுகள் உண்மையானவை, சரியான
வை, முக்கியமானவை என்பதாக எவ்வாறு, எதைக்கொண்டு முடிவுசெய்
கிறீர்கள்! உங்கள் கூற்றுகளை முன்வைப்பதற்கு முன் அவற்றின் துல்லியம்,
தெளிவு, உண்மைத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்!
உங்கள் விருப்பு-வெறுப்பு எனும் உரைகல்லைக்கொண்டு எதையும் முடிவு
செய்யாதீர்கள்! உங்களைப் போன்றவர்களுக்கு வேண்டுமானால் அவை
உவப்பாக இருக்கக்கூடும்!

ஆகவே, உண்மையை உரைகல்லாகக் கொள்ளுங்கள்; உண்மைக்குக் குறை
வான எதுவும் குறைபாடுடையதே! உண்மை என்பது உங்களது உணர்வைக்
கடந்த உயர்-உணர்வு, அல்லது முழு-உணர்வே ஆகும்!

உங்களை விமர்சிப்பதோ, குறை கூறுவதோ, குறைத்து மதிப்பிடுவதோ என்
தொழில் அல்ல! மாறாக, உங்களுடைய நெடிய உரைவீச்சும், இழுவையான
சொற்பொழிவும் சாரமான மற்றும் மையமான அம்சம் பற்றியதாக அல்லா
மல் போகும் பட்சத்தில், உங்களது சொல்லாடலில் கவனச்சிதறல் மற்றும்
ஆர்வக்கோளாறின் கூறுகள் இடம்பெற்றுள்ளதை இனம்கண்டு, உங்களது
சிந்தனைப்போக்கை சரியான தடத்தில் திருப்பி விடும் பணியை மட்டுமே
நான் செய்து வருகிறேன்!

ஆகவே,  "விசார மார்க்கம்" எனும்  இந்த "வாழ்க்கைப் பள்ளி" யின் அசலான
நோக்கத்தைப் புரிந்து கொண்டு, விசார-அமர்வுகளில், விசார-பங்கேற்
பாளர்களின் பங்கு, பணி என்ன என்பதை உணர்ந்து செயல்படுவீராக!

மா.கணேசன்/ நெய்வேலி/13.02.2017
----------------------------------------------------------------------------

Sunday, 12 February 2017

ஒவ்வொரு கணமும். . . . .





கடந்து  போகும்  ஒவ்வொரு  கணமும்  வாழ்வதற்கான  கணமே!
தவற விடப்படும் ஒவ்வொரு கணமும், விழிப்பதற்கான கணமே!
புரிந்து கொள்வதற்கு  பிரபஞ்சம் நிறைய விஷயங்கள் உள்ளன!
ஆனால், அனைத்தையும் புரிந்து கொள்ளும் அம்சம் ஒன்று தான்!
ஆகவே நீ உடனே உன்னை ஒன்றுதிரட்டி உன் ஒருமையை எட்டிடு!
ஆரம்பமாய், பிரபஞ்ச-விபத்தின் தொடர்ச்சியாய், நீளும்பயணமாய்,
கல்லாய், புல்லாய், புழுவாய், மனிதப் பிராணியாய் இருப்பதைவிட
முதலும் முடிவுமான நிகழ்வாய் முழு-விழிப்பாய் மலர்வது மேன்மை!

விழிப்பைத் தவிர பிறவனைத்தும் விபத்து போன்றவையே!
தூண்டுதலுக்குப் பதிலளிக்கும் உணர்வற்ற பிராணியா, மனிதா நீ?
தேவைகளைக் கடந்து பார், வாழ்வின் முழுமை தெரியும்!
எந்தத் தேவை வாழ்வின் அர்த்தத்தை வெளிப்படுத்தும்?
வாழ்வின் அர்த்தத்தை வெளிப்படுத்தும் தேவை எதுவுமில்லை!
ருசிமிகு உணவு  பசியைப் போக்கி உயிர்-பிழைத்திட உதவும்!
உடை உன் அம்மணத்தையும் அறியாமையையும் மட்டுமே மறைக்கும்!
வசதியாக நீ வசித்த வீடு நீ செத்ததும் உனை வாசலில் கிடத்திடும்!

மனிதா! உயிர்-பிழைத்தல் என்பது உண்மையான வாழ்தலாகுமா?
உயிர்-பிழைக்கக் காரணமோ, நோக்கமோ தேவையா, என்ன?
ஆனால், உண்மையில் வாழ காரணம், குறிக்கோள், இலக்கு அவசியம்!
வாழ்க்கை என்ன,  நீ நினைப்பதுபோல் உன் சொந்த விவகாரமா?
அது ஒட்டு மொத்தப் பிரபஞ்சத்தையும் உள்ளடக்கியதோர் முழுமை!
நீ அதன் ஒரு பகுதியாக தோன்றியிருக்கிறாய் என்பது ஒரு ஆரம்பமே!
ஒரு பகுதியாகவே இருந்து உதிர்வதும், கனிந்து முழுமையாவதும்
வாழ்க்கை பற்றிய உனது புரிதலின் முழுமையைப் பொறுத்ததாகும்!

உனது ஆர்வம் சிறிதாயிருந்தால் சிறிதளவே நீ புரிந்து கொள்வாய்!
உனது ஆர்வம் பெரிதாயிருந்தால் முழுவதுமாகப் புரிந்து கொள்வாய்!
ஆர்வத்திற்கேற்ப உணர்வும், உணர்வுக்கேற்ப புரிதலும், புரிதலுக்கேற்ப
வாழ்க்கையின் தன்மையும், உயர்வும், முழுமையும், உய்வும் வாய்க்கும்!
வாழ்க்கை ஒரு பயணமெனில், பயணத்தின் அர்த்தமும், முழுமையும்
அடையப்படும் உரிய இலக்கு நிலையில் மட்டுமே அடங்கியுள்ளது!
இலக்கறியாத பயணமும், இயக்கமும், வாழ்க்கையும் அர்த்தமற்றவையே!
ஆகவே, மனிதா! உன் பயணத்தைத் தொடரும் முன் இலக்கறிந்திடு!

மனிதா, இடைவழிப்பயன்கள் கருதி  இறுதிப்பயனைத்  தவறவிடாதே!
பிழைப்புக்கான பயன்களைத்தேடி பிறவிப்பயனை இழந்திடாதே!
மனிதா, முதல் காரணமல்ல, முடிவான விளைவாக மலர்வதே முக்கியம்!
இறுதியானது கடைசியில் வருவதல்ல, இக்கணமே அது சாத்தியம்!
மனிதா, மெய்ம்மை இல்லாமல் உலகமும் இல்லை, நீயுமில்லை!
நீயில்லாமல், உன் வழியாகவல்லாமல், உண்மை உய்வதெங்ஙனம்!
மனிதா, செருக்கு கொள்ளாதே! சிறிது, பெரிது, அற்பம், அற்புதம்
புழு, பூச்சி, நீ, நான் என யாவும், யாவற்றையும் கடந்ததும் அப் பிரம்மமே!

மனிதா, இடையிலுள்ள  எதையும், உன்னையும், நீ கொண்டாடாதே!
உனதுண்மை யாதென அறியாமல் உன்னில் எதை நீ கொண்டாடுவாய்?
உன்னைக்கொண்டாடு! அதற்குமுன் இறுதியானதைக் கண்டுபிடித்திடு!
கணந்தோறும் உன்னை மறு-கண்டுபிடிப்பு செய்வதே கொண்டாட்டம்!
இரு! இருப்பதைவிட இருப்பை உணர்வது மேல்! அதைவிட உணர்வாயிரு!
இரு! அதில் தற்பெருமை எதற்கு? உனது இருப்பிற்கு நீ என்ன செய்தாய்?
சுயத்தின் புதிரை விடுவித்தாயா, சுய-முக்கியத்துவம் பாராட்டுகிறாய்?
உன் சிறு சுயம் கடந்து உயர்-சுயம் அடைவதே உண்மை முக்கியத்துவம்!

உன் தற்பெருமை, சுய-முக்கியத்துவம், செருக்கு யாவும் தவறானவையா?
ஆம்! அவை முதிராத மலராத ஒரு நபர் மீது  முதலீடு செய்யப்படுவதால்!
உண்மையைக் கண்டுபிடிக்கும்வரை உன்னை மையமாகக்கொள்ளாதே!
உன் மையம் உன்னிடமில்லை; உண்மை தான் அனைத்தின் மையம்!
நீ மெய்ம்மையின் சாயலில் இருக்கிறாய்! மெய்ம்மையில் உன் சாயல் ஏது!
நீ இருக்கும்வரை முழுமை தோன்றாது; உன் பங்களிப்பின்றி முழுமை ஏது?
முழுவதுமாக மெய்ம்மைக்கு உன்னைத் தருவதே உண்மைப் பங்களிப்பு!
உன்னைக்கொடுத்து உண்மையைப் பெறும் இறுதிப் பண்டமாற்று!

தள்ளிப்போடப்படும் ஒவ்வொரு  கணமும்  வாழ்வதற்கான  கணமே!
தவற விடப்படும் ஒவ்வொரு கணமும், விழிப்பதற்கான கணமே!
தள்ளிப்போடப்படும் ஒவ்வொரு கணமும் தற்கொலைக்கான ஆயத்தமே!
தவற விடப்படும் ஒவ்வொரு கணமும், மரணத்தை நோக்கிய ஓரடியே!
கடந்து போகும் ஒவ்வொரு கணமும் பொன்னான வாய்ப்பின் கணமே!
மனிதா, இன்னும் எதை, யாரை, எதிர்பார்த்து வாளாவிருக்கிறாய்?
உன்னை எதிர்பார்த்து  இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சமும் காத்திருக்கிறது!
உனது முழுமையடைதலில் தனது முழுமையை மீட்சியை எதிர்பார்த்து!


மா.கணேசன்/ நெய்வேலி/ 07.02.2017
----------------------------------------------------------------------------

Thursday, 9 February 2017

தீர்வின் திறவுகோல் யாரிடமுள்ளது?





வாழ்க்கையில்,  எவ்வாறு  சௌகரியங்களைப்  பெருக்கிக்கொள்வது, அதற்
காக அதிகப் பணம் சம்பாதிப்பது எவ்வாறு, எவ்வாறு உறவுகளைச் சமாளிப்
பது, எவ்வாறு உடல் ஆரோக்கியத்தைப் பேணுவது,  நம்மைப்போலவே நமது
குழந்தைகளை    எவ்வாறு   முன்னேற்றுவது,   போன்ற  பல   விஷயங்களில்
ஆழ்ந்திருக்கும்  நாம்  வாழ்க்கை  பற்றிச்  சிந்திப்பதில்லை!  வாழ்க்கையின்
அசலான  குறிக்கோள்  பற்றியும்,  அர்த்தம்,  மற்றும்,  இலக்கு  பற்றியும் நாம்
அக்கறை கொள்வதில்லை! வாழ்க்கைபற்றி பிரத்யேகமாகச் சிந்திப்பதற்கு
நமக்கு நேரமும் இருப்பதில்லை, அதற்குரிய சக்தியும் இருப்பதில்லை!

நம்மில் பலருக்கு,   வாழ்க்கை பற்றி  பிரத்யேகமாகச்  சிந்திப்பதற்கு  என்ன
இருக்கிறது  என்பதாகத் தோன்றலாம்! நாம் நன்றாகவே வாழ்ந்து கொண்டு
இருப்பதாகவும் நாம் நம்புகிறோம்;  என்ன,  இன்னும் கொஞ்சம் அதிக வசதி
வாய்ப்புகளைப்   பெற்றால்,   இன்னும்  சிறப்பாக,   இன்னும்   மகிழ்ச்சியாக,
நிறைவாக,  வாழ இயலும்  எனவும் கருதுகிறோம்!  நாம் ஒரு நெடிய பயணத்
துக்கான  ஆயத்தங்களைச் செய்துகொண்டிருப்பதிலேயே  நம் வாழ்-காலத்
தைக்   கழித்துத்  தீர்க்கிறோமே தவிர,  பயணம்  புறப்படுவதேயில்லை  என்
பதுபோலவே, வாழ்க்கைக்கான முன்னேற்பாடுகளிலேயே நம் வாழ்-காலத்
தின்  பெரும் பகுதியைச்  செலவிட்டு  விடுகிறோம்! ஆனால்,  எப்போது நாம்
உண்மையில் வாழத் தொடங்குவது?

வினாடிகள்   நிமிடங்களாகி,  நிமிடங்கள்  ஒவ்வொரு  மணியாகி,  இருபத்தி
நான்கு மணி நேரம் ஒரு நாள் என்றாகி,  நாட்கள் வாரங்களாகி,    வாரங்கள்
மாதங்களாகி,  மாதங்கள் பன்னிரண்டு சேர்ந்து ஒரு வருடமாகி,  ஒவ்வொரு
வருடமும் ஒரு வயது எனக்குறிக்கப்பட்டு,  ஐம்பது  வயதிலோ,  அறுபது,  அல்
லது   எழுபது  வயதிலோ,  மரணம்  எனும்   மிகத் துல்லியமான  அந்த  முடிவு
உடலுக்கு நேர்வது தவிர்க்கவியலாமல் நிகழ்ந்துவிடுகிறது!அதாவது, "உயிர்
-இருப்பு"   எனும்   சுற்றுப் பாதையில்  தன்னை  நிலை நிறுத்திக் கொள்ளும்
"உடல் " எனும் விசேடப்பொறியமைப்பின் திறன் வயது ஆக ஆக படிப்படியா
கக்  குறைந்து  முடிவில் முற்றிலுமாக முடிந்து விடுகிறது!  "மரணம்"  என்பது
மிகத்துல்லியமாக  உடலின் இறப்பையே குறிக்கிறது!   உடல், அல்லது உடல்-
ஜீவியின்   "பிறப்பு"  என்பது  எவ்வளவு  தவிர்க்கவியலாததோ,  புதிரானதோ,
அவ்வாறே அதன் "இறப்பு" என்பதும் தவிர்க்கவியலாதது, புதிரானது!

ஆக, பிறப்பு குறித்து மகிழ்வதும், இறப்பு குறித்து துக்கப்படுவதும் பொருத்த
மற்றதாகும்! பிறப்பின் முக்கியத்துவத்தையும், நோக்கத்தையும் முறையாக
நாம் புரிந்துகொள்வோமெனில், இறப்பின் தவிர்க்கவியலா தன்மையையும்
நாம் புரிந்து கொள்ளாமல் போகமுடியாது! ஒருவரின் இறப்பு குறித்து துக்கப்
படுவதென்பது  வாழ்க்கையை  நாம் சிறிதும் புரிந்துகொள்ளவில்லை  என்ப
தின் வெளிப்பாடே தவிர வேறில்லை! உண்மையில் நாம் துக்கப்படவேண்டு
மானால்,  அது ஒருவரின் இறப்பு குறித்ததாக இருக்கலாகாது;  மாறாக, பிறப்
புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் சாதித்திருக்க  வேண்டிய
நிலையைச்  சாதிக்கவில்லையே  என்பதைப்  பற்றியதாக வேண்டுமானால்
இருக்கலாம்!   ஏனெனில்,  இது  மட்டுமே  ஓரளவிற்கேனும்   வாழ்க்கையைப்
புரிந்து கொண்டதற்கான ஒரு சிறு அடையாளமாக அமையும்!

ஒரு  உடல்-ஜீவியின்  "பிறப்பு"  என்பது முக்கியமான ஏதோவொன்றை எட்டு
வதற்கான  அடிப்படையே தவிர வேறல்ல!  மனிதன் முதலில் ஒரு உடல்-ஜீவி
யாகத்தான் பிறக்கிறான்;  அசலான மனிதன்,  அதாவது, உணர்வு-ஜீவியான
உண்மையான மனிதன், பிறகே பிறக்கிறான்!பெரும்பாலானோரது விஷயத்
தில்,  அசலான  மனிதன் கடைசிவரை பிறப்பதேயில்லை!  ஆனால்,  மனிதர்
கள் தமது ஒரு பகுதியான உடல்ஜீவியின் பிறப்பையே ஒவ்வொரு வருடமும்
கொண்டாடிச் செல்கிறார்கள்,முடிவில், உடல் மரணித்ததும், ஒவ்வொரு வரு
டமும் இறந்த நாளைக் கொண்டாடத் தொடங்கிவிடுகிறார்கள்!

மனிதனுக்கு தன்னில் எதைக்கொண்டாடுவது என்பது பற்றிய தெளிவு  இன்
னமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை! நிச்சயம் மனிதன் என்பவன் அவனது
உடலல்ல  என்பதை  அவன்  தன்னைக் கண்டடையும்  வரை அறிய வாய்ப்பு
இல்லை!   உடலுடன்  தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளுதல்,  பிணைத்
துக்கொள்ளுதல்,    உடலின்    நச்சரிப்பான   தேவைகளை  நிறைவேற்றுதல்,
அதாவது,  உடல்  எனும்  ஊர்தியைப்  பராமரித்துப்  பேணிக்காத்தல்,  வேளா
வேளைக்கு  அதற்கு  எரிபொருள் (உணவு) இடுதல்;  மாறுகின்ற  தட்பவெப்ப
நிலைக்கேற்ப  அதைக் காத்தல் (உடை);  மற்றும்,  அதன்  அனைத்து இச்சை
களையும்,   துய்ப்புகளையும்,  ஒருங்கே  ஓரிடத்தில்  (உறைவிடம்)  வைத்துப்
பூர்த்திசெய்தல் யாவும் எவ்வளவு அத்தியாவசியமாயிருந்தாலும் அவை ஒரு
போதும் மனிதத்தரத்துக்குரிய வாழ்க்கையைச்சிறிதும் நெருங்குவதில்லை!

தன்னை யறிதல், தன்னைக் கண்டடைதல், உணர்வுக்கு வருதல், மெய்ம்மை
யுணர்தல்,  வாழ்வின் அர்த்தமறிதல், இலக்கையடைதல், முழுமையடைதல்,
முக்தி, அல்லது வீடுபேறு அடைதல் என அதை எப்படி அழைத்தாலும்,  அதற்
கென நல்ல நேரம், காலம்;  அதிர்ஷ்டம்,  நட்சத்திரங்கள் அல்லது  கிரகங்கள்
விசேடமாக ஒரு நேர்கோட்டில் அமைவது,ஆன்மீகப்பயிற்சிகள், முயற்சிகள்
போன்ற  எதையுமே  அது  சார்ந்திருப்பதில்லை!  நாளை  அதை நான் எட்டிப்
பிடிப்பேன்,சாதிப்பேன்,என ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும் தள்ளிப்
போடப்பட்டு கடந்துபோய்க் கொண்டிருப்பது தான் மிச்சம்!

வெறுமனே   காலத்தைக்  கழிப்பது,  வீணான  ஈடுபாடுகளில்   பங்கேற்பது,
ஆன்மீகம்  எனும் பெயரில் அடுத்தவருக்குப் போதிப்பது,  சத்-சங்கம்  எனும்
பெயரில்  தான் படித்தறிந்தவைகளை  வைத்து  வாதம்  புரிவது,  அன்றாடக்
கடமைகளின் மீது பழி கூறுவது,  குடும்பத்தை, உறவுகளைக் காரணம் காட்
டுவது . . . . . போன்ற  யாவும் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும் வழிகள்
ஆகும்! காரணம் காட்ட, பழி கூற எல்லாம் இருந்தாலும், அவற்றைச் சொல்வ
தன்  மூலம்  தனது ஈடுபாடுகள் வெளியே தெரிந்துவிடும் என்பதற்காக, பழி
கூறவும்,  காரணம்  காட்டவும் எதுவும்  இல்லாதது  போலவும், ஆனால், தனது
இயலாமைக்குப்பின்னே, ஏதோ பெரிய மர்மம் உள்ளதாக நடிப்பது; அல்லது,
தனது   இயலாமையை  வெளிப்படையாக,  "ஆம்,  அது தான்  எனக்குப்  புரிய
வில்லை,  என்னால் முடியவில்லை!" என்று சொல்வது தன் நோயின் தன்மை
புரியாமல் அதைக்கொண்டாடுவதற்கு ஒப்பான பெரும் புரட்டு ஆகும்!

சிலர், தமது பிரச்சினைக்கான தீர்வு ஆன்மீக குருவிடம் இருப்பது போலவும்,
அவர் அத்தீர்வுக்கான வழிமுறையைச் சொல்லாதிருப்பதாகவும், குருவைக்
குறை சொல்வதன் மூலம்  தங்களது நிலையை நியாயப்படுத்திக் கொண்டு
தங்களையே ஏமாற்றிக்கொள்கின்றனர்!

உண்மையில், ஒருவன் தான் எதை 'வாழ்க்கை' யென வாழ்ந்து கொண்டிருக்
கிறோம் என்பதே தெரியாமல் வாழும் வாழ்க்கைதான் அவனது நோயாகும்!
அதற்கு  அவனே  மருந்தும் ஆவான்!  அவனது  நோய் தீர,  அவன்   தன்னைத்
தான்  எதிர் கொண்டாக வேண்டும்! அவனுக்கு அவனேதான் பதில் சொல்லி
யாகவேண்டும்!

வெறும்  'உயிர்'- வாழ்தல்  என்பதிலிருந்து 'உயர்'-வாழ்தலுக்குச் செல்வதெப்
படி,   அதற்கான  வழிமுறை  என்ன  என்று  கேட்பவன்  தன்  வாழ்க்கையின்
நோக்கத்தைத் தொலைத்து விட்டவனாகிறான்!  தான்  தொலைத்தது என்ன
வென்று தானேயறியாத நிலையில், " தொலைத்தது வாழ்க்கையைத்தான்!"
என்று எவர் எடுத்துச்சொன்னாலும் அது எவ்வகையிலும் அவனுக்குப்புரியப்
போவதில்லை, உதவப்போவதுமில்லை!

ஒருவன்  தீர்வின் திறவுகோலைத்  தன்னிடமே  வைத்துக்கொண்டு,  தனக்கு
வெளியே எவ்வளவு காலம் தேடிக்கொண்டிருப்பான் என்பதற்கு காலக்கெடு
என்பதே இல்லை,  சொல்லவும் முடியாது!

ஆனால்,  கடந்து  போகும்  ஒவ்வொரு  கணமும்  வாழ்வதற்கான  கணமே!
தவற விடப்படும் ஒவ்வொரு கணமும், விழிப்பதற்கான கணமே என்பது
மட்டும்  நிச்சயம்!

மா.கணேசன்/ நெய்வேலி/ 07.02.2017
----------------------------------------------------------------------------

Sunday, 5 February 2017

மனிதனின் சித்தமா? உலகின் சித்தமா?






   கட்டற்ற சுதந்திரம் என்பது ஒரு மாயை
   மேலும் அது அர்த்தமற்றது!
   அப்படியொரு சுதந்திரம் இருந்தாலும்
   அது விரும்பத்தக்கதுமல்ல!
   தெரிவுகள் ( நன்)மதிப்புகளை பிரதிபலிக்காவிடில்
   அவை அர்த்தமற்றவை!
   உன்னிடம் ஏற்கனவே  (நன்)மதிப்புகள் இல்லாமல்
   அர்த்தமுள்ளவகையில் அவைகளைத்
   தெரிவு செய்யமுடியாது!

        <•>

உண்மை, பொய்மை இரண்டில் ஒன்றை நீ தேர்வு செய்திடலாம்!
உண்மையை நீ தேர்வு செய்யும் பட்சத்தில் சில கட்டுப்பாடுகளுக்குள் நீ
வாழவேண்டியிருக்கும் - மனம் போனபடி நீ வாழ முடியாது!
ஆனால், முடிவில் நீ விடுதலை அடைவாய்!
பொய்மையை நீ தேர்ந்துகொள்ளும் பட்சத்தில் நீ உன் விருப்பம் போல
வாழலாம்! ஆனால், விடுதலை உன்னை விலக்கிவிடும்!
       
        <•>

மனிதனுக்கு சுதந்திர சித்தம்  (Free will)உள்ளதா?  அல்லது யாவும்   ஏற்
கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டனவா?  சிலர், மனிதனுக்கு சுதந்திர சித்தம்
"உள்ளது"   என்கின்றனர்.   சிலர்,  " இல்லை"  என்கின்றனர்!     இரண்டில்   எது
உண்மை?    பல  விஞ்ஞானிகள்  பௌதீகஉலகையும்,  அதன்  விதிகளையும்
ஆராய்ந்து கண்டு,   எல்லாம்    ஏற்கனவே   தீர்மானிக்கப்பட்டு    விட்டதாகச்
சொல்லுகிறார்கள்;  மனிதனுக்கு   சுதந்திர சித்தம் கிடையாது   என்று  திட்ட
வட்டமாகச் சொல்லுகிறார்கள்.   ஆனால்,  எல்லோரும்  மனிதனின்  சுதந்திர
சித்தம் பற்றியும்,  உலகின் சித்தம் பற்றியும் மட்டுமே பேசுகிறார்களே தவிர
இவ்விரண்டையும்  கடந்து மூன்றாவதாக வேறு எவ்வொரு சித்தம் பற்றியும்
குறிப்பிடுவது இல்லை!  சமயவாதிகள் மட்டுமே "கடவுளின் சித்தம்"  பற்றிப்
பேசுகிறார்கள்!     ஆனால்,    நான்    மூன்றாவது  விதியாக   மெய்ம்மையின்
அல்லது முழுமையின் சித்தம் அல்லது விதியை முன்வைக்கிறேன்!

சித்தம்,   மனம்,   விருப்பம்,   முனைப்பு,  தெரிவு,  சுதந்திரம்  இவை   ஒன்றுக்
கொன்று தொடர்புடையவை;    அதே வேளையில்,       இவையனைத்துக்கும்
அடிப்படையாக  அமைவது "உணர்வு" (Consciousness) ஆகும்!  உணர்வு
இல்லாமல், மனிதனுக்குச் சித்தமும் இல்லை, சுதந்திரமும் இல்லை!

மனிதனுக்கு  சுதந்திர சித்தம்  (Free will)உள்ளதா? இல்லையா? என்பது
குறித்து  ஒரு முடிவிற்கு வருவதற்கு முன்னர்,  சுதந்திரம் என்றால் என்ன என்
றும், சித்தம் என்றால் என்ன என்றும் அறிவது அவசியமாகும். இந்த மாலைப்
பொழுதில்,  ஒரு   நல்ல  உணவகத்திற்குச்  சென்று  நான்  மிகவும்  விரும்பும்
அந்தச் சிற்றுண்டியைச் சாப்பிட விரும்புகிறேன்; அது போலவே சாப்பிடவும்
செய்கிறேன்  என்றே  வைத்துக்கொண்டாலும்,  எனக்குப்பிடித்த உணவு என்
பது பல காரணிகளால் - நான்  பிறந்த குடும்பத்தின் உணவுப்பழக்கம், இந்த
உணவு ஆரோக்கியத்துக்கு உகந்தது என்று அறிவுறுத்தப்பட்டது, பலவகைப்
பட்ட   உணவுகளில்  சிலவற்றை   எனது  நாக்கின்  சுவையரும்புகள்   இவை
சுவையானவை என்று தெரிவு செய்தது என்பதுபோன்ற காரணிகளால் -தீர்
மானிக்கப் பட்டதாக இருக்கலாம்! பணி நிமித்தம், நான் ஒரு வெளி நாட்டிற்
குச்செல்லுகிறேன்,  அங்கு  எனக்குப் பிடித்த  வழக்கமான  உணவு கிடைக்க
வில்லை  என்பதால்,  நான்  பட்டினியாக இருக்கப்போவதில்லை!  ருசிக்காக
இல்லாவிட்டாலும்,     எனது   பசியைப்   போக்கிக்  கொள்வதற்காக   அங்கே
கிடைக்கின்ற  உணவு வகைகளில் எவை எனக்குப் பிடிக்கிறதோ அவற்றை
உண்டு, எனது பணி முடிந்ததும் சொந்த நாடு திரும்புவேன். எனது வீட்டிற்கு
வந்ததும்  எனக்குப் பிடித்த   உணவுவகைகளைச் செய்யச் சொல்லி  உண்டு
மகிழ்வேன்!

உண்மையில், எல்லா நேரங்களிலும், சுதந்திரமாக நான் விரும்பியவற்றைச்
செய்யவோ,  அடைந்திடவோ இயலாது.  அதே வேளையில்,  அனைத்திலிருந்
தும்  உளவியல்  ரீதியாக  விடுபட்டு சுதந்திரமாக  இருப்பதென்பது யாவருக்
கும்  சாத்தியமில்லை என்றாலும்,  சிலருக்கு  நிச்சயம்  அது  சாத்தியமாகும்!
ஆனால்,  ஒவ்வொருவரும்  சில  வரையறைகளுக்குள்  சுதந்திரமாக இருக்க
வும், செயல்படவும் செய்கிறார்கள் என்பதென்னவோ உண்மைதான்!

அப்படியானால்,வரையறைக்கு உட்படாத,வரம்பற்ற முற்றும் முழுமையான
சுதந்திரம்  (Absolute Freedom) என்பது  இல்லையா  என்றால்,  இல்லை,
ஆம்,  இரண்டும்தான்!  ஏன்  'இல்லை ' என்றால், மனிதஜீவிகளாகிய நாம் எப்
போதும்   ஒன்றுக்கு   மேற்பட்ட   அமைப்புகளுக்குள்,      அவ்வமைப்புகளின்
பகுதிகளாகத்தான் உள்ளோம் -  குடும்பம்,  சமூகம்,  தேசம், உலகம், பிரபஞ்
சம் ஆகிய அமைப்புகள். இந்த  அமைப்புகளுக்குள், அவற்றின் பகுதிகளாக
உள்ளவரை,  வரம்பற்ற  முற்றும்  முழுமையான சுதந்திரம் என்பது சாத்திய
மில்லை;   மேலும்,   அவற்றின் பகுதிகளாக  இல்லாமலும்  மனிதன்   இருக்க
முடியாது.    ஆகவே,   சார்பு  ரீதியிலான  சுதந்திரம்  (Relative Freedom)
மட்டுமே சாத்தியம்!  வரையறைக்கு உட்படாத, வரம்பற்ற முற்றும் முழுமை
யான சுதந்திரம் என்பது இவ்வமைப்புகளுக்கு வெளியே, கடப்பு  நிலையில்
(Transcendentally) மட்டுமே  சாத்தியம்!   ஏனெனில்,   முழுச்சுதந்திரம்
என்பது இறுதியான,  முடிவான இலக்கு நிலை ஆகும்.  அதாவது, முழுச்சுதந்
திரம் மட்டுமல்லாமல், "அர்த்தம்", "உண்மை" மற்றும்   "முழுமை" ஆகிய
இறுதியான அம்சங்கள் யாவும் மறுகரையைச் சேர்ந்தவையாகும்! இக்கரை
யில் யாவும் சார்பு ரீதியில் மட்டுமே சாத்தியம்! உண்மையில்,  நாம் இக்கரை
யில் தான் தோன்றினோம் என்றாலும்,  மறுகரையை அடைவதே நம் வாழ்
வின் இலக்கு ஆகும்!

மனித ஜீவிகளாகிய நாம் குடும்பம், சமூகம், தேசம், உலகம், பிரபஞ்சம்
ஆகிய அமைப்புகளுக்குள் தான் இருக்கிறோம், வாழ்கிறோம்  எனக் கண்
டோம். இவ்வமைப்புகளில், பிரபஞ்சம் தான் அடிப்படையானதும் பிரதான
மானதும் ஆகும். பிரபஞ்சத்தை பௌதீகவிதிகள் செலுத்துகின்றன, கட்டுப்
படுத்துகின்றன என்பது விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்பும், முடிவுமாகும்!
ஆனால், பௌதீகவிதிகள் என்பவை மூல-விதிகள் அல்ல. மாறாக,அவற்றிற்
கும் மூலமாகத் திகழ்பவை பரிணாம விதிகளே என்பது விஞ்ஞானம் கண்டு
பிடிக்கத் தவறிய உண்மையாகும்! பரிணாம ரீதியாக பௌதீகவிதிகளுக்கு
அடுத்தபடியாக எழுந்தவை உயிரியல் விதிகள், அதற்கடுத்தபடியாக உணர்
வியல் விதிகள் அமுலுக்கு வந்தன. இவ்விதிகள் யாவும் பரிணாமபூர்வமான
வையாகும். ஆனால், குடும்பம், சமூகம், தேசம் ஆகியவற்றின் விதிகள் அவ்
வமைப்புக்களுக்கே  உரிய சொந்த விதிகளாகும்; அவை மானுட வாழ்க்கை
பற்றிய  அரைகுறையான புரிதலைக்கொண்டு,  மானுட அங்கத்தினர்களை
நிர்வகிப்பதற்காக  உருவாக்கப்பட்டவையாகும்!  ஆகவே,   அவை   மானுடர்
களை பலவகைகளிலும் கட்டுப்படுத்துவதாகவும், மட்டுப்படுத்துவதாகவும்
அமைவது அவ்வமைப்புகளுக்கே  உரிய இயல்புகளின் வழிப்பட்டதாகும்.

பௌதீக விதிகள்   பௌதீகப் பிரபஞ்சத்தையும்,   அதன்  பொருட்களையும்
மட்டுமே   கட்டுப்படுத்தக்கூடியவையாகும்.  நமது உடலும் பருப்பொருளால்
ஆனது  என்பதால்,  ஓரளவிற்கு  அவ்விதிகள்  நமது உடலையும்  கட்டுப்படுத்
தக்கூடும்.  உதாரணத்திற்கு,  நமது உடல்,  ஈர்ப்பு விசைக்குக் கட்டுப்பட்டதா
கும்.  நாம் மொட்டை மாடியில் நின்றுகொண்டு வேடிக்கை பார்க்கும் போது
கால்  இடறினால்  கீழே  தரையில் தான் வீழ்வோம்;  ஒரு பறவையைப்போல
அப்படியே விண்ணில் உயர்ந்து பறக்க நம்மால் இயலாது. ஒரு சிறிய சிட்டுக்
குருவியினால் கூட பறக்கமுடியும் என்பது ஒரு பெரிய விஷயம் அல்ல. ஏனெ
னில்,  மனிதனுக்குப்  பறக்க வேண்டிய தேவையும்,  அவசியமும்  இருந்தால்
அவனுக்கும்   சிறகுகள்  முளைத்திருக்கும்!   ஆனால்,    மனிதன்    என்பவன்
வெறும் ஆகாயவெளியில் பறப்பதற்காக அல்லாமல்; மேன்மேலும் உணர்வு
எனும்   ஆன்மீக  வெளியில்  உயர்ந்தெழுவதற்காக  உருவானவன்  ஆவான்!
பௌதீக விதிகள் மனிதனைப்பற்றியும், அவனது வாழ்க்கை மற்றும் அவன்
அடையவேண்டிய விசேடமான பரிணாம இலக்கு பற்றியும் பெரிதாக  எதை
யும் விளக்கிடவில்லை!

இவ்வுலகம்,  அதாவது பிரபஞ்சம் ஏன் எதற்காகத் தோன்றியது, அதில் உயிர்
ஜீவிகளும்,  உணர்வுள்ள  மனித ஜீவிகளாகிய  நாமும்  ஏன்  தோன்றினோம்
என்பதை பௌதீக விதிகளும், பௌதீக விஞ்ஞானிகளும் ஒருபோதும்   (நம்
வாழ்-காலத்திற்குள்)  நமக்கு எடுத்துச் சொல்லப் போவதில்லை! அப்படியே
சொன்னாலும்,  அவை பருப்பொருளின் பண்புகளைப்பற்றி மட்டுமே சொல்
லக்கூடும்! மேலும், பிரபஞ்சத்தையும், அதன் பௌதீகவிதிகளையும் பற்றித் தெரிந்துகொள்வதைவிட,  பிரபஞ்சம்  ஏன்  எதற்காகத்  தோன்றியது,  அதில்
உயிர்ஜீவிகளும்,   உணர்வுள்ள   மனித ஜீவிகளாகிய   நாமும்  ஏன்  தோன்றி
னோம் என்பதையும்,  மற்றும்  பிரபஞ்சத்தின்  அடியோட்டமான பரிணாமத்
திட்டத்தையும்,   அதன் இறுதி இலக்கையும் பற்றிப் புரிந்து கொள்வதே அதி
முக்கியமானதாகும்!

ஏனெனில்,   பிரபஞ்சம் என்கிற அமைப்பின் பகுதியாக நாம் தோன்றியுள்ள
தால்,  குறிப்பாக  நாம்  அவ்வமைப்பின்  எத்தகைய பகுதி என்பதை அறியா
மல்,  நம்முடைய வாழ்வின் இலக்கை அறிய முடியாது;  வாழ்வின்  இலக்கை
அறியாமல், நம் வாழ்க்கையை முறையாகவும், முழுமையாகவும் வாழ  விய
லாது! ஒட்டுமொத்த பிரபஞ்ச அமைப்பில், மனிதனே மிக விசேடமான பகுதி
யாக விளங்குகிறான்;  அதற்குக்காரணம்,  பிரபஞ்சத்தின்  வேறு  எவ்வொரு
பகுதியும்  பெற்றிராத  "உணர்வு"  எனும்  அம்சம்  மனிதனிடம் துளிர்த்துள்ள
தேயாகும்.   ஒட்டு மொத்த  பிரபஞ்சமும்  எத்தகைய  இலக்கை  அடைந்தாக
வேண்டுமெனும்  விழைவைக் கொண்டுள்ளதோ,  அந்த   இலக்கை  அடைவ
தற்கான  வழிமுறையில்  தத்தம் பங்கு பணியை  -  சிறியதோ, பெரியதோ -
ஆற்றுவதே ஒவ்வொரு பகுதியின் வாழ்க்கையும், கடமையுமாகும்!

இவ்விடத்தில், வாழ்க்கையும், கடமையும் என்று இரண்டு விஷயங்கள் குறிப்
பிடப்படுவது சீரிய கவனத்திற்குரியது ஆகும்! ஒருவகையில், இவ்விரண்டும்
ஒன்றுக்கொன்று   பொருந்தாத  அம்சங்கள்   எனலாம்!   வாழ்க்கை   என்பது
சுதந்திரத்தை விரும்புவதையும், கடமை என்பது சில கட்டுப்பாடுகளுக்குள்
இயங்க வேண்டியிருப்பதையும் குறிப்பதாகவுள்ளது. ஆம்,சுதந்திரம் என்பது
வரையறைக்கு  உட்பட்டதாகும்!  அதே நேரத்தில்,  வரையறுக்கும் பரிணாம
விதிகளை சிரமேற்கொண்டு நிறைவேற்றுவது தான் விடுதலைக்கான வழி
யுமாகும்!  ஏனெனில்,   "இறுதி விடுதலை"  என்பதே பரிணாமத்தின் இலக்கு
ஆகும்!

ஏனெனில்,  கட்டற்ற  சுதந்திரம்  என்பது  அடிப்படையற்றது,  ஆகவே அர்த்த
மற்றதாகும்.  ஒரு  நதியானது   இரு கரைகளுக்கு  இடையில்  சுதந்திரமாகப்
பாய்ந்து செல்லலாம்! கரைகளற்ற அல்லது கரைகளை உடைத்துச் செல்லும்
நதியானது நாலாபுறமும் சிதறியோடி பூமியினால் உறிஞ்சப்பட்டு விரைவில்
காணாமல்  போய்விடக்  கூடும்!  ஆனால்,  கரைகள்  எனும்  கட்டுப்படுத்தும்
விதிகளுக்குள்    பாய்ந்தோடிடும்    நதி   முடிவில்  வற்றாத   சமுத்திரத்தைச்
சென்றடைந்து  நித்திய வாழ்வு  எனும்   உண்மையான   சுதந்திரத்தை, முழு
விடுதலையை அடைகிறது!

பரிணாம ரீதியாக,  பிரபஞ்ச அமைப்பின் பகுதியான நம்முடைய வாழ்வின்
இலக்கு  ஏற்கனவே  தீர்மானிக்கப்பட்ட  ஒன்றாகும். எவ்வாறு, ஒரு மரத்தின்
பிரதான  இலக்கு,  அதாவது  கனிகளை பிறப்பிப்பது என்பது ஏற்கனவே தீர்
மானிக்கப்பட்டதாக  உள்ளதோ,  அவ்வாறே  பிரபஞ்சத்தின் இலக்கும்  ஏற்க
னவே   முடிவான  ஒன்றாகும்!   அதாவது  நதியின்   இலக்கு  சமுத்திரத்தைச்
சென்றடைவதே என்பது முடிவான ஒன்று என்பதைப்போல! இங்கு நாம் கவ
னிக்கவேண்டிய  ஒரு  முக்கிய விஷயம்  என்னவென்றால், நதியின் இலக்கு
மட்டுமே  முன்-தீர்மானிக்கப் பட்டதாயுள்ளதே தவிர,  அது  சமுத்திரத்தைச்
சென்றடையும்  பாதை  முன்-குறிக்கப்படவில்லை  என்பது தான்!  அதாவது,
பரிணாமம்  எவ்வாறு  படிப்படியாக  மடிப்பவிழ்க்கப்படுகிறது  (Unfold),
வெளிப்படுகிறது  என்பதில்  சிறிது   சுதந்திரம்  உள்ளது எனலாம்;  எனினும்,
அவ்வெளிப்பாட்டு நிலைகள் முடிவான இலக்கு நிலைக்கேற்பவே(Teleology) வடிவமைக்கப்படுகின்றன,அதாவது கட்டுப்படுத்தப்படுகின்றன!

பரிணாமம் என்பது ஒரு தானியங்கி நிகழ்வுமுறை போன்றதாகும்;எவ்வாறு
ஒரு  விதையானது  விருட்சமாக விரிந்து மீண்டும் விதையினுள் உள்ளடங்கு
கிறதோ அவ்வாறு! ஏனெனில், உணர்வற்ற உலகிற்கு சித்தம் என்பதில்லை,
எனினும்  அதற்கு  பிரதானமாக  உள்ளார்ந்த  ஒரு  "விழைவு"  உண்டு.  அந்த
விழைவை யுணர்ந்து  நிறைவேற்றுவதற்காக  உருவானவனே  உணர்வுள்ள
சுய-சித்தம் உள்ள மனிதன்!  இவ்வகையில் பிரபஞ்சத்திலிருந்து வேறானவ
னல்ல மனிதன்!   உலகின் விழைவைப் பிரதி நிதித்துவம் செய்யும் சித்தமே
(உணர்வே) மனிதன்!பிரபஞ்சமானது தன்னை உள்ளிருந்து செலுத்தும் அந்த
உந்துதலை  உணர்வுபூர்வமாக அறியும் பொருட்டே மனிதனாக,  மனிதனுள்
மனமாக, சித்தமாக எழுந்தது!

ஏனெனில்,   பருப்பொருளால்  அமைந்த   தொடக்கநிலைப்  பிரபஞ்சத்திற்கு
சித்தம் என்பதில்லை!  மனிதனின் சித்தம்   என்பது  உண்மையில்  மனிதனு
டைய  சித்தம் அல்ல! மிகவும் அசலான வகையில், அது பிரபஞ்சத்தின் சித்த
மேயாகும்! ஆனால்,மிகவும் துரதிருஷ்டவசமாக, மனிதன் தனக்காகத்தோன்
றியவனைப்போல   தன்  மனம் போன போக்கில்  செயல்பட்டுக் கொண்டும்
வாழ்ந்துகொண்டும் செல்கிறான்!   உண்மையில்,    பிரபஞ்சமும்   தமக்காக
இல்லை;  மனிதனும்  தனக்காக இல்லை!  மாறாக,  இருவரும்  இறுதி மெய்ம்
மைக்காகவே இருக்கிறார்கள்! ஏனெனில், இறுதி மெய்ம்மை மட்டுமே நிஜத்
திலும் நிஜம் ஆகும்! மேலும்,பிரபஞ்சத்தின் உள்ளார்ந்த விழைவு சுட்டுகின்ற
அம்சம் இறுதியான அந்த மெய்ம்மையைத்தான்! மேலும்,   இறுதியாக  மனி
தனும் பிரபஞ்சத்தின்பகுதியும் அல்ல; மாறாக, அவன் முழுமையின், மெய்ம்
மையின்,   பிரதிநிதியும்  மெய்ம்மையோடு  மெய்ம்மையாக  ஐக்கியமாகிட
வேண்டியவனும்  ஆவான்!

உண்மையில்,   மனிதன்   தன்னிச்சையாகத்தான்  செயல்படுகிறானா   என்
றால்,  இல்லை என்றுதான் சொல்லவேண்டும்! ஏனெனில், தன் மனம் போன
போக்கில்   செயல்படுவது  என்பது வேறு;   மனம்   தனக்கே யுரிய  அசலான
செயல்பாட்டைச்  (Function) செய்வது  என்பது வேறு.  ஆம், மனித மனம்
இன்னும் தனது அசலான செயல்பாட்டைக் கண்டுபிடிக்கவில்லை! அதாவது,
முழுமையை,    இறுதி மெய்ம்மையைப்  பிரதிநிதித்துவம்  செய்வதற்காகத்
தோன்றிய  மனம்  (மனிதன்)  தன் உடலை,    உடலின்  தேவைகளைப்   பிரதி
நிதித்துவம் செய்யும்  ஒரு  ஏவலாளாகத்  தாழ்ந்து போனான்!  ஆக, மனிதன்
மனிதனாக   இல்லாத   நிலையில்,   இன்னும்   தன்னைக்   கண்டு பிடிக்காத
நிலையில் சுதந்திரம் பற்றிய  அவனது கோரிக்கைகள் அனைத்தும் அனர்த்
தமானவையே!  இவ்வகையில்,  மனிதனின் 'சுதந்திர-சித்தம்' பற்றிய பேச்சு
கள்,அதாவது, மனிதனுக்கு சுதந்திர சித்தம் உண்டா, இல்லையா எனும் பேச்
சுகள், விவாதங்கள் யாவும் அடிப்படையற்றவையே!

ஆக,  மீண்டும்  நாம்  அடிப்படைகளுக்குச் செல்வது அவசியமாகிறது!  சுதந்
திரம்  என்றால் என்ன?  சுதந்திரத்திற்காக  சுதந்திரம்  என்றேதும்  உண்டா?
நோக்கமற்ற, இலக்கற்ற சுதந்திரத்தின் அர்த்தம் என்ன? ஆனால், சுதந்திரத்
திற்கான மனிதனின் விழைவில் தவறில்லை! ஏனெனில், அது முக்கியமான
ஏதோவொன்றைச் சுட்டுகிறது! அதைக்கண்டுபிடிப்பது அதிமுக்கியமானது!
ஏனெனில்,      அதில்  தான்  மனிதனின்  அர்த்தமுள்ள   சாரமான வாழ்க்கை
அடங்கியுள்ளது!

நீங்கள்     உடல்  நலக்குறைவினால்,   மருத்துவமனையில்   பல   நாட்களாக
படுக்கையில்  இருக்கவேண்டிய  அசௌகரியமான  நிலையில்,   விரைவில்
வீடு  திரும்ப வேண்டும்   என்பதைத் தவிர,  உங்களது   எண்ணம்,  விருப்பம்
வேறு  என்னவாக  இருக்க முடியும்!   ஆனால்,   வீடு   திரும்பியவுடன் அப்படி
பெரிதாக எதைச் சாதிக்கப்போகிறீர்கள்? அதே அன்றாட உயிர்-பிழைத்தல்
எனும் சுற்றில் ஆழ்ந்து தனது ஆன்மாவைத் தொலைப்பதைத் தவிர! நீங்கள்
செய்யாத ஒரு குற்றத்திற்காக சிறையில் தள்ளப்பட்ட நிலையில்,விரைவில்
சிறையிலிருந்து  விடுதலையாவதைத் தவிர, உங்களது எண்ணம், விருப்பம்
வேறு என்னவாக இருக்கமுடியும்!ஆம்,மருத்துவமனையிலிருந்து  வீடு திரும்
புவதும்,  சிறையிலிருந்து  விடுதலையாவாதும்  அவசியமே. விடுதலையாகி
வெளியே  வந்து  நீலவானத்தைக் காண்பதும்,  சூரிய ஒளியில்   குளிப்பதும்
இனிமையான   விஷயங்களே!     இது   ஒரு  இயற்கையான சுதந்திர இருப்பு
நிலையாகும்.   இந்நிலையிலிருந்து  ஒருவன்  சுதந்திரமாக எதையும் செய்ய
இயலும் என்பதற்கான வாய்ப்பு ஆகும். ஒருவன் சிறைக் கைதி எனும் நிலை
யில் அவனால் எதையும் செய்யமுடியாமல் சிறைக்குள் முடக்கப்படுகிறான்.
இன்னொருவனால்  எதையும்  செய்யமுடியும் எனும் வாய்ப்பைப் பெற்றிருந்
தும்   அன்றாட  வாழ்க்கையின்   கைதியாகி  வெறுமனே  உயிர்-பிழைத்துச்
செல்கிறான்!  துரதிருஷ்டவசமாக,  உயிர்-வாழ்தலின் விதிகள் (தேவைகள்),
"உயர்"-வாழ்தலின்  விதிகளை  அறியவியலாதபடிக்குத் தம்மை முன்னிறுத்
திக்  கொண்டுவிடுகின்றன!  மனிதனும்   மனமுவந்து   அதற்குத்  தன்னைப்
பலியாகக் கொடுத்து விடுகிறான்!

ஆக, வாய்ப்பு  இருந்தாலும் மனிதன் சுதந்திரத்தைத் தேர்வுசெய்வதில்லை!
மாறாக, சோம்பியிருப்பதற்கான சுதந்திரம்,துய்ப்பதற்கான சுதந்திரம்,காம
வேட்கைக்கான சுதந்திரம், ஆழமாகச் சிந்திப்பதைத் தவிர்க்கும் சுதந்திரம், விரும்பியதைச்செய்யவும், அடையவுமான சுதந்திரம்,  உணர்வற்றிருப்பதற்
கான  சுதந்திரம் . . .   இவற்றைத்தான்  பொதுவாக  "சுதந்திரம்"  என நம்மில்
அநேகரும்  எண்ணிக் கொண்டிருக்கிறோம்!  ஆனால், இன்பம் தரும் இவை,
நமக்குத்  தெரியாமலேயே  நம்மை அடிமைத்தனத்தில் ஆழ்த்தி வைத்திருப்
பதை நாம் அறிவதில்லை!

உண்மையில்,     ஒருவன்   சிறைப்பட்ட   நிலையில்    இருந்தாலும்,    அல்லது,
சாதாரணமாயிருந்தாலும்,   வாழ்வின்  அர்த்தத்தைக் கண்டடைந்த,  விக்டர்
ஃப்ராங்க்ல்(Viktor E.Frankl)போன்ற ஒருவரை, அவ்வர்த்தம், அனைத்து
அசம்பாவிதங்கள்,இடர்கள்,இன்னல்கள் யாவற்றுனூடேயும் நிலைநிறுத்திக்
காத்திடும்!

"மனிதனின்   சுதந்திர சித்தம்  தான்,   விலங்கு ஜீவிகளிடமிருந்து  அவனை
வித்தியாசப்  படுத்திக்  காட்டுகிறது!"   என்று    சொல்லப்படுவது      மிகவும்
மேலோட்டமான   கூற்றாகும்!    ஏனெனில்,   சுதந்திர சித்தத்தைக்கொண்டு
மனிதன்  அப்படிப்  பெரிதாக  எதைச் செய்துவிட்டான்,  அல்லது  சாதித்துள்
ளான்? மனிதனுடைய  அனைத்து விஞ்ஞான அறிவு மற்றும் தொழில் நுட்பச்
சாதனைகள்  யாவும் சௌகரியமாக  உயிர்-பிழைத்தல்  எனும் ஒற்றை விஷ
யத்தில்   முடக்கப்பட்டதைத் தவிர  வேறேன்ன  சாதனை  படைத்துள்ளான்?
சற்று அதிகமான இ -டை-வெ-ளி கொண்டமைந்த அடைப்புக்குறிகளுக்குள்
மனிதன்   தாம்  விரும்பியதைச் செய்யமுடியும், செய்கிறான் என்பதில் பெரி
தாக  என்ன விசேடம்  இருக்க முடியும்? உண்மையில், விலங்குஜீவிகளைவிட
மனிதன்   அதிகச் சுதந்திரமானவன் அல்ல!     ஏனெனில்,    விலங்குகளுக்கு
தேவைகள்  என்பவை  மிகச்சிலவே யாகும்!   ஆனால்,  மனிதனுக்கு  அப்படி
யில்லை; ஒரு நாளின் 24-மணி நேரத்தின் ஒவ்வொரு நிமிடமும் ஒரு தேவை
யைப் படித்துக் கூறுகிறது!  உண்மையான அடிப்படையான, அத்தியாவசிய
மான தேவைகள்,அவற்றின் உப-தேவைகள்;அத்தியாவசியமற்ற ஆடம்பரத்
தேவைகள்;  சௌகரியத்தேவைகள்; செயற்கைத்தேவைகள்; படைப்புப்பூர்
வத் தேவைகள். . . . .   என எண்ணற்ற தேவைகள்!  ஆக,  மனிதஜீவிகளாகிய
நாம்  அளவு கடந்த தேவைகளின் அடிமைகளாக இருக்கிறோம்! தேவைகள்
எஜமானர்களாகவும்,   நாம்    அவற்றின்   அடிமைகளாகவும்   இருக்கிறோம்!
அதாவது, தேவைகள் நம்மை விரட்டிச் செலுத்துகையில்,   வெறுமனே தெரி
வுகளும் (Choices),சுதந்திர சித்தமும் இருந்தென்ன பயன்?

மனிதனுக்கு நிச்சயமாக சுதந்திர சித்தம் உள்ளது. ஏனெனில், அவன் உணர்
வுள்ளவன்!  உணர்வில்லாமல்,  சிந்திக்கும் மனமில்லாமல், அவனால் வாழ்க்
கையின்  அர்த்தத்தையும்,  உண்மையையும்,  அதன்  ஒப்பற்ற இலக்கையும்
புரிந்துகொள்ள இயலாது! வாழ்க்கையை என்னவென்று புரிந்து கொள்ளாது
வாழ்வதற்கு  அவன்  ஒன்றும்  எலியோ,  தவளையோ அல்ல!   மனிதனுக்குச்
சுதந்திர சித்தம் இருப்பது சரியாகவும், முறையாகவும் வாழ்வதற்குத்தானே
தவிர  தான்  விரும்பியவாறு  வாழ்வதற்காகவோ, அல்லது வழிதவறிச் செல்
வதற்காகவோ அல்ல!  நதிக்கு,  தான் செல்ல வேண்டிய  பாதையை அறிந்து
முறையான,  தனது  இலக்கான சமுத்திரத்தைச் சென்றடைவதற்கான சுதந்
திரம் உள்ளதே தவிர,  கன்னாபின்னாவென்று அலைவதற்கும், முறையான
தனது  பாதையைவிட்டு அகன்று செல்வதற்கும் அல்ல!  வாழ்வின் அர்த்தம்,
உண்மை இலக்கு குறித்த கேள்வியும்,ஆழமான விசாரமும்,புரிதலும் இன்றி,
மனிதன் சுதந்திரம் பற்றிப்பேசுவது என்பது அடிப்படையற்றதும், அபத்தமா
னதுமாகும்!

அதே போல்,  வாழ்வின் அசலான இலக்கை,  இறுதி உண்மையை  அடைவது
தான் உண்மையான இறுதியான முழுமையான சுதந்திரம் ஆகும்!வாழ்வின்
இலக்கிற்குப்  புறம்பாக மனிதன்ஆசைப்படும்,அனுபவிக்கும்,தேடிடும் சுதந்
திரம் அனைத்தும் கானல் நீர் போன்றே நிஜமற்றவையாகும்!

உண்மையில், 'சுதந்திரம்',  'சுதந்திர சித்தம்'  என்பவை எதைக்குறிக்கிறது?
சுதந்திரம்  என்பது   எதைக்குறித்தாலும்  அது  ஒரு  குறிப்பிட்ட   நிலையைக்
குறிக்கும் ஒன்றாகும். சுதந்திர சித்தம் என்பது நாம் ஒன்றை,  அல்லது விரும்
பியவற்றைத் தெரிவு செய்வதற்கான சுதந்திரத்தைக் குறிக்கிறது.  ஆனால்,
ஒன்றை,   அல்லது   நாம்  விரும்பியவற்றைத்  தெரிவு செய்கிறோம்  என்பது
நாம்    அவ்விஷயங்களைச்   சார்ந்திருக்கிறோம்  என்பதையே  குறிக்கிறது!
ஆக,  நாம்  எதையேனும்  சார்ந்திருக்கும் வரை  நாம் உண்மையில் சுதந்திர
மானவர்கள் இல்லை!

அதாவது,   'சுதந்திர சித்தம்'  என்பது அனைத்து விஷயங்களிலிருந்தும் விடு
பட்டு   நிற்பது  என்பதாகும்!   அவ்விஷயங்கள்  நமக்குப்  பிடித்தவைகளாக,
நாம்  மிகவும் விரும்பும் விஷயங்களாக இருந்தாலும்,  அல்லது  வேறு எவ்வா
றிருந்தாலும் சரி!  உண்மையான  சுதந்திர சித்தம்  என்பது  தன்னில் தானே
முடிவான (முழுமையான),  எதையுமே  சார்ந்திராத  ஒரு  மெய்ம்மையாகும்!
சுதந்திரனான ஒருவன்,   'கடவுள்',  அல்லது இறுதி உண்மை அல்லது மெய்ம்
மையின் மீதும் கூட சார்ந்திருக்கமுடியாது!ஆம்,சார்ந்திருப்பும் சுதந்திரமும்
சேர்ந்துசெல்லாது!ஆனால், 'கடவுள்' தான் இறுதியான மெய்ம்மை என்பதாக
இருந்தால்,இரண்டாவதாக, 'சுதந்திர சித்தன்' எனும் இன்னொரு இறுதியான
மெய்ம்மை  இருக்க முடியாது!  அதாவது,  மனிதன்  சுதந்திர சித்தனாக ஆக
வேண்டுமெனில்,அவன் வேறு வழியில்லாமல் கடவுளாக, இறுதி-மெய்ம்மை
யாக மாறிடத் தான் வேண்டும்!

'சுதந்திர சித்தம்'  என்பது ஒரு புதிராகும்! உண்மையில், சுதந்திர சித்தனாக
உள்ள ஒருவனால் எவ்வகைச் சூழலிலும், எந்நிலையிலும், சொர்க்கத்திலும்,
நரகத்திலும்  வாழ  முடியும்!   அவனுக்கு  வாழ்வும்,  மரணமும்  ஒன்று தான்!
சுதந்திரம்  என்பது வாழ்வு,  மரணம்  இரண்டையும்  கடந்ததாகும்!

உலகம் முழுவதிலும், மனிதர்கள் பலவகைப்பட்ட சுதந்திரம் குறித்தும் பேசி
யும் போராடியும் வருகிறார்கள்! ஏழ்மையிலிருந்து சுதந்திரம், அண்டை நாட்
டின் ஆதிக்கத்திலிருந்து சுதந்திரம், அடக்குவோரிடமிருந்து, ஒடுக்குவோரிட
மிருந்து  சுதந்திரம்,  ஆணிடமிருந்து  பெண்ணுக்குச் சுதந்திரம்,  பெண்ணிட
மிருந்து ஆணுக்குச் சுதந்திரம் . . .  இன்னபிற! தனி நபர்களுக்கிடையேயான
பிணக்குகள்,  பிரச்சினைகள்,  முரண்பாடுகள்,  சண்டை சச்சரவுகள்,  நாடுக
ளுக்கிடையேயான  தீராப்பிரச்சினைகள்,  போர்கள்,  இன அழிப்புகள்;   பிற
உயிரினங்களின் மீதான மனிதஇனத்தின் கொலைவெறி ஆதிக்கம்,மற்றும்,
இயற்கை  மீதான மனித இனத்தின்  தற்கொலைத்தனமான தாக்குதல்,  சுற்
றுச்சூழல் பாதிப்புகள்,    புவி வெப்பமயமாதல் ஆகிய இவை யாவற்றுக்கும்
காரணம் மனிதனே, ஒட்டு மொத்த மனித குலமே யாகும்!  மனிதர்கள் தமக்
கிடையேயும்  இணக்கமான உறவில் இல்லை;  பிற யாவற்றுடனும்  சரியான
இசைவான உறவில் இல்லை! இதற்கெல்லாம் காரணம் யாவற்றிடமிருந்தும்
தன்னைத்  தனியே பிரித்துக் காணும்  மனிதனின்  அரை  வேக்காட்டுத்தன
மான சுதந்திர சித்தமே யாகும்!  சுதந்திர சித்தம் கொண்ட இரண்டு மனிதர்
கள் ஒரு போதும் பொருந்திப்போவதில்லை, இருவருக்கும் சாதகமாக அமை
யும்  ஒரு சில விஷயங்களைத்தவிர!  தனது  சுதந்திரத்தை மட்டும் கருத்தில்
கொள்ளும்    ஒருவனின்   சித்தத்தை  ஆரோக்கியமானது  என்று  சொல்வது
உண்மைக்கு  மாறானதாகும்!   அத்தகையவனின் சுதந்திரமும் ஆரோக்கிய
மானதாக இருக்கமுடியாது!

மீண்டும்  மீண்டும்  நம்மை  நாமே  கேட்டுக்கொண்டு தெளிவு காண வேண்
டிய  ஒரு  முக்கிய கேள்வி  என்னவெனில்,  நம்முடைய  சுதந்திர சித்தத்தின்
வீச்சும்,  விளைவும்  எத்தகையது என்பதே!  முதலில், நாம் விரும்பியவற்றை
யெல்லாம்  செய்கிறோம்,  அல்லது  செய்ய முடிகிறது என்பது நமது சுதந்திர
சித்தத்தினால் அல்ல!  மாறாக,  ஒரு  குறிப்பிட்ட  வகையில்  கட்டுப்படுத்தப்
பட்ட  நமது  சித்தத்தினால்  (Conditioned -Will) தான்  அவை சாத்திய
மாகின்றன!  முடிந்தவரையில்,   நாம் அனைவருமே கிட்டத்தட்ட ( சில வரை
யறைகளுக்குள்தான் என்றாலும்), நாம்விரும்பியவாறு தான் நம் வாழ்க்கை
யை  அமைத்துக் கொள்கிறோம்,  வாழ்ந்து  செல்கிறோம்;  என்றாலும்,  நாம்
மகிழ்ச்சியாக இருப்பதில்லை, நிறைவாக உணர்வதில்லை, ஒட்டு மொத்தத்
தில், நம் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகத் தெரிவதில்லை! ஒருவனின் சித்தம்
தெளிவாகவும்,  கூர்மையாகவும் இருக்கும் பட்சத்தில்,  அவன் தனக்கு நல்ல
தையே,  சிறந்ததையே,  உண்மையானதையே,  இறுதியானதையே  தெரிவு
செய்வான்!  அவனது சரியான தேர்வு, தவறாமல் அவனை நிறைவு செய்யும்,
முழுமைப்படுத்தி  விடுதலைப்படுத்தும்!   ஆனால்,  தவறானதை,  மட்டுப்பா
டானதை, கேடானதை ஒருவனது சுதந்திர சித்தம் தெரிவு செய்திடுமானால்,
அது நிச்சயம் சுதந்திர சித்தமாக இருக்கமுடியாது. மாறாக, அது மிகவும் மட்
டுப்பாடான,  விழிப்படையாத  அவனது  சொந்த  விருப்பச் சித்தமாகத்தான்
இருக்கமுடியும்!  நம்மில்  பெரும்பாலானோர் தமது விருப்பச் சித்தத்தையே
சுதந்திர சித்தம்   என  தவறாக  அடையாளப்படுத்திக் கொண்டு   வாழ்வில்
தடுமாறிக் கொண்டிருக்கிறோம்!  இவ்வகையில் காணும்போது நம்மில் பல
ருக்குச்  சுதந்திர சித்தம்  என்பதே  இல்லை  என்பது தெளிவாகும்!  சுதந்திர
சித்தம் என்பது சுதந்திரம்,விடுதலை என்பதைத்தவிர தன்னை வேறு எதனு
டனும் பிணைத்துக்கொள்வதோ, அடையாளப்படுத்திக் கொள்வதோ கிடை
யாது! தெரிவுகளற்ற சித்தம் தான் சுதந்திர சித்தம் ஆகும்!

சுதந்திரம்  என்பது இறுதியாக  அடையப்படுகிற விஷயம் அல்ல! ஒருவனுள்
சுதந்திர தாகம் ஏற்படும் போதே ஒருவன் சுதந்திரனாக  மிளிரத்  தொடங்கி
விடுகிறான்! ஆனால்,  சுதந்திர தாகம் சாதாரணமாக எல்லோருள்ளும் ஏற்ப
டுவதில்லை!  சுதந்திர சித்தத்திற்கு  எதிராக  இருப்பது  ஒருவனது விருப்பச்
சித்தமே!ஏனெனில்,எல்லோரும் சுதந்திரத்தை விரும்புவதில்லை;அப்படியே
விரும்பினாலும்   அதற்குரிய   விலையைக்  கொடுக்க   முன் வருவதில்லை!
அதற்கான விலை என்பது அப்படி ஒன்றும் அதிகம் இல்லை!  ஒருவனது அறி
யாமையும்,  அவனது  மட்டுப்பாடான  சுயமும்,  அவனுடைய  கீழான இச்சை
களும்,துய்ப்புகளும்,விருப்பத்தெரிவுகளும் தான் அதற்கான  விலையாகும்!
மூடன் தனக்கேயுரிய வகையில்,சுதந்திரத்தையும்,உண்மையையும்,மெய்ம்
மையையும்,  வாழ்வின் அர்த்தத்தையும்  கொச்சையாக வரையறை செய்து
கொள்கிறான்! . . . . .

விழிப்படைந்த  சித்தம்  தான் சுதந்திர சித்தம் ஆகும்!   விழிப்பே அனைத்து மட்டுப்பாடுகளிலிருந்தும் மற்றும்  மாற்றத்தின் உலகிலிருந்தும்  ஓருவனை
வெளியே  எடுத்து  முழுமைப்படுத்தி விடுதலை செய்யக்கூடியதாகும்! ஆம்,
"விழிப்பு" தான் விடுதலை, சுதந்திரம் யாவும் ஆகும்!

மா.கணேசன்/ நெய்வேலி/ 10.01.2017
----------------------------------------------------------------------------

Thursday, 2 February 2017

இதுதான் வாழ்க்கைக்கு நீ தரும் பதிலளிப்பா?






"என்னால் இது முடியல!",  "எனக்கு இது புரியல!" எனும் வெளிப்பாடுகள்
எதைக் குறிக்கின்றன? இதுதான் இருப்புக்கு, வாழ்க்கைக்கு நீ தரும் பதில
ளிப்பா? இவ்வாறு சொல்வதற்குத்தான் நீ பிறப்பு எடுத்தாயா, மனிதா?
"இல்லை, நானாக இந்த இருப்பை, வாழ்க்கையை, விரும்பித் தேர்ந்தெடுக்க
வில்லை!" என்று நீ சொல்கிறாயா?  ஒரு வகையில், உனது விருப்பத்தைக்
கேட்காமலேயேதான் நீ இங்கு கொண்டுவரப்பட்டுள்ளாய் என்றே வைத்துக்
கொண்டாலும், உனக்குக்கொடுக்கப்பட்ட இந்த வாழ்க்கையில், நீ உனக்குப்
பிடித்தவை என எதையுமே நீ விரும்பாமலும், தெரிவு செய்யாமலும் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறாயா? உனது வாழ்க்கையில், சிறிதளவு மகிழ்ச்சி
யை, இனிமையைக்கூட நீ ருசித்ததில்லையா? உயிரின் மீது உனக்கு ஆசை
யில்லையா? அன்றாடம் நீ அருந்தும் காப்பியில் சர்க்கரையின் அளவு கூடி
விடக்கூடாது என நீ கவனமாகப் பார்த்துக் கொள்வதில்லையா? அட, உனது விருப்பத்தைக்கேட்காமலேயே  உனக்குக்  கொடுக்கப்பட்ட இந்த வாழ்க்
கையின் ஒரு ஓரத்தையேனும் நீ ருசித்திருக்கிறாய், உனக்குப் பிடித்தவை
என எதையேனும் நீ ரசித்திருப்பாய்;  காப்பியில் சர்க்கரையின் அளவு
குறித்து அக்கறை கொள்ளும் அளவிற்கு வாழ்க்கையில் பிடிப்பு கொண்ட
உனக்கு, உன்னைக்கேட்காமலேயே இந்த வாழ்க்கை கொடுக்கப்பட்டதில்
தவறேதுமிருக்க வியலாது! பெரிதாக உணர்வின்றியும், விழிப்பின்றியும்;
ஆழமான சிந்தனையின்றியும், புரிதலின்றியும்; தானியங்கித்தனமாக, ஒரு
உயிருள்ள எந்திரம்போல இத்தனை வருடங்கள் நீ  வாழ்க்கையின் ஒரு சிறு
பகுதியையாவது  ரசித்து, ருசித்து, அனுபவித்து வாழ்ந்து வந்திருக்கிறாயல்
லவா! அச்சிறு பகுதியை "உன்னுடையது" என நீ சொந்தம் கொண்டாடவில்
லையா! நீ ஆசைப்பட்ட அளவிற்குரிய வாழ்க்கையை நீ உன் வசப்படுத்திக்
கொண்டாய், அல்லது அப்பகுதி உன்னை வசப்படுத்திக்கொண்டுவிட்டது!
அதே போல, வாழ்க்கை மொத்தத்தையும் உன்னால் எளிதாக வசப்படுத்த
இயலவில்லை எனும் போது தானே முரண்பாடு எழுகிறது?  நன்றாகப் பார்!
முரண்பாடு வாழ்க்கையில் உள்ளதா, அல்லது உன்னிடம், உனது அணுகு
முறையில், உனது பேராசையில் உள்ளதா?  பெரிதாக ஆசைப்படுவதில் தவ
றில்லை; அதற்குரிய தகுதியை வளர்த்துக்கொள்ளாதது தான் தவறு! அட,
வாழ்க்கையின் ஒரு சிறு பகுதியை, ஒரு ஓரத்தை ருசித்த உனக்கு, மொத்த
வாழ்க்கையையும் முழுமையாக ருசிக்க வேண்டும், தரிசிக்க வேண்டும்
எனும் ஆவல்  ஏன் உன்னுள் எழவில்லை? "என்னால் இது முடியல!",  "எனக்கு
இது புரியல!" என்று நீ கூறுவதன் அர்த்தம் என்ன?இக்கூற்றுகளின் வழியாக
நீ என்ன சொல்ல வருகிறாய்? வாழ்க்கையை முழுமையாகத் தரிசிக்கவும்,
தழுவிக் கொள்ளவும் உண்மையிலேயே நீ பேராவல் கொண்டாயா? அப்
பேரார்வத் தீக்கு உன்னை முழுவதுமாக, மிச்சம் மீதமின்றி அப்படியே
கொடுத்தாயா? விரும்பியோ, விரும்பாமலோ ஆடுகளத்தில் இறக்கப்பட்ட
பிறகு, ஆட்டத்திலும் ஈடுபட்ட பிறகு, பாதியாட்டம் மட்டும்தான் ஆடுவேன்
என்பது முறையாகுமா? உண்மையில் பிரச்சினை, கடினம், மட்டுப்பாடு என்
பதெல்லாம் வாழ்க்கையில் இல்லை! மாறாக, உனது விருப்பங்களிலும்,
தெரிவுகளிலும், அற்பமான உனது எதிர்பார்ப்புகளிலும்; புதிய விஷயங்கள்,
ஆழமான அம்சங்கள், மற்றும்  உயர்-மெய்ம்மை நிலைகளுக்கு நீ தயாராக
இல்லை என்பதிலும் தான் உள்ளன! உனது விருப்பத்தைக்கேட்காமலேயே நீ
இந்த இருப்பிற்குள், வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டதாக நீ எண்ணலாம்!
ஆனாலும், வாழ்க்கை அவ்வளவு கடுமையாகவோ, கறாராகவோ நடந்து
கொள்வதில்லை! உனது சொந்த விருப்பங்களுக்கும், சின்ன சின்ன ஆசை
களுக்கும் அது நிச்சயம் இடமளிக்கவே செய்கிறது! நீ விரும்பினால், ஒரு
மூடனாக, அற்பனாக, காமுகனாக, கொலைஞனாக, கேடுகெட்டவனாக,
எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், வாழலாம்! வாழ்க்கை ஒருபோதும்
உன்னை ஒரு நன்னெறியாளனாகவோ, உயர்பேரறிவாளனாகவோ ஆகிட
வேண்டும் என்று நிர்ப்பந்திப்பதில்லை! நீ விரும்பி முயன்றால், வாழ்க்கை
யின் முழுமைக்கும், உச்சத்திற்கும் நீ உயரலாம்!  அதுவே வாழ்க்கையின்
விருப்பமும்கூட! ஆனால், வாழ்க்கை தனது விருப்பத்தை உன் மீது திணிப்ப
தில்லை! எத்தகைய வாழ்க்கையையும்   நீ தெரிவு செய்யலாம், அதற்கான
முழுச்சுதந்திரத்தையும் வாழ்க்கை உனக்குக்கொடுத்துள்ளது! நீ தெரிவு
செய்த வாழ்க்கை உன்னை நிறைவுசெய்யவில்லை, துன்பம், வெறுமை
யுணர்வு, விரக்தி இவை தான் மிச்சம் என்பதாயிருந்தால், அதற்கு உனது
தெரிவு தான், அதாவது,  நீயே தான் பொறுப்பே தவிர வாழ்க்கையல்ல!
வாழ்க்கை என்பது நீ விரும்பாமலே, கேட்காமலே கொடுக்கப்பட்ட அற்புதப்
பரிசு ஆகும்! வாழ்க்கை என்பது முழுமையானதொரு மெய்ம்மையாகும்!
அதன் பல்வேறு வெளிப்பாடுகளில் மனிதனாகிய நீ ஒரு மையமான விசேட
மான வெளிப்பாடு ஆவாய்! வாழ்க்கை எவருக்கும்  எடுத்த எடுப்பிலேயே
தன்னை முழுவதுமாகத் திறந்து காட்டுவதில்லை! ஏனெனில், அதன் மடை
திறந்த ஆனந்த வெள்ளத்தைத் தாங்கும் சக்தி எவருக்கும் கிடையாது!
மலையிலிருந்து சிறு சிறு நீர்த்தாரைகள் ஒன்று சேர்ந்து அருவியாகி, பிறகு
சிற்றோடையாகி, பிறகு நதியாகி, மிகுந்த தண்ணீரைத் தன்னுள் கொள்ள
வியலாது வெள்ளப்பெருக்கெடுத்து, முடிவில் சமுத்திரத்தில் கலப்பது தான்
பாதுகாப்பு ஆகும்! சமுத்திரம் நதிக்குள் பாய்ந்தால் நதி சின்னாபின்னமாகி
விடும்! ஒருவன் வாழ்வின் முழுமையைச் சந்திக்கவேண்டுமெனில், அவன்
தன்னை அதற்காகத் தயார்படுத்திக்கொள்வது அவசியமாகும்!ஆனால்,
ஒருவன் ஏன் வாழ்வின் முழுமையைச் சந்தித்தாக வேண்டும்,அதனுடன் ஏன்
ஐக்கியமாகிட வேண்டும், வாழ்க்கையை ஏன் முழுமையாக வாழ்ந்திட
வேண்டும்? ஏனெனில், ஒருவனும் வாழ்வின் முழுமையும் வேறு வேறு அல்ல!
ஏனெனில், ஒவ்வொரு மனிதனும் தனது உட்பொதிவில் முழுமையானவனா
வான்! வாழ்க்கை சிறிது சிறிதாகத் தனது வெளிப்பாடுகளின் வழியாகத்
தன்னை வெளிப்படுத்துகிறது! எவனொருவன் வாழ்க்கைக்குத் தன்னை
முழுவதுமாகத் திறக்கிறானோ,  அவனும் முழு-வாழ்க்கையும் ஒன்றாக
ஆகிறார்கள்! எவனொருவன் தனது விருப்பத்தை முன்னிறுத்தி, வாழ்க்கை
யிலிருந்து ஒரு சில பகுதிகளை, கூறுகளை, துண்டு துணுக்குகளைத் தெரிவு
செய்து அவற்றுடன் தங்கிவிடாது, வாழ்வின் விருப்பத்தை முன்னிறுத்தி
வாழ்க்கை மொத்தத்தையும் தெரிவு செய்கிறானோ, அவனே உண்மையில்
வாழ்க்கையுடன் பொருந்துகிறான், அவனே உண்மையில் வாழ்கிறான்! எவ
னொருவன் வாழ்க்கைக்காக வாழ்க்கையை நேசிக்கிறானோ, அவனுக்கே
வாழ்க்கை தனது ஞானப் பொக்கிஷங்களை வழங்குகிறது! "என்னால் இது
முடியவில்லை!",  "எனக்கு இது புரியவில்லை!" என்று புலம்பும் மனிதா! உன்
னால் எல்லாம் எப்படி  முடியும்? எல்லாம் எப்படிப் புரியும்? உனது முக்கியத்
துவத்தை  மையமாகக்கொண்டு இயங்கும் வரை எப்படி எல்லாம் முடியும்?
எல்லாவற்றையும் சாத்தியமாக்கிடும் அந்த ஒன்றை மையமாகக்கொள்ளா
மல், அந்த ஒன்றுடன் பொருந்தாமல், உன்னுடைய உண்மையான முக்கியத்
துவத்தை நீ உணரமுடியாது! ஆம், ஒட்டுமொத்தப் பிரபஞ்சமும் உன்னுள்ளே
யும்,ஒவ்வொரு மனிதனினுள்ளேயும் குவிகிறது என்பதென்னவோ உண்மை
தான்! ஆனால், அதன் குவி-மையம் உண்மையில், உன் வழியாகக் குவிந்து
உன்னைக் கடந்த அந்த இறுதியான புள்ளியைத் தேடுகிறது!   நீ தேட வேண்
டிய புள்ளியும் அதுவே!

மா.கணேசன்/ நெய்வேலி/ 31.01.2017
----------------------------------------------------------

வழக்கத்திற்கு மாறான கேள்விகளும் அசாதாரணமான பதில்களும் - 1

              கேள்வி - 1 நீங்கள் இறந்தபிறகு, அந்த, வாழ்க்கைக்குப் பிறகான வாழ்க்கையில் (In the After Life) உங்களுக்கு மிகவும் பிடித்த, தாய், ...