Friday, 27 October 2017

எட்டாக்கனி (சீச்சீ, இந்தப்பழம் புளிக்கும்)!



         "இருக்கிற வாழ்க்கையை விட்டுவிட்டு அறியாத, புரியாத,
          ஆகவே இல்லாத, வாழ்க்கையைத் தேடி, இருப்பதையும்
          இழந்துவிட நான் விரும்பவில்லை!"
                                               - (ஒரு தோழர்)

குளம், குட்டை, ஏரி போன்றவை தாமாகவே இயற்கையாக உருவாவதுண்டு!
ஆனால், நமது தோட்டத்தில், வீட்டைஒட்டி ஒரு கிணறு தாமாகவே உருவா
வதில்லை! மாறாக, நாம் தான் கிணற்றைத் தோண்டியாக வேண்டும்!
அவ்வாறே, ஞானத்தின் ஊற்றாக, கிணறாக விளங்கும் ஞானியர்கள் என்போர்
விபத்துக்களின் விளைவாகத் தோன்றியவர்களல்ல! மாறாக, அவர்கள் ஒவ்
வொருவரும் தம்மைத்தாமே தோண்டி ஞானத்தின் ஊற்றுக்களாக, கிணறு
களாகப் பரிணமித்தவர்கள் ஆவர்! தம்முடன் தாம் புரிந்த வினையாண்மை
யால் மலர்ந்தவர்கள் ஆவர்!

மனிதன் என்பவன் இயற்கையாகப் பிறப்பதில்லை! இயற்கையாகப் பிறப்பவன்
மனிதனுக்கான ஒரு அடிப்படை மாத்திரமே! அந்த அடிப்படையின் மீது உணர்
வைக்கொண்டு ஒவ்வொரு மனிதனும் அசல் மனிதனாக தன்னைத்தானே
எழுப்பிக்கொள்ளவேண்டும்!

உணர்வு கொள்வது என்பது அவ்வளவு கடினமான விஷயமா? இல்லை! அது
கடினமான விஷயம் அல்ல! பிரச்சினை என்னவென்றால், நம்மைச்சுற்றியுள்ள
பல்வேறு விஷயங்களுடனும், பொருட்களுடனும், மதிப்பீடுகளுடனும் நாம்
மிக எளிதாக பழக்கப்பட்டுவிடுகிறோம்; பிறகு அவற்றைவிட்டு அகலாமல்
அவற்றுடனேயே தங்கித் தேங்கிவிடுகிறோம்! அதாவது, எளிதான, சுலபமான
விஷயங்களை வாழ்க்கையென வரித்துக்கொண்ட பிறகு, உணர்வு கொள்வது
என்பது மட்டுமல்ல, ஆழமாகச் சிந்திப்பது போன்ற எதுவுமே கடினமாகிவிடு
கிறது!

உணர்வு கொள்வது என்பது, சும்மா இருப்பது என்பதைக்குறிக்கிறது! அதாவது,
யாதொரு உணர்ச்சிக்கும், எண்ணத்திற்கும், உந்துதலுக்கும், தூண்டுதலுக்கும்,
ஆசைக்கும், விருப்பத்திற்கும் ஆட்படாமல், வசப்படாமல் இவற்றையெல்லாம்
கடந்து அறிநிலையில் இருப்பது, அல்லது நிலைப்பதுதான் உணர்வு கொள்வது
என்பதாகும்!

உணர்வு, கவனம், அறிநிலை, விழிப்பு எனப்படும் யாவும் உணர்வின் பண்புகள்
அல்லது செயல்பாடுகளைக் குறிக்கும் வெவ்வேறு சொற்களே ஆகும்!


மேலும், உணர்வோடிருப்பது, அல்லது, உணர்வுக்கு வருவது என்பது கடின
மான விஷயம் அல்ல! ஏனெனில், உணர்வு என்பது ஏற்கனவே இருக்கிறது;
அதை ஒவ்வொரு மனிதனும் தன்னுள் உணரவேண்டும் என்பதைத்தான்
"உணர்வுக்கு வருதல்" என்றும், "உணர்வை உணர்வுகொள்வது" என்றும் குறிப்
பிடப்படுகிறது! முக்கியமாக, உணர்வு என்பது மிகவும் நுண்மையானது, நுட்ப
மானது; அது தன்னை பெரிதாக முன்-துருத்திக்கொள்வதுமில்லை, ஆரவார
மாகத் தன்னை அறிவித்துக் கொள்வதுமில்லை!

உண்மையில், உணர்வைப் பயன்படுத்தாமல், உணர்வின் உதவியில்லாமல்
எவ்வொரு எண்ணமும், சிந்தனையும், விருப்பும், வெறுப்பும், சொல்லும்,
செயலும், எதுவும் நிகழ்வதில்லை! ஆனால், அவை உணர்வு கொண்டு
பரிசீலிக்கப்படாமல் தானியங்கித்தனமாக நிகழ்கிறது! ஆக, உணர்வைப் பிற
எதற்கும் பயன்படுத்தாமல் இருக்கும்போது "உணர்வை உணர்வுகொள்வது"
என்பது தாமே நிகழ்வதாகிறது! ஆம், அர்த்தமற்ற விஷயங்களில், செயல்பாடு
களில் உணர்வைச் செலவழிக்காமல் இருப்பது உணர்வோடிருப்பதற்கு உதவும்
வழிகளில் ஒன்று எனலாம்! ஆனால்,உணர்வோடிருப்பதற்கு இட்டுச்செல்வதா
கக் கருதப்படும் சுற்றுவழிகள் எதுவும் பெரிதாக உதவுவதில்லை என்பதுதான்
உண்மை! ஏனெனில், "உணர்வை உணர்வுகொள்வது", "உணர்வுக்கு வருதல்",
"விழிப்படைதல்" ஆகியவை ஒவ்வொருவராலும் நேரடியாகச் செய்யப்பட
(உணரப்பட) வேண்டியவையாகும்! அவற்றை எவரும் கற்றுத்தரவோ, எவரிட
மிருந்தும் கற்றுக்கொள்ளவோ கூடிய அம்சங்கள் அல்ல!

ஒவ்வொரு மனிதனும், எவ்வெவ்விஷயங்கள் தம்மை எவ்வெவ்வாறெல்லாம்
செலுத்துகின்றன என்பதை அறிவது அதிமுக்கியமானது! அவ்வாறு அறிவதற்கு
அதீத கவனம் வேண்டும்! கவனநிலையால் பரிசீலிக்கப்படாத வாழ்க்கை உணர்
வற்ற விலங்கினத்திற்கு உரியதாகும்!

"இருக்கிற வாழ்க்கை", "இயற்கையான வாழ்க்கை", "கொடுக்கப்பட்ட வாழ்க்கை"
என்று அதை எப்படி அழைத்தாலும், அது வாழ்க்கைக்கான வெறும் ஒரு அடிப்
படை மாத்திரமே! மனிதன் என்பவன் ஒரு விலங்கைப்போல, உயிருள்ள ஒரு
எந்திரம் அல்ல! வெறுமனே உயிர்-வாழ்வதற்குப் பெரிதாக உணர்வு எதுவும்
தேவையில்லை! ஒரு விலங்குஜீவி என்பது  விசேடமான ஒரு உயிருள்ள
பொறியமைப்பு (அல்லது எந்திரம்) போன்றதாகும்! அதற்கு சில உள்ளமைந்த
இயல்பூக்கிகள் போதுமானது; அவற்றின் தூண்டுதல்களால் ஒரு விலங்குஜீவி
உயிர்-வாழ்ந்திடும்! பசி தோன்றும் போது அது உணவைத் தேடும், தாகம் ஏற்
பட்டால் அது தண்ணீரைத்தேடும்; பாலுணர்வு தோன்றினால் அது ஒரு
இணையைத்தேடும்; அவ்வளவு தான், அதன் ஒட்டுமொத்த ஜீவிதமும்,
வாழ்க்கையும், யாவும்! அவ்வாறு உணர்வுள்ள மனிதன் வாழமுடியாது!

எவ்வொரு குழந்தையும் வயிற்றுப் பிழைப்பின் வாழ்க்கையை எதிர் நோக்கிப்
பிறப்பதில்லை! மாறாக, அத்தகைய வாழ்க்கையுடன் அடையாளப்படுத்திக்
கொள்ளும் வகையில் பழக்கப்படுத்தப்படுகிறது! குழந்தை பசியினால், பாலுக்
காக அழுகிறது என்கிறோம்; ஆனால், குழந்தைக்குத் தாம் எதற்காக அழுகி
றோம் என்பது தெரியாது! இடை-விடாது கிடைத்துக்கொண்டிருந்த ஊட்டம்
திடீரென தடைப்பட்டுவிடும் போது அது உடலை வருத்துகிறது; ஆகவே
குழந்தை அழுகிறது! அதாவது, குழந்தை தாயின் வயிற்றிலிருந்த போதிருந்த
தனது இயல்பான நிலை குலைக்கப்பட்ட புதிய சூழலினால் விளைவதே பசி
என்பதாகும்! குழந்தைக்கு பசியும் தெரியாது, உணவின் தேவையும் தெரியாது,
விலைவாசி விபரமும் தெரியாது! மாறாக, ஏதோவொன்று தன்னை வருத்து
கின்றது என்பதை மட்டுமே அது உணர்கிறது! பிறகு அது வளரும்போது, பசி,
தாகம், வலி, துன்பம், இழப்பு, கஷ்டம், நஷ்டம் போன்ற அனைத்துடனும்
தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளச் சுற்றியுள்ள நம்மால், சமூகத்தால்
கற்றுத்தரப்படுகிறது! அதன்பிறகு, எவ்வொரு குழந்தையும் தாம் உண்மையில்
எதற்காகப்பிறந்தோம் என்பதை அறிந்துகொள்ளும் வாய்ப்பை முற்றாக இழந்து
விடுகிறது! கோடியில் ஓரிரு குழந்தைகள் மட்டுமே 'வாழ்க்கை'யின் அசலான
குறிக்கோளை அறிந்து அசலான மனிதவாழ்க்கையை வாழ்கிறது!  பிறக்கும்
ஒவ்வொரு குழந்தையும், திசைகளற்ற முனைப்புடனும், வகைப்படுத்தவிய
லாத ஊக்கத்துடனும் தான் பிறக்கிறது! ஆனால், எல்லாக் குழந்தைகளும்
விரைவாகவோ, அல்லது தாமதமாகவோ, நமது கல்வி, மதிப்பீட்டு-அமைப்பு,
மற்றும், வாழ்முறைகளினால் தவறான இலக்குகளை நோக்கி திசைப்படுத்தப்
பட்டு விடுகிறது!

அந்த நரிக்கு அது எட்டாக்கனியாக இருந்தாலும், அது கனிதான் என்பதை
எவ்வாறோ அறிந்திருக்கிறது! ஆகவே தான் அது தாவித்தாவிக் குதித்துப்பார்த்
தது! மேலும், அது வேறு சில தந்திரங்களையும் கையாண்டு பார்த்திருக்கலாம்!
ஆனாலும், அந்தக்கனி அதற்கு எட்டவில்லை! ஆகவே, அது ஒரு தவறான
முடிவிற்கு வந்தது; அதாவது, "சீச்சீ, இந்தப்பழம் புளிக்கும்!" என்று தனக்குத்
தானே சொல்லிக்கொண்டு ஏமாற்றத்துடன் காட்டிற்குள் சென்றுவிட்டது! அது
தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொள்ளும் விதத்தில், "அட, அந்தக்கனி
கிடைக்காவிட்டால் என்ன? தனக்கு எளிதாகக் கிடைக்கும் வேறு பல கனிகள்
உள்ளனவே!" என்று எண்ணிக்கொள்ளலாம்!

"ஞானம்" என்பதும் ஒரு கனிதான்! ஆனால், ஞானக்கனியை அடைவதற்கு
எவ்வொரு தந்திரமும், உபாயமும் இல்லை! மேலும், "பத்தோடு இன்னொன்று,
பதினொன்று!" என ஆசைப்படுவதன் மூலமும் அதை அடையமுடியாது!
மேலும், "ஆஹா, எனக்கு எல்லாம் புரிந்துவிட்டது; நான் அடைந்துவிட்டேன்!"
என்ற பிரமையில் ஆழ்ந்துவிடுவது இன்னும் ஆபத்தானதாகும்! அதேநேரத்தில்,
"நான் என்னால் முடிந்த வரையில் முயற்சி செய்தேன், ஆனால், ஞானம்
கிடைக்கவில்லை!" என்கிற பேச்சு தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளுதலாகும்!
ஏனெனில், ஒருவர் தன்னால் முடிந்தவரை முயற்சிப்பது என்பது போதாது;
எடுத்த காரியம் முடியும்வரை, பூரணமடையும்வரை முயற்சிக்க வேண்டும்!
மேலும், 'முயற்சி' என்ற சொல் இவ்விஷயத்தில் பொருத்தமற்றதாகப்படுகிறது;
வேறு பொருத்தமான சொல் கிடைக்கும்வரை, "முழு-முயற்சி" எனும் சொற்
றொடரை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம்! மேலே குறிப்பிடப்பட்ட எல்லா
மட்டுப்பாடுகளையும் விட மோசமானது எதுவென்றால், "ஞானம்" கிடைக்கா
விட்டால் என்ன, "ஜீவனம்" கிடைத்தால் போதும்!" என்ற நிலையைத் தேர்ந்து
கொள்ளும் அவலம் தானாகும்!

"போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து!" என்பது நூற்றுக்கு நூறு
உண்மையே! ஆனால், பெரும்பாலும் இந்த ஞானமொழியைப் பலரும் தலை
கீழாய்ப் புரிந்து கொள்கிறார்கள்! ஒருவன் தான் வாழ்ந்து கொண்டிருக்கும்
இந்த மட்டுப்பாடான, அர்த்தமற்ற வாழ்க்கையை வாழ்ந்தவரை போதும் என்ற
பக்குவத்திற்கு உயர்ந்து, "அர்த்தம்" பற்றிய சிந்தனையில் ஆழ்ந்து செல்வதற்
குப்பதிலாக, உயர்-பேரறிவு நிலையை எட்டமுடியாவிட்டாலென்ன? தன்னிடம்
இருக்கிற அறிவே போதும் என்ற முடிவிற்கு வருவது, தான் மனிதப்பிறவி
பெற்றதைக் கொச்சைப்படுத்துகிற சுய-அவமதிப்பு ஆகும்! ஒருவன் தன்னிடம்
அதிகம் பணம் இல்லை, பொருள் இல்லை, சொத்து சுகம் இல்லை என்கிற
நிலையில் வாழ்ந்திட முடியும்! இம்மனிதன் பொருளியல்தளத்தில் தன்னிடம்
இருப்பதைக்கொண்டு திருப்தியடைவது என்பது அருமையான விஷயமாகும்!
ஆனால், எம்மனிதனும் அர்த்தமில்லாமல், அதாவது, வாழ்வின் அர்த்தம்
அறியாமல் வாழ்வது கூடாது!

ஒரு மிகப்பெரிய விஷயம், அதாவது, கண்டுபிடிப்பு என்னவென்றால், மனிதர்
களுடைய கிட்டத்தட்ட எல்லா மட்டுப்பாடுகளும் தமக்குத்தாமே தேர்ந்து
கொள்ளும் சுய-மட்டுப்பாடுகளே என்பதுதான்!

உண்மையில், ஞானம் என்பது புறத்தே எங்கோ இருந்து அதிர்ஷ்டவசமாக

ஒருவனுக்குக்கிடைக்கக்கூடிய கனி அல்ல! மாறாக, ஒவ்வொரு மனிதனும்
உண்மையில் ஞானப்பிஞ்சாகத்தான் அதாவது, சிற்றுணர்வுடன் தான் பிறக்கி
றான்; தன்னில், தனது உணர்வில் ஒவ்வொருவனும் முற்றிக் கனிவது
மட்டுமே வேண்டும்!

மனிதன் என்பவன் தனக்குத்தானே ஒரு பரிசுப்பொதியாக அமைந்தவனாவான்!
அரிதாக ஒரு சிலரே தமது பொதியைப் பிரித்து உள்ளே என்ன உள்ளது என்று
காண்பதற்கான பிரயாசத்தை மேற்கொள்கிறார்கள்; அவர்கள் மட்டுமே ஞானப்
பொக்கிஷங்களை அடைகிறார்கள்! பலர் தம்மைப் பிரித்துப்பார்ப்பதே இல்லை!
சிலர் அரைகுறையாகப் பார்த்துவிட்டு, மேலடுக்கிலுள்ள சில திறமைகளைக்
கண்டு, கொண்டு, அவற்றுடன் திருப்தியடைந்து விடுகின்றனர்!

ஆனால், வீடுபேறு வேண்டும் என்று விரும்புபவன் தனக்கான வீட்டை, தான்
உயிர்-வாழும் காலத்திற்குள்ளேயே தானே கட்டியெழுப்பிக்கொள்ள வேண்டும்!
அந்த வீடு வாடகைக்குக் கிடைப்பதில்லை!

தமிழ்ச்சித்தர்கள் மனித வாழ்வை அறம், பொருள், இன்பம், வீடு என்று பகுத்
துப்பிரித்துப் புரிந்துகொண்டவர்களாவர்! பகுத்துப்பார்த்துப் புரிந்துகொண்டதால்
அவர்களைப் பகுத்தறிவாளர்கள் எனச் சுருக்கிவிடமுடியாது! மாறாக, பகுத்துப்
பார்த்ததுடன் நில்லாமல் யாவற்றையும் அவர்கள் மிகச்சிறப்பாகத் தொகுத்தும்
புரிந்துகொண்ட பேரறிவாளர்களாவர்! ஆனால்,நாமோ, அறம், பொருள், இன்பம்,
வீடு எனப்படும் நான்கில் முதலாவதான "அறம்" எனும் அம்சத்தையும், முடி
வான "வீடு" எனும் அம்சத்தையும் தவிர்த்துவிட்டு, பொருளையும், இன்பத்தை
யும் மட்டுமே அடைய விழைகிறோம்; அவற்றை அடைந்தும் நிறைவுறாமல்
அல்லலுறுகிறோம்! காரணம், நாம் அறத்தைக் கடைபிடிக்கத் தவறிவிட்டோம்!
அறம் என்பது வெறும் ஒழுக்க நெறிமுறைகள் மட்டுமல்ல! அறம் எனப்படு
வது விழிப்பையும், ஞானத்தையும், வாழ்க்கைக்குத் தன்னைத்தகுதியாக்கிக்
கொள்ளுதலையும் குறிப்பதாகும்!

"அறம், பொருள், இன்பம், வீடு" என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்படாதவன்,
வாசித்தறியாதவன் வாழும்வழி தேடாத சாமானியன்! தனது சொந்த சிந்தனை
யின் மூலம் அவற்றை நேரே கண்டறியாதவன் தன் நோக்கத்தை இழந்து
விட்ட சிந்தனைச்சோம்பேறி! "அறம், பொருள், இன்பம், வீடு" என்று சொல்லப்
பட்டதைக் கேள்விப்பட்டும், வாசித்தறிந்தும், அவற்றைத் தம் வாழ்வில் கடை
பிடிக்காதவன் மூடன்! கண்களிருந்தும் குருடன்! உணர்விருந்தும் உணர்வற்ற
பிராணியே அவன்!

"ஞானம் எனக்குச் சாத்தியமில்லை!" ஆகவே, "சீவனம்" எனக்குப்போதும்!" என
ஒருவன் தெரிவு செய்வானெனில், அவன் தான் பெற்ற மனிதப்பிறப்பை தனது
மதியீனத்தினால் துறந்துவிடும், தன்னைத்தானே அவமதிப்பு செய்துகொள்ளும்
செயலைச் செய்பவனாகிறான்! "ஞானம்" என்பது எட்டாக்கனியான விஷயமாக
இருக்குமானால், மனித இனம் முதலிடத்தில் தோன்றியிருக்காது!


மா.கணேசன் / நெய்வேலி / 25-10-2017
----------------------------------------------------------------------------

Tuesday, 19 September 2017

மானுட-மையப்பார்வை




    மனிதன் என்பவன் தன்னை நிலைநாட்டுவதற்காகத் தோன்றியவனல்ல;
    மாறாக,  தன் வழியே மெய்ம்மையை நிலை நாட்டுவதற்காகத்
    தோன்றியவனாவான்!

சில சிந்தனையாளர்களும், தத்துவவாதிகளும், விஞ்ஞானிகளும், சுற்றுச்சூழல்
நேசர்களும் அனைத்து உயிரினங்களும் சமமான மதிப்புடையவை என்று
முழங்குகின்றனர். அதாவது, ஒரு புழுவும், ஒரு மனிதக் குரங்கும் சமமான
மதிப்புடையவை என்கின்றனர்! இன்னும் ஒரு புழுவும் மனிதனும் சமமான
மதிப்புடையவையே என்கின்றனர்! அதாவது, மனிதனுக்கு அதிகம் முக்கியத்
துவம் அளிப்பதையும், பிரபஞ்சத்தின் மையமான அம்சமாக மனிதனைக்
காண்பதையும் இச்சிந்தனையாளர்கள் சாடுகிறார்கள்! இவ்வாறு, மனிதனை
மையமாகக்கொண்டு உலகையும், அனைத்தையும் காணும் பார்வை, "மானுட
மையப்பார்வை" (Anthropocentric View) எனப்படுகிறது!

உயிருள்ள ஜீவிகள் என்கிற அடிப்படையில் காணும்போது, புழு-பூச்சிகள்,
ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள், எலிகள், தவளைகள், ஆடு-மாடுகள், மனிதக்
குரங்குகள், மற்றும் மனிதர்கள் யாவரும் சமமே எனலாம். ஆனால், மனிதன்
என்பவன் வெறுமனே ஒரு உயிருள்ள ஜீவி மாத்திரமல்ல! பிரதானமாக
அவன் ஒரு "சுய-உணர்வு" கொண்ட ஜீவியாவான்! "சுய-உணர்வு" என்பது
வேறு எவ்வொரு உயிர்-ஜீவியிடமும் இல்லாத ஒரு பிரத்யேக அம்சம் ஆகும்!
அதாவது, "தாம் இருக்கிறோம்!" என்பதை மனிதனைப்போல வேறு எவ்வொரு
ஜீவியும் உணர்வதில்லை! இன்னும் சொல்லப்போனால், எல்லா மனிதர்களும்
தமது இருப்பை அவ்வளவு நேரடியாகவும், தெளிவாகவும் உணர்வதில்லை
எனலாம்!

உண்மையில், பார்வை, எண்ணம், சிந்தனை, நோக்கம், சித்தம், கருத்து,
அறிவு, தன்மதிப்பு ஆகியவை மனிதஜீவிகளுக்கு மட்டுமே உரிய பிரத்யேக
அம்சங்களாகும்! ஆக, "மானுட-மையப்பார்வை" என்பது தவறானதோ, 'தீட்டு"
(Taboo)போன்ற விஷயமோ அல்ல! மாறாக, மிகவும் அவசியமான, தேவை
யான, தவிர்க்க இயலாத ஒன்றாகும்!

எலிக்கு எலிதான் அனைத்தின் அளவீடு! மேலும், எலியே இப்பிரபஞ்சத்தின்
மையம் ஆகும்; அதை நாம் "எலி-மைய விதி" (The Ratropic Principle)
என்று குறிப்பிடலாம்! தவளைக்கு, தவளைதான் இப்பிரபஞ்சத்தின் மையம்
ஆகும்! எலியோ, தவளையோ, மனிதனோ, ஒவ்வொரு ஜீவியும் தனக்காகத்
தான் இருக்கிறது, வாழ்கிறது! எலியோ, தவளையோ, அல்லது மனிதனோ
எவ்வொரு ஜீவியும் இருவித வாழ்க்கையை, பாத்திரத்தைக் கொண்டுள்ளது!
அதாவது, எவ்வொரு ஜீவியும் தமக்காகவே வாழ்கிறது; அதே நேரத்தில்,
அவ்வாறு தமக்காக வாழும் நிலையிலேயே ஒவ்வொரு ஜீவியும் அதனுடைய
வளர்ச்சி நிலைக்குரிய பரிணாமக் கடமையையும் தம்மையறியாமலேயே
நிறைவேற்றுவதாய் செயல்படுகிறது!

முதல் உயிரி தோன்றும்வரை, இப்பிரபஞ்சம் பல நூறு கோடியாண்டுகளாக
மையமற்றதாகத்தான் சுழன்று வந்தது! பிறகு, முதல் உயிரியான அமீபா
தோன்றியபோதுதான் முதல்முதலாக இப்பிரபஞ்சத்திற்கு "மையம்" என்ற
ஒன்று உருவானது! ஆனால், அந்த அமீபாவானது அவ்வளவு பூரணமான,
பொருத்தமான மையமாக அமையவில்லை! ஆகவேதான், அமீபாவைக்கடந்த
வெவ்வேறு உயிர்-ஜீவிகள் அமீபாவிலிருந்து கிளைத்தெழுந்தன! ஆனால்,
எவ்வொரு ஜீவியும் இப்பிரபஞ்சத்தையும், அதன் உள்ளார்ந்த விழைவையும்
பூரணமாகப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையிலான ஒரு மையமாக
உருவாகவில்லை! பிறகு, (உயிரியல் பரிணாமத்தின் இறுதியாக), மனிதன்
என்பவன் தோன்றினான்!

'அமீபா', அல்லது முதல் ஒரு-ஸெல் உயிரி என்பது உண்மையில் என்ன? இப்
பிரபஞ்சம் என்பது நுண்ணிய அணுத்துகள்களால் அமைந்த மாபெரும் ஒரு
அமைப்பாகும்! அதிலுள்ள ஒவ்வொரு பொருளும் ஒரு அமைப்பே ஆகும்! ஒரு
கிரகம், அல்லது ஒரு நட்சத்திரம் (சூரியன்), ஒரு கேலக்ஸி (உடுமண்டலம்)
எனப்படும் ஒவ்வொன்றும் ஒரு அமைப்பு தான்! ஆனால், எல்லா அமைப்பு
களும் ஒரே தரத்திலானவையல்ல! ஒரு 'அமீபா' என்பதும் அணுத்துகள்களால்
ஆனதுதான்! ஆனால், 'அமீபா' என்பது, ஒரு கிரகம், அல்லது ஒரு சூரியனைப்
போன்ற வெறும் ஒரு பௌதீக-அமைப்பு அல்ல; மாறாக, ஒரு அமீபா என்பது
"உயிர்" பெற்ற ஒரு விசேட பௌதீக அமைப்பு ஆகும்! ஏனெனில், ஒரு அமீபா
வானது, பிற பௌதீக அமைப்புகளை (பொருட்களை)ப் போல புறத்தேயிருந்து
இயக்கப்படும், செலுத்தப்படும் ஒன்றல்ல! அமீபாவின் மீது சுற்றுச்சூழலின்,
புறவுலகின் தாக்கம் உள்ளது எனினும், ஒரு அமீபாவானது தனது உள்ளார்ந்த
சொந்தத் தேவைகளாலும் (இயல்பூக்கிகளாலும்), பரிணாம விதிகளாலும்
மட்டுமே இயக்கப்படுகிறது!

ஒரு அமீபாவிற்கு, பெரிதாக சுய-உணர்வு என்பது இல்லாவிட்டாலும், சுதந்திர
சித்தம் இல்லாவிட்டாலும் அதனளவில் அது ஒரு தனிஜீவி ஆகும்; அதாவது,
அது ஒரு தனி உலகம் (இப்பிரபஞ்சத்தினுள்ளே இயங்கும் இன்னொரு
பிரபஞ்சம் போன்றது) ஆகும்! அதாவது, ஒரு அமீபா என்பது தன்னை மைய
மாகக் கொண்டியங்கும் ஒரு உயிர்ஜீவி யாகும்! எவ்வொரு உயிர்ஜீவியும்
அத்தகையதே! ஆனால், ஒரு அமீபாவைப்போல ஒரு கூழாங்கல்லானது
தன்னில் ஒரு மையத்தைச் சுற்றி அமைந்த ஒன்றல்ல! அதாவது, கூழாங்கல்
லுக்கு உள்ளமைந்த மையம் என்பதில்லை! அதாவது, ஒரு கூழாங்கல்லை
வழிநடத்திச்செல்லக்கூடிய "அகம்" அல்லது "மனம்" என்பதில்லை! இவ்வாறே
எவ்வொரு சடப்பொருளுக்கும் மையம், அகம், மனம் என்பதில்லை!

அதேநேரத்தில், ஒரு அமீபாவைவிட ஒரு மனிதனின் மையம், அல்லது அகம்,
அல்லது மனம் என்பது பெரிதும் வளர்ச்சியடைந்த நிலையை எட்டியுள்ளது;
அதாவது, ஒரு மனிதனின் மையம் என்பது உணர்வுள்ளதாக, தனிச்சிறப்பு
வாய்ந்த ஒன்றாக உள்ளது! ஆகவேதான் மனிதன் என்பவன் அமீபாவைவிட,
இன்னும் வேறு எவ்வொரு உயிர்ஜீவியையும் விடவும் மேலானவனாகவும்,
முக்கியத்துவம் வாய்ந்தவனாகவும் உள்ளான்! அதே நேரத்தில், பெரும்பாலான
மனிதர்கள் தம்மை, அதாவது, தம் மையத்தில் தாம் எத்தகைய மெய்ம்மை
யாக இருக்கிறோம் என்பதை உணராதிருப்பதால், அவர்கள் இன்னும் அமீபாக்
களைப்போல உணர்வற்றவர்களாக வாழ்ந்துசெல்பவர்களாகவே உள்ளனர்!

தொடர்ந்து நாம் மேலே செல்வதற்கு முன், பரிணாம வழிமுறை பற்றியும்,
பரிணாமத்திற்கும், "சுய-அமைப்பாக்கம்" (Self-Organization) என்பதற்கு
மான தொடர்பு பற்றியும் புரிந்துகொள்வது அவசியமாகும்! ஆம், இப்பிரபஞ்சம்
ஒரு பெரு-வெடிப்பில் (Big Bang)தொடங்கிய கணத்திலிருந்தே "சுய-அமைப்
பாக்கம்" எனும் வழிமுறையும் தொடங்கிவிட்டது! "சுய-அமைப்பாக்கம்" என்பது
பரிணாமத்தின் பிரதான கருவியும், வழிமுறையுமாகும்! அணுத்துகள்கள் தான்
இப்பிரபஞ்சத்தின் அடிப்படைக் கட்டுமானப்பொருள் ஆகும்!

அணுத்துகள்கள் தாமே ஒன்றோடொன்று இணைந்து பல்வேறு அமைப்புகளில்
அமைந்து, அவ்வமைப்புகளின் நுட்பச்செறிவுக்கேற்ப (Complexity)பல்வேறு
பண்புகளைக் கொண்ட பொருட்கள் உருவாகின்றன! அணுத்துகள்கள் சுயமாக,
தாமே ஒன்றோடொன்று இணைவதையே  "சுய-அமைப்பாக்கம்" என்கிறோம்.
இவ்வாறு இணைவது இயல்பானது, இயற்கையானது, எதேச்சையானது,
விபத்துபோன்றது, அல்லது சந்தர்ப்பவசமானது என்றெல்லாம் காண இடமுள்
ளது! ஆனால், இவ்வாறு தோற்றமளிக்கும் வழிமுறையின் பின்னால் விதி
களும் (Laws),நோக்கமும், திட்டமும், இலக்கும் உள்ளன! அதாவது, அணுத்
துகள்கள் எவ்வெவ்வாறெல்லாம் இணைந்தால், எவ்வெவ்வாறான விளைவு
கள், விளைபொருட்கள், அம்சங்கள், பண்புகள் எல்லாம் உருவாகும் என்பது
தொலை நோக்குடன் ஊகிக்கப்பட்டே நிகழ்கின்றன! அதே நேரத்தில், அவ்வழி
முறையில், பரீட்சார்த்தம் அல்லது, பரிசோதனை அணுகுமுறையும்; அதாவது
தொடர்ந்து தவறுகளை உணர்ந்து களைந்து திருத்தியமைத்து முன்னேறிச்
செல்லும் (Trial and Error)பாங்கும் அதில் இணைந்துள்ளது!

உதாரணத்திற்கு, ஹைட்ரஜன் அணுக்களும், ஆக்ஸிஜன் அணுக்களும் ஒரு
குறிப்பிட்ட விகிதத்தில் இணைந்தால் தண்ணீர் எனும் திரவப்பொருள் வெளிப்
படும் என்பதும், அந்த தண்ணீர் எவ்வாறெல்லாம், எதற்கெல்லாம் பயன்படக்
கூடும் என்பதும் முன்-ஊகிக்கப்படுகிறது! இவ்வாறெல்லாம் "யார்", அல்லது,
எந்த "சக்தி", அல்லது, எத்தகைய "உணர்வு" முன்-ஊகிக்கிறது, திட்டமிடுகிறது
என்பதைக் கண்டுபிடிப்பது தான் மனிதஜீவிகளுக்கான "வாழ்க்கைச் சவால்"
மற்றும் வாழ்க்கையின் இலக்கும் ஆகும்!

சில விஞ்ஞானிகளும், தத்துவவாதிகளும், இயற்கைவாதிகளும், உள்ளது இந்த
இயற்கையுலகம் மட்டும்தான் என்பதாக மிகத்திடமாக நம்புகின்றனர்.குறிப்பாக,
தத்துவவாதி பால் டிரேப்பர் (Paul Draper),"இயற்கை என்பது ஒரு மூடிய
அமைப்பு, அதில்,இயற்கையுலகின் பகுதியாக இல்லாத எதுவும் இவ்வுலகைப்
பாதிக்கமுடியாது, (இவ்வுலகின் மீது செயல்படமுடியாது)" என்கிறார். அதாவது
இக்கூற்று,  இயற்கை நிகழ்வுகளுக்கு இயற்கையை மீறிய காரணங்கள் இருக்
கக்கூடும் என்பதை மறுக்கிறது! இத்தகைய 'பார்வையை' நாம் "உலக-மையப்
பார்வை" (World-centric)என்றழைக்கலாம்! அதாவது, இயற்கை, அல்லது
உலகமே பிரதானம்; பிரும்மாண்டமான இவ்வுலகில், மனிதன் என்பவன் ஒரு
தூசு, அவனது இருப்பு ஒரு விபத்து! ஆகவே, மனிதன் என்பவன் இப்பிரபஞ்சத்
தின் மையமுமல்ல, அவனுக்கு பெரிதாக யாதொரு முக்கியத்துவமும் கிடை
யாது என்பதே இப்பார்வையின் முடிவான புரிதல் ஆகும்!

ஆனால், உலகை மையமாகக் கொண்ட இப்பார்வையை ஒரு முறையான,
முழுமையான பார்வை என்று நாம் கொள்ளமுடியாது! பொதுவாக, சிந்தனை
உலகில் "உலகப்பார்வை" (World view)என்று ஒரு துல்லியமற்ற, குழப்பம்
மிகுந்த கோட்பாடு ஒன்று நிலவுகிறது! அதாவது, மனிதவாழ்வு, உலகம் என
அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான பார்வையை, வாழ்க்கைத்
தத்துவத்தைக் குறிக்கும் வகையிலான் ஒரு கோட்பாட்டை "உலகப்பார்வை"
என்ற சொற்-சேர்க்கையைக்கொண்டு குறிப்பிடுவது சற்றும் பொருத்தமற்றது
ஆகும்! நாம் வாழும் இந்த உலகைப் புரிந்துகொள்வதும், உலகைப் பற்றிய
அறிவும் அவசியமே; ஏனெனில், மனிதனின் வாழ்வில் இவ்வுலகமும் இடம்
பெறுகிறது என்பது மட்டுமல்லாமல், பங்குபெறவும் செய்கிறது! இன்னும்
மனிதன் தோன்றுவதற்கு முன்பிருந்தே இப்பிரபஞ்சமானது பல நூறு கோடி
ஆண்டுகளாக தயாராகி வந்துள்ளது! இன்னொரு வகையிலும் உலகைப்புரிந்து
கொள்வது மிகவும் முக்கியமாகும்! அதாவது, நாம் இவ்வுலகை, பிரபஞ்சத்தை
முறையாகவும், முழுமையாகவும் புரிந்து கொள்ளாவிடில் தேவையில்லாமல்,
அது துருத்திக்கொண்டும், நமது கவனத்தை சிதறடித்துக்கொண்டும் இருக்கும்!

ஆக, உலகைப் பற்றிய பார்வையை நாம் "உலகப்பார்வை" என்றழைப்பதில்
எவ்விதத் தடையும் இருக்கமுடியாது! ஆனால், அனைத்தையும் உள்ளடக்கிய
மனிதவாழ்க்கை பற்றிய பார்வையை நாம் ""உலகப்பார்வை" என்றழைப்பது
பொருத்தமற்றது, ஆகவே தவறானது! மாறாக, வாழ்க்கை பற்றிய பார்வையை
நாம் நேரடியாக "வாழ்க்கைப் பார்வை" (Life View)என்றே அழைக்கலாமே;
அதுதானே முறையாகவும் பொருத்தமாகவும் இருக்க முடியும்! அதாவது இவ்
வாறான குழப்பங்களுக்குக் காரணம் எதை மையமாகக்கொண்டு மனிதர்கள்
தம்முடைய பார்வையைக் கட்டமைப்பது என்பது குறித்த தெளிவின்மையே
ஆகும்! அப்படியானால், இக்குழப்பத்தை எவ்வாறு களைவது?

ஒருவகையில், உலகம் எனும் மாபெரும் வீட்டினுள்தான் நாம் வாழ்கிறோம்!
அதாவது, உலகம் என்பது மிகவும் அடிப்படையான ஒரு அம்சமே! ஆனால்,
வீடு என்பது மனிதனுக்காக இருக்கிறதேதவிர, வீட்டிற்காக மனிதன் இல்லை
என்பதை நாம் புரிந்து கொள்வது முக்கியம்! ஒரு அழகிய சிற்பத்தை வைக்க
பொருத்தமானதொரு பீடம், அல்லது மேடை அவசியமே; அதற்காக, பீடத்தை
பிரதானப்படுத்தி சிற்பத்தை சிறுமைப்படுத்தமுடியாதல்லவா? ஆக, நாம் நமது
வாழ்க்கைப் பார்வையைக் கட்டமைக்க உலகை மையமாகக் கொள்ளலாகாது!
பிறகு எதை மையமாகக் கொள்வது? மிக எளிய தர்க்கம் என்னவென்றால்,
வாழ்க்கைப்பார்வைக்கு "வாழ்க்கை" தான் மையமாக இருக்கமுடியும்! ஆனால்,
வாழ்க்கையை வாழ்வது யார்? அதாவது, வாழ்க்கையின் மையம் எது,அல்லது
யார் என்ற கேள்விக்கான பதில் மனிதன் என்பதேயாதலால், மனிதன் தான்
வாழ்க்கைப் பார்வையின் மையமாக அமையவேண்டும்! உலகம், பிரபஞ்சம்
என்பது வாழ்க்கையை செயல்படுத்துவதற்கான ஒரு களம் மாத்திரமே!

ஆனால், 'மனிதன்' என்றால் என்ன? அவன் எத்தகைய மெய்ம்மை? அதாவது
மனிதனின் மையம் எது? ஆம், உணர்வு (Consciousness)தான் மனிதனின்
மையம் மற்றும் சாரம் ஆகும்! மேலும் துல்லியமாகச் சொன்னால், உணர்வு
தான் மனிதன்! உண்மையில், மனிதனுக்கு உணர்வு என்பது இல்லையேல்,
அவனும் ஒரு எலி, அல்லது தவளையைப் போலவே இருப்பான்; யாதொரு
பார்வையும், அறிதலும், புரிதலும் இருக்காது! ஆகவே, அனைத்துவகைப்பட்ட
பார்வைகளும், அவை சரியாக இருந்தாலும், அல்லது, தவறாக இருந்தாலும்
உணர்வு-மையப் பார்வைகளே எனலாம்!

தத்துவவாதிகள், சிந்தனையாளர்களைப்பொறுத்தவரை, எது இறுதி மெய்ம்மை
என்பதைக் கண்டுபிடிப்பதற்கு முன்னேயே, முன் முடிவாக, சிலர் இயற்கை,
அல்லது, உலகையும்; சிலர் இறையையும் பிரதானப்படுத்தும் போக்கைத்
தேர்வு செய்துகொண்டுவிடுகின்றனர்! இத்தகைய தவறுக்குக்காரணம் அவர்கள்
எது முதல் (மூலம்) என்பதை ஊகித்து அதிலிருந்து தங்களது சிந்தனையை,
பார்வையை கட்டமைப்பதே ஆகும்! இதற்குக்காரணம், அவர்கள் உலகை ஒரு
மாபெரும் அமைப்பாக மட்டுமே காண்கின்றனர் என்பதுதான்! ஆனால், உலகம்
என்பது ஒரு மாபெரும் அமைப்பு மட்டுமல்ல; அது ஓர் மாபெரும் இயக்கமும்
கூட என்பதை அவர்களால் காண இயலவில்லை! உலகை ஒரு அமைப்பாகக்
காண்பதால், "உலகம் எவ்வாறு தோன்றியது?" என்ற கேள்வி முதலும் முடிவு
மான கேள்வியாகி விடுகின்றது! அதாவது, மூலத்தை முடிவு செய்துவிட்டால்
எல்லாம் முடிந்து விடுகிறது! ஏனென்றால், "படைப்பு" எனும் அமைப்பு, இவ்
வுலகம் நம் கண் முன்னே இருக்கிறது; அதன் ஏதோவொரு பகுதியாக நாம்
இருக்கிறோம் என்பதுடன் நம் ஆய்வு முடிவிற்கு வந்துவிடுகிறது!

ஒரு சாரார், அதாவது, இயற்கைவாதிகள். பகுத்தறிவுவாதிகள், பொருள்-முதல்
வாதிகள், மற்றும் விஞ்ஞானிகள் ஆகியோர், இவ்வுலகம் எப்போதும் இருந்து
வந்துள்ளது, இன்றும் இருக்கிறது, நாளையும், என்றென்றைக்கும் இருக்கும்;
அது இயற்கையாகத் தோன்றியது; இயற்கையைத்தவிர, இயற்கையை மீறிய
வேறு சக்தி எதுவும், எவரும் இல்லை என்பதாகக் கருதுகின்றனர்! இவர்களது
பார்வையை நாம், "இயற்கை அல்லது உலக-மையப்பார்வை" என்று அழைக்
கலாம்! இவர்களைப்பொறுத்தவரை, இயற்கை, அல்லது உலகமே பிரதானம்!

இன்னொரு சாரார், அதாவது, சமயவாதிகள், கருத்து-முதல்வாதிகள், மற்றும்
பாமரர்கள் இவ்வுலகம் ஒரு படைப்பு, அது இறைவனால் படைக்கப்பட்டது;
கடவுள் உலகைப்படைத்து அதில் உயிரினங்களையும் மனிதஜீவிகளையும்
படைத்து காத்துவருகிறார் என்பதாக இவர்கள் கருதுகின்றனர்! இவர்களது
பார்வையை நாம், "இறை- மையப்பார்வை" என்றழைக்கலாம்! இவர்களைப்
பொறுத்தவரை, இறை அல்லது கடவுளே பிரதானம்!

பொதுவாக, சாதாரணர்கள், பாமரர்கள், பண்டிதர்கள், படித்தவர்கள், படிக்காத
வர்கள் என்ற வித்தியாசமின்றி, பெரும்பாலானவர்களுக்கு யாதொரு உலகப்
பார்வையும் கிடையாது, குறிப்பாக, யாதொரு "வாழ்க்கைப்பார்வை" யும் கிடை
யாது! இவர்களில் பலருக்கு சுயமான சிந்தனை, பார்வை ஏதுமில்லை என்றா
லும், ஏதாவதொரு தத்துவப்பள்ளி, அல்லது, சிந்தனைப்பள்ளியின் அரைகுறை
யான பார்வையைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றும் போக்கை கொண்டு
விடுகின்றனர்!

இத்தகைய 'உலகப்பார்வைகள்', அதாவது, மூலத்தை ஊகித்து, முடிவு செய்து
கொண்டு, அதை மையமாகக்கொண்டு கட்டமைக்கப்படும் அரைப் - பார்வை
களுக்கு மாறாக, அதாவது, உலகை ஒரு அமைப்பாக மட்டும் கொள்ளாமல்,
அது ஒரு இயக்கம் என்பதையும் கணக்கில் கொண்டு, அவ்வியக்கம் எங்கு
முடிகிறது, அதன் நோக்கம், குறிக்கோள், இலக்கு ஆகியவற்றையெல்லாம்
அறிவதன் வழியாக ஒரு முழுமையான பார்வையை நாம் பெற முடியும்!

ஏற்கனவே நாம் இங்கு குறிப்பிட்டபடி, உணர்வு இல்லையேல் எவ்வொரு
சிந்தனையும், பார்வையும் சாத்தியமில்லை! இவ்வகையில், எல்லாவகைப்
பார்வைகளுமே உணர்வு-மையப்பார்வைகள் தான் எனலாம்! அதே நேரத்தில்,
உணர்வு-மையப் பார்வைகளும் பிரதானமாக இருவகைப்பட்டவைகளாக
அமைகின்றன என்பதையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டியது முக்கியம்!
ஏனெனில், மனித-உணர்வு என்பது உணர்வின் இறுதிச்சொல் அல்ல; மேலும்
மனிதர்களின் உணர்வும் ஒரேபடித்தானதல்ல, அதாவது, உணர்வு வளர்ச்சிக்கு
ஏற்ப மனிதர்கள் வெவ்வேறு உணர்வு நிலைகளில் உள்ளனர்! மனிதர்களின்
உணர்வு வளர்ச்சிக்கேற்ப அவர்களுடைய சிந்தனையும், பார்வையும் வேறுபடு
கின்றன! அவையாவன :

1. சிற்றுணர்வு (அல்லது அகந்தை) - மையப்பார்வை = அகந்தையே பிரதானம்.
   (உ-ம்) : சராசரி மனிதர்கள், உணர்வு-வளர்ச்சி குன்றியவர்கள், அதாவது
   'அகந்தை' எனும் தொடக்க நிலை உணர்வில் தேங்கிப்போனவர்கள், "தாம்
   கண்டதே காட்சி, தாம் கருதியதே தத்துவம்" எனக்கொள்பவர்கள். அதாவது,
   விஞ்ஞானவாதம், பொருள்முதல்வாதம், பகுத்தறிவுவாதம், இயற்கைவாதம்;
   அதாவது, மனிதனை இயற்கை, அல்லது, உலகின் முக்கியத்துவமற்ற ஒரு
   பகுதியாகக்கருதும் அனைத்துப்பார்வைகளும், தத்துவங்களும் இந்த        

   "சிற்றுணர்வு-மையப்பார்வை" யைச் சேர்ந்தவையே!

2. பேருணர்வு, அல்லது மெய்ம்மை-மையப்பார்வை = இறுதி - உணர்வே
   பிரதானம்! அதாவது, பேருணர்வே ஆதியும், அந்தமும்!
   (உ-ம்) : புத்தர்கள், சித்தர்கள், ஞானிகள், ஆகியோர்.

இவ்விரு நிலைகளுக்கும் இடையே சில இடைநிலைகளும், பார்வைகளும்
உள்ளனவென்றாலும், அவையும் வளர்ந்து கடக்கப்பட வேண்டியவையே என்
பதால் அவை இங்கு விவரிக்கப்படவில்லை! அதாவது, மனிதஉணர்வு என்பது
மேன்மேலும் பரிணமிக்கக்கூடியதொரு அம்சமாகும்! மனிதர்கள் ஒரு இறுதி
யான உயர்-உணர்வு நிலையை அடையும் வரை அவர்களது பார்வையும்,
புரிதலும் மட்டுப்பாடானதாகவே இருக்கும்! ஆனால், வெகுசொற்பமான சிலரே
தமது அகந்தை உணர்வையைக் கடந்து வளர்ந்து உணர்வின் உச்சத்தை எட்டு
கின்றனர்! இந்நிலையில்,எது முழுமையான சரியான பார்வை என்பது குறித்து
கருத்தொற்றுமை ஏற்படுவது சாத்தியமில்லை! ஒருவகையில் அத்தகைய
கருத்தொற்றுமை தேவையுமில்லை! ஏனெனில், உணர்வின் உச்சத்தைத்
தொடும் ஒவ்வொரு மனிதனும், எது உண்மை என்பதை தனக்குத் தானே சுய-
சாட்சியாக நேரடியாக அறிந்துகொள்வான்!

முடிவாக, நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், மனிதஜீவி
களாகிய நமக்கு அணுகுவதற்கு எளிதாகவும், முறையாகவும் கிடைத்துள்ள
ஒரே பார்வை "மானுட-மையப்பார்வை" (Anthropocentric View)மட்டுமே
யாகும்! அதிலும், ஒவ்வொரு மனிதனும் தன்னில் ஒரு பார்வை மையமாக
(Center of Perception) எழ வேண்டியது அவசியமாகும்! ஏனெனில்,
ஒருவன் இன்னொருவனின் கண்கள் வழியாகப் பார்ப்பது இயலாது! இயற்கை,
உலகம், பிரபஞ்சம் என்பது பார்வையற்றது; அது மனிதனின் கண்களைக்
கொண்டுதான் தன்னைப்பார்க்கிறது, அறிகிறது! இவ்வகையில், மனிதன் இப்
பிரபஞ்சத்திலிருந்து வேறானவனல்ல! ஆனால், இத்தகைய புரிதலைப் பெற
வேண்டின் ஒவ்வொரு மனிதனும் தனது மனத்திற்கு (உணர்வுக்கு) விழித்தாக
வேண்டும்!

முடிவாக, நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், மனிதஜீவி
களாகிய நமக்கு அணுகுவதற்கு எளிதாகவும், முறையாகவும் கிடைத்துள்ள
ஒரே பார்வை "மானுட-மையப்பார்வை" (Anthropocentric View)மட்டுமே
யாகும்! அதிலும், ஒவ்வொரு மனிதனும் தன்னில் ஒரு பார்வை மையமாக
(Center of Perception) எழ வேண்டியது அவசியமாகும்! ஏனெனில்,
ஒருவன் இன்னொருவனின் கண்கள் வழியாகப் பார்ப்பது இயலாது! இயற்கை,
உலகம், பிரபஞ்சம் என்பது பார்வையற்றது; அது மனிதனின் கண்களைக்
கொண்டுதான் தன்னைப்பார்க்கிறது, அறிகிறது! இவ்வகையில், மனிதன் இப்
பிரபஞ்சத்திலிருந்து வேறானவனல்ல! ஆனால், இத்தகைய புரிதலைப் பெற
வேண்டின் ஒவ்வொரு மனிதனும் தனது மனத்திற்கு (உணர்வுக்கு) விழித்தாக
வேண்டும்!

கோப்பர் நிக்கஸின் புரட்சியானது, உண்மையில் டாலமியின் பூமி-மையப்
பார்வையைத்தான் அகற்றியது; அகற்றி அவ்விடத்தில் சூரிய-மையப்பார்வை
யை இட்டுநிரப்பியது! ஆனால் அதனால், மானுட-மையப்பார்வையை ஒன்றும்
செய்ய இயலவில்லை! கோப்பர் நிக்கஸ் மட்டுமல்ல, அவருக்குப் பிறகு வந்த
கலிலியோ, நியூட்டன், இன்னும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்- உடைய சார்பியல்
புரட்சியினாலும் மானுட- மையப்பார்வையை ஒன்றும் செய்ய இயலவில்லை!
ஐன்ஸ்டீன் மறைந்து ஒரு நூற்றாண்டு ஆகியும் இன்னும் உலகம் ஆல்பர்ட்
ஐன்ஸ்டீனின் புகழ் பாடிக்கொண்டிருக்கிறது! ஐன்ஸ்டீனிய சார்பியல்புரட்சியை
வேறு எவரேனும் வந்து முறியடிக்கும் பட்சத்தில் அவருடைய புகழை இவ்
வுலகம் பாடிக்கொண்டிருக்கும்! டாலமியாகட்டும், அல்லது, கோப்பர் நிக்கஸ்,
கலிலியோ, நியூட்டன், இன்னும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆகட்டும், பார்வைகள்
மாறலாம், கோட்பாடுகள் மாறலாம்; ஆனால், "பார்வை" என்பது எப்போதும்
"மானுட-மையப்பார்வை" யாக மட்டுமே தொடரும்!

பூமி இப்பிரபஞ்சத்தின் மையமாக இல்லாவிட்டால் என்ன, அது மனிதனின்
மையத்துவத்தை ஒருபோதும் அசைக்கவோ, மாற்றவோ முடியாது! ஏனெனில்,
ஒரு மரத்தில் பிஞ்சுகள், காய்கள் எந்தக்கிளையில் காய்த்தால் என்ன? அவை
மரத்தின் மையத்தில் தான் காய்க்கவேண்டும் என்பதில்லையே! அவை ஒரு
மரத்தின் நுனிக்கிளையில் காய்த்தாலும், ஒவ்வொரு பிஞ்சும், காயும் தான்
அம்மரத்தின் மையமும், இலக்கும், முழுமையும் ஆகும்! அதே வேளையில்,
ஒவ்வொரு பிஞ்சின், காயின் முக்கியத்துவம்,முழுமை என்பது, அது மரத்தின்
மையத்தில் தோன்றுகிறதா, அல்லது ஓரத்தில் தோன்றுகிறதா என்பதில்
அடங்கியிருக்கவில்லை; மாறாக, அது நன்கு முற்றிக் "கனி" யாக ஆகிறதா,
இல்லையா என்பதிலேயே அடங்கியிருக்கிறது! இவ்வாறே, பிரபஞ்ச விருட்சத்
தின் பிஞ்சுகளும், காய்களுமான மனிதஜீவிகள் ஒவ்வொருவரும் தம் உணர்
வில் முற்றிக் கனிவதிலேயே (அதாவது, உணர்வின் உச்ச நிலையை அடைவ
திலேயே) ஒவ்வொரு மனிதனின் முழுமையும், உய்வும் அடங்கியுள்ளது!
ஒவ்வொரு மனிதனும் அடையக்கூடிய முழுமையில் தான் இப்பிரபஞ்சத்தின்
முழுமையும், உய்வும் அடங்கியுள்ளது!

இப்பிரபஞ்சம் ஒரு மாபெரும் அமைப்பு மட்டுமல்ல, அது ஒரு மாபெரும்
பரிணாம இயக்கம் என்றோம்! "சுய-அமைப்பாக்கம்" என்பதே அதன் பிரதான
வழிமுறை யாகும்! "சுய-அமைப்பாக்கம்" என்பது வெறுமனே அணுத்துகள்கள்
ஒன்றோடொன்று இணைந்து பல்வேறு அமைப்புகளாக உருவாவது மட்டும்
அல்ல! மாறாக, பண்புரீதியான மாற்றங்களைப் பெற்று மேன்மேலும் உயர்
நிலைகளை எட்டுவதும், முடிவில் பூரணமான தொரு மெய்ம்மையாக உரு
வெடுப்பதே அதன் இலக்கு ஆகும்! அதாவது, உயிரற்ற பௌதீகச் சடப்பொரு
ளான அணுத்துகள்கள் ஒரு கட்டத்தில் உயிர்பெற்றெழுவதும் (உயிர்-ஜீவிகள்);
பிறகொரு கட்டத்தில் உணர்வு பெற்றெழுவதும் (மனிதஜீவிகள்); முடிவாக,
ஒவ்வொரு மனிதனின் உணர்வுப்பரிணாமத்தின் மூலம் இறுதிப்பேருணர்வாக
எழுவதும்தான் ஒட்டுமொத்த பிரபஞ்சப்பரிணாம இயக்கத்தின் இலக்கு ஆகும்!

சுய-அமைப்பாக்க வழிமுறையில் அணுத்துகள்கள் ஒன்றோடொன்றிணைந்து
முதலில் அணுக்களாகவும், மூலக்கூறுகளாகவும், மூலகங்களாகவும், சிக்கல்
அற்ற அமைப்புக்களாகவும்,பிறகு சிக்கலான (நுட்பமிக்க),அதாவது, தனி-மையப்
படுதல் (Individualization),மற்றும் ஒருமைப்படுதல் (Unification)
ஆகியவற்றின் மூலம் பிரபஞ்சம் தனது ஒப்பற்ற இலக்கு நோக்கிச் செல்வதா
யுள்ளது! இவ்வழிமுறையில், முதன்முதலாக இப்பிரபஞ்சத்தின் மையமாக
உயிர்-ஜீவிகள் தோன்றின! அடுத்த உயர்-நிலையாக மனிதஜீவியானவன் இப்
பிரபஞ்சத்தின் உணர்வுள்ள மையமாக உருப்பெற்றான்!

பிரபஞ்சத்தை ஒரு அமைப்பாகக் காண்கையில், பரந்த இப்பிரபஞ்ச வெளியில்
பூமிக்கிரகமானது எங்கோ ஒரு மூலையில் இருக்குமிடம் தெரியாதவகையில்
சுழன்றுகொண்டுள்ளது; அதில் மனிதன் ஒரு தூசு போல ஒட்டிக்கொண்டிருக்
கிறான் என்பதாகவே தெரியும்! ஆனால், பிரபஞ்சத்தை ஒரு (பரிணாம) இயக்க
மாகக் காண்கையில், அவனே பிரபஞ்சத்தின் உச்சியில் உள்ளான் என்பது
தெரிய வரும்! ஆம், உணர்வுக்கு விழிக்கும் ஒவ்வொரு மனிதனும் இப்பிரபஞ்
சத்தின் மையமே ஆவான்! மனிதன் பிரபஞ்சத்தின் மையமாக இருக்கிறான்
என்பது பிரபஞ்சத்தின் பெருமை ஆகும்! அதற்காக அவன் தற்பெருமை கொள்
வது அழகல்ல! ஏனென்றால், பிரபஞ்சத்தின் உண்மையான, இறுதியான அந்த
ஒப்பற்ற மையத்தை அறிந்தடைவதற்கான ஒரு மையமாக மட்டுமே மனிதன்
விளங்குகிறான்! அவன் தன் முழுமையை அடைவதற்கு  அவன் எடுத்து
வைக்க வேண்டிய இன்னும் ஒரு அடி (one more step) மீதமுள்ளது!

மா.கணேசன்/ நெய்வேலி/ 14-09-2017
----------------------------------------------------------------------------

Wednesday, 13 September 2017

பன்மையின் உலகமா? அல்லது உலகம் கடந்த ஒருமையா?





         நான் இவ்வுலகைவிட ஐந்தரை அடி உயரமானவன்!
         ஏனெனில், நான் இவ்வுலகின் உச்சியில் நிற்கிறேன்!

இவ்வுலகில். பெரும்பான்மையானோர் பன்மையின் உலகில் விழுந்து புரண்டு
உழல்வதை வாழ்க்கையென வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்! மிகச்சிறுபான்மை
யானோர் இவ்வுலகைக் கடந்த ஒருமையை அடைவதையே தமது வாழ்வின்
இலக்காகக்கொண்டு வாழ்கின்றனர்! முதல் வகையினர் படைப்பைத் தழுவிக்
கொண்டு, படைத்தவனை, அதாவது மெய்ம்மையைக் கண்டுகொள்வதில்லை!
இரண்டாவது வகையினர், படைப்பைக் கைவிட்டு படைத்தவனைக்கைப்பற்று
வதையே இலக்காகக் கொண்டுள்ளனர்!  இவ்விரு வழிகளில் எது சரியானது?
அல்லது, இரண்டையும் ஒன்றிணைக்க அடிப்படையேதும் உள்ளதா?

'இவ்விரு பார்வைகளுமே ஒருபக்கச் சாய்வானவை, ஏனெனில், முறையான
ஒரு புரிதலானது இரண்டையும் "ஒரு, தொடர்ந்து செல்லும், என்றென்றைக்கு
மான, உயிர்த்துடிப்புமிக்க ஆனந்தமான தழுவலில் இணைக்கிறது!" என்பதாக
உளவியலாளர் கென் வில்பர் (Ken Wilber)கூறுகிறார்.' சில ஆன்மீக மார்க்
கங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ மனிதனுக்கு லௌகீகம், ஆன்மீகம்
என இரண்டு இறக்கைகள் அவசியம் என்கின்றன!

ஆனால், லௌகீகத்தை ஒரு இறக்கையாகவும், ஆன்மீகத்தை இன்னொரு
இறக்கையாகவும் கொண்டு வாழும் ஒருவன் எந்த இலக்கை நோக்கிப் பறந்து
செல்வான்? லௌகீகம் ஒரு திசையில் கொண்டு செல்லும், ஆன்மீகம் அதற்கு
எதிர் திசையில் கொண்டு செல்லும்! எதிரெதிர் திசைகளை நோக்கி இழுக்கும்
காளைகளைப் பூட்டிய வண்டியில் பயணித்து ஒருவன் தனது இலக்கை
அடைவது எவ்வாறு சாத்தியம்? லௌகீகமும், ஆன்மீகமும் சேர்ந்துசெல்லாது!
ஆன்மீகம் என்பது நாம் வாழும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஒரு போதும்
அமையமுடியாது; ஏனெனில், ஆன்மீகம் தான் நம் வாழ்வின் இலக்கு ஆகும்!
இலக்கு ஒரு போதும் வழியின் ஒரு பகுதியாக அமையமுடியாது; மாறாக,
இலக்கு என்பது அனைத்து வழிகளின் முடிவிடம் ஆகும்!

லௌகீகமும், ஆன்மீகமும் சேர்ந்து செல்லாது என்பது மட்டுமல்ல; கென்
வில்பர் அவர்களின் கூற்றுக்கு மாறாக, லௌகீகமும், ஆன்மீகமும் ஒன்றை
யொன்று தழுவிக்கொள்ளவும் செய்யாது! பரந்து விரிந்து அனைத்தையும்
தழுவிக்கொள்ள வேண்டும், அனைத்தையும் ஒன்றிணைக்க வேண்டும் எனும்
ஆர்வக்கோளாறின் விளைவாக கென் வில்பரின் புரிதல் தனது நங்கூரத்தை
தொலைத்துவிட்டு ஆழ்கடலில் தத்தளித்துத் தடுமாறிக் கொண்டிருக்கிறது!
அவருடைய மேற்கத்திய கட்டுப்படுத்துதலின் (Western Conditioning)
விளைவாக அவர் லௌகீகத்திற்கு நியாயம் வழங்குவதற்காக ஆன்மீகத்தைக்

கொச்சைப்படுத்திவிட்டார் என்று தான் சொல்லவேண்டும்!

கென் வில்பரின் பார்வை ஆன்மீகப் பரிணாமத்திற்கு விரோதமானது ஆகும்!
எவ்வாறேனும் லௌகீகத்தை ஆன்மீகத்துடன் இணைக்கவேண்டும் எனும்
ஆதங்கத்தினால், அதாவது, லௌகீகத்தை உயர்த்தவேண்டும் என்பதற்காக
ஆன்மீகத்தை அவர் லௌகீகத்தின் உயரத்திற்கேற்ப குறைத்துவிட்டார்! சில
ஆன்மீக மார்க்கங்கள், பரவலாக மனிதர்களை ஆன்மீகத்தில் ஈடுபடுத்தும்
முகமாக, "ஆன்மீகம் லௌகீகத்திற்கு எதிரானதல்ல!" எனவும்; "ஆன்மீகத்தில்
ஈடுபடுவதற்காக ஒருவர் லௌகீகத்தைத் தியாகம் செய்யத்தேவையில்லை!"
எனவும் சொல்கின்றன! ஆனால், இவ்வழிகளிலெல்லாம் ஆன்மீகத்தை ஊக்கு
விக்கவோ,வளர்க்கவோ இயலாது! ஏனெனில், ஆன்மீகம் என்பது தூங்குமூஞ்சி
களுக்கும், சுகபோகிகளுக்கும் உரியதல்ல! ஆன்மீகம் எதற்கும் எதிரானதல்ல!
ஆனால், பிரத்யேக அக்கறையும், சிதறாத முழுகவனமும் செலுத்தாமல்
ஒருவனுள் ஆன்மீகம் துளிர்க்கவோ, வளரவோ செய்யாது! ஆன்மீகம் என்பது
இப்பன்மை உலகில் காணப்படும் பலவகைப்பட்ட பொருட்களுள், விஷயங்
களுள் அதுவும் ஒன்றல்ல, அதையும் ஒருவர் தம்முடன் வரித்துக்கொள்ள!

ஆன்மீகம் என்பது எல்லாவற்றையும் கடந்தது, ஏனெனில், அதுவே அனைத்
திலும் இறுதியானது, அனைத்தின் சாரமானது! ஆகவே, அதற்கு நிகராக வேறு
எதுவும் இல்லை! அது ஒரு தனித்தீவு போன்றதாகும்! ஆக, ஆன்மீகத்தை
ஒருவர் நாடுகிறார் என்பதன் அர்த்தம் அவர் வாழ்வின் மிக முக்கியமானதும்,
இறுதியானதுமான அம்சத்திற்கு தயாராகிவிட்டார் என்பதையே குறிக்கிறது!
மனிதவாழ்வின் முக்கியமான, இறுதியான அம்சம் என்பது கடைசியில் இடம்
பெறும் அம்சம் என்று அர்த்தமல்ல; நம்மில் பலர், மிகவும் தவறாக,ஆன்மீகம்
என்பது வயதானவர்களுக்கானது எனவும், வாழ்வின் கடைசிக்காலக்கட்டத்திற்
குரியது எனவும் கருதுகின்றனர்! மாறாக, அனைத்திலும் முதலாவதாக
கவனிக்கப்படவேண்டியது வாழ்வின் மிகவும் மையமான, முக்கியமான,
இறுதியான அம்சமான ஆன்மீக உண்மையைத்தான்! ஏனெனில்,அது மட்டுமே
நம்மையும், நம் வாழ்வையும் முழுமைப்படுத்தும் அம்சமாகும்!

லௌகீகம் என்பது உயிர்-வாழ்தலின் (அர்த்தத்தை அறியத்தவறியதால் மேற்
கொள்ளப்படும்) அர்த்தமற்ற வீண் விரிவாக்கம் ஆகும்! ஏனெனில், உயிர்-வாழ்
தல் என்பதே உயிர்-வாழ்தலின் இலக்காக ஆகவியலாது! அவ்வாறு ஆகவிய
லுமெனில், மனிதவாழ்வு என்பது, உணவு, உடை, உறைவிடம், உறவுகள்
ஆகியவற்றைச் சுற்றிச்சுழலும் விவகாரமாகச் சுருங்கிப்போகும்! மேலும்,உயிர்
வாழ்தலை எவ்வளவு அலங்காரமாகவும், பகட்டாகவும், ஆடம்பரமாகவும்
மேற்கொண்டாலும் அது அர்த்தமற்ற வெறும் உயிர்-வாழ்தல் மட்டுமேயாகும்!

நாம் இப்பன்மையின் உலகை, அதாவது, படைப்பைத் தழுவிக்கொண்டு, அதே
நேரத்தில் ஆன்மீகச் சிகரத்தையும் தழுவிக்கொள்ள இயலாது! முதலில் இவ்
வுலகம், அல்லது பிரபஞ்சம் என்பது பரந்து விரிந்த ஒரு இடம் மட்டுமன்று;
அது ஒரு மாபெரும் இயக்கமும் என்பதை நாம் புரிந்துகொள்வது மிகவும்
முக்கியம் ஆகும்! அதைவிட முக்கியம் அவ்வியக்கம் எந்த இலக்கை நோக்கிச்
செல்கிறது என்பதைப் புரிந்துகொள்வதேயாகும்!

"பன்மையின் உலகம்" என்பது ஒரு பரிசோதனைக்களம் ஆகும்! இன்னும்
"உலகம்" என்பதும் ஒரு பரிசோதனைப்பொருளே ஆகும்! அதில் விளையும்
ஒவ்வொரு அம்சமும் உலகின் ஒரு அவதாரம் ஆகும்! உலகின் பலவகை
அவதாரங்களில் மனிதன் ஒரு விசேட அவதாரம் ஆவான்! அதாவது, அவனே
மாற்றங்களுக்குட்பட்ட இவ்வுலகை முழுமைப்படுத்தி மாற்றங்கள் அனைத்
தையும் முடிவிற்குக்கொண்டுவரும் இறுதி அவதாரம் ஆவான்! ஆம், மனிதன்
தன்னுள் கொணர்ந்திடும் ஒரு முடிவான மாற்றத்திலேயே உலகின் முழுமை
அடங்கியுள்ளது! பரிணாமத்தின் அடியோட்டமான நோக்கம் பலவகைப்பட்ட
பொருட்களை, உயிர்ஜீவிகளை உருவாக்கிக் கொண்டே செல்வதல்ல; மாறாக,
தமது உள்ளார்ந்த நோக்கத்தையுணர்ந்து நிறைவேற்றும் ஒரு பரிபூரணமான
பிரதிநிதியை உருவாக்குவதே (அதாவது, ஒரு பரிபூரணமான அவதாரமாக
உருவெடுப்பதே) ஆகும்! அத்தகையதொரு பரிபூரணமான பிரதிநிதி, அவதாரம்
மனிதனே யாவான்! மனிதன் வெறுமனே உண்டு களிப்பதற்காகப் பிறந்தவன்
அல்ல!

"பன்மைத்தன்மை" என்பதே ஒரு முரண்பாடு ஆகும்! உலகம் பலவகைப்பட்ட
பொருட்களையும், அம்சங்களையும் கொண்டுள்ள காரணத்தினாலேயே
அவற்றையெல்லாம் நாம் தழுவிக்கொள்ளவேண்டுமென்பதில்லை! அதனால்
ஒரு பயனும் இல்லை! நாம் தழுவிக்கொள்ளவேண்டியது முழுமைக்குறை
வான இந்தப் பன்முகத்தன்மை கொண்ட உலகையல்ல; மாறாக, இவ்வுலகம்
எனும் பரிணாம இயக்கத்தின் முடிவும், முழுமையுமான ஒருமைநிலையைத்
தான்! ஏனெனில், அவ்வொருமைநிலை உடைந்து சிதறியதனால் உருவானதே
இப் பன்மையின் உலகம்! ஒருமை நிலையே இவ்வுலகின் மூலம் ஆகும்!
மீண்டும் அவ்வொருமை நிலையைக் கட்டமைப்பதே உலகின், ஒட்டுமொத்த
பரிணாம இயக்கத்தின் ஒரே விழைவும், இலக்கும் ஆகும்! மலையின்
அடிவாரத்தைத் தழுவிக்கொண்டிருந்தால் சிகரத்தை எவ்வாறு நாம் அடைய
இயலும்! சிகரம் தான் நம்முடைய இலக்கு எனும்பட்சத்தில் அடிவாரத்தை
விட்டு நாம் அகன்றுதானே ஆகவேண்டும்!

"சமுசாரம் (உலக வாழ்க்கை) தான் நிர்வாணம், அதாவது, விழிப்படைந்த
மனதைக்கொண்டு காணும்பட்சத்தில், துன்பமிகு இவ்வுலகம்தான் பூரணமான
உலகம்" எனும் மஹாயானா பௌத்தக் கூற்றை கென் வில்பர் உறுதிப்படுத்து
வதாகக் கூறப்படுகிறது. ஆனால், இக்கூற்று மிகவும் தவறாகப் புரிந்துகொள்
ளப்பட்ட ஒன்றாகத்தான் தெரிகிறது! எவ்வளவு உயரிய, அற்புத ஆன்மீக
அனுபவங்களைப் பெற்றாலும், கென் வில்பர் போன்றவர்களால் இவ்வுலகை
விட்டுக்கொடுக்க இயலவில்லை என்பதாகவே தெரிகிறது! ஆனால், அதே
நேரத்தில், எவரும் இவ்வுலகை விட்டுக்கொடுக்கவோ, தவிர்க்கவோ தேவை
யில்லை! அதாவது ஒருவர் ஞானமடைந்த பிறகும் இவ்வுலகில் தான் வாழ்ந்
தாகவேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை; ஆனால், உலகிற்கு ஏற்கனவே
ஒருவர் கொடுத்து வந்த பழைய முக்கியத்துவம் வெகுவாகக் குறைந்துவிடும்!
அதாவது, ஞானமடைந்தவர், (அவரது உடல் இறப்பில் முடிவுறும் வரை) இவ்
வுலகில் தொடர்ந்து இருக்கவே செய்வார்; ஆனால், அவர் தனது ஞானம்
எனும் வீட்டில் தான் பிரதானமாகத் தங்கி வாழ்வார்!

ஏனெனில், இவ்வுலகம் எவ்வகையிலும் பூரணமானதல்ல! அதேநேரத்தில்,
நாம் வைக்கப்பட்டிருப்பது இவ்வுலகில்தான், இவ்வுலகிலிருந்து தான் நாம்
நம் வாழ்க்கையை வாழ்ந்தாகவேண்டும், புரிந்து கொண்டாகவேண்டும், நமது
மீட்சியை செயல்படுத்தியாக வேண்டும்! மேலும், சமுசாரமும், நிர்வாணமும்
ஒன்றல்ல; ஒரு போதும், ஒன்றாகிடுவதற்கான வாய்ப்பும் இல்லை!

அதாவது, விழிப்படைந்த மனத்தைக்கொண்டு காணும் போது, 'துன்பமிகு இவ்
வுலகம்தான் பூரணமான உலகம்' என்பதாகத் தெரிகிறது என்பதன் அர்த்தம்
என்ன? விழிப்படையாத மனத்தைக்கொண்டு காணும் போது இவ்வுலகமும்,
இவ்வாழ்க்கையும் துன்பமயமாக, நரகமாகத் தெரிவதன் அர்த்தம் என்ன? ஆம்,
"விழிப்படைந்த மனம்" தான் அனைத்து வித்தியாசத்தையும் செய்கிறது!
அதாவது, எது முக்கியமானது எனில், இவ்வுலகம் துன்பமயமானதா? அல்லது
பூரணமானதா? என்பது அல்ல! மாறாக, மனம் (மனிதன்) விழிப்படைவது
மட்டுமே முக்கியம்!

ஏனெனில், "விழிப்பு" தான் இவ்வுலகின் மலர்ச்சியும், முழுமையும் ஆகும்!
மனிதனே தன் விழிப்பினால் இவ்வுலகை முழுமைப்படுத்தும் இறுதி அம்சம்
ஆவான்!

         வேற்றுலகம், மறுவுலகம், விண்ணுலகம்
         பொன்னுலகம், புத்துலகம், படைப்புலகம்
         சொர்க்கம், நரகம் என்றெதுவும் இல்லை!
         அவ்வாறிருப்பின் அவற்றையெல்லாம்
         மறுப்பது தான் உயரிய ஞானம்!
         ஏனெனில், எல்லா உலகங்களும்
         இவ்வுலகம் போலவே மனிதனது உணர்வைச்
         சார்ந்திருப்பவையே!
         உணர்பவன் இல்லையேல் உலகம் இல்லை!
         உணர்பவன்  சேர வேண்டிய உலகம்
         முழு-உணர்வே!

மா.கணேசன்/ நெய்வேலி/ 07-09-2017
----------------------------------------------------------------------------

Wednesday, 6 September 2017

மனிதன் எங்கே தொடங்கி எங்கே முடிகிறான்?




ஒருமுறை விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்கள் மிகவும் நோய்வாய்ப்
பட்டிருந்த போது, "மரணம் குறித்து நீங்கள் அஞ்சுகிறீர்களா?" என அவரிடம்
கேட்கப்பட்டதற்கு, "உயிருள்ள அனைத்து பொருட்களுடனும் நான் மிகவும்
நெருக்கமான ஒருமைப்பாட்டை உணர்வதால், தனிமனிதன் எங்கே தொடங்கி
எங்கே முடிவடைகிறான் என்பது எனக்கு ஒரு பொருட்டல்ல!" என்று
சொன்னதாக,  லேர்ரி டோஸ்ஸே (Larry Dossey) எனும் மருத்துவர்
தனது "ஆன்மாவைத் திரும்ப அடைதல்" (Recovering the Soul)எனும்
நூலில் குறிப்பிட்டுள்ளார்.

ஆம், "மனிதன் என்பவன் எங்கே தொடங்கி எங்கே முடிகிறான்? எனும் இந்தக்
கேள்வி மிகவும் அற்புதமான ஒன்றாகும்! விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் மதிநுட்பம்
அவரது விஞ்ஞானக் கோட்பாடுகளில்  வெளிப்பட்டதைவிட இவ்வாறு
எப்போதாவது எவராவது கேட்கும் விஞ்ஞானத்துறைக்குத் தொடர்பில்லாத
கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களிலேயே அதிகம் வெளிப்பட்டுள்ளன
எனலாம்!

"மனிதன் என்பவன் எங்கே தொடங்கி எங்கே முடிகிறான்? எனும் இக்கேள்வி
மிகவும் முக்கியமானதாகும்! ஏனெனில், இக்கேள்வி மனிதனுக்கும் ஒட்டு
மொத்த பிரபஞ்சத்துக்கும் உள்ள தொடர்பை உணர்வுபூர்வமாக அறியச் செய்
வதற்கான ஒரு தூண்டுகோல் போன்றதாகும்! ஏனெனில், மனிதன் என்பவன்
பிரபஞ்சத்திலிருந்து வேறான, தனித்த ஒரு அம்சம் அல்ல! அதே நேரத்தில்,
அவன் பிரபஞ்சத்தின் ஏதோவொரு மூலையில் இருக்கும் முக்கியத்துவமற்ற
ஏதோ ஒரு பகுதியும் அல்ல! மாறாக, அவனே பிரபஞ்சத்தின் மிகமுக்கியமான
தலைப்பகுதி போன்றவன்! ஆனால், மனிதன் தன் முக்கியத்துவத்தை உணர்வு
கொண்டு நேரடியாகக் கண்டடையவில்லை, உணரவில்லையென்றால்,அவன்
வெறுமனே இப்பிரபஞ்சத்திலுள்ள பலவகைப்பட்ட பொருட்களுள் ஒன்றாக;
தாம் ஏன் தோன்றினோம், எதற்காக இருக்கிறோம் என்பதெதையும் அறியாத
வனாய், ஒரு பிராணியைப் போல வாழ்ந்து மாண்டுபோவான்!

மனிதனின் முக்கியத்துவம் என்பது அவனுடைய இயற்கையான பிறப்பால்
கொடுக்கப்பட்ட ஒன்றல்ல; மாறாக, ஒவ்வொரு மனிதனும் தனது விழிப்பால்
ஈட்டப்படவேண்டிய ஒன்றாகும்! மனிதனின் இயற்கையான பிறப்பு என்பது
பிறவிலங்குகளை ஒத்ததேயாகும்! ஆனால், மனிதனுக்கும், விலங்குகளுக்கும்
உள்ள ஒரு வித்தியாசம், அவனுள் அடங்கியிருக்கும் உள்ளுறையாற்றல்
அல்லது உட்பொதிவே ஆகும்! அதாவது, அவன் தன் உணர்வில் மேன்மேலும்
வளர்ந்து உயர்வதற்கான உட்பொதிவு!

ஐன்ஸ்டீனைப்பொறுத்தவரை, "உயிருள்ள அனைத்து பொருட்களுடனும் நான்
மிகவும் நெருக்கமான ஒருமைப்பாட்டை உணர்வதால், தனிமனிதன் எங்கே
தொடங்கி எங்கே முடிவடைகிறான் என்பது எனக்கு ஒரு பொருட்டல்ல!"
என்றார். அது அவருடைய உணர்வுப்பூர்வ அனுபவம். அவரைப்பொறுத்தவரை
தனிமனிதனின் எல்லைகள் மிகப் பரந்ததாக இருப்பதாக அவர் உணர்ந்தார்!
ஆனால், நம்மில் பெரும்பாலானவர்களைப் பொறுத்தவரை நம் உடலைப்
போர்த்தியுள்ள தோல்தான் நமது எல்லைகளாயுள்ளன! அதுவும் உடலின் மீது
நாம் கொண்ட ஒரு விபரீதப் பிணைப்பினால், அதாவது, உடலை நாமாகப்
பாவிக்கும் தவறான அடையாளப்படுத்துதலினால் விளைந்ததாகும்! மற்றபடி
"நாம்" என்பது நம் ஒவ்வொருவரின் "நான்" எனும் அகந்தை உணர்வேயாகும்!

ஆனால், 'நான்' எனும் உணர்வு, அல்லது, அகந்தையுணர்வு என்பது என்ன?
அது எதைப்பற்றிய உணர்வு? அகந்தைக்கு தன்னையும், தனது உடமைகளை
யும்  (அதில் ஒருவனுடைய நெருங்கிய உறவுகளும் அடங்கும்) தவிர, வேறு
எதனுடனும் (சகமனிதர்கள், பிற உயிரினங்கள், இயற்கை, பிரபஞ்சம் ஆகிய
எதனுடனும், எவ்வித ஒருமைப்பாடும், அக்கறையும், பொறுப்பும், எதுவும்
கிடையாது! உண்மையில், 'நான்' எனும் உணர்வுக்கு தனித் தன்மையான
யாதொரு உள்ளீடும் கிடையாது! அது 'தான்' எனவும், 'தனது' எனவும்
வரித்துக்கொண்ட அம்சங்களை, பொருட்களை சார்ந்திருக்கும் ஒரு கட்டுக்
கதையே ஆகும்! அகந்தையின் இத்தகைய புனைதிறனும், கற்பனைச்சக்தியும்
தான் எலிகளுக்கும், தவளைகளுக்கும், பிற விலங்குகளுக்கும் இல்லாத
தனிச்சிறப்பு (?) ஆகும்! அகந்தையானது தன்னைப்பற்றியும், தன்னைச்சுற்றியும்
வரித்துகொண்ட அம்சங்களை விலக்கிவிடும் பட்சத்தில் அது ஒன்றுமில்லாத
வெறும் ஒரு சூன்யப்புள்ளியே!

தன்னை நோக்கி விழிக்காத, தனது உண்மையை அறிய விழையாத அகந்தை
யானது தன்னில் தானே தோன்றியதாக எண்ணிக்கொள்கிறது! தானே
வட்டத்தின் பரிதியும், மையமும் என்பதான பிரமையில் ஆழ்ந்து தேக்கமுற்று
உடலுடன் சேர்ந்து அழுகிப்போகிறது! ஆம், நோய்க்கூறு கொண்ட அகந்தை
யானது தொடக்கமும் முடிவும் இல்லாத மூலமும் முடிவுமான மெய்ம்மை
யாகத் தன்னைப் பாவித்துக்கொள்கிறது!

நதியானது மலையில் தோன்றி கடலில் கலக்கிறது; மலைக்கும், கடலுக்கும்
இடைவழி நெடுகிலுமுள்ள எதனுடனும் நதி தன்னைப் பிணைத்துக்கொள்
வதோ, அடையாளப்படுத்திக்கொள்வதோ கூடாது! ஏனெனில், நதியின்
அசலான அடையாளம் முடிவில் அது சென்று சேரும் கடலே ஆகும்!

அவ்வாறே மனிதனின் அகந்தை உணர்வும் இந்த உலகில், (பிரபஞ்சத்தில்)
தோன்றினாலும், இவ்வுலகைக்கடந்த முழு-உணர்வே அதனுடைய அசலான
அடையாளம் ஆகும்! ஆக, ஐன்ஸ்டீனின் அனுபவமான, அதாவது, "உயிருள்ள
அனைத்து பொருட்களுடனும் கொள்ளும் நெருக்கமான ஒருமைப்பாட்டுணர்வு
(Solidarity)" என்பதும் கூட இறுதியானதல்ல! ஏனெனில், இவ்வுலகம்
என்பது முற்றிலுமாகவும் முழுமையாகவும் கடக்கப்படவேண்டியதொரு
குறைவுபட்ட, தற்காலிக நிஜமே! பலர் எண்ணுவதுபோல பிரபஞ்சம் என்பது
ஒரு முழுமையல்ல; மாறாக, முழுமையை நோக்கிய ஒரு இயக்கமாகும்,
அந்த இயக்கத்தின் அம்புத்தலையே (Arrowhead) மனிதன்! அவன் ஒட்டு
மொத்த பிரபஞ்சத்துடன் ஒருமைப்பாடு கொள்வது அவசியமே;எவ்வாறெனில்,
பிரபஞ்சத்தின் உள்ளார்ந்த விழைவினைச் செயல்படுத்தத் தோன்றிய ஒப்பற்ற
கருவியே, பிரதிநிதியே மனிதன்! ஆகவே, ஒட்டு மொத்த பிரபஞ்சத்துடன்
ஒருமைப்பாட்டுணர்வு கொள்வது அவசியமாகும்; இவ்வாறு ஒருமைப்பாடு
கொள்ளாமல் மனிதனால் இப்பிரபஞ்சத்தைக் கடக்க முடியாது! எவ்வொரு
பொருளுடனும், விஷயத்துடனும் எவ்விதத் தொடர்பும், பிணைப்பும் இல்லாத
நிலையில், ஒருபொருளை, அல்லது விஷயத்தை கடப்பது என்பது அடிப்படை
யற்றதாகும்!

ஆனால், உலகெங்கிலும் மனிதர்கள் உலகம், பிரபஞ்சம் பற்றிய யாதொரு
விசேட உணர்வும், உறவும், பிணைப்பும் இன்றி வாழ்ந்து செல்கிறார்கள்! பூமி
என்பது மனிதர்களுக்கு, அவர்களுடைய நுகர்வுத்தேவைகளுக்குரிய பொருட்
களைக் கொண்டிருக்கும் ஒரு மாபெரும் பொருட்கிடங்கு என்பதற்குமேல்
வேறெதுவுமல்ல! சிலர் இயற்கை, ஆன்மீக சூழலியம் என்றெல்லாம் பேசியும்
இயக்கம் நடத்தியும் வருகிறார்கள்! ஆனால், இத்தகைய இயற்கை தழுவிய
இயக்கங்கள், இஸங்கள் இயற்கையைப்பற்றியும், பூமியின் புனிதத்தன்மை
யைப்பற்றியும் பெரிதாகப் பேசினாலும், அவை மனிதனின் ஆன்மீக முக்கியத்
துவத்தை உணர்ந்தறியத் தவறிவிட்ட, உணர்ச்சிப்பெருக்கின் வயப்பட்ட,
முதிர்ச்சியற்ற மட்டுப்பாடுகளேயாகும்!

புனிதம், இறைமை பற்றிய உணர்வு முக்கியமே; ஆனால், அவை புறத்தே
எங்கேயுமில்லை! அப்படி எதுவும் இருக்கமுடியுமெனில், அவை அவற்றைச்
சுட்டும் வெறும் குறியீடுகளாக மட்டுமே விளங்கமுடியும்! மேலும்,மனிதனின்
ஆன்மீக முக்கியத்துவம் என்று இங்கு சொல்லப்படுவது மனிதனின் சொந்த
முக்கியத்துவம் அன்று! அப்படி எதுவும் இருக்கவில்லை! மனிதன் முக்கியத்
துவம் பெறுவது என்பது, அவனே இறுதியான ஆன்மீக மெய்ம்மையை
நோக்கிய பிரதான வாயிலாகவும்,அதன் வழியாகக்கடந்து செல்பவனுமாகவும்
இருக்கிறான் என்பதாலேயே ஆகும்!

நதியானது மலையில் உற்பத்தியாவது போலத் தெரிகிறதே தவிர அது
கடலில் தோன்றி மீண்டும் கடலிலேயே முடிவடைகிறது! அதுபோலவே,
மனிதனும் இவ்வுலகில் தோன்றுவதாகத் தெரிகிறானே தவிர உண்மையில்
அவன் மூலமெய்ம்மையிலிருந்து தொடங்கி மீண்டும் அம்மெய்ம்மையிலேயே
முடிவடைகிறான்!

உண்மையில், "தன்னையறிதல்" என்பது ஒருவன் தன்னைப்பற்றி அறிவதோ,
அல்லது, சமூகம் எனும் களத்தில் பிறருடன் ஒப்பிட்டு  தனது நிலையை
அறிவதோ அல்ல; மாறாக, பிரபஞ்சம் எனும் களத்துடன் தன்னை தொடர்பு
படுத்தி, பிரபஞ்ச விழைவை உணர்ந்து அந்த ஒப்பற்ற இலக்கை நிறைவேற்று
வதே "தன்னையறிதல்" என்பதாகும்! ஏனெனில், மனிதன் என்பவன் பிரபஞ்ச
இயக்கத்தின் நீட்சியும், உயர்-வளர்ச்சி நிலையும் ஆவான்! முதலில் மனிதன்
தனக்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ள தொடர்பை (தனது பிரபஞ்சமளாவிய
தன்மையை) அறிந்திடவேண்டும், அடுத்ததாக, பிரபஞ்சத்தின் உண்மையான
மையம் எது என்பதை உணர்ந்தறிந்திடவேண்டும்!

உண்மையில், உணர்வுக்கு விழித்த (அதாவது உணர்வாகத் தன்னை உணர்ந்த)
ஒவ்வொரு மனிதனுமே இப்பிரபஞ்சத்தின் மையமே ஆவான்! எவ்வாறு ஒரு
மரத்தின் ஒவ்வொரு கனியும் அம்மரத்தை முழுமையாகப் பிரதிநிதித்துவம்
செய்கிறதோ அவ்வாறே ஒவ்வொரு மனிதனுமே இப்பிரபஞ்சத்தின் மையம்
ஆவான்! ஆனால், பிரபஞ்சத்துடன் ஒருமைப்பாட்டுணர்வு கொள்வதும்,
பிரபஞ்சத்தின் மையமாகத் தன்னை உணர்வதும், இறுதியானதல்ல! அதாவது
பிரபஞ்சத்தின் மையமாகத் தன்னை உணரும் ஒருவன், அடுத்து தனது
மையத்தை உணர்ந்தாக வேண்டும்! ஏனெனில், பிரபஞ்சத்தின் உண்மையான
மையத்தை அறிவதற்கான ஒரு தற்காலிக மையமே மனிதன்! அதாவது
மனிதனின் மையம் மனிதனிடம் இல்லை! அது மனிதனின் (அகந்தை) உணர்
வைக் கடந்த ஒரு பேருணர்வு ஆகும்! தன் மையத்தைக் கண்டடைந்தவனே
மனிதன்! மற்றெல்லோரும் மையமறியாத விலங்குகளே!

விலங்கு ஜீவிகளைப்பொறுத்தவரை, அடிப்படைத்தேவைகளைச் சுட்டுகின்ற
உடலின் இயல்பூக்கிகள் தான் அவற்றுக்கான மையம் ஆகும்! அவற்றின்
அடிப்படைத் தேவைகளுக்குரிய பொருட்களைக்கொண்ட உலகை அவை
சார்ந்துள்ளன. உணர்வுக்கு விழித்த மனிதஜீவியைப் பொறுத்தவரை, உடலின்

அடிப்படைத்தேவைகளைக் கடந்த உயர்-தேவைகளான அர்த்தம், உண்மை,
மெய்ம்மை ஆகியவற்றைக்கோரும் ஆன்மாவே மையமும், அவன் சார்ந்திருக்
கும் ஒரே மெய்ம்மையும் ஆகும்!


மா.கணேசன்/நெய்வேலி/ 25-08-2017
----------------------------------------------------------------------------

Monday, 28 August 2017

இப்பிரபஞ்சம் நட்பார்ந்த ஒரு இடமா அல்லது இல்லையா?




ஒரு சமயம் மாபெரும் இயற்பியல் விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
அவர்களிடம், "மனிதன் பதில் கண்டுபிடித்தாகவேண்டிய மிக முக்கியமான
கேள்வி எது?" என்று கேட்கப்பட்டபோது அவர் முன் வைத்த கேள்வி,
"இப்பிரபஞ்சம் நட்பார்ந்த ஒரு இடமா அல்லது இல்லையா?" என்பது தான்.

"சூரியன் காலையில் கிழக்கே உதிக்கிறது, மாலையில் மேற்கே மறைகிறது,
இடையில் ஆயிரத்தெட்டு அலுவல்கள், பிரச்சினைகள், விவகாரங்கள்; அதில்
உலகைப்பற்றிய ஆராய்ச்சிக்கெல்லாம் ஏது இடம், நேரம்?" என்பதாக நாம்
வாழ்ந்துசெல்கிறோம்! ஆனால், அன்றாடத்தைக் கடந்து சிந்திக்கும் ஒரு சிலர்
நம்மிடையே இருக்கக்கூடும் அவர்களுக்கு இக்கட்டுரை நிச்சயம் பயன்படும்!

விஞ்ஞானி ஐன்ஸ்டீன் முன்வைத்த அவரது கேள்விக்கு அவரே சொன்ன
பதில் :

  "இப்பிரபஞ்சம் ஒரு நட்பார்ந்த இடமில்லை என நாம் தீர்மானித்தோமெனில்,
  பிறகு நாம் நமது தொழில் நுட்பத்தையும், நமது விஞ்ஞானக் கண்டுபிடிப்பு
  களையும், மற்றும் நமது இயற்கை வளங்களையும் பயன்படுத்தி
  அப்பகைமையை வெளித்தள்ளும் வகையில் பெரிய சுவர்களை எழுப்பி
  நம்முடைய பாதுகாப்பு, மற்றும் வலிமையைச் சாதிப்போம். பகைமையான
  எல்லாவற்றையும் அழிக்கும் வகையில் பெரும் ஆயுதங்களை
  உருவாக்குவோம். தொழில் நுட்பத்தைப்பொறுத்தவரை நாம் அத்தகைய
  ஒரு வலிமைமிக்க நிலையை நோக்கிச் செல்கிறோம் என்பதாகவே நான்
  நம்புகிறேன். அந்த வழிமுறையில், ஒன்று நாம் நம்மை முற்றாகத்
  தனிமைப்படுத்திக்கொள்வோம் அல்லது முற்றாக நம்மை நாமே அழித்துக்
  கொண்டுவிடுவோம்!

  "அதே வேளையில், இப்பிரபஞ்சம் நட்பார்ந்ததுமில்லை, பகைமையானது
  மில்லை, அதாவது கடவுள் அடிப்படையில் 'பிரபஞ்சத்துடன் தாயக்கட்டை  
  உருட்டிக் கொண்டிருக்கிறார்' என்பதாக நாம் தீர்மானித்தோமெனில், பிறகு
  நாம் வெறும் அந்த தாயக்கட்டை உருட்டலின் குருட்டாம் போக்கான
  விளைவுகளின் பலிகடாக்களே; மேலும் நமது வாழ்க்கைக்கு உண்மையான
  யாதொரு குறிக்கோளும் அர்த்தமும் இருக்காது"

  "ஆனால், இப்பிரபஞ்சமானது ஒரு நட்பார்ந்த இடம் என்பதாகத் தீர்மானித்
  தோமெனில், பிறகு நாம் நமது தொழில் நுட்பத்தையும், நமது விஞ்ஞானக்
  கண்டுபிடிப்புகளையும், மற்றும் நமது இயற்கை வளங்களையும்
  இப்பிரபஞ்சத்தை புரிந்துகொள்வதற்குரிய கருவிகளையும், மாதிரிகளையும்
  உருவாக்கிடப் பயன்படுத்துவோம். ஏனெனில், பிரபஞ்சம் எவ்வாறு
  செயல்படுகிறது என்பதையும் அதனுடைய நோக்கங்களையும் புரிந்து
  கொள்வதன் வாயிலாகவே  வலிமையும், பாதுகாப்பும் வந்து சேரும்."

விஞ்ஞானி ஐன்ஸ்டீன் சொன்ன இந்த பதில் அவ்வளவு திருப்திகரமாகவும்
இல்லை, பொருத்தமாகவும் இல்லை என்பதை சிரத்தையுடன் சிந்திக்கும்
எவரும் சொல்லிவிடக்கூடும்!

முதலிடத்தில், விஞ்ஞானி ஐன்ஸ்டீன் முன்வைத்த அக்கேள்வி உண்மை
யிலேயே அதிமுக்கியமானது தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை!
ஆனால், அக்கேள்வி பெரிதும் இருத்தலியல் மற்றும் தத்துவபூர்வமானதே
தவிர, விஞ்ஞானபூர்வமானதல்ல!

அடுத்து, ஐன்ஸ்டீன் அவர்கள் ஒரு மாபெரும் இயற்பியல் விஞ்ஞானியே
என்பதிலும் நமக்கு எவ்வித சந்தேகமுமில்லை!  மேலும் பிரபஞ்சவியலைப்
பொறுத்த விஷயத்தில் அவர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஞ்ஞானி
யாவார். அதே நேரத்தில் அவர் வெறும் ஒரு வறட்டுத்தனமான இயற்பியல்
விஞ்ஞானியாக மட்டும் இருக்கவில்லை; தத்துவச் சிந்தனையிலும் பரிச்சய
முள்ள ஒருவராக இருந்தவராவார்.

எனினும், பெரிதும் அவரது சிந்தனைகள் விஞ்ஞான ரீதியான தர்க்கத்திலேயே

வேர்கொண்டிருந்தமையால் இயற்பியலுக்கு வெளியேயமைந்த கேள்விகளைப்
பொறுத்தவரை அவரது பதில்கள் முழுமையானவையாக அமையவில்லை!
குறிப்பாக, "இப்பிரபஞ்சம் நட்பார்ந்த ஒரு இடமா அல்லது இல்லையா?"
என்கிற கேள்வியை அவர் ஊகத்தின் அடிப்படையிலேயே அணுகியுள்ளார்.

அதாவது, "இப்பிரபஞ்சம் ஒரு நட்பார்ந்த இடமில்லை", "இப்பிரபஞ்சம் நட்பார்ந்
ததுமில்லை, பகைமையானதுமில்லை", "இப்பிரபஞ்சமானது ஒரு நட்பார்ந்த
இடம்" என்பதான மூன்று வகைப்பட்ட ஊகங்கள், அல்லது 'தீர்மானங்களை'
அடிப்படையாகக்கொண்டு அவர் தனது பதிலை உருவாக்குகிறார்!

ஆனால், இத்தகைய அணுகுமுறை அடிப்படையிலேயே குறைபாடுடையது
ஆகும்! அதாவது, இப்பிரபஞ்சம் எத்தகையது என்பதை நமது ஊகங்களைக்
கொண்டு புரிந்து கொள்வது சரியான அணுகுமுறையாகாது! அது நமது ஊகங்
களையும், தீர்மானங்களையும் பிரபஞ்சத்தின் மீது சுமத்துவது போன்றதாகும்!
உண்மையிலேயே இப்பிரபஞ்சம் எத்தகையது என்பதற்கான தரவுகளைத்
திரட்டி, அவற்றை அடிப்படையாகக்கொண்டே நமது புரிதலை கட்டியெழுப்பிட
வேண்டும்! அதாவது, ஒரு குறிப்பிட்ட முடிவு, ஊகம், அல்லது தீர்மானத்தை

தொடங்குபுள்ளியாகக்கொண்டு அதற்கேற்ப தரவுகளைத் திரட்டுவது முறை
யாகாது!

முதலிடத்தில், மனிதஜீவிகளாகிய நாம் இப்பிரபஞ்சத்தின் ஒரு வளர்ச்சிநிலை,
அல்லது பகுதியே என்பது ஐன்ஸ்டீனுக்குத் தெரியாத உண்மையா என்ன!
ஒரு மரத்தின் பகுதியான கிளைகளுக்கு, பூக்கள் அல்லது பிஞ்சுகளுக்கு
அம்மரமானது பகைமையாக இருக்கமுடியுமா

ஒருவகையில், முழுமைக்கும், பகுதிகளுக்குமான உறவை நட்பு, பகைமை
எனும் சொற்களைக்கொண்டு புரிந்து கொள்வது பொருத்தமற்றதாகும்!
அப்படியானால், "இப்பிரபஞ்சம் நட்பார்ந்த ஒரு இடமா அல்லது இல்லையா?"
எனும் கேள்வி பொருத்தமற்றதாகிறது! பிறகு எவ்வாறு இக்கேள்வி
அதிமுக்கியமானது என்று சொல்லமுடியும் எனக்கேட்கலாம். அடிப்படையில்,
"இப்பிரபஞ்சம் நட்பார்ந்த ஒரு இடமா அல்லது இல்லையா?" எனும் கேள்வி
பிரபஞ்சத்திற்கும், மனிதனுக்குமான தொடர்பு பற்றிய கேள்வியே என்பதால்
அத்தொடர்பு எத்தகையது என்பதைப் புரிந்துகொள்வது அவசியமானதே
என்பதை மனதிற்கொண்டு எவ்விதத் தடையுமின்றி நாம் தொடர்ந்து நமது
இந்த ஆய்வை மேலெடுத்துச் செல்லலாம்!

அதே நேரத்தில் நமது ஆய்வை, இப்பிரபஞ்சம் ஒரு நட்பார்ந்த இடம் எனவோ
அல்லது பகைமையான இடம் எனவோ யாதொரு முன்முடிவுமின்றி கொண்டு
செல்வது அவசியம். விஞ்ஞானிகளின் கணக்குப்படியே இப்பூமியில் உயிர்
தோன்றி வெற்றிகரமாக 400 கோடி ஆண்டுகள் தாண்டிவிட்டன! மனிதஜீவிகள்
தோன்றி இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன! இனி திடீரென
இப்பிரபஞ்சம் பகைமையானதாக மாறிவிடக்கூடும் என்பதற்கு எவ்விதச்
சான்றும், காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை!

உண்மையில், இப்பிரபஞ்சம் நட்பார்ந்த ஒரு இடமா இல்லையா என்பதை
விட, மனித இனம்தான் தனக்குத்தானே எதிராக நடந்து கொள்கிறது. நாடுகள்
பரஸ்பரம் ஒன்றையொன்று முற்றாக அழித்துக்கொள்ளும் வகையிலான
அபாயகரமான அணு ஆயுதங்களை உருவாக்கி வைத்திருக்கின்றன. உலக
நாடுகள் அனைத்துமே பொருளாதார நடவடிக்கைகள் என்ற பெயரில் பூமியின்
இயற்கை வளங்களைச் சுரண்டி நுகர்ந்து வருகின்றன! அளவு கடந்த மக்கள்
தொகைப் பெருக்கம் ஒருபுறம், அவர்களனைவரின் தேவைகளையும் நிறைவு
செய்வதற்கான தொழிற்சாலைகளின் பெருக்கம் இன்னொருபுறம் என பூமியின்
சுற்றுச்சூழல் பெரிதும் மாசடைந்ததோடு, புவிக்கோளம் சூடேறுதலும் சேர்ந்து
பூமியில் மனித இனம் தொடர்ந்து உயிர்வாழ்வதே பெரும் கேள்விக்குறியாகி
விட்ட ஒரு காலத்தில் நாம் தற்போது வாழ்ந்து வருகிறோம்! மேலும், மனிதர்
களுக்கு எதிரிகள் வேற்றுக்கிரகத்திலிருந்து வரவேண்டியதில்லை; இன்னும்,
இயற்கையுலகமும் எதிரியல்ல! அதாவது, மனிதர்களுக்கு எதிரிகள் மனிதர்
களே யாவர்! மனிதர்களுக்கிடையே பெரிதாக யாதொரு இணக்கமும்,
நட்பார்ந்த உறவும் கிடையாது! பகைமை பாராட்டுவது என்பது நாடுகளுக்
கிடையே மட்டுமல்லாது தனி நபர்களுக்கிடையேயும் நிலவுகிறது!

ஆக, "இப்பிரபஞ்சம் நட்பார்ந்த ஒரு இடமா அல்லது இல்லையா?" என்று
கவலைப்படுவதற்கு முன்னர், நம்முடைய இதயங்களில் நட்புக்கான ஒரு சிறு
இடமாவது உள்ளதா என்பது பற்றியே முதலில் நாம் அக்கறைப்படவேண்டும்!

இப்பூமியிலேயே நட்பார்ந்த, அதாவது உயிரினங்களும், மனிதர்களும் வாழ்
வதற்கு உகந்த இடங்களும் உள்ளன! இதற்கு மாறான, பகைமை நிறைந்த
இடங்களும், அதாவது  உயிரினங்களும், மனிதர்களும் வாழ்வதற்குத் தகாத
இடங்களான பாலைவனங்களும், கடும்பனியால் போர்த்தப்பட்ட துருவப்
பிரதேசங்களும் உள்ளன! அவ்வாறே, இப்பிரபஞ்சத்தில், நம் பூமிக்கிரகத்திற்கு
அப்பால் செல்லச்செல்ல உயிரினங்கள் வாழ்வதற்கு சற்றும் இடம் தராத
ஆபத்தான இடங்களே அதிகம்! கிட்டத்தட்ட நம்  பூமிக்கிரகத்தைத் தவிர,
இப்பிரபஞ்சத்தில் வேறு எங்கும் உயிரினங்கள் வாழவே இயலாது என்று
முடிவாகச் சொல்லிவிடலாம்! ஆனால், இதன் அர்த்தம் பிரபஞ்சம் நட்பார்ந்த
இடமல்ல என்பதல்ல! மாறாக, நாம் தோன்றிய, நம்முடைய பிறந்த வீடான
பூமிக்கிரகத்தில் மட்டுமே பாதுகாப்பாக வாழமுடியும் என்பதே அர்த்தமாகும்!

மேலும், நம்முடைய சூரியமண்டலத்தில் ஒன்பது கிரகங்கள் இருக்கையில்,
சூரியனிலிருந்து மூன்றாவது கிரகமான பூமியில் மட்டும் ஏன் உயிர் தோன்றிட
வேண்டும்? ஆம்,உயிர் தோன்றுவதற்குரிய அனைத்து உகந்த சூழல்களும்
ஒருங்கே இங்கே அமைந்திருப்பதுதான் காரணம் எனலாம்!

அடுத்து, உயிரற்ற சடப்பொருளாலான பௌதீகப்பிரபஞ்சத்தில் உயிர் ஏன்,
எதற்காகத் தோன்றிடவேண்டும்? மேலும், உயிர் தோன்றுவதற்கான அவசியம்,
நோக்கம், குறிக்கோள் என்ன? அத்துடன், அதாவது உயிர்ஜீவி தோன்றியதுடன்
நில்லாமல், உணர்வுடைய மனிதஜீவி ஏன் தோன்றிடவேண்டும்? இவ்வாறு
இப்பிரபஞ்சத்தைப் பற்றியெல்லாம் எதற்காக ஆய்வு செய்திடவேண்டும்?

அடிப்படையில் பிரபஞ்சமானது உயிர்ஜீவிகளுக்கு எதிரானதாயிருந்திருந்தால்
முதலிடத்தில் இப்பிரபஞ்சத்தில் உயிர்ஜீவி எதுவும் தோன்றியிருக்காது! உயிர்
தோன்றிட இப்பிரபஞ்சம் இடமளித்திருக்காது அல்லவா? ஆனால், இத்தகைய
விளக்கத்தைக்கொண்டு உடனே இப்பிரபஞ்சம் ஒரு நட்பார்ந்த இடம் தான்
என்ற முடிவிற்கு நாம் வந்திடுவது எளிது! பிரபஞ்சம் ஒரு நட்பார்ந்த இடம்
என்பதைவிட, இப்பிரபஞ்சம் என்பது எத்தகைய மெய்ம்மை? அது எதற்காகத்
தோன்றியது? அதற்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன? நமது வாழ்வின்
அசலான குறிக்கோள் என்ன? மனிதன் என்பவன் எத்தகைய மெய்ம்மை?
சடப்பொருளாலான பிரபஞ்சத்தில் (மனித) உணர்வுக்கான பணி என்ன?
என்பவற்றையெல்லாம் புரிந்து கொள்வதே அதிமுக்கியத்துவம் வாய்ந்த
அம்சங்கள் ஆகும்!

இப்பிரபஞ்சம் பல தளங்களைக் கொண்டதாகும்; துல்லியமாகச்சொன்னால்,
பௌதீகத்தளம், உயிரியல்தளம், உணர்வியல்தளம் என மூன்று தளங்களைக்
கொண்டதாகும். இப்பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்ள இரு-மட்டப் பார்வை
அவசியமாகும். ஒன்று வழக்கமான "கிடைமட்டப் பார்வை", இரண்டாவது
"செங்குத்துப்பார்வை" யாகும்! "கிடைமட்டப் பார்வை" என்பது முழுக்கமுழுக்க
பொருள்வயமானது, எந்திரத்தனமானது, அதனுடைய அதீதமான பார்வையில்
அது சுருக்கல்வாதமாகச் சுருங்கிவிடுகிறது! இப்பார்வையே விஞ்ஞானத்தின்
பிரதான பார்வையும் ஆகும்! இதை நாம் "உலக-மையப்பார்வை" எனவும்
குறிப்பிடலாம்! இதுவே ஐன்ஸ்டீனின் பார்வையுமாகும்! விஞ்ஞானிகளையும்,

பொருள்முதல்வாதிகளையும், இயற்கைவாதிகளையும், பகுத்தறிவுவாதிகள்
என்று தம்மை அறிவித்துக் கொள்பவர்களையும் பொறுத்தவரை உலகமே
பிரதானம் ஆகும்! இவர்களைப் பொறுத்தவரை, பிரபஞ்சம் என்பது பொருளால்
ஆன பௌதீகப் பிரபஞ்சம் மட்டுமே!

ஆனால், செங்குத்துப்பார்வையைப் பொறுத்தவரை பௌதீகப்பிரபஞ்சம் என்பது
ஒரு அடிப்படையே, அதாவது பிரபஞ்சத்தின் அடித்தளமே தவிர அதுவே
மொத்தப் பிரபஞ்சமும் அல்ல! ஏனெனில், பிரபஞ்சமானது தனது பௌதீகத்
தளத்தைக் கடந்து வளர்ந்து உயிரியல் தளத்தை எட்டியதுடன், அதையும்
கடந்து மனிதனுள் உணர்வாக உணர்வியல் தளத்தையும் எட்டி வெகு காலம்
ஆகிறது! தற்போது பிரபஞ்சம் எனும் பரிணாம இயக்கமானது பிரதானமாக
உணர்வுத்துடிப்புள்ள தனிமனிதர்களின் உணர்வில் மையம் கொண்டுள்ளது!

கிடைமட்டப் பார்வைக்கும், செங்குத்துப்பார்வைக்கும் உள்ள வித்தியாசம்
என்னவெனில், கிடைமட்டப்பார்வையானது, ஒரு மரத்தின் அடிப்பகுதியையும்,
அதன் பிரதானக்கிளைகளையும் மட்டுமே மரம் எனக் கணக்கில் கொள்கிறது!
அம்மரத்தின் பூக்களையும், பிஞ்சுகளையும், காய்களையும், கனிகளையும்
மரமாகக் கணக்கில் கொள்வதில்லை! ஆனால், செங்குத்துப்பார்வையானது,
வேர்கள், அடிமரம், கிளைகள், பூக்கள், பிஞ்சுகள், காய்கள், கனிகள் என
அனைத்தையும் மரமாகக் கணக்கில் கொள்வதுடன், பிரதானமாக அம்மரத்தின்
கனிகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. ஏனெனில், மரத்தின்
கனியினுள் இருக்கும் வித்தில் தான் ஒட்டுமொத்த மரமும் அடங்கியுள்ளது!
அதாவது, கனி, அல்லது வித்து தான் எவ்வொரு மரத்தின் முழுமையும்,
இலக்கும் ஆகும்! ஆம், வித்து இல்லாமல் விருட்சம் இல்லை! வித்து தான்
விருட்சத்தின் மூலமும், முழுமையும் ஆகும்!

விஞ்ஞானி ஐன்ஸ்டீன் உள்பட அனைத்து விஞ்ஞானிகளின் பார்வையும்
கிடைமட்டப்பார்வையைச் சேர்ந்தவையே! அவர்களுக்கு, பிரபஞ்சத்தின்
பௌதீகத்தளம் ( மரத்தின் அடித்தண்டும் கிளைகளும் மட்டும்) தான் ஒட்டு
மொத்த பிரபஞ்சம் ஆகும்! உயிர்ஜீவிகள் மற்றும் மனிதஜீவிகள் (பிஞ்சுகள்,
காய்கள் கனிகள்) யாவும் பிரபஞ்சத்தின் முக்கியத்துவம் ஏதுமற்ற
மேற்சேர்க்கையான விஷயங்களே!

விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டுச் சாதனைகள் இயற்பியல்
துறையின் எல்லைக்குள் மட்டுமே பிரமாதமானவை! ஏனெனில், அவை சடப்
பொருளாலான பிரபஞ்சத்தை, அதாவது பிரபஞ்சத்தின் ஒரு குறிப்பிட்ட
பகுதியை மட்டுமே ஆராய்பவை! அவை பிரபஞ்சத்தின் உயிரியல், மற்றும்  
அதைக்கடந்த உணர்வியல் தளங்களையும் தொடுவதில்லை, விளக்குவது
இல்லை! ஐன்ஸ்டீனின் விஞ்ஞான மேதைமை தான் அவருடைய ஆன்மீக
பேதைமையின் ஆரம்பம் ஆகும்! இல்லாவிடில், பிரபஞ்சம் எவ்வாறு செயல்
படுகிறது என்பதைப் புரிந்து கொள்வதன் வாயிலாக பிரபஞ்சத்தைப் புரிந்து
கொண்டுவிடமுடியும் என அவர் எவ்வாறு எண்ணமுடியும்? இதிலிருந்து,
ஐன்ஸ்டீன் அவர்கள் பிரபஞ்சத்தை ஒரு எந்திரம் போல கருதி வந்திருப்பது
புலனாகிறது!

மேலும், அவருடைய இயற்பியல் துறையிலேயும் அவர் சில தவறான
முடிவுகளைக் கொண்டிருந்தார் என்பதையும் விஞ்ஞான உலகம் நன்கறியும்!
குறிப்பாக, அவரது காலத்திய பிற விஞ்ஞானிகளைப்போலவே அவருக்கும்
பிரபஞ்சம் விரிவடையும் தன்மை கொண்டது என்பது தெரியாது! ஆகவே
அவர் ஒரு நிலைத்த பிரபஞ்சத்தையே (Static Universe) உருவகித்துக்
கொண்டிருந்தார்! அந்நிலையில்,  அவர் தனது புதிய சார்பியல் கோட்பாடு
கொண்டு பிரபஞ்சத்தை விளக்கமுற்படும் வேளையில், அவருடைய
சமன்பாடுகள் நிலைத்த பிரபஞ்சத்திற்கேற்றவாறு அமையவில்லை என்பதால்
தனது சமன்பாட்டில் சமாளிப்புக்காக ஒரு மதிப்பைச் சேர்த்து(fudge factor)
சமன்பாட்டைச் சமன்படுத்தி சரி செய்துவிட்டார்! ஆனால், 1920-களில்
வானவியலாளர் எட்வின் ஹப்புள் (Edwin Hubble) அவர்களின் ஆராய்ச்சி
முடிவுகள் பிரபஞ்சம் விரிவடைகிறது எனும் உண்மையை தெளிவாக
எடுத்துக்காட்டியதை அறிந்த ஐன்ஸ்டீன், தனது சமன்பாட்டிலிருந்து சமாளிப்பு
காரணத்திற்காகத் தான் சேர்த்த அந்த மாறாத மதிப்பை ("cosmological
constant") நீக்கிவிட்டார்! பிறகு ஒருசமயம் அவர் அது குறித்துச்சொல்லும்
போது, "இதுவே தன் வாழ்க்கையில் தான் இழைத்த பெரும் தவறு!" என்றார்.
ஆனால், பிரபஞ்சவியலின் வேறொரு சிக்கலைத்தீர்க்கும் முயற்சியில்
ஈடுபட்டிருந்த சில விஞ்ஞானிகள், ஐன்ஸ்டீன் நீக்கிய அதே "மாறாத மதிப்பை"
மீண்டும் சமன்பாட்டில் சேர்க்கவேண்டிய அவசியத்தைச் சந்தித்ததாகச்
சொல்லப் படுகிறது!

இவ்வாறு விஞ்ஞானப் பிரபஞ்சவியலானது பலவித சமாளிப்புகளையும்,
பூசிமெழுகுதல்களையும், தவறான முடிவுகளையும், அரை-உண்மைகளையும்
கொண்டதாக விளங்குகிறது!

ஐன்ஸ்டீன் அவர்கள் இயற்கையின் கணிதவியல் விதிகளில் நம்பிக்கை
கொண்டவராக இருந்தார். இயற்கை விதிகளின் துல்லியமான தன்மையை
அவர் கடவுளின் கையாகக் கண்டார்! இதன் காரணமாகவே அவர் குவாண்டம்-
எந்திரவியலின் அடிப்படைக் கோட்பாடான ஹெய்ஸன்பெர்க்கின் "நிச்சயமற்ற
விதி" யை ஏற்றுக்கொள்ள மறுத்தார். அதாவது, அணுக்கருவின் மட்டத்தில்,
இயற்கையும், பிரபஞ்சமும் குருட்டாம் போக்கில் இயங்குகிறது, அதாவது,
நிகழ்வுகள் தற்செயலாக, விதியற்ற முறையில் நிகழ்கின்றன என்பதை
ஐன்ஸ்டீனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை! இவ்வகையில், அவர் தனது
கொள்கைகளில் ஒரு பழமைப்பேணியாக (Conservative)இருந்தார். இதன்
காரணமாகவே அவர், "கடவுள் பிரபஞ்சத்துடன் தாயக்கட்டை உருட்டி விளை
யாடிக் கொண்டிருக்கவில்லை!"  என்று குறிப்பிட்டார்!

ஆனால், நிறை, சக்தி, ஈர்ப்பு, (ஒளியின்) வேகம், அணுத்துகள்கள், மின்காந்த
விசை, வடிவவியல் ஆகியவை பௌதீகச் சடப் பிரபஞ்சத்தின் பொருண்மை
யான அம்சங்களே எனும் பட்சத்தில், இக்காரணிகளை, அல்லது பௌதீகப்
பண்புகளைக் கொண்டு எவ்வாறு ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும், அது ஏன்,
எதற்காகத் தோன்றியது, அதன் குறிக்கோள், இலக்கு என்னவென்றும்; மேலும்,
பிரபஞ்சத்திற்கும், மனிதனுக்கும்(உணர்வுக்கும்) உள்ள தொடர்பு என்ன? மனித
வாழ்வின் அர்த்தம், மற்றும் குறிக்கோள் என்ன? என்பவை பற்றியும் எவ்வாறு
புரிந்து கொள்ளமுடியும்? முடியாது! பௌதீகப் பிரபஞ்சத்தின் அமைப்பையும்,
அது எவ்வாறு செயல்படுகிறது என்பதைக்கொண்டும் பிரபஞ்சத்தின் நோக்கம்
என்ன என்பதை ஒருபோதும் புரிந்துகொள்ளமுடியாது! நாம் வசிக்கும் வீட்டை
(கட்டடத்தை)ப் புரிந்துகொள்வதன் மூலம் நம் வாழ்வின் அர்த்தத்தையும்,
குறிக்கோளையும் புரிந்து கொள்ள இயலாது! நாம் வசிக்கும் வீடு நம்மால்
கட்டப்பட்டது, ஆனால் பிரபஞ்சம் எனும் வீடு தானே அமைந்தது (அதாவது
ஆமையும், அதன் ஓடும் போல) என்பதுதான் இரண்டிற்குமுள்ள வித்தியாசம்!

ஆம், ஆமையும், அதன் மேலோடும் பிரிக்கவியலாதவையாகும்! ஆமைக்கு
அதன் மேலோடு பகைமையானதல்ல; மாறாக, அதுவே அதன் பாதுகாப்புக்
கவசம் ஆகும்!அவ்வாறே பிரபஞ்சம் என்பது மனிதனின் மேலோடு போன்றதே
ஆகும்! ஆனால், ஆமையின் மேலோட்டைப் பொறுத்தமட்டில்,  ஆமை
ஏன், எதற்காக இருக்கிறது, வாழ்கிறது; ஆமையினுடைய வாழ்வின் இலக்கு,
குறிக்கோள் என்ன என்பது தெரியாது! துரதிருஷ்டவசமாக ஆமைக்கும் கூட
தன் வாழ்வின் குறிக்கோள், இலக்கு என்ன என்பது தெரியாது! அதேநேரத்தில்,
ஆமையினுடைய வாழ்வின் குறிக்கோள் எதுவாயினும், அக்குறிக்கோளை
அடைவதற்கு உதவும் ஒரு கருவியாகச் செயல்படுவதே மேலோட்டின் பணி
ஆகும்!

அதேபோல், மனிதனின் மேலோடான பிரபஞ்சத்திற்கும் மனிதனுடைய
வாழ்வின் நோக்கம், குறிக்கோள், இலக்கு என்னவென்று எதுவும் தெரியாது!
ஆனால், ஆமையைப்போல் மனிதன் தனது வாழ்வின் அசலான குறிக்கோள்
என்ன, இலக்கு என்ன என்று தெரியாமல் வாழ இயலாது! மனிதன் தனது
வாழ்வின் குறிக்கோளை அறிவதற்காக முடிவேயில்லாமல் தன் மேலோடான
பிரபஞ்சத்தை ஆராய்ந்து கொண்டு இருக்க வியலாது! மாறாக, மனிதன் தன்
உள்ளீடுகளை ஆராய்வது அவசியம்; ஏனெனில், ஒரு ஆரஞ்சுப்பழம் என்பது
அதன் மேல் தோல் மட்டுமல்ல; அதனுடைய சுளைகளும், முக்கியமாக அச்
சுளைகளில் அடங்கியுள்ள சாறும் ஆகும்! மனிதனே (ஒவ்வொரு மனிதனும்)
பிரபஞ்சத்தின் இதயம் போன்றவன் ஆவான்! ஆகவே, மனிதன் தன் சாரத்தை
அறிவது அவசியமாகும்!

இவ்விடத்தில் இன்னொரு அம்சத்தையும் நாம் தெளிவுபடுத்திக் கொள்வது
நமது புரிதலை மேலும் ஆழப்படுத்துவதாக அமையும்! அதாவது, ஆமை
முக்கியமா? அல்லது அதன் ஓடு முக்கியமா? ஆமைக்காக அதன் மேலோடு
இருக்கிறதா? அல்லது ஓட்டிற்காக ஆமை இருக்கிறதா? அதாவது, பிரபஞ்சம்
மனிதனுக்காக இருக்கிறதா? அல்லது மனிதன் பிரபஞ்சத்தின் எங்கோ ஒரு
மூலையில் விபத்துபோலத் தோன்றிய வெறும் ஒரு வேடிக்கைப்பொருளா?
உண்மையில், ஆமையும், அதன் மேலோடும் வேறு வேறு அல்ல என்பதைப்
போல மனிதனும், பிரபஞ்சமும் வேறு வேறு அல்ல! ... .

முடிவாக, "இப்பிரபஞ்சம் நட்பார்ந்த ஒரு இடமா அல்லது இல்லையா?" என்ற
கேள்விக்கு நாம் இருவித பதில்கள் இணைந்த ஒரு முழுமையை வந்தடை
கிறோம் எனலாம்! அதாவது, இப்பிரபஞ்சத்தை ஒரு சாசுவதமான வசிப்பிடம்
என்பதாகக் கருதுவோமெனில், அது ஒரு பாதுகாப்பான, நட்பார்ந்த இடமல்ல!
ஏனெனில், இப்பிரபஞ்சமானது அதிகபட்சம் ஒரு நூறு ஆண்டுகளுக்கு மேல்
மனிதனை உயிரோடு வைத்துக்காப்பதில்லை! மாறாக,அதை ஒரு தற்காலிகத்
தங்குமிடம் என்பதாகக் கருதுவோமெனில், அது ஒரு நட்பார்ந்த இடமே
எனலாம்!

உண்மையில், ஒரு மேலோட்டமான பார்வைக்குத்தெரிவது போல், பிரபஞ்சம்
என்பது ஒரு "இடம்" அல்ல; அது ஒரு இயக்கம் அல்லது நிகழ்வுமுறையே
ஆகும். அதை நாம் மிகப்பொருத்தமாக ஒரு பரிணாம நிகழ்வுமுறை எனலாம்!
அது தன்னைத்தானே கடந்து வளர்ந்து செல்லும் ஒரு விசித்திரமான நிகழ்வு
முறை யாகும்! பிரபஞ்ச இயக்கத்தின் அம்புத்தலை பௌதீகத்தளத்தை விட்டு
வளர்ந்து வெளியேறி வெகு காலமாகிறது! ஆனால், விஞ்ஞானிகளோ
இன்னும் பௌதீகத்தளத்தையே ஒட்டுமொத்த பிரபஞ்சம் என்பதாகக் கருதி
ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்! ஒரு அமீபா என்பது உண்மையில்
பிரபஞ்சத்தின் ஒரு உயர்-வளர்ச்சி நிலையே என்பதை இயற்பியல் விஞ்ஞானி
களால் இனம் காண முடியவில்லை! இன்னும் உயிரியல் விஞ்ஞானிகளாலும்
ஒரு அமீபாவை வெறும் ஒரு ஒரு-ஸெல் உயிரியாகத்தான் பார்க்கமுடிகிறதே
தவிர அதைப் பிரபஞ்சத்தின் வித்தியாசமான ஒரு வளர்ச்சிநிலையாக, உயிர்
பெற்ற பிரபஞ்சமாகப் பார்க்க முடிவதில்லை! இந்நிலையில் எவ்வாறு
இவ்விஞ்ஞானிகளால், மனிதனே பிரபஞ்சம் எனும் நிகழ்வுமுறையின் இறுதிக்
கண்ணி, அதாவது பிரபஞ்ச விருட்சத்தின் ஒப்பற்ற கனி, அதாவது, உணர்வு
பெற்ற பிரபஞ்சம் என்ற உண்மையைப் புரிந்து கொள்ள இயலும்?

ஒரு மரத்தில் காய்த்திருக்கும் காய்களுக்கும் அம்மரத்திற்கும் என்ன தொடர்பு
உள்ளதோ அதே தொடார்புதான் பிரபஞ்சத்திற்கும், மனிதர்களுக்கும் உள்ள
தொடர்பும் ஆகும்! காய்களைப்பொறுத்தவரை அவை அம்மரத்தில் காய்த்திருக்
கின்றன என்பதைத் தாண்டி அம்மரம் பாதுகாப்பானதா, நட்பார்ந்த இடமா
என்பது போன்ற கேள்விகள் அர்த்தமற்றவை! காய்களின் குறிக்கோளும்
இலக்கும் அம்மரத்திலேயே தங்கி வாழ்ந்துகொண்டிருப்பதல்ல; மாறாக,
எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக முற்றிக்கனிகளாவது
ஒன்றே காய்களின் ஒரே குறிக்கோளும், இலக்கும் ஆகும்! ஏனெனில், காய்கள்
கனிகளாக ஆவதே அக்காய்களுடையது மட்டுமல்லாமல் அம்மரத்தினுடைய
அர்த்தமும், முழுமையும் ஆகும்! இவ்வாறே, மனிதர்களும் எவ்வளவு
விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக தம் உணர்வில் முற்றிக்கனிந்து
முழு-உணர்வு நிலையை அடைவதொன்றே மனிதர்களை முழுமைப்படுத்தும்!
மனிதன் அடையக்கூடிய அம்முழுமையில்,வித்தினுள் அடங்கிய விருட்சமாக
இப்பிரபஞ்சம் மனிதனுள் அடங்கிவிடும்! அம்முழுமை மட்டுமே உண்மையில்
பாதுகாப்பான, நட்பார்ந்த ஒரே இடமாகும்!

                           ••

            மனிதா, உன்னைத்தவிர்த்து விட்டு
            உலகை நீ புரிந்து கொள்ள முடியாது!
            உலகைப் புரிந்து கொள்ளும் உணர்வாளன்
            உலகிடமிருந்து வேறானவனாக
            இருக்க முடியுமா?
            உலகைத்தவிர்த்து விட்டும் உன்னை நீ
            புரிந்து கொள்ள முடியாது!
            உலகின் நீட்சியும் உயர் வளர்ச்சி நிலையும்
            நீ தானே!
            மனிதா நீ உலகைச் சார்ந்திருப்பதை விட
            பெரிதும் உலகம் தான் உன்னைச்
            சார்ந்திருக்கிறது!
            உன் வழியாக உலகம் அடைய வேண்டிய
            உய்விற்காக!
            உலகின்  உயர் வளர்ச்சி நிலையே நீ எனில்
            உனது வளர்ச்சியின் உச்சப்புள்ளியே
            உலகையும் உன்னையும் கடவுளையும்
            ஒன்றிணைக்கும் ஒப்பற்ற
            ஒருமையும் முழுமையுமான உண்மை!
                          ••

மா.கணேசன்/ நெய்வேலி/ 24-08-2017
-----------------------------------/----------------------------------------

Thursday, 24 August 2017

மிகவும் நேர்மறையான ஒரு பதிவு!




வாசகர்களே, மிகவும் நேர்மறையான ஒரு பதிவிற்கு உங்களை
வரவேற்கிறேன்! வெகுகாலமாக உங்களிடம் உள்ள குறைகளைச் சொல்லியும்,
உங்களைக் குறை கூறியும்,  எனது பதிவுகளைப் பதிவேற்றம் செய்து
வந்துள்ளேன்! நீங்கள் எவ்வாறிருந்தாலும், நீங்கள் நீங்களாகவே இருப்பதில்
தான் நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியடைகிறீர்கள், திருப்தியடைகிறீர்கள்!
உங்களைப்பற்றி உங்களுக்கே எவ்வித அதிருப்தியும் இல்லாத நிலையில்
உங்களைக் குற்ற உணர்வில் ஆழ்த்துவதற்கு நான் யார்?

உங்களுக்கு நீங்கள் எவ்வளவு அற்புதமானவராக இருக்கிறீர் என்பது எனக்குத்
தெரியாமலில்லை! உங்களை ஆன்மீகத்தின் உச்சிக்குக் கொண்டு சேர்க்க
வேண்டுமெனும் எனது ஆர்வக்கோளாறினால் நான் எனது கறாரான
அளவுகோலைக்கொண்டு உங்களை அளந்து உங்களது போதாமையைச்
சுட்டிக்காட்டும் தவற்றைச் செய்து வந்துள்ளேன்! அது போகட்டும்! நீங்கள்
வாழும் அர்த்தமற்ற வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாயிருக்கும்
பட்சத்தில் உங்கள் வழியில் குறுக்கிட நான் யார்?

உங்களுடைய போதாமையிலும் நீங்கள்தான் எவ்வளவு முழுமையானவராக,
பூரணமானவராக உள்ளீர்! நீங்கள் எவ்வளவு மன்னிக்கும் குணம் உள்ளவராக
இருந்தால் உங்களுடைய அனைத்துத் தவறுகளையும், மதியீனங்களையும்
எவ்வளவு சுலபமாக மன்னித்து மறந்து விடுபவராக உள்ளீர்!

உங்களுடைய தாராள குணத்தைப் பற்றிச் சொல்லவேண்டியதில்லை;
உங்களுக்குத்தான் நீங்கள் எவ்வளவு தாராளமாக யாவற்றையும் அள்ளிக்
கொடுத்துவிடுகிறீர்கள்! என்ன, அதிர்ஷ்டம் உங்களைப் பெரிய கோடீஸ்வரராக
ஆக்கிடவில்லை என்பதுதான் அதிர்ஷ்டத்தின் குறை! உங்களை நன்கு அறிந்த
சிலர் உங்களை கஞ்சன், கருமி என்றெல்லாம் சொல்வது உங்கள் மீதுள்ள
காழ்ப்புணர்ச்சியினால் தான் என்பதும் உங்களுக்குத் தெரியும்!

பொறாமையின் மொத்த உருவமாக நீங்கள் திகழ்ந்தாலும் அழகில் நீங்கள்
குறைந்தவரல்ல என்பது நீங்கள் எவ்வாறு உங்களை அலங்கரித்து அழகு
படுத்தி உள்ளூர மகிழ்கிறீர்கள் என்பது உங்களுக்கே தெரியுமே!

உங்களுடைய பேராசையைப் பொறுத்தவரை, வானமே எல்லை என்றுதான்
சொல்லவேண்டும்! உங்களுடைய சுயநலத்தைப் பற்றிச் சொல்லத்
தேவையில்லை; இந்த உலகில் எவர் தான் சுயநலமாக இல்லை?
சுயநலமற்றிருப்பதற்கு நீங்கள் என்ன, பிழைக்கத்தெரியாத காந்தியா,
புத்தரா, அல்லது யேசுவா?

அகந்தையின் சிகரமாக நீங்கள் இருந்தாலும் கற்றறிந்தோர் சபையில் நீங்கள்
எவ்வளவு அடக்கமாக ஒன்றும் தெரியாதவர் போல நிறைகுடமாக இருக்கிறீர்
என்பது எனக்கு மட்டுமே தெரியும்!

உங்களுடைய போலித்தனம் உங்களுடைய ஒட்டுண்ணித்தனத்தைப்போல
எவ்வளவு அசலானது! எவருமே அதை நகல் செய்யமுடியாது!
ஞானம், பக்குவம், தெளிவு, போன்று உங்களிடம் இல்லாத பண்புகளையும்,
அம்சங்களையும் உங்களிடம் இருப்பதாகக் கொள்ளும் விஷயத்தில் நீங்கள்
பிரமையின் எல்லை என்றால் அது மிகையாகாது! இன்மையின் பூரணம்
நீங்கள்! இருப்பின் சூன்யம் நீங்கள்! உங்களைப்பற்றிச் சொல்ல வார்த்தைகளே
இல்லை என்பதால் தானே நீங்கள் ஒரு ஊமையைப்போல அவ்வளவு
அமைதியாக உள்ளீர்!

உள்ளதைக்கொண்டு திருப்தியடையும் உங்களது பா(சா)ங்கு தான் என்ன!
ஆழமற்ற உங்களுடைய கொஞ்ச அறிவில் நீங்கள் கொள்ளும் நிறைவு பசிபிக்
கடலைவிட ஆழமானது!

மொத்தத்தில் நீங்கள் அனைவருமே மனிதருள் மாணிக்கமாக விளங்குவதால்
இப்பூமிக்கிரகமே சூரியனைப்போல பிரகாசிக்கிறது! உங்களில் எவரையும்
எவருடனும் ஒப்பிடவியலாத அளவிற்கு அனைவரும் ஒரே குட்டையில்
ஊறிய அற்புத மட்டைகளாய் உள்ளீர்!

மா.கணேசன்/ நெய்வேலி/ 23-08-2017
----------------------------------------------------------------------------


Tuesday, 22 August 2017

நோய்பிடித்த இனம்!




பூக்களைப் பறிக்காதீர், பூக்கள் தோட்டத்திற்கு அழகு!
புல்தரையில் நடக்காதீர்! புற்கள் ஆடு, மாடுகளுக்கு உணவு!
புல்தரைகளை அமைக்காதீர்! புற்களை சுதந்திரமாக வளரவிடுங்கள்!
இயற்கையில் வெட்டித்திருத்தப்பட்ட புல்தரைகள் எங்கேயுமுண்டா?
முதலில் உமது நோய்பிடித்த அழகியலை திருத்திக் கொள்ளுங்கள்!

தோட்டத்துச் செடிகளை, காட்டுச்செடிகளை மூலிகை என்றழைக்காதீர்!
அவை உங்களுக்காக இருக்கின்றன என்றால் நீர் எவருக்காக இருக்கிறீர்?
உம்மைப்போலவே ஒவ்வொரு உயிரினமும் தமக்காகவே வாழ்கின்றன!
சுய நலம் பீடித்த விலங்குகளா! நீவிர் எதற்கான மருந்தாகிறீர்?
நோய் பிடித்த மனிதர்களே, நீங்களே பூமியைப்பீடித்த பெருநோய்க்கிருமிகள்!
உம்மால் எதற்கும், யாருக்கும் எவ்வித உதவியும் பயனும் இல்லை!
முடிவில் மரணத்தில் முடிந்துபோகும் நீவிர் உமக்கும் பயனற்றவர்களே!

இவ்வுலகமும் அதிலுள்ள யாவும் உமக்காகப் படைக்கப்பட்டதெனில்
நோக்கம் கெட்ட மனிதர்களா, நீவிர் எதற்காகப் படைக்கப்பட்டுள்ளீர்?
உண்டு, உறங்கி, இனம்பெருக்குவதே உம்முடைய வாழ்வுமெனில்
அதற்கு புழுக்களும், பூச்சிகளும் போதுமே, இன்னொரு விலங்கு எதற்கு?

உடல் நலம் பேணுவது அவசியமே; ஆனால், மனித ஜந்துக்களைத் தவிர
வேறு எவ்வுயிரினமும் தம் உடல்நலம் குறித்து அலட்டிக்கொள்வதில்லை!
நோயுற்ற உடலோ, நோயற்ற உடலோ இரண்டுமே மரணத்திற்குட்பட்டதே!
மரணத்தில் முடிந்துபோகும் உடலின் நலத்தைவிட ஆன்மநலமே முக்கியம்!
ஆகவே ஆரோக்கியம் பற்றியல்லாமல் ஆன்மாவைப்பற்றி அக்கறைப்படுங்கள்!
ஆன்மாவாய் மலர்வதிலேயே மரணம் கடந்த பெருவாழ்வு அடங்கியுள்ளது!

உடலைப் பீடிக்கும் நோய்களைப் பற்றி அரற்றும் அறிவிலிகளா!
"உடலே நோய்!" என்று சொல்லப்பட்டிருப்பதை நீவிர் அறியவில்லையா?
உடலிலிருந்து விடுதலை பெறும் ஞானத்தைப்பெறுவதே ஆன்மீக வாழ்க்கை!
அதற்குமுன் உமது மனத்தைப் பீடித்துள்ள நோய்களை அகற்றுங்கள்!

"உணர்வின்மை" என்பது தான் உம்மைப் பீடித்த மூலமுதல் மனநோய்!
பிற நோய்கள் யாவும் உணர்வின்மையைப் பின்பற்றி வருபவையே!
உணர்வின்மைக்கு மருந்து இல்லை; ஆனால், மருத்துவர்கள் இருக்கின்றனர்!
ஞானிகளே அந்த மருத்துவர்கள்! அவர்களது நல் உபதேசங்களே தீர்வு!
அவற்றை முறையாகப் பின்பற்றினால் உமது பிறவி நோய் தீரும்!

உணர்வின்மையை தொடர்வது சுயநலம் எனும் சுயம்-அழிக்கும் நோய்!
அடுத்தது ஆணவம், அதையடுத்து பொறாமை, பேராசை, தற்பெருமை
சுய-முக்கியத்துவம், சோம்பல், போலித்தனம் ஆகியவை தொடர்கின்றன!
பொதுவாக மன-நோயை மட்டுமே நீவிர் பைத்தியநிலை என அறிகின்றீர்!
ஆனால், சுயநலம், ஆணவம், பொறாமை, தற்பெருமை, பேராசை
போலித்தனம் போன்றவையும் மனநோய்களே, பைத்திய நிலைகளே!

எவையெல்லாம் மனித உணர்வை உயரவிடாமல், மட்டுப்படுத்துகின்றனவோ
அவையெல்லாம் மன-நோய்களுக்கான  விஷ வித்துக்களே!
சுருங்கச் சொன்னால், மெய்ம்மை நாட்டம் கொள்ளாத எவரும் பைத்தியமே!
எதற்காக வாழ்கிறோம் என்பதை அறியாத ஒருவரை வேறு என்ன சொல்ல?

மேலும், மனிதன் ஒரு விலங்கு அல்ல! ஆயின், வாழ்வின் அர்த்தமறியாது
வாழ்பவர்களுக்கும் விலங்குகளுக்கும் பெரிதாக வித்தியாசம் எதுவுமில்லை!
மனிதவாழ்வின் தலையாய அம்சங்கள் இரண்டே இரண்டு மட்டுமே!
அவை, வாழ்வின் அர்த்தம் மற்றும் வாழ்வின் குறிக்கோள் பற்றியவையே!
இவ்விரண்டையும் அறிவதைத்தவிர்த்த பிறசெயல்கள் பிழைப்புக்கானவையே!
பிழைப்பு வேறு, வாழ்க்கை வேறு என்பதை எப்போது நீர் அறியப்போகிறீர்?
மூடர்கள் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் மூடர்களாகவே இருப்பர்!

ஏழு மலைகள், ஏழு கடல்கள் தாண்டி அங்கோரிடத்தில் ஒரு செடி உள்ளது!
அதன் மலரைத் தின்றால் இறப்பு என்பது ஒருபோதும் உங்களுக்கு நேரிடாது!
என்று யாராவது சொன்னால் உடனே அந்த அற்புதச் செடியை தேடிச்செல்வீர்!
ஆனால், இறவாமல் வாழ்வதற்கும் கூட ஒரு காரணம், இலக்கு வேண்டும்!
ஏனெனில், அர்த்தமில்லாத வாழ்க்கை மரணத்திற்கு ஒப்பானதாகும்!
ஆயின், உண்மையில் சாகா நிலையைத்தரும் அற்புத மலர் ஒன்று உள்ளது!
அதற்கு நீர் ஏழு மலைகளையும், கடல்களையும் தாண்டவேண்டாம்!
உமது அகந்தையைத் தாண்டினால் போதும்! நீர் ஆன்மாவாய் மலர்ந்திடுவாய்!

பிரதானமாக நீர் மதிப்பது பணத்தையும்,பொன்னையும்,பொருளையும் தானே?
உடமைகளால் உம்மை ஸ்தாபிக்கும் நீர் மரணத்தின் உடமையே அல்லவா?
வாழ்வின் அசலான இலக்கை அறிய நேரமில்லாமல் நீர் வாழ்வீரெனில்
ஏற்கனவே நீர் மரணத்தை உம்முடைய இலக்காகத் தேர்ந்துவிட்டவராகிறீர்!
உண்மையை அறிவீர்! வாழ்வின் முடிவிடம் மரணமல்ல, நித்திய வாழ்வே!

இவ்வுண்மைகள் வழக்கத்திற்கு மாறானவை, ஆகவே உமக்குக் கசப்பானவை!
ஏனெனில், அசலான வாழ்க்கை உமது வழக்கத்திற்குள் அடங்குவதில்லை!
இப்பதிவுகள் எல்லோருக்குமானவையே என்றாலும் என்ன செய்வது?
சிரத்தை கொண்டு புரிந்துகொள்பவர்களுக்கே இவை முதலில் உரித்தானவை!

அசலான வாழ்க்கையைப் பொறுத்தவரை நீவிர் அனைவரும் அந்நியர்களே!
அடிப்படைத்தேவைகளை வாழ்க்கையாகக் கொண்ட நீர் அடிப்படைவாதிகளே!
வீண் பகட்டுக்களையும் ஆடம்பரங்களையும் மோகிக்கும் நீர் வீணர்களே!

உம்முடைய அற்ப சந்தோஷங்களையும், சொந்த சோகங்களையும் விடவும்
அதிமுக்கியமான அம்சங்கள் இப்பிரபஞ்சத்தின் உச்சியில் உள்ளன!
தமது சொந்த விருப்பங்களையும் உணர்வுகளையும் கருத்துகளையும் கடந்து
மெய்ம்மையை நேசிப்பவனே உணர்வின் உச்சத்தை அடைகிறான்!
இன்பம் துன்பம் இரண்டையும் கடந்து மெய்ம்மையை நாடுபவனுக்கே
ஞானப்பொக்கிஷங்கள் அடங்கிய மாளிகையின் கதவுகள் திறக்கின்றன!


மா.கணேசன்/ நெய்வேலி/ 18-08-2017
----------------------------------------------------------------------------

வழக்கத்திற்கு மாறான கேள்விகளும் அசாதாரணமான பதில்களும் - 1

              கேள்வி - 1 நீங்கள் இறந்தபிறகு, அந்த, வாழ்க்கைக்குப் பிறகான வாழ்க்கையில் (In the After Life) உங்களுக்கு மிகவும் பிடித்த, தாய், ...