
அல்லது டாக்கின்ஸின் 'குருட்டுக் கடவுள்'
(The Selfish Gene Or Dawkins' Blind God))
"நம்முடைய மரபணுக்கள் (genes)நம்மை உருவாக்கின. நாம்
விலங்குகள், நாம் இருப்பது அம்மரபணுக்களைப் பாதுகாப்பதற்
குத்தான். பயன்கொள்ளப் பட்டதும் வீசியெறியப்படும் உயிர்-
பிழைப்பு எந்திரங்கள் என்பதற்கு மேல் நாம் வேறொன்றுமில்லை.
சுயநலங்கொண்ட மரபணுக்களின் உலகம் என்பது குரூரமிக்க
போட்டியும்,கருணையற்ற ஏய்ப்பும், ஏமாற்றும் நிறைந்த ஒன்றாகும்.
ஆனால், இயற்கையில் காணப்படும் பொது- நலங்கொண்ட
செய்கைகள் - அதாவது, தேன் -கூட்டைக் காப்பாற்றுவதற்காக
எதிரியினங்களைக்கொட்டி தன் கொடுக்குகளையிழந்து தன்னை
மாய்த்துக்கொள்ளும் தேனீக்கள், அல்லது பருந்தின் வரவைக்கண்டு
குரலெழுப்பி அறிவித்து பிற பறவைகளை எச்சரிக்கை செய்வதன்
விளைவாக பருந்தை தன் பக்கம் ஈர்த்து வலிய ஆபத்தில் சிக்கிக்
கொள்ளும் பறவைகள் மரபணுவின் சுயநலம் எனும் மரபை மீறுகின்
றனவா? எவ்வகையிலும் இல்லை: மாறாக, சுயநலங்கொண்ட மரபணு
தந்திரமானதும்கூட என்பதை டாக்கின்ஸ் எடுத்துக்காட்டுகிறார்.
அதே வேளையில், பூமியில் நம் (மனித)இனம் மட்டும்தான்,
'சுயநலங்கொண்ட மரபணுக்களின்' சதித்திட்டத்தை எதிர்த்து கலகம்
செய்யக்கூடிய ஆற்றலைப் பெற்றுள்ளது என நம்பிக்கையூட்டுகிறார்
டாக்கின்ஸ் .அவரது 'சுயநலங்கொண்ட மரபணு' எனும் நூல், நம்மை
போருக்கு ஆயத்தமாகச் சொல்லும் அழைப்பு ஆகும். அந்நூல் ஒரு
விதிஏடும், கொள்கைவிளக்க அறிக்கையும் ஆகும். அது ஒரு துப்பறியும்
நாவலைப்போல நம்மைப் பற்றுகிறது. ...."
இவ்வாறெல்லாம், 1976-ல் வெளியான, ரிச்சர்ட் டாக்கின்ஸ்-ன், 'சுயநலங்
கொண்ட மரபணு' நூலைப்பற்றி நோபல் பரிசு பெற்ற பிரிட்டிஷ் உயிரியல்
விஞ்ஞானி சர் பீட்டர் மெடாவர் (Sir Peter Medawar) குறிப்புரை எழுதி
யுள்ளார்.
ஆனால், யார் அந்த ரிச்சர்ட் டாக்கின்ஸ்? அவரது முழு பெயர், கிளிண்டன்
ரிச்சர்ட் டாக்கின்ஸ் ( Clinton Richard Dawkins) பிறந்தது கென்யா,
மார்ச் 26, ஆண்டு 1941. அவர் ஒரு சிறந்த விலங்கியலாளர், பரிணாம-உயிரி
யல் விஞ்ஞானி; இவை மட்டுமல்ல, டாக்கின்ஸ் ஒரு டார்வினியவாதி, நாத்தி
கவாதி, பொருள்முதல்வாதி, இயற்கைவாதி மற்றும் ஒரு சுருக்கல்வாதி
(Reductionist)யும் ஆவார். எல்லாவற்றுக்கும்மேலாக, அவரது துறைக்குச்
சம்பந்தமில்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்கும் சர்ச்சைக்குரிய விவா
தங்களில் ஈடுபடும் ஒருவர்.
திரு டாக்கின்ஸ் அவர்கள் பரிணாமக் கோட்பாட்டை சிறப்பாக விளக்கிச்
சொல்வதுடன் நிறுத்திக்கொண்டிருந்தால், இந்தக்கட்டுரையை எழுதவேண்
டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. அவர், பரிணாமக்கோட்பாட்டை, குறிப்பாக
டார்வினிய பரிணாமக் கோட்பாட்டை விளக்கிச்சொல்ல வந்துவிட்டு, அக்
கோட்பாட்டின் உணர்த்துகோல்களை வாழ்வின் எல்லா அம்சங்களுக்கும்
நீட்டித்து, ஏதோ டார்வினியம் என்பது வெறும் ஒரு விஞ்ஞானக்கோட்பாடு
மட்டுமல்ல, அது ஒரு பிரபஞ்சமாளாவிய மகா தத்துவம் என முன்வைத்தது
தான் பிரச்சினையாகும்.
திரு ரிச்சர்ட் டாக்கின்ஸ் அவர்கள் தமது 'சுயநலங்கொண்ட மரபணு' நூலில்
பரிணாமம் குறித்து அப்படி என்ன புரட்சிகரமான, அரிய விஞ்ஞான உண்
மையை, அல்லது, தனது உலகமகா கண்டுபிடிப்பை, வாழ்வின் அடிப்படைத்
தத்துவத்தை எழுதியுள்ளார்? இதோ, டாக்கின்ஸ் அவர்கள் தனது 1976 -ல்
வந்த முதல் பதிப்பில் தனது நூல் குறித்து எழுதிய முன்னுரையின் தொடக்க
வரிகள் :
" இந்நூலை கிட்டத்தட்ட ஒரு விஞ்ஞானப் புதினத்தை வாசிப்பது போல
வாசிக்கவேண்டும். இந்நூல் கற்பனையைக் கவரும் வகையில் வடிவ
மைக்கப்பட்டதாகும். ஆனல், இது விஞ்ஞானப் புதினம் அல்ல : இது
விஞ்ஞானம். வெறும் வழக்குச்சொல்லோ, அல்லது இல்லையோ,
'புனைவைவிட வினோதமானது' என்பதாகவே நான் இதன் உண்மையை
உணர்கிறேன். நாம் உயிர்-பிழைப்பு எந்திரங்கள்- ரோபோ ஊர்திகள்,
மரபணுக்கள் என்றறியப்பட்ட சுயநலங்கொண்ட மூலக்கூறுகளைப்
குருட்டுத்தனமாக பாதுகாக்குமாறு நிரலமைப்பு செய்யப்பட்டுள்ளோம்.
இது ஒரு உண்மை, இது என்னை இன்னும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வரு
கிறது. பல வருடங்களாக நான் இவ்வுண்மையை அறிந்தவனாக இருந்
தாலும் இன்னும் நான் அதற்கு முழுமையாகப் பழக்கப்படவில்லை.
எனது நம்பிக்கைகளில் ஒன்று என்னவெனில், மற்றவர்களையும் ஆச்சரி
யத்தில் ஆழ்த்துவதில் நான் ஓரளவு வெற்றி பெறுவேன் என்பதுதான்...."
ஆனால், பொதுவாக நாம் படித்தறிந்த உண்மை யாதெனில், மரபணுக்கள்
என்பவை நம்உடலின் ஒவ்வொரு ஸெல்லிலும் அடங்கியுள்ள மூலக்கூறுகள்,
அவைதான் நம்முடைய உடலியல் அம்சங்களை - கண்களின் நிறம் உள்பட
பிற பல குணாம்சங்களைத் தீர்மானிக்கின்ற காரணிகள் என்பதாக அறிந்
துள்ளோம். ஆனால், டாக்கின்ஸ் சொல்லுகிற 'புது' உண்மையோ முற்றிலும்
தலைகீழாக உள்ளது. அதாவது, "மனித ஜீவியோ, அல்லது, விலங்கு ஜீவியோ
எதுவாயினும், அது 'DNA' எனப்படும் மரபணுக்களின் கருவியே தவிர
இதற்கு மாறான வழியில் அமைவதில்லை" என்பதாக டாக்கின்ஸ் அடித்துக்
கூறுகிறார்.
டாக்கின்ஸ் அவர்களின் கூற்றின்படி, மரபணுக்கள் ( DNA மூலக்கூறுகள்)
மட்டுமே பிரதானமானவை, அவை தான் "உயிர்க்கரு" . மரபணுக்கள் இருக்
கின்றன; அவைதம்மைத்தாமே பிரதியெடுத்துக்கொண்டு, தம்மைப்பெருக்
கிக்கொள்வதற்காக, எத்தனையெத்தனை அவதாரங்கள் (உடல்கள்) எடுத்
தாலும், அவை எலியின் வடிவத்திலிருந்தாலும், அல்லது மனிதனின் வடிவத்
திலிருந்தாலும், இன்னும் கோடாணுகோடி வடிவங்களை எடுத்தாலும், அடிப்
படையில், அவற்றின் சாரத்தில் எல்லா உயிரினங்களும் ஒன்றுதான் எனும்
பட்சத்தில்; அதாவது, மரபணுக்கள் தம்மைத்தாமே பிரதியெடுப்பதற்கான
வெவ்வேறு உயிர்-பிழைப்பு எந்திரங்கள்தான் உயிரினங்கள்(species)என்-
றால், இவ்வாறு வெவ்வேறு உயிர்-பிழைப்பு எந்திரங்களை, அல்லது ஊர்தி
களை, அதாவது வெவ்வேறு இட-அமைவுகளுக்கும், சூழலுக்கும் ஏற்றவாறு
தகவமைந்து உயிர்-பிழைப்பதற்கான கருவிகளைக் கட்டமைப்பதற்கான
ஒரு வழிமுறைதான் 'பரிணாமம்' என்றால்; அதிலும், மரபணுக்கள் தம்மைத்
தாமே பிரதியெடுத்துப் பெருகி நிலைப்பதைத் தாண்டி, அம்மரபணுக்களுக்
கும், பரிணாமத்திற்கும் வேறு குறிக்கோளும், இலக்கும் இல்லை எனும் பட்
சத்தில், பரிணாமம் பற்றிய ஆய்வுகளும், கோட்பாடுகளும் எதற்கு, அவற்றி
னால் என்ன பயன்?
டாக்கின்ஸ் அவர்களைப்பொறுத்தவரை,அவர் ஒன்றேஒன்றை மட்டும்தான்
சொல்லவில்லை, அதாவது, DNA எனப்படும் மரபணுக்கூறு தான் 'கடவுள்'
என்று அவர் சொல்லவில்லை! அவர் அதை வெளிப்படையாகச்சொல்லாவிட்
டாலும்,அவரது கூற்றுகள்யாவும் அதைத்தான்குறிக்கின்றன!எவ்வாறெனில்
முதல் உயிர் அல்லது முதல் மரபணு எவ்வாறு தோன்றியது என்பது அவருக்
கும் தெரியாது; அவரது ஆசான், டார்வினுக்கும் தெரியாது! முதல் மரபணு
எவ்வாறோ தோன்றிவிட்டது எனும் முன்-நிகழ்வின் தொடர்ச்சியான தொரு
வழிமுறையைத்தான் 'பரிணாமம்' எனும் சொல்லைக்கொண்டும், 'இயற்கை
தேர்வு'(Natural Selection)எனும் நுட்பமுறையைக்கொண்டும் டார்வின்
தனது பரிணாமக் கோட்பாட்டை உருவாக்கினார்.
உண்மையில், டார்வினின் பரிணாமக் கோட்பாடு என்பது பெரிதும் மட்டுப்
பாடானதாகும்; வெறும் மட்டுப்பாடு மட்டுமின்றி பெரிதும் குறைபாடானது
மாகும்!
டார்வினின் பரிணாமக் கோட்பாடு என்பது என்ன? மூல-முதல் உயிரின்
தோற்றத்தைப்பற்றி எதுவும் சொல்லாமல்,அம்முதல் உயிரியிலிருந்து வெவ்
வேறு உயிரினங்கள் எவ்வாறு பரிணமித்தன என்பது பற்றிய டார்வினின்
பயனற்ற விளக்கங்களைத் தவிர அடிப்படைப்புரிதலுக்குரிய வேறு அம்சங்
கள் எதுவும் அவருடையகோட்பாட்டில் இடம்பெறவில்லை! மாறாக, டார்வின்
எடுத்தியம்பிய மாபெரும் 'விஞ்ஞான' உண்மைகள் இவைதான்:
* பரிணாமம் குறிக்கோளற்றது.
* பரிணாமம் திசையற்றது,அதாவது உயர்-வளர்ச்சி நிலைகளுக்கு இட்டுச்
செல்லாது.
* சடப்பொருள்தான் அனைத்து இருப்பின் அடித்தளம்.
இம்மூன்று விஷயங்களும் தவறானவை, ஏனெனில், அவை பரிணாமத்தை
மறுப்பவை, பரிணாமத்திற்கு விரோதமானவையாகும்! இந்நிலையில்,
டார்வின் கூறிய, 'இயற்கைத்தேர்வு' எனும் விஷயம் இன்னும் அபத்தமானது!
அதாவது, உலகையும், அதில் உயிரையும் வடிவமைத்துப் படைப்பதற்கு ஒரு
கடவுளும் இல்லை எனும்பட்சத்தில், அந்த இடத்தை 'இயற்கை' எடுத்துக்
கொள்ள இயலாது! இயற்கை என்பது உள்ளது; ஆனால், அதனால் எதையும்
தேர்வு செய்ய இயலாது என்பதுதான் உண்மை நிலையாகும். ஏனெனில்,
இயற்கையும், உயிர்-ஜீவிகளும் வெவ்வேறு அல்ல! இயற்கையானது உயிர்-
ஜீவிகளுக்கு முந்தையதுதான் என்பதால், அதனால் 'தேர்வு' செய்யவியலும்
என்பது தவறான கணிப்பு, அல்லது கருத்து ஆகும்! உயிர்-ஜீவிகள் உண்மை
யில் இயற்கையின் கிளைப்பு போன்ற வளர்ச்சி நிலையே (out-growth)
ஆகும். மேலும், இயற்கையும், உயிர்-ஜீவிகளும் வேறு வேறானவை அல்ல
என்பதாலும், அதிமுக்கியமாக,பரிணாமத்திற்கு நோக்கமும்,குறிக்கோளும்
உள்ளது என்பதாலும்; "வலியதே(அல்லது பொருத்தமானதே)வாழும்","உயிர்-
பிழைப்புக்கான போராட்டம்" போன்ற மேலோட்டமான விஷயங்களை
பரிணாமப்-பேருண்மைகளாகச் சித்தரிப்பது பிழையானதாகும்.
டார்வினிய பரிணாமம் உயிரியல் கோளத்திற்கு மட்டுமே பொருந்துவது,
அதிலும், அதனால் உயிரியல் கோளத்தையும்கூட முழுமையாக விளக்கிச்
சொல்லிவிட முடியாது! டார்வினிய பரிணாமம் உயிரினங்களின் மேலோட்ட
மான மாற்றத்தையும், மாறுபாட்டையும் (Variation)பற்றியது மட்டுமே!
ஆனால், டார்வினிய பரிணாமக்கோட்பாடு எவ்வளவு மட்டுப்பாடானது, தவ
றானது, பரிணாம விரோதமானது என்பதை விலாவாரியாக விளக்கிச்
சொல்லி நிரூபிப்பதல்ல இக்கட்டுரையின் நோக்கம் , அதை இன்னொரு
கட்டுரையில் நிச்சயம் செய்திடுவோம்.
இப்போதைக்கு, டார்வினின் பெயரைப் பயன்படுத்திக்கொண்டு, அவரது
மொண்ணையான பரிணாமக்கோட்பாட்டைத் தூக்கிப்பிடித்துக்கொண்டு,
அதாவது, டார்வினிய கோட்பாட்டை முன்னிறுத்தி அதற்குப்பின்னால் பதுங்
கிக்கொண்டு, 'புதிய டார்வினியம்', 'சமூக டார்வினியம்', என்ற பெயர்களில்,
விஞ்ஞானத்திற்கு விரோதமானவகையில், பொருள்முதல்வாதத்தையும்,
நாத்திகத்தையும் பேசி வருகிறவர்களில் முன்னனியில் விளங்கும் ரிச்சர்ட்
டாக்கின்ஸ்-ன் சுருக்கல்வாதப்பிதற்றல்களை, குறிப்பாக, அவரது 'சுயநலங்
கொண்ட மரபணு' எனும் வெற்றுக்கருத்தின், பயனற்ற தன்மையை வெளிப்
படுத்துவது தான் இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.
முதலிடத்தில், "மரபணு" (gene) என்பதையும், அதைத்தாங்கியுள்ளதாகக்
கூறப்படும் உயிர்-ஜீவியையும் பிரித்துப்பேச வியலுமா என்பது மிக மைய
மான கேள்வியாகும். உண்மைதான், மரபணுக்கள் இல்லாமல், எந்த உயிர்-
ஜீவியும் இருக்க முடியாது! அதே நேரத்தில், 'சாகா நிலை பெற்றவை' என
டாக்கின்ஸ் அவர்களால் குறிப்பிடப்படும் மரபணுக்கள் மரிப்பதில்லை,
அதாவது அவை ஒரு உயிர்-ஜீவியின் சந்ததிகளின் வழியாக தொடர்ந்து
உயிர்-பிழைத்துச் செல்கின்றன. அதாவது தனி ஜீவிகள் தான் சாகின்றன
அவற்றின் மரபணுக்கள் அந்த தனி ஜீவியின் சந்ததிகள், சந்ததிகளின் சந்த
திகள் மூலம் தொடர்ந்து சிரஞ்சீவியாக உயிர் வாழ்ந்து செல்கின்றன!
ஆனால், ஒரு உயிர்-ஜீவிக்கு வெளியே(அதாவது ஒரு உயிர்-ஜீவி இல்லாமல்)
மரபணுக்கள் தனியே உயிர் வாழ்வதில்லை. அதாவது மரபணுக்கள் இல்லா
மல் எந்த உயிர்-ஜீவியும் இல்லை; ஒரு உயிர்-ஜீவியும் இல்லாமல் மரபணுக்
கள் என்பதும் இல்லை.
ஆக, மரபணுக்களும், உயிர்-ஜீவிகளும் பிரிக்கவியலாதவை எனும் நிலை
யில் மரபணுக்கள் சுய நலங்கொண்டவையாக உள்ளனவா, அல்லது உயிர்-
ஜீவிகள் சுயநலங்கொண்டவையாக விளங்குகின்றனவா என்றகேள்விக்கே
இடமில்லையல்லவா? பொதுவாக எல்லா உயிரிகளும், குறிப்பாக மனிதர்
களும் சுயநலமுள்ளவர்களாக இருப்பதற்குக்காரணம் மரபணுக்கள்தானா?
அப்படியானால் தாங்கள் சுய நலமிகளாயிருப்பதற்குக் காரணம் தாங்கள்
அல்ல, மாறாக, மரபணுக்கள்தான் என பழியை மரபணுக்களின்மீது சுமத்தி
விடமுடியுமா?
முதலிடத்தில், "சுய நலம்" என்றால் என்ன? அது எதைக்குறிக்கிறது? "சுய
நலம்" என்ற சொல்லைக்கொண்டு டாக்கின்ஸ் அவர்கள் நம்முள் ஒருவித
குற்ற உணர்வை விதைத்து, பிறகு மரபணுக்கள் தான் நம்முடைய சுய நலத்
திற்குக் காரணம் என்று சொல்வதுடன், மரபணுக்கள் அடிப்படையிலேயே
சுயநலமானவை என்று சொல்வதுடன், மனிதஜீவிகளை அல்லது பொதுவாக
உயிர்-ஜீவிகளைவிட மரபணுக்கள் தான் பிரதானமானவை, மையமானவை
என்று நிலை நாட்டுவதன் பொருள் என்ன? தனது நூல் நெடுகிலும் மரபணு
வின் புகழைப் பாடிவிட்டு, நூலின் இறுதியில் 'சுயநலங்கொண்ட மரபணு'
வுக்கு எதிராக நம்மை போருக்கு ஆயத்தமாகச் சொல்வது,அதாவது நம்மை
பொது நலம் கொள்ளச்சொல்வது ஏன்?
இயற்கையில்,பொதுவாக பல்வேறு உயிரினங்களிடம், தனிஜீவிகளுக்கிடை
யேயும், குழுக்களுக்கிடையேயும் பொது நலம் கருதுவதும், ஒத்துழைப்பு
நிலவுவதும், இசைவு காண்பதும் ஆதியிலிருந்தே, உயிர் தோன்றிய காலத்தி
லிருந்தே இருந்துவருகின்ற அம்சங்களாகும். ஆனால், டாக்கின்ஸ் அவர்கள்
ஏற்கனவே இருந்துவருகின்ற ஒரு அம்சத்தை, அதாவது பொது நலம் எனும்
அம்சத்தை, இல்லாத ஒன்றாகச் சித்தரித்துவிட்டு, அதற்கான பழியை மரப
ணுக்களின் மீது சுமத்திவிட்டு, திடீரென புதிதாக நம்மை பொது நலம் கருது
மாறு போதிப்பது என்பது நம் அனைவரையும் முட்டாளாக்கும் விஷயமல்லா
மல் வேறென்ன?
திரு டாக்கின்ஸ் அவர்கள், கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக, நம்மைவிட
தனது சக-உயிரியலாளர்களையும், விஞ்ஞானிகளையும் தான் அதிகம்
முட்டாள்களாக ஆக்கியுள்ளார் என்பதுதான் உண்மை. ஏனெனில், மேலோட்
டமானதும், வெளிப்படையானதுமான விபர-உண்மைகளைக்கண்டு ஆச்சரி
யப்படுவதும், அவ்விபர உண்மைகளைக்கொண்டு பயனற்ற நெடிய கோட்
பாடுகளை உருவாக்கி முடிவிலாது அவை குறித்து விவாதித்துக்கொண்
டிருப்பதும் பெரும்பாலும் விஞ்ஞானிகள் மட்டும்தான்!
மரபணுக்கள் இல்லாமல் மனிதன் இல்லை; மனிதன் இல்லாமல் மரபணுக்
களும் இருக்கமுடியாது. இது எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும். ஆக,
மரபணுக்களும் உயிர்-ஜீவிகளும் பிரிக்கமுடியாதவை எனும் பட்சத்தில், மர
பணுக்கள் சுயநலமானவை என்றாலும், உயிர்-ஜீவிகள் சுயநலமானவை என்
றாலும் ஒன்றுதான். உயிர்-ஜீவிகளைச் சுருக்கினால், முடிவில் மரபணுக்கள்
தான் மிஞ்சும்; மரபணுக்களையும் சுருக்கினால், அடிப்படை அணுத்துகள்
கள்தான் மிஞ்சும். ஆனால், நாம் அவ்வளவு தூரம் செல்லத்தேவையில்லை!
ஏனெனில் சுருக்கிக்காண்பதன் வழியாக நாம் மேலதிகப்புரிதலை பெறப்
போவதில்லை. ஆம், விரிந்து வளர்ந்து பரிணமித்துச்செல்லும் இயற்கைக்கு
மாறாக, மனிதன் எதையும் சுருக்கிக்காணாதிருப்பானாக!
மரபணுக்கள் சுய நலமிக்கவை, ஆகவே நாம் சுயநலமிக்கவர்களாக இருக்
கிறோம் என்பதாக ரிச்சர்ட் டாக்கின்ஸ் கூறியது ஒன்றும் பெரிய கண்டு
பிடிப்போ, அல்லது, அது ஒரு மாபெரும் பிரபஞ்ச உண்மையோ அல்ல.
'வெண்மை வெண்மையாக உள்ளது' என்று சொல்வது பெரும் கண்டுபிடிப்பு
அல்ல; அது வெளிப்படையானதொரு விபர உண்மையாகும். அதுபோலவே,
மரபணுக்கள் சுய நலமிக்கவை என்பதும் பெரும் கண்டுபிடிப்பு அல்ல.
ஆனால், மரபணுக்கள் 'ஏன்' சுயநலமிக்கவையாக உள்ளன என்பதற்கான
பதிலைக் கண்டுபிடிப்போமெனில், அது குறிப்பிடத்தக்க ஒரு கண்டுபிடிப்
பாகத் திகழும் என்பதில் சந்தேகமில்லை! மரபணுக்கள் சுய நலங்கொண்ட
வையாக விளங்குகின்றன என்று சொன்ன ரிச்சர்ட் டாக்கின்ஸ், அவை ஏன்
சுய நலங்கொண்டவையாக விளங்குகின்றன என்பதை அவர் கண்டறிந்து
சொல்லவில்லை!
அதற்கான பதிலை நாம் கண்டுபிடிப்போம். ஆம், மரபணுக்கள் சுயநலமான
வையாகும், ஏனெனில் அவை அப்படித்தான் இருந்தாகவேண்டும், அவ்வாறு
இல்லாவிடில், பூமியின் மீது யாதொரு உயிரும் தோன்றி நிலைத்திருக்க முடி
யாது!அப்பட்டமாக சுயநலங்கொண்டிருப்பதற்கு, வெறுமனே உயிர்-பிழைத்
திருப்பது என்கிற உடனடி குறிக்கோளையும்தாண்டிய மிகத்தொலைவான
தொரு உயர்- நோக்கமும் உள்ளது! சுயநலம் என்பது உயிர்-ஜீவிகள் யாவற்
றுக்கும் மையமாக அமைந்த சுய-பாதுகாப்பு எனும் இயல்பூக்கியின் (self
-preservation instinct)சாரம் ஆகும்!
மேலும், உயிர்த்தோற்றம் (Origin of Life)என்பது ஒரு-முறை மட்டுமே
சம்பவிக்கும் நிகழ்வாகும் என்பதால், முதன் முதலாகத்தோன்றுகிற உயிர்-
ஜீவியானது தன்னைத் தானே பிரதியெடுத்துக்கொள்ளும் வகையில் அமை
வது உயிர்-ஜீவியின் அடிப்படை விதிகளில் ஒன்றாகும். ஆம், தன்னைத்
தானே பிரதியெடுத்துக்கொள்ளும் 'உள்-அமைந்த' அம்சம் இல்லாமல் எவ்
வொரு உயிர்-ஜீவியும் இருக்க முடியாது. எவ்வொரு உயிரற்ற சடப்பொரு
ளும், உதாரணமாக, ஒரு கூழாங்கல் தன்னைத்தானே பிரதியெடுத்துக்
கொள்வது முடியாது. இவ்விடத்தில், இப்படியுமில்லாத, அப்படியுமில்லாத
விளிம்பு- நிலை விஷயங்களான படிகங்கள், தாதுக்கள் போன்றவற்றை
நாம் கணக்கில் கொள்ளவில்லை.
ரிச்சர்ட் டாக்கின்ஸ்-ன் 'சுயநலங்கொண்ட மரபணு' எவ்வகையிலும் ஒரு
மாபெரும் கண்டுபிடிப்போ, புரட்சிகரமான புதுமையோ அல்ல. அவர் அந்த
நூலை எழுதியதன் நோக்கம் உண்மையிலேயே பரிணாமம் என்றால் என்ன
என்பதைக் கண்டுபிடிக்கும் வகையிலான ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கும்
தனது சக-உயிரியல் விஞ்ஞானிகளின் கவனத்தை சிதறடித்துக் குழப்பிக்
கெடுப்பதும், பொதுமக்களின் கவனத்தை தம் பக்கம் ஈர்த்துக் கவருவதும்
தானாகும்! ஆயினும், டெனிஸ் நோபில்(Denis Noble)போன்ற உயிரியலா
ளர்கள் டாக்கின்ஸ்-ன் கோட்பாட்டில் உள்ள மட்டுப்பாடுகளையும், குறை
பாடுகளையும் பட்டியலிட்டு சுட்டிக்காட்டாமலில்லை!
டாக்கின்ஸ்-ன் "மரபணுவின்-கண் பார்வை" யிலமைந்த பரிணாமம் ஓரள
விற்கு முறையாகத் தொடங்குகிறது என்றபோதிலும், அது பெரிதும் குறு-
நோக்குடையதாகத்(too short-sighted) தேங்கிவிடுகிறது என்பதுதான்
உண்மை நிலை. உயிரியல் பரிணாமத்திற்கான ஒரு அடிப்படை என்கிற
வகையில், 'சுயநலங்கொண்ட மரபணு' என்பது மிகவும் இன்றியமையாதது
என்றபோதிலும், மரபணுவின் 'சுய நலம்' எவ்வகையிலும்,அம்மரபணுவுக்கு
இறுதியான முக்கியத்துவம் எதையும் வழங்கிடுவதில்லை! ஆனால், ரிச்சர்ட்
டாக்கின்ஸ் அவர்கள், மரபணுவின் சுயநலத்தை அமளிப்படுத்தியதுமட்டும்
தான் மிச்சம், சுயநலத்தின் உண்மையான செயல்பாடு (function)என்ன
என்பதை அவர் கண்டுபிடிக்கத்தவறிவிட்டார்.
நல்லது, நாம் இப்போது மரபணுக்கள் 'ஏன்' சுயநலமிக்கவையாக உள்ளன
என்பதற்கான பதிலின் கருவான பகுதிக்குச்செல்வோம். அதாவது 'சுயநலங்
கொண்டிருப்பதற்கு, வெறுமனே உயிர்-பிழைத்திருப்பது என்கிற உடனடிக்
குறிக்கோளையும் தாண்டிய மிகத்தொலைவானதொரு உயர் -நோக்கமும்
உள்ளது' என்று ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். அது எத்தகைய நோக்கம்
அல்லது குறிக்கோள்- அதை அடைவதற்காக சுய நலம் என்பது கடைபிடிக்
கப்படுகிறது? எவ்வொரு உயிர்-ஜீவியும் உள்ளார்ந்த வகையில் சுய நலங்
கொண்டதாக இல்லையெனில், உயிர்-பிழைப்பது பற்றி அது பெரிதாக
அக்கறை கொள்ளாது! ஆம், சுயநலம் உயிர்-பிழைத்திருத்தலை(survival)
ஊக்குவிக்கிறது! உயிர்-பிழைத்திருத்தலை தக்கவைக்காமல்,பல்வேறுபட்ட
உயிரினங்களின் தோற்றம் (speciation)சாத்தியமில்லை!
ஆம், உடனடித்தேவையும், இலக்குமான உயிர்-பிழைத்திருத்தலைச் சாதிக்
காமல், பல்வேறுபட்ட உயிரினங்களின் தோற்றம் (speciation) சாத்திய
மில்லை! பல்வேறுபட்ட உயிரினங்கள் தோன்றாமல், பரிணாமத்தின் மிகத்
தொலைவான இலக்கு அடையப்படவியலாது. பல்வேறுபட்ட உயிரினங்கள்
தோன்றுவதற்கான நோக்கம் தான் என்ன? நிச்சயமாக, மனித இனம் அல்ல
பரிணாமத்தின் அந்த தொலைவான இலக்கு! ஒருவேளை, பரிணாமத்தை
நாம் உயிரியல் கோளத்திற்குரியதாகச் சுருக்கிக் காண்போமேயானால்,
பைபிள்-சார்ந்த படைப்புவாதிகள் கருதுவது போல மனிதனை பரிணாமத்
தின் உச்சமாகவும், பரிணாமத்தின் முடிவாகவும் கொள்ளலாம்.
பெரும்பாலான பரிணாம-உயிரியலாளர்கள், பரிணாமம் 'பெரு-வெடிப்பு'
எனும் பிரபஞ்சத்தின் பிறப்புக் கணத்திலிருந்து தொடங்குவதாகக் காண
விரும்புகிறார்கள் எனலாம்; ஏனெனில், அவர்கள் உயிரியலை, பௌதீகவிய
லுக்குச் சுருக்கிக் காண்பதை தங்கள் பாக்கியம் எனக் கருதுகிறார்கள்!
ஆனால், எவ்வொரு உயிரியலாளரிடமும், பரிணாமவாதியிடமும், குறிப்பாக
டார்வினிய பரிணாமவாதியிடம், பரிணாமம் என்பது உண்மையில் உயிரி
யல் தளத்தைக்கடந்துசெல்வதாயுள்ளது, அல்லது செல்லக்கூடும் என்பதான
ஒரு சிறு கருத்தும், கற்பனையும்கூட கிடையாது! டார்வினிலிருந்து, (ரிச்சர்ட்)
டாக்கின்ஸ் வரை அனைத்து உயிரியலாளர்களும், பரிணாமவாதிகளும்
"உயிர்-விருட்சம்" ('Tree of Life') படிப்படியாக பல்வேறு உயிரினங்
களாக, கிளைவிட்டு ஓங்கி வளர்ந்த அந்த மகத்தான கண்கொள்ளாக்
காட்சியினால் ('The Greatest Show on Earth')முட்டாள்களாக ஆக்
கப்பட்டார்கள்! ஆனால், அவர்களில் எவருமே உயிர்-விருட்சத்தின் "கனி"
குறித்து யோசிக்கவும் இல்லை! உயிர்-விருட்சத்தின் "கனி" பற்றிய பதிலை
யும், விளக்கங்களையும் இக்கட்டுரையின் கடைசிப்பகுதியில் காண்போம்.
டார்வினின் பரிணாமக் கோட்பாடும், அவரது கோட்பாட்டை ஒட்டி எழுப்பப்
பட்ட பிற உயிரியல்விஞ்ஞானிகளின்,அதாவது,பொதுவான விஞ்ஞானவகை
பரிணாமக்கோட்பாடுகளும் சரி, யாவும், மனிதன் எவ்வாறு தோன்றினான்
எனும் ஒற்றைக்கேள்விக்கான பதிலளிப்புகளேதவிர,அவை எவ்வகையிலும்
"பரிணாமம்" என்றால் என்ன? பரிணாமத்தில் பரிணமிப்பது எது? பரிணா
மத்தின் உண்மையான குறிக்கோள், இலக்கு தான் என்ன? என்பன போன்ற
அடிப்படையான,ஆழமான, அதிமுக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளுக்கான
பதில்களைக் கண்டறியும் முயற்சியாக இதுவரை இருந்ததில்லை!
உயிரியல் பரிணாமம் என்பது பூமியின் மீது நிகழ்ந்துள்ளது. சந்தேகமின்றி,
மனிதன் உயிரியல் பரிணாமத்தின் விளைபொருள்தான். மேலும், மனிதன்
உள்பட அனைத்து உயிரினங்களும் ஒரே மூதாதை-இனத்திலிருந்து கிளைத்
துத் தோன்றியவைதான் என்பதிலும் சந்தேகம் இல்லை. ஆனால், அடுத்தது
என்ன? 80,00,000 க்கும் மேற்பட்ட பல்வேறு உயிரினங்களில் மனித இனமும்
ஒன்று என்பதிலும் எவ்வித சந்தேகமும் இல்லை! ஆனால், அடுத்தது என்ன?
டாக்கின்ஸைப் பொறுத்தவரை, உயிரினங்கள் வெவ்வேறாயினும் அவற்
றின் DNA எனப்படும் மரபணுக்கூறுகளானவை அடிப்படை ரசாயண
அமைப்பில் ஒரே தன்மையிலானதாகவே உள்ளன என்பதால்; ஈ, கொசு,
எறும்பு, யானை,பூனை, மனிதன் எல்லாமே ஒன்றுதான் என்கிறார்! அதாவது
எல்லாக் கட்டடங்களும் செங்கற்களால் கட்டப்பட்டவை என்பதால், ஒரு
கோதுமைக்கிடங்கும், ஒற்றை அறை வீடும், பல அறைகளைக்கொண்ட ஒரு
பங்களாவும், பல மாடிகளைக்கொண்ட ஒரு மாளிகையும், யாவும் ஒன்று
தான் என்கிறார்!
ஆனால், கட்டடங்கள் யாவும் செங்கற்களால் கட்டப்பட்டவை என்பது
கட்டடங்களைப்பற்றிய ஒரு பொதுவான அடிப்படை விபர-உண்மை (Fact)
தான் என்பதை எவரும் மறுக்க இயலாது. அதே நேரத்தில், கட்டடங்களும்,
செங்கற்குவியலும் ஒன்றல்ல! நாம் ஒரு கட்டடத்தைப் பார்க்கும் போது
அதன் செங்கற்களை எண்ணிக் கொண்டிருப்பது என்பது முட்டாள்தன
மானதாகும். செங்கற்கள் எவ்வாறு, எத்தகைய வடிவமைப்பில் அடுக்ககப்
படுகின்றன என்பதிலிருந்து எழுகின்ற பண்பு அல்லது பரிமாணம்
(Emergent Property) தான் கட்டடம் ஆகும். இத்தகைய பண்பினடிப்
படையிலான மாற்றத்தைத்தான் "நாம்" பரிணாமம் என்கிறோம்.
ஆனால், டார்வினும், அவரது சீடர் டாக்கின்ஸும் கிடைமட்டத்திலமைந்த
பரிணாமத்தின் ஒரு போக்கினை மட்டுமே 'பரிணாமம்' என்கிறார்கள்;
செங்குத்தாக உயர்ந்து செல்லும் பரிணாமத்தின் அதி முக்கியமான இன்
னொரு போக்கினை முற்றிலுமாக மறுதலித்து விடுகிறார்கள். இரண்டு
போக்குகளையும் சேர்த்துப் பார்க்காமல், பரிணாமத்தை முழுமையாகப்
புரிந்துகொள்ள முடியாது.
கிடைமட்டத்திலமைந்த பரிணாமத்தின் போக்கு என்பது வெறும் மேலோட்
டமான மாறுபாடுகளால் அமைவதாகும்.
செங்குத்தாக உயர்ந்து செல்லும்பரிணாமத்தின் போக்கு என்பது பண்பின்
அடிப்படையில் பெரும் மாற்றங்களால் அமைவதாகும்.
பரிணாமத்தின், கிடைமட்டப் போக்கும் செங்குத்தான போக்கும், இரண்டு
போக்குகளுமே தெளிவாகவும், வெளிப்படையாகவும் தெரிகிற போது
ஒன்றை கணக்கில் கொண்டு மற்றொன்றைத் தவிர்ப்பது என்பது கண்கள்
இருந்தும் குருட்டுப் போக்கில் செல்வதற்குச் சமமாகும். உண்மையில்,
டார்வின் முதல் டாக்கின்ஸ், ஸ்டீபன் ஜெ. கௌல்ட் வரை பரிணாமம் குரு
டானது, குறிக்கோளற்றது, திசையற்றது, மற்றும் உயர்-வளர்ச்சியற்றது
என்று காண்பதற்கு அவர்கள் பரிணாமத்தின் கிடைமட்டப் போக்கினை
மட்டுமே கணக்கில் கொண்டதுதான் காரணம், உண்மையில் இக்கிடை மட்
டப்போக்கு கிட்டத்தட்ட குருட்டுப் போக்கானதுதான்; இன்னும் மனிதன்
தொடர்ந்து குருடாகவே, அதாவது, உணர்வுக்கு வராமலே தொடரும்வரை,
பரிணாமத்தின் செங்குத்தான போக்கும்கூட குருட்டுப் போக்காகத்தான்
தெரியும்! ஏனெனில், அடியோட்டமாக பரிணாமம் என்பது உணர்வுப்பரி
ணாமம் தான்; ஆம், பரிணாமத்தில் பரிணமிப்பது உணர்வு தானாகும்.
புறத்தே, மேலோட்டமாக பல்வேறு உயிரினங்களின் வடிவில் பரிணாமம்
வெளிப்படு வதாகத் தெரிந்தாலும், உயிரி களின் உயிரியல் - அடிப்படை
என்பது மரபணுக்களே என்றாலும், எல்லா உயிரினங்களும் ஒன்றல்ல;
மாறாக, அவை உணர்வின் வெவ்வேறு வளர்ச்சி- நிலைகளைப் பிரதிநிதித்
துவம் செய்யும் பரிணாமக் கட்டங்களும் (Stages), பிரதிநிதி (Agents)
களுமேயாகும்.
ஏனெனில், சடப் பொருளாக வெளிப்பட்ட (ஆதி) இயற்கை, தொடர்ந்து,
கடைசிவரை உயிரற்றதாக, உணர்வுமற்றதாகத் தொடரமுடியாது!அவ்வாறு
தொடர்ந்திருந்தால், நாம் இவ்வாறு பரிணாமம் குறித்து ஆராய்ந்துகொண்
டும், விவாதித்துகொண்டும் இருக்கமுடியாது! மிகக்குறைந்த உணர்வுநிலை
யிலிருந்து ( கிட்டத்தட்ட உணர்வற்ற சடப்பொருளின் நிலையிலிருந்து )
மேலுயர்ந்து முழு-நிறைவான தொரு உணர்வு நிலையை அடையும் வழி
முறைக்குப்பெயர்தான் பரிணாமம் ஆகும்!
இயற்கை "உயிர்" பெற்று எழுந்த நிலைதான் உயிரினங்கள்! அடுத்தகட்ட
மாக "உயிர்" பெற்று எழுந்த இயற்கை "உணர்வு" பெற்று எழுந்த நிலைதான்
மனிதன்! ஆனால், பரிணாமத்தின் இறுதியான நிறைவு நிலை 'மனிதன்'
அல்ல! ஆயினும், 'உயிர்-விருட்சத்தின்' "கனி" போன்ற அந்த முழுமை-நிலை
மனிதனின் உணர்வுப் பூர்வமான ஒத்துழைப்புடன், மனிதனின் வழியாக,
மனிதனால் மட்டுமே அடையப்பட ஒன்றாகும். ஒருவகையில் மனிதன் என்
பவன் எல்லாம் வல்ல 'கடவுளால்' விசேடமாகப் படைக்கப்பட்டவனல்ல என்
றாலும், பரிணாமத்தினால் அவனுக்கு விதிக்கப்பட்ட பரிணாமக் கடமையி
னால் விசேடமானவனாக ஆகிறான்! மனிதனின் பரிணமிக்கும் உணர்வு
தான் அவனுக்கு அந்த விசேடத் தகுதியைப் பெற்றுத்தருகிறது. மனிதன்
உணர்வற்றவனாய் இருந்தால், அவனும் ஒரு விலங்குஜீவியைப்போலத்தான்
இருப்பான்.
டார்வினைப் பொறுத்தவரை, "பரிணாமம் முன்னோக்கிய உயர்-வளர்ச்சி
குறித்தது அல்ல" என்பதே அவரது முடிவு! டார்வின் மனிதனை இன்னுமொரு
விலங்கினமாகத்தான் கண்டார்! டாக்கின்ஸைப்பொறுத்தவரை, மனிதஜீவி
யாயினும், விலங்கு ஜீவியாயினும், DNA எனப்படும் மரபணுக்கூறுகள்
மட்டுமே முக்கியமானவை என்பதே அவரது முடிவு!
DNA எனப்படும் மரபணுக்கள் உயிர்-பிழைப்பதற்காகவே பல்வேறு உடல்
களை, அதாவது உயிரினங்களை உருவாக்கி அவ்வுடல்களை (உயிரினங்
களை) ப் பயன்படுத்திக் கொண்டு தம்மைத்தாமே துல்லியமாகப்பிழையே
துமின்றி பிரதியெடுத்துக் கொண்டு, அவ்வுயிரினங்களின் சந்ததிகளின்
மூலமாகத் தொடர்ந்து உயிர்-பிழைத்துச் செல்கின்றன. ஆம், மரபணுக்
களுக்கு இன்னொரு பெயர் "பிரதியெடுப்பான்கள்". மரபணுக்களைப்
பொறுத்தவரை தொடர்ந்து உயிர்-பிழைத்திருப்பதற்கு சிறுபிழையுமின்றி
துல்லியமாகத் தங்களைப் பிரதியெடுப்பது மிகவும் முக்கியமாகும். மேலும்,
துல்லியமாகப் பிரதியெடுப்பதையே 'இயற்கைத்தேர்வு'ம் ஆதரிக்கிறது.
ஆனால், பரிணாமத்தைப் பொறுத்தவரை பிரதியெடுப்பு - பிழைகளை
(copying errors) அடிப்படையாகக் கொண்டுதான் புதிய புதிய உயிரி
னங்களை உருவாக்குகிறது.
ஆனால், டாக்கின்ஸைப் பொறுத்தவரை, அவர் பரிணாமத்திற்கு எதிராக
இருப்பதாகவே தெரிகிறார்! அதாவது அவரது கூற்றுப்படி, "பரிணாமம்
( புதிய புதிய உயிரினங்கள் தோன்றுவது ) என்பது, துல்லிய மற்றதொரு
வகையில். 'நல்ல விஷயமாக' தோற்றம்தருகிறது, முக்கியமாக நாம் அதன்
ஒரு விளை-பொருளாக அமைந்துள்ளோம் என்பதால். ஆனால்,உண்மையில்
எதுவும் 'பரிணமிக்க' விரும்புவதில்லை. மாறாக, பரிணாமமானது பிரதியெ
டுப்பான்களின் (மரபணுக்களின்) அனைத்து தடுப்பு முயற்சிகளையும்
தாண்டி, எவ்வாறோ,விரும்பியோ,விரும்பாமலோ நிகழும்ஒன்றாக உள்ளது."
என்கிறார். அதாவது, மூலமுதல் மரபணு எவ்வாறு, ஏன், எதற்காகத் தோன்றி
யது என்பது டாக்கின்ஸுக்கும் தெரியாது, அவரது ஆசான் டார்வினுக்கும்
தெரியாது, எனும் நிலையில், டாக்கின்ஸ்-ன் மிதமிஞ்சிய மரபணு-மையப்
பார்வையின் தாக்கத்தினால் அவர் மரபணுவை பிரதானமானதாகவும்,
அதையே இறுதியான (சிரஞ்சீவித்தன்மை கொண்ட) நிரந்தர மெய்ம்மை
யாகவும் காண்பவராக உள்ளார்!
டாக்கின்ஸுக்கு, "மரபணு" தான் கடவுள், மற்றும், எல்லாமும்! அவரைப்
பொறுத்தவரையில், மரபணுவுடன் பரிணாமம் முடிந்துவிட்டது. அதாவது,
'பிரதியெடுப்பான்கள்' (replicators) எனும் மரபணுக்கள் பிழையின்றி
வெற்றிகரமாக தங்களைப் பிரதியெடுத்துக்கொண்டுதங்களது நிலையைத்
தக்கவைத்துக் கொள்ளும்வரை, பரிணாமம், அதாவது புதிய புதிய உயிரி
னங்கள் தோன்றுவதற்கான வாய்ப்பே இல்லை என்கிறார்! ஆனால், மரப
ணுக்களின் அனைத்து முயற்சிகளையும் தாண்டி பிரதியெடுப்பதில் பிழை
நேர்ந்துவிடுவதன் விளைவாகத்தான், இன்று நாம் பல்வேறு வகைப்பட்ட
உயிரினங்களைக் காண்கிறோம். மற்றபடி,
அப்படியே புதிய உயிரினங்கள் தோன்றினாலும், டார்வினின் கூற்றுப்படி,
உயிரினங்களுக்கிடையேயான வித்தியாசம் என்பது வெறும் அளவு ரீதியா
னதே தவிர, வகை ரீதியாக வேறானதல்ல ( much of the species diffe
rence is a difference “of degree and not of kind”).அதாவது,
உயிரினங்களுக்கிடையே பெரிய வித்தியாசம் என்பதில்லை என்பது
பரிணாமத்தை மறுக்கும் பார்வையும் போக்கும் அல்லாமல் வேறென்ன?
முதலில், முதல் உயிர் (உயிர்-ஜீவி) தோன்றிட வேண்டும். அடுத்தது அந்த
உயிர்-ஜீவி நிலைத்து வாழவேண்டும், அதையடுத்து அவ்வுயிர்-ஜீவி
கிளைத்து பண்பளவில் வெவ்வேறு உயர் உயிர்-ஜீவிகளாக, அதாவது உயிரி
னங்களாக வெளிப்பட வேண்டும். இதுதான் முழுமையான பரிணாம வழி
முறையாகும். பண்பளவிலான உயர் வளர்ச்சியை மறுக்கும் பார்வையும்
போக்கும் அசலான பரிணாமத்திற்கு விரோதமானதாகும். இவ்வகையில்,
டார்வினும், அவரது சீடர் டாக்கின்ஸும் பரிணாம விரோதிகளே யாவர்.
டாக்கின்ஸைப்பொறுத்தவரை, அனைத்து உயிரி(னங்)களும் மரபணுத் தக
வல்களைத் தாங்கிச் செல்லும் வெறும் தற்காலிகக் கலன்(பாத்திரம்) களே;
மரபணுக்களை மறுஉற்பத்தி செய்ய உதவும் கருவிகளே என்கிறார். அதா
வது, ஒரு உயிரி, அது எலியோ, மனிதனோ, அல்லது வேறு எதுவாயினும்
அது மரபணுக்களின் கருவியே; அதாவது, டாக்கின்ஸைப் பொறுத்தவரை
மரபணுக்களைத்தாண்டி உயிரிகளுக்கு எவ்வித முக்கியத்துவமும் இல்லை!
அதாவது,மனிதஜீவிகள் உள்பட அனைத்து விலங்குஜீவிகளின் ஒரே இலக்கு
தம்தம் மரபணுக்களை மறுஉற்பத்தி செய்வது மட்டுமே; அதற்காகத்தான்
அவை உயிர் வாழ்கின்றன!
ஆனால், DNA எனப்படும் மரபணுக்கள் என்பவை உண்மையில் என்ன?
உயிரியல் விஞ்ஞானிகளும், டார்வினிய பரிணாமவாதிகளும் மரபணுக்க
ளைப்பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்! அவர்களுடைய விளக்
கங்கள் நம்மையும், நம் வாழ்க்கையையும் புரிந்துகொள்ள உதவாது! DNA
என்பது ஒரு உயிரி உருவாவதற்கான அடிப்படை, அதாவது "உயிர்க்கரு" என
நாம் கொள்ளலாம். இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட படி DNA
எனப்படும் மரபணுக்கள் இல்லாமல் எவ்வொரு உயிரியும் இல்லை; அதே
நேரத்தில், ஒரு உயிரி, அல்லது ஜீவி இல்லாமல் மரபணுக்களும் இல்லை;
அதாவது ஒரு உயிரிக்கு, அல்லது ஒரு ஜீவிக்கு வெளியே மரபணுக்கள்
உயிர்வாழ்வதில்லை! இதையே வேறு வகையில் சொன்னால், முட்டை இல்
லாமல் கோழி இல்லை; கோழி இல்லாமல் முட்டை இல்லை! அதே வேளை
யில், இது ஒரு விபரீத வட்டமும் அல்ல. ஏனெனில், ஆதியில், முதல் உயிர்
தோன்றியபோது, "உயிர்க்கரு" என்கிற அளவில் முட்டைதான் முதலில்
தோன்றியிருக்க முடியும்! மனிதன் என்பவன் உண்மையில் விந்தணுவும்
கருமுட்டையும் இணைந்து தாயின் கருப்பையில் ஒரு முழு 'ஸெல்' லாக
ஆகி, அந்த ஒரு 'ஸெல்' இரண்டாகி, இரண்டு நாலாகி, .... இப்படியே வளர்ந்து
கைகள், கால்கள், உள் உறுப்புகள், கண், காது, மூக்கு, என முழு உடலாக
உருவாகியதும் பிறக்கிறான்.
ஒரு உயிர்-ஜீவிக்கு மரபணுக்கள் தான் அடிப்படை என்பதை நாம் மறுக்க
வில்லை; மறுக்கவும் முடியாது. ஆனால், டாக்கின்ஸ் போன்ற உயிரியல் விஞ்
ஞானிகள், மரபணுக்களை மட்டும் கணக்கில் கொண்டு உயிர்-ஜீவியை
கணக்கில் கொள்ளாமல் மறுக்கும் சுருக்கல்வாதப் போக்கைத்தான் மறுக்
கிறோம், தீவிரமாக எதிர்க்கிறோம். சுருக்கிக்காணவேண்டும் என்று முடிவு
எடுத்துவிட்டால், உயிர்-ஜீவிகளை DNA மூலக்கூறுகளுக்குத்தான் சுருக்க
முடியும் என்பதில்லை; DNA மூலக்கூறுகளுக்கும் அடிப்படையாக விளங்கு
வதாகக்கூறப்படும் RNA எனப்படும் ஒற்றை இழை மரபணு மூலக்கூறு
களுக்கும்; அதையும் இன்னும் சுருக்கி எல்லாம் அடிப்படை அணுத்துகள்கள்
தான் என்ற நிலைக்கும் கீழிறங்கலாம்!
"சுயநலங்கொண்ட மரபணு" எனும் தலைப்பில், ஒரு முழுநீள நூலை எழுதிய
ரிச்சர்ட் டாக்கின்ஸ், அந்நூலின் பதினொன்றாம் அத்தியாயத்தின் கடைசி
யில், சாத்தான் வேதம் ஓதுவதைப்போல, திடீரென,
"தேவைப்படுமெனில், சுயநலங்கொண்ட மரபணுவினை எதிர்த்துப்
போராடக்கூடிய ஆற்றல் நமக்கு உள்ளது. இன்னும், நாம் திட்டநோக்
குடன், தூய பொது நலத்தை வளர்த்தெடுப்பது குறித்தும் ஆலோசிக்
கலாம்; அப்படியொரு பொது நலம் எனும் அம்சம் இவ்வுலகின் ஒட்டு
மொத்த வரலாற்றில் இருந்தது கிடையாது. ஏனெனில், நாம் மரபணு
எந்திரங்களாக . . . .கட்டமைக்கப்பட்டிருக்கிறோம்; ஆனால், நம்மைப்
படைத்த அந்த மரபணுக்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழும் ஆற்றல்
நம்மிடம் உள்ளது. பூமியில் நாம் மட்டும்தான், 'சுயநலங்கொண்ட
பிரதியெடுப்பான்களின் (மரபணுக்களின்)' கொடுங்கோன்மையை
எதிர்த்து கலகம் செய்ய இயலும்."
என்பதாக அறிவித்து அறிவியலாளரான டாக்கின்ஸ் அறவியல் போதனை
யாளராக அவதாரம் எடுத்து விடுகிறார்! ஆனால், பொதுநலம் எனும் அம்சம்
இப்பூவுலகின் ஒட்டுமொத்த வரலாற்றில் இருந்தது கிடையாது என்ற அவரது
கூற்று அப்பட்டமானதொரு உயிரியல் வரலாற்றுப்புரட்டு என்றுதான் சொல்
லவேண்டும். ஏனெனில், அலெக்ஸாண்டர் மெய்னெஸ் (Alexandre Mein
esz)எனும் எனும் உயிரியல் விஞ்ஞானி,
"பல ஸெல்களால் ஆன விலங்குகள், பூஞ்சைக்காளான்கள், கடற்
பாசிகள் ஆகியவற்றின் தோற்றமானது, ஒரு பிரபஞ்சமளாவிய
தருக்கத்தின்படி, அதாவது, "ஒற்றுமையே வலிமை" எனும் பழைய
மொழிக்கிணங்க விளைந்ததாகத் தெரிகிறது. இத்தகைய
கூட்டொருமைதான் நம் கண்களுக்குப்புலப்படக்கூடிய அளவிலான
பல ஸெல்லுயிரிகளின் தொடக்கத்தைக் குறிக்கிறது. முதல் விலங்கு
மற்றும் தாவர ஸெல்கள் 'பாக்டீரியா' ( bacteria)எனப்படும் நுண்
ணுயிரிகளின் இணைவினால் உருவானவையே. ஒன்றுக்குள் ஒன்றாக
உள்-இணைந்த (Endosymbiosis)ஒத்தியை வாழ்வுப்பண்பு எனும்
கூட்டிணைவில் எண்ணற்ற பாக்டீரியாக்கள் அமைந்ததே விலங்கு
மற்றும் தாவர உயிரிகளுக்கு வலிமை சேர்த்தது ."
என்பதாக, "உயிர் எவ்வாறு தோன்றியது?" ("How Life Began") எனும்
தனது நூலில் மிகத்தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார், ஆக, சுய நலம் என்பது
மரபணுக்களின் ஒரு அடிப்படைப்பண்பு தானே தவிர முடிவான இறுதியான
பண்பு அல்ல. "உயிர்" என்பது அடிப்படையில் உயிரற்ற சடப்பொருளின்
உலகில் உதித்த, சடப்பண்பிற்கு எதிரான ஒரு எழுச்சியும் இயக்கமும் ஆகும்.
ஆகவே,சுயநலம் என்பது, சடத்தனமான ஒரு அந்நிய உலகில் எவ்வாறேனும்
தகவமைந்து உயிர்-பிழைத்தாக வேண்டும் எனும் முனைப்பைக் குறிப்பதே
தவிர, அது ஒரு மோசமான பண்பு அல்ல.
மரபணுவின் 'சுய நலம்' என்பது அகவயமானதுமல்ல, நடத்தைபூர்வமானது
மல்ல. மாறாக, மரபணுவின் "சுயநலம்" என்பது உயிரின் மிகவும் அடிப்படை
யான விதி (Law-like) போன்றதொரு அம்சமாகும். அதாவது, தன்னைத்
தானே பிரதி எடுத்துக்கொள்ளும் (Replication)அம்சம் போல. தன்னைத்
தானே மறுபடைப்பு செய்துகொள்ளும் அம்சமே உயிரற்ற பொருளுக்கும்
ஒரு உயிர்-ஜீவிக்கும் உள்ள பிரதான ஒற்றை வித்தியாசமாகும். மேலும்,
"சுயநலம்" தான் உயிர்-ஜீவிகளின் "சுய-பாதுகாப்பு"(self preservation)
எனும் இயல்பூக்கி (instinct)யின் வேர் ஆகும். மேலும், மரபணுவின் சுய
நலம் தான் உயிர்-ஜீவிகளின் சுயநல நடத்தையாக எழுகிறது. மனிதன்
உள்பட எல்லா உயிரினங்களும் சுயநலமாக இருப்பதற்கு இதுவே காரணம்.
வழக்கமாக, பிற உயிரினங்கள் பறவைகள், விலங்குகள் சுயநலம் கொண்ட
வைகளாக இருப்பதாக நாம் குற்றம் சொல்வதில்லை. மேலும், எவ்வொரு
மனிதஜீவியும் தமக்குத் தெரிந்தோ,அல்லது விரும்பியோ சுயநலமாக இருப்
பதில்லை! ஏனெனில், சுயநலம் என்பது உள்-அமைந்த ஒரு இயல்பு ஆகும்.
அதே நேரத்தில், போதியஅளவு உணர்வுக்கு வந்த எவ்வொரு மனிதனும் தம்
இயல்பான சுயநலத்தை கட்டுப்படுத்த, அல்லது ஒழுங்கமைக்க இயலும்.
அதாவது, கார்லாஸ் காஸ்டனிடா(Carlos Castaneda)வின், டான் ஜுவான்
(Don Juan)போதித்த "கட்டுப்படுத்தப்பட்ட முட்டாள்தனம் "(Controlled
Folly)என்பதை ஒத்தவகையில்!
அதாவது, அடிப்படையில் நாம் சுயநலம் கொண்டவர்களாகத்தான் தொடங்
குகிறோம் என்பதில் தவறேதுமில்லை! ஆனால், அந்த சுயநலத்தினால் நாம்
சாதிப்பது வெறும் 'உயிர்-வாழ்தல்' என்பது மட்டுமே. அதாவது உயிர்-வாழ்
தல் என்பது உண்மையான ( உயர்)-வாழ்தலுக்கான அடிப்படை மாத்திரமே
என்பதால், மேலும், நாம் உணர்வுடைய ஜீவிகள் என்பதால் இவ்வெல்லா
விஷயங்களையும் நாம் உணர்ந்து புரிந்து கொள்ளமுடியும் ; இந்த உணர்
தலும் புரிதலும்தான் மனிதனை மனிதனாக்குகிறது. ஆகவே, நம்மால் நமது
சுய நலத்தைப்புரிந்து கொண்டு அதைக்கடந்து சென்றிட முடியும்.
ஆகவே, டாக்கின்ஸ் அவர்களின் போதனையான, 'சுயநலங்கொண்ட மரப
ணுக்களுக்கு எதிராகக் கலகம் செய்வது' என்பது தேவையற்றது. மாறாக,
"சுய நலம்" என்பதன் உண்மையான ஆழமான தன்மையைச் சரியாகப்
புரிந்து கொள்வது ஒன்றே போதுமானது. இயற்கையுலகின் அனைத்து தடை
கள் மற்றும் மட்டுப்பாடுகளிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ளும் ஒரே
வழி பரந்து விரிந்த இப்பிரபஞ்சத்திட்டத்தில், நம்மைப்பற்றியும், நம் இடம்,
மற்றும் பரிணாமப் பாத்திரம் ஆகியவற்றை உணர்வதொன்றே ஆகும்.
இதன் அர்த்தம், உயிரின் ஜீவியாகத்தோன்றிய மனிதன், உணர்வின் ஜீவி
யாக எழுவதும் முடிவாக ஒருமையும் முழுமையான உணர்வாக மாற்றமடை
வதும் தான் பரிணாமத்தின் ஒப்பற்ற இலக்கு ஆகும்.
மா.கணேசன்/13.9.2016
----------------------------------------------------------
No comments:
Post a Comment