Monday, 15 January 2018

அநீதித்துறையில் அமளி!




    "தலைமை நீதிபதி மற்ற நீதிபதிகளை விட உயர்ந்தவர் அல்ல!"
          -- நான்கு மூத்த நீதிபதிகள்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பேட்டி எத்தகையது?
'உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை; நிர்வாகம் சரியாக நடைபெற
வில்லை' என 4 மூத்த நீதிபதிகள் கூட்டாக பேட்டியளித்திருப்பதும், தலைமை
நீதிபதிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பதும்..

1. நீதித்துறையின் உள்விவகாரமா?
2. கவனிக்கத்தக்க பிரச்சினையா?
3. தேசிய மாண்புக்கு பின்னடைவா?
4 .ஜனநாயக அக்கறையா?
5. அதிகாரப் போட்டியா?

நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் 4 மூத்த நீதிபதிகள்; அரசு தமது அதிகாரத்தை
மிகத் தவறாக பயன்படுத்துவது குறித்தும், அதற்கு நீதித்துறைத் தலைமை
அரசுக்குத் துணை போவது குறித்தும் கண்டித்து; பத்திரிக்கை நிருபர்களை
அழைத்து கூட்டாக பேட்டியளித்தது உலக வரலாற்றில் இதுவே முதல்முறை
எனவும், இது ஒரு உலக அதிசயம் எனவும் பரவலாகப் பேசப்படுகிறது!

ஒரு வகையில், இவ்வாறு பகிரங்கமாக பத்திரிக்கையாளர்களுக்குப் பேட்டி
அளித்தது என்னவோ முதல்முறையாக இருக்கலாம்! ஆனால், இதற்குமுன்
நீதித்துறையில் எவ்வொரு குழப்பமும், குளறுபடியும், பிரச்சினையும், பூசலும்
இருந்ததில்லை என்று அர்த்தமாகாது!

இவ்வாறு பகிரங்கப்படுத்தப்பட்டதன் விளைவாக மக்கள் நீதித்துறையின் மீது
நம்பிக்கை இழந்துவிடுவார்கள் என்று சொல்லி நீலிக்கண்ணீர் வடிப்பது அபத்
தத்தின் உச்சம் ஆகும்! ஏனெனில், மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல;
மக்கள் பொதுவாக சட்டத்தையும், அரசையும், அரசியல் அமைப்பையும் மதிப்
பவர்களே! அதேநேரத்தில், தாங்கள் சுரண்டப்படுகிறோம், ஏமாற்றப்படுகிறோம்,
வஞ்சிக்கப்படுகிறோம் என்பதை அவர்கள் அறியாதவர்கள் அல்ல! கப்பலைச்
செலுத்துபவர்கள் ஒழுங்காக நம்மைக்கொண்டு கரை சேர்ப்பார்கள் என்று
மக்கள் இந்த ஜனநாயகத்தை நம்புகிறார்கள்!

ஆம், உண்மையான ஜனநாயகம் எதை, யாரைக் குறிக்கிறது என்பவற்றையும்,
அதில் தங்களுக்குள்ள உண்மையான அதிகாரத்தையும், மக்கள் அனைவரும்
தெளிவாக உணரும்வரை மக்கள் ஏமாற்றப்படுவது தொடரும்!

'உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை; நிர்வாகம் சரியாக நடைபெற
வில்லை' என 4 மூத்த நீதிபதிகள் பகிரங்கமாக பத்திரிக்கையாளர்களுக்குப்
பேட்டி அளித்ததில் தவறு இல்லை! ஆனால், பலர், ஓய்வுபெற்ற நீதிபதிகள்
உள்பட, இப்பிரச்சினையை "நீதித்துறையின் உள்விவகாரம்" என்று குறிப்பிடு
வதுதான் பொருத்தமற்றது! ஏனெனில், நீதித்துறை என்பது எவருடைய சொந்த
விவகாரத்தையும் பற்றியது அல்ல; மாறாக, அது பொதுமக்களின் விவகாரங்
களுக்கான ஒரு அமைப்பு ஆகும்! அதில் வெளிப்படைத்தன்மை இதுகாறும்
இல்லை என்பதால் தொடர்ந்து இருட்டிலேயேதான் பராமரிக்கப்பட வேண்டும்
என்பது சரியல்ல! நீதி தவறும் நீதியரசர் மீதான புகார் நீதித்துறையின் உள்
விவகாரம் அல்ல; நாட்டு மக்களை அநீதியிலிருந்து காத்திடுவதற்கான
அபாயச் சங்கொலியாகும்! இந்த எச்சரிக்கை ஒலி உள் நோக்கத்துடன் எழுப்பப்
பட்டிருந்தாலும்கூட அது குறித்தும் நாம் சீரிய கவனம் கொள்வது அவசியம்!

அப்படியெனில், இது "கவனிக்கத்தக்க பிரச்சினையா" என்றால், ஆம், சந்தேகம்
இன்றி நிச்சயம் கவனிக்கத்தக்க பிரச்சினை தான் இது!

அடுத்தது, இத்தகைய பகிரங்கப் பேட்டி, "தேசிய மாண்புக்கு பின்னடைவு" என்
றாகுமா? என்றால், இல்லாதவொன்று பின்னடைவு காண்பதற்குச் சிறிதும்
வாய்ப்பில்லை என்றுதான் சொல்லவேண்டும்! மாண்பு என்பது, பெருமை,
சிறப்பு, மேன்மை என்பவற்றைக் குறிக்கும் ஒரு சொல் ஆகும்! ஆக, "தேசிய
மாண்பு' பற்றிப் பேசுவதற்கு முன்பு 'தேசியம்', 'தேசம்' என்பவை எதைக்குறிக்
கிறது என்பதைப் பார்ப்பது அவசியம்!

'தேசியம்' என்பது, ஒட்டு மொத்த நாட்டின் நலன் மற்றும் ஒற்றுமை சார்ந்த
எண்ணமும், செயலும் என்பதைக்குறிக்கிறது! ஆனால், ஒட்டுமொத்த நாட்டின்
நலன் மற்றும் ஒற்றுமையை நம்தேசம் சாதித்துள்ளதா? அல்லது, இனியாவது
சாதிக்குமா? இந்த தேசத்தில் இரவு பட்டினியுடன் நடை பாதைகளில் படுத்து
உறங்குபவர்கள் எத்தனை லட்சம்? பொருளாதார ஏற்றத்தாழ்வு நிலையில்
தாழ்வுக்கும் தாழ்வாக வாடும் 10% மக்களுக்கு (ஒட்டுமொத்த மக்கள் தொகை
யில்) எப்போது நீதி கிடைக்கும்? தொடரும் தீண்டாமைக் கொடுமையை ஜன
நாயகத்தின் மூன்று பெரும் தூண்களான சட்டத்துறை, நீதித்துறை, நிர்வாகத்
துறை களைந்தனவா? சமூக நீதியில் அக்கறையில்லாத ஒரு நீதித்துறையின்
குளறுபடிகள் பகிரங்கப்படுத்தப்பட்டதால் இல்லாத தேசிய மாண்புக்கு பின்ன
டைவு ஏற்பட்டுவிடுமா?

'உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை; நிர்வாகம் சரியாக நடைபெற
வில்லை' என 4 மூத்த நீதிபதிகள் கூட்டாக பத்திரிக்கையாளர்களுக்குப் பேட்டி
யளித்திருப்பது அவர்களது ஜனநாயக அக்கறையைக் காட்டுகிறதா? அல்லது,
"தலைமை நீதிபதி மற்ற நீதிபதிகளை விட உயர்ந்தவர் அல்ல!" எனும் அவர்
களுடைய கூற்றுக்கு அதிகாரப்போட்டி தான் உள்ளமைந்த காரணமா? இருக்
கலாம்! ஆம், அதிகாரம், எத்துறையாயினும் ஓரிடத்தில், அல்லது ஒருவரிடத்
தில் மையப்படுத்தப்படுமெனில் இவ்வாறுதான் நிகழும்! இச்செய்தி இன்னும்
ஓரிரு நாட்களுக்குப் பேசப்பட்டு, விவாதிக்கப்பட்டு, பிறகு மறக்கப்பட்டுவிடும்!
அதற்குள் எவ்வாறோ, இப்பிரச்சினை பூசிமெழுகப்பட்டு தீர்க்கப்பட்டுவிட்ட
தாகச் சொல்லப்படும்! ஏனெனில், எவ்வாறேனும் தேசியமாண்பு காப்பாற்றப்பட வேண்டுமல்லவா! 'உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை; நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை' என புகார் கூறும் மூத்த நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்துக்கு வெளியே ஜனநாயகம் நிலவுகிறதா என்பதை உணர்ந்துள்ளனரா என்பது கேள்விக்குறியே!

ஆக, காரணம் எதுவாயினும், ஜனநாயக அமைப்பில் எல்லாத் துறைகளிலும்,
எல்லாவிஷயங்களிலும் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதை வெடித்து
வெளியே வந்திடும் இத்தகைய விவகாரங்கள் உணர்த்துகின்றன எனலாம்!
ஆக, மக்களாகிய நாம் இனியாவது விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்!
ஜனநாயகத்தில் எந்தத்துறையும் மூடிய அறையாக இருப்பதாகாது; எல்லாவற்
றிலும் வெளிப்படைத்தன்மை வேண்டும்! ரகசியம் ஆபத்தானது!


மா.கணேசன் / 14-01-2018
----------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...