Sunday, 11 February 2018

தமிழ்நாடு திறந்துகிடக்கும் வீடல்ல!



(கமல ஹாசனின் உண்மையான நிறம்!)


   "தமிழ் என்பது உங்கள் விலாசம், அது உங்கள் தகுதியல்ல! .....
   நான் தமிழன் அதன்னால எனக்கு இதக் கொடுங்கன்னு கேட்க
   முடியாது! நான் இந்த வீட்ல குடியிருக்கறன் என்பது உங்க விலாசம்;
   அது இருக்கட்டும் நீங்க என்ன பண்ணுறீங்கன்னு அடுத்தது 
   உடனே கேட்பாங்க!...."             
                                         -- கமல ஹாசன்
                           ✦
                   

இனியும் தமிழ் நாட்டு மக்களை அடுக்கு மொழியில் பேசிக்கொண்டு, கவிதை
கலந்த பூடகமான தமிழில் பேசிக்கொண்டு ஏமாற்றமுடியாது எனும் கட்டத்தை
நாம் அடைந்துள்ளோம்! தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டிய மிகவும்
சோதனையான காலம் இது! இப்போதும்கூட நாம் விழித்துக்கொள்ளவில்லை
யென்றால் நமக்கு விடிவுகாலம் என்பதே இல்லாமல் போய்விடும்! நம் வீட்டை
கொள்ளையடித்துச் சென்றுவிடுவார்கள் அந்நியர்கள்!

என்னை அறிந்தவர்களுக்கு என்னை நன்றாகத்தெரியும், நான் ஒரு குறுங்குழு
வாதியல்ல என்பது! நான் பிரபஞ்சமளாவிய பார்வை கொண்டவன்! நான்
காலம், இடம், தேசம், வர்த்தமானம், இனம், மொழி, மதம், கலாச்சாரம், கடந்த
வனாகத்தான் நேற்றுவரை வாழ்ந்துவந்திருக்கிறேன்!

   இந்தியாவில் பிறந்ததால் நான் ஒரு இந்தியன்; ஆப்பிரிக்காவில்
   பிறந்திருந்தால் நான் ஒரு ஆப்பிரிக்கன்! எங்கே பிறந்தாலும் நான்
   நான் தான்! என்று பேசி வந்தேன்.

"மனிதன்" என்பதுதான் எனது முதல் அடையாளம்!  நேற்றுவரை நான் ஊமை
யாக இருந்துவிட்டேன்; இப்போது நான் பேசவேண்டிய கட்டாயத்திற்குத்
தள்ளப்பட்டுள்ளேன்! அப்படியானால் ஒரு மனிதன் எந்த மொழியில் பேசுவான்?
எனது தாய்மொழி தமிழ், நான் தமிழில் தானே பேசவேண்டும்? இது நாள்வரை
ஒரு மனிதனாகத் தமிழில் பேசிவந்த என்னை இன்று ஒரு தமிழனாகப் பேச
வைத்து விட்டார் கமலஹாசன்!

இது கெட்ட நேரத்திலும், ஒரு நல்ல நேரம்! இல்லையென்றால், கமலஹாசன்
இப்படிச் சொல்லி யிருப்பாரா? அதுவும் அவர் புதிதாக அரசியல்கட்சி ஆரம்பிக்
கப்போகும் இந்த தொடக்கக் கட்டத் திலேயே அவர் இப்படிப்பேசியிருப்பது
அவரது உண்மையான நிறத்தை நமக்குக் காட்டியிருக்கிறது என்றுதான்
சொல்லவேண்டும்! அதற்காக நான் அவருக்கு என் நன்றியைத்தெரிவித்துக்
கொள்கிறேன்!

நான் தமிழன் அதனால, எனக்கு இதக்குடுங்க, அதக்குடுங்கன்னு நான் பிச்சை
கேட்கவில்லை! எந்தத் தமிழனும் அவ்வாறு கேட்கமாட்டான்! நான் இந்த
வீட்டுல வெறுமனே குடியிருக்கவில்லை; நான் இந்த வீட்டுல பிறந்தவன்,
இது என் வீடு, இது என் நாடு, என் தமிழ்த்திருநாடு! ஆக, நான் கேட்பது
ஒன்றே ஒன்று தான் : தமிழர்களாகிய எங்களுக்குத்தகுதி இருக்கிறதோ,
இல்லையோ; எங்களை இனி நாங்களே ஆண்டு கொள்கிறோம்! தமிழர்களல்
லாத பிறருக்கு வேறு எல்லா தகுதிகளும் இருந்தாலும், தமிழன் எனும் தகுதி
இல்லாத எவரும் எங்களை ஆளத்தகுதியற்றவரே!

தமிழனுக்கு தமிழன் எனும் தகுதியைத்தாண்டி அவனிடம் வேறு என்ன தகுதி
இல்லை? எல்லாத் துறையிலும் சிறந்து விளங்கும் தகுதி தமிழனுக்கு உண்டு!

தமிழ் கற்றுக்கொண்டவர்கள், தமிழ் பேசுபவர்கள், தமிழில் கவிதை எழுதுப
வர்கள், பிழைப்புத் தேடி தமிழ் நாட்டிற்கு வந்தவர்கள், வியாபாரம் செய்ய
வந்தவர்கள், இங்கேயே தங்கிவிட்டவர்கள், இங்கே  பிறந்தவர்கள், வளர்ந்த
வர்கள், ..... என எல்லோரும் தமிழர்களாக ஆகிவிடமுடியாது! 

தமிழ் என்பது எனது தாய் மொழி மட்டுமல்ல, அது எனது அடையாளம் மட்டு
மல்ல; தமிழ் எனது தகுதியும் தான்! தமிழனல்லாதவனுக்கு அது புரியாது!
தமிழ் என்றால் இனிமை மட்டுமல்ல; அறம், மறம், திறம் யாவுமாகும்!

"வந்தாரை வாழ்விக்கும் தமிழகம்!" என்பதற்கிணங்க தமிழை, தமிழ் நாட்டை
புகலிடமெனத் தேடிவருபவர்கள் வாருங்கள், வந்து வாழுங்கள்! ஆனால்,
எங்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியை, கூடாரத்திற்குள் கொஞ்சம் இடம் கேட்ட
ஒட்டகம் போல, உள்ளே புகுந்த பிறகு எங்களை எங்கள் வீட்டிலிருந்து
வெளியே தள்ளிவிடும் எண்ணத்தை மறந்துவிடுங்கள்! இனி எவ்வகை சூழ்ச்
சிக்கும் தமிழன் பலியாகமாட்டான்!

எவ்விடத்தில் புல் முளைக்கிறதோ அவ்விடத்திலேயே வாழ்வதற்குரிய முழு
சுதந்திரமும் அதற்கு உள்ளது! இதற்குப் பெயர்தான் "இயற்கைச் சுதந்திரம்".
இதுதான் "மண்ணின் மைந்தன்" என்பதற்கும், "தமிழ்த்தேசியம்" என்பதற்குமான
அடிப்படையும் ஆகும்! இவ்வாறு மொழி அடிப்படையிலான பல தேசியங்களின்
கூட்டமைப்பு தான் இந்திய தேசியம் என்பது!

நான் சொல்கிறது கமலஹாசனுக்கு எட்டுகிறதோ இல்லையோ, என் தமிழ்ச்
சொந்தங்களுக்கு எட்டினால் சரி!

(தொடரும்)
மா.கணேசன்/15:55 11-02-2018
----------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...