
இக்கட்டுரையின் நோக்கம் ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையே
நிலவும் இடைவெளியை, மலைக்கும் மடுவிற்குமான வித்தியாசத்தைக்
களைவதற்கான கலகத்தையோ, புரட்சியையோ தூண்டுவதற்கான
விதைகளைத் தூவுவது அல்ல! மாறாக, உலக மக்கள், உழைக்கும்
மக்கள் யாவரும் கௌரவமாக வாழ்வதற்கான நியாயமான
உரிமையை நினைவூட்டுவது மட்டுமே.
•••
ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள 2018-ம் ஆண்டுக்கான உலக கோடீஸ்
வரர்கள் பட்டியலில் அமேஸான் நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரி
யுமான ஜெஃப் பிஸோஸ் முதலிடம் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு
சுமார் 11,200 கோடி டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2,208 பேர் இடம்பெற்றுள்ள இப்பட்டியலில் இந்தியாவிலிருந்து 119 பேர் இடம்
பிடித்துள்ளனர். இது கடந்த ஆண்டு எண்ணிக்கையைவிட 18 பேர் அதிகம்
என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு
அடுத்தபடியாக அதிக கோடீஸ்வரர்களைக்கொண்ட நாடாக இந்தியா இருக்
கிறது. அமெரிக்காவில் 585 கோடீஸ்வரர்களும், சீனாவில் 373 கோடீஸ்வரர்
களும் இருப்பதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. .....
நன்றி : தி இந்து, வியாழன், 08.03.2018
•••
இதுதான் வெட்கக்கேடான சாதனை என்பது. அதாவது, உலகின் ஒட்டுமொத்த
மக்கள்தொகை 760,00,00,000 (760 கோடி) ஆகும். இதில் சரிபாதி மக்கள் கிட்டத்
தட்ட 360,00,00,000 (360 கோடி) பேர்கள் கொடுமையான வறுமையில் வாடிக்
கொண்டிருக்கின்றனர். இத்தகைய அவலநிலை அவர்களது தலையெழுத்து
என்று சொல்லி கடந்து சென்றுவிட முடியாது. ஒட்டுமொத்த மக்கள்தொகை
யான 760 கோடி பேர்களில் வெறும் 2,208 பேர்கள் கோடீஸ்வரர்களாக விளங்கு
கிறார்கள் என்பது எந்த விதத்திலும், விகிதத்திலும் பொருந்துவதாகத் தெரிய
வில்லை!
அடுத்து இந்தியாவின் மக்கள்தொகை 134, 00,00,000. இதில் வெறும் 119 பேர்கள்
கோடீஸ்வரர்கள் என்பது எந்த விகிதத்திலும் பொருந்துவதாயில்லை! அடுத்து,
வெறும் 8 நபர்களின் வசம் இந்திய நாட்டின் உச்ச பட்ச சொத்துக்கள் உள்ளன
என்பதில் யாதொரு முரண்பாடும் இல்லையா!
ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியாவி
லிருந்து 119 பேர் இடம் பிடித்துள்ளனர். இது கடந்த ஆண்டு எண்ணிக்கையை
விட 18 பேர் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது என்று அப்பத்திரிகை குறிப்பிடு
கிறது.
உலகில், அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக கோடீஸ்வரர்
களைக்கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. அமெரிக்காவில் 585 கோடீஸ்
வரர்களும், சீனாவில் 373 கோடீஸ்வரர்களும் இருப்பதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்
துள்ளது.
ஆனால், அதே நேரத்தில், கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியா உலகிலேயே
மூன்றாவது இடத்தில் உள்ளது; அதாவது, நம் நாட்டிலும் 119 கோடீஸ்வரர்கள்
இருக்கிறார்கள் என்று மகிழ்ந்து கொண்டாடுவதா? அல்லது, இங்கே இந்தியா
வில், நாள்தோறும் இரவு உணவின்றி உறங்கச்செல்பவர்கள் 56% பேர்களும்,
இரண்டு வேளை உணவில்லாமல் இருப்பவர்கள் 30% பேர்களும் இருக்கிறார்
கள் என்பது குறித்து துயரப்படுவதா?
இந்திய அரசின் கடன் சுமை ரூ. 47 லட்சம் கோடி எனப்படுகிறது. (உலக வங்
கியிடம் கடன் வாங்கிய நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.) அதே
நேரத்தில், இந்தியாவின் முதல் 100 பணக்காரர்களின் ஒட்டுமொத்த சொத்து
மதிப்பு 31 இலட்சம் கோடிக்கும் ($479 பில்லியன்) அதிகமாக இருக்கிறது.
அதாவது, நாடு கடன் பொறியில் சிக்கியிருக்கிறது எனும் நிலையில், வெறும்
100 பணக்காரர்களிடம் மட்டும் 31 இலட்சம் கோடிகள் உள்ளது என்பதன்
அர்த்தம், நியாயம் என்ன? அதாவது, இந்தியா கடனில் தத்தளிக்கிறது; ஆனால்,
இந்த 100 பணக்காரர்கள் செல்வத்தில் திளைத்துக்கொண்டிருக்கிறார்கள்! இவர்
களுக்கு நாட்டின் கடனில் எவ்வித பங்கும், பொறுப்பும், எதுவும் இல்லையா?
இந்தியாவில் கடந்த பத்தாண்டு காலத்தில் பணக்காரர்கள் எண்ணிக்கை மிக
வேகமாக வளர்ந்து வந்திருப்பதாக பெயின் அண்ட் கோ கன்சல்டன்ஸி
நிறுவனம் தெரிவிக்கிறது. அந்நிறுவனம் நடத்திய ஆய்வில், 2000ம் ஆண்டுக்கு
பின்னர் இந்தியாவில் பணக்காரரர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு 11 சதவீதம்
என்ற அளவில் வளர்ந்து வருவது தெரிய வந்துள்ளது.ஆனால் இந்திய மக்கள்
தொகையில் 40 சதவீதம் பேர் தினசரி 50 ரூபாய்க்கும் கீழான வருமானத்தில்
வாழ்வதாக மதிப்பிடப்படுகிறது.
ஒருபுறம் நாளொன்றிற்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்கள் சம்பாதிக்கும்
(இது சம்பாத்தியமா அல்லது பகல் கொள்ளையா?) அம்பானி உள்ளிட்ட பெரும்
பணக்காரர்கள்; மறுபுறம் வெறும் 124 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாமல்
தட்டுத்தடுமாறிக் கொண்டிருக்கும் இந்திய ஏழை மக்கள். இந்த பஞ்சபராரிகள்
மீது பண மதிப்பழிப்பு மற்றும் ஜி.எஸ்.டி உள்ளிட்ட அஸ்திரங்களை ஏவி
எஞ்சியதையும் பறிக்கிறது கார்ப்பரேட்டுகளுக்கு சேவைபுரியும் தற்போதைய
இந்திய அரசு.
ஆனால், ஒரு பணக்காரர் அல்லது, பெருமுதலாளியால் மட்டும் நாள்ஒன்றிற்கு
நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்கள் எவ்வாறு, எவ்வழிமுறையில் சம்பாதிக்க
முடிகிறது?
உண்மையில், செல்வம் (பணம், சொத்து) என்பது முற்றிலும் ஒரு சில பெரு
முதலாளிகளின் அல்லது பணக்காரர்களின் உருவாக்கமோ, படைப்போ அல்ல!
செல்வம், அல்லது, பொருள்-வளங்களுக்கான அடிப்படை, பணம் படைத்தவர்
களின் முதலீடு மட்டுமே அல்ல! அதாவது செல்வத்தின் அடிப்படைகளில்
ஒரே ஒரு காரணி மட்டுமே பணம், அல்லது, முதலீடு என்பதாகும்! மிகவும்
அடிப்படையான காரணிகளானவை பூமி, பூமியின் இயற்கை வளங்கள்
(அனைத்துவித கச்சாப்பொருள்கள்), நிலம், நீர், காற்று, சுற்றுச்சூழல், பல்லுயிர்
வளங்கள், முக்கியமாக சக மனிதர்கள், அதாவது, மக்கள் சமுதாயம், மற்றும்
அவர்களது பெரும் உழைப்பும், யாவற்றுக்கும் மேலாக அனைவருக்கும் பொது
வான வாழ்க்கைத் தேவைகளும்தான் பொருள் வளங்களின் (செல்வத்தின்)
உருவாக்கத்திற்கும், உற்பத்திக்குமான அடிப்படைகளாகும்!
பொருளாதார நடவடிக்கைகள் என்ற போர்வையில், நாம் சுரண்டி கொள்ளை
யடிக்கும் இயற்கை வளங்களுக்கு, அதாவது, நாம் உருவாக்கும் பொருள்
வளங்கள், அல்லது, செல்வத்தின் ஒவ்வொரு ரூபாய்க்கும், டாலருக்கும் நாம்
இப்பூமிக்கும், பிற உயிரினங்களுக்கும், உழப்பைத்தரும் ஒவ்வொரு மனிதருக்
கும், சுற்றுச்சூழலுக்கும் நாம் கடன்பட்டிருக்கிறோம் என்பதை மறந்துவிட்டு,
"நான்தான் முதலீடு செய்தேன், ஆகவே, ஒட்டுமொத்த செல்வத்தையும் நானே
எடுத்துக்கொள்வேன், எல்லாமே எனக்குத்தான் சொந்தம், என உரிமை கொண்
டாடுவதற்கு இப்பூமியில் எவருக்கும் உரிமை கிடையாது! அவ்வாறு உரிமை
கோருபவன் ஒரு கடைந்தெடுத்த பிற்போக்குவாதியாகவும், முட்டாளாகவும்,
பேராசை பிடித்த மிருகமாகவும்தான் இருக்க முடியும்! அத்தகைய தொரு
முட்டாளின் பெயர் தான் "பெரும்பணக்காரன்" (மில்லியினர், பில்லியினர்)
என்றால், இனியும் அத்தகைய நடைமுறையை நாம் அனுமதிக்கலாமா?
கட்டாயம், செல்வம் சேர்ப்பதற்கு ஒரு உச்சவரம்பு நிர்ணயிக்கப்படவேண்டும்!
ஒவ்வொரு மனிதனுக்கும் இவ்வளவு தான் நிலம், மனை, பிற ஏணைய
சொத்துக்கள் உடமையாக இருக்கவேண்டும்; ஒரு குறிப்பிட்ட அளவிற்குமேல்
சொத்துக்களைச் சேர்ப்பது என்பது அடுத்தவர்களுக்கான வாய்ப்புக்களைப்
பறிப்பதாகும் எனக் கருதப்படவேண்டும்! ஒருவர் எத்தனை தொழிற்சாலை
களை அமைக்கலாம், பராமரிக்கலாம் என்பதற்கும் ஓர் உச்சவரம்பு வேண்டும்!
ஒரு 'தொழிலதிபர்' என்பவர், எண்ணற்ற தொழிற்சாலைகளைக் கொண்டிருந்
தாலும், சங்கிலித்தொடர் போன்ற வியாபார நிறுவனங்களைக் கொண்டிருந்
தாலும், ஏற்கனவே மேலே குறிப்பிட்ட படி, அவருடைய தொழிற்சாலைகளில்
பணிபுரியும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் ஒட்டுமொத்த லாபத்திலிருந்து
ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படவேண்டும்;
அதே போல, ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் சுற்றுச்சூழலைக் காப்பதற்கும்
(உயிரியல் மண்டலத்திற்கு ஏற்படும் பாதகங்களைச் சரிகட்டுவதற்கும்), இயற்
கையிடமிருந்து எடுக்கப்பட்ட வளங்களைச் சரிகட்டுவதற்கும், அல்லது புதுப்
பிப்பதற்குமான தொழில் நுட்பங்களுக்குச் செலவிடவேண்டும்! அனைத்து
லாபங்களையும் தொழிலதிபதிரே சுருட்டிக்கொண்டு போய்விடுவதை இனியும்
அனுமதிக்கலாகாது! அவர் போட்ட முதலீட்டிற்குரிய நியாயமான சதவிகிதம்
மட்டுமே அவருக்குச் செல்லவேண்டும்! அந்த சதவிகிதமும் ஒரு குறிப்பிட்ட
அளவைத் தாண்டுமானல், அதற்கும் அவர் வரி கட்டவேண்டும்!
எவ்வொரு நாட்டிலும் பணக்காரர்கள் என்போர் 1% மட்டுமே. இந்த ஒரு
சதவீதத்தினர் ஏணைய 99% மக்களின் நலன்களுக்கு எதிராகச்செயல்படுகிறார்
கள் என்பதை எப்போது 99% உணரப்போகிறார்கள்? இவ்வளவிற்கும், அவர்கள்
சப்தமின்றி, போரின்றி, ஆரவாரமின்றி, அமைதியாக தங்களுடைய கயமைத்
தனம், பேராசை, சுயநலம், நரித்தந்திரம், பொய், ஏமாற்று, ஆகியவற்றுடன்
அரசின் ஆசீர்வாதங்களையும் கொண்டு 99% மக்களை ஏழ்மையிலாழ்த்தி
ஏய்த்து மேய்த்து வருகின்றனர்!
பணக்காரர்களின் சொத்து மதிப்பு ஒரு எல்லையைத் தாண்டும் போது, இந்திய
அரசாயினும், அல்லது வேறு எந்த நாட்டு அரசாயினும், அப்பணக்காரர்களுக்கு
அடிமையாக மாறுவது என்பதைத் தவிர்க்க முடியாது! மேலும், அவர்களது
விருப்பத்திற்கேற்பத்தான் ஆட்சிசெய்யவும் முடியும்!
மா.கணேசன் • 08-03-2018
----------------------------------------------------------------------------
No comments:
Post a Comment