Wednesday, 24 May 2017

நதியைப்போல வாழுங்கள்!





நதி ஓடிக்கொண்டேயிருக்கிறது என்பது தான் முக்கியம்; அது செல்லும் வழி
நெடுகிலும், அது எவையெவற்றையெல்லாம் சந்திக்கிறது, எத்தகைய தடை
களை  எதிர்கொள்கிறது  என்பது போன்ற  விஷயங்கள், அனுபவங்கள், அறி
வுச்சேகரங்கள், எவையும் முக்கியமல்ல! ஏனெனில், அவை  எதுவும்  இறுதி
யானவையல்ல!  மாறாக, அவை யாவும், இறுதி அர்த்தத்தை நோக்கிய  நதி
யின்  பயணவழிச் சாட்சியங்கள்,  வேடிக்கைக்காட்சிகள், அவ்வளவே!   நதி
தன் ஒப்பற்ற இலக்கை நோக்கிச்செல்கிறது என்பது மட்டும்தான் நதிக்கான
உந்துசக்தி, உற்சாகத் தூண்டுதல், இளைப்பாறுதல் யாவுமாகும்! நதியானது
முன்னோக்கிச்  செல்லச்  செல்ல, தான்  கடந்து  வந்த  பாதையில் ஏற்பட்ட
அனுபவங்களை மறந்துவிடுகிறது! முடிவில் தன் இலக்கை அடையும்போது
தன்னையும்  அது முற்றிலுமாக மறந்து சுமை நீங்கியதாகி விடுகிறது!
              - நான் யார்?/ மா.கணேசன்/21.02.2017

நதி தன் ஒரே இலக்கான
சமுத்திரத்தை  அடைவது  என்பதை  ஒரு கணமும்  மறப்பதோ, துறப்பதோ
இல்லை! அவ்வாறு மறந்துவிடும் பட்சத்தில், நதியானது நதியாக இல்லாமல்;
மேலும் தனது வழியில் எதிர்ப்படும் தடைகளைக்கண்டு தயங்கி நிற்குமானால்
ஆங்காங்கே சிறுசிறு குட்டையாகத் தேங்கிவிடக்கூடும்! அவ்வாறே, மனிதனா
னவன்  தன் வாழ்வின்  ஒப்பற்ற ஒரே இலக்கான  மெய்ம்மையை அடைவது
என்பதை  ஒரு கணமும் மறப்பானெனில் அவன் ஒரு மனிதனாக இல்லாமல்
ஒரு ஜந்துவாகச் சுருங்கிப்போவான்!
              - ஒரு கல், ஒரு தவளை, ஒரு மனிதன்!/மா.கணேசன்/13.05.2017


வாழ்க்கை என்பது ஒரு நதியின் இயக்கத்தை ஒத்தது ஆகும்; சமுத்திரத்தை  
சென்றடைவதே  நதியின் ஒரே  குறிக்கோளும்  இலக்கும் ஆகும்!

அதேவேளையில்,ஒரு நதியானது தனது இலக்கை அடையவேண்டுமெனில்,
அதன்   இயக்கம்   தொடக்கத்திலிருந்தே  சமுத்திரத்தை    நோக்கியதாக
அமைந்திருப்பது  அவசியமாகும்! அதாவது,  நதியானது  காடு  மேடு  என்று
சுற்றித் திரிந்துவிட்டு,   திடீரென,   சமுத்திரத்தை  நோக்கிப்பாய்ந்து செல்ல
முடியாது!  மேலும், நதியிடம் யாதொரு வரைபடமும் இல்லை  என்றபோதி
லும், அது, புவி ஈர்ப்பை  தனது  வழிகாட்டியாகக் கொண்டு பாய்ந்து சென்று
முடிவில் சமுத்திரத்தை அடைந்துவிடுகிறது! அது போலவே, மனிதன் தனது
வாழ்க்கையின்  இலக்கை, முழுமையை  அடைவதற்கு வரைபடம்  எதுவும்
தேவையில்லை!   நதிக்கு புவி-ஈர்ப்பு போல,   மனிதனுக்கு "உணர்வு-ஈர்ப்பு"
தான்  வழிகாட்டியாகும்!    நதியானது  மேட்டிலிருந்து  பள்ளத்திற்குப்பாயும்;
(மனித) உணர்வு  பள்ளத்திலிருந்து மேட்டிற்கு உயரும்!   இந்த அம்சம் தான்
பெரும்பாலான  மனிதர்களுக்கு பெரிய சவாலாக உள்ளது!  அதாவது மேட்டி
லிருந்து   பள்ளத்திற்கு   இறங்குவது எளிது; பள்ளத்திலிலிருந்து  மேட்டிற்கு
உயருவது மிக்கக் கடினம்!

எவ்வாறு,   நதியின் இயக்கமானது  தொடக்கத்திலிருந்தே தனது இலக்கான
சமுத்திரத்தை    நோக்கியதாக  அமைந்துள்ளதோ,  அவ்வாறே  மனிதனின்
வாழ்வியக்கமும்  தனது வாழ்வின் இலக்கான அர்த்தம், உண்மை, முழுமை
ஆகியவற்றை நோக்கியதாக அமைவது அவசியம்! நதியானது அது தொடங்
கிய  இடத்திலிருந்து தன் அடைவிடம் சேரும்வரை ஓய்வில்லாமல் பாய்ந்து
சென்று கொண்டேயிருக்கிறது; அது தன் பாதைநெடுகிலும் தான் சந்திக்கும்
எதனுடனும்  தங்கிவிடுவதுமில்லை, பிணைத்துக் கொள்வதுமில்லை, அடை
யாளப்  படுத்திக்கொள்வதுமில்லை!  நதியானது  எத்தகைய  நிலப்பரப்பின்
மீது பாய்ந்து சென்றாலும், அதன் உய்வும், முழுமையும் சமுத்திரத்தை அடை
வதிலேயே உள்ளது!  நதிக்கும் அது பாய்ந்து செல்லும்  நிலப்பரப்புகளுக்கும்
இடையேயான உறவு என்பது மிகத் தற்காலிகமானது!  நதியின்  ஒரே உறவு
சமுத்திரம் மட்டுமே! தன்  இலக்கை அடையும் குறிக்கோளிலிருந்து வழுவா
மல், சிந்தாமல் சிதறாமல் செல்லும்பொருட்டு நதி தனது கரைகளை, கட்டுப்
பாடுகளைத் தானே உருவாக்கிக்கொள்கிறது!

ஆம்,  நதியைப்போலவே மனிதனுக்கும் கரைகள்,  சுய-கட்டுப்பாடுகள் அவ
சியமாகும்! அவற்றைவிட,  இலக்கு குறித்த ஒற்றை மனம்கொண்ட தன்மை
(Single-Mindedness)மிகமிக அவசியமாகும்! இலக்கு குறித்த தீவிரமான
உணர்வு இல்லாமல் வெறும் கட்டுப்பாடுகளால் ஒரு பயனுமில்லை! மேலும்,
மனிதனுக்கு உண்மை குறித்த இடையறாத (ஓய்வில்லாத) விசாரமும் அவசி
யமாகும்! நதியைப்போலவே, மனிதனுக்கும் இவ்வுலகில் எதனுடனும் உறவு
என்பது இருக்கமுடியாது! எல்லா உறவுகளும் தற்காலிகமானவையே!  ஏனெ
னில்,  உண்மை மட்டுமே  மனிதனின்  ஒரே நிரந்தர உறவாகும்!  ஏனெனில்,
உண்மைதான்  மனிதனது சாரம் அல்லது ஆன்மா ஆகும்!  உண்மை என்பது
பூடகமானதொரு   கருத்தோ,  கோட்பாடோ, புரியாத   நுட்பச்  சொற்களைக்
கொண்டமைந்த தத்துவ விளக்கமோ அல்ல!  மாறாக, உண்மை என்பது ஒவ்
வொரு  மனிதனும் அடையக்கூடிய  உச்ச நிலை உணர்வாகும்! அனைத்தும்
- இப்பிரபஞ்சம் முழுவதும் -   ஒரு  ஒற்றைப் புள்ளியில்      குவிக்கப்பட்டு
அடையப்படும்  ஒருமையும் முழுமையுமான  உணர்வுமயமான  மெய்ம்மை
தான் உண்மையாகும்!  இது  வித்திலிருந்து  தோன்றிய மாபெரும் விருட்சம்
மீண்டும் வித்தினுள் அடங்குவதை ஒத்ததாகும்!
             - வாழ்-கால வரையறை விதி! /மா.கணேசன் /  20.12.2016


சமுத்திரம் செல்ல வழிகேட்கும்
நதியும் உண்டோ?

சமுத்திரம் சென்றடைய நதிக்கு
வழி சொல்பவன் மூடன்!

தனது நோக்கத்தை இழந்த நதி
நதியல்ல, தேங்கிய குட்டை!

சேற்றுக்குட்டைக்கு சமுத்திரம்
சேரும் எண்ணம் தோன்றுமா?

வெள்ளப்பெருக்கெடுக்காத நதி
ஒருபோதும் சமுத்திரம் சேராது!

தன்னிலிருந்தே உத்வேகம்,விவேகம்
வேகம் மூன்றையும் நதி பெறுகிறது!

தன்னுள் வெள்ளம் கொண்ட நதிக்கு
தடைகள் ஒரு பொருட்டல்ல!

நதிமூலம் ஆராய்வதில்லை நதி!
தன் இலக்கு மறப்பதில்லை
தவறுவதுமில்லை!
      *
தான் தோன்றிய கணத்திலிருந்து
இடைவழியில் என்ன நேர்ந்தாலும்
நேராவிட்டாலும் தங்காமல், தேங்காமல்
தடைகளைக்கண்டு தயங்காமல், மயங்காமல்
தன் போக்கில் போய்க்கொண்டேயிருக்கும்
நதியின் எண்ணம், குறிக்கோள், இலட்சியம்,
இலக்கு யாவும் சமுத்திரச் சங்கமம் மட்டுமே!
       *
நதி செல்லும் வழி நெடுகிலும் அதற்கு
பற்பல அனுபவங்கள்!
எதிலும் சிக்கித் தேங்கிடாத நதியே
சமுத்திரம் அடையும்!
வற்றாத சமுத்திரமே நதியின் முற்றான
பாதுகாப்பும் இறுதிப் புகலிடமும்!
இடைவழியிடங்களோ இன்னும்
நெடும் பயணமோ அல்ல முக்கியம்!
வெள்ளப் பெருக்கெடுத்திடும் வேகமே
வெற்றியின் ரகசியம் !
சமுத்திரச் சங்கமமே நதியினை
முழுமைப்படுத்திடும் , நிரந்திர
நிறைவு தந்திடும் இணையிலா
இறுதி அனுபவம்!
      *
           - பாதையற்ற பயணம் /மா.கணேசன் / 02.06.2016

நதியின் இலக்கு, முடிவு, முழுமை, அர்த்தம், நிறைவு . . . .யாவும் அது
சமுத்திரத்துடன்  சங்கமிப்பதில் மட்டுமே அடங்கியுள்ளது. நதிக்கும்,
சமுத்திரத்திற்கும் உள்ள அதே ஒற்றுமையும், தொடர்பும், பொருத்தப்
பாடும், வித்தியாசமும் தான் மனிதப்பாசத்திற்கும், ஆழமான அன்பிற்கும்
ஆனதுமாகும்

மனித உணர்வு என்பது ஒரு நதியைப் போன்றது.  நதியானது
இடைவழிகளில்  எதனாலும் தடுக்கப்படவில்லை, தேக்கப்படவில்லை
என்றால் அது விரைவாக சமுத்திரத்தைச் சென்றடைவது உறுதி.
உணர்வும் அவ்வாறே இடைவழிகளில் யாதொரு பொருளைக்கொண்டும்,
உறவைக்கொண்டும், கற்பனை அல்லது கோட்பாட்டைக் கொண்டும்
கட்டப்படவில்லை; எதனுடனும் பிணைக்கப்படவில்லை எனில் மனித
உணர்வானது  "முழு-உணர்வு" எனும் பேருணர்வு நிலையைச் சென்றடைந்து
தனது முழுமையைத் தழுவிக்கொள்ளும் !

                  - அன்பு:மகத்தானதொரு இன்மை!/மா.கணேசன் /22.03.2016.


       'நதி' மலையில் தான் தோன்றுகிறது
       என்ற போதிலும் அது
       மலைக்குரியதல்ல - உண்மையில்
       நதியை மலை உற்பத்தி செய்திடவில்லை!
       மாறாக, நதி உற்பத்தியாவதற்கு
       உகந்த இடமாக மலை உள்ளது
       அவ்வளவு தான்!
       மற்றபடி நதி சமுத்திரத்தைச் சேர்ந்தது!

நதியைப்போலவே,   மனித -உணர்வானது    உயிருள்ள    மனித-உடலில்
குறிப்பாக,  மனித-மூளையில் தோன்றிய போதிலும்,  அது இக்கரையைச்
சேர்ந்த  உடலையோ,  உயிரையோ,   இன்னும்  உலகையோ சேர்ந்ததல்ல!
மாறாக,  உணர்வு என்பது "முழு-உணர்வு" எனும் மறுகரையைச்சேர்ந்தது!  

நதியானது  பாய்ந்தோடிடக் கூடியது,  அதைத்  தேங்கிடச் செய்தால்,  அது
இக்கரையையே     பிரதிபலிப்ப  தாயிருக்கும்  -     அது    சமுத்திரத்தைச்
சென்றடையாது!  ஆனால்,  அது   வெள்ளப்பெருக்கெடுத்திடும் பட்சத்தில்
பாய்ந்தோடிடக்கூடிய முடுக்கத்தையும் வேகத்தையும் பெற்றிடும் - பிறகு
நதியானது விரைவாக சமுத்திரத்தைச் சென்றடைந்திடும்!

அது போல, உங்களது தொடக்க-நிலை உணர்வில் நீங்கள் தேங்கி  விடும்
பட்சத்தில்,  உங்கள் உணர்வானது  இக்கரைக்கு உரியதாக, இக்கரையை
மட்டுமே  பிரதிபலிப்பதாக;   இக்கரைக்குரிய  உடலுடனும்,    அதனுடைய
பிராணித்தனமான இச்சைகள், பசிகள், மற்றும் மேலோட்டமான  தேவை
களுடனும்   தன்னை  அடையாளப்படுத்திக்கொண்டுவிடும் அபாயத்தில்
சிக்குண்டு விடும்!  அதன் பிறகு,  உங்கள்  உணர்வை  இக்கரையிலிருந்து
பிரித்தெடுப்பது அவ்வளவு சுலபமல்ல!
               - மறு கரையிலிருந்து..... /மா.கணேசன் / 19.02.2010

ஒரு  ஆறு  என்பது  ஓடிக்கொண்டேயிருக்கிறது  என்பதால்,  ஒரு முறை
நாம்  குளித்த  அதே  தண்ணீரில்,  இரண்டாவது முறை  நாம் குளிக்க
முடியாது  என்பது புரிந்து கொள்ளக்கூடியதே; ஆனால், அப்புரிதல் எவ்வகை
யிலும்  இறுதியானதல்ல!  ஏனெனில், எந்தவொரு ஆறும் முடிவேயில்லாமல்

ஓடிக்கொண்டேயிருப்பதில்லை; மாறாக,எல்லா ஆறுகளும் முடிவில் கடலில்
சென்று கலக்கவே செய்கின்றன! ஆக, ஆற்றுக்கு இலக்கு உள்ளதைப்போல,
மனித  வாழ்க்கைக்கும்   இலக்கு   உள்ளது.  மனிதன்  வெறுமனே வாழ்ந்து
கொண்டேயிருப்பதில்லை;  அதில் அர்த்தமும் இல்லை!  இன்னும் அவன்
எப்போதும் ஆற்றில் குளித்துக்கொண்டேயிருக்கவும் முடியாது!

இவ்வாறே,பிரபஞ்சம் என்பதும் ஒரு ஆறுதான்!அது வெறுமனே ஒரு எந்திரம்
போல இயங்கிக் கொண்டேயிருக்கும்  ஒன்றல்ல! அது ஒரு ஒப்பற்ற இலக்கு
நோக்கிச் செல்லும் ஒரு பரிணாம இயக்கமாகும்!

         - மாற்றமனைத்தும் முடிவுறும்! / மா.கணேசன்/ 16.02.2017



நதி மலையில் உற்பத்தியாகிறதே
 தவிர
மலை நதியை உற்பத்தி செய்வதில்லை!

நதி உற்பத்தியாவதற்கு ஏற்ற இடமாக மலை
இருக்கிறது - அவ்வளவு தான்!

நதி என்பது மலை, பள்ளத்தாக்கு, காடு, சமவெளி,
நாடு, நகரம்.... யாவற்றிலிருந்தும் வேறானது!

நதி பாய்ந்துசெல்லும் மலை மற்றும் பிற
அனைத்து இடப்பரப்புக்களையும் தற்காலிகமாகச்
சார்ந்துள்ளதே தவிர எவற்றையும் அது சேர்ந்ததல்ல!

நதி சமுத்திரத்தை மட்டுமே சேர்ந்தது!

நதி மட்டுமே சமுத்திரத்தைச் சென்று சேரவேண்டுமே
தவிர - அது மலை, காடு, நாடு, நகரம் அனைத்தையும்
கொண்டு சேர்க்கத்தேவையில்லை!
           *
நதியைப்போலவே,

மனித உணர்வும் உடலில் (மூளையில்)
உற்பத்தியாகிறதே
 தவிர, உணர்வை உடலோ
(மூளையோ) உற்பத்தி செய்வதில்லை!

உணர்வு உற்பத்தியாவதற்கு உடலும், மூளையும்
ஏற்ற இடமாக இருக்கிறது - அவ்வளவு தான்!

மனித உடல், மூளை அல்லது மனம்
என்பது வேறு; உணர்வு என்பது இவற்றிலிருந்து
முற்றிலும் வேறான தன்மையுடையது!

உணர்வானது உலகம், உடல், புலன்கள், மனம், எண்ணம்
ஆகியவற்றைத் தற்காலிகமாகச் சார்ந்திருக்கிறதே
தவிர உணர்வு இவற்றைச் சேர்ந்ததல்ல!

மனித உணர்வு மகா-உணர்வுச் சமுத்திரமாகிய கடவுளைச்
சேர்ந்தது, சென்று சேர வேண்டும்!

மனித உணர்வு மட்டுமே முழு-உணர்வாகிய கடவுள் எனும்
இறுதி மெய்ம்மையை அடைய முடியும், அடைந்தாக
வேண்டுமே தவிர, உடலுக்கு முக்தி தேவையில்லை!
           *
"வாழ்க்கையை கணத்திற்கு கணம்
விழிப்புணர்வோடு வாழ வேண்டும்!"
என சிலர் சொல்கிறார்கள்.
இது சலிப்புட்டும் வேண்டாத வேலை!
கணத்திற்கு கணம் வேண்டாம்!
எப்போதாவது ஒரே ஒரு கணம் மட்டும்
முழுமையாக விழிப்புணர்வோடு
வாழ்ந்திடுங்கள் போதும் - ஏனெனில்
ஆற்றில் வெள்ளம் எப்போதும்
ஏற்படுவதில்லை!
           *
வெள்ளப்பெருக்கு கொள்ளாத நதி
ஒருபோதும் சமுத்திரத்தைச்
சென்றடைவதில்லை!

உணர்வுப்பெருக்கு கொள்ளாத மனிதன்
ஒருபோதும் உண்மையை அறிவதில்லை!

            *
        - தலைக்குமேல் வெள்ளம் /மா.கணேசன்/ 23.12.2008

மா.கணேசன்/நெய்வேலி/23.02.2017
----------------------------------------------------------------------------

Sunday, 21 May 2017

வாழ்வின் அர்த்தம் ஒன்றா? பலவா?






   

     வாழ்க்கைக்கு 'ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள் உள்ளன' என்று
     சொல்வதும், 'அர்த்தமேயில்லை' என்று சொல்வதும் ஒன்றுதான்!
                                                                 <•>

வாழ்வின் அர்த்தம் ஒன்றா? பலவா?  உலகில்  எத்தனை  கோடி  மனிதர்கள்
இருக்கிறார்களோ, அத்தனை கோடி அர்த்தங்கள் உள்ளன எனலாம்!  இதுதான்
எதார்த்தம்! ஒரு மேசையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாகப் பயன்
படுத்தக்கூடும் என்பதுபோலவே "வாழ்க்கை" என்பதும் ஒவ்வொரு மாதிரியாக
அவரவர் விரும்பியபடி தாறுமாறாக வாழப்படுகிறது!

பொதுவாக, வாழ்க்கை என்பது உயிர்-வாழ்தல் என்பதையே குறிக்கிறது. ஏழை
எளியவர்கள் முதல் லட்சாதிபதி, கோடீஸ்வரர்கள் வரை எல்லா மனிதர்களும்
உயிர்-வாழ்வதைத் தான் வாழ்க்கை என வாழ்ந்து செல்கிறார்கள்!  உயிர்-வாழ்
தலில் ஏழ்மையான உயிர்-வாழ்தல், பணக்காரத்தனமான உயிர்-வாழ்தல் என்ற
தர-அளவுகள் எதுவுமில்லை! மாறாக, இத்தகைய தர-அளவுகள் யாவும் வாழ்க்
கையின் அர்த்தம் அறியாத சமூகத்தின், மனிதத்திரளின் கண்டுபிடிப்புகளாகும்!
உயிர்-வாழ்தல்  என்பது  உயிர்-வாழ்தல்  மட்டுமே;  அதில்  தர-அளவுகளைப்
புகுத்தவியலாது! ஆனால், இந்த அமானிட சமூகத்தில், மனிதத்தன்மைபெறாத
சமூகத்தில்,  எல்லா பிறழ்ச்சிகளும், செயற்கை, மற்றும் போலித்  தனங்களும்
சாத்தியமாகலாம்!  ஒருவன்  எவ்வளவு  சௌகரியமாகவும், ஆடம்பரமாகவும்
உயிர்-வாழ்ந்தாலும் அது ஒரு இம்மியளவும் அவனுடைய உயிர்-வாழ்தலுக்கு
அர்த்தம் சேர்ப்பதில்லை! இதற்குமாறாக, இன்னொருவன் சோற்றுக்கே கஷ்டப்
படுபவனாக வாழ்கிறான் எனில்,  அவனது  உயிர்-வாழ்தலும் அர்த்தம் பெறுவ
தில்லை;  சொல்லப்போனால்,  அவனுக்கு இன்னும் உயிர்-வாழ்தலே சாத்திய
மாகவில்லை!

உயிர்-வாழ்தலை நாம் மதிப்பிடமுடியுமெனில்,ஒரே ஒரு அம்சத்தைக்கொண்டு
மட்டுமே செய்யமுடியும்!  "அர்த்தம்"  என்பதே அந்த அம்சம்! ஆம், உயிர்-வாழ்
தலில்,  'அர்த்தபெறாதது', 'அர்த்தம் பெற்றது' என இருவகைகள் மட்டுமே சாத்
தியம்! ஆனால்,  இந்த வித்தியாசம்  சமூகத்தினால் உருவாக்கப்படுவதில்லை!
அதாவது,  உயிர்-வாழ்தல்  என்பது உயிர்-வாழ்தலைக்கடந்த வேறொரு நோக்
கத்தை நிறைவேற்றுவதற்கான அடிப்படையாக அமைந்த ஒரு கருவி போன்ற
தாகும்!  ஒருவன் மிகச் சௌகரியமாக உயிர்வாழலாம்; அவன் ஏன், எதற்காக,
எந்த நோக்கத்திற்காக,எந்த இலக்கை அடைவதற்காக உயிர்-வாழ்கிறான் என்று
அவனிடம் கேட்டால்,  அவனால்  எதையும்  சொல்லமுடியாது!  உலகிலுள்ள
99.9 %  பேர்களது  நிலையும்  இதுதான்!   உயிர்-வாழ்தலே  உயிர்-வாழ்தலின்
நோக்கமோ,  இலக்கோ  அல்ல என்பது அவர்களுக்குத் தெரியாது! அறியாமை
யில் உழல்பவர்கள், அஞ்ஞானிகள் பாக்கியவான்கள்!

சிலர், (அவர்களை என்ன பெயரிட்டு அழைப்பதென்று தெரியவில்லை!) வாழ்க்
கைக்கு ஒரே "ஒரு" அர்த்தம் மட்டுமே உள்ளது என்பதை மறுப்பவர்களாகவும்,
மாறாக,  வாழ்க்கைக்கு பலவித அர்த்தங்கள் உள்ளன என்பதாகவும் 'தத்துவம்'
பேசி வருகிறார்கள்! வாழ்க்கைக்கு ஒரே "ஒரு" அர்த்தம் மட்டுமே உள்ளது என்
பது  உண்மையானால்,  இவ்வளவு காலத்தில்,  பரவலாக உலகம் முழுவதும்
அந்த  ஒற்றை  அர்த்தத்தை  அங்கீகரித்து ஏற்றுக்கொண்டிருப்பரே,  அதாவது,
இந்நேரம்  அது குறித்து கருத்தொற்றுமை ஏற்பட்டிருக்குமே!  ஆனால், அப்படி
எதுவும் நிகழவில்லையே! என்று வாதம் புரிகின்றனர்.

"அவ்வாறு,  வாழ்க்கைக்கு  ஒரே "ஒரு" அர்த்தம் மட்டுமே  உள்ளது என்றால்,
அதன்  மூலம் (source) எது? அம்மூலம் மனிதர்களிடமே இருப்பது என்பது
வெறுமனே  சாத்தியமில்லை என்பதுமட்டுமல்ல,  எல்லா மனிதர்களுக்குமாக
அத்தகைய   அர்த்தத்தை  எந்த  மனிதனும்  கண்டுபிடித்ததற்கான  அல்லது
உருவாக்கியதற்கான  தடயம் எதுவும் இல்லை!"  ஏற்கனவே எவராவது அந்த
அர்த்தத்தைக்  கண்டுபிடித்திருந்தால்,  அதை பிற மனிதர்கள் கவனித்திருக்கக்
கூடும்,  அதைப்பதிவு செய்திருக்கக்கூடும், எல்லோர் காதுகளுக்கும் அது எட்டி
யிருக்கும்.அவ்வாறு எவராவது கண்டுபிடித்திருப்பதாக உரிமைகோரியிருந்தால்
அக்கோரிக்கையை ஏற்காத பிறர்  மறுத்திருக்கக்கூடும்;  ஆனால்,  அதற்கான
தடயமும் இல்லை!" என்பதாக இந்த பன்மைவாதிகள் தருக்கம் செய்கிறார்கள்!

இவர்கள் சொல்வது போல  வாழ்க்கைக்குப் பல அர்த்தங்கள் இருக்குமானால்,
அது வாழ்க்கையாக இருக்காது! எல்லா மனிதர்களும் வாழ்க்கையின் அர்த்தத்
தைக்  கண்டடையாதவர்களாக இருக்கலாம்,  தொடர்ந்து அர்த்தத்தைக் கண்ட
டையும்   முயற்சியையே  வாழ்க்கையாக  மேற்கொள்ளலாம்,  தவறில்லை!
ஆனால்,  வாழ்க்கைக்குப்  பல அர்த்தங்கள் இருக்கிறது எனும் பன்மைவாதப்
பாழும் கிணற்றில் வீழாது தம்மைப்பாதுகாத்துக்கொள்வது மிகவும் முக்கியம்!

முதலிடத்தில்,  வாழ்க்கைக்கு  அர்த்தம் உள்ளது என்பதை நாம் அனைவரும்
கருத்தில் கொள்வது அவசியம்! அடுத்தது, அந்த அர்த்தத்தை நாம் ஒவ்வொரு
வரும்  தனித்தனியே  கண்டுபிடிப்பது  அவசியம்!  ஏனெனில், ஒருவன் தனது
பசிக்குத் தானேதான் உணவு உட்கொள்ளவேண்டும்! அடுத்து, அர்த்தத்திற்கான
மூலம் (source) நம் ஒவ்வொருவரிடமும் உள்ளது! உணர்வு தான் அர்த்தத்
திற்கான  மூலம் ஆகும்!  ஆம்,  ஒவ்வொரு  தனிமனிதனின்  உணர்வும்தான்
அர்த்தத்தின்  ஊற்றாக  மாற வேண்டும்!  வாழ்க்கை தனது அர்த்தத்தை மேற்
புறத்திலேயே அணிந்து கொண்டிருப்பதில்லை! ஆகவே,ஒவ்வொரு மனிதனும்
தன்னுள்  ஆழ்ந்து  அர்த்தத்தை  உணர்ந்தறிந்தாக வேண்டும்! உணர்வில்லை
யேல், மனிதனுக்கு வாழ்க்கையும் இல்லை, அர்த்தமும் இல்லை!

முதலிடத்தில்,  நாம் இங்கிருக்கிறோம் என்பது நம்முடைய சொந்தத் தெரிவி
னால்  அல்ல என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்வது மிகவும் அவசியம்!
ஆகவே,  வாழ்வின் அர்த்தம்,  குறிக்கோள், இலக்கு குறித்த விஷயங்களிலும்
நம்முடைய   தெரிவுக்கு  எவ்வித இடமுமில்லை!  இதன் அர்த்தம் எல்லாம்
ஏற்கனவே   தீர்மானிக்கப்பட்டுவிட்டன  என்பதோ, அல்லது, நமக்கு யாதொரு
சுதந்திரமும் இல்லை என்பதோ,  அல்லது, நாம் வாழ்க்கை எனும் வழிமுறை
யின்  அடிமைகள் என்பதோ அல்ல!  மாறாக,   நாம்  திடீரென கண்விழித்துப்
பார்க்கையில், நாம் இங்கு, இப்பூமியின் மீது இருக்கிறோம்! இருப்பு,வாழ்க்கை
எனும் இயக்கம்  எங்கு, எப்போது,  எவ்வாறு  தொடங்கியது என்பது நமக்குத்
தெரியாது!  அது எங்கு, எதை நோக்கிச் செல்கிறது,  அதன் அசலான நோக்கம்,
இலக்கு  என்ன  என்பதும் நமக்குத்தெரியாது!  நமக்குத் தெரிவதெல்லாம், நம்
உள்ளிருந்து   நம்மைச் செலுத்துகிற பசி, தாகம், பாலுணர்வு, பாதுகாப்புணர்வு
போன்ற  சில அடிப்படையான இயல்பூக்கிகள் மட்டுமே!  இவை, உயிர்-வாழ்த
லைப்பற்றியதாக  மட்டுமே உள்ளதே தவிர,  வாழ்க்கையைப்பற்றி, வாழ்க்கை
யின்  அசலான குறிக்கோள், இலக்கு பற்றி எவ்வித குறிப்பையும் வழங்குவது
இல்லை!

இதன்  அர்த்தம்  வாழ்க்கைக்கு குறிப்பான,  பிரத்யேக அர்த்தம் எதுவுமில்லை
என்பதோ, ஆகவே,நாம் நம் விருப்பப்படி அர்த்தத்தைக் கற்பித்துக்கொள்ளலாம்
என்பதோ அல்ல! மாறாக, வாழ்க்கை இயக்கத்தின் நீள - அகலத்தைக்கொண்டு,
அதாவது,  பிரபஞ்சப் பரிணாம-இயக்கம்  இதுவரை   கடந்து வந்த  வளர்ச்சிக்
கட்டங்களையும்,   உள்ளார்ந்த  பரிணாமத் திட்டத்தையும்    உய்த்துணர்ந்து
வாழ்வின்   குறிக்கோளை,  இலக்கை,  அர்த்தத்தை,  நாம்  உய்த்துணர்ந்தாக
வேண்டும்!

அடுத்து,  மிக முக்கியமாக,  வாழ்வின் அர்த்தம் என்பதும் உண்மை என்பதும்
ஒன்றே தான்!  உண்மையிலும்  பல உண்மைகள் என்று எதுவும் கிடையாது!
வாழ்வின் அசலான, மிகப்பிரத்யேகமான அந்த ஒற்றை அர்த்தத்தை எத்தனை
யோ  தனிமனிதர்கள்  ஏற்கனவே  கண்டடைந்து உலகிற்கு அறிவித்துள்ளனர்;
அவர்களில்  நாமறிந்த  வகையில்  முதலாமவர் புத்தர் ஆவார்.  புத்தருக்கும்
முன்னர்,  உபநிடத ரிஷிகள், ஞானிகள் போன்ற பெயர் தெரியாத வேறு சிலர்,
இருந்திருக்கலாம்!   அடுத்து, சாக்ரட்டீஸ், இயேசு, லாவோத்சு போன்றோரும்,
பிற்காலங்களில்,  திருவள்ளுவர், திருமூலர்; பிறகு கபீர்தாசர்; நம் காலத்திற்கு
சற்று  முன்னர்  வள்ளலாரும்;  நம் காலத்தில் ரமணர், அரவிந்தர், கிருஷ்ண
மூர்த்தி போன்ற பலரும்  வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்தறிந்து அறிவித்
துள்ளனர்!

ஆனால்,  புத்தர் ஆகட்டும், சாக்ரட்டீஸ், அல்லது இயேசு ஆகட்டும்; அவர்கள்
அர்த்தமுள்ள  வாழ்க்கையை வாழ்வதற்கான வழியை  மட்டும்தான் சொல்ல
முடியுமே தவிர,  அர்த்தத்தை  கண்டடைவது  ஒவ்வொரு மனிதனின் உணர்
வார்ந்த முயற்சியையும்,  முனைப்பையும் சார்ந்ததாகும்!  ஏனெனில், அர்த்தம்
என்பது  தொழிற்சாலையில் தயாரித்து எல்லோருக்கும் வினியோகம் செய்யப்
படக்கூடிய ஒரு பொருள் அல்ல! நமக்கான உணவை எவர்வேண்டுமானாலும்
சமைத்துத்தரலாம்;  ஆனால்,  நமக்கான உண்மையை, அர்த்தத்தை நாம் ஒவ்
வொருவரும்தான் சமைத்துக்கொள்ளவேண்டும்!

ஆனால், ஏன், பரவலாக, பெருமளவில் மனிதர்கள் வாழ்வின் அர்த்தம் பற்றிய
தேவையை  உணர்வதுகூட இல்லை? ஆம், போதிய உணர்வு இல்லாமையே
இதற்குக் காரணமாகும்!  அர்த்தத்தின்  தேவையை  உணரக்கூடிய அளவிற்கு
மனிதர்கள்  உணர்வு   பெறவில்லை, அதாவது,  உணர்வில்  வளரவில்லை!
சாதாரணமாக,  ஒருவனுக்கு  உணவின்  தேவையை  பசி-உணர்வு  ஏற்பட்டு
உணர்த்துவது போல  அர்த்தத்தின்  தேவையை உணர்த்துவதற்கு மனிதனுள்
யாதொரு மையமும் இல்லை!

ஏனெனில், அர்த்தத்திற்குரிய பசி ஒருவனுடைய உணர்வில் உதிக்கவேண்டும்!
அதாவது, அர்த்தத்தின் தேவையை மிகத்தீவிரமாக உணரும் மனித-உணர்வில்
ஏற்படும்  ஒருவகையான  - மீண்டும்  பழைய நிலைக்குத்  திரும்பவியலாத -
உயர் உணர்வியல் மாற்றம், அல்லது, மலர்ச்சி தான் அர்த்தம் என்பதாகும்!

ஆக, அர்த்தத்தை தேடும்படித் தூண்டுவதற்கான 'மையம்' ஏதுமில்லாத நிலை
யில் ஒருவன் அர்த்தத்தைத் தேடும்பட்சத்தில், உடனே,அவனுள் புதிதாக ஒரு
'மையம்' உருவாகி விடுகிறது!  அம்மையம் தான் அர்த்தத்தின்  ஊற்று; அதை
நாம் "ஆன்மா" என்றும் அழைக்கலாம்! ஆம், அர்த்தத்திற்கான பசி உங்களிடம்
தோன்றிடும் பட்சத்தில் நீங்கள் 'மையம்' உள்ள மனிதனாக,அதாவது "ஆன்மா"
உள்ள மனிதனாக ஆகிறீர்கள்! அப்போதுதான் நீங்கள் உண்மையில் மனிதனாக
ஆகிறீர்கள்!

உண்மையில், வாழ்க்கைக்கு ஒரே 'ஒரு' அர்த்தம் மட்டுமேயுள்ளது! ஒன்றுக்கு
மேல் அர்த்தங்கள்  இருப்பதாகக் கருதுவது  அபத்தமானது!  புத்தர் வாழ்வின்
அர்த்தமாக  தன்னுள்  எதைக் கண்டடைந்தாரோ,  அதே  அர்த்தத்தைத் தான்
அவருக்கு முன்பிருந்தவர்களும்,கண்டடைந்திருப்பர்! அதே அர்த்தத்தைத் தான்
புத்தருக்குப் பின்  வந்த நாமும், யாவரும் கண்டடைந்தாக வேண்டும்! பாமரர்
கள், சாதாரணர்கள், பண்டிதர்கள் என பரவலாக எல்லா மனிதர்களும் அர்த்தத்
தைக்  கண்டடையவில்லை  என்பதால், புத்தர் கண்டடைந்த அர்த்தம் அர்த்த
மற்றதாகிவிடாது! எல்லா கண்டுபிடிப்புகளும், கலைப்படைப்புக்களும், உயரிய
சாதனைகளும்,  தத்துவங்களும்,  சமயங்களும்  தனிமனிதர்களால்  மட்டுமே
நிகழ்த்தப்பட்டுள்ளன! வாழ்வின் அர்த்தத்தை புத்தர், இயேசு போன்ற ஒரு சில
தனிமனிதர்கள் மட்டுமே கண்டடைந்தனர் என்பதால்,  அவர்களை "விதிவிலக்
கானவர்கள்" என்று விலக்கிவிடலாகாது! மாறாக,அவர்களே நாம் அனைவரும்
பின் பற்றிடவேண்டிய "விதி" (LAW) போன்றவர்கள்!

பன்மைவாதிகளின் ஒரு அபாயகரமான கூற்று என்னவெனில், வாழ்க்கையின்
அர்த்தத்தைத் தேடுவது  என்பது  "ஆபத்தான விசாரம்"  என்று கூறுவதுதான்!
அதாவது,  "மனிதர்கள்,  வாழ்க்கைக்கு ஒரே ஒரு அர்த்தம் தான் உள்ளது என
அனுமானித்துக்கொள்ளும் பட்சத்தில்,  அத்தகைய அர்த்தத்தை மனிதனல்லாத
வேறு  ஏதோவொரு சக்தி நிர்ணயித்துள்ளதாக அவர்கள் நம்புகிறார்கள்;  அத்த
கைய  அனுமானத்தைச் செய்வதும்,  அல்லது,  மேற்குறிப்பிட்ட நம்பிக்கையி
லிருந்து செயல்படுவதும் ஆபத்தானது" என்கிறார்கள்! ஏனெனில்,

. அது நிரூபிக்கப்படாததை அனுமானித்துக்கொள்கிறது.
. அது விசாரத்தை மூடிவிடுகிறது.
. அது அர்த்தத்தை மனித சமூகத்திடமிருந்து இடம் மாற்றி வேறு எங்கோ
  கொண்டு சேர்த்துவிடுகிறது.
. அது மனிதர்களின் சொந்த வாழ்க்கைக்கான அர்த்தத்தை அவர்களே தீர்மானிப்
  பதை மறுக்கிறது.

முதலிடத்தில்,  வாழ்க்கைக்கு ஒரே ஒரு அர்த்தம் தான் உள்ளது என்பதற்கும்,
மனிதனல்லாத வேறு ஏதோவொரு சக்தி அர்த்தத்தை நிர்ணயித்துள்ளது என்று
கொள்வதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை! ஆனால், அதேநேரத்தில், வாழ்
வின்  அர்த்தம் என்பது நதியின் இலக்கு சமுத்திரமே  என்பது போல முன்-தீர்
மானிக்கப்பட்ட  ஒன்றேயாகும்!  இதற்கும்  மனிதனல்லாத  வேறு எவ்வொரு
சக்திக்கும்  எவ்வொரு தொடர்பும் கிடையாது!  மேலும்,  ஒரு சிருஷ்டிகர்த்தா
தான்  இப்பிரபஞ்சத்தையும்,  அதில்  மனிதனையும்  படைத்து,  மனிதனுக்கு
வாழ்க்கையும் கொடுத்தார் என்றாலும்,  அத்தகைய  சிருஷ்டிகர்த்தா, கடவுள்,
மூலமெய்ம்மை,   வாழ்வின் அர்த்தம்,   உண்மை,  இலக்கு  ஆகிய  யாவும்
மனிதனின் உட்பொதிவில் உள்ளடங்கிய அம்சங்களே,மெய்ம்மைகளே! யாவும்
மனிதனின்  வழியாக,  அவனது  உணர்வில்  ஏற்படவேண்டிய உயர்-மாற்றங்
களின் வழியாக மட்டுமே வெளிப்படவியலும்!

அடுத்து, வாழ்க்கைக்கு ஒரே ஒரு அர்த்தம் தான் உள்ளது என்பது  ஒரு அனு
மானம்  அல்ல!  வாழ்வின்  அர்த்தம்  என்ன  என்பதை அறிவதில் அடைந்த
தோல்வியின்   வெளிப்பாடு தான்  'வாழ்க்கைக்குப் பல அர்த்தங்கள் உள்ளன'
எனும்  பன்மைவாதிகளின்  அனுமானம் ஆகும்! உண்மையில், வாழ்க்கைக்கு
'ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள் உள்ளன' என்று சொல்வதும், வாழ்க்கைக்கு
'அர்த்தமேயில்லை' என்று சொல்வதும் ஒன்றுதான்!

அடுத்து,  வாழ்க்கைக்கு  ஒரே ஒரு அர்த்தம் தான் உள்ளது என்பது எவ்வகை
யிலும்  வாழ்க்கை  குறித்த  விசாரத்தை, சிந்தனையை, தேடலை, ஆழமான
ஆய்வை  மூடிவிடுவதுமில்லை; ஒப்பற்ற  அந்த அர்த்தத்தைக் கண்டடையும்
வரை முடித்துவிடுவதுமில்லை! அதற்கு இக்கட்டுரையே சான்று ஆகும்!

அடுத்து,  வாழ்க்கைக்கு  ஒரே ஒரு அர்த்தம் தான் உள்ளது என்பது எவ்வகை
யிலும்  அர்த்தத்தின் மூலத்தை மனிதனிடமிருந்து இடம் மாற்றி வேறெங்கோ
கொண்டு சேர்த்துவிடுவதுமில்லை!  அதாவது மனித சமூகத்திடமிருந்து இடம்
மாற்றி தனிமனிதர்களிடம் கொண்டு சேர்ப்பதைத்தவிர!  ஏனெனில், வாழ்வின்
அர்த்தத்தை  தனிமனிதர்கள்  ஒவ்வொருவரும் தனித்தனியே மட்டுமே கண்ட
டைய வியலுமே தவிர, ஒருபோதும் மனித சமூகத்தினாலோ, கும்பலினாலோ
கூட்டாகக்  கண்டடைய வியலாது!  வாழ்க்கை  என்பது தனிமனிதனின், ஒவ்
வொரு  தனிமனிதனின் வழியாக  மட்டுமே  வாழப்பட  முடியும்!  கும்பலாக,
கூட்டாக  உயிர்-வாழ்தல்  என்பது  மட்டுமே  நடத்தப்பட வியலும்,  அதிலும்
கௌரவமான   வகையிலானதொரு  உயிர்-வாழ்தலைக் கூட  சமூகத்தினால்
எல்லோருக்கும்  கிட்டும்   வகையில்   எவ்வொரு  சமூக  அமைப்பினாலும்,
அரசியல் அமைப்பினாலும் நிறைவேற்ற முடியவில்லை!

இறுதியாக,   வாழ்க்கை  என்பது  மனிதர்களுடைய  சொந்த  விவகாரமல்ல;
அதனுடைய  அர்த்தத்தை அவர்களே தீர்மானிப்பதற்கு! நதிக்கு சமுத்திரத்தை
அடைவதைக் காட்டிலும்   வேறு  இலக்கு  எதுவும்  இருக்கமுடியாது!  ஒரு
மரத்தில் காய்த்துள்ள பிஞ்சுகள் முற்றிக் காய்களாகி முடிவில், நன்கு கனிந்து
கனிகளாக ஆவதைக்காட்டிலும் வேறு இலக்கும் அர்த்தமும் இருக்கமுடியாது!
இந்த ஒட்டு மொத்த ஆட்டமும் (Show) அநாமதேயமானது (Impersonal),
அதாவது,  எவருக்கும்  சொந்தமானதல்ல! ஆகவேதான், அதைப் "புதிர்" என்று
சொல்லவேண்டியிருக்கிறது!  அதை  'இயற்கையானது'  என்று  சொல்லவும்
இடமில்லை! ஏனெனில்,இயற்கையே தன் அசலான இயற்கையை (இயல்பை)த்
தேடிச்செல்லும்  பரிணாம  இயக்கமாக  இருப்பதால்,  ஆட்டத்தின் முடிவில்,
அதாவது ஆட்டம் முழுமை பெறும்போது தான் அதன் 'புதிர்' விடுவிக்கப்படும்!

சில மறைஞானப் பள்ளிகள், ஒட்டுமொத்தப் படைப்பையும் கடவுளின் "லீலை",
விளையாட்டு  எனக்குறிப்பிடுகின்றன!  அதாவது,  கடவுளானவர்,  மனிதஜீவி
களையும் உள்ளடக்கி ஒளிந்து கண்டுபிடித்து (Hide-and-Seek)விளையாடும்
ஒருவகைப்  "புதிராட்டம்" என்று காண இடமுள்ளது!   ஆனால், அனைத்திற்கு
மான  மூலம்  கடவுளாயினும்,  அல்லது  பிரம்மம் எனப்படும் மெய்ம்மையா
னாலும்,  ஆட்டம் முழுமை பெறும்போதுதான் தெரியும்; மனிதன் கடவுளைக்
கண்டுபிடிக்கிறானா, மனிதனும், கடவுளும் ஒன்றாகிறார்களா என்பது!

ஆனால்,  'வாழ்க்கை ஒரு விளையாட்டு!' என்பது, கிரிக்கெட் போன்ற விளை
யாட்டோ,  அல்லது  சிறுவர்கள்  விளையாடும் விளையாட்டுக்களோ அல்ல!
விளையாட்டுக்கள் தவறானவை அல்ல; ஏனெனில், எவ்வொரு விளையாட்டு,
அல்லது செயலிலும் நாம் மனம்ஒன்றி ஈடுபடுவது நமக்கு மகிச்சியை அளிக்க
லாம்;  ஆனால்,  அது  அர்த்தத்தைத் தராது!  ஏனெனில்,   மெய்ம்மையோடு
இணையாத எவ்வொரு செயலும், ஈடுபாடும், வாழ்க்கையும் அர்த்தம் பெறாது!

சிலர், "ஒரு இசையை இசைக்கும் பொழுதோ, நடனம் ஆடும் பொழுதோ, ஒரு
விளையாட்டை விளையாடும் பொழுதோ, அச்செய்கைதான் வாழ்க்கைக்கான
அர்த்தத்தை கொடுக்கிறதே தவிர வாழ்க்கைக்கென்று ஒரு தனிப்பட்ட அர்த்தம்
இருப்பதாக  நினைத்து தேடிக்கொண்டிருப்பது அறிவீனம்!" என்கிறார்கள். இவர்
களுடைய  இக்கூற்று முற்றிலும் அர்த்தமற்றது. நாம் வாழ்வின் அர்த்தத்தைப்
பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம்;  இவர்களோ, பொழுதை எவ்வாறு இனிமை
யாகவும்,  மகிழ்ச்சியாகவும்,  தாம்  விரும்பியவாறும்  கழிக்கலாம் என்பதைப்
பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்!

ஆம்,  மனித வாழ்க்கைக்கு  மிகப் பிரத்யேகமான,  தனிச்சிறப்பான  "அர்த்தம்'
ஒன்று உள்ளது! அது குறித்து பிரத்யேக ஈடுபாடும், அர்ப்பணிப்பும் இல்லாமல்
அர்த்தத்தை  அடைய முடியாது!   ஒருவகையில்,  வாழ்க்கையின்  அர்த்தம்
பற்றிய தேடல் ஆபத்தானது தான்! ஏனெனில், வாழ்க்கையின் அர்த்தம் என்ன
என்று  ஒருவன்  தீவிரமாகத் தேடுவானெனில்,  அவன்  தற்போது  வாழ்ந்து
கொண்டிருக்கும் மிக மேலோட்டமான, பிராணித்தனமான, அர்த்தமற்ற வாழ்க்
கையை இழந்து விடுவது உறுதி!


மா.கணேசன்/ நெய்வேலி/19-05-2017
----------------------------------------------------------------------------

Thursday, 18 May 2017

"இதற்கா இத்தனை ஓட்டம்?"





இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள பகுதி  திரு. வேங்கடம் அவர்களால் எழுதப்
 பட்டு விஜயா பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட "இதற்கா இத்தனை ஓட்டம்"
  எனும் நூலின் பின்னட்டைச் செய்தி (Blurb) யாகும். இச்செய்தியைத்
   தொடர்ந்து அதிலுள்ள முக்கிய கருத்துக்களை இக்கட்டுரை அலசுகிறது.


                       •>>>•<<<•
   ---------------------------------------------
பிறப்பிலிருந்து கடைசி வரை நாம் எதை நோக்கியோ, எதற்காகவோ ஓடிக்
கொண்டே இருக்கிறோம். ஆனால், ஆரம்பக்கோடு எது, ஓடவேண்டிய திசை
என்ன என்பதைத் தெளிவாக தெரிந்து வைத்துக்கொண்டுதான் ஓட ஆரம்பித்
தோமா நாம்?

ஒருவேளை நாம் தற்போது ஓடிக்கொண்டிருப்பது,ஆட்டக்களத்தைத் தாண்டிய
கால்பந்து மைதானமாகவோ, ஆட்ட அரங்குக்கு வெளியிலோ என்று கூட
இருக்கலாம். அடிப்படையிலேயே கூட சந்தேகம் இருக்கிறது. முதலில், நாம்
படைக்கப்பட்டதே எதையாவது துரத்திக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கத்தானா?
யார் கண்டது?

நம்முடைய அன்றாட வாழ்க்கை, அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றிக்
கொள்ளும் போராட்டமாகவே இருந்து கழிந்துவிடுகிறது.ஆனால்,ஒரு சிருஷ்டி
கர்த்தா நாம் நம்முடைய மிகச் சாதாரண அன்றாட வேலைகளை செய்து
கொண்டிருப்பதற்காக மட்டுமே நமக்கு உயிர் கொடுத்திருப்பானா என்று
யோசிக்கவைக்கிறது. அல்லது, சிருஷ்டித்தவன் 'தன்னைப் புகழ் பாட ஒரு
கூட்டம் வேண்டும்!' என்று எண்ணி மனிதர்களை படைத்தானோ என்றும்
எண்ணத்தோன்றுகிறது.

ஆனால், ஒரு மிகப்பெரிய சிருஷ்டிகர்த்தா இத்தகைய சாமானியமான, தன்
புகழ் பாடும் ஒரு அற்பச்செயலுக்காக ஒரு சிருஷ்டியை செய்திருப்பார்
என்பதை நம்மால் நம்பமுடியவில்லை! நாம் வாழும் வாழ்க்கைக்கு உண்மை
யில் அர்த்தம் அல்லது குறிக்கோள் என்று ஏதாவது இருக்கிறதா?

   நாம் ஏன் படைக்கப்பட்டிருக்கிறோம்?

   நீங்கள் பிறந்ததற்கு என்ன காரணம்?

   நான் பிறந்ததற்கு என்ன அவசியம்?

   உலக ஞானிகள் இதைப்பற்றி என்ன சொல்லி இருக்கிறார்கள்?
     
         - வேங்கடம்/ இதற்கா இத்தனை ஓட்டம்/விஜயா பதிப்பகம்
  --------------------------------------------------
                        •>>>•<<<•

நல்லது, இக்கட்டுரை ஒட்டு மொத்த புத்தகத்தைப்பற்றிய முழு அளவிலான
மதிப்புரையோ, அல்லது, விமர்சனமோ அல்ல. மாறாக, பின்னட்டைச் செய்தி
யிலுள்ள முக்கிய கருத்துக்களையும், மேலும் அதற்குத்தொடர்பான நூலின்
உள்ளே காணப்படும் ஒரு சில கருத்துக்களையும் பற்றிய அலசல் மட்டுமே.

முதலில், திரு.வேங்கடம் அவர்களுடைய "இதற்கா இத்தனை ஓட்டம்" எனும்
நூலின் தலைப்பு பற்றிச் சொல்லியாக வேண்டும். இத்தலைப்பு இந்நூலின்
மையக்கருத்தை மிகக் கச்சிதமாக எடுத்துச்சொல்லுகிறது. இந்நூலின் மையக்
கருத்து மிகமிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மேலும், பின்னட்டையில்
எழுப்பப்படும் கேள்விகள் மனித வாழ்க்கையை மிக ஆழமாகக் காணவும்,
புரிந்துகொள்ளவும் வேண்டிய அவசியத்தைச் சுட்டுகின்றன.

நூலாசிரியர் தனது 'என்னுரை' எனும் பகுதியில் சொல்லியுள்ளபடி, இந்நூல்
ஒரு 'வித்தியாசமான' சுயமுன்னேற்ற நூல்தான். மேலும்,நூலாசிரியர் எழுதிய
படி, 'இதில் விவாதிக்கப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தும் மனம் சார்ந்தவை,
அக உலகு சம்பந்தப்பட்டவை,ஆழமானவை,அழகானவை' என்பதிலும் சந்தேக
மில்லை!

நூலாசிரியர் தனது உரையில் சொல்லியுள்ள,

     "சுய நலம் கருதிய வெற்றியாளனாக ஆவதில் ஒரு விசேஷமும்
      இல்லை, பலரும் அதைச் செய்திருக்கிறார்கள்."

எனும் இக்கருத்து சுட்டும் உண்மை அதி முக்கியமானதாகும். மேலும்,

     "ஆனால், வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து, திருப்தியாக
     முடித்துக் கொண்டவர்கள் மிக மிகச் சொற்பம்."

எனும் இக்கருத்து,அதாவது, 'வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்தவர்கள் மிக
மிகச் சொற்பமே'  என்பது  உண்மையிலும்  உண்மையாகும்! ஆனால், ஏனோ
ஆசிரியர், 'வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து திருப்தி கண்டவர்கள்' என்று
சொல்லாமல்,   'திருப்தியாக முடித்துக்கொண்டவர்கள்'  என்று  குறிப்பிடுவது
சற்று  நெருடலாக இருக்கிறது.   'திருப்தியாக முடித்துக்கொள்வது'  என்றால்
என்ன என்று அவர்  விளக்கியிருந்தால்  நன்றாக  இருந்திருக்கும்!  அதாவது,
வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்தாலும்,  அல்லது அரைகுறையாக வாழ்ந்
தாலும்;   திருப்தியடைந்தாலும்,   அடையாவிட்டாலும்  எவரும்  வாழ்ந்தது
போதும் என்று முடித்துக் கொள்வதாகவோ, முடித்துக்கொள்ள முடியும் என்ப
தாகவோ  தெரியவில்லை!   ஏனெனில்,  முழுமையான  வாழ்க்கை  என்பது
அதனளவிலேயே முடிவானதாகும்! அதாவது, வாழ்க்கை உண்மையில்,முடிவ
துமில்லை, முடிவேயில்லாமல் தொடரவேண்டும் என்ற கட்டாயமும் அற்றது!
ஆம், முழுமையான வாழ்க்கை  என்பது ஒரு அசாதாரணமான இயக்கமாகும்!
அது, இயக்கத்தில் இருப்பதாகவேத்தெரியாத சலனமற்ற பேரியக்கமாகும்!

   "பிறப்பிலிருந்து கடைசி வரை நாம் எதை நோக்கியோ, எதற்காகவோ
   ஓடிக்கொண்டே இருக்கிறோம். ஆனால்,ஆரம்பக்கோடு எது,ஓடவேண்டிய
   திசை என்ன என்பதைத் தெளிவாக தெரிந்து வைத்துக்கொண்டுதான் ஓட
   ஆரம்பித்தோமா நாம்?"

எனும் ஆசிரியரது இக்கேள்விக்கு பதில் 'இல்லை' என்பதே! மனிதர்கள் பிறந்த
திலிருந்து கடைசிவரை எதை நோக்கியோ,எதற்காகவோ ஓடிக்கொண்டேதான்
இருக்கிறார்கள்!  மனிதர்கள்  அறிந்தோ, அறியாமலோ சந்தோஷத்தைத் தான்
தேடுகிறார்கள்;  ஆனால்,  தவறான திசையில் தேடுகிறார்கள்;  அகத்தே தேட
வேண்டியதை புறத்தே தேடுகிறார்கள்! பணமும்,பொருட்களும்,சொத்துக்களும்
சந்தோஷத்தைப்  பெற்றுத்தரும் என்ற தவறான எண்ணத்தில்,  நேர்மையான
வழியிலோ,  அல்லது  நேர்மையற்ற வழிகளிலோ அவற்றைத் தேடித் தேடிச்
சேர்க்கிறார்கள்!

அடுத்து,

    "நாம் படைக்கப்பட்டதே எதையாவது துரத்திக்கொண்டு ஓடிக்கொண்டிருக்
    கத்தானா? யார் கண்டது?"

என்று பின்னட்டையில் கேள்வியெழுப்பி வியக்கிறார் ஆசிரியர். உண்மையில்,
நாம்  படைக்கப்பட்டது  எதையாவது  துரத்திக்கொண்டு  ஓடிக்கொண்டிருக்க
அல்ல!  ஆனால், 'யார் கண்டது?' என்று ஆசிரியர் சொல்லி வியப்பது பொறுப்
பற்றதொரு  குறிப்பாகவே தெரிகிறது;  அதில் சலிப்பும், களைப்பும் தெரிகிறது!
ஏனெனில்,  இக்கேள்விக்கான  பதிலை  நாம் ஒவ்வொருவரும்தான் கண்டாக
வேண்டும்,  அதாவது, கண்டுபிடித்தாக வேண்டும்! ஒருவேளை, வாசகர்களின்
சிந்தனையைத்   தூண்டுவதற்கான  ஒரு  உத்தியாக  'யார் கண்டது?'  என்று
ஆசிரியர் குறிப்பிட்டிருக்கலாம்!

"நாம்  படைக்கப்பட்டதே  எதையாவது துரத்திக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கத்
தானா?" எனும் ஆசிரியரின் கேள்விக்கான பதில் அக்கேள்வியிலேயே உள்ளது!
அதாவது அக்கேள்வியை சற்று மாற்றிக் கேட்பதன் மூலம் அதற்கான சரியான
பதிலைப்பெறலாம். ஆம், "நாம் படைக்கப்பட்டது எதற்காக?" என்பதுதான் அந்த
சரியான கேள்வி!  சந்தேகமில்லாமல்,  "நாம் படைக்கப்பட்டது எதற்காக?" என்
பதைக் கண்டுபிடிப்பதற்காகத்தான் நாம் படைக்கப்பட்டிருக்கிறோம்! நிச்சயமாக
வேறு  எதற்காகவும்  இல்லை!  ஏனெனில், வாழ்க்கை ஒரு புதிர்! அதை நாம்
ஆரம்பத்திலேயே உணரவில்லையெனில்,  இறுதிவரை உணராமலேயே போய்
விடுவோம்!

அடுத்து,

   "நம்முடைய அன்றாட வாழ்க்கை, அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றிக்
   கொள்ளும் போராட்டமாகவே இருந்து கழிந்துவிடுகிறது."

என்கிற ஆண்டாண்டுகாலமாகத் தொடர்கிற, நாம் அனைவருமே ஈடுபட்டுள்ள
நிதரிசனமான  நடைமுறையை  ஆசிரியர்  குறிப்பிடுகிறார்.   உண்மையைச்
சொன்னால், இது நாமே நமக்கு உருவாக்கிக்கொண்ட பிரச்சினையாகும்! அதா
வது, வாழ்க்கையை என்னவென்று அறிந்து புரிந்து வாழ்கின்ற அணுகுமுறை
நம்மிடம் இருந்தால், அன்றாடவாழ்க்கை என்பது அரைத்த மாவையே அரைக்
கும்  அடிமைத்தொழிலாக  இருக்காது! அடிப்படைத்தேவைகள் உண்மையில்,
அடிப்படைத் தேவைகள் தான்,  அத்தியாவசியமான  தேவைகள் தானே தவிர
அவையே முழுமையான, இறுதியான தேவைகள் அல்ல! பிரச்சினைகள் இங்
கிருந்துதான் ஆரம்பிக்கின்றன!  அடிப்படைத்தேவைகளே  அனைத்துத்தேவை
களும் என்பதாகக் கொண்டு வாழ்வதுதான் பிரச்சினையின் மூலவேர் ஆகும்!

ஆனால்,அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் விவகாரமென்பது
எவ்வாறு போராட்டமாக ஆகியது? வாழ்வின் அசலான மதிப்புகளை (Values)
நாம்  உணர்ந்தறியாததினால்,  அடிப்படைத்தேவைகள் சுட்டும் பொருட்களும்,
அவற்றின் அளவும், எண்ணிக்கையும், தரமும் உயர்ந்த மதிப்புக்களாகக் கொள்
ளப்பட்டு கொண்டாடப்படும் பிறழ்ச்சி ஏற்பட்டது! அம்மதிப்புக்களை அடையும்
முனைப்பு சமூகத்தை பெரும் போட்டிக்களமாக மாற்றிவிட்டது! மேலும், முக்
கியமாக,  உயிர்-வாழ்தல் என்பது அதனளவிலேயே அர்த்தமளிக்கும் ஒன்றோ,
நிறைவு தரும்  ஒன்றோ அல்ல  என்பதால்,  உயிர்-வாழ்தலை  அலங்கரித்து
ஆடம்பரமாக  மேற்கொள்ளத் தலைப்பட்டதன் விளைவாக; அடிப்படை வாழ்க்
கைத்தேவைகளையும், பிற பயன்பாட்டுத்தேவைகளையும் விட பரிவர்த்தனை
மதிப்பான  பணம்  அனைத்துக்குமான மாற்றாக, பதிலீடாக, இறுதி மதிப்பாகக்
கொள்ளப்படும் நடைமுறை வாழ்க்கையைப் போராட்டமாக மாற்றிவிட்டது!

அடுத்து,

   "ஒரு சிருஷ்டிகர்த்தா நாம் நம்முடைய மிகச் சாதாரண அன்றாட வேலை
   களை செய்துகொண்டிருப்பதற்காக மட்டுமே நமக்கு உயிர் கொடுத்திருப்
   பானா என்று யோசிக்கவைக்கிறது. அல்லது, சிருஷ்டித்தவன் 'தன்னைப்
   புகழ் பாட ஒரு கூட்டம் வேண்டும்!' என்று எண்ணி மனிதர்களை படைத்
   தானோ என்றும் எண்ணத்தோன்றுகிறது."

எனக் குறிப்பிடும் ஆசிரியரின் கருத்து  சிந்தனைக்குரியது என்பதில் சந்தேகம்
இல்லை! நிச்சயம், பேரறிவான சிருஷ்டிகர்த்தா,  நம்முடைய மிகச் சாதாரண
அன்றாட வேலைகளை   செய்துகொண்டிருப்பதற்காக மட்டுமே நமக்கு உயிர்
கொடுத்திருக்க மாட்டார்!  அவ்வாறிருப்பின், நமக்கு சுய-உணர்வும், சிந்திக்கும்
திறனும் கொடுத்திருக்க வேண்டியதில்லையே!  புழு பூச்சிகளிலிருந்து, எல்லா
விலங்குஜீவிகளும்  தம்முடைய  மிகச்  சாதாரண  அன்றாட வேலைகளைத்
தானே    பல கோடியாண்டுகளாகச்  செய்துகொண்டிருக்கின்றன!  ஏற்கனவே
குறிப்பிட்டபடி,  வாழ்க்கை என்பது ஒரு அற்புதப்புதிர் ஆகும்! அதை அன்றாட
நடைமுறை விவகாரமாகச் சுருக்கியது மனிதஜீவிகளாகிய நாம்தான்!

வெறுமனே சிலகாலம் உயிர்-பிழைத்திருந்துவிட்டு பிறகொரு நாள் மாண்டு
போவதற்காகப் படைக்கப்பட்டவனல்ல மனிதன்!

அடுத்து,

   "சிருஷ்டித்தவன் 'தன்னைப் புகழ் பாட ஒரு கூட்டம் வேண்டும்!' என்று
   எண்ணி மனிதர்களை படைத்தானோ என்றும் எண்ணத்தோன்றுகிறது."

ஆசிரியரின் இந்த என்ணம் 'கடவுள்' எனப்படும் இறுதி மெய்ம்மைக்கும் மனித
னுக்கும் ஏற்படவேண்டிய தொடர்பின் முக்கியத்துவம் குறித்த பிரச்சினையை
முன்வைப்பதாயுள்ளது!  தொடர்ந்து இப்பிரச்சினையை அலசுவதற்கு முன்னர்,
இதற்குத்தொடர்புடைய ஆசிரியரின் இன்னொரு கருத்தையும் சேர்த்துக் காண்
போம்.

   "ஆனால், ஒரு மிகப்பெரிய சிருஷ்டிகர்த்தா இத்தகைய சாமானியமான,தன்
   புகழ் பாடும் ஒரு அற்பச்செயலுக்காக ஒரு சிருஷ்டியை செய்திருப்பார்
   என்பதை நம்மால் நம்பமுடியவில்லை! நாம் வாழும் வாழ்க்கைக்கு
   உண்மையில் அர்த்தம் அல்லது குறிக்கோள் என்று ஏதாவது இருக்கிறதா?"

முதலிடத்தில்,  இறையின் புகழ் பாடுவது  என்பது ஒரு அற்பச்செயல் அல்ல;
மாறாக,  அது ஒரு அற்புதச்செயல் ஆகும்!  இரண்டாவதாக, அதை நாம் நம்ப
வேண்டாம், புரிந்துகொண்டால் போதும்! அதாவது,வாழ்வில் மிக முக்கியமாக
நாம்  மகிழ்ச்சியையும்,  அமைதியையும்,  நிறைவையும் தான்  தேடுகிறோம்!
நம்மிடம் எவ்வளவு பணமும்,பொருளும் இருந்தாலும் உண்மையான மகிழ்ச்சி,
அமைதி, நிறைவு ஆகியவற்றை அவை பெற்றுத்தராது! ஏனெனில்,சந்தோஷம்,
அமைதி, நிறைவு, அர்த்தம் ஆகியவை உலகிலுள்ள எவ்வொரு பொருளையும்
சார்ந்திருப்பவையல்ல!   பணம்,  பொன்,  பொருள், செல்வம், சொத்து, ஆகிய
எதுவும் இறுதியானதல்ல!  மாறாக,  எது முழுமையானதோ, இறுதியானதோ,
நித்தியமானதோ அத்தகைய மெய்ம்மை மட்டுமே மனிதனை நிறைவுசெய்யும்!

அத்தகைய மெய்ம்மையைத்தான் 'கடவுள், 'இறை', 'சிருஷ்டிகர்த்தா' என்றெல்
லாம் பாமரத்தனமாக நாம் குறிப்பிடுகிறோம்,கும்பிடுகிறோம்,கூத்தாடுகிறோம்!
எல்லாம் வல்ல,  எல்லாம் அறிந்த,  எங்கும் நிறைந்த  ஒரு  சிருஷ்டிகர்த்தா
இருக்கிறாரா,  இல்லையா என்கிற சர்ச்சைகளுக்கு அப்பால்,  ஒரு மாபெரும்
பிரபஞ்சம் இங்கே இருக்கிறது;  அதில் நாமும் இருக்கிறோம்! பிரபஞ்சம் ஏன்,
எதற்காக,  எந்த நோக்கத்திற்காக இருக்கிறது? அதில் நாம் ஏன் இருக்கிறோம்,
அதாவது,  உண்மையில் 'நாம்' யார், எத்தகைய மெய்ம்மை? நமது வாழ்வின்
குறிக்கோள், இலக்கு, அர்த்தம் என்ன என்பதைக் கண்டுபிடிப்பதொன்றே நமது
ஒரே சீரிய தொழிலும், பிரதான வாழ்க்கைச் செயல்பாடும் ஆகும்!

இப்பிரபஞ்சம் 'கடவுளால் படைக்கப்பட்டது' என்பதும், 'இல்லை, தானே தோன்
றியது'  என்பதுமான அனுமானங்கள், ஊகங்கள், புராணிகங்கள், கோட்பாடுகள்,
வாதங்கள் ஒருபுறமிருக்க, பிரபஞ்சத்தின் உண்மையை அறிவதற்கு மனிதஜீவி
களாகிய நமக்கு இருக்கும் ஒரே கருவி, ஆயுதம், உணர்வு (Consciousness)
மட்டுமேயாகும்! மேலும், சிருஷ்டியின் ரகசியத்தை மட்டுமல்லாமல், சிருஷ்டி
கர்த்தாவின்  (கடவுளின்)  ரகசியத்தையும்  அறியக்கூடிய  ஒரே ஜீவி மனிதன்
மட்டுமே! இன்னும் மனிதனின் ரகசியத்தை (உண்மையை) யும் வெளிப்படுத்தக்
கூடிய  அதிசய மெய்ம்மை மனித-உணர்வே ஆகும்! அதாவது, சிருஷ்டிகர்த்தா
வின்  ரகசியத்தை  அறியக்கூடிய  மனிதனின் விசேடத்துவம்  என்னவெனில்,
அவனும் அந்த இறை-மெய்ம்மையில் பங்குபெறுபவனாகிறான் என்பதேயாகும்!

பாமரத்தனமான  கடவுள் இருக்கிறாரோ, இல்லையோ; நிச்சயம் இப்பிரபஞ்சம்
தோன்றுவதற்குக்  காரணமான ஒரு அம்சம், பண்பு, அல்லது, மூலமெய்ம்மை
ஒன்று  இருந்தாகவேண்டும்!  அம்மூலமெய்ம்மையை  மனிதனால் உணரவும்
அறியவும்  இயலும்  எனும் பட்சத்தில்,  நிச்சயம்  அந்த மூலமெய்ம்மைக்கும்,
மனிதனுக்கும்  ஒரு ஒற்றுமை,  அல்லது,  ஒத்த-தன்மை இருந்தாகவேண்டும்!
ஆம்,எதுவொன்றையும் அறிவதற்கான ஒரே கருவியாக மனிதன் பெற்றிருப்பது
உணர்வே என்றால்,  அதே உணர்வைக்கொண்டுதான் கடவுளையும் அறிந்தாக
வேண்டும்!  அதாவது,  மனித உணர்வின்  பிடிக்குள் அகப்படுபவராக  கடவுள்
இருப்பாரெனில், நிச்சயம் அவர் உணர்வுமயமானதொரு மெய்ம்மையாகத்தான்
இருந்தாக வேண்டும்! ஆம், உணர்வு தான் கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள
அந்த ஒத்த-தன்மை!  ஆனால், இருவரும் உணர்வின் இருவேறு முனைகளில்
உள்ளனர்!  மனிதன்  உணர்வின் தொடக்க நிலையிலும்,  கடவுள் உணர்வின்
முழுமையாகவும் உள்ளனர்!  இவ்வுண்மையைத்தான்,  "கடவுள் மனிதனைத்
தன் சாயலில் படைத்தார்" என்பதாக பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ளது!

'கடவுள்'  என்று சொன்னாலும்,  அல்லது  மூல-சக்தி, ஆற்றல் என்று எப்படிச்
சொன்னாலும்;  அனைத்திற்கும்  காரணமான மகத்துவமானதொரு மெய்ம்மை,
உண்மை இருந்தாகவேண்டும்!

கடவுளை வழிபடவும்,  அவரது புகழ் பாடவும்தான் அவர் மனிதனைப் படைத்
தாரோ  இல்லையோ,  நிச்சயம்  "இப்பூமியில் பல்கிப்பெருகி, பூமியை நிரப்பி,

அதைக்கீழ்ப்படுத்துவதற்காக..." அல்ல! இதைச்செய்வதற்கு,  'பாக்டீரியா' எனப்
படும்  நுண்ணுயிரிகள் உள்ளன! அதே வேளையில், யாதொரு உருப்படியான,
உன்னதமான குறிக்கோளும், இலக்கும் இன்றி, பூமியின் வளங்களைச் சுரண்டி
தின்று, சுற்றுச்சூழலை வெகுவாக மாசுபடுத்தி இப்பூமியை அழித்துவிடும் அள
விற்கு மனித இனமானது ஏற்கனவே விஷக்கிருமிகளைப்போல பல்கிப்பெருகி
யுள்ளது!

மனிதன் கடவுளை வழிபடுகிறானோ, அவரது புகழ்பாடுகிறானோ இல்லையோ;
சிற்றுணர்வு கொண்ட அவன் தன்னை வழிபடுபவனாகவும், தன் புகழ் பாடுபவ
னாகவும்  அகந்தையில் ஆழ்ந்திருக்கிறான்!  உலகெங்கும்  மக்கள் திரளானது
அரசியல் தலைவர்களையும்,  சினிமா நட்சத்திரங்களையும்,  அல்லது விளை
யாட்டு வீரர்களையும்,  அல்லது,  வேறு பிரபலங்களையும் வழிபடும் போக்கு
நிலவுகிறது!   சிற்றுணர்வாளனான   மனிதன்   தன்னை  வழிபடுவதை விட
பேருணர்வான கடவுளை வழிபடவும், புகழ் பாடவும் செய்வது மேலானதாகும்!

ஆனால்,  கடவுளை வழிபடுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல! அதாவது,
கற்களையும்,  சிலைகளையும்,  வேறு பொருட்களையும் மக்கள் மிக எளிதாக
அணுகவும்,  வழிபடவும் முடியும்! அதாவது,  ஒரு துரும்பைக் கூட ஒருவன்
கடவுள்  எனப் பாவித்து  அதை  வழிபட முடியும்!  ஆனால்,  உண்மையான
கடவுளை  அணுகுவதற்கு,  ஒருவன் உண்மையானவனாக இருக்கவேண்டும்!
உண்மையாக இருப்பது  என்றால்,  மனிதனாவன் மனிதனுக்குரிய இயல்பில்,
அதாவது, உணர்வாய்,உணர்வுக்கு வந்தவனாய் இருத்தல்வேண்டும்! அப்போது
தான், அவனால் பேருணர்வாகிய கடவுளை அணுகவும், அடையவும் இயலும்!

ஆகவேதான்,  "தேவன்  ஆவியாயிருக்கிறார்,  அவரைத் தொழுதுகொள்ளுகிற
வர்கள்  ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும்"
என்று  இயேசு அறிவுறுத்துகிறார்!  இன்னொரு இடத்தில்,  "தேவன் மரித்தோ
ருக்குத் தேவனாயிராமல் ஜீவனுள்ளோருக்குத்  தேவனாயிருக்கிறார்" எனவும்
அவர் சொல்லியுள்ளார்! உணர்வு இருந்தும் உணர்வாயிராமல் இருக்கும் அகம்
செத்தவர்களை,   உணர்வற்றவர்களைத்தான்  இயேசு  மரித்தோர்  என்கிறார்;
இவர்களுக்கு மாறாக,  உணர்வுள்ளவர்களையே  அவர்  ஜீவனுள்ளோர் என்று
குறிப்பிடுகிறார்!

ஆசிரியர் வேங்கடம் தனது நூலில் காட்டியுள்ள சூஃபி ஞானி, ஹாதித் குட்ஸி
யின் மேற்கோளானது  'எதற்காகப் படைக்கப்பட்டான்?'  என்பதற்கான பதிலை
மிக அழகாகச்சொல்கிறது! "நான் மறைத்துவைக்கப்பட்டுள்ள ஒரு பொக்கிஷம்!
என்னை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும்.ஆகவே நான் உங்களைப்படைத்து
இருக்கிறேன்!" என்று கடவுளே சொல்வது போன்று குட்ஸி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "கடவுளுடைய சந்தோஷத்திற்காகவே இந்த பிரபஞ்சம் இயங்குகிறது!"
எனும் சூஃபிக்களின் புரிதலும் மிகப்பொருத்தமாகவே உள்ளது! "கடவுளுடைய
சந்தோஷம்  என்பது  அவர் படைத்த படைப்புக்களைச் சார்ந்தது அல்ல! அவர்
படைப்புகள்  அனைவரும்  கடவுள்  சந்தோஷம்  அடையும் விதமாக  எப்படி
விளையாடி பரிசைப்வெறுகிறார்கள் என்பதுதான் வாழ்க்கை!" என்று சூஃபிக்கள்
சொல்கிறார்கள்.

உண்மையில், இப்பூமியின் மேற்பரப்பிலுள்ள விஷயங்களுக்கும்,பொருட்களுக்
குமான மதிப்பு என்பது இருக்கவே செய்கிறது! எனினும், பூமிக்கடியில் மறைந்
துள்ள நிலக்கரி, எண்ணை, உலோகங்களுக்கு இன்னும் அதிக மதிப்பு உள்ளது;
அதிலும், அனைத்து உலோகங்களிலும் அதிக மதிப்புடையதாக தங்கம் விளங்
குகிறது! இன்னும், வைரம் போன்ற விலை மதிப்புள்ள கற்களும் பூமிக்கடியில்
தான் மறைந்துள்ளன! அழகிய முத்துக்கள் கடலின் ஆழத்தில் மறைந்துள்ளன!
உண்மையில்,  இப்பொருட்கள் யாவும்  மனிதனால் மதிப்பேற்றப்பட்டு விலை
குறிக்கப்பட்ட இயற்கையான பொருட்கள் ஆகும்!

பொருட்களைப் பொக்கிஷங்களாகக் கருதும் மனிதர்கள் இருக்கிறார்கள்;  அவர்
களுக்கு மத்தியில்,இந்த இயற்கை,இந்த ஒட்டுமொத்தப் பிரபஞ்சம் எங்கிருந்து,
எவ்வாறு  தோன்றியது என்பதற்கான விடையை; அதாவது, படைப்பில் உள்ள
டங்கியிருக்கும் மிகச் சிக்கலான அறிவைக் கண்டு வியக்கும்  சிந்தனையாளர்
கள்,  தத்துவவாதிகள், விஞ்ஞானிகள் அவரவர் வழியில் (அணுகு முறையில்)
இறுதியான அறிவை,   அல்லது,  அந்த மூல-அறிவை அறிவதற்காக, வெளிக்
கொணருவதற்காகத்  தங்களைத் தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்!  அதாவது,
சாதாரண சராசரி மனிதர்கள் பொருட்களைப்  பொக்கிஷமாகக் கருதுகிறார்கள்,
சிந்திக்கும்  மனிதர்களாகிய, தத்துவவாதிகள்,  விஞ்ஞானிகள் அனைத்தையும்
விளக்கும்  பேரறிவைப்  பொக்கிஷமாகக்  கருதுகிறார்கள்!  இவர்களில்  பலர்
உண்மையில்  "மறைத்து வைக்கப்பட்டுள்ள பொக்கிஷமான"  கடவுளைத்தான்
தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அறியாமல் தேடிக்கொண்டிருக்கிறார்கள்!

முடிவாக, ஆசிரியர் வேங்கடம் அவர்கள் தன் நூலின் பின்னட்டையில் குறிப்
பிட்டிருந்த ஒரு கேள்விக்கான பதில் குறித்துப்பார்ப்போம்.

   "நாம் வாழும் வாழ்க்கைக்கு உண்மையில் அர்த்தம் அல்லது குறிக்கோள்
   என்று ஏதாவது இருக்கிறதா?"

இதற்கு பதில் 'இருக்கிறது!' என்பதுதான். இக்கட்டுரை முழுவதும் அதற்கான
சாட்சியமே ஆகும்! நல்லது, பல வருடங்களுக்குப்பிறகு, சிந்தனைக்கும், கேள்
விகளுக்கும் முக்கியத்துவம் தரும் "இதற்கா இத்தனை ஓட்டம்" நூலைத்
தந்தமைக்கு ஆசிரியர் திரு. வேங்கடம் அவர்களுக்கு நன்றி!

மா.கணேசன்/நெய்வேலி/11-05-2017
----------------------------------------------------------------------------

Tuesday, 16 May 2017

ஒரு கல், ஒரு தவளை, ஒரு மனிதன்!





       இருப்பானது உணர்வு கொள்ளப்படும் போது மட்டுமே
       வாழ்க்கையாகிறது!

இக்கட்டுரை,  இருப்பு (Existence) பற்றியும், உணர்வு (Consciousness)
பற்றியும் இவ்விரண்டுக்கும் உள்ள தொடர்புறவு, மற்றும் இடை-வினைகளை
யும்,அவற்றினால் விளையும் வாழ்க்கையையும் பற்றியது.

முதலில், இருப்பு என்றால் என்ன என்று பார்ப்போம். ஆம்,இருப்பவை யாவும்
இருப்பு தான். இப்பிரபஞ்சம் மொத்தத்தையும் இருப்பு எனலாம். ஆனால்,அதில்
இருப்பவை  அனைத்தும் ஒருபடித்தானவையல்ல! ஆகவே, இருப்பவைகளை
பண்பினடிப்படையில்  வகையினங்களாகப் பிரித்து  நாம் புரிந்துகொள்ளலாம்.
இவ்வாறு பார்த்தோமெனில்,  இப்பிரபஞ்சத்தில்,  மூன்று வகைப்பட்ட இருப்பு
நிலைகள் இருக்கின்றன.   அவை, சட-இருப்பு, உயிர்-இருப்பு, உணர்வு -இருப்பு
ஆகியன. உயிரற்ற சடப்பொருட்கள் யாவும் சட-இருப்பு வகையைச்சேர்ந்தவை.
உயிருள்ளவைகளும், புலன்கள்  வழியாகப் புறத்தை  உணரக்கூடிய விலங்கு
ஜீவிகள் யாவும் உயிர்-இருப்புவகையைச் சேர்ந்தவை. உயிருள்ளஜீவி என்கிற
வகையில் மனிதஜீவிகளும் உயிர்-இருப்பைச் சேர்ந்தவர்கள் தான் என்றாலும்.
அவர்களை  வெறும் உயிர்-ஜீவிகள் என்பதாகக்கொள்ள வியலாது! ஏனெனில்,
மிகவும்  விசேடமான "சுய-உணர்வு" எனும் அம்சம் பெற்ற மனிதஜீவிகள்தான்
உணர்வு-இருப்பின்  பிரதான பிரதிநிதிகள் ஆவர்;  அதாவது அவர்கள் உணர்வு-
ஜீவிகள் ஆவர்!

பரிணாம ரீதியாகக்  காணும்போது,  இருப்பு  நிலைகள் ஒன்றையடுத்து  இன்
னொன்று என ஒன்றிலிருந்து இன்னொன்றாகத் தோன்றி ஒருவகை படிமுறை
அமைப்பில்  அமைந்திருப்பதை  அறியமுடியும்! முதலில் வெளிப்பட்டது சடப்
பொருள் அல்லது பருப்பொருள் (Matter) எனப்படுவதுதான்;  அதாவது, சட-
இருப்பு தான்.

இப்போது, சட-இருப்பின் தன்மை, இயல்பு எத்தகையது எனக்காண்போம். ஒரு
கூழாங்கல் இருக்கிறது;  அது உயிரும் அற்றது, உணர்வும் அற்றது. இன்னும்,
அதற்குச் சொந்த இயக்கம் என்பதும் கிடையாது!  அதற்கு உள்ளார்ந்த தேவை
களும் இல்லை! அடுத்து, மிக முக்கியமாக, ஒரு கூழாங்கல்லானது அதற்குப்
புறத்தேயுள்ள  உலகையோ, பொருட்களையோ எதையும் உணராது, அறியாது.
அவ்வாறு அறிவதற்குரிய புலன்கள் எதுவும் அதற்குக்கிடையாது! அடுத்து,அது
தன்னையும், தனது சொந்த இருப்பையும் உணராது, அறியாது! இவ்வாறு ஒரு
கூழாங்கல்லால்  தன்னையும் உணரவியலாது, அறியவியலாது, தனக்குப்புறத்
தேயுள்ளவற்றையும்   உணரவியலாது,  அறியவியலாது  என்பதால்  அதற்கு
இருப்பு  இருக்கிறதே தவிர, "வாழ்க்கை" என்பது இல்லை! ஏனெனில், இருப்பு
தன்னைத்தானே  உணர்வு கொள்ளும் போது மட்டுமே வாழ்க்கை பெறுகிறது;
அதாவது வாழ்கிறது!

அடுத்து,  உயிர்-இருப்பின்  தன்மை,  இயல்பு  எத்தகையது  எனக்காண்போம்.
ஒரு தவளை இருக்கிறது; அதற்கு உயிர் இருக்கிறது, ஆகவே, அதற்கு உணவு,
இணை போன்ற தேவைகளும் இருக்கின்றன. அவற்றைத்தேடிப்பெறுவதற்காக
அதற்குச்  சொந்த இயக்கமும்  இருக்கிறது!  அடுத்து,  மிக முக்கியமாக, ஒரு
தவளைக்குப் புலன்கள் (கண், காது போன்றவை) இருப்பதால், அதனால் அதற்
குப்  புறத்தேயுள்ள  பொருட்களையும் நிகழ்வுகளையும் உணரவும், அறியவும்
முடியும்! ஆனால், ஒரு தவளையால், தன்னை, தனது இருப்பை, "தாம் இருக்
கிறோம்!"  என்பதை  உணர வழியில்லை;  அதற்குரிய  "சுய-உணர்வு"  எனும்
அம்சம் அதனிடம் இல்லை! ஆகவே, தவளைக்குப் பெரிதாக "வாழ்க்கை" என்ப
தில்லை!  ஏனெனில், தவளையால், தனது  இருப்பை  உணர்ந்து அங்கீகரிக்க
இயலாது!  அதே நேரத்தில்,  ஒரு  கூழாங்கல்லை விட தவளையின் இருப்பு
உயர்வானதாகும்!

அடுத்து, உணர்வு-இருப்பின் தன்மை, இயல்பு  எத்தகையது  எனக்காண்போம்.
ஒரு மனிதன் இருக்கிறான்; அவனுக்கு உயிர் இருக்கிறது, ஆகவே, அவனுக்கு
உணவு,  இணை போன்ற தேவைகளும்,  இன்னும்  பலவகைத் தேவைகளும்
இருக்கின்றன.  அவற்றைத்  தேடிப்பெறுவதற்காக அவனுக்குச் சொந்த இயக்க
மும்  இருக்கிறது!  அடுத்து,  மிக முக்கியமாக,  மனிதனுக்கு ஐம்புலன்களும்
இருப்பதால்,   அவனால்  புறத்தேயுள்ள  பொருட்களையும்  நிகழ்வுகளையும்
உணரவும்,  அறியவும்;  அவற்றைத்  தனக்குச்  சாதகமாக  மாற்றியமைத்துக்
கொள்ளவும் முடியும்!  யாவற்றுக்கும்  மேலாக,  மனிதனுக்குச் "சுய-உணர்வு"
எனும்  விசேட அம்சம்  இருப்பதால்,  அவனால்  தன்னை,  தனது இருப்பை,
"தான் இருக்கிறேன்!"  என்பதை உணரவும் முடியும்! ஆம், தன்னை உணரவும்,
தனது சுதந்திர-சித்தம் கொண்டு செயல்படவும், முடிவெடுக்கவும்; தனது வாழ்
வின்  திசையை  மாற்றியமைக்கவும் முடியும்!  அவனால்,  தனது இருப்பை
உணர்ந்து  அங்கீகரிக்கவும், இருப்பின்  நோக்கத்தையறிந்து செயல்படுத்தவும்
முடியுமென்பதால்,  மனிதனுக்கு மட்டுமே  "வாழ்க்கை"  என்பது இருக்கிறது!
அவன் மட்டும் உணர்வுப்பூர்வமாக அறியத்தலைப்படுவானெனில்!

ஒட்டுமொத்த  பிரபஞ்ச இருப்பில், மனிதன் தனிச்சிறப்பான இடத்தில், இருப்பு-
நிலையில் இருந்தாலும்,  அவனுக்கான  பிரச்சினையும் பெரிது ஆகும்! மனித
ஜீவி  என்பவன்  'ஒன்றில்-இரண்டு' ஜீவியாக,  அதாவது,  உயிர்-ஜீவியாகவும்,
உணர்வுஜீவியாகவும் இருப்பதால், அவன் இரட்டை-வாழ்க்கை வாழ வேண்டிய
இக்கட்டான  நிலையில்  சிக்கித்  தடுமாறிக் கொண்டிருக்கிறான்  என்று தான்
சொல்லவேண்டும்!  ஆனால், பொதுவாகப் பெரும்பாலான மனிதஜீவிகள் செய்
திடும் பெரும் தவறு  என்னவெனில்,  இரண்டில்,  அதாவது  உயிர்-வாழ்க்கை,
உணர்வு-வாழ்க்கை  எனும் இந்த இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்துகொண்டு,
அதாவது உயிர்-வாழ்க்கையைத் தெரிவுசெய்து வாழ்வதுதான்! ஆனால், இந்தத்
தவறு தன்னையறியாமல் நிகழ்ந்துவிடும் ஒன்று என்றாலும், அதற்கான முழு
பழியும்,அத்தவற்றைக் களையும் கடமையும்,பொறுப்பும் மனிதனையே சாரும்!

தன்னையறியாமல்   நிகழ்ந்துவிட்ட தவறு  என்பது அவ்வளவு சாதாரணமான
தல்ல; ஏனெனில் அதற்கான விலை மிகப்பெரிதாகும்! ஆம், 'வாழ்க்கை-இழப்பு'
என்பதுதான் அதற்கான விலையாகும்! தன்னையறியாததினால் நிகழ்ந்துவிட்ட
இத்தவற்றை தன்னையறிவதன் மூலம் மட்டுமே சரிசெய்திடமுடியும்! அதற்கு
ஒருவன் மீண்டும் பிறந்திட வேண்டும்! வேறுசொற்களில் சொன்னால், அவன்
கிட்டத்தட்ட தனது கீழ்ச்சுயத்திற்கும்,அதன் பிராணித்தனமான வாழ்க்கைக்கும்
இறந்தாக வேண்டும்!

ஆனால்,  இரண்டில் ஒன்றைத் தேர்வுசெய்யாமல், எவ்வாறு உயிர்-வாழ்க்கை
யையும்,  உணர்வு-வாழ்க்கையையும் சேர்த்தே வாழ்வது  என்ற கேள்வி ஒரு
வருக்குள் எழலாம்! மனிதஜீவி என்பவன் உணர்வு-வாழ்க்கைக்காகத் தோன்றி
யவனாவான்;  துல்லியமாகச்  சொன்னால்,  உணர்வுதான் மனிதன்!  ஆகவே,
அவன்  பிரதானமாக  உணர்வு-வாழ்க்கையைத் தான்  வாழ்ந்தாக  வேண்டும்!
அதாவது, உணர்வு-வாழ்க்கையை வாழ்வதற்குச் சேவை புரியும் வகையிலான
ஒரு  சிறந்த கருவியாக,  ஊடகமாக  உயிர்-வாழ்க்கையை  மாற்றியமைத்துக்
கொள்ளவேண்டும்!  உண்மையில்,  வாழ்வதற்கு  உயிர்-வாழ்க்கை,  உணர்வு-
வாழ்க்கை என இரண்டு வாழ்க்கை இல்லை!  ஏனெனில், "ஒருவன்  இரண்டு
எஜமான்களுக்கு  ஊழியம் செய்ய முடியாது!"

உயிர்-வாழ்க்கை என்பது உடலை மையமாகக்கொண்டது; உடலின் அன்றாடத்
தேவைகளைச்  சுற்றிச்  சுழல்வது.  உணர்வு-வாழ்க்கை  என்பது  உணர்வை
மையமாகக்கொண்டது;  உணர்வின் ஒரே தேவையும், இறுதித் தேவையுமான
மெய்ம்மையை அடைவதை இலக்காகக்கொண்டது! நதி தன் ஒரே இலக்கான
சமுத்திரத்தை  அடைவது  என்பதை  ஒரு கணமும்  மறப்பதோ, துறப்பதோ
இல்லை! அவ்வாறு மறந்துவிடும் பட்சத்தில், நதியானது நதியாக  இருக்காது;
மேலும் தனது வழியில் எதிர்ப்படும் தடைகளைக்கண்டு தயங்கி நிற்குமானால்
ஆங்காங்கே சிறுசிறு குட்டையாகத் தேங்கிவிடக்கூடும்! அவ்வாறே, மனிதனா
னவன்  தன் வாழ்வின் ஒப்பற்ற ஒரே இலக்கான  மெய்ம்மையை அடைவது
என்பதை ஒரு கணமும் மறப்பானெனில், அவன் ஒரு மனிதனாக இல்லாமல்
ஒரு ஜந்துவாகச் சுருங்கிப்போவான்!

ஆனால்,  பிரச்சினையும்,  மட்டுப்பாடும் உயிர்-வாழ்க்கையில் அடங்கியிருக்க
வில்லை! மாறாக, மனிதனிடமே உள்ளது; அவன் எத்தகைய வாழ்க்கையுடன்
தன்னைப் பிணைத்துக்கொள்கிறான் என்பதிலேயே உள்ளது!  உயிர்-வாழ்க்கை
என்பது  உணர்வு-வாழ்க்கையைத் தாங்கும்  ஒரு அடிப்படையாகும்,  ஆகவே,
அது  எவ்வகையிலும்  உணர்வு-வாழ்க்கைக்கு  எதிரானதாக  இருப்பதில்லை!
ஆனால்,மனிதர்கள் உயிர்-வாழ்க்கையை அர்த்தமற்றவகையில் அலங்கரித்தும்,
ஆடம்பரத்தைப் புகுத்தியும்,விரிவுபடுத்துவதன்மூலம், அது, "லௌகீகம்" என்ற
பிறழ்ச்சியான  வடிவத்திற்கு  மாற்றப்படுகிறது!  இத்தகைய  செயற்கையான
உயிர்-வாழ்க்கை எவ்வகையிலும் அர்த்தமுள்ளதாகவும்,நிறைவு தருவதாகவும்
அமையாத  நிலையில், ஏராளமானோர் ஆன்மீகத்தை நாடுகின்றனர்! அதாவது,
அர்த்தமற்ற லௌகீகத்திற்கு அர்த்தம்சேர்க்கும் விதமாக ஆன்மீகத்தில் ஈடுபடு
கின்றனர்! இதன் விளைவு, ஒருவகை ஆன்மீகம், போலி-ஆன்மீகம் வெகுவாக
வளர்ந்திருக்கிறது என்பது தான் வருத்தத்திற்குரியது!

உணர்வு-வாழ்க்கைக்கு  இன்னொரு பெயர்  "ஆன்மீகம்"  என்று சொல்லலாம்!
ஆனால்,  அது லௌகீகம் சலித்துப்போகும் போது, அல்லது ஒருவன் வாழும்
அர்த்தமற்ற  வாழ்வின் வெறுமையால் விரட்டியடிக்கப்படும்போது, பகுதி-நேர
ஈடுபாடாக, தன்னைச் சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டும் அதே அர்த்த
மற்ற  வாழ்க்கைக்கு  திரும்பச் செல்வதற்காக மேற்கொள்ளக்கூடியது அல்ல!
முழுமையான  அர்ப்பணிப்பும்,  முழு-நேர ஈடுபாடும்  இல்லாமல்  ஆன்மீகம்
எனப்படும் உணர்வு-வாழ்க்கை சாத்தியமேயில்லை!

மேலும், உயிர்-வாழ்க்கை என்பது அதனளவில் முழுமையானதோ, முடிவான
ஒன்றோ அல்ல!  மாறாக,  உணர்வு-வாழ்க்கையை  எட்டுவதற்காக உருவான
முன்-நிபந்தனை போன்றதொரு ஏற்பாடாகும்!  மேலும், உணர்வு-வாழ்க்கையே
உயிர்-வாழ்க்கையின் உண்மையான விழைவும், நோக்கமும் ஆகும்!

சடமாகத் தோன்றிய பிரபஞ்ச இருப்பானது, ஒருகட்டத்தில்  உயிர்-ஜீவிகளின்
வழியாக உயிராக எழுவதும், அதையடுத்து மனிதஜீவிகளின் வழியாக உணர்
வாக எழுவதும்,  முடிவில்  மனித உணர்வு தன்னைத் தானே  முழுமையாக
உணர்வுகொள்வதை வாழ்க்கையென வாழ்ந்து, உணர்வுகொள்வதன் உச்சியில்
"முழு-உணர்வு" எனும் முழு-இருப்பில் தன் முழுமையைத்தழுவிக்கொள்கிறது!

ஒரு உயிர்-ஜீவி என்பது,  சடப்பண்பை  தன்னுள்  ஒருங்கிணைத்துக்கொண்ட,
சடப்பண்பைக்கடந்த   உயர்-நிலையாகும்!  அதேபோல, மனித-ஜீவி என்பவன்,
சடப்பண்பையும், உயிர்ப்பண்பையும், இன்னும் உணர்வையும் தன்னுள் ஒருங்
கிணைத்துக்கொண்ட ஒரு உயர்-நிலை மெய்ம்மையாகும்! இதுவரை நாம் சட-
இருப்பு, உயிர்-இருப்பு, மற்றும் உணர்வு-இருப்பு குறித்து மட்டும் தான் பார்த்து
வந்தோம். ஆனால், மனிதஜீவியை பிரதான பிரதிநிதியாகக் கொண்ட உணர்வு-
இருப்பு என்பது  இருப்பு, அல்லது உணர்வு நிலைகளின் இறுதி நிலை அல்ல!
மாறாக, நான்காவதும், இறுதியானதுமான ஒரு இருப்பு நிலையும் இருக்கிறது!
"முழு-உணர்வு"  என்பது அதன் பெயர்! அதுவே முழுமையான இருப்பு ஆகும்!
அது அனைத்து வகை இருப்புகளும் ஒருங்கிணைக்கப்பட்ட நிலை மட்டுமல்ல;
அனைத்தையும் கடந்த நிலையுமாகும்!

இருப்புக்கும், உணர்வுக்கும் உள்ள தொடர்பு என்ன? இருப்பு தான் உணர்வாகப்
பரிணமிக்கிறது!  உணர்வு,  ஒரு பேருணர்வு தான்  இருப்பாகச் சுரிணமித்தது
(சுருங்கியது)! பேருணர்வானது இருப்பாகச் (சடப்பொருள்) சுருங்கி (சுரிணாமம்),
பிறகு உயிராகி,  மனிதனாகி,  மனிதனுள் சிற்றுணர்வாக  உதயமாகி மீண்டும்
பேருணர்வாக எழும்  வழிமுறை தான்  பரிணாமம்  என்பதாகும்!  இது தான்,
அனைத்தையும்  விளக்கும்   மீபௌதீகத் தத்துவம் (Metaphysics) ஆகும்!

இருப்புக்கும்,  உணர்வுக்கும் உள்ள தொடர்பு குறித்துப் பேசுவதற்குக் காரணம்,
பண்பினடிப்படையில்  இருப்பும், உணர்வும் வெவ்வேறாயினும், இரண்டுக்கும்
நெருங்கிய  தொடர்பு உள்ளது!   கம்பளிப்புழுவுக்கும்,  வண்ணத்துப்பூச்சிக்கும்
உள்ள தொடர்புபோல! அதாவது, கம்பளிப்புழுவும், வண்ணத்துப்பூச்சியும் தனித்
தனி  ஜீவிகள் தான் என்றாலும்,  இரண்டிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது;
எவ்வாறெனில், கம்பளிப்புழுதான் வண்ணத்துப்பூச்சியாக மாறியுள்ளது!

இருப்பு  தன்னைத்தானே  உணர்வு கொள்ளும் பொருட்டு உருமாற்றம் பெற்ற
நிலையே உணர்வு என்பதாகும்! ஏனெனில், தன்னைத் தானே உணர்வுகொள்ள
இயலாத  இருப்பு,   இருந்தும்  இல்லாதது போன்றது தான்! ஆகவே உலகம்,
அல்லது   பிரபஞ்சம்தான்  உணர்வுள்ள  மனிதஜீவியாகப்  பரிணமித்துள்ளது!
மனிதன் ஒரு குறும்-பிரபஞ்சம் (Microcosm)எனக்குறிப்பிடப்படுவது எவ்வித
காரணமும் அடிப்படையும் இல்லாமல் சொல்லப்பட்டதல்ல!

இப்பிரபஞ்சமானது  முதல் உயிர்ஜீவி தோன்றிடுவதற்கு  முன்னர்  பல நூறு
கோடியாண்டுகள் வெறும் சட-இருப்பாக,  எந்திரத்தனமான இயக்கத்தில் ஆழ்ந்
திருந்தது!  அக்காலக்கட்டங்களில்  பிரபஞ்சத்தை  அகலவிரிந்த  கண்களுடன்
ஆச்சரியத்துடன் நோக்கவும், அது பற்றி அறியவும், ஆராயவும் யாதொரு நாதி
யும் இல்லை! பிறகு முதல் உயிர்ஜீவி தோன்றியதுடன் பிரபஞ்சமானது உயிர்
இருப்பு பெற்றது! ஆனால், எண்ணற்ற உயிர்-ஜீவிகள் பூமியில் தோன்றியிருந்த
போதும்  எவ்வொரு விலங்குஜீவியும்  பிரபஞ்சத்தை  ஏறெடுத்துப் பார்க்கவும்
இல்லை! பிறகு உணர்வுள்ள மனிதஜீவி தோன்றியதும் முதன்முறையாக, இப்
பிரபஞ்சமானது மனிதனால் மட்டுமே வியந்து பார்க்கப்பட்டு அர்த்தம் பெற்றது!

ஆனால்  விஞ்ஞானிகளும்,  பொருள்முதல்வாதிகளும்,  இயற்கைவாதிகளும்
இப்பிரபஞ்சம் மனிதனுக்குப் புறத்தே தனியே சுயேச்சையாக உள்ளது எனவும்;
அது  மனிதனையோ, இன்னும் ஒரு கடவுளையோ சார்ந்திருக்கவில்லை என்
பதாகவும்;  மனிதன்  தோன்றுவதற்குரிய  வகையிலேயே  இப்பிரபஞ்சத்தின்
தொடக்கநிலை மதிப்புகள் (ஈர்ப்புவிசை, மின்காந்தவிசை போன்றவை) அமைந்
திருந்தன என்கிறவாதம் இறையியல் சார்புகொண்ட அதீதமான மனித-மையப்
பார்வை எனச்சாடி வருகின்றனர்! உண்மைதான், இது அதீதமானதொரு மனித-
மையப் பார்வையே ஆகும்! இன்னும் சொல்லப்போனால், இது மட்டுமே மிகச்
சரியான  பார்வையும் ஆகும்!  மேலும், இப்பிரபஞ்சம் பிரும்மாண்டமான அள
விற்குப்பெரிதாக இருக்கலாம்; அதில் நாம் எங்கோ ஒரு மூலையில் தோன்றி
யிருக்கலாம்; மேலும், இடவெளியில் நாம் பிரபஞ்சத்தின் மையத்தில் இல்லா
மலிருக்கலாம்!  ஏன், மிகப்பெரிய ஆலமரத்தில் மிகச்சிறிய கனிகள் தோன்றிட
வில்லையா? அக்கனிகள் மரத்தின் மையத்தில்தான் காய்க்கவேண்டுமா; ஓரங்
களில், கிளை நுனிகளில் காய்த்தால் ஆகாதா?

மா.கணேசன்/ நெய்வேலி/ 13-05-2017
----------------------------------------------------------------------------

Sunday, 14 May 2017

எதைப் பற்றிச் சிந்திப்பது?





"எதைப்பற்றிச் சிந்திப்பது?" என்ற கேள்வி ஒரேநேரத்தில் அதி முக்கியமானதும்,
படு அபத்தமானதுமாகும். இக்கேள்வியை ஒருவன் தன்னிடமே கேட்டுக்கொள்
ளும்போது அது முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது!  இதே கேள்வியை ஒருவன்
பிறரிடத்தில் கேட்கும் போது அபத்தமாகிவிடுகிறது!

எனினும்,  இக்கேள்வியை நாம்  சிந்தனைப் பயிற்சிக்குரிய ஒன்றாக எடுத்துக்
கொண்டு  அதற்கான  பதிலைக் காண்போம்.  எதைப் பற்றிச் சிந்திப்பது என்று
என்னைக் கேட்டால்,  நான்  என்னைப் பற்றிச் சிந்திப்பேன் என்று சொல்வேன்;
ஆனால், உண்மையில் நான்  எல்லாவற்றைப் பற்றியும் தான்  சிந்திக்கிறேன்!
ஏனெனில், எல்லாமும் என்னை (மனிதனை)ப் பற்றியதாகவே உள்ளன; ஏதோ
ஒருவகையில் எல்லாமும் என்னை (மனிதனை)யே சுட்டுகின்றன! ஏனெனில்,
மனிதன் உண்மையில் பிரபஞ்சமளாவியவன்!

உண்மையில்,  எவ்வொரு  மனிதனும்  தன்னைப் பற்றித்தான்  சிந்திக்கிறான்.
ஆனாலும்,  எல்லா  மனிதர்களின்  சிந்தனையும்  முழுமை  பெறுவதில்லை!
காரணம்,  அவர்கள் எல்லோரும்  தங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள்!
ஒருவன் தன்னைப் பற்றி மட்டுமே சிந்திப்பதில் உள்ள மட்டுப்பாடு, குறைபாடு
என்னவென்றால்,  அவன் தன்னை  மிகவும் குறுக்கிக் கொள்கிறான், அல்லது,
சுருக்கிக் கொள்கிறான்.  ஒருவன் தன்னைப் பற்றியும், அதாவது  தனது நலன்,
தனது குடும்பத்தாரின், நெருங்கிய உறவுகளின் நலன்களைப் பற்றியும் மட்டும்
சிந்திப்பது என்பது உண்மையில் தன்னைப் பற்றிச் சிந்திப்பது என்பதாகாது!

தான், தனது நலன் என்பதென்ன?  'தான்' என்பது தனது 'உடல்' என்பதாகவும்,
தனது நலன் என்பது உடலின் 'அடிப்படைத்தேவைகள்' என்பதாகவும் இருக்கும்
பட்சத்தில், அது  உண்மையான, அல்லது, ஆழமான 'தன்னை'ப் பற்றியதல்ல!
மாறாக, மிகவும் மேலோட்டமான 'தன்னை'ப் பற்றியதாகும்!

எதைப் பற்றிச் சிந்திப்பது என்று  என்னைக் கேட்டால்,  நான் என்னைப்பற்றிச்
சிந்திப்பேன் என்று சொன்னேன். ஆனால், என்னைப்பற்றிச் சிந்திப்பது என்றால்
என்ன? எந்தமனிதனும் எடுத்தவுடனேயே நேரடியாக, அதாவது நேர்முகமாகத்
தன்னைப்பற்றிச்  சிந்திக்கத் தொடங்கிவிடுவதில்லை! உண்மையில் தன்னைப்
பற்றிச் சிந்திப்பது என்பது உண்மையில்  "தான் யார்?",  ஒட்டு மொத்த இந்தப்
பிரபஞ்சத்தில், "தான் எத்தகைய மெய்ம்மை?", பிரபஞ்ச இருப்புக்கும் எனக்கும்
(மனிதனுக்கும்) உள்ள  தொடர்பு எத்தகையது?  என்றெல்லாம் சிந்திப்பதாகும்!
ஆம்,  ஒருவன்  தன்னைப்பற்றி  சிந்திப்பதில் ஆழம் என்பது இவ்வளவு தான்,
என்றில்லாமல், சிந்திக்கச் சிந்திக்கக் கூடிக்கொண்டே செல்கிறது!

ஆக,  ஒருவன்  எதைப்பற்றிச் சிந்திப்பது என்ற கேள்வியை, பல்வேறு முனை
களிலிருந்து, அதாவது, 'தன்னைப்பற்றி' என்பதன் ஒரு மாறிய வடிவமான தன்
வாழ்க்கையைப் பற்றிச் சிந்திப்பதில் தொடங்கிடலாம்!  அல்லது, இப்பிரபஞ்சம்
ஏன்,   எதற்காக,  எந்த நோக்கத்திற்காகத் தோன்றியது?  அதற்கும்  தனக்கும்
(மனிதனுக்கும்) என்ன தொடர்பு?  என்பவை குறித்தும் சிந்திக்கலாம்! ஒருவன்
எதைப் பற்றிச் சிந்தித்தாலும்,   அது  மறைமுகமாகத்  தன்னை (மனிதனை)ப்
பற்றியதே  எனலாம்!  அதாவது,  ஒருவன்  உலகம்,  பிரபஞ்சம்,  வாழ்க்கை,
மெய்ம்மை என  எதைப்பற்றிச் சிந்தித்தாலும் இவை எல்லாவற்றிற்கும் அடிப்
படையாக, மையமாக இருப்பது மனிதனே அவனது உணர்வே ஆகும்!

நம்மில் சிலர்,  உலகம் மனிதனுக்கு முந்தையது, ஆகவே உலகமே பிரதானம்
என்பர்.  இக்கூற்றில் தவறேதுமில்லை! ஆனால்,உலகின் தன்மை, இயல்பு எத்
தகையது என்பதைக் கொண்டு மனிதனின் தன்மை, இயல்பு எத்தகையது என
அறிந்து  கொள்ளவியலாது!  மேலும், மனிதன் தன்னைப் பற்றிப் புரிந்துகொள்
ளாமல், உலகம், அல்லது பிரபஞ்சம் பற்றியும் புரிந்துகொள்ளமுடியாது! ஏனெ
னில், உலகம்,மனிதன், யாவும் ஒரே நிஜத்தின் வெவ்வேறு முகங்களேயாகும்!
உலகம் மனிதனுக்கு முந்தையது என்று சொல்வது, கம்பளிப்புழு வண்ணத்துப்
பூச்சிக்கு முந்தையது என்று சொல்வது போன்றதாகும்!  ஆம், மனிதனை எதிர்
நோக்கி உருவான அடித்தளம்தான் உலகம்! மனிதன் இல்லையேல் பிரபஞ்சத்
திற்கு யாதொரு அர்த்தமும் கிடையாது! நிச்சயம் இது ஒரு அதீதமான மனித-
மையப் பார்வைதான்! ஏனெனில்,  இங்கு நாம் அக்கறையுடன் பேசிக்கொண்டு
இருப்பது  மனிதனின்  வாழ்க்கையைப் பற்றித்தான்! அதாவது, மனிதஜீவியாக
விசேட வடிவமெடுத்த பிரஞ்சத்தின் வாழ்க்கை!

இப்போது நாம், வாழ்க்கையைப் பற்றிய சிந்தனைக்கு வருவோம்!  ஆம், எந்த
ஒரு மனிதனும்  தனது  வாழ்க்கையைப் பற்றித்தான்  சிந்திக்கிறான்.  அதில்,
பொதுவாக  உயிர்வாழ்தலுக்குரிய தேவைகளை எவ்வாறு அடையப்பெறுவது
என்பது குறித்து  மட்டுமே எல்லோரும் சிந்திக்கிறார்கள்! அதாவது, "உண்மை
யில் தான் யார்?" எனும் மையமான கேள்வியைக்கேட்காமலேயே மனிதர்கள்
தங்களைப்பற்றிச்  சிந்திக்கிறார்கள்!  அவ்வாறே, "வாழ்க்கை என்றால் என்ன?"
எனும்  மையமான  கேள்வியைக்  கேட்காமலேயே  வாழ்க்கையைப்  பற்றிச்
சிந்திக்கிறார்கள்  என்பதே  மனிதர்களுடைய  சிந்தனையிலுள்ள குறைபாடும்,
மட்டுப்பாடும் ஆகும்!

அடுத்து,  'எதைப்பற்றிச் சிந்திப்பது?'  என்ற பிரச்சினை ஒருபுறமிருக்க, அதற்கு
முன், 'சிந்தித்தல்' என்றால் என்ன என்பது குறித்தும் சிந்திப்பது அவசியமாகும்!
'சிந்தித்தல்'  என்றால்  என்ன?  நாம்  எது ஒன்றைப் பற்றியும் புரிந்துகொள்ள
வேண்டுமானால்,  அது  குறித்துக் கேள்விகளைத் தன்னுள் எழுப்பி, அவற்றுக்
கான பதில்களைக் கண்டுபிடிப்பது என்பதே 'சிந்தித்தல்' என்பதாகும்!

கேள்விகளின்  மகத்துவமும்,  அவை  நிகழ்த்தும்  அற்புதங்களும் அலாதியா
னவை!  கேள்விகள்,  அவை  அறிவுக் கருவூலத்தின் திறவுகோல்கள் ஆகும்!
அவை எங்கிருந்து எவ்வாறு தோன்றுகின்றன?  கேள்விகளுக்கான அடிப்படை
எது? தூய,ஆர்வம்-ததும்பும் உணர்வு/மனம் தான் கேள்விகளுக்கான அடிப்படை
யாகும். தூய ஆர்வம் என்றால் என்ன? விருப்பு-வெறுப்புக்களால் கறை படாத
ஆர்வமே தூய-ஆர்வம் எனப்படுவது! விருப்பு-வெறுப்புகள் ஒருவரது சிந்தனை
யைக் கட்டுப்படுத்திடுபவையாகும். ஏனெனில், விருப்பு-வெறுப்புகள் அன்றாட
உலகைச் சேர்ந்தவை; ஆனால், "உண்மை" என்பது இவ்வுலகைக்கடந்ததாகும்!

ஆர்வம்-ததும்பும் உணர்வு/மனம் என்பது எத்தகையது? ஆம், அறிந்த விஷயங்
களுடனும், அனுபவங்களுடனும் திருப்தியடைந்து தேங்கிப்போகாத,எப்போதும்
புத்துணர்வுடன் திகழும் மனமே ஆர்வம்-ததும்பும் மனமாகும்!

அடுத்து,  எது ஒன்றைப் பற்றியும்  புரிந்து கொள்ளவேண்டும் எனும் தேவை,
அல்லது விழைவு ஏன், எவ்வாறு, எங்கிருந்து எழுகிறது என்பதுதான் அனைத்
துச் சிந்தனைக்கும்,  இன்னும்  யாவற்றுக்குமான  அடிப்படையும் ஆதாரமும்!
ஆம்,  எதையும்  ஆழமாகவும்,  முழுமையாகவும்  புரிந்துகொள்ள வேண்டும்
எனும்  ஆர்வம்  இல்லையேல், மனிதர்களின்  சிந்தனை என்பது மேற்புறத்து
விஷயங்களைப்  பற்றியதாக  மட்டுமே  இருக்கும்!  வாழ்க்கையைப்  புரிந்து
கொள்ளவேண்டும் எனும் ஆர்வம் வாழ்க்கையை ஒருவர் அவ்வளவு ஆழமாக
நேசிக்கும் பட்சத்தில் மட்டுமே ஏற்படவியலும்!

வாழ்க்கையை    நேசிக்கும்   ஒருவனுக்கு,   "வாழ்க்கை"  எனும்  சொல்லே
அவ்வளவு இனிமை நிறைந்ததாக இருக்கும்! ஆனால்,எவ்வாறு வாழ்க்கையை
நேசிப்பது என்று ஒருவர் இன்னொருவருக்குக் கற்றுத்தர இயலாது; அவ்வாறே,
சிந்திப்பது எவ்வாறு எனவும் கற்றுத்தர இயலாது!

அதேநேரத்தில்,  மனிதர்களிடத்தில் அன்பு, நேசம் இல்லாமலில்லை! ஆனால்,
அவ்வளவும்  சுய-அன்பாகவும், சுய-நேசமாகவும் மட்டுமேயுள்ளது! இதிலுள்ள
மட்டுப்பாடு  என்னவெனில்,  தனது மையத்தில்  "தான்  உண்மையில் யார்",
"எத்தகைய மெய்ம்மை?"  என்பதை  ஒருவன் அறியாத நிலையில்,  அவனது
அன்பும்,  நேசமும்  மலராமல்  சுருங்கிப்போகிறது! ஒருவன் தனது இருப்பை,
"தான் இருக்கிறேன்!" என்பதை உணர்வது அற்புதமானதோர் அனுபவமாகும்!

"எதைப்  பற்றிச் சிந்திப்பது?"  என்று   கேட்கும்  ஒருவன்,  தனது  இருப்பின்
அர்த்தத்தை, நோக்கத்தை, காரணத்தை, இலக்கை, ஆகவே வாழ்க்கையையும்
சேர்த்தே இழந்துவிட்டவனாவான்!  ஆம்,  வாழ்க்கையின்  அர்த்தத்தை, குறிக்
கோளை,  இலக்கை அறியாதவரை  அது வாழ்க்கையல்ல!  தனது  இருப்பை
உணரும் ஒருவன்,  தாம் ஏன் இருக்கிறோம், தன் வாழ்க்கையின் குறிக்கோள்,
இலக்கு,  அர்த்தம்  என்ன  என்பதையெல்லாம்  தன்னுள் ஆழ்ந்து அறியாமல்
இருக்கமுடியாது! தனது இருப்பிற்கான நோக்கத்தை, காரணத்தை, அர்த்தத்தை
அறியாமல் இருக்கமுடியுமானால்,அது எலிகளுக்கும்,தவளைகளுக்கும் மட்டும்
தான்  சாத்தியமாகும்!   ஏனெனில்,   எலிகள்,  தவளைகள்  மட்டுமல்லாமல்,
அனைத்து  விலங்குஜீவிகளுக்கும்  இருப்பு இருக்கிறதே தவிர, அவைகளுக்கு
வாழ்க்கை என்பதில்லை! அவை யாவும் வெறுமனே உயிரோடு இருக்கின்றன;
அவ்வளவு தான்!

அதாவது,விலங்குஜீவிகள் கூழாங்கற்களையும்,பாறைகளையும் போல வெறும்
சடமாய் இல்லாமல், வேறொரு பாங்கில் (Mode),அதாவது உயிரோடு இருக்
கின்றன,  அவ்வளவு தான்! அதே பாங்கில் மனிதஜீவிகளும் இருக்கமுடியாது;
அவர்கள் வேறொரு பாங்கு, அல்லது வேறொருவகை  இருப்புக்காக, உணர்வு-
இருப்புக்காகத்  தோன்றிய  விசேட ஜீவிகளாவர்!  ஆம், இருப்பானது உணர்வு
கொள்ளப்படும் போது  மட்டுமே  வாழ்க்கையாகிறது!  ஒரு கூழாங்கல் இருக்
கிறது; ஆனால், அது வாழ்வதில்லை! ஒரு தவளை வெறுமனே உயிர்-பிழைத்
திருக்கிறது;  அது தனது இருப்பை உணர்வதில்லை, எதையும் அறிவதில்லை!
ஆகவே,  தவளையும் உண்மையில் வாழ்வதில்லை! எண்ணற்ற மனிதர்களும்
தவளைகளைப் போலவே வெறுமனே உயிர்-பிழைத்திருக்கிறார்கள்!

"சுய-உணர்வு" எனும் அம்சம் இல்லாததால்,  தவளைகளுக்கு எவ்வித கேள்வி
களும் எழுவதில்லை! "சுய-உணர்வு" இருந்தும் நம்மில் பலருக்குக் கேள்விகள்
எழுவதில்லை என்பது ஆச்சரியமான விஷயமே!

எல்லா மனிதர்களும், பிறக்கும் போது, கள்ளம் கபடமற்றவர்களாகவும், உள்ள
மைந்த ஆச்சரிய-உணர்வுடனும், பெரிதாக ஞாபகங்களின் சுமைகள்  இல்லாம
லும்,  ஆர்வத்தின் ஊற்றாகவும் தான்  பிறக்கிறார்கள்!  எல்லா  மனிதர்களும்,
குழந்தைகளாக இருக்கும் போது ஞானிகளாக - அதாவது, தூய கவனம்,  தூய
வியப்பு, தூய ஐயம்  கொண்டவர்களாக இருக்கிறார்கள்;   அதாவது,  கேள்வி-
நிறைந்தவர்களாக,   பார்க்கும்  ஒவ்வொன்றையும்,  அனைத்தையும் அறிந்து
கொள்ளும் தீரா ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்! ஆனால், வளர்ந்து
மனிதனாக ஆகும்போது  கேள்வியற்று,  ஆர்வம் வற்றி,  உணர்வும், அறிவும்
மழுங்கிப்போனவர்களாக ஆகிவிடுகிறோம்!

நம்மில்  பலருக்கு,  கொஞ்சம் விஷயங்களைக் கேட்டும், படித்தும் அறிந்ததும்
அனைத்தையும்  அறிந்தாகிவிட்டது  போன்றதொரு பிரமை, அல்லது  போலி-
உணர்வு தோன்றி  அவர்களைத் தூங்கச் செய்துவிடுகிறது! கேட்டும், படித்தும்
அறிந்தவை கடன்வாங்கிய அறிவாகும்;  அவை எவ்வாறு ஒருவனது அறிவும்,
அனுபவமும்  ஆகும்?   கேள்விகள்  ஒருவனுடையதாக  இருக்கும்பட்சத்தில்
பதில்களும், அறிவும் அவனுடையதாகவே அமையும்!  கேள்வியற்றவனுக்குப்
பதில்கள் கிடைத்தாலும் அவற்றால் ஒரு பயனுமில்லை - தனக்கு இவ்வளவு
விஷயங்கள் தெரியும் எனக்காட்டிகொள்வதைத்தவிர! கேள்வி உள்ளவனுக்கே
பதில்கள் உரித்தானவை!

ஆனால், நம்மில் ஒரு சிலரைத்தவிர மற்ற அனைவருக்கும் ஏன் கேள்விகளே
உதிப்பதில்லை? எல்லோருக்கும் கேள்விகள் உதிக்கவே செய்கின்றன;ஆனால்,
அவை  மேலோட்டமான விஷயங்களைப் பற்றியவையாக மட்டுமே உள்ளன!
ஏனெனில், மனிதர்கள்  மேலோட்டமானவர்கள்!  அவர்கள் வாழும் வாழ்க்கை
மேலோட்டமானது!  அவர்கள் விரும்பி, நாடித்தேடுகிற விஷயங்கள், மதிப்பீடு
கள் யாவும் மேற்புறத்தைச் சேர்ந்தவை!

                  முக்கிய கருத்தாம்சங்கள்
             ---------------------
ஒருவகையில், எதைப்பற்றிச்சிந்திப்பது என்பதைச் சொல்வது எளிது; ஆனால்,
எவ்வாறு சிந்திப்பது என்பதை விளக்கிச் சொல்வது கடினம்!
 
• எவ்வொரு மனிதனும் சிந்திக்கிறான்; ஆனால், தன்னைப்பற்றி மட்டும் தான்
            சிந்திக்கிறான்.

• எவ்வொரு மனிதனும் தனது  வாழ்க்கையைப் பற்றியும், தனது நலன்,
            தனது குடும்பத்தாரின், நெருங்கிய உறவுகளின் நலன்களைப்
            பற்றியும் மட்டும் தான்  சிந்திக்கிறான்.

• எவ்வொரு மனிதனிடமும் அன்பும், நேசமும் உள்ளது! ஆனால், அது
           சுய-அன்பாகவும், சுய-நேசமாகவும் சுருங்கிக் கிடக்கிறது!

• எல்லா மனிதர்களுக்கும் சுய-உணர்வு உள்ளது; ஆனால், அவ்வுணர்வு
           எதையும் ஆழமாகக் காண்பதும், அறிவதும், புரிந்துகொள்வதும்
           இல்லை. மாறாக, அது வாழ்வின் மேற்புறத்துத்தேவைகளை
           மட்டுமே தேடியலைகிறது!
           
• சிந்திப்பதற்கு பிரபஞ்சம் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. என்றாலும்,
           முக்கியமானதை, முழுமையானதை, மையமானதை,
           இறுதியானதை, மெய்ம்மையைப் பற்றிச் சிந்திக்கவேண்டும்!
           சிந்திப்பவனை முழுமைப்படுத்துகிற, நிறைவுசெய்கிற,
           மரணத்தைக் கடக்க உதவுகிற, நித்தியவாழ்வு தருகிற அம்சம்
           எதுவோ அதுபற்றிச் சிந்திக்கவேண்டும்!
           ஆம், அனைத்தின் சாரமான உண்மையைப்பற்றிச் சிந்திக்க
           வேண்டும்!

மா.கணேசன்•நெய்வேலி•11-05-2017
----------------------------------------------------------------------------

Friday, 12 May 2017

நாத்திகத்தின் ஆணிவேர்






      தம்மை மீறி இன்னொரு கடவுள், அல்லது பேரகந்தை இருப்பதை
      பொதுவாக மனிதர்களின் அகந்தை விரும்புவதில்லை!
                          <•>

குறிப்பு : இக்கட்டுரை நாத்திகம், ஆத்திகம் பற்றிப்பேசினாலும், பிரதானமாக,
இது மனிதஜீவிகள் வாழ்ந்துவருகின்ற அடியோட்டமான வாழ்வின் தன்மை,
தரம் மற்றும் வாழ்க்கைப் பார்வை பற்றியதேயாகும்!
                         <<•>>

மனித இனம் ஆத்திகர்கள்,  நாத்திகர்கள் என இரு அணியாகப் பிரிந்து கிடப்ப
தாகத்  தெரிவது  ஒரு தோற்றப்பிழையே தவிர அது நிஜமல்ல! உண்மையில்
இது முழுக்க முழுக்க நாத்திக உலகமே; எல்லோரும் நாத்திகர்களே! எனினும்
நம்பிக்கை, கொள்கை,  மற்றும்  கோட்பாடு  என  பெயரளவில்  ஆத்திகர்கள்,
நாத்திகர்கள் என்போர் உள்ளனர் எனலாம்; எவ்வாறு, கட்சி-சார்ந்த அரசியலில்,
பல கட்சிகள்,அணிகள் உள்ளனவோ அவ்வாறு! அதாவது,கட்சி-சார்ந்த அரசியல்
என்பது எவ்வளவு மேலோட்டமானதோ, அர்த்தமற்றதோ அவ்வளவு அர்த்தமற்
றதே மதம் எனும் விஷயமும்! ஆத்திகம் என்றவுடன் அதற்கு ஒரு மதச்சாயம்
அல்லது  மதச்சார்பு  உள்ளதைப் போலவே  நாத்திகத்திற்கும் ஒரு மதச்சாயம்
அல்லது  மதச்சார்பு  உள்ளது! நாத்திகத்தைப் பொறுத்தவரை "மதச்சார்பற்றது"
என்பதுதான் அந்த மதச்சாயம்! ஆம் நாத்திகம் என்பதும் ஒரு மதமே; அதாவது,
கடவுளுக்கு பதிலாக இயற்கையை,அல்லது பகுத்தறிவை நம்புகிற ஒரு மதம்!
இவ்வாறே, விஞ்ஞானம், பொருள்முதல்வாதம், பொதுவுடமைவாதம் (கம்யூனி
சம்), டார்வினிய பரிணாமவாதம் என்பவையும் மதங்களே!  அதாவது, கடவுள்
இல்லாமலும்,  மதங்கள் இல்லாமலும்  மனித இனம் எவ்வொரு காலத்திலும்
இருந்ததில்லை!

நாத்திகம் என்பது,  ஆதி அல்லது இயற்கை மதங்களைப்போல இயற்கையான
தல்ல! மாறாக,  'கடவுள்' மற்றும் மத- நம்பிக்கைகளுக்கு எதிராகத் தோன்றிய
எதிர்-வினையே எனலாம். நாத்திகம் என்பது வலிந்து மேற்கொள்ளப்படும் ஒரு
நிலைப்பாடு ஆகும்!  நாத்திகத்தில்  இருவகைகள்  உள்ளன எனலாம்! ஒன்று,
பகுத்தறிவுப்பூர்வமாக  தெரிவுசெய்யப்பட்ட  ஒரு நிலைப்பாடு.  இன்னொன்று
அறிவிக்கப்படாத ஒரு நிலைப்பாடு,அல்லது விவரமில்லாத ஒரு மனோநிலை.
பெரும்பாலானவர்கள்  இந்த  இரண்டாம் வகை  நாத்திகர்களேயாவர்; அதில்,
ஆத்திகர்கள் என்போரும் அடங்குவர்!

அதாவது, சமயபூர்வமானவர்கள் (Religious People) எனக்கருதிக்கொள்ப
வர்கள், கடவுள் நம்பிக்கையாளர், ஆத்திகர் எனப்படுபவர்களும், உண்மையை,
அதாவது  உண்மையான  கடவுளைத்  தேடுவது இல்லை!  மாறாக, வெறும்
ஆறுதலையும்,  சுலப - அருளையும்  (Easy Grace) தான்  தேடுகிறார்கள்!
அவர்கள்   கடவுளுக்காகத் தம்மை  இழக்கத்  தயாராயில்லை!  ஆத்திகர்கள்
என்பவர்களும் ஒருவகை நாத்திகர்களே! ஆம், கடவுள் எனும் மெய்ம்மையை
நேரே தம் உணர்வின் உச்சத்திற்கு உயர்ந்து அனுபவம்கொள்ளாத, தரிசிக்காத
எவரும் நாத்திகரே!

"கடவுள் இருக்கிறார்!" என நம்புபவர்கள் ஆத்திகர்கள்; "கடவுள் இல்லை!" என
வாதம் புரிபவர்கள்  நாத்திகர்கள்  எனப்படுகிறார்கள்!    ஆத்திகர்கள்   மனித
அறிவையும், இயற்கை ஆற்றலையும் மீறியதொரு ஆற்றல் இருப்பதாக நம்பு
கிறார்கள்; அந்த ஆற்றலை அவர்கள் "கடவுள்" என்றழைக்கிறார்கள். நாத்திகர்
கள் தம் பகுத்தறிவை மட்டுமே தீவிரமாக நம்புகிறார்கள்; இருப்பது இயற்கை
மட்டுமே என்கிறார்கள்;  அந்த  இயற்கை ஆற்றலை  மீறிய ஆற்றல் எதுவும்
இல்லை;  ஆகவே, "கடவுள் என்பது இல்லை!" என வாதிடுகிறார்கள்! ஆத்திக
வாதம், நாத்திகவாதம், இவ்விரண்டுவாதங்களின் வேர்களை ஆராய்ந்து காண்
கையில்,  இவையிரண்டும்  யாதொரு அனுபவபூர்வமான அறிவையும் அடிப்
படையாகக்கொண்டவையல்ல என்பது தெரியவரும்!

அதாவது நாத்திகவாதத்தின் கூற்றுகள் உண்மையாக இருக்கவேண்டுமானால்,
மனித அறிவு,அதாவது பகுத்தறிவு என்பது இறுதியானதாக இருக்கவேண்டும்,
மேலும்,பகுத்தறிவைக்கடந்து வேறு அறிவுநிலைகள் எதுவும் இருக்கக்கூடாது;
அப்போதுதான், நாத்திகவாதத்தை பிழையற்ற தத்துவம் எனக்கொள்ளமுடியும்!
ஆனால், மனித அறிவு, அதாவது பகுத்தறிவு என்பது இறுதியானதல்ல! மனித
ஜீவிகளில்  ஏராளமானவர்கள்  இன்னும் பகுத்தறிவு நிலையைக் கூட எட்டிட
வில்லை! அதை எட்டியவர்களிடம் அத்தளத்தினை முழுமையாகப் பிரயோகித்
ததற்கான  தடயம்  ஏதும்  தெரியவில்லை!  அவ்வாறு  பிரயோகித்திருந்தால்,
அவர்கள் பகுத்தறிவு  எனும்  தளத்தைக் கடந்து,  அதையடுத்த உயர்-அறிவுத்
தளத்தை  எட்டியிருப்பார்கள்!  ஆக,  நாத்திகவாதம்  என்பது  பூரணமானதோ,
அல்லது, பிழையற்ற தத்துவமோ அல்ல என்பது தெளிவு!

அடுத்து,  ஆத்திகவாதிகள்  நம்புகிற  மனித அறிவைக் கடந்த அறிவு, மற்றும்
இயற்கை ஆற்றலை மீறிய ஆற்றல் என்று சொல்லப்படும்  'கடவுள்'  பற்றிய
நேரடி அனுபவம்,  மற்றும்,  நிரூபணத்திற்கான  தடயத்தை  ஆத்திகர்களிடம்
தேடினால்,அப்படி எதுவும் அவர்களிடம் காணக் கிடைக்கவில்லை! ஆம்,மனித
அறிவை   மிஞ்சிய  பேரறிவு  இருக்கலாம்!  ஆனால்,  அதை  மனிதர்களால்
தொடர்புகொள்ள  இயலவில்லையெனில்,  அதனால்  மனிதர்களுக்கு  என்ன
பயன்  விளையமுடியும்?  அதாவது, அறிவை அறிவால் மட்டுமே அணுகவும்,
அடையவும் முடியும்!  அதாவது,  'கடவுள்'  எனும் பேரறிவை நம்பிக்கையின்
மூலமாக அணுகவோ, பணியவைக்கவோ முடியாது!

தற்போது  உலகில்  நாத்திகம்  தீவிரமாகி வருகிறது  என்பதான ஒரு கருத்து
ஆத்திக வட்டத்தில் நிலவிவருகிறது எனப்படுகிறது.  பல  சிந்தனையாளர்கள்
நாத்திகம்  தீவிரமாக  வளர்ந்து  வருவதற்குக் காரணமாக பல அம்சங்களைக்
குறிப்பிடுகின்றனர்.  நாத்திகத்தின் வளர்ச்சிக்கு  ஒரு பாதி காரணம் மதவாதம்,
குறிப்பாக,  கிறித்துவமே என அல்வின் பிளாண்டிங்கா (ALVIN PLANTINGA)
குறிப்பிடுகிறார்.  புராட்டஸ்ட்டண்ட் பிரிவு கிறித்தவர்களுக்கும், கத்தோலிக்கப்
பிரிவு  கிறித்தவர்களுக்கும் இடையேயான பரஸ்பரச் சண்டைகளும், கொலை
களும் கிறித்துவத்திற்கு எதிரான மனநிலையை உருவாக்கியது;அதுவே பொது
வான பிற மதங்களுக்கும், கடவுள் நம்பிக்கைக்கும் மாற்றான நிலைபாட்டிற்கு
அதாவது நாத்திகத்திற்கு இட்டுச்சென்றது என்கிறார். பிளாண்டிங்கா- வின் இக்
கூற்று,  ஐரோப்பாவிற்கு  மட்டுமே பொருந்தும்; ஏனெனில், நாத்திகம் என்பது
உலகளாவியதொரு போக்கு ஆகும்.

பிளாண்டிங்கா-வின் இன்னொருகூற்று, நாத்திகம் என்பது ஒருவகை குருட்டுத்
தனம்,  அதாவது உலகிலுள்ள மிக முக்கியமான ஒன்றைக் காணத்தவறியதன்
விளைவு என்கிறார். இக்கூற்று ஒருவகையில் பொருத்தமானதே எனலாம்.

தத்துவப் பேராசிரியர் ரிச்சர்ட் ஸ்வின்பர்ன் (Richard Swinburne)அவர்கள்
கூற்றுப்படி,நாத்திகர்கள் எவ்வாறு உருவாகிறார்களென்பது, 'அவர்கள் எத்தகை
யவர், அவர்கள் வாழும் காலம், எத்தகைய தாக்கங்களுக்கு இலக்கானவர் என்
பதைப் பொறுத்தது' என்கிறார். குறிப்பாக, அறிவுஜீவியச் சூழலின் தாக்கத்தைப்
பற்றி  ஸ்வின்பர்ன் குறிப்பிடுகிறார். அதேநேரத்தில், மனிதர்கள் தங்களது சூழ
லின்  தாக்கத்தைக் கடந்து  எது உண்மை என்று அறியமுடியும் எனவும், சில
மனிதர்களுக்கு அதிர்ஷ்டவசமாக கடவுளுடைய இருப்பு(presence of God)
குறித்த அனுபவம் கிட்டுவதாகவும்  பலருக்கு அது கிட்டுவதில்லை'  எனவும்
ஸ்வின்பர்ன்  குறிப்பிடுகிறார். ஆனால், இக்கடைசிக்கூற்று பொருந்தவில்லை.
ஏனெனில், 'கடவுளின் இருப்பு' குறித்த அனுபவம் எனப் பெயர் பொறிக்கப்பட்ட
யாதொரு அனுபவமும் இல்லை! அதிலும்,அவ்வனுபவம் நம்பிக்கையை அடிப்

படையாகக்கொண்டதென்றால், அது இன்னும் சந்தேகத்திற்குரியதாகும்!

வேண்டுமானால், ஆழமான அக - அனுபவம், அதாவது, உணர்வியல் ரீதியாக,
மனித உணர்வைக் கடந்த  பேருணர்வுடன்  பொருந்திய அனுபவம்,  அல்லது
அக-மலர்ச்சி, உணர்வுநிலையில் ஏற்படும் ஒரு பெரும்மாற்றம் போன்ற அரிய
அனுபவங்களை, கடவுள்-அனுபவத்திற்கு இணையானவை எனக்குறிப்பிடலாம்!
இவ்வனுபவங்கள் அனைத்திற்கும் மையமான, அனைத்தின் சாரமான,ஒருமை
யும் முழுமையுமான ஒரு மெய்ம்மையைச் சுட்டுவனவாகும்! இத்தகைய ஒரு
மெய்ம்மையை நாம் "கடவுள்" என்று அழைப்பது பொருத்தமாகவே இருக்கும்!
ஆனால், இத்தகைய அனுபவத்தைப்பெற்ற ஒருவன், அதன்பிறகு, ஆத்திகனாக
வும், நாத்திகனாகவும், அல்லது இப்படியுமில்லாத,அப்படியுமில்லாத இரண்டும்
கெட்டானாகவும், அதாவது அறியொணாமைவாதியாகவும்(Agnostic)இருக்க
மாட்டான்!

நாத்திகர்களின்  அதிகரிப்புக்கு  இன்னொரு காரணம், விஞ்ஞானத்தின் தாக்கம்
என  ரிச்சர்ட் ஸ்வின்பர்ன் கூறுகிறார்.அதாவது நவீனகால விஞ்ஞானஅறிவின்
வளர்ச்சியையும்,அதன் வீச்சையும் கண்டுபிரமித்துப்போன பலர், கடவுளுக்கான
இடம்   இப்பிரபஞ்சத்தில் மிகச் சொற்பமே  என எண்ணும்படி தள்ளப்பட்டனர்.
இக்கூற்று ஓரளவிற்கு சரியே எனலாம்.

ஜெரார்ட் ஜெ.ஹ்யூஸ் (தத்துவத்துறைத் தலைவர்,லண்டன் பல்கலைக்கழகம்)
அவர்களது பார்வையில்,  நாத்திகம் ஏன் மனத்தைக் கவரக்கூடியதாகவுள்ளது
என்றால், 'பல,  அல்லது,  அனைத்து  மதங்களும் பொய்யான கருத்துகளைத்
தாங்கிப் பிடித்ததும், மூட  நம்பிக்கைகள்,  மற்றும்  நெறிதவறிய வழிகளைக்
கைக்கொண்டதும்,  பிரறது பார்வையில்  மோசமான  விஞ்ஞானம்,  மற்றும்
நியாயப்படுத்த முடியாத  நடத்தைகளின்   கலவையாகத் தெரிந்தது.  இதற்கு
மாறான வகையில், நாத்திகமானது,  மதத்தின் முதிர்ச்சியற்ற தன்மையிலிருந்
தும்,  மதக்கொள்கையின்  கொடுங்கோன்மைலிருந்தும் விடுதலை பெறுவதற்
கான ஒரு வழியாகத் தன்னைக்காட்டிக்கொண்டது' என்று குறிப்பிடுகிறார். இக்
கூற்று  ஒருவகையில், பொருத்தமானதாகவே தெரிகிறது. எனினும், நாத்திகம்,
ஆத்திகத்தைப் போலவே மட்டுப்பாடானது, முதிர்ச்சியற்றது, சிறுபிள்ளைத்தன
மானது என்பதில் ஐயமில்லை!

மேலும்,   மதத்தில்,  குருட்டுப் பிடிவாதக் கொள்கையாளர்கள் (religious
bigots) இருப்பதைப்போல,  அவர்களுக்குச் சமமாக நாத்திகர்களும்  மூடிய-
மனங்களுடனும்,  கொள்கை வெறியுடனும்  இருக்கிறார்கள்  என   ஹ்யூஸ்
அவர்கள் கூறுகிறார்!

ஏன்  பல  சிந்தனையாளர்கள் நாத்திகர்களாக இருக்கிறார்கள்? என்ற கேள்விக்
கான பதிலாக, சமயத்துறை ஆய்வு பேராசிரியர் ஹ்யூகோ மெய்னெல் (HUGO
MEYNELL) இவ்வாறு சொல்கிறார், 'ஆம், தீமை குறித்த பிரச்சினை, அதுதான்
மனிதர்கள்  ஏன் கடவுளை மறுக்கிறார்கள்  என்பதற்கான  சரியான  காரணம்'
என்கிறார். 'மேலும்,சிலர், வில்ஃப்ரட் செல்லார்ஸ் குறிப்பிட்டபடி,விஞ்ஞானமே
அனைத்திற்கான  அளவுகோல்  என  எண்ணத் தலைப்படுகிறார்கள்.  மேலும்,
பெரும்பாலான சமகால தத்துவச் சிந்தனையாளர்கள், கடவுள் இருக்கிறார் என்
பதற்கான  வாதங்கள் எதுவும்  பிழைபடாததாக இருக்கவில்லை என எண்ணு
கிறார்கள். சில தத்துவவாதிகள் கடவுள் இருக்கிறார் என்பது முற்றிலும் அர்த்த
மற்ற பேச்சு;  ஏனெனில், கடவுளை ஒருவர் பார்க்கவோ, கேட்கவோ, தொட்டு
உணரவோ முடியாது  என்கிறார்கள்  எனக்குறிப்பிடும்  ஹ்யூகோ மெய்னெல்,
ஆனால்,  நீங்கள்  எலக்ட்ரான்கள் அல்லது பாஸிட்ரான்கள் ஆகியவற்றையும்
தான்  தொட்டுணரவும்,  கேட்கவும், முகர்ந்தறியவும் முடியாது; ஏன், அப்படிப்
பார்த்தால்,   பிற மனிதர்களின்  எண்ணங்களையும்,  உணர்வுகளையும் தான்;
ஆயினும்   அவை  யாவும்  இருக்கவே  செய்கின்றன  என்கிறார்.  முடிவாக,
ஹ்யூகோ மெய்னெல்  சொல்வது,  தீமை குறித்த பிரச்ச்சினை ஒருபுறமிருக்க,
விஞ்ஞானவாதம் (scientism), மற்றும் நேர்க்காட்சிவாதம் (positivism)
ஆகியவை பலருக்கு நாத்திகம் ஏற்புடையதாகக்காட்டிற்று என்கிறார்.

ஆனால்,  மேற்சொல்லப்பட்ட  காரணங்களுக்காக பலர் நாத்திகத்தைத் தழுவு
கிறார்கள் எனில், அவர்களது அறிவுக்கூர்மை சந்தேகத்திற்குரியதே! ஏனெனில்,
'கடவுள்'  என்பது புலன்களின் வழியாக அறியப்படுகிற அம்சம் அல்ல! மாறாக,
ஒவ்வொருவரும் தம்உணர்வின் உச்சத்திற்குஉயர்ந்து நேரடியாக உணர்ந்தறிய
வேண்டிய அம்சமாகும்.  மேலும், "கடவுள்" என்பது  வாதப்பிரதிவாதங்களைக்
கொண்டு நிலைநாட்டப்படவேண்டிய விஷயம் எனக்கருதுவது பேரபத்தமாகும்!
"கடவுள்"என்பது உணர்வுள்ள மனிதஜீவிகளுக்கேயுரிய பிரத்யேகச் சவாலாகும்!
ஆம், எலிகளுக்கும், தவளைகளுக்கும் இத்தகைய சவால் ஏதும் இல்லை! சுய-
உணர்வுடைய மனிதஜீவியானவன் முழு-உணர்வை அடைந்தேயாகவேண்டும்
என்பது பரிணாம நியதியாகும்! ஏனெனில், "முழு-உணர்வு" தான் கடவுள்!

ஒரு  வட்டம் என்றிருந்தால்,  அதற்கு  நிச்சயம் ஒரு மையம் இருக்கும்! ஆக,
உலகம்  (பிரபஞ்சம்)  என்றிருந்தால், அதற்கு ஒரு மூலம், அதாவது, "கடவுள்"
நிச்சயம் இருந்தாகவேண்டும்! விருட்சம் என்றிருந்தால், நிச்சயம் வித்து இருந்
தாகவேண்டும்! வித்து இல்லையென்றாலும், அவ்விருட்சம் கனிகளாக மாறும்
வரை காத்திருக்கவேண்டும்;  அதாவது,  பிரபஞ்ச விருட்சத்தின்  பிஞ்சுகளாக
(அகந்தை எனும் அரை-உணர்வாக)  உள்ள  நாம் ஒவ்வொருவரும் உணர்வில்
முற்றிக்கனிந்து முழு-உணர்வாக மாறியாகவேண்டும்!

தத்துவச் சிந்தனையாளர் ஜோஸெப் செய்ஃபெர்ட்(Josef Seifert) அவர்கள்,
நாத்திகத்திற்கு பல வேர்கள் உள்ளனவென்று கூறுகிறார். 'அகம்பாவம்(pride)
கொண்ட மனிதர்கள் கடவுள் மீது சார்ந்திருப்பதை விரும்பவில்லை, அதோடு,
அவர்கள் தங்கள் ஆளுமையை இப்பிரபஞ்சத்தில் மிகமேன்மையான விஷயம்
எனப் பிரகடனம் செய்திட விரும்புகின்றனர்; அதாவது, தங்களைக் கட்டுப்படுத்
துகிற  எவ்வொரு அறநெறிமுறையும், உயர்-நீதிபதியும் இருக்கக்கூடாது; தாம்
தம்  மனம்போன போக்கில்  வாழவேண்டும் என விரும்புகிறார்கள்', என்பதாக
செய்ஃபெர்ட் கூறுகிறார். மேலும், பொருள்முதல்வாதம், நியதிவாதம் (deter-
minism) போன்ற  பல அறிவுஜீவியப் பிழைகளும் ஒருவரை நாத்திகத்திற்கு
இட்டுச்செல்வதாயுள்ளன எனவும் கூறுகிறார்.

ஆம், 'சுதந்திரம்' என்பதை தலைகீழாகப்புரிந்து கொண்டவர்கள் இந்நாத்திகர்கள்!
அவர்கள் விரும்புவது எலிகளுக்கான சுதந்திரமேயாகும்! ஆகவேதான்,அவர்கள்
'கடவுள் இல்லை!', 'அறநெறிமுறைகள் வேண்டாம்!', 'மனிதனுக்கு சுதந்திர சித்
தம் (Free-will)என்பதில்லை!' உணர்வு (Consciousness) என்பதில்லை!',
'பரிணாமம் குறிக்கோளற்றது!', 'மனிதவாழ்க்கை இலக்கற்றது!', 'உலகம் என்பது
இயக்கத்திலுள்ள பருப்பொருளே!', 'உயிர்-பிழைத்திருத்தலே மொத்தவாழ்க்கை
யும்!', 'மரபணுக்களை பிரதியெடுப்பதற்காக இனப்பெருக்கம் செய்தலே இலக்கு!'
என்றெல்லாம் தத்துவம் பேசிவருகிறார்கள்; எலிகளுக்கு  சிந்திக்கும்  திறனும்,
பேசும்திறனும் இருந்தால் அவற்றின் தத்துவமும் இவ்வாறுதான் இருக்கும்!

இதுவரை  மேலே குறிப்பிடப்பட்ட தத்துவச்சிந்தனையாளர்கள் வெளிப்படுத்தி
யவை யாவும் நாத்திகத்தின் பக்க வேர்கள் அல்லது சல்லி வேர்கள் மட்டுமே
யாகும்! ஆம், நாத்திகத்தின் ஆணிவேரை, வாழ்க்கையை அணுகும் முறையி
லிருந்தும், வாழும் முறையிலிருந்தும்தான் அறியமுடியும்! ஏனெனில்,கடவுள்
என்பது அறிவுஜீவியப் பிரச்சினை(Intellectual Problem)அல்ல! 'கடவுள்
இருக்கிறாரா?' 'இல்லையா?' என்கிற கோணத்தில் கடவுள் எனும் மெய்ம்மை
யை அணுகவியலாது! மாறாக, வாழ்க்கை இருக்கிறது! வாழ்க்கையை வாழ்வ
தற்காக (உணர்வு கொள்வதற்காக) மனிதன் இருக்கிறான்! வாழ்க்கையை ஒரு
வர் முழுமையாக உணர்வு கொள்வதன் வழியாக மட்டுமே உண்மை என்பது
உய்த்துணரப்படமுடியும்!

ஆம்,  "வாழ்க்கை"  என்பது தயார்- நிலையில் அப்படியே  எடுத்துச் சாப்பிடும்
வகையில் கிடைக்கும்  ஒரு உணவுப் பண்டம் போன்றதல்ல;  மாறாக, நன்கு
சமைத்துச்  சாப்பிடுவதற்காக  அளிக்கப்பட்டுள்ள கச்சாப்பொருட்களின் பொதி
(பொட்டலம்) போன்றதாகும்!  அதாவது,   வாழ்க்கையைப் பற்றிய   எவ்விதக்
கேள்வியும், கேள்வியைத்தொடரும் நெடிய சிந்தனையும்,ஆழமான விசாரமும்
இல்லாமல் ஒருவர் வாழ்க்கையை வாழமுடியாது! நாம் எலிகளாக இருந்தால்
மட்டுமே கேள்வி இல்லாமல் வாழமுடியும்! அதே நேரத்தில், நம் அனைவரிட
மும் கேள்விகள் இல்லாமலுமில்லை!  ஆனால்,  அக்கேள்விகள் அனைத்தும்
வாழ்க்கையின் மேற்புறத்துத் தேவைகளைக் குறித்தவை மட்டுமே! ஆக, நாத்
திகர்கள், ஆத்திகர்கள், மற்றும், இப்படியுமில்லாத, அப்படியுமில்லாத அறியொ
ணாவாதிகள் என அனைவரும் வாழ்வின் மேற்புறத்துப்பொருட்களைத் தேடிப்
பெறுவதையே 'வாழ்க்கை' என வாழ்ந்து செல்கின்றனர்! வெகு அரிதாக, கோடி
யில்  ஓரிருவர் மட்டுமே வாழ்க்கையின் உட்பொருளை முதலில் தேடுகிறவர்
களாக   இருக்கிறார்கள்!   வாழ்வின் அர்த்தத்தைத் தேடும் இவர்கள் மட்டுமே
அர்த்தமுள்ள   மனித-வாழ்க்கையை  வாழ்பவர்கள்!  ஏனெனில், அர்த்தம்தான்
'கடவுள்'!

இக்கட்டுரை நாத்திகத்தின் ஆணிவேரைப் பற்றியது என்பதால், இது  நாத்திகத்
தையும், நாத்திகர்களையும்  குறிவைத்ததல்ல! ஏனெனில், வாழ்க்கையை ஆழ
மாக  வாழத்தவறிய அனைவருமே  நாத்திகர்களே ஆவர்! வாழ்க்கையின் மிக
அசலான  குறிக்கோள்,  மற்றும் இலக்கை அறியாது வாழ்ந்துசெல்லும் உணர்
வற்ற தன்மையே நாத்திகத்தின் ஆணிவேர் ஆகும்!


மா.கணேசன் / நெய்வேலி / 07-05-2017
----------------------------------------------------------------------------

Thursday, 4 May 2017

இறுதி அற்புதம்!

























அற்புதம் என்று இங்கு குறிப்பிடப்படுபவை உண்மையிலேயே அற்புதமானவை;
காற்றிலிருந்து  கத்தரிக்காய்  வரவழைப்பது,  தங்க மோதிரம்  வரவழைப்பது
போன்ற மாயமந்திர தந்திர ஜாலவித்தைகளையோ, வேறு அசாதாரண நிகழ்வு
களையோ  அற்புதங்கள் என்று  இங்கு குறிப்பிடப்படவில்லை!  ஒரு மனிதன்
அப்படியே எம்பி மேலெழுந்து விண்ணில் பறக்கலாம்; அது அசாதாரணமானது,
அல்லது  வழக்கத்துக்கு மாறானது  என்று காணமுடியும்;  ஆனால், எவ்வகை
யிலும்  அது  இறுதியானதல்ல;  அதாவது,  அது   இறுதியான  பயனையோ,
நன்மையையோ அளிக்கவல்லதல்ல! சாதாரணமானவை,அசாதாரணமானவை
என்பவற்றுக்கிடையே வித்தியாசம் இருக்கலாம்.  அவ்வாறே வழக்கமானவை,
வழக்கத்துக்கு மாறானவை என்பவையும்.ஆனால்,இவையெதுவும் இறுதியான
நிஜங்கள் அல்ல!

அற்புதம் என்பது பொருட்களிலோ,நிகழ்வுகளிலோ தங்கியிருக்கவில்லை! அது
காண்பவரின்  உணர்வின் தன்மையைப் பொறுத்ததாகும்!  அற்புதம்  குறித்துச்
சொல்லும்போது,  ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்  இவ்வாறு சொல்கிறார்:

   "வாழ்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன : எதுவுமே  அற்புதம் இல்லை
    என்று நீங்கள் வாழலாம்; அல்லது  ஒவ்வொன்றுமே ஒரு அற்புதம்தான்
    என்று நீங்கள் வாழலாம்."       (ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்)

ஆக,  அற்புதம் என்பது புறத்தே எங்கும் இல்லை; அற்புதங்கள், அதிசயங்கள்
என்றேனும் நிகழும் என்று காத்திருப்பதும் வீணே! அதாவது அற்புதமாக மாற
வேண்டியது ஒவ்வொரு மனிதனும்தான்! புத்தர் சொல்கிறார்,

   "நம்மால் ஒரு ஒற்றை மலரின் அற்புதத்தை தெளிவாகக் காண
   முடிந்தால், நம்முடைய ஒட்டுமொத்த வாழ்க்கையும் மாறிவிடும்." (புத்தர்)
                                           
நாம் அன்றாடம் பலவகைப்பட்ட மலர்களைப் பார்க்கத்தான் செய்கிறோம்,
அழகிய, பலவண்ணங்களில், வித்தியாசமான பல வடிவங்களில் உள்ள மலர்
களைப் பார்க்கிறோம்! ஆனால், நாமோ, நமது வாழ்க்கையோ சிறிதும் மாறிய
தாகத் தெரியவில்லை!

முக்கியமான  விஷயம்  என்னவென்றால்,  சிட்டுக்குருவிகள்,  சிறு தும்பிகள்,
பறக்கின்றன. ஆனால்,அதை ஏன் மனிதர்கள் அதிசயமாக, அற்புதமாகக்கொண்
டாடுவதில்லை!  ஏனெனில், பறப்பதென்பது அவைகளுக்கு இயல்பானது என்ப
தால் பறவைகள் பறப்பதை அற்புதமாகக் காண்பதில்லை.

ஆக, விஷயம் இதுதான், மனிதனுக்குப் பறக்கவேண்டிய அவசியம் இருப்பின்
அவனுக்கும் சிறகுகள் தோன்றியிருக்கும்! ஆனால், மனிதனிடமுள்ள விசேடப்
பண்பு சிந்தித்தல்; அதுவே அவனது இயல்பான பண்பு, மனிதனைத்தவிர வேறு
ஜீவிகள்  எதற்கும்  சிந்திக்கும் திறன்  கிடையாது!  ஆனால், அதே நேரத்தில்
மனிதன்  மட்டும்  ஏனோ   தன்   இயல்பான  தன்மையில் இருப்பதில்லை,
அதாவது பெரும்பாலான மனிதர்கள் சிந்திப்பதேயில்லை!

பொதுவாக, மனிதர்கள் அற்புதங்கள் என்று குறிப்பிடுபவை கீழானவையாகும்!
அவை முதன்மையான அற்புதங்களை இனம்காண இயலாதவர்களால், இனம்
காணத் தவறியவர்களால் சிலாகிக்கப்படும் விஷயங்களாகும்!

முதன்மையான அற்புதங்களில் முதலாவது, உலகம்,இப்பிரபஞ்சம் இருக்கிறது
என்பதுதான்!  இரண்டாவது  அற்புதம்  உயிர்-ஜீவிகள்!  மூன்றாவது  அற்புதம்
மனிதன் தான்! ஆம்,"நீங்கள் இருக்கிறீர்கள்!" என்பதை ஒரு அற்புதமாக நீங்கள்

உணரவில்லையெனில் மிகவும் முக்கியமான ஒன்றை நீங்கள் இழந்துவிட்டீர்
என்றுதான் சொல்லவேண்டும்! வேறு எதைக்கொண்டும் இன்னும்  எல்லாவற்
றையும் கொண்டும் ஈடுசெய்ய முடியாத அரிய பொக்கிஷத்தை உமது கவனக்
குறைவினால் கண்டும் காணாமலும் கடந்து சென்று விட்டீர்!

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, "இப்பிரபஞ்சம் இருக்கிறது என்பது பெரிதும் சாத்
தியமற்றது!" எனப்படுகிறது. தத்துவவாதிகள், " அற்புதங்கள் சாத்தியமற்றவை"
என்று சொல்கிறார்கள், ஏனெனில், அவை இயற்கை விதிகளுக்கு மாறானவை,
இயற்கை விதிகளை மீறியவை; மேலும், இயற்கைவிதிகள் மாறாதவை எனப்
படுவதால்  அற்புதங்கள்  சாத்தியமில்லை எனப்படுகிறது!  இயற்கை விதிகள்
மாறாதவை எனும் வாதம், 1670 களில், டச்சு நாட்டு  தத்துவஞானி பெனடிக்ட்
ஸ்பினோசா (Benedict Spinoza) அவர்களால், பிரபலப்படுத்தப் பட்டதாகச்
சொல்லப்படுகிறது.

அற்புதங்களுக்கு எதிரான ஸ்பினோசாவின் வாதம் இவ்வாறு செல்கிறது:

1. அற்புதங்கள் எனப்படுபவை இயற்கை விதிகளின் மீறுதல்கள் ஆகும்.

2. இயற்கை விதிகள் மாறாதவை (Immutable).
 
3. இயற்கை விதிகளை மீறுவது என்பது இயலாது.

4. ஆகவே, அற்புதங்கள் எனப்படுபவை சாத்தியமற்றவை.

உண்மைதான்,  அதாவது,  இயற்கை விதிகள்  மாறாதவை எனும் பட்சத்தில்,
அற்புதங்கள் சாத்தியமற்றவை தான்!  ஆனால், இயற்கைவிதிகள்  எங்கிருந்து
வந்தன? அதாவது, இயற்கை, உலகம்,பிரபஞ்சம் என்பது எங்கிருந்து எவ்வாறு
எந்த நோக்கத்திற்காகத் தோன்றியது?  இயற்கை விதிகள் என்பவை இயற்கை
அல்லது  பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கு  முந்தையதா?  பிந்தையதா? அல்லது
பிரபஞ்சத்துடன் தோன்றியவையா?

நாம் வாழும் இப்பிரபஞ்சமானது, "பெரு-வெடிப்பு"(Big-Bang)எனும் நிகழ்வில்,
காலம் = பூச்சியம், வெளி = பூச்சியம், எனும் "தனி நிலைப்பாட்டுப்புள்ளி" யில்
(Singularity) தோன்றியதாக விஞ்ஞானிகள்  கூறுகிறார்கள். ஆனால், தற்
போது இப்பிரபஞ்சத்தில் செல்லுபடியாகும் 'மாறாதவை' என்று சொல்லப்படும்
பௌதீக விதிகள் எதுவும் பிரபஞ்சத்தின் பிறப்புக்கணத்தில், அந்த "தனிநிலைப்
பாட்டுப்புள்ளி" யில் செயல்படுவதில்லை என்றும்  அதே விஞ்ஞானிகள் தான்
கூறுகிறார்கள்! அதாவது, இயற்கைவிதிகள் எனப்படுபவை இயற்கை, அல்லது
பிரபஞ்சத்திற்கு முந்தையவையல்ல;  மாறாக, அவை இயற்கையுடன் சேர்ந்து
உருவானவையே.  ஆம், இயற்கையை  எந்த இயற்கை விதியும் உருவாக்கிட
வில்லை என்பதுதான் உண்மை! அப்படியானால்,இயற்கை,பிரபஞ்சம் எவ்வாறு
தோன்றியது? எந்த விதி இப்பிரபஞ்சத்தைத் தோற்றுவித்தது?

ஆம், இயற்கை, ( உலகம், பிரபஞ்சம் என எப்படி அதை அழைத்தாலும் அது )
இயற்கையாகத் தோன்றியதல்ல! மேலும், ஒன்றுமில்லாததிலிருந்தும் உலகம்
தோன்றிடவில்லை! ஆனால்,உலகம்,இயற்கை, பிரபஞ்சம் என்பது இருக்கிறது;
எவ்வாறோ அது சாத்தியமாகியுள்ளது!  அதாவது,  இயற்கைவிதி எதுவும் இப்
பிரபஞ்சத்தை, உலகைப் படைக்கவில்லையென்றாலும், நிச்சயம் வேறு ஏதோ
வொரு 'விதி' உலகைக் கொண்டு வந்திருக்கவேண்டும்!   அந்த    உயர்-விதி
"கடவுள்" தான்  என்று  அவசரப்பட்டு  முடிவிற்கு வந்திடுவது முறையாகாது!
ஏனெனில்,  'கடவுள்'  என்பது வெறும் ஒருசொல் மட்டுமே. மாறாக, அவ்விதி
எது,  அது எத்தகைய மெய்ம்மை  என்பது கண்டுபிடிக்கப் பட்டாக வேண்டும்!
அதே வேளையில், எந்த விதி,அல்லது மெய்ம்மை இப்பிரபஞ்சத்தைப்  படைத்
திருந்தாலும்,  இப்பிரபஞ்சம் அற்புதமானது என்பதில் யாதொரு மாற்றமும் சந்
தேகமும் ஏற்படமுடியாது! மாறாக, இப்பிரபஞ்சத்திற்குக் காரணமான அவ்விதி,
அம்மெய்ம்மை நிச்சயம் அதியற்புதமானதாய்த்தான் இருக்கமுடியும்!

'மனிதன்' எனும் அற்புதத்தைப் பற்றிச்சொல்லவேண்டுமானால், ஸ்காட்லாந்து
தத்துவவாதி  தாமஸ் கார்லைல்   சொல்லியது போல,  "மனிதன்  என்பவன்
அற்புதங்களிலெல்லாம் அற்புதம் ஆவான்!" ஆம், அனைத்து அற்புதங்களுக்கும்
உயிர் தரும் அற்புதம் மனிதனே!  மனிதன் இல்லையேல்,  இப்பிரபஞ்சத்திற்கு
யாதொரு அர்த்தமும் இருக்காது! ஏனெனில்,பருப்பொருளாலான இப்பிரபஞ்சம்
தன்னைத்தானே அறியவோ,உணரவோ இயலாது! ஆகவேதான் பிரபஞ்சமானது
தன்னையறியும் பொருட்டு  தன்னிலிருந்து  விலகி நின்று  தன்னைக் காணும்
வகையில்,மனிதனாக,மனிதனுள் உணர்வாகப் பரிணமித்தது! மனிதன் வந்தான்,
பிரபஞ்சத்தின் பிரும்மாண்டத்தைக்கண்டு பிரமித்து,அதன் புதிரை விடுவிக்கும்
பொருட்டு  நூற்றாண்டுகளாக அதை ஆராய்ந்து கொண்டிருக்கிறான்; இன்னும்
அது, தன் ரகசியத்தை  வெளிப்படுத்திடவில்லை! மனிதன் இன்னும் எத்தனை
நூற்றாண்டுகள் பிரபஞ்சத்தைத்  துருவித்துருவி ஆராய்ந்தாலும்,அதன் புதிரை
விடுவிக்கவியலாது! காரணம் பிரபஞ்சம் தன்னையறியும் பொருட்டு மனிதனா
கப்பரிணமித்தபோது, பிரபஞ்சத்தின் புதிரானது மனிதனிடம் இடம்மாறிவிட்டது!
ஆம், பிரபஞ்சத்தின் புதிர் மனிதனின் பிரக்ஞை (உணர்வு) யினுள் தான் உறை
கின்றது! மனிதனே அனைத்துப் புதிர்களின் உறைவிடமாவான்!

ஆனால், தனக்குப் புறத்தேயுள்ள பிரபஞ்சத்தையும்,அதிலுள்ள அனைத்தையும்
ஆராய்ந்திடும்  மனிதன் தன்னையறியாத   குருட்டுப் புள்ளியாக இருக்கிறான்.
அனைத்தையும் அறியும் மனிதன் தனக்குத்தானே அந்நியனாக விளங்குகிறான்!
மனிதன் தன்னை அறியாமல், பிரபஞ்சத்தை அறிந்துகொள்ளமுடியாது! மேலும்,
அவன் தன்னிலிருந்து விலகி நின்று தன்னைக் காணாதவரை  தன்னை அவன்
அறிந்துகொள்ள  முடியாது!  தன்னிலிருந்து விலகி நிற்றல் என்பது,  தன்னைக்
கடந்து வளர்வதைக் குறிக்கிறது!

ஆம், மனிதன் தன்னை ஒரு அற்புதமாகக்  காண்பதற்குரிய விழிப்பு நிலைக்கு
வர வேண்டும்!  அநேகர்  தங்களது அற்புதத்திற்கு விழிக்காமலேயே வாழ்ந்து
மறைந்து போகின்றனர்!

மனிதன் மட்டும் தன்னைப்பற்றிய உண்மையை அறிய முற்படுவானேயானால்,
உண்மையில், முதல் அற்புதமும், இறுதி அற்புதமும் மனிதனேயாவான்! ஆம்,
"தான் இருக்கிறேன்!"  என்பதை உணர்வது முதல் அற்புதம்! தன்னை முழுமை
யாக  உணர்வு கொள்வது, (தன்னில் முழுமையாகக் கனிவது) இறுதி அற்புதம்!

மா.கணேசன்/ நெய்வேலி/ 01-05-2017
----------------------------------------------------------------------------

நடுவிலே நடனமாடும் அர்த்தம்!

      பிரபஞ்சத்தின் தொடக்கம் ஒரு புரியாத புதிர்,  அதன் முடிவும் ஒரு புரியாத புதிரே!  இரண்டுக்கும் நடுவே நடனமாடுகிறது அர்த்தம்! ✨            ...