Saturday, 4 March 2017

சொற்களின் அசலான அர்த்தத்தை அகழ்ந்தெடுத்தல்!





மானுட  வாழ்க்கையானது   தவிர்க்கவியலாத  வகையில்,   சொற்களுடனும்,
மொழியுடனும்  பின்னிப் பிணைக்கப்பட்டு   சிக்கித்  தவித்துக் கொண்டிருக்
கிறது!    இச்சிக்கலிலிருந்து   வாழ்க்கையை  மீட்டெடுப்பது   யார்,  எவ்வாறு?
என்பதே  நம்முன்  உள்ள,   நம்மில்   பலரும்   இதுகாறும் உணராத மாபெரும்
பிரச்சினையாகும்!

இக்கட்டுரையில்   எழுப்பப்படும்  பிரச்சினை  மற்றும்  அதன்  தீர்வு  குறித்து,
பொதுவானதொரு  கருத்தொற்றுமை  எட்டப்படவேண்டும்  என்ற எந்த எதிர்
பார்ப்பையும்,    விருப்பத்தையும்  நான்  கொண்டிருக்கவில்லை!  ஏனெனில்,
அதற்கான சாத்தியப்பாடு மிக மிக மிகக் குறைவே!

நாம்  நம்மைச் சுற்றியுள்ள  உலகிலுள்ள ஒவ்வொரு பொருளுக்கும், அனைத்
திற்கும் பெயர் சூட்டியுள்ளோம் அதாவது ஒவ்வொன்றுக்கும்  ஒரு சொல்லை
ஒட்டுச்சீட்டுபோல ஒட்டியுள்ளோம்! இது தவிர்க்கவியலாத ஒன்றுதான்,அதே
நேரத்தில், எது தவிர்க்கப்படவேண்டியது என்பதை பிறகு பார்ப்போம்!

எவ்வொரு  வளர்ச்சியடைந்த  மொழிக்கும்  ஒரு  அகராதி  உண்டு!   ஆனால்,
பிரச்சினை என்னவென்றால், நாம் அகராதியை மட்டும் வைத்துக்கொண்டு
வாழ்ந்திட முடியாது!   அதே நேரத்தில், அகராதியில்லாமலும் வாழ முடியாது!

ஆம்,  அகராதியின்  அவசியத்தை  மறுக்க முடியாது. அகராதியானது சொற்
களுக்கு    குறிப்பான,    ஆனால்,  மிகக்   குறுகிய  வரையறையில்  அமைந்த
அடிப்படையான  அர்த்தத்தை  மட்டுமே  தாங்கியுள்ளது.    உதாரணத்திற்கு,
'வாழ்க்கை'    என்ற   சொல்லை  எடுத்துக் கொள்வோம்.   "வாழ்க்கை " என்ற
சொல்லுக்கு  (பால்ஸ் -தமிழ் மின்)  அகராதி   (அகரவரிசைச்  சொற்பொருள்
நூல்)  தரும் பொருள் 'உயிர்வாழ்தல்' என்பது மட்டுமே.

அகில உலகிலும்,மனிதர்கள், 'வாழ்க்கை' என்ற பெயரில்,உயிர்வாழ்தலைத்
தான்   நடத்திக்  கொண்டுவருகின்றனர்!  ஆனால்,   'உயிர்வாழ்தல்'   என்பது
'வாழ்க்கை'  என்ற  சொல்லுக்குரிய ஒரு அடிப்படை அர்த்தம் மட்டுமே தவிர,
அதுவே    இறுதியானதும்,     முழுமையானதுமான    அர்த்தம்  அல்ல!       ஆம்,
உண்மையான   மானுட வாழ்க்கை   என்பது   உயிர்-வாழ்தலையும் கடந்தது
ஆகும்!    அது    வெறுமனே    உயிர்-வாழ்தலைக் குறிப்பதில்லை!    இவ்வாறு
சொல்லும் போது  'வாழ்க்கை'  என்ற சொல்லுக்கு என்னுடைய  அகராதியின்
படி நான் ஒருவகை அர்த்தத்தை வழங்குகிறேனா?

உண்மையில்,   ஒவ்வொரு   உண்மையான    ஆன்மீக ஞானியும்,    ஒரு  புதிய
அகராதியாகத்தான் விளங்குகிறார் என்றுதான் சொல்லவேண்டும்!அதாவது
அசலான மானுட வாழ்க்கை என்பது வெறும் உயிர்-வாழ்தலைக் கடந்ததாக
இல்லையெனில், இயேசு இவ்வாறு கூறிச்சென்றிருக்கமாட்டார் :

     "ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம்,
      என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள்.
      இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்.....
      முதலாவது  தேவனுடைய ராஜ்யத்தையும், அவரது நீதியையும்
      தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக்
      கொடுக்கப்படும்."     - (மத்தேயு 6 : 31-33)

அதாவது,   பிரச்சினை  இது தான்;    வாழ்க்கையின்   அசலான  அர்த்தத்தை
அறியாத, அறிய முயற்சிக்காத மனிதர்கள் அவரவர்க்கு எட்டிய அளவிலான
அர்த்தத்தை வாழ்க்கைக்கு வழங்கிக்கொண்டு  வாழ்ந்து செல்கின்றனர்!

அவரவர்  புரிதலுக்கு  ஏற்ப,   சொற்களுக்கு  நாம் தோராயமான, குத்துமதிப்
பான     அர்த்தத்தை   இட்டுப்  பேசிக் கொண்டும்,   உரையாடிக் கொண்டும்,
ஒருவரை  ஒருவர்  குழப்பிக் கொண்டும்,  ஒருவருடன்  ஒருவர்  முரண்பட்டுக்
கொண்டும்,  விவாதம் புரிந்துகொண்டும்,  சச்சரவு செய்துகொண்டும்,  வாழ்
வதாகச் சொல்லிக் கொண்டும் இருக்கிறோம்!

அகராதியைப்  பொறுத்தவரை,  சில  சொற்களுக்கு, உதாரணத்திற்கு, மரம்,
செடி,   கொடி,   பூமி,  வானம்,  சூரியன்,  சந்திரன்,  வீடு   போன்றவைகளுக்கு
குறிப்பான, முடிவான அர்த்தத்தை கொண்டிருக்கலாம். ஆனால், பிரபஞ்சம்,
வாழ்க்கை,  மனம்,  மனிதன்,  உணர்வு, கடவுள், மெய்ம்மை  போன்ற சொற்க
ளுக்கு, துல்லியமான, இறுதியான அர்த்தத்தை அகராதியில் காணமுடியாது!
இது  அகராதியின் தவறல்ல!  மாறாக,  மனிதனின் தவறே ஆகும். ஏனெனில்,
அகராதியை உருவாக்குபவனே மனிதன் தானே!

கிட்டத்தட்ட,    நமது   புலன்களுக்கும்,    நுட்பமிகு  கருவிகளுக்கும் புலப்பட்ட
அனைத்து  உலகப் பொருட்களுக்கும்,  நிகழ்வுகளுக்கும்,  விஷயங்களுக்கும்
நாம் பெயரிட்டுள்ளோம். அதாவது,  'மரம்'  எனும் சொல்  ஒரு குறிப்பிட்ட  வடி
வத்தைக்கொண்ட தாவரத்தைக் குறிக்கும் ஒரு "குறிப்பான்" ஆகும். ஆனால்,
அவ்வனைத்து  குறிப்பான்கள், அதாவது  சொற்களுக்குமான முழுமையான,
முடிவான அர்த்தத்தை நாம் இன்னும் கண்டு பிடிக்கவில்லை!

ஆனால்,  நாம்  அர்த்தம்   கண்டுபிடிக்கத்  தவறியது  வெறும்  சொற்களுக்கு
மட்டுமல்ல!  ஏனெனில்,  'வாழ்க்கை'  என்பது  வெறும் சொல் அல்ல! அது ஒரு
நிகழ்வுமுறையும்,  வழிமுறையும்  ஆகும்.  அது  வெறும்  தானியங்கி  நிகழ்வு
முறையல்ல; ஒரு வழிமுறை ஆகும்; அதாவது, வழிமுறை என்பதன் அர்த்தம்,
ஒரு  குறிப்பிட்ட  இலக்கை  எட்டுவதற்கான  வழியாகும்!   மிகவும்  ஆழமான
தொருவகையில்,அனைத்துக்கும் அர்த்தம் கண்டுபிடிக்கும் (அர்த்தம் கற்பிப்
பது அல்ல) செயல்முறையே  வாழ்க்கையும், இறுதி அர்த்தத்தைக் கண்டடை
வதே வாழ்க்கையின் இலக்கும் ஆகும்!

ஆக,  அர்த்தம்  கண்டுபிடிக்கத் தவறிய  இந்நிலையைக் கொண்டு நம்மைக்
காணும்போது  ஒரு  இனம்  என்கிற வகையில்  நாம் எவ்வளவு பின்தங்கியுள்
ளோம், அதாவது, இன்னும் ஆதிவாசி நிலையிலேயே உள்ளோம் என்பதைப்
புரிந்து  கொள்ளலாம்!   உயிர்-பிழைத்தலின்   நடைமுறைத்    தேவைகளின்
நிமித்தம் நாம் விஞ்ஞானத் தொழில் நுட்பத்தில் முன்னேறியுள்ளோம் என்ற
போதிலும் அகரீதியாக நாம் இன்னும் கற்காலத்திலேயே தான் உள்ளோம்!

மனித இனத்தின் மொழித்திறன் பற்றிப்பேசுகையில், மனித  இனத்திற்கும்,
விலங்கினத்திற்கும்  உள்ள  பெரியதொரு  வித்தியாசமாகக்கூறப்படுகிறது!
ஆனால்,   நம்முடைய  மொழிபேசும்  திறன்   நம்மை  அதிக  மனிதத்தன்மை
யுடையவர்களாக ஒன்றும் மாற்றிவிடவில்லை!"வாழ்க்கை" பற்றிய புரிதலில்
நாம்   கரப்பான்பூச்சிகளைவிட   அதிகமாக    முன்னேறி விடவில்லை!   ஒரே
வித்தியாசம், விலங்குகள் பேசுவதில்லை! நாம் பேசும் விலங்குகளாக  இருக்
கிறோம், அவ்வளவுதான்!

மொழியின்  உதவியின்றி  நம்மால்,  தகவல்,  மற்றும்   கருத்துப் பரிமாற்றம்
செய்யவியலாது;    மொழியின்றி  நவீன  வாழ்க்கை   சாத்தியமாயிருக்காது
என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஆனால், மொழி- வழிக் கருத்துப்பரிமாற்
றம்  மனித குலத்தை  ஒன்றிணைக்கவில்லை;  மாறாக, பல்வேறுபட்ட கருத்
துக்களும்,  சித்தாந்தங்களும்,  மதக்கொள்கைகளும், இனவாதக்கோட்பாடு
களும்  மனிதகுலத்தைத்  துண்டாடியதோடு,  இரத்தக் களறிகளை உருவாக்
கியதுதான் மிச்சம்!

உண்மையான  பிரச்சினை மொழியிலோ, அல்லது சொற்களிலோ இல்லை!
தனிமனிதனின்  உணர்விலும்,  புரிந்துகொள்ளும்  திறனிலும் தான் அடங்கி
யுள்ளது!மொழி என்பது ஒரு கருவி மட்டுமே!மோசமான,மந்தபுத்தி கொண்ட
'கலக மானிடப்பூச்சி'களிடம் சிக்கிய ஒரு கருவி!

மனிதசமூகம் தமது தேவைக்கு  ஏற்பவே எவ்வொரு கருவியையும், சாதனத்
தையும்   உருவாக்கிக் கொள்கிறது!   மொழி  என்பது  அர்த்தத்தை  வேண்டி
நிற்கும்  சொற்களைக்  கொண்டதொரு கருவியாகும்! மொழி என்பது அதன்
ஆதித்  தொடக்க  நிலையில்  அன்றாட  அடிப்படை உயிர்-வாழ்தலின் கருவி
யாகவே  உருவானது;    'உயிர்'  வாழ்தலைக்  கடந்த,  'உயர்'   வாழ்தலுக்கான
வாகனமாக  அது வளர்த்தெடுக்கப்படவில்லை!  ஏனெனில்,  வாழ்வின் அர்த்
தத்தை  அறிய   வேண்டியதன்  உன்னதத் தேவையை   உணரும்   அளவிற்கு
இன்னும் மனிதர்கள்  தங்கள் உணர்வில் வளரவில்லை!

எல்லா  மொழிகளும்,   அர்த்தத்தைச்  சுட்டுவதற்கான  கருவிகளே,   ஆகவே,
அர்த்தத்தை  எந்த மொழியும் சொந்தம் கொண்டாடிட முடியாது!  ஏனெனில்,
அர்த்தம் மொழியைக் கடந்தது!மொழி என்பது சொற்கள் எனும் அறைகளில்
அர்த்தத்தை  பத்திரமாக  தம்முள் வைத்துக் காக்கும்  ஒரு பெட்டகம்  அல்ல!
அர்த்தம்,  உண்மை  ஆகியவை  பரிமாறிக் கொள்ளக் கூடியவையல்ல!  ஆக,
எவ்வொரு   மொழிக்கும்   'பரிமாற்ற - வரம்பு' உள்ளது!   அன்றாட  அறிவைக்
கடந்த,   உயர்-ஞானத்தை  எவ்வொரு மொழியின் சொற்களைக்கொண்டும்
பரிமாற்றம் செய்திடவியலாது!

ஒரு மொழியில் எழுதப்படிக்கக் கற்றுக்கொண்ட எவரும்  எவ்வொரு நூலை
யும்  அல்லது  பிரதியையும்  வாசிக்க முடியும்;  ஆனால்,  வாசிக்கத்  தெரிந்த
எல்லோராலும் ஒரு நூல், அல்லது பிரதி சுட்டும்  அர்த்தத்தை முழுமையாகப்  புரிந்துகொள்ளவியலாது!  அதற்கு  உயர்-உணர்வின்  உதவி  அவசியமாகும்!
அதாவது  எவ்வாறு  'மரம்'  என்கிற சொல் ஒரு குறிப்பிட்ட பொருளைச் சுட்டு
கிறதோ, அவ்வாறே, எவ்வொரு  நூல் அல்லது பிரதியும் அர்த்தத்தை சுட்டுகி
றதே தவிர,  அர்த்தத்தை  அவை  தம்முள்  கொண்டிருப்பதில்லை! சுட்டுவது
மட்டும்  தான் மொழியின்,  சொற்களின் பணியாகும்!  அர்த்தத்தை உள்ளீடு
செய்து  புரிந்து  கொள்வது  ஒவ்வொரு  மனிதனின் கடமையாகும்!  அர்த்தம்
"உயர்-உணர்வை" முன்-தேவையாகக் கோருகிறது!

மொழியை  அன்றாடத்தளத்தில் கையாளுவதற்கு அன்றாட உணர்வு போது
மானது!மேலும்,அன்றாட விஷயங்களைப் பரிமாற்றம் செய்துகொள்வதற்கு,
மிகச் சிக்கலான,  கடினமான சொற்களும்  தேவைப்படுவதில்லை!  "நேற்று
நீங்கள் ஏன் வரவில்லை?"  எனும்   வாக்கியத்தின்  அர்த்தம் நேரிடையானது.
இவ்வாக்கியத்திலுள்ள  சொற்களின்  அர்த்தம்   மேற்புறத்திலேயே  அமைந்
துள்ளது.  இவ்வாக்கியத்தைப் புரிந்து கொள்ளவும், அதற்குப் பதிலளிக்கவும்
பெரிதாகச் சிந்திக்கத் தேவையில்லை!  ஆனால்,   "ஏன் இங்கே ஏதுமில்லாது
இருப்பதற்குப்பதிலாக ஏதோவொன்று இருக்கிறது?" எனும் இந்த வாக்கியம்
நேர்முறையானதல்ல! இதைப்புரிந்து கொள்ளவும், இதற்குப் பதிலளிக்கவும்
ஆழமாகச் சிந்திக்கவேண்டியது அவசியமாகிறது!

இரு மனிதர்களுக்கிடையே முரண்பாடும், சச்சரவும் ஏற்படுவதற்குக் காரண
மாக அமைவது மொழியோ,அல்லது சொற்களோ அல்ல.மாறாக,ஒரே மொழி
யின்   சொற்களைப்  பயன்படுத்தும்  இருவர்  ஒரே  சொல்லுக்கு  வெவ்வேறு
அர்த்தங்களைக்  கற்பித்துக் கொண்டு  தத்தம் கருத்துக்களை வெளிப்படுத்
துவதே ஆகும்!   சொற்கள்   என்பவை  வெறும்  கூடுகளே, அவற்றினுள் அர்த்
தத்தை  உள்ளீடு  செய்து  பரிமாறுவது மனிதர்களின் கடமையாகும்! இருவர்
ஒரே   மொழியைப்  பேசினாலும்,   இருவரது   புரிதல் தளமும்   வெவ்வேறாக
இருக்குமானால், முரண்பாடுதான் எழுமேதவிர கருத்தொற்றுமை ஏற்படாது!
புரிதல்தளம் வேறுபடுவதற்குக் காரணம் உணர்வுத்தளம் வேறுபடுவதே!

உணர்வுத்தளம்   வேறுபடுவதற்குக்   காரணம்,   வேறுபட்ட   உணர்வு  நிலை
வளர்ச்சியே யாகும்.  தனிமனிதர்கள்  ஒரே மாதிரியாக உணரவில் வளர்வது
இல்லை!  ஏனென்றால்,  எல்லோரும்  ஒரே  மாதிரியாக  இருப்புக்கும்,  வாழ்க்
கைக்கும்  பதிலளிப்பதில்லை!  ஒரே  மாதிரியாகத்  தன்னையும், வாழ்க்கை
யையும்  உணர்வு கொள்வதில்லை!   எவ்வொரு   மொழியும்  மனிதர்களைப்
பிரிப்பதும் இல்லை, இணைப்பதும்  இல்லை! மாறாக, மனிதர்களின் சுயநல
நோக்கங்களும், அரை-உண்மைகளும், பாரபட்சமான பார்வைகளும், மேலா
திக்க   மனோபாவமும் தான்   மனிதர்களைப் பிரிக்கிறது!  ஒருவரை   தனது
மொழியே சிறந்தது, மேலானது என்று சொல்லச் செய்வதும், ஒரு குறிப்பிட்ட
மொழியை   பிற மொழி பேசும்  மக்களிடம்   திணிக்கச்  செய்வதும்  மொழி
யல்ல!     தமிழ் மொழி   இனிமையானது தான்;    ஆனால்,   எந்த மொழிதான்
இனிமையற்றது? எந்த மொழியில் தான் காதல் கவிதைகள் இல்லை?  அவர
வர்க்கு அவரவர் மொழி இனிமையானதே, அற்புதமானதே!

எல்லோரும்  ஒரு  மொழியின்  சொற்களைக்  கொண்டு  பேசவும், உரையாட
வும்  முடியும் என்பது ஒருவித போலியான சமத்துவத்தையும், சுதந்திரத்தை
யும்  வழங்குவதாக உள்ளது!  வாழ்வின் அர்த்தம் குறித்த அக்கறையும்,  தேட
லும்,  இல்லாத ஒரு சமூகத்தில் சமத்துவம்,  சுதந்திரம், போன்றவை சாத்திய
மில்லை! மனிதர்களை மனிதர்களிடமிருந்து பிரிக்கும் சக்திகள் வர்க்கபேத
மின்றி ஒவ்வொரு மனிதனின் இயல்பிலேயும் பின்னப்பட்டுள்ளன! தன்னை,
தனது    உள்ளார்ந்த  மெய்ம்மையையும்,   வாழ்வின்  அசலான   குறிக்கோள்,
மற்றும் இலக்கினையும் அறியாத மனிதன் தனக்கும்,மனிதகுலம் மொத்தத்
திற்கும் தீமையாகத்தான் அமைவான்!

அர்த்தம் அறியப்படாத சொற்களைக்கொண்டு நிகழ்த்தப்படும் சொல்லாடு
தலால்  எவ்வித பயனும்  இல்லை!   மனிதர்கள்  எல்லாவிடங்களிலும்,  சொற்
களை அவற்றின் மேலோட்டமான பொருளைக்கொண்டும், பெரிதும்  ஊகிக்
கப்பட்ட   அர்த்தங்களைக்  கொண்டும்   சொல்லாடிக்  கொண்டும்,     வாதம்
புரிந்துகொண்டும்,  விதண்டாவாதம் பேசிக் கொண்டும் காற்றை ஒலி-மாசு படுத்திக்கொண்டிருக்கிறார்கள்!

ஆக, நம்முடைய பேச்சு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டுமானால், சொற்க
ளுக்கான  ஆழமான  அர்த்தத்தை  அறியாமல்  பேசுவதை  நாம் தவிர்த்தாக
வேண்டும்!   இதன்  அர்த்தம்  நாம்  ஊமையாகிட  வேண்டும்   என்பதில்லை!
மாறாக, எவற்றை நாம் துல்லியமாகவும், தெளிவாகவும் அறிந்துள்ளோமோ,
புரிந்து கொண்டுள்ளோமோ அவற்றை மட்டுமே பேசவும், பகிர்ந்து கொள்ள
வும் வேண்டும்! இன்னும் நாம் அறியாதவற்றை அறிந்துகொள்ளவும், புரிந்து
கொள்ளவும்    தீவிர  ஆர்வத்துடன்   முயன்று  சாதித்திட   வேண்டும்!  சொற்
களின்  ஆழமான   அர்த்தத்தைப்  புரிந்து  கொள்ளுதல்  என்பதன்  அர்த்தம்,
சொற்கள் சுட்டுகிற அம்சத்தை, விஷயத்தை முழுமையாகப்  புரிந்து கொள்
ளுதல் என்பதே!

உதாரணத்திற்கு,     "பிரபஞ்சம்"    எனும்   சொல்லை   எடுத்துக்கொள்வோம்.
பிரபஞ்சம் எனும் சொல்  பூமி, சூரியன், சூரியக்குடும்பம், நட்சத்திரக்கூட்டம்,
காலம்,  வெளி,  பருப்பொருள்  ஆகியவற்றை  உள்ளடக்கிய   ஒரு  மாபெரும்
அமைப்பைக் குறிக்கிறது.  அதாவது, ஒட்டுமொத்த உலகத்தைக்குறிக்கிறது
என்பதில்  சந்தேகமில்லை!   ஆனால்,   இந்த  விபரங்கள்  பிரபஞ்சத்தை  மிக
மேலோட்டமாக  மட்டுமே  விளக்குகிறது.  இன்னும் பிரபஞ்சத்தின் உள்ளடக்
கங்களான பூமி(கிரகம்), சூரியன்,நட்சத்திரம் என ஒவ்வொன்றைப்பற்றியும்
அதிக   விபரங்களைச்  சேர்த்தாலும்,  அவ்விபரங்கள்  'பிரபஞ்சம்'  என்பதன்
அர்த்தம் ஆகாது!அதாவது, 'பிரபஞ்சம் என்றால் என்ன?' என்பதற்கான பதில்
ஆகாது!   அதாவது,  மனிதனுக்கும்,  பிரபஞ்சத்திற்குமான  தொடர்பு  என்ன?
முதலிடத்தில் பிரபஞ்சம் ஏன்,எந்த நோக்கத்திற்காக இருக்கிறது?பிரபஞ்சம்
எவ்வாறு தோன்றியது? அதன் முடிவு எத்தகையது, அல்லது அது முடிவேயில்
லாமல்  இயங்கிக் கொண்டிருக்குமா? அப்படியானால்,  பிரபஞ்சத்தின் குறிக்
கோள்   தான்  என்ன?    இத்தகைய   பிரபஞ்சத்தில்   இடம்பெறும்  மனிதஜீவி
களின்  குறிக்கோள் தான்  என்ன?  என இக்கேள்விகளுக்கு மட்டுமல்லாமல்,
இவ்விசாரத்தில் தொடர்ந்து  எழக்கூடிய பிற  உப-கேள்விகளையும் சேர்த்து
அனைத்திற்குமான  பதில்களையும்  கண்டுபிடித்தால் தான்  பிரபஞ்சத்தின்
அர்த்தம்    என்ன  என்பதை  அறிந்து கொள்ளமுடியும்!   பிரபஞ்சத்தின்  அர்த்
தத்தை   அறிவதன்  நோக்கம்   என்ன வென்றால்,   அப்போதுதான் மனிதன்
தன்னையும்,  தனது   அர்த்தத்தையும்,   வாழ்க்கையையும்   புரிந்து கொள்ள
முடியும்!

மொழியை  உண்மையில்  வளர்ப்பது,  காப்பது யார்? ஒரு நாட்டின் அரசரோ,
அரசியல் வாதிகளோ,  செல்வந்தர்களோ  அல்ல!   இன்னும்,   இலக்கியவாதி
களும், எழுத்தாளர்களும் அல்ல! மாறாக,சீரிய சிந்தனையாளர்களும்,ஞானி
களும்  ஆன்மீகக் கவிஞர்களும் தான்! அதாவது, அர்த்தத்தை தம்முள் ஆழ்ந்
தகழ்ந்து  சென்று   கண்டடைபவர்கள் தான்   மொழியை  வளர்ப்பவர்களும்,
காப்பவர்களும்   ஆவர்!    மொழி  என்பது    மனிதனுக்கு  வெளியே   தனியே
எங்கும் இல்லை! மொழி என்பது மனிதனிலிருந்து,அவனது உணர்விலிருந்து
வேறானதல்ல!   மாறாக,  மொழி  என்பது  மனித  உணர்வின்  ஒரு கருவியே!
உணர்வுதான்   மொழியைத்  தோற்றுவித்தது;  மொழி  உணர்வைத் தோற்று
வித்தது என்று காண்பது தலைகீழ்ப் புரிதல் ஆகும்!

ஆக, அர்த்தம் அறியாமல் உச்சரிக்கக்கூடாத முக்கியமான சில சொற்களை
நாம் தெரிந்துகொள்ள வேண்டாமா? அவையாவன:
          நான்
              அன்பு
                  உணர்வு
                        விழிப்பு
                      உண்மை
            பிரபஞ்சம்
          மனிதன்
      கடவுள்
          வாழ்க்கை.
       <>
மா.கணேசன்/ நெய்வேலி/ 01.03.2017  
----------------------------------------------------------------------------

Monday, 27 February 2017

மாற்றமனைத்தும் முடிவுறும்!





எங்கு கேட்டாலும்,  யார் பேசினாலும்  "மாற்றம் மட்டுமே மாறாதது!" என்கிற
கோஷத்தை தங்களது நிலையில் பல வருடங்களாக  சிறிதும் மாறாத; தமது
சிந்தனையில்   சிறிதும்  வளராத  மனிதர்கள்  கிளிப் பிள்ளைகளைப் போல
சிந்தனையின்றி திரும்பத் திரும்ப முழங்கி வருகிறார்கள்!

'மாற்றம்'  என்பது   நிச்சயம் உள்ளது!  ஆனால், "ஆதியில் மாற்றம் இருந்தது!"
என்று  சொல்லும்  வகையில்  நிச்சயம்  இல்லை!  அதாவது,  'மாற்றம்'  என்று
தனியே ஏதும் இல்லை!

மாற்றம் என்பது எப்போதும் ஒன்றை, ஒரு பொருளைச் சார்ந்தே  செயல்பாட்
டிற்கு  வருகிறது!   ஆனால்,  ஒரு பொருள்  முழுமையாக,   பூரணமாக   உள்ள
தென்றால்,   அப்பொருள் மாற்றத்திற்கு உட்படும் விதியைக் கடந்தது என்று
தான் கருதவேண்டும். ஆகவே,மாற்றம் என்பது நிரந்தரமான விதியாகவோ,
வகையினமாகவோ இருக்கவியலாது!ஆகவே,"மாற்றம் மட்டுமே மாறாதது!"
எனும் கோஷம் பிழையானது ஆகும்!

மேலும்,  மாற்றம்  என்பது  தன்னளவில் ஒரு விதியும் அல்ல! அது எப்போதும்
வேறு  ஒரு விதியின், செயல் திட்டத்தின் கருவி போன்றதே யாகும்! மாற்றம்
என்பது    எப்போதும்   ஒரு   இயக்கத்தின்  பகுதியாக,   கருவியாக   மட்டுமே
செயல்படமுடியும்!  இயக்கம் என்றாலே அது இலக்கையுடையது என்றுதான்
அர்த்தமாகும்;  இலக்கு  இல்லாமல் எவ்வொரு இயக்கமும் இருக்க முடியாது!
ஆக,   குறிப்பிட்டதொரு   இயக்கம்   தனது   இலக்கை   எட்டியதும்,  அதாவது
முழுமை பெற்றதும், மாற்றம் என்பதும் முடிவிற்கு வந்து விடும்!

ஒரு  விதையானது,  முளைத்து  செடியாக  வளர்ந்து, பிறகு மரமாக உயர்ந்து,
ஒரு கட்டத்தில்,பூக்கிறது,பிறகு பூக்கள் பிஞ்சுகளாக மாறுகின்றன; அடுத்து
பிஞ்சுகள்   காய்களாகின்றன;  பிறகு  காய்கள்  முற்றிக்  கனிகளாகின்றன.
ஆக,  ஒரு  விதையானது  கட்டம்  கட்டமாக  மாற்றத்திற்குள்ளாகி,   முடிவில்
கனிகளுக்குள் விதைகளாக தனது இலக்கை அடைந்ததும் மாற்றம் என்பது
முடிவிற்கு வந்து விடுகிறது!  

மாற்றம்  என்பது  வெறுமனே ஒரு பொருள் மாறுபாடு அடைவதைக் குறிப்ப
தற்கு மேல்,  குறிப்பாக  யாதொரு  அர்த்தத்தையும்,  நிலையையும்,  தன்மை
யையும்  குறிப்பதில்லை.  அதாவது,  வளர்ச்சி,  பரிணாமம்,  இயக்கம் ஆகிய
வற்றின்   கருவியாக   மட்டுமே   மாற்றம்   என்பது   அர்த்தம்    பெற முடியும்!
ஆகவே, மாற்றத்தைப் பெரிதாகச் சிலாகித்துப் பேசுவதற்கு ஒன்றுமில்லை!

மேலும்,  'மாற்றத்திற்காக மாற்றம்',   'முடிவில்லாத மாற்றம்'   என்று  எதுவும்
இல்லை! ஏனெனில்,  'மாற்றத்திற்காக மாற்றம்',  'முடிவில்லாத மாற்றம்' என்
பவை  இலக்கற்றவை,  ஆகவே அர்த்தமற்றவை!  போய்ச்சேருவதற்கு குறிப்
பாக  யாதொரு முடிவிடமும் இல்லாத முடிவேயில்லாத பயணத்தைப்போல!

ஒரு  விதையானது  தன் வளர்ச்சிப் போக்கையும், அல்லது, அடியோட்டமான
திட்டத்தையும்,   இலக்கையும்   தன்னுள்  உட்பொதிவாகக்   கொண்டுள்ளது!
ஆக  இவ்வம்சங்கள் தான்  முதன்மையானவை;  இவற்றைப்  பிரதானமாகக்
கணக்கில் கொள்ளாமல், வெறுமனே 'மாற்றம்' என்பதை பெரிதுபடுத்துவது
பொருத்தமற்ற பார்வையாகும்!

ஒரு  விதையிலிருந்து  முளைத்தெழுந்து, வளர்ந்து பரந்து விரிந்த மாபெரும்
விருட்சம் தான் இம்மொத்தப்பிரபஞ்சமும்; அதற்கென ஒரு வளர்ச்சிப் போக்
கும்,  அடியோட்டமான  திட்டமும்,  தொலைவான தொரு  இலக்கும்  உள்ளது!
ஆக,  "பிரபஞ்சம் மாறிக்கொண்டே இருக்கிறது!",   "நீங்கள்  நேற்று   குளித்த
அதே  ஆற்றில்  இன்று குளிக்க முடியாது!",   " பிரபஞ்சம்  என்பது   இயக்கத்தி
லுள்ள பொருள்!"   என்பதாகவெல்லாம்  மாற்றத்தைப் பிரதானப்படுத்துகிற
வகையில், மேலோட்டமாகப் பேசுவது பயனற்றது!

பிரபஞ்சம்  என்பது  பருப்பொருளை  ஊடகமாகக் கொண்டு  ஒப்பற்றதொரு
இலக்கு நோக்கிச்செல்லும் இயக்கம் எனக்காண்பதுதான் சரியான பார்வை
யும்,  புரிதலும்  ஆகும்!  இதற்கு மாறாக,  'பிரபஞ்சம்  மாறிக்கொண்டேயிருக்
கிறது!"   என்று  காண்பது  மிகவும் மொண்ணையான பார்வையாகும்! ஏனெ
னில்,பிரபஞ்சம் வெறுமனே மாறிக்கொண்டேயிருக்கவில்லை;அது வளர்ந்து
கொண்டே செல்கிறது; முக்கியமாக, குறிப்பானதொரு இலக்கு நோக்கி முன்
னேறிச் சென்று கொண்டுள்ளது என்று காண்பதுதான் சரியானது! இவ்விடத்
திலும்,   இன்னும் பிற இடங்களிலும்,  'மாற்றம்' என்ற சொல்லுக்குப் பதிலாக
"வளர்ச்சி" அல்லது "பரிணாமம்" எனும் சொற்களைப்பயன்படுத்துவது தான்
மிக்கப்பொருத்தமாக இருக்கும்!

இவ்வாறே,   ஒரு  ஆறு  என்பது  ஓடிக்கொண்டேயிருக்கிறது  என்பதால்,  ஒரு
முறை  நாம்  குளித்த  அதே  தண்ணீரில்,  இரண்டாவது முறை  நாம் குளிக்க
முடியாது  என்பது புரிந்து கொள்ளக்கூடியதே; ஆனால், அப்புரிதல் எவ்வகை
யிலும்  இறுதியானதல்ல!  ஏனெனில், எந்தவொரு ஆறும் முடிவேயில்லாமல் ஓடிக்கொண்டேயிருப்பதில்லை; மாறாக,எல்லா ஆறுகளும் முடிவில் கடலில்
சென்று கலக்கவே செய்கின்றன! ஆக, ஆற்றுக்கு இலக்கு உள்ளதைப்போல,
மனித  வாழ்க்கைக்கும்   இலக்கு   உள்ளது.   மனிதன்  வெறுமனே   வாழ்ந்து
கொண்டேயிருப்பதில்லை;  அதில்  அர்த்தமும் இல்லை!  இன்னும் அவன் எப்
போதும் ஆற்றில் குளித்துக்கொண்டேயிருக்கவும் முடியாது!

இவ்வாறே,பிரபஞ்சம் என்பதும் ஒரு ஆறுதான்!அது வெறுமனே ஒரு எந்திரம்
போல  இயங்கிக் கொண்டேயிருக்கும்  ஒன்றல்ல!  அது ஒரு ஒப்பற்ற இலக்கு
நோக்கிச் செல்லும் ஒரு பரிணாம இயக்கமாகும்!

ஆக,மாற்றத்தைக் கருவியாக, வழிமுறையாகக்கொண்ட எவ்வொரு வளர்ச்
சியும், பரிணாமமும், இயக்கமும் இறுதியில் முடிவைத்தழுவியே ஆகவேண்
டும்!   அதாவது,    இலக்கு  நிலையை அடைந்தேயாக வேண்டும்!  ஏனெனில்,
இலக்கு நிலைதான் எவ்வொரு வளர்ச்சி, பரிணாமம், அல்லது, இயக்கத்தின்
நிறைவும்,   முழுமையும்  ஆகும்!  இம் முழுமை நிலை  என்பது சாத்தியமான
மாற்றங்கள் அனைத்தையும் தீர்த்து முடித்த இறுதி நிலையாகும்!

ஆம், இறுதியில், இலக்குநிலை மட்டுமே முக்கியமாகும்! ஏனெனில், அனைத்
தின்    ஆரம்பமாகவும்,   மாற்றத்திற்கு   உட்படும்  வழிமுறையாக  அமைந்த
வளர்ச்சிப் போக்காகவும், பரிணாமத் திட்டமாகவும், நெடிய இயக்கமாகவும்
விரிந்த  "மெய்ம்மை"  மீண்டும்  தன்னை ஒருங்கே திரட்டி மீட்டிடும்  ஒருமை
யும்   முழுமையுமான நிலையே  இலக்கு ஆகும்!


மா.கணேசன்/ நெய்வேலி/ 16.02.2017
----------------------------------------------------------------------------

Saturday, 25 February 2017

உண்மையின் சுவை




உண்மையின் சுவை என்ன?
உண்மையின்   நிறம்,  வடிவம்,  மணம்,  குணம்  ஆகியவற்றை உண்மையை
அறிந்தோர்  என்பவர்களிடமிருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம்!  ஆனால்,
அவ்வறிவால் உங்களுக்கு ஒரு பயனும் விளையப் போவதில்லை! ஏனெனில்,
உண்மையின் நிறம் வெண்மை என்று புத்தர் சொல்லியுள்ளார்  என்று வைத்
துக்கொள்வோம்;  உடனே நீங்கள் வெண்மையான பொருட்களையெல்லாம்
உற்று  உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பீர்கள்!   ஆனால்,  வெண்மை   நிறத்தி
லுள்ள பொருட்கள்எதுவும் உண்மையல்ல என்றால் நீங்கள் ஏமாற்றமடைவீர்!
"உண்மை நிறமற்றது" என புத்தர் சொல்லியிருந்தால் உடனே நீங்கள் குழப்ப
மடைந்து போவீர்!

ஆம், உண்மைக்கு உண்மையில் நிறம் உள்ளது; ஆனால்,  அந்த அற்புத நிறத்
தையொத்த   எந்த  நிறமும்   இப்பிரபஞ்சத்தில்  எங்குமேயில்லை!  உண்மை
யின் நிறத்தை உண்மையின் கண்களைக்கொண்டு மட்டுமே காண முடியும்!
உண்மை  எனும்  மலருக்கு மணமும் உள்ளது!   ஆனால்,  அதை  நீங்கள்   ஒவ்
வொருவரும் மலரும் போது மட்டுமே முகர முடியும்!

உண்மைக்கு  வடிவம்  ஏதும் உண்டா?    உண்மையால்  எந்த  வடிவத்தையும்
எடுத்துக் கொள்ளமுடியும்  என்பதால்  உண்மையில் உண்மை வடிவமற்றது!
உதாரணத்திற்கு,   ஒட்டு  மொத்தப் பிரபஞ்சமும்,    அதிலுள்ள   அனைத்தும்
உண்மையின் வர்ணமிகு வடிவ-ஜாலங்களே!

உண்மையின் குணம் எத்தகையது? ஓ! உண்மையின் குணம் உண்மை தான்,
அதாவது,  உண்மைத்தன்மை தான்!    மேலும்,   உண்மை  மட்டுமே  உண்மை
யானது! பிற யாவும், இப்பிரபஞ்சம் மொத்தமும் உண்மையின் நிழலேயாகும்!
அதை 'மாயை' என்றும் சொல்வர்!  அதாவது,    இப்பிரபஞ்சம்  நிரந்தரமற்றது!
உண்மை  மட்டுமே  நிஜத்திலும் நிஜமானது,  நிரந்தரமானது,  நித்தியமானது!

உண்மையின் நிறம்,  மணம்,  குணம்,  வடிவம்  இவற்றைப் பற்றிய விவரிப்பு
களையெல்லாம்   நீங்கள் ஞானிகளிடமிருந்து அறிந்து கொள்ளலாம்; அவை
உங்களது  மேலோட்டமான  ஆர்வக்கோளாறைத்  திருப்தி செய்திடக்கூடும்!
அதற்கு மேல்   அவற்றினால்  ஒரு  பயனும்  இல்லை!  ஆனால்,  உண்மையின்
சுவையை  நீங்கள் நேரடியாகச் சுவைக்காமல் ஒரு போதும் உணரமுடியாது!
உண்மையின்  சுவை பற்றி  இன்னொருவரிடம்  கேட்டறிவது என்பது எச்சில்
பண்டத்தைக் கேட்பது போன்றதாகும்!

ஆனால்,  உண்மையைப் பற்றி  நீங்கள்  ஏன் இன்னொருவரிடத்தில் போய்க்
கேட்கவேண்டும்?  அல்லது  மறைந்து போன புத்தர்கள்,  மகரிஷிகள், ஞானி
கள்  ஆகியோரது  செல்லரித்துப்போன  ஒலைச்சுவடிகளைத்  தேடிப்பிடித்து
ஆராய்ந்து குழம்பவேண்டும்?

உண்மை என்ன உங்களுக்கு அந்நியமானதா? அது உங்களுடைய சாரமான
உண்மையிலிருந்து வேறானதா, என்ன?   உண்மை,   அது   உங்கள்  உயிரின்
உயிர்;   உங்கள் ஆன்மாவின்  ஆன்மா  என்பதை  எவ்வாறு  நீங்கள்  உணரத்
தவறினீர்?    எவ்வாறு   நீங்கள்  உங்களை  முழுமையாகக் காணும் விழைவி
லிருந்து விலகி அந்நியமாகிப்போனீர்?எவ்வாறு உங்களால் உங்களது இருப்
பின் மேற்புறத்திலேயே தங்கி வாழவும், திருப்திடையவும் முடிகிறது?

இது எவ்வாறு உள்ளதென்றால், ஒருவனுக்கு அழகிய பெரிய மாளிகை இருந்
தும்  அதனுள்ளே  சென்று எத்தனை அறைகள் உள்ளன,  எவ்வளவு வசதிகள்
உள்ளன   என்பவற்றையெல்லாம்  கண்டு  மகிழ்ந்து,   மிகச்  சௌகரியமாக
வசிக்காமல்,   அம்மாளிகையின் முன்புறத் தாழ்வாரப்பகுதியிலேயே தங்கி
வசிப்பதைப் போலுள்ளது!  இது தான் பொதுவாக மானுடர்கள்  தங்களுக்குத்
தாங்களே உருவாக்கிக்கொண்ட  சிறுமையும், துன்ப நிலையும் ஆகும்!

"உண்மை" என்பது எட்டாக்கனியல்ல! என்றாலும், அது அறிவுஜீவிகளுக்கும்,
தத்துவ வாதிகளுக்கும், விஞ்ஞானிகளுக்கும் இன்னும் எட்டாத கனியாகவே
உள்ளது!  இதற்குக் காரணம்,  அவர்கள் உண்மையை புறத்தேயும்,  தவறான
இடங்களிலும்,  தவறான அணுகுமுறைகளைக்  கொண்டும்  தேடுவது தான்!
தாமே  கனிகளாக  மாறவேண்டியவர்கள்  தங்களுக்கு  வெளியே தேடினால்
எவ்வாறு அந்த "உண்மை" எனும் கனி எட்டும்?

பெரும்பாலான மனிதர்கள் தம்மைப் பற்றி யாதொரு கருத்தாக்கமு மின்றி
எலிகளையும்,   தவளைகளையும்  போல  ஜீவித்துச்  செல்கிறார்கள்!  கணிச
மான   எண்ணிக்கையிலானவர்கள்  தம்மைப்பற்றி பலவகைப்பட்ட பிம்பங்
களைக் கற்பித்துக்கொண்டு தங்களுக்கே புறம்பாகவும், எதிராகவும் போலி
யானதொரு நபராக,  பொய்யான தொரு  வாழ்க்கையை  வாழ்ந்துசெல்கின்
றனர்!

உங்களை  நீங்கள் என்னவாக,  எத்தகைய மெய்ம்மையாக அறிகிறீர்களோ,
உணர்கிறீர்களோ,  அதற்குரிய  வாழ்க்கையைத்தான் உங்களால்  வாழ முடி
யும்!உங்களை எதுவாகவும் அறியாதபோது நீங்கள் சுய-உணர்வற்ற விலங்கு
ஜீவிகளைப் போலவே வாழ்வீர்கள்! உங்களை நீங்கள் விரும்பியவாறு ஏதோ
வொன்றாக,     யாரோ  ஒருவராக  எண்ணிக் கொள்ளும்,    கற்பனை  செய்து
கொள்ளும்  பட்சத்தில்,    நீங்கள்  உங்கள்  உண்மையான  சுயத்தைக் கண்டு
கொள்ளாமலும்,   வெளிக் கொணராமலும்  அதைக் கொன்று விடுகிறீர்கள்!
ஆக, உண்மைக்கான அடிப்படையை அழித்துவிட்டு உண்மையை வெளியே
எங்கெங்கோ தேடிக்கொண்டு உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்கிறீர்கள்!
ஆனால்,   உண்மை  என்பது   உங்கள்  உண்மையான  சுயத்திலிருந்து வேறா
னதல்ல!  இதன் அர்த்தம்  உண்மை உங்களுக்குள்,  உங்களுடைய பகுதியாக
உள்ளது என்பதல்ல!  மாறாக,  உங்களது சுயத்தின் மலர்ச்சியே உண்மை என்
பதாகும்!  அவ்வாறு  நீங்கள் மலரும் போது  உங்களுடைய  பழைய சுயத்தின்
சுவடுகள் ஏதுமிராது!

உண்மை, அது நிறைவின் நிறைவு!
உண்மை, அது முழுமையின் பூரணம்!
உண்மை, அது சிருஷ்டியின் சாரம்!
உண்மை, அது உயிரின் உயிர்!
உண்மை, அது ஆன்மாவின் ஆன்மா!
உண்மை, அது மும்மையின் ஐக்கியம்!
                     (உம்மை, இம்மை, மறுமை)
உண்மை, அது மும்மெய்ம்மையின் ஒருமை!
                    (இருப்பு, உணர்வு, ஆனந்தம்)
உண்மை, அது காலாதீதம்!
உண்மை, அது இருப்பின் மலர்ச்சி!
உண்மை, அது மாற்றங்களனைத்தின் முடிவு!

மா.கணேசன்/ நெய்வேலி/ 23.02.2017
----------------------------------------------------------------------------

Thursday, 23 February 2017

நான் யார்?






நான் யார், எத்தகையவன், என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டுமா?
அப்படித் துல்லியமாகத் தெரிந்தால் தான் என்னுடன் உரையாடவும்
உறவாடவும் இயலுமா?
அப்படியானால், அதற்கு முன், உங்களை நீங்கள் யார், எத்தகையவர்
என்பதைத் தெரிந்துகொள்வது முக்கிய முன்-தேவையாகிறது!

இரண்டு வகைகளில் நீங்கள் உங்களைத் தெரிந்து கொள்ளலாம் :

முதல் வகை : ஒப்பீட்டு ரீதியில் அமைவது- பிறருடன் ஒப்பிட்டுப்பார்ப்பதன்
                            வழியாக!   இந்த  வழிமுறை  துல்லியமற்றது,  சராசரி அளவில்
                            அமைவது, நிச்சயமற்றது. . . .
இரண்டாவது வகை : நேரடியானது - ஒருவர் நேரே தனது ஒப்பிடவியலாத
                            உள்ளார்ந்த தன்மையை, மதிப்பை, உண்மையை உணர்ந்தறி
                            வது, இவ்வழிமுறையே சரியானது. . . . .

முதலில் உங்களை நீங்கள் முறையாகவும், முழுமையாகவும் புரிந்து கொள்
ளாமல்  பிறரைப்  புரிந்து கொள்வது  என்பது  இயலாது!   உங்களை  நீங்கள்
புரிந்து  கொள்வது   என்பது தான்   அனைத்திற்குமான   அடிப்படை யாகும்!

இப்பிரபஞ்சத்தையும்,  அதிலுள்ள  அனைத்தையும்  நீங்கள்  புரிந்து கொண்
டாலும்,  உங்களை  நீங்கள் புரிந்து கொள்ளாவிடில்  உங்களது இருப்பிற்கும்,
வாழ்க்கைக்கும் யாதொரு அர்த்தமுமில்லை! ஏனெனில், நீங்கள் ஒவ்வொரு
வரும்தான் இப்பிரபஞ்சத்தின் மையம் ஆவீர்கள்!இந்த உண்மையை நீங்கள்
உணராத வரை,     இப் பிரபஞ்சத்தின்   பலவகைப்பட்ட   உள்ளடக்கங்களில்
நீங்களும் ஒருவகைப்  பொருளே, அல்லது ஒரு ஜந்துவே!

உங்களுடைய "முக்கியத்துவம்" என்பது யாரோ உங்களுக்கு வழங்குவதோ,
அல்லது  நீங்களே  உங்களுக்கு வழங்கிக்கொள்ளும் பட்டமோ அல்ல! உங்க
ளுடைய ஆழத்தில் நீங்கள் கண்டடையாத முக்கியத்துவம் எதையும் எவரும்
உங்களுக்கு வழங்கிட முடியாது!  உங்களுடைய  உண்மையான முக்கியத்து
வம் என்பது நீங்கள் ஒரு உணர்வு என்கிற உண்மையை உணரும் போது சுய
-சாட்சியமாக  உணர்ந்தறியப்படுகிற  ஒன்றாகும்!  அவ்வாறு  உணர்வதற்கு
இப் பிரபஞ்சத்திலுள்ள  எதையும்  குறிப்பாகக்  (Reference) கொள்ளவிய
லாது! ஏனெனில், உணர்வு மட்டுமே உணர்வுக்கான குறிப்பும், யாவும்!

இதற்குமாறாக, உங்களைப்பற்றி நீங்கள் அறிந்ததெல்லாம் மேலோட்டமான
விபரங்கள் மட்டுமே! நீங்கள் ஒரு குறிப்பிட்ட குலம், கோத்திரத்தைச் சேர்ந்த
இன்னாருடைய மகன்,  இந்த ஊரில் பிறந்தவர், உங்களுடைய கல்வித் தகுதி,
உத்தியோகம்,  இன்ன பிற விபரங்கள்  யாவும்  உங்களுடைய அசலான,  கரு
வான, சுயத்தைச் சுட்டுவதோ, வெளிப்படுத்துவதோ கிடையாது! இவ்விபரங்
கள் யாவும், தனது மையத்தில் தான் யார் என்பதை அறியாத ஒரு நிஜத்தைச்
சுற்றித் தொகுக்கப்பட்ட ஒரு அடையாளம் என்பதற்கு மேல் வேறெதுவுமல்ல!
இந்த  விபரங்களனைத்தையும்  நீங்கள்  அறிவதற்கு  முன்  உங்களைச்சுற்றி
யுள்ள பலர் அறிவர்!ஆனால்,உண்மையான உங்களை உண்மையில் அறியக்
கூடியவர் நீங்கள் ஒருவர் மட்டுமே! அல்லது தன்னையறிந்த இன்னொருவர்
மட்டுமே!

இன்னும்  நீங்கள்  என்னை யார்  என்று அறிந்து கொள்ள விரும்புகிறீர்களா?
இது வரை, நீங்கள் என்னைப் பார்த்தவரை, என்னைப்பற்றி பிறரிடம் கேட்டு
அறிந்தவரை, அல்லது என் பேச்சைக்கேட்டும், எனது எழுத்துக்களை வாசித்
தும் புரிந்து கொண்டவரை,  என்னுடன்  பழகிய வரை, ஓரளவிற்கு என்னைப்
புரிந்து  கொண்டதாக  நீங்கள்  நினைக்கலாம்!    மேலும்,   உங்களது தேவை
மற்றும்  குறிக்கோளுக்கு  உரிய  அளவிற்குமேல்  என்னை அறிந்து கொள்ள
உங்களுக்கு நேரமோ, சக்தியோ, பெரிய விழைவோ இருக்க வாய்ப்பில்லை!
அப்படி  வாய்ப்பு  இருந்திருந்தால்   எப்போதோ  நீங்கள்  உங்களை  அறிந்து
கொண்டிருப்பீர்களே!  உண்மையில், உங்களது தேவைகளின் தரம்  மற்றும்
தன்மைக் கேற்பவே   நீங்கள்   ஒரு விலங்காகவோ,   அரை-மனிதனாகவோ,
அல்லது  முழு-மனிதனாகவோ  அமைகிறீர்கள்,  அல்லது  ஆகிறீர்கள்!   ஆம்,
உங்களது  தேவைகள்  மற்றும்  ஆசைகளைக் கொண்டு  நீங்கள் எத்தகைய
ஜீவியாக  தற்போது  இருக்கிறீர்கள்  என்பதை  நீங்களேகூட கண்டுபிடித்திட
லாம்!  ஒரு மனித ஜீவியாக  இருப்பது  என்பது  முன்-கொடுக்கப்பட்ட தல்ல!
மாறாக, ஒரு மனித ஜீவியாக ஆவதற்கான உட்பொதிவு மட்டுமே ஒவ்வொரு
வருக்கும் குறைவில்லாமல் கொடுக்கப்பட்டுள்ளது!

உண்மையில், நீங்கள் உங்களைப்புரிந்து கொள்ளவேண்டுமெனில், அதற்கு
பிரத்தியேக விழைவு வேண்டும்! அதற்கு,  முதலில் உங்களை உங்களுக்குத்
தெரியும்  எனும் பிரமையிலிருந்து நீங்கள் வெளியே வரவேண்டும்!  ஆனால்,
உங்கள்  கனவிலும் சரி,  நனவிலும் சரி,  உங்களை நீங்கள் அறிந்து கொள்ள
வேண்டுமென்ற   எண்ணமோ, ஆர்வமோ உங்களிடம் தோன்றியிருக்க சாத்
தியமேயில்லை! ஏனென்றால்,  நீங்கள் தான் உங்களை அப்படியே பூரணமா
கக்  கொடுக்கப் பட்டவராக,   ஒரு   அறுபொருளாக   (Absolute) எடுத்துக்
கொண்டு விட்டீரே!   பிறகு எவ்வாறு  உங்களைத் திரும்பிப் பார்த்து அறிந்து
கொள்ளும் எண்ணமோ, ஆர்வமோ உங்களுக்குத் தோன்றும்? ஆனால்,அதே
நேரத்தில்,உங்களுக்கு உங்களைப்பற்றி யாதொரு நிச்சயத்துவமும், ஸ்திரத்
தன்மையும் கிடையாது!    ஏனெனில்,    உங்களை  நீங்கள்  சிறிதும் அறியாம
லேயே அறிந்துள்ளதாக எடுத்துக்கொண்டது தான் உங்களுடைய பிரதானப்
பிரச்சினையும், மூலப் பிரமையும் ஆகும்!

அடுத்து, உங்களை நீங்கள் மிகத் தவறாக, உடலுடன் அடையாளப்படுத்திக்
கொண்டு  விட்டது  (Mis-Identification) தான்  உங்களது    அனைத்து
மட்டுப்பாடுகளுக்கும் காரணமாகும்! உங்களைப்பற்றிய உண்மை இதுவே :
ஆம்,  உங்களை  ஒரு 'உடல்' எனப் பாவித்துக்கொள்ளும் ஒரு 'மன(-வளர்ச்சி
யற்ற-) ஜீவி'  நீங்கள்!

ஆம்,நீங்கள் எப்போதும் உங்களை மையமாகக்கொண்டு,பிறருடன் எவ்வாறு
பழகுவது,சேர்ந்து செல்வது,இயங்குவது,வாழ்வது என்பதில் மட்டுமே கவனம்
செலுத்துபவராக  உள்ளீர்!  அதில் என்ன தவறு என்று கேட்கிறீர்களா?  அதில்
எந்தத் தவறும், பிரச்சினையும், சிக்கலும் இருக்காது, முதலில், நீங்கள் உங்க
ளுடன் எவ்வாறு இயங்குகிறீர்,செயல்படுகிறீர், சேர்ந்து செல்கிறீர்,வாழ்கிறீர்
என்பதைக் கவனித்துக் கணக்கில் கொண்டிருந்தீரெனில்!ஏனெனில்,நீங்கள்
ஒவ்வொருவரும்தான் அனைத்தின் (பிரபஞ்சத்தின்) மையம் என்று குறிப்பிட்
டோம்! ஆனால்,  அந்த மையத்தை நீங்கள் ஒரு போதும் திரும்பிப் பார்த்ததே
யில்லை! அது எத்தகைய நிஜம்,மெய்ம்மை என்பதை நீங்கள் அறியவில்லை!
அதாவது,   உங்களைப்   பொறுத்தவரை   நீங்கள்  ஒரு  குருட்டுப்  புள்ளியாக
இருந்து கொண்டு பிற யாவரையும், யாவற்றையும், இந்தப் பிரபஞ்சம் மொத்
தத்தையும் அலசி ஆராய்கிறீர், அறிகிறீர்!

ஆனால்,  தினமும்  அவ்வப்போது உங்கள் முகத்தை மட்டும் திரும்பத் திரும்
பப்  பார்த்துக் கொள்கிறீர்! அதை ஒப்பனை செய்து அலங்கரிக்கிறீர்! ஏதோ,
"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்"    என்று   சொல்லப்பட்டதால்    அல்ல!
மாறாக, 'எண் சாண் உடலுக்கு முகமே பிரதானம்!' என நீங்கள் தலைகீழாகப்
புரிந்துகொண்டதால்! அதாவது, உங்களுக்கு அகம் என்பது இருந்தால் தானே
அதன் அழகு முகத்தில் தெரிய?   உங்களை   நீங்கள்  அறியாதபோது "அகம்"
என்பது எவ்வாறு அங்கேயிருக்க முடியும்?  அகத்திற்கான அடிப்படைகளும்,
உட்பொதிவும்  இருக்கின்றன; அதை நீங்கள் அறியாததினால் அது இன்னும்
உருப்பெறவில்லை! "அகம்" என்பது தயார்நிலையில் கொடுக்கப்பட்ட ஒன்று
அல்ல! அது ஒவ்வொருவரும் கண்டுபிடித்திட வேண்டிய, தம்முள் எழுப்பப்பட
வேண்டிய மெய்ம்மையாகும்! நீங்கள் எப்போது உணர்வுக்கு வருகிறீர்களோ
(உணர்வுக்கு விழிக்கிறீர்களோ) அப்போதுதான் உங்களது அகம் உருப்பெறத்
தொடங்குகிறது!  அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது உண்மையே!
இன்னும், அகம்  இல்லாவிட்டாலும் கூட,  அதன் இல்லாமையின் லட்சணமும்
(அதாவது, விகாரம்) முகத்தில் தெரியும்!    எல்லாவற்றையும்   தலை கீழாகப்
புரிந்து கொள்ளும் நாம், முகத்தை ஒப்பனை செய்துகொள்வதன்,அலங்கரித்
துக் கொள்வதன் வழியாக, நம்முடைய அகத்தின் அழகை நாம் அதிகப்படுத்
திக்கொள்வதாக எண்ணிக்கொள்கிறோம்!அகத்தின் அழகு வேறு;முகத்தின்
அழகு வேறு!

நீங்கள் உங்களைத் திரும்பிப் பார்க்காமல்,   உங்களை உள்ளே பார்க்காமல்,
அம் மையம் உருவாவதேயில்லை! உள்ளே பார்க்கவேண்டும் எனும் விழைவு
தன்னெழுச்சியாக    யாதொரு    புறத்தூண்டுதல்  எதுவுமின்றி,    எவருடைய
ஆலோசனையும், கட்டளையும் இன்றி ஏற்படவேண்டும்!   அதே வேளையில்,
நீங்கள் உணர்வுக்கு வருவதன்,விழிப்படைவதன், உங்களுக்குள் அம்மையம்
உருவாவதன்  அவசியத்தை,   உங்களது  வாழ்க்கைத் தேவைகளில் எதுவும்;
புற நிகழ்வுகள்  எதுவும்  ஒரு போதும்  உணர்த்தப்போவதுமில்லை,  தூண்டப்
போவதுமில்லை!மாறாக,உங்கள் இருப்புக்கு அல்லது வாழ்க்கைக்கு நீங்கள்
எவ்வளவு   தீவிரமாகவும்,   முழுமையாகவும்  பதிலளிக்கிறீர்கள் என்பதைப்
பொறுத்தே அவை நிகழ்கிறது!

உங்களது வாழ்க்கைத் தேவைகள் யாவும் உயிர்-வாழ்தலுக்கான தேவைகள்
மட்டுமே தவிர,   அவை   எதுவும்   அசலான   வாழ்க்கையின்    அர்த்தத்துடன்
தொடர்பு  கொண்டவையோ,  அந்த அர்த்தத்தின்  அவசியத்தை எவ்வகையி
லேனும்  உணர்த்துவதோ,  சுட்டுவதோ கூட  கிடையாது!  நீங்கள் எல்லோரும்
எவ்வாறு  உங்களை  அறியாமலேயே  வாழ்ந்து செல்கிறீர்களோ,  அவ்வாறே
"வாழ்க்கை" என்றால் என்ன  என்று அறியாமலேயே வாழ்ந்து  செல்கிறீர்கள்!
எல்லாவற்றையும்  நீங்கள்  சர்வ சாதாரணமாகவும்,  சுலபமாகவும் எடுத்துக்
கொண்டு விடுகிறீரகள்! இவ்வழியே,அதாவது உங்களுடைய படு மேலோட்ட
மான இருப்பைக் கொண்டு,   நீங்கள் உங்களை மட்டுமல்லாமல், வாழ்க்கை
யையும், அனைத்தையுமே கொச்சைப்படுத்தி விடுகிறீர்கள்!

ஆகவே, வாழ்க்கைத்தேவைகள் என்று நீங்கள் உணர்ந்த அனைத்து தேவை
களையும் கடந்து வாழ்க்கையைக் காண்கிற, அறிகிற, அதன் அர்த்தத்தைப்
புரிந்து கொள்கிற உன்னதத் தேவையை உணர்ந்து பற்றுங்கள்! உங்களைச்
சுற்றிலும் நிகழ்கிற சம்பவங்கள், நிகழ்வுகள், விபத்துகள் ஆகியவற்றினால்
கவனச் சிதறலடையாதீர்கள்;அவற்றில் சிக்கிக்கொள்ளாதீர்கள்! ஏனெனில்,
வாழ்க்கை   என்பது   ஒருபோதும்  உங்களை  உட்படுத்தாமல்  உங்களுக்குப்
புறத்தே  நிகழ்வதில்லை!   உங்கள்  வாழ்க்கையின்    மையம்    எப்போதுமே
நீங்கள் தான்; ஆனால், நீங்கள் தான் உங்களுள் மையம் கொள்வதில்லை!

நதி ஓடிக்கொண்டேயிருக்கிறது என்பது தான் முக்கியம்; அது செல்லும் வழி
நெடுகிலும், அது எவை யெவற்றையெல்லாம் சந்திக்கிறது, எத்தகைய தடை
களை  எதிர்கொள்கிறது  என்பது போன்ற  விஷயங்கள், அனுபவங்கள், அறி
வுச்சேகரங்கள்,  எவையும்  முக்கியமல்ல!  ஏனெனில்,  அவை  எதுவும்  இறுதி
யானவையல்ல!  மாறாக,  அவை யாவும்,  இறுதி  அர்த்தத்தை நோக்கிய  நதி
யின்  பயணவழிச் சாட்சியங்கள்,  வேடிக்கைக்காட்சிகள்,  அவ்வளவே!   நதி
தன் ஒப்பற்ற இலக்கை நோக்கிச்செல்கிறது என்பது மட்டும்தான் நதிக்கான
உந்துசக்தி, உற்சாகத் தூண்டுதல், இளைப்பாறுதல் யாவுமாகும்! நதியானது
முன்னோக்கிச்   செல்லச்  செல்ல,  தான்   கடந்து  வந்த  பாதையில்  ஏற்பட்ட
அனுபவங்களை மறந்துவிடுகிறது! முடிவில் தன் இலக்கை அடையும்போது
தன்னையும்  அது முற்றிலுமாக மறந்து சுமை நீங்கியதாகி விடுகிறது!

ஆகவே,   நீங்கள்   என்னைப் புரிந்து கொள்ளும்  முயற்சியை   விட்டு விட்டு,
உடனடியாக   உங்களைப் புரிந்து கொள்ளும்    முயற்சியில்     இறங்குங்கள்!
என்னை வேறு எவருடனாவது ஒப்பிட்டுக் காண்பது, எடை போடுவது,என்னி
டம்   குற்றம்  குறை  எதையாவது  கண்டுபிடிக்க  முயல்வது போன்ற யாவும்
வீண் வேலையாகும்!  உங்களுக்குக் கீழானவர்கள் என்று நீங்கள் கருதுபவர்
களை விட நீங்கள் உயர்வானவர் என்று மகிழ்வதும், உங்களுக்கும் மேலான
வர்கள்  என்று  நீங்கள்  கருதுபவர்களை  எண்ணிப்   பொறாமைப்படுவதும்,
அவர்களுடன்  ஒப்பிட்டு  உங்களைத்  தாழ்வாக எண்ணுவதும் பயனற்றவை
யாகும்! ஏனெனில், பிறரது குற்றங்குறைகள் உங்களைத் தூய்மைப்படுத்தப்
போவதோ, அல்லது பிறரது தூய்மை உங்களைக் கறைப்படுத்தப்போவதோ
கிடையாது! மாறாக, உங்களைப் புரிந்து கொள்ளாதிருப்பதே பெருங்குற்றம்
ஆகும்! இந்நிலையில் பிறரைப் பற்றி ஆராய்வது என்பது அளவுகோல் இன்றி
அளப்பதற்கு ஒப்பான அடிப்படையற்ற செயலாகும்!

மா.கணேசன்/ நெய்வேலி/ 21.02.2017
----------------------------------------------------------------------------

Monday, 20 February 2017

சில விபத்துகள், சில சந்திப்புகள்!





சில விபத்துகள்  சந்திப்புகளில் முடிகின்றன!
சில சந்திப்புகள் விபத்துக்களாய் முடிகின்றன!



"இனிமேல் சிகரெட் புகைத்தால்
அது உன் உயிருக்கு ஆபத்து!"
என்று டாக்டர் சொன்னதும் அவன்
புகைப்பழக்கத்தை விட்டுவிட்டான்
உடனே!

"வழக்கமான உனது வழியில் வாழ்ந்தால்
அது உன் ஆன்மாவிற்கு ஆபத்து!"
என்று அவனது குரு சொன்னதும் அவன்
உடனே விட்டுவிட்டான் சத்-சங்கத்திற்குச்
செல்வதை!


அவர்கள் ஆன்மீகத்தைக்கற்றுக்
கொண்டார்களோ இல்லையோ
மிக விரைவாக ஒரு குருவைப்
போலப் பேசுவது எப்படி என்பதைக்
கற்றுக்கொண்டனர்!

நாளடைவில் ஒவ்வொரு சீடனும்
குருவுக்குப் பாடம் எடுக்கத் தொடங்கி
விட்டான்!

அவர்கள் தர்க்கத்தில் புலிகளாகி
விட்டனர்  - எப்படியென்றால் :
'குரு ஒரு மனிதர்.
அவர் ஞானமுள்ளவர்.
நாமும் மனிதர்கள், ஆகவே நாமும்
ஞானிகளே!'

விஷயம் விபரீதமாய்ப் போவதற்குள்
தப்பிக்கும் வழியைப் பற்றித் தற்போது
யோசித்துக்கொண்டிருக்கிறார் குரு!


சீடன் : உங்கள் உபதேசங்கள், போதனைகள்
              எதற்குப் பயன்படுகின்றன?

குரு   :  காற்றைத் தூய்மையாக்குவதற்கு!


ஆமையும் முயலும் சந்தித்துக்
கொள்ளலாம், உரையாடலாம்!
ஆனால் சேர்ந்து பயணிக்கலாகாது!
நாளடைவில் முயல் ஆமையின் வேகத்திற்கு
ஈடு கொடுத்துச் செல்ல வேண்டியதாகிவிடும்!


வண்ணத்துப்பூச்சி ஒரு காலத்தில்
கம்பளிப்புழுவாக இருந்தது தான்!
வண்ணத்துப்பூச்சியாக
மாறுவதற்காகவே கம்பளிப்புழு
இருக்கிறது!
இரண்டின் வாழ்க்கையும்
வேறுவேறாயினும்
கம்பளிப்புழுவும் வண்ணத்துப்பூச்சியும்
சந்தித்துக்கொள்ளவும், உரையாடவும்
செய்யலாம்!
அவற்றின் சந்திப்பும், உரையாடலும்
வண்ணத்துப்பூச்சி வாழ்ந்து
கொண்டிருக்கும் வாழ்க்கையைப்
பற்றியதாயும்;
கம்பளிப்புழு வாழவிருக்கும்
வாழ்க்கையைப்
பற்றியதாயும் இருக்கும் பட்சத்தில்
அர்த்தமுள்ளதாக அமையும்!
வண்ணத்துப்பூச்சி வாழ்ந்து முடித்த
வாழ்க்கையைப் பற்றியதாயும்
கம்பளிப்புழு வாழ்ந்து கொண்டிருக்கும்
வாழ்க்கையைப் பற்றியதாயும்
இருக்கும் பட்சத்தில் யாவும்
அனர்த்தமாகிவிடும்!


இனம் இனத்தோடு சேரும் என்றனர்!
ஆனால், ஒவ்வொரு அகந்தையும்
ஒரு தனி இனமே!
இனம் ஒன்றாயினும் மனம் வேறாயின்
இனம் இனத்தோடு எவ்வாறு சேரும்?
ஏனெனில் மனம் மனத்தோடு பொருந்தாது!


சுயமற்ற ஆதி மனிதர்களின்
சமூகத்தில்
சுயம் முளைத்த நவீன மனிதன்
அதிக காலம் தங்கி வாழ இயலாது!
அதே போல,
சுயம் கடந்த அதி நவீன மனிதன்
சுயம் முதிராத நவீன மனிதர்களின்
சமூகத்துடன்
அதிக நேரம் உறவாட இயலாது!


நாம் அருகருகே அமர்ந்து
மௌனமாக இருந்தாலும்
பேசிக்கொண்டுதான் இருக்கிறோம்!
நாம் ஒளியாண்டுகள் தொலைவில்
இருந்தாலும்
நம் எண்ணங்கள் உடனுக்குடன்
பரிமாற்றம் செய்யப்படுகின்றன!
ஆனால், அதனால் ஒரு பயனுமில்லை!
நீ உன்னிலும், நான் என்னிலும்
இறுகிக் கொண்டே போகிறோம்!
நீ உன் கருத்திலும், நான் என் கருத்திலும்
உறுதியாக நிற்கிறோம்!
நமது சந்திப்புகள் உன்னையும் சரி
என்னையும் சரி, சிறிதும்
மாற்றுவதில்லை!


ஆமையும் முயலும் சந்தித்துக்
கொள்ளலாம், உரையாடலாம்!
ஆனால் சேர்ந்து பயணிக்கலாகாது!
நாளடைவில் முயல் ஆமையின் வேகத்திற்கு
ஈடு கொடுத்துச் செல்ல வேண்டியதாகிவிடும்!
அதைவிட ஆபத்தானது, ஆமையின்
பாராட்டுகளும், விமர்சனங்களும்
முயலின் வேகத்தை மட்டுமல்லாமல்
அதன் விவேகத்தையும் மட்டுப்படுத்திடும்!
பிறகு முயலும் ஆமையைப்போல் ஆகிவிடும்!
ஆனால், பரிணாமத்தில் ஆமை ஆமையாகவே
இருப்பதில்லை; முயலும் முயலாகவே
இருக்க வேண்டியதில்லை!
இன்னும் மனிதனும் மனிதனாகவே
இருக்க வேண்டியதில்லை!
தொடர்ந்து தன்னைக் கடந்து செல்லும்
விதி அணுத்துகளுக்கும் பொதுவானது!
மரத்திற்கும் மண்ணிற்குமான உறவு
வேர்கள் மட்டத்திலேயே!
மரத்தின் அசலான விழைவு விண்ணைத்
தொடுவதே!
மனிதன் தன் சக-மனிதனோடு
பிணைக்கப் பட்டவனல்ல!
ஒருவன் இன்னொருவனைப்போல
இருக்க வேண்டியதுமில்லை!


மனிதர்களுக்கிடையே
ஒரு சில பரிவர்த்தனைகளைக் கடந்து
சந்திப்பு என்பது நிகழ்வதில்லை
என்பதல்ல பிரச்சினை; அது
தேவையேயில்லை என்பதுதான்
உண்மை!


சிலர் தொடர்பைத்
துண்டித்துக் கொண்டதால்
தப்பித்துவிட்டதாக
எண்ணி சுதந்திரமாக
இருப்பதாக மகிழலாம்!
பிரச்சினையே அவர்களது
விருப்பத்தின் வழி செல்லும்
சுதந்திரம் தான் என்பதை
அவர்கள் உணர்வதில்லை!
தன் விதியைத் தானே
தீர்மானித்துக்கொள்ளும்
வாய்ப்பு உள்ளதால் தான்
அவன் மனிதன்!
இல்லையென்றால் அவனும்
ஒரு விலங்கு தான்!
ஆனால், கிடைத்த வாய்ப்பை
எல்லோராலும் முறையாகப்
பயன் படுத்திக்கொள்ள
முடிவதில்லை!


முச்சந்திச் சந்திப்புகள்
தேநீர்க்கடை சந்திப்புகள்
திட்டமிடப்பட்ட சந்திப்புகள்
இலக்கியச் சந்திப்புகள்
தத்துவச் சந்திப்புகள்
ஆன்மீகச் சந்திப்புகள்
காதல் சந்திப்புகள்
எல்லாச் சந்திப்புகளும்
விபத்துகளே! விபத்துகளாகிப்
போன சந்திப்புகளே!


பிறர் கோபமாகப் பேசினாலும்
நடந்து கொண்டாலும்
ஞானி பொறுத்துக்கொள்ளவும்
சாந்தமாகவும் நடந்து கொள்ள
வேண்டும்!

பிறர் அகந்தை நிலையிலிருந்து
ஆணவமாய் நடந்து கொண்டாலும்
ஞானி பக்குவமாக நடந்து
கொள்ளவேண்டும்!

பிறர் எவ்வளவு தான்
முட்டாள் தனமாகப் பேசினாலும்
நடந்து கொண்டாலும்
ஞானி பக்குவமாக நடந்து
கொள்ளவேண்டும்!

ஞானி தன்னுள் அழித்த
கோபதாபத்தை, அகந்தையை
ஆணவத்தை, அறியாமையை
அஞ்ஞானி தன்னுள்
அழிக்கும் வழியைத் தானே
கண்டுபிடித்திடும் வரை
அஞ்ஞானியை ஞானி சந்திக்காமல்
இருப்பதுதான் ஞானிக்கு
நல்லது!

இல்லாவிட்டால் அஞ்ஞானியின்
அபஸ்வரத்துக்கு  ஞானி ஒழுங்காக
நடனம் ஆட வேண்டும் என்ற
முட்டாள் தனமான கோரிக்கையை
நிறைவேற்றியாக வேண்டும்!


ஒரு பிரதி என்பது
(எவ்வொரு பிரதியும்)
ஒரு பாதையைப் போன்றது தான்
இல்லையா?

ஒரு வரிக்கவிதை என்றாலும்
ஒரு பக்கக்கட்டுரை என்றாலும்
நூறு பக்க நாவல் என்றாலும்
முதல் வரியை வாசிக்கத்
தொடங்கியதும் நாம் அந்தப்
பாதையில் இறங்கி நடக்கத்
தொடங்கிவிடுகிறோம்!
நாம் அப்பிரதியின் கடைசி
வரியை வாசித்து முடிக்கும் போது
அப்பிரதி நம்மை எங்கு கொண்டு
சேர்த்துள்ளது; எத்தகைய உணர்வை
நம்மிடம் தொற்றவைத்தது;
எத்தகைய தாக்கத்தை நம் மீது
உண்டாக்கியது என்பது
முக்கியமில்லையா?

ஒரு கவிஞன், கட்டுரையாளன்
நாவலாசிரியன், எழுத்தாளன்
என்பவன் ஒரு வழிகாட்டி
போலத்தான் அல்லவா?

ஒரு பிரதி அல்லது
கவிதையின் முடிவு
நம்மை பாழும் கிணற்றுக்குக்
கொண்டு சேர்க்கிறதா அல்லது
பசும் சோலைக்குக் கொண்டு
சேர்க்கிறதா என்பதைக்
கண்டு கொள்ளாமல் இருக்க
முடியுமா?

ஒரு வழிகாட்டி அல்லது ஒரு பிரதி
நம்மை எங்குமே கொண்டு
செல்லவில்லை; எந்த செய்தியையும்
சொல்லவில்லை என்றால்
அவன் ஒரு வழிகாட்டியுமல்ல,
அது ஒரு பிரதியுமல்ல!
அப்படிப்பட்டவை தேவையேயில்லை!


எல்லாருடைய போதனைகளும்
காற்றில் கலந்து போனதைப்போல
என்னுடைய போதனைகளும் காற்றில்
கலந்து போவது குறித்து நான் மிக்க
மகிழ்ச்சியடைகிறேன்!
காற்றாவது தூய்மையடையட்டும்!


மா.கணேசன்/ நெய்வேலி/ 19.02.2017
----------------------------------------------------------------------------

Sunday, 19 February 2017

"இப்போது நேரம் என்ன?"






"இப்போது நேரம் என்ன?"
என்று தான் கேட்டேன்!
உங்களது கருத்தைக் கேட்கவில்லை!
<>

'மெட்டாலிக்கா' ராக் குழுவின் ஒரு பாடல்:

"சுதந்திரப் பேச்சு, சுதந்திரப்பேச்சு, ஊமைகளுக்கு!
"சுதந்திரப் பேச்சு, சுதந்திரப்பேச்சு, ஊமைகளுக்கு!
"சுதந்திரப் பேச்சு, சுதந்திரப்பேச்சு, ஊமைகளுக்கு!
"சுதந்திர  'Fucking' பேச்சு!

<>

செவிடர்களின் ராஜ்ஜியத்தில்
ஊமைகளுக்கு முழுப் பேச்சு சுதந்திரமாம்!
உண்மையை ஊமையாக்கி,
உரக்கப் பேசும் பொய்மைகளின் சமூகம்
இப்படியில்லாமல் வேறெப்படியிருக்கும்?
பிணியாளனுக்கு வைத்தியன் வேண்டிய
காலம் மாறி வைத்தியனுக்கு பிணியாளிகள்
மருத்துவம் பார்க்கும் காலமாச்சுடா!
இதயத்தின் நிறைவினால் வாய் பேசினால்
அது அர்த்தம்!
தலை கனத்துப்போனதால் வாய் பேசுவது
விபரீதம்!

<>

உமது கருத்து என்பது என்ன?
அதன் நீள அகல உயரம் என்ன?
அதன் தோற்றுவாய் எது?
உம்மிடம் எண்ணம் இருந்தாலும்,
இல்லையென்றாலும் சூரியன் உதிக்கும்!
கோள்கள் தத்தம் பாதையில் வலம் வரும்!
உமது கருத்தை உமது இயல்பூக்கிக்களும்
மதிப்பதில்லை!
உமது கருத்துகளை உருவாக்குவதும்
உண்மையில் அவையே!
உமது விருப்பம் என்பது உன்னுள்
உயிர்த்திருக்கும் விலங்கின் கட்டளைகள் தானே!
உமது கருத்தால் ஒரு சிறு அணுவையாவது
உன்னால் மாற்றியமைக்க முடியுமா?
உமது எண்ணங்கள் உலகப் பொருட்களின்
பிரதிபலிப்புகள் தானே!
தன் நிஜத்தைத் தேடிச்செல்லும் பிரபஞ்சம்
ஒரு தற்காலிக நிஜம் எனில்
அதன் பிரதிபலிப்பான உம் எண்ணங்களால்
என்ன பயன்?
உமது அபிப்பிராயம் என்பதென்ன?
சமூகத்தை பிளவுபடுத்தும் கூருளியல்லவா!
உமது அபிப்பிராயமும், உமது சக மனிதர்களின்
அபிப்பிராயங்களும் முரண்படுகையில்
ஒட்டு மொத்தமாக நீங்கள் எங்கே போய்ச்சேர்வீர்?
உமக்கென்று நோக்கம்  ஏதும் உள்ளதா?
உம்மைச் செலுத்தும் இச்சைகளுடையதைத் தவிர!
உமது கருத்துகளால் புனையப்பட்ட சிலந்தி வலை
போன்றதே உமது சுயமும், உமது சுருங்கிய உலகமும்!
அதன் மையத்தில் ஒரு சிலந்தி போலச் சிறைப்பட்ட நீர்
'கருத்து சுதந்திரம்',  'பேச்சு சுதந்திரம்' பற்றி
முழங்குவதென்ன?
அனைத்துக்கருத்துக்களிடமிருந்து விடுபவது தானே
உண்மையான சுதந்திரம்!
அர்த்தமில்லாமல் சுதந்திரமாகப் பிதற்றுவதனால்
என்ன பிரயோசனம்?

<>

• "நான் என்ன நினைக்கிறேன் என்றால்..."

*   அட, நீர் நினைத்து என்ன ஆகப்போகிறது?

• அப்படியானால், என் கருத்தைச் சொல்லவேண்டாமா?

*   உம்முடைய கருத்து வேண்டாம், உண்மையைச்
    சொல்லுங்கள், போதும்!

• அப்படியானால், என் கருத்தில் உண்மை இல்லை
     என்கிறீர்களா?

*    உண்மையை நீர்  அறிந்திருந்தால் உம்மிடம் கருத்து ஏதும்
      இருக்காது! உண்மை கருத்துக்களால் ஆனதல்ல!

• அப்படியானால், நீங்கள் சொல்வது உங்களுடைய கருத்து
     இல்லையா?

*   நான் சொன்னதின் உண்மையைப் பார்த்தீரெனில் அது
    கருத்து இல்லை! நான் சொன்னதை என் கருத்தாகப் பார்த்தால்
    அது உண்மையாகத் தெரியாது!

• அப்படியானால், நான் உண்மையை அறிந்திருக்கவில்லை
     என்கிறீர்களா?

*   உமது சந்தேகமே அதன் நிரூபணம் !

• அப்படியானால், நான் எதுவும் பேசக்கூடாதா? கேட்கக்கூடாதா?

*   பேசலாமே, ஆனால், அறிந்தவற்றை மட்டும்!  கேட்கலாம்,
    முன்-முடிவுகள் இல்லாத, சார்பு நிலை தழுவாத,  உண்மையான
    உங்கள் சந்தேகங்களையும், கேள்விகளையும் கேட்கலாம்!
    அறியாதவற்றை உங்களது கருத்துக்களைக்கொண்டு எட்ட
    முடியாது! சிந்திப்பது என்பது நேரடியாக உண்மையைக்
    காண்பதற்காக வழியில் உள்ள தடைகளை நீக்குவதே!
    ஆகவே, அறியாதவற்றைப்பற்றி நீங்கள் கருத்து  எதுவும்
    சொல்ல முடியாது!

• நீங்கள் சொல்வது புரியவில்லை!

*   புரியவில்லை என்று சொல்வது உண்மையின் தோல்வியல்ல!
    உம்முடைய தோல்வியும், உம் அறியாமையின் வெற்றியுமாகும்!

• அப்படியானால், நாங்கள் என்ன செய்வது?

*   நீங்கள் செய்வதற்கு எதுவுமில்லை! உண்மையை ஏற்றுக்
    கொள்ளுங்கள்! ஆம், உங்களைப் பற்றிய உண்மையும்
    சேர்த்துத்தான்!

•  !??

<>

"இப்போது நேரம் என்ன?"
என்று கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்?
உங்களிடம் கடிகாரம் இல்லையெனில்,
"தெரியவில்லை, என்னிடம் கடிகாரம் இல்லை"!
என்றுதானே கூறுவீர்கள்!
ஆக, உண்மையை நீங்கள் அறியாத பட்சத்தில்
அது பற்றி கருத்து சொல்ல என்ன இருக்கிறது?

<>

மா.கணேசன்/ நெய்வேலி/ 18.02.2017
----------------------------------------------------------------------------

Saturday, 18 February 2017

இயற்கையுலகிலிருந்து மனிதன் தனித்தவனா? (பகுதியும் முழுமையும் பற்றிய பிரச்சினை)



               •••
            பரிணாம (மாற்ற)த்திற்கு உட்பட்டதொரு நிஜம்
            தொடக்கத்திலிருந்தது போல
            இடையிலும், இடையிலிருப்பதைப்போல
            இறுதியிலும் இருப்பதில்லை!
               •••
இயற்கையுலகிலிருந்து மனிதன் தனித்தவனா? அதாவது, இயற்கையுலக
மும் மனிதனும் வேறு வேறா? இக்கேள்வி சிந்தனை தொடங்கிய திலிருந்து
இன்றுவரை தொடர்ந்து நீடித்துவரும் பகுதியும் முழுமையும் பற்றிய பெரும்
(தத்துவப்) பிரச்சினையாகும்.

ஒருவகையில், மனிதன் இயற்கையுலகிலிருந்தும், இப்பிரபஞ்சத்திலிருந்தும்
தனித்தவனல்ல! அவனது பரிணாமத் தோற்றத்தினடிப்படையில் அவன்
பிரபஞ்ச இயற்கையின் ஒரு பகுதியே ஆவான்.

இன்னொரு வகையில், அவனது பரிணாம உட்பொதிவு, மற்றும் ஒட்டு
மொத்த பரிணாமத்திட்டத்தின் நோக்கிலிருந்து காணும் போது, மனிதன்
இயற்கையுலகின் முக்கியத்துவமற்ற ஏதோவொரு பகுதியோ அல்லது நிரந்
தரமானதொரு  பகுதியோ  அல்ல! இப்பார்வையின் கடை முனையிலிருந்து
காண்கையில், இயற்கையுலகம், பிரபஞ்சம் என்பது மனிதனின் பகுதியாக
மாறிவிடுவது அவசியமாகும்! எவ்வாறு கம்பளிப்புழுவானது வண்ணத்துப்
பூச்சியாக மாறிய பிறகு, அக்கம்பளிப்புழு வண்ணத்துப்பூச்சியின் பகுதி
யாக மாறிவிடுகிறதோ அவ்வாறு!

இவ்விடத்தில், இயற்கையும் மனிதனும் வேறு வேறு அல்ல என்று பழம்
தத்துவம் பேசுபவர்கள் கவனிக்கவேண்டிய முக்கிய விஷயம் என்னவென்
றால், இயற்கையும் மனிதனும் நிச்சயம் வேறு வேறு தான்! ஏனெனில்,
மனிதனே தற்போதைய "புதிய இயற்கை"யாவான்! மேலும், அவனே இயற்
கையின் உள்ளார்ந்த விழைவை உணர்ந்து பிரதி நிதித்துவம் செய்பவனும்,
அவ்விழைவு சுட்டும் இலக்கை நிறைவேற்றக் கூடியவனுமாக இருக்கிறான்!
மனிதனை "மூன்றாம் இயற்கை",  அல்லது "மூன்றாம் பிரபஞ்சம்" என்று
அழைப்பதே மிக்கப் பொருத்தமானதாகும்! அதாவது பௌதீகச் சடப்பொரு
ளாலான தொடக்க நிலை பிரபஞ்சத்தை நாம் "முதலாம் இயற்கை", அல்லது
"முதலாம் பிரபஞ்சம்" என்று அழைப்பது தான் முறையாகும்! ஏனெனில்,
பௌதீகச் சடப்பொருளானது ஒரு கட்டத்தில் உயிர்-ஜீவியாக எழுந்து விட
வில்லையா? ஆம், உயிர்-ஜீவியின் (அல்லது உயிரியல்) கோளம் தான் அந்த
"இரண்டாம் இயற்கை", அல்லது  "இரண்டாம் பிரபஞ்சம்" ஆகும்! உயிர்த்
தோற்றத்தை அடுத்து, மனிதஜீவியுடன் தொடங்கிய  உணர்வியல் கோளம்
தான் நாம் குறிப்பிடும் அந்த "மூன்றாம் பிரபஞ்சம்" அல்லது "மூன்றாம்
இயற்கை"யாகும்! இயற்கையானது பண்பு ரீதியாக, சடமாகத்தோன்றி,
உயிராக எழுந்து, தற்போது மனிதனாக, மனிதனுள் உணர்வாகவும் உயர்ந்
துள்ள இந்நிலையில், எங்கிருக்கிறது இயற்கைவாதிகளும், பொருள்முதல்
வாதிகளும், இன்னும் விஞ்ஞானிகளும் சொல்லுகிற அந்த ஆதி இயற்கை!
தன் இறுதி இலக்கை அடையும் வரை தொடர்ந்து பண்பு ரீதியாக மாற்றம
டைந்து செல்வது தான் இயற்கையின் இயற்கை (இயல்பு) ஆகும்! தற்போது
இயற்கை  எப்பண்பு நிலையை எட்டியுள்ளதோ அப்பண்பைக் கொண்டு
தான் இயற்கையானது சுட்டப்படவும், குறிக்கப்படவும் வேண்டும்!

'லிபரேஷன் அன்லீஷ்ட்' குழுவினர் போன்ற பலர், இந்த உலகத்தின் இயற்
கையிலிருந்து நாம் தனித்தவர்கள் என்ற மாயையிலிருந்து விடுபட
வேண்டும் . . . என்பதாக புதிதாக,  'தலை கீழ்' தத்துவம் பேசி வருகிறார்கள்!
ஆனால், உண்மையில், மனிதஜீவிகளாகிய நாம் இயற்கையிலிருந்தும்,
பிரபஞ்சம் என்பதிலிருந்தும், தனித்தவர்கள், வேறுபட்டவர்கள் மட்டுமல்ல;
இன்னும் நாம் அசலான மனிதன் என்பவனிலிருந்தும் வேறுபட்டவர்களே!
அதாவது நாம் இன்னும் அசலான மனிதனாக எழவில்லை என்பதுதான்
உண்மை நிலையாகும்! ஆகவே, நாம் விடுபடவேண்டுமெனில், அது,
'மனிதனும் இயற்கையும் வேறு வேறு அல்ல' எனும் சிறு பிள்ளைத்தனமான
பிணைப்பிலிருந்தும், அறியாமையிலிருந்தும்தான் அவசரமாக விடுபட்டாக
வேண்டும்!

ஏனெனில்,மனிதன் இயற்கையுலகிலிருந்து  தனித்தவன் மட்டுமல்ல!அவன்
இன்னும் தனது மிகவும் மட்டுப்பாடான தற்போதைய  நிலையிலிருந்தும்
வேறுபட்டவனாவான்! தற்போதைய மனிதன் உண்மையான மனிதனின்
நிழல் போன்றவனே!

மனிதன் இயற்கையுலகிலிருந்து தோன்றியவன் எனக்காண்பது அவனைப்
பற்றிய மேலெழுந்தவாரியான உண்மையே தவிர, அதுவே முடிவான இறுதி
உண்மையல்ல! ஏனெனில், இயற்கையுலகின் ஒரு விசேடமான "அவதாரம்"
தான் மனிதன்! இதன் அர்த்தம், பிரபஞ்சம் அல்லது இயற்கையுலகம் தான்
பரிணாமம் எனும் வழிமுறையின் மூலமாக மனிதனாக மாறியுள்ளது!
அதாவது, மனிதன் என்பவன் பிரபஞ்சத்தின் புதியதொரு வடிவமாவான்.
இவ்வகையில், மனிதன் வேறு பிரபஞ்சம் வேறு அல்ல! அதே வேளையில்,
பிரபஞ்சப் பரிணாமம் மனிதன் எனும் புதிய வடிவத்துடன் நிறைவடைந்து
விடுவதில்லை! மாறாக,மனிதனையடுத்த, அல்லது மனிதனைக்கடந்த ஒரு
இறுதி வடிவத்தை அடையவேண்டியுள்ளது! இந்த அரிய, இறுதி மாற்றத்தை,
உணர்வுள்ள ஒவ்வொரு மனிதனும்தான் தன்னுள் கொணர்ந்திடவும்,
நிகழ்த்திடவும் வேண்டியுள்ளது! ஆம்,தொடர்ந்து தன்னை மறுகண்டுபிடிப்பு
செய்பவனே, தொடர்ந்து தன்னை மறு உருவாக்கம் செய்பவனே மனிதன்!

நதியானது தனது முழுமையை, இலக்கு நிலையை அடையும் போது அது ஒரு
நதியாக இருப்பதில்லை!அவ்வாறே, மனிதனும் தனது  முழுமையை, இலக்கு
நிலையை அடையும் போது மனிதனாக இருக்கவியலாது!

இயற்கையிலிருந்து தோன்றியவனே மனிதன் என்றாலும், அவன் இயற்கை
யை மீறிச் செல்லும் இயற்கையை, பேரியற்கையைச் சேர்ந்தவனாவான்!
மேலும், இயற்கை சுய-உணர்வு பெற்றிடும் போது அது தொடர்ந்து பழைய
இயற்கையாக இருப்பதில்லை! அதாவது, இயற்கை மனிதனாகி, மனிதனுள்
உணர்வாகிடும் பட்சத்தில், மனிதன் என்பவன் சுய-உணர்வு பெற்ற புதிய
வகை இயற்கையாவான்! அதாவது, இயற்கையின் உள்ளார்ந்த இயற்கை
யின்படி (இயல்பின்படி), இயற்கையானது இயற்கையாகவே இறுதிவரை
தொடரவோ, நீடிக்கவோ இயலாது! ஏனெனில், இயற்கை என்பது மாறாத
இயற்கை அல்ல; மாறாக, அது  தொடர்ந்து வளர்ந்து தம்மைத்தாமே கடந்து
செல்லக்கூடிய, பண்பு ரீதியான மாற்றத்திற்கு உட்பட்டதொரு  பரிணாம
நிஜமாகும்!

இயற்கை, உலகம், பிரபஞ்சம்  என அதை எவ்வாறு அழைத்தாலும், பிரதான
மாக  அது ஒரு ஒப்பற்ற இலக்கைக் குறிவைத்து முன்னேறிச்செல்லும் ஒரு
பரிணாம இயக்கமாகும். அது தன் அர்த்தத்தை, தனது நீடித்த இருப்பிலிருந்
தல்லாமல் தனது அந்த ஒப்பற்ற இலக்கை அடைவதிலிருந்தே பெறுகிறது!
ஆக,மனிதன் உட்பட பிரபஞ்சத்தின் வெவ்வேறு பகுதிகளும் அந்த ஒப்பற்ற
இலக்கை அடைவதற்கான கருவிகளாக தத்தம் பங்கு பணியை ஆற்றுவதற்
கென உருவான பிரபஞ்சத்தின் நீட்சியும் வளர்ச்சி நிலைகளுமே யாகும்!

பகுதியும் முழுமையும் பற்றிய பிரச்சினையில், பலர் இயற்கையுலகை,
பிரபஞ்சத்தை ஒரு முழுமையெனக் கருதிக்கொண்டு தங்களது வாதங்களை
முன் வைக்கிறார்கள். ஆனால், அது ஒரு முழுமை அல்ல; அது பலவித பகுதி
களைத் தம்முள் கொண்டஒரு அமைப்பு மாத்திரமே! உண்மையில், உலகம்,
பிரபஞ்சம் என்பது ஒரு அமைப்பு மட்டுமல்ல, அது ஒரு இயக்கமும் ஆகும்.
அந்த இயக்கத்தை  நாம் பரிணாமம் என்கிறோம். அதாவது, பிரபஞ்சம்
என்பது நிலையானதும், முழுமையானதுமான ஒரு அமைப்பு அல்ல. மாறாக,
அது முழுமையை நோக்கிச் செல்லும் ஒரு இயக்கம் ஆகும்!

அடுத்து, உலகம் எனும் அமைப்பை ஒரு முழுமையெனக்கொண்டால், அதன்
பகுதிகள் யாவும் ஒரேமாதிரியாகவோ,ஒரே தரத்திலமைந்ததாகவோ, இருப்
பதில்லை. ஒரு கடிகாரத்தைப்பொறுத்தவரை, சந்தேகமின்றி அதை ஒரு
முழுமையான அமைப்பு என்று சொல்லலாம். ஆனால், அதே வேளையில்,
அக்கடிகாரத்தின் அனைத்துப்பகுதிகளும் ஒரே மாதிரியாக இருந்தால், அது
ஒரு கடிகாரமாக, நேரம் காட்டும் கருவியாக இயங்கவியலாது!

அடுத்து, எவ்வொரு அமைப்பைப் பொறுத்தவரையிலும், அதன் பகுதிகள்
அந்த அமைப்பை (முழுமை) யும், அம்முழு-அமைப்பு அதன் பகுதிகளையும்
சார்ந்திருப்பது என்பது தவிர்க்கவியலாததாகும். நாம் இடம்பெறும்(வாழும்)
இப் பிரபஞ்சம் எனும் அமைப்பைப் பொறுத்தவரை, நாம் அதன் பகுதிகளே
என்றாலும்,நாம் ஏதோ அதன் முக்கியத்துவமற்ற சாதாரணபகுதிகள் அல்ல!
மேலும், ஒரு மனித இனம் அல்லது மனித சமூகம் என்கிற வகையில்,  நாம்
அனைவரும் ஒரு உருப்படியோ, அல்லது ஒரு படித்தானவர்களோ அல்ல.
மாறாக, ஒவ்வொரு தனிமனிதனும் இப்பிரபஞ்சத்தின் முழுமையாக ஆகக்
கூடியவனும், இப்பிரபஞ்சத்தை முழுமைப்படுத்தக்கூடிய பிரதிநிதியும்
ஆவான்!  எவ்வாறு ஒரு மரத்திற்கு, கிளைகள், சிம்புகள், இலைகள், பூக்கள்,
பிஞ்சுகள், காய்கள் என பல பகுதிகள் இருந்தாலும், அம்மரத்தின் முழுமை
யைப்பிரதி நிதித்துவம் செய்யக்கூடியதாக, அதாவது, கனியாகக்கூடியதாக
அதன் ஒவ்வொரு பிஞ்சும் காயும் பிரத்தியேகமான பகுதியாக விளங்கு
கிறதோ அவ்வாறே ஒவ்வொரு மனிதனும் பிரபஞ்ச விருட்சத்தின் முழுமை
யைக்குறிக்கும் கனியாக மாறக்கூடியவனாக விளங்குகிறான்!

இவ்விடத்தில் நாம் தெளிவாகப்புரிந்துகொள்ளவேண்டிய விஷயம் என்ன
வெனில், ஒரு கடிகார அமைப்பின் முழுமை என்பது வேறு; பிரபஞ்ச அமைப்
பின்முழுமை என்பது வேறு!சரியாக இயங்கக்கூடிய ஒரு கடிகாரஅமைப்பை
நாம் ஒரு முழுமை என்று கொள்ளலாம்; ஒரு கடிகாரத்தைப்பொறுத்தவரை
அதன் பகுதிகள் இல்லாமல் முழுமை இல்லை;மேலும்,பகுதியும் முழுமையும்
பரஸ்பரம் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன எனலாம். இதையே பிரபஞ்ச
அமைப்புக்கும் நாம் பொருத்திக் கூறலாம். ஆனால், ஒரு கடிகாரத்தைப்
போலல்லாமல், பிரபஞ்சஅமைப்பு என்பது வளரக்கூடிய,பரிணமிக்கக்கூடிய
தொரு அமைப்பு ஆகும். பிரபஞ்சமானது மனிதனாகப்பரிணமித்து, மனித
னின் உள்ளேயும், ஊடாகவும் சென்று தன் இலக்கு நிலையான முழுமையை
அடையும் போது அந்நிலையில், பிரபஞ்சமும் இருப்பதில்லை, மனிதனும்
இருப்பதில்லை!  மாறாக, பிரபஞ்சம், மனிதன் எனும் இரண்டு மெய்ம்மை
களும் முழுமை எனும் ஒருமையில் கரைந்து, இறுதியான அந்த  மெய்ம்மை
யோடு மெய்ம்மையாகக் கலந்து விடுகின்றன!

ஆகவே, இனியும், மனிதனை, பிரபஞ்சத்தின் முக்கியத்துவமற்ற ஏதோ ஒரு
பகுதியாகக் குறைத்துக்கூறுவது என்பது பொருத்தமற்றதும்,அறியாமையின்
வெளிப்பாடுமே ஆகும்! இன்னும், மனிதன் என்பவன் பலவகை உயிரினங்
களில் அவனும் ஒரு உயிரினமோ, அல்லது ஒரு விலங்கு ஜீவியோ அல்ல!
மனிதன் அவனது சாரத்தில் ஒரு உணர்வேயாவான்.  இன்னும் சொல்லப்
போனால், மனிதன் என்பவன் உடல் எனும் விலங்குஜீவியினுள் தற்காலிக
மாகத்தங்கி வாழும் முற்றிலும் வித்தியாசமானதொரு மெய்ம்மை ஆவான்!

மேலும், பண்பு ரீதியாக,  இயற்கை அல்லது பிரபஞ்சம் அடைய வேண்டிய
இலக்கு நிலையான இறுதி மாற்றத்தைப்பொறுத்தவரை அவை மனிதனை,
ஒவ்வொரு தனி மனிதனையுமே சார்ந்திருக்கிறது!

ஆகவே,பிரபஞ்ச இயற்கை,மனிதன், இவ்விரண்டுக்கும் பொதுவான இலக்கு,
என இம்மூன்றும் ஒரே பரிணாம நிகழ்வுமுறையின் வெவ்வேறு நிலைகளை,
கட்டங்களைக் குறிக்கும் மெய்ம்மைகளே! மேலும், பரிணாம நிகழ்வுமுறை
யானது இறுதிக்கட்டத்தை,நிலையை அடையும்போது அங்கே இயற்கையோ,
பிரபஞ்சமோ, இன்னும் மனிதனோ எதுவும் இருக்காது! இறுதி மெய்ம்மை
மட்டுமே இருக்கும்! அந்த இறுதி மெய்ம்மையை ஒவ்வொரு மனிதனும்
நேரடியாக உணர்ந்தடைய முடியும்! அவ்வாறு உணர்ந்தடையும் போது
நீங்கள் ஒவ்வொருவரும் அம்மெய்ம்மையை என்ன பெயர் வைத்து வேண்டு
மானாலும் அழைத்துக் கொள்ளலாம்!


மா.கணேசன்/ நெய்வேலி/  15.02.2017
----------------------------------------------------------------------------


நடுவிலே நடனமாடும் அர்த்தம்!

      பிரபஞ்சத்தின் தொடக்கம் ஒரு புரியாத புதிர்,  அதன் முடிவும் ஒரு புரியாத புதிரே!  இரண்டுக்கும் நடுவே நடனமாடுகிறது அர்த்தம்! ✨            ...