Thursday, 22 March 2018

கடவுள் பிஞ்சுகள்!





மனிதன் எதன் மீது அதீத ஆர்வமும், தீவிர பற்றும் கொள்கிறானோ அதுவே அவனது மதம் ஆகிறது,

அது கிரிக்கெட், மது, காதல், பணம், சொத்து, கடவுள் இருக்கிறார் என நம்புவது, கடவுள் இல்லை என மறுப்பது, ஒரு கொள்கை, கோட்பாடு.....என எதுவாயினும், அதுவே ஒருவனது மதம்!

ஆகவே ஒருவனது மதம் இன்னொருவனுக்கு வெறித்தனமாகவும்; ஒருவனது கடவுள் இன்னொருவனுக்கு சாத்தானாகவும் தெரிகிறது!

ஆனால், புதிரான இப்பிரபஞ்சத்தில், தன்னையும், வெறும் உயிர்-பிழைத்தலைத் தாண்டிய தனது வாழ்வையும் அர்த்தப்படுத்தும் வகையில் மனிதனுக்கு புதிரான வேறொன்று தேவைப்பட்டது!

அந்த வேறொன்றினைச் சுட்டும் குறியீடு தான் "கடவுள்" என்பது! புதிரான அந்த வேறொன்றின் தேவையை நேரடியாக தன் அகத்தே உணர்வது தான் உணர்வார்ந்த மதத்தின் முதல்படி!

அவ்வுணர்வை கடனாகக் கொடுக்கவோ, வாங்கவோ முடியாது; அதை ஒரு நிறுவனமாகவும் கட்டியெழுப்ப முடியாது! அவ்வுணர்வு ஒவ்வொருரிடமும் தாமே துளிர்த்திட வேண்டும்!

அவ்வுணர்வில் மேன்மேலும் உயர்ந்து அதன் உச்சியைத் தழுவிக்கொள்வதே இறுதிப்படியான கடவுள் அனுபவம்!

ஆகவே தான் தத்துவ விசாரத்தில் சிறந்து விளங்கிய அந்த அரசன் சொன்னான், "மூடர்களே, இது என்ன சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு! கடவுளைக் கேட்டால், இந்த பொம்மைகளைக் கொண்டுவருவதென்ன? உங்கள் தலைகளைக் கொய்வதற்குள் கொண்டு போய்விடுங்கள் அவற்றை
உடனே; போய் இனியாவது சிந்திக்கத் தொடங்குங்கள்!" என்றான்.

ஏனெனில், கடவுள் என்பது அன்றாடத் தேவைகளுக்கு உதவும் தட்டுமுட்டுச் சாமான்களைப் போன்றதல்ல! அது அன்றாட வாழ்வைக்கடந்த உயர்-வாழ்க்கைக்கான அகத்தேவை யாகும்!

ஆக, நேரடி அனுபவத்தைத்தராத எவ்வொரு பொருளும், குறியீடும், நம்பிக்கையும், பக்தியும், ஈடுபாடும், சடங்கு, சாத்திரங்கள்..... யாவும் வெறும் தட்டுமுட்டுச் சாமான்களே தவிர வேறல்ல! புதிரான அந்த
மெய்ம்மையைக் குறிக்கும் எதுவொன்றும் இவ்வுலகிலும், வேறு எவ்வுலகிலும் கிடையாது!

ஆயிரம் சிலைகளை, பொம்மைகளைச் செய்து கோயில்களில் பிரதிஷ்டை செய்யலாம்; ஆனால், ஒவ்வொருவரும் தம் அகத்தின் உச்சியில் கண்டடையும் கடவுளைப் போல் எதுவும் ஆகாது!

மேலும், ஒருவனது பசிக்கு இன்னொருவன் உண்ணமுடியாது! ஆகவே, எல்லோருக்கும் பொதுவான கடவுள் என்று எதுவும் இல்லை! உணர்ந்தறிபவனுக்கு மட்டுமே கடவுள் உண்டு! அறியப்படாத கடவுள்
இல்லாத நிஜம்!

ஒட்டுமொத்த விருட்சத்திற்கும் ஒரு விதை மூலமானது என்பதென்னவோ உண்மைதான்! ஆனால், அவ்விருட்சத்தின் எல்லாக் காய்களுக்கும் பொதுவான ஒரு வித்து எங்கேயுமில்லை! ஏனெனில், அவ்வித்துதானே தற்போது விருட்சமாக எழுந்துள்ளது! ஆம், ஒவ்வொரு காய்க்குமான வித்து
அதனுள்ளேயேதான் உள்ளது! ஆம், ஒவ்வொரு காயும் நன்றாக முற்றிக் கனியாகும் போது, தானும், மூலமும் ஒன்றாகிவிட்டிருப்பதை அறிந்துகொள்ளும்!

ஆக, உலகில் எத்தனை கோடி தனிமனிதர்கள் இருக்கிறார்களோ அத்தனை கோடி மதங்கள் தேவை!
ஏனெனில், அத்தனை கோடி தனிமனிதர்களும் அத்தனை கோடி கடவுள்களாக கனிய வேண்டிய கடவுள் பிஞ்சுகள், காய்கள்!

மா.கணேசன் • 22-03-2018
............................................................................

Monday, 19 March 2018

நியூட்ரினோ திட்டம் (ஆர்வக்கோளாறின் விஞ்ஞானம்!)




[சுற்றுச் சூழலுக்கும் மக்களுக்கும் ஆபத்தானது!]


          "பூமிக்கோளத்தின் மீது நம்மால் முறையாக
          வாழ இயலாத போது சந்திரனில் மனிதனை
          இறக்குவதனால் என்ன பயன்?"
                            --  அந்தோனி டி மெல்லோ

இக்கட்டுரை விஞ்ஞானத்திற்கு எதிரானதல்ல; மாறாக, தவறான விஞ்ஞானத்
திற்கு எதிரானது. இன்னும், முதிர்ச்சி பெறாத, எந்திரத்தனமான, தட்டையான,
மேலோட்டமான அணுகுமுறைகளில் சிக்குண்ட விஞ்ஞானத்திற்கு எதிரானது.

இக்கடுரையின் பிரதான முக்கியச் செய்தி என்னவெனில், தேனி மாவட்டத்தில்
இந்திய விஞ்ஞானிகளால் மேற்கொள்ளவிருக்கும் பெருஞ்செலவு பிடிக்கும்
"நியூட்ரினோ" ஆய்வுத்திட்டம் பயனற்றது, தேவையில்லாதது. அதாவது,
மக்களின் வரிப்பணத்தை விரயமாக்கி 'விஞ்ஞான ஆராய்ச்சி" என்ற பெயரில்
விஞ்ஞானிகள் தங்களது கோளாறான ஆர்வத்தை (Curiosity) திருப்தி
செய்து கொள்ளும் ஒரு (வீண்) முயற்சியே தவிர வேறில்லை என்பதே!

இக்கட்டுரையின் இரண்டாவது முக்கியச் செய்தி என்னவெனில், அணுவின்
கருவைப் பிளந்து "கடவுள் துகள்" எனப்படும் ஹிக்ஸ் போஸான் (Higgs-
Boson) துகளைக் (அதாவது பருப்பொருளின் ஆகச் சிறிய பகுதியான அணுத்
துகளின் உள்ளடக்கமாக இருக்கும் இருநூற்றுக்கும் மேற்பட்ட அணுக் கருத்
துகள்களில் ஒன்றிற்குப்பெயர் தான் 'ஹிக்ஸ் போஸான்' என்பது) கண்டுபிடித்
ததன் வழியாகவும், அல்லது "பிசாசுத் துகள்" என்றழைக்கப்படும் நியூட்ரினோ
துகளை சிறைப்படுத்தி ஆராய்ச்சி செய்வதன் வழியாகவும், அல்லது, கோட்பாடு
ரீதியாக அனுமானிக்கப்பட்ட வேறொரு துகளைக் கண்டுபிடித்து ஆராய்வதன்
வழியாகவும், அல்லது, செவ்வாய்க் கிரகத்திற்கோ, வியாழன் கிரகத்திற்கோ,
அல்லது அதையும் தாண்டி புளூட்டோ கிரகத்திற்கோ 'கியூரியாசிட்டி' போன்ற
விண்கலங்களையோ அல்லது மனிதர்களையோ அனுப்பி ஆராய்வதன்
வழியாகவும், அல்லது அண்ட வெளியிலுள்ள கணக்கற்ற நட்சத்திரங்களையும்,
கேலக்ஸிகளையும் துல்லியமாக எண்ணிக் கணக்கிடுவதன் வழியாகவும்;
அல்லது, பல்ஸார், குவாஸார், கருந்துளை (Black Holes)போன்ற விநோ
தமான அண்டவெளிப்பொருட்களையும், நிகழ்வுகளையும் ஆராய்ந்தறிவதன்
வழியாகவும், ஒருபோதும் நாம் வாழும் இப்பிரபஞ்சம் எவ்வாறு உருவானது
என்ற ரகசியத்தைக் கண்டுபிடிக்கவோ, இப்பிரபஞ்சத்தை முறையாக, முழுமை
யாகப் புரிந்துகொள்ளவோ முடியாது என்பது தான்!

மூன்றாவது முக்கியச்செய்தி என்னவெனில், நவீனவிஞ்ஞானத்தின் உள்ளார்ந்த
குறைபாடுகளினால் இம்மாதிரியான மேலோட்டமான ஆராய்ச்சிகள் பிரபஞ்சம்
பற்றிய உருப்படியான புரிதலையோ, எவ்வாறு நாம் இப்பிரபஞ்சத்தில் வாழ்வது
என்பது பற்றியோ; மனித வாழ்வின் அர்த்தம், குறிக்கோள், மற்றும் இலக்கு
குறித்த புரிதலையோ அளித்திடாது என்பதுதான்!

ஆகவே, வெறும் பொருளாதாரக் காரணங்களுக்காக மட்டுமின்றி மேற்சொன்ன
தவறான விஞ்ஞான ஆராய்ச்சி அணுகுமுறைகளை பிரதானமாகக் கொண்டே 
நியூட்ரினோ ஆய்வுத்திட்டம், மற்றும் செவ்வாய்க்கிரக ஆய்வுத்திட்டம் . . . .
போன்றவற்றை ஊக்குவிப்பதும், அனுமதிப்பதும் கூடாது என்கிற வாதத்தை
இக்கட்டுரை முன்வைக்கிறது.

மேலும், பொறுப்புமிக்க, குறைபாடற்ற விஞ்ஞான தத்துவ ஆன்மீகப் பார்வை
யும் கொண்ட ஒவ்வொரு இந்திய/உலகப் பிரஜையும் இம்மாதிரியான ஆர்வக்
கோளாறான, தவறான விஞ்ஞான ஆராய்ச்சிகளை, திட்டங்களை எதிர்ப்பது
மிகவும் அவசியமாகும். அதே வேளையில், இக்கட்டுரை வெறும் எதிர்ப்புக்
குரல் அல்ல; மாறாக, உண்மையின் குரலாகும்.

                               ■ ■ ■

விண்வெளி ஆராய்ச்சிகளுக்கு எதிராக வழக்கமாக முன்வைக்கப்படும் ஒரு
வாதம் என்னவென்றால், "ஏற்கனவே நாட்டில் ஏராளமான பிரச்சினைகள்
இருக்கும்போது, அதிகச் செலவு பிடிக்கும் விண்வெளி ஆராய்ச்சிகள் தேவை
தானா?" என்பதேயாகும். அதேவேளையில், ஒரு நாட்டில், எவ்வளவுதான் உள்
நாட்டுப் பிரச்சினைகளும், அயல் நாடுகளுடன் பிரச்சினைகளும் இருந்தாலும்
அவற்றையெல்லாம் கடந்து பிற விண்வெளி ஆராய்ச்சிகளும் நடைபெற்றுக்
கொண்டுதான் உள்ளன.

இதற்குக் காரணம், நம்மைச்சுற்றியுள்ள உலகை, பிரபஞ்சத்தை அறிந்துகொள்ள
வேண்டும் என்கிற மனிதனின் அடங்காப் பேரார்வம் தான் என்று சொல்லப்படு
கிறது.

நல்லது, மனித ஜீவிகளாகிய நாம் எத்தகைய அமைப்பினுள், உலகினுள்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அறியாமல் ஒரு முழுமையான மனித
வாழ்க்கையை வாழ முடியாது என்பது உண்மையே. இவ்வகையில், பிரபஞ்
சத்தை புரிந்து கொள்ளவேண்டும் என்கிற பேரார்வம் மதிக்கப்படவும், முக்கியத்
துவமும், முன்னுரிமையும் அளிக்கப்படவும் வேண்டும்.

ஆனால், விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் பேரார்வம் -- குறிப்பாக,
விண்வெளி, மற்றும் அணுக்கரு இயற்பியல் துறைகளைச் சேர்ந்த ஆராய்ச்சி
யாளர்களின் ஆர்வமானது, சற்று விநோதமானதாகவும், சில வேளைகளில்,
விபரீதமானதாகவும் உள்ளதென்பது அவ்விஞ்ஞானிகளின் விஞ்ஞான அணுகு
முறையையும், பார்வையையும் சந்தேகிக்கச் செய்கிறது. இவர்களுடைய
ஆராய்ச்சி வழிமுறைகளும், அவற்றிற்குரிய ஆய்வுக்கூடங்களும், பூதாகரமான
எந்திரங்களும், கருவிகளும்; அவற்றை உருவாக்குவதற்காகச் செலவழிக்கப்
படுகின்ற பெருந்தொகையும், மனித சக்தியும், நேரமும், உழைப்பும்; சில
வேளைகளில், இவர்களுடைய பரிசோதனைகள் வெற்றிகரமான முடிவுகளை
தந்திடும் போது -- உதாரணத்திற்கு, அணுகுண்டு போன்ற பேரழிவை விளை
விக்கக் கூடிய ஆயுதங் களையும்; சில வேளைகளில், இவர்களுடைய
பரிசோதனைகள் தவறாகிப் போய்விடும் பட்சத்தில் ஏற்படக்கூடிய பேராபத்துக்
களையும் கருத்தில் கொள்வோமெனில், கண்களை மூடிக்கொண்டு, அறிவு,
வளர்ச்சி, முன்னேற்றம், விஞ்ஞான சாதனை என்கிற பெயர்களில் எல்லாவித
விஞ்ஞான ஆராய்ச்சி களையும் ஊக்குவிக்கவும் அனுமதிக்கவும் முடியாது,
கூடாது!

உண்மையில், பிரபஞ்சத்தை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் தவறேதுமில்லை!
மாறாக, எந்த திசையில் மனிதன் தன் ஆர்வத்தைச் செலுத்துகிறான்; எந்த
திசையில் அவனது ஆராய்ச்சிகள் செல்கின்றன, அதற்கான வழிமுறைகள்,
(உள்) நோக்கங்கள் யாவை என்பதில்தான் கோளாறுகள் உள்ளன.

மேலும், உலகை, பிரபஞ்சத்தை முழுமையாக அறிந்துகொள்ள, புரிந்துகொள்ள
மிகவும் சிக்கலான, பெருஞ்செலவு பிடிக்கும் ஆராய்ச்சி வழிமுறைகளின்
வழியேதான் செல்லவேண்டும் என்பதில்லை.

மாபெரும் விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் யாதொரு புகழ்பெற்ற
பல்கலைக்கழகத்திலும் பயின்றவரல்ல, அவர் தனது மாபெரும் கண்டுபிடிப்
புக்களை யாதொரு பெரிய ஆய்வுக்கூடத்திலும் நிகழ்த்திடவில்லை. தெளிவாக,
தீர்க்கமாகச் சிந்திக்கும் அவரது மனம்தான் ஆய்வுக்கூடம். காகிதமும்,
பென்சிலும்தான் அவரது கருவியும், உபகரணமும். இவற்றைக்கொண்டு தன்
கூரிய மதியால் காகிதத்தில் அவர் எழுதிய எவ்வித பயங்கர தோற்றத்தையும்
கொண்டிராத "E=mc2"(அதாவது, சக்தியானது பொருள்/நிறையாகவும்;
பொருளானது சக்தியாக மாற்றப்படக்கூடியது; சக்தியும், பொருளும் சமம்)
எனும் சமன்பாடானது, அன்றைய இரண்டாம் உலகப் போர் அரசியல் சூழ்நிலை
களுக்குப் பதிலளிக்கும் விதமாக அமெரிக்க விஞ்ஞானிகளின் முயற்சிகளால்
பேரழிவை விளைவிக்கக்கூடிய அணுகுண்டாக அவதாரம் எடுத்தது என்பது
ஒருவகையில் விதிவசமானதுதான்.

ஆக, அணுவையும் அணுவின் விரிவாக்கமான அண்டத்தையும் அதாவது
பிரபஞ்சத்தையும் புரிந்து கொள்ள மிகவும் சிக்கலான வழிமுறைகளும், பெரிய
ஆய்வுக்கூடங்களும், பிரும்மாண்டமான எந்திரங்களும், கருவிகளும் தேவை
யில்லை. ஏனெனில், பூரணமானதொரு விஞ்ஞான அணுகுமுறை என்பது
மிகவும் நேரடியானதும், எளிமையானதும், செலவற்றதும் ஆகும்.

சமீபத்தில், 2012 ஜூலை, 4-ம் தேதி, "கடவுள் துகள்" எனப்படும் ஹிக்ஸ்
போஸான் துகளை கண்டுபிடித்துவிட்டதாக சுவிட்சர்லாந்தின் ஐரோப்பிய
அணுக்கரு இயற்பியல் ஆராய்ச்சிக்கழக விஞ்ஞானிகள் அறிவித்தனர்.
விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் என்பவரால், 50 ஆண்டுகளுக்கு முன்னர் பலவித

அணுக்கருத்துகள்களுக்கும் நிறையை (Mass)அளிக்கும் விதமாக ஒரு அடிப்
படைத்துகள் இருக்கவேண்டும் என முன்மொழியப்பட்ட அந்தத் துகளைத்தான்
தற்போது தங்களது ஆய்வுக் கூடத்தில் கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்துள்
ளனர்.

பல லட்சம் கோடிகள் செலவில் உருவாக்கப்பட்ட விசேடமான எந்திரங்களை
யும், கருவிகளையும் கொண்டு பல நாடுகளையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான
விஞ்ஞானிகளின் சீரிய முயற்சிகளின் விளைவாக கிட்டத்தட்ட "ஹிக்ஸ்
போஸான்" போன்றதொரு துகளை கண்டுபிடித்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
சரி, "கடவுள் துகள்" எனப்படும் ஹிக்ஸ் போஸான் துகளைக் கண்டுபிடித்தாகி
விட்டது! அடுத்தது என்ன?

பெரும்பாலான இயற்பியல் விஞ்ஞானிகளின் கருத்துப்படி, இத்துகளைக் கண்டு
பிடித்தது என்பது ஒரு சாதனை தான், ஆனால், சற்று உற்சாகக் குறைவுடன்
அவர்கள் உணர்வது என்னவென்றால், இதில் புதிதாக ஒன்றும் இல்லை
என்பது தான். இக்கண்டுபிடிப்பின் விளைவாக அணுவைப்பற்றியோ, அல்லது
அண்டத்தைப்பற்றியோ யாதொரு புதிய புரிதலும், பார்வையும் வெளிப்பட
வில்லை. இவை பற்றி ஏற்கனவே நாம் புரிந்துகொண்டுள்ள நிலையிலேயே
தான் இருக்கிறோம் என்கிறார்கள்.

இந்த லட்சணத்தில், "கடவுள் துகள்" போய், "பிசாசுத் துகள்" என்றழைக்கப்படும்
நியூட்ரினோ துகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில், தற்போது இந்திய
விஞ்ஞானிகள் குழு இறங்கவுள்ளது.

1930 - ல், அணுவுக்குள் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் போன்ற துகள்
களைத்தவிர வேறு சில துகள்களும் இருக்கக்கூடும் என்று உல்ஃப் கேங் பாலி
என்ற விஞ்ஞானி யூகித்தார். அதில் ஒரு துகளுக்கு அவர் வைத்த பெயர் தான்
"நியூட்ரினோ". பிறகு நெடிய ஆராய்ச்சிகளின் விளைவாக அணு உலையில்
நியூட்ரினோவைக் கண்டறிந்ததற்காக ரைனஸ், கோவான் ஆகிய விஞ்ஞானி
களுக்கு 1955-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

அணுவுக்குள் மட்டுமல்லாமல், சூரியன், நட்சத்திரங்களில் இருந்தும் கோடாணு
கோடி நியூட்ரினோக்கள் வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதாகவும்,
ஆனால், காஸ்மிக் கதிர்களோடு சேர்ந்துவரும் இத்துகளை தனியே பிடிப்பது
என்பது சாதாரண காரியமல்ல என்பதாகவும், ஆகவேதான் அத்துகளை "பிசாசுத்
துகள்" (The Ghost Particle)என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

ஆக, எளிதில் அகப்படாத, எல்லாப் பொருட்களையும் எளிதில் ஊடுருவிச்
செல்கிற இந்த துகளை தனியே சிறைப்பிடித்து ஆராய்ச்சி செய்வதற்காக, தமிழ்
நாட்டில், தேனி மாவட்டம், பொட்டிபுரம் ஊராட்சி புதுக்கோட்டைக்கு அருகே
யுள்ள பொட்டிதட்டி மலையை இந்திய விஞ்ஞானிகள் தேர்வுசெய்து ஆரம்பக்
கட்ட வேலைகளும் தொடங்கப்பட்டுவிட்டன. இந்த பொட்டிதட்டி மலையைக்
குடைந்து சுமார் ஒரு கிலோமீட்டர் ஆழத்தில், சுரங்கம் அமைத்து ஆய்வுக்
கூடத்தை நிறுவப் போகிறார்கள். அதற்காக இந்திய அரசாங்கம் ரூ.1356 கோடி
களை ஒதுக்கியுள்ளது.

இந்த நியூட்ரினோ ஆய்வு மூலம் சூரியனின் சூட்சுமத்தையும், பிரபஞ்சத்தின்
பிறப்பு ரகசியத்தையும் அறிந்துகொள்ளலாம் என்பது இந்த ஆய்வில் ஈடுபட்
டுள்ள விஞ்ஞானிகளின் நம்பிக்கையாக உள்ளது. ஏதோ பிரபஞ்சத்தின் சூட்சுமம்
நியூட்ரினோ துகளிலும், ஹிக்ஸ் போஸான் போன்ற துகள்களிலும் அடங்கி
யிருப்பதாகக் கருதுவது ஒரு விஞ்ஞானவகை மூட நம்பிக்கை தானே தவிர
முதிர்ச்சியடைந்த விஞ்ஞான அணுகுமுறையாக இருக்கவில்லை. ஏனென்றால்,
அணு என்றால் என்னவென்று அணுவைப் பிளந்து பார்த்து அறிந்துகொள்ள
முடியாது! அது தேவையற்ற வேலையும் கூட!

மேலும், பிரபஞ்சத்தில் தனியே ஒரு "அணு" என்பதாகவோ, எல்லாத் துகள்
களுக்கும் அடிப்படையான ஒரு ஒற்றைத்துகள் என்பதாகவோ ஏதுமில்லை!
அவ்வாறு ஒரு இறுதியான அடிப்படைத் துகளைத் தேடிச் சென்றால் முடிவே
யில்லாமல் நாம் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு புதிய துகளையும் பிளந்து கொண்டே

செல்லவேண்டியிருக்கும்.

ஆனால், இவ்வாறு முடிவேயில்லாமல் துகள்களைப் பிளந்து கொண்டே
செல்லமுடியாது. கொள்கைப்படி எதுவும் சாத்தியமே என்றாலும் நடைமுறை
யில் எல்லாமும் சாத்தியமாவதில்லை! அப்படியே முயன்றாலும் மேன்மேலும்
பெரிய பூதாகரமான எந்திரங்களும், கருவிகளும் தேவைப்படும். அதற்கு கோடி
கோடியாக மக்களின் வரிப்பணத்தைச் செலவு செய்திட வேண்டும். அதோடு
அத்தகைய ஆராய்ச்சிகள் தறிகெட்டுப்போகுமெனில், மிகவும் விபரீதமான
விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும். ஏனெனில், நாம் வெறுமனே துகள்
களோடு மட்டும் செயல்படவில்லை; மாறாக, அளப்பரிய ஆற்றல்களுடன்,
அல்லது சக்தியின் ஊற்றுக்கண்ணுடன் விளையாடிக் கொண்டிருக்கிறோம்
என்பதை நாம் மறந்துவிட வேண்டாம்.

ஏற்கனவே ஜெனிவாவில், பூமிக்கடியில் 27 கி.மீ. சுற்றளவில் அமைக்கப்பட்ட
வட்டவடிவ குகைப்பாதையில் தான் புரோட்டான் துகளை வேகமாகச் செலுத்தி,
இன்னொரு புரோட்டான் துகளுடன் மோதச் செய்து ஹிக்ஸ் போஸான்
துகளைக் கண்டுபிடித்தனர். அடுத்ததாக, 2025 -க்குள் 80 கி.மீ. சுற்றளவுள்ள
குகைப்பாதையை அதே இடத்தில் அமைத்து ஈர்ப்பு விசையின் புதிரை
விடுவிப்பதற்கான திட்டத்தை அவ்விஞ்ஞானிகள் தீட்டியுள்ளனர். ஆனால்,
கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக ஆகாதிருந்தால் சரிதான்.

நாம் ஒரு பொருளை, உதாரணத்திற்கு, ஒரு பாறைத் துண்டை உடைத்துக்
கொண்டே சென்றால், சிறு சிறு கற்களையும், அடுத்து மிகச் சிறிய மணல்
போன்ற துகள்களையும், அதையும் உடைத்தால், அணு எனப்படும் நுண்ணிய
துகளையும் அடைவோம். அணுவையும் உடைத்தால் அதன் கருவினுள்ளே
புரோட்டான், நியூட்ரான் எனும் துகள்களும் வெளிப்படும். இவ்வாறு நாம்
உடைத்துக் கொண்டே செல்லலாம் என்பது கோட்பாட்டளவில் சாத்தியமே.

ஆனால், அணுவை உடைப்பது என்பது ஒரு பாறையை உடைப்பது போல
அவ்வளவு எளிதான காரியமல்ல. அதாவது, ஹிக்ஸ் போஸான் போன்ற ஒரு
அடிப்படைத்துகளை வெளிக்கொண்டு வருவதற்கு புரோட்டான் துகள்களை
கிட்டத்தட்ட ஒளியின் வேகத்திற்கு ( வினாடிக்கு 300,000 கி.மீ.) செலுத்தி
எதிர்ப்புறமாக அதே வேகத்தில் செலுத்தப்பட்டு பாய்ந்துவரும் புரோட்டான்
துகள்களுடன் மோதச் செய்யும் போது அம்மோதலின் விளைவாக புரோட்டான்
துகளானது உடைந்து பல்வேறு வகைப்பட்ட நுண் துகள்களாகப் பிரிந்து சிதறும்.
அப்போது சூரியனின் மையப்பகுதியில் உள்ளதைப் போல லட்சம் மடங்கு
வெப்பம் உண்டாகும்.

இத்தகைய பரிசோதனைகளைச் செய்வதற்கு பல்லாயிரம் கோடிகளைச் செலவு
செய்து பூதாகரமான எந்திரங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த ஆராய்ச்சிகளில்
ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை இத்தகைய பரிசோதனைகள்
பாதுகாப்பானவை என்பதாகவே சொல்கிறார்கள். ஆனால், சில விஞ்ஞானிகள்
இவை ஆபத்துகள் நிறைந்தவை என்கிறார்கள்.

அதே வேளையில், ஆபத்துகளும் பெருஞ்செலவுகளும் ஒருபுறமிருக்கட்டும்;
இந்த நவீன துகள்கள் பற்றிய கோட்பாடுகளும், ஆராய்ச்சிகளும் எவ்வகையில்
நமக்குப் பயன் படுகிறது என்பதைப்பார்க்கும் போது, " எந்த ஒரு குறிப்பிட்ட
காலத்திலும் ஒரு சில ஆயிரம் பேர்களுக்கு மேலாக துகள்கள் பற்றிய கோட்
பாட்டை முழுவதுமாகப் புரிந்து கொள்ளவும், செரித்துக்கொள்ளவும்
இயலாது. மேலும் இந்தக் கோட்பாடானது நம் காலத்தின் மகத்தான அறிவு
ஜீவிய சாதனைதான் என்றாலும் 40 ஆண்டுகளாக அதனால் விளைந்த நடை
முறைப்பயன்கள் என்பது மிகச் சொற்பமே" என்பதாகவும், "இது ஒரு மிக அதிகச்
செலவு பிடிக்கும் பொழுதுபோக்கு" என்பதாகவும் விஞ்ஞானி பிரையன்
எல்.ஸில்வர் தனது "Ascent of Science"(1998)நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "ஒரு இயற்பியல் விஞ்ஞானியைப் பொறுத்தவரை, பிரபஞ்சத்தின்
ஆழமான ரகசியங்களை இத்துகள்கள் தான் தங்களகத்தே கொண்டிருக்கின்றன
என்பதாகச் சொல்லக்கூடும். அது உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால்,
அன்றாட உலகின் இயக்கங்களைப் புரிந்து கொள்வதற்கு இத்துகள்கள் தேவை
யற்றவையாகும்" என்பதாகவும் விஞ்ஞானி பிரையன் எல்.ஸில்வர் கூறியுள்ளார்.

ஆனால், நாம் இன்னும் ஆழமாகச் சென்று காணும் போது, நமது (கட்டுரை
யாளரின்) புதிய பரிணாமப் பார்வையில், பிரபஞ்சத்தை அதன் சாரத்தில் புரிந்து
கொள்வதற்கு துகள்களைப்பற்றிய ஆராய்ச்சிகள் உதவிடாது. என்பதோடல்
லாமல் அவை தேவையற்றவை எனவும் கூறிவிடலாம்.

ஏனென்றால், இதுவரை (கடவுள் துகள் உட்பட) கண்டுபிடிக்கப்பட்ட 400 வகை
அடிப்படைத்துகள்கள் யாவும் ஒரு வினாடியில் பத்து லட்சத்தில் ஒரு பகுதி
நேரம் மட்டுமே நிலைப்புத்தன்மை கொண்டவை. அதாவது, முழுமையாக ஒரு
வினாடிகூட நிலைத்திராத, அணுவின் கருவினுள்ளே அடங்கியிருக்கும்
இத்துகள்களை ஆராய்வது வேலையற்ற வேலையாகும்.

பிரபஞ்சவியல் விஞ்ஞானிகள் கூறியதைப்போல நமது பிரபஞ்சமானது 1500
கோடி ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு "பெரு வெடிப்பு" நிகழ்வில் இத் துகள்
களுடன் தொடங்கியிருக்கலாம். ஆனால், ஒரு சில விநாடிகள் அல்லது
நிமிடங்களிலேயே பிரபஞ்சமானது இந்த அடிப்படைத்துகள்களின் நிலையைக்
கடந்து சென்றுவிட்டது. அதாவது, நீடித்த நிலைப்புத்தன்மை கொண்ட மூலகங்
களின் (Elements) அணுக்களின் கருவினுள் அத்துகள்களை உள்ளடக்கி
அடுத்தடுத்த உயர் நிலைப் பொருட்களாக பிரபஞ்சமானது உருமாறிச் சென்று
விட்டதோடு பொருளின் தளத்திலேயே தங்கிவிடாமல் "உயிரியல் தளம்",
பிறகு "உணர்வியல் தளம்" என பரிணமித்து உணர்வின் (Consciousness)
உச்ச நிலையை நோக்கிச் சென்று கொண்டுள்ளது.

பிரபஞ்சமானது அடிபப்டைத் துகள்களையும், பலவித மூலகங்களையும்,
நட்சத்திரங்களையும், மாபெரும் கேலக்ஸிகளையும், .... கொண்டிருந்தாலும்
அது பிரதானமாக இவைகளுடன் வினையாற்றுவதாக, சம்பந்தப்பட்டிருப்பதாக
இருக்கவில்லை. மாறாக, பிரபஞ்சமானது தொடர்ந்து முன்னேறி முன்னோக்கிச்
செல்லும் தனது பரிணாம நிகழ்வு முறையில் அவ்வப்போது வெளிப்படுகிற
அம்சங்களையே (Emerging Properties)பற்றிச் செல்வதாயுள்ளது.

அணுக்கள், மற்றும் அடிப்படைத்துகள்கள் பற்றிய ஒரு உண்மை என்னவெனில்,
இவை யாவும் பொருளின் உட்கூறுகளாக உள்ளமைந்த அம்சங்கள் என்பதுதான்.
மிக அரிதாக, நியூட்ரினோ போன்ற துகள்கள் மட்டுமே நட்சத்திரங்களின்
(சூரியன்களின்) வெப்பம் மிகுந்த மையப்பகுதியில் உருவாகி அண்டவெளியில்
தனித் துகள்களாக திரிந்துகொண்டுள்ளன.

அணு, என்றும், அடிப்படைத்துகள் என்றும் நாம் நுட்பரீதியாக (Technically)
பேசினாலும், அணு என்பது ஒரு தனிப்பொருள் அல்ல. அணுவும், அண்டமும்
பிரிக்கமுடியாதவை. ஒரு அணு என்பது உடனடியாக பிற அணுக்களுடனும்,
ஒட்டுமொத்த பிரபஞ்சத்துடனும், இன்னும் தொலைதூர வருங்காலத்தில்
அடையக்கூடிய அதனுடைய இறுதியான இலக்கு நிலையுடனும் பிணைக்கப்
பட்ட தாகும்.

அதாவது, ஒரு அணுவின் அல்லது அதன் உட்கூறான ஒரு அடிப்படைத்து
களின் அசலான பண்பு என்பது பரிணாம ரீதியாக, பரிணாம நிகழ்வுமுறையின்
முடிவில், முழுமையில் மட்டுமே வெளிப்படு வதாயுள்ளது. ஏனெனில், அணு
என்பது ஒரு பரிணமிக்கும் பொருளாகும். அணுவும் அண்டமும் வேறானதல்ல.
அணுவின் விரிவாக்கமே அண்டம் அதாவது பிரபஞ்சம் ஆகும். ஆக, அணுவின்
முடிவான முழுமையான பண்பை அறிய பிரபஞ்சமானது இறுதியில்
எந்நிலையை எட்டுகிறது, என்னவாக பரிணமிக்கிறது என்பதைக்கொண்டே
அறிய இயலும்.

இதற்கு மாறாக, ஒரு அணுவை பிரபஞ்சத்திலிருந்து உருவியெடுத்து அதை
உடைத்துப்பார்த்தால் அதனுடைய (அதாவது பிரபஞ்சத்தினுடைய) அரைகுறை
யான தொடக்க நிலைப்பண்பினை மட்டுமே அறிய முடியும். ஒரு விதையை
உடைத்து அது என்னவென்று அறிவது முறையான விஞ்ஞான அறிதல்முறை
யாகாது. மாறாக, அவ்விதையை மண்ணில் ஊன்றி அது முளைத்து செடியாக
வளர்ந்து பிறகு பெரும் விருட்சமாக எழுந்தபிறகு பூத்து, காய்த்து என்ன
கனியைக் கொடுக்கிறது என்பதைக்கொண்டே அவ்விதை ஆலவிதையா,
அல்லது என்ன விதை என்று அறிய முடியும். இதற்கு மாறாக, அவ்விதயை
உடைத்துப் பார்த்தால் அது பலவித அணுக்கருத்துகள்களின் தொகுப்பாக
உள்ளதென்றும், இறுதியில் ஒரு முடிவிற்கும் வர இயலாமல் குழம்பிப்
போகலாம். அல்லது முடிவில், "ஒன்றுமில்லை" என்ற என்ற மாபெரும் கண்டு
பிடிப்பை அறிவித்திடலாம். இத்தகைய தலைகீழ் அணுகுமுறையில் தான்
தற்போதைய விஞ்ஞானம் சென்று கொண்டுள்ளது.

                               ■ ■ ■

மனித ஜீவிகளின் பிரதான அக்கறையும், தேடலும், ஆராய்ச்சியும் தனது
உணர்வுப் பரிணாமத்தைப் பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர,
அணுக்களைப்பற்றியோ, அடிப்படைத்துகள்களைப் பற்றியோ; அண்டவெளியில்
திரியும் நட்சத்திரங்கள், கிரகங்கள்,,, பிற நிகழ்வுகளைப்பற்றியோ இருக்க
முடியாது!

மனித ஜீவி என்பவன் அடிப்படையில் அணுத்துகள்களால் ஆனவன் தான்!
அதாவது, அடிப்படைத்துகள் தான் அண்டத்திலுள்ள அனைத்துப் பொருட்களு
மாகி, புழுவாகி, பூச்சியாகி, பிறகு மனிதஜீவியுமாகி மனித ஜீவிகளுள் இயற்
பியல் விஞ்ஞானியுமாக ஆகியுள்ளன. ஆனால், இயற்பியல் விஞ்ஞானியாக
ஆகிய ஆதி அடிப்படை அணுத்துகள்கள் மீண்டும் தம்மையே (அடிப்படைத்
துகள் களையே) ஆராய்ந்துகொண்டிருப்பது என்பது மாபெரும் முரண் அல்லவா?
இது ஒரு விபரீத வட்டமாகத் தெரியவில்லையா?

ஆகவே, விஞ்ஞானிகளே விழித்துக்கொள்ளுங்கள்! புத்தம் புதிதாகச் சிந்தி
யுங்கள்! நீங்கள் வெறும் அடிப்படைத்துகள்களின் தொகுப்பு அல்ல! பிரதானமாக
நீங்கள் ஒரு "உணர்வு" தான்! உங்களுடைய உணர்வுப் பரிணாமத்தின் இறுதி
யில் நீங்கள் முழு-உணர்வே! அணுவாக, அடிப்படைத்துகளாகச் சுருங்கியது
அந்த முழு-உணர்வே!


மா.கணேசன் • • 18-03-2018
----------------------------------------------------------------------------


Friday, 9 March 2018

வெட்கக்கேடான சாதனை!





   இக்கட்டுரையின் நோக்கம் ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையே
   நிலவும் இடைவெளியை, மலைக்கும் மடுவிற்குமான வித்தியாசத்தைக்
   களைவதற்கான கலகத்தையோ, புரட்சியையோ தூண்டுவதற்கான
   விதைகளைத் தூவுவது அல்ல! மாறாக, உலக மக்கள், உழைக்கும்
   மக்கள் யாவரும் கௌரவமாக வாழ்வதற்கான நியாயமான
   உரிமையை நினைவூட்டுவது மட்டுமே.



                         •••

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள 2018-ம் ஆண்டுக்கான உலக கோடீஸ்
வரர்கள் பட்டியலில் அமேஸான் நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரி
யுமான ஜெஃப் பிஸோஸ் முதலிடம் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு
சுமார் 11,200 கோடி டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2,208 பேர் இடம்பெற்றுள்ள இப்பட்டியலில் இந்தியாவிலிருந்து 119 பேர் இடம்
பிடித்துள்ளனர். இது கடந்த ஆண்டு எண்ணிக்கையைவிட 18 பேர் அதிகம்
என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு
அடுத்தபடியாக அதிக கோடீஸ்வரர்களைக்கொண்ட நாடாக இந்தியா இருக்
கிறது. அமெரிக்காவில் 585 கோடீஸ்வரர்களும், சீனாவில் 373 கோடீஸ்வரர்
களும் இருப்பதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. .....
                    நன்றி : தி இந்து, வியாழன், 08.03.2018

                         •••

இதுதான் வெட்கக்கேடான சாதனை என்பது. அதாவது, உலகின் ஒட்டுமொத்த
மக்கள்தொகை 760,00,00,000 (760 கோடி) ஆகும். இதில் சரிபாதி மக்கள் கிட்டத்
தட்ட  360,00,00,000 (360 கோடி) பேர்கள் கொடுமையான வறுமையில் வாடிக்
கொண்டிருக்கின்றனர். இத்தகைய அவலநிலை அவர்களது தலையெழுத்து
என்று சொல்லி கடந்து சென்றுவிட முடியாது. ஒட்டுமொத்த மக்கள்தொகை
யான 760 கோடி பேர்களில் வெறும் 2,208 பேர்கள் கோடீஸ்வரர்களாக விளங்கு
கிறார்கள் என்பது எந்த விதத்திலும், விகிதத்திலும் பொருந்துவதாகத் தெரிய
வில்லை! 

அடுத்து இந்தியாவின் மக்கள்தொகை 134, 00,00,000. இதில் வெறும் 119 பேர்கள்
கோடீஸ்வரர்கள் என்பது எந்த விகிதத்திலும் பொருந்துவதாயில்லை! அடுத்து, 
வெறும் 8 நபர்களின் வசம் இந்திய நாட்டின் உச்ச பட்ச சொத்துக்கள் உள்ளன
என்பதில் யாதொரு முரண்பாடும் இல்லையா!

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியாவி
லிருந்து 119 பேர் இடம் பிடித்துள்ளனர். இது கடந்த ஆண்டு எண்ணிக்கையை
விட 18 பேர் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது என்று அப்பத்திரிகை குறிப்பிடு
கிறது.

உலகில், அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக கோடீஸ்வரர்
களைக்கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. அமெரிக்காவில் 585 கோடீஸ்
வரர்களும், சீனாவில் 373 கோடீஸ்வரர்களும் இருப்பதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்
துள்ளது.

ஆனால், அதே நேரத்தில், கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியா உலகிலேயே
மூன்றாவது இடத்தில் உள்ளது; அதாவது, நம் நாட்டிலும் 119 கோடீஸ்வரர்கள்
இருக்கிறார்கள் என்று மகிழ்ந்து கொண்டாடுவதா? அல்லது, இங்கே இந்தியா
வில், நாள்தோறும் இரவு உணவின்றி உறங்கச்செல்பவர்கள் 56% பேர்களும்,
இரண்டு வேளை உணவில்லாமல் இருப்பவர்கள் 30% பேர்களும் இருக்கிறார்
கள் என்பது குறித்து துயரப்படுவதா?

இந்திய அரசின் கடன் சுமை ரூ. 47 லட்சம் கோடி எனப்படுகிறது. (உலக வங்
கியிடம் கடன் வாங்கிய நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.) அதே
நேரத்தில், இந்தியாவின் முதல் 100 பணக்காரர்களின் ஒட்டுமொத்த சொத்து
மதிப்பு 31 இலட்சம் கோடிக்கும் ($479 பில்லியன்) அதிகமாக இருக்கிறது.
அதாவது, நாடு கடன் பொறியில் சிக்கியிருக்கிறது எனும் நிலையில், வெறும்
100 பணக்காரர்களிடம் மட்டும் 31 இலட்சம் கோடிகள் உள்ளது என்பதன்
அர்த்தம், நியாயம் என்ன? அதாவது, இந்தியா கடனில் தத்தளிக்கிறது; ஆனால்,
இந்த 100 பணக்காரர்கள் செல்வத்தில் திளைத்துக்கொண்டிருக்கிறார்கள்! இவர்
களுக்கு நாட்டின் கடனில் எவ்வித பங்கும், பொறுப்பும், எதுவும் இல்லையா?

இந்தியாவில் கடந்த பத்தாண்டு காலத்தில் பணக்காரர்கள் எண்ணிக்கை மிக
வேகமாக வளர்ந்து வந்திருப்பதாக பெயின் அண்ட் கோ கன்சல்டன்ஸி
நிறுவனம் தெரிவிக்கிறது. அந்நிறுவனம் நடத்திய ஆய்வில், 2000ம் ஆண்டுக்கு
பின்னர் இந்தியாவில் பணக்காரரர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு 11 சதவீதம்
என்ற அளவில் வளர்ந்து வருவது தெரிய வந்துள்ளது.ஆனால் இந்திய மக்கள்
தொகையில் 40 சதவீதம் பேர் தினசரி 50 ரூபாய்க்கும் கீழான வருமானத்தில்
வாழ்வதாக மதிப்பிடப்படுகிறது.

ஒருபுறம் நாளொன்றிற்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்கள் சம்பாதிக்கும்
(இது சம்பாத்தியமா அல்லது பகல் கொள்ளையா?) அம்பானி உள்ளிட்ட பெரும்
பணக்காரர்கள்; மறுபுறம் வெறும் 124 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாமல்
தட்டுத்தடுமாறிக் கொண்டிருக்கும் இந்திய ஏழை மக்கள். இந்த பஞ்சபராரிகள்
மீது பண மதிப்பழிப்பு மற்றும் ஜி.எஸ்.டி உள்ளிட்ட அஸ்திரங்களை ஏவி
எஞ்சியதையும் பறிக்கிறது கார்ப்பரேட்டுகளுக்கு சேவைபுரியும் தற்போதைய
இந்திய அரசு.

ஆனால், ஒரு பணக்காரர் அல்லது, பெருமுதலாளியால் மட்டும் நாள்ஒன்றிற்கு
நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்கள் எவ்வாறு, எவ்வழிமுறையில் சம்பாதிக்க
முடிகிறது?

உண்மையில், செல்வம் (பணம், சொத்து) என்பது முற்றிலும் ஒரு சில பெரு
முதலாளிகளின் அல்லது பணக்காரர்களின் உருவாக்கமோ, படைப்போ அல்ல!
செல்வம், அல்லது, பொருள்-வளங்களுக்கான அடிப்படை, பணம் படைத்தவர்
களின் முதலீடு மட்டுமே அல்ல! அதாவது செல்வத்தின் அடிப்படைகளில்
ஒரே ஒரு காரணி மட்டுமே பணம், அல்லது, முதலீடு என்பதாகும்! மிகவும்
அடிப்படையான காரணிகளானவை பூமி, பூமியின் இயற்கை வளங்கள்
(அனைத்துவித கச்சாப்பொருள்கள்), நிலம், நீர், காற்று, சுற்றுச்சூழல், பல்லுயிர்
வளங்கள், முக்கியமாக சக மனிதர்கள், அதாவது, மக்கள் சமுதாயம், மற்றும்
அவர்களது பெரும் உழைப்பும், யாவற்றுக்கும் மேலாக அனைவருக்கும் பொது
வான வாழ்க்கைத் தேவைகளும்தான் பொருள் வளங்களின் (செல்வத்தின்)
உருவாக்கத்திற்கும், உற்பத்திக்குமான அடிப்படைகளாகும்!

பொருளாதார நடவடிக்கைகள் என்ற போர்வையில், நாம் சுரண்டி கொள்ளை
யடிக்கும் இயற்கை வளங்களுக்கு, அதாவது, நாம் உருவாக்கும் பொருள்
வளங்கள், அல்லது, செல்வத்தின் ஒவ்வொரு ரூபாய்க்கும், டாலருக்கும் நாம்
இப்பூமிக்கும், பிற உயிரினங்களுக்கும், உழப்பைத்தரும் ஒவ்வொரு மனிதருக்
கும், சுற்றுச்சூழலுக்கும் நாம் கடன்பட்டிருக்கிறோம் என்பதை மறந்துவிட்டு,
"நான்தான் முதலீடு செய்தேன், ஆகவே, ஒட்டுமொத்த செல்வத்தையும் நானே
எடுத்துக்கொள்வேன், எல்லாமே எனக்குத்தான் சொந்தம், என உரிமை கொண்
டாடுவதற்கு இப்பூமியில் எவருக்கும் உரிமை கிடையாது! அவ்வாறு உரிமை
கோருபவன் ஒரு கடைந்தெடுத்த பிற்போக்குவாதியாகவும், முட்டாளாகவும்,
பேராசை பிடித்த மிருகமாகவும்தான் இருக்க முடியும்! அத்தகைய தொரு
முட்டாளின் பெயர் தான் "பெரும்பணக்காரன்" (மில்லியினர், பில்லியினர்)
என்றால், இனியும் அத்தகைய நடைமுறையை நாம் அனுமதிக்கலாமா?

கட்டாயம், செல்வம் சேர்ப்பதற்கு ஒரு உச்சவரம்பு நிர்ணயிக்கப்படவேண்டும்!
ஒவ்வொரு மனிதனுக்கும் இவ்வளவு தான் நிலம், மனை, பிற ஏணைய
சொத்துக்கள் உடமையாக இருக்கவேண்டும்; ஒரு குறிப்பிட்ட அளவிற்குமேல்
சொத்துக்களைச் சேர்ப்பது என்பது அடுத்தவர்களுக்கான வாய்ப்புக்களைப்
பறிப்பதாகும் எனக் கருதப்படவேண்டும்! ஒருவர் எத்தனை தொழிற்சாலை
களை அமைக்கலாம், பராமரிக்கலாம் என்பதற்கும் ஓர் உச்சவரம்பு வேண்டும்!

ஒரு 'தொழிலதிபர்' என்பவர், எண்ணற்ற தொழிற்சாலைகளைக் கொண்டிருந்
தாலும், சங்கிலித்தொடர் போன்ற வியாபார நிறுவனங்களைக் கொண்டிருந்
தாலும், ஏற்கனவே மேலே குறிப்பிட்ட படி, அவருடைய தொழிற்சாலைகளில்
பணிபுரியும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் ஒட்டுமொத்த லாபத்திலிருந்து
ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படவேண்டும்;
அதே போல, ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் சுற்றுச்சூழலைக் காப்பதற்கும்
(உயிரியல் மண்டலத்திற்கு ஏற்படும் பாதகங்களைச் சரிகட்டுவதற்கும்), இயற்
கையிடமிருந்து எடுக்கப்பட்ட வளங்களைச் சரிகட்டுவதற்கும், அல்லது புதுப்
பிப்பதற்குமான தொழில் நுட்பங்களுக்குச் செலவிடவேண்டும்! அனைத்து
லாபங்களையும் தொழிலதிபதிரே சுருட்டிக்கொண்டு போய்விடுவதை இனியும்
அனுமதிக்கலாகாது! அவர் போட்ட முதலீட்டிற்குரிய நியாயமான சதவிகிதம்
மட்டுமே அவருக்குச் செல்லவேண்டும்! அந்த சதவிகிதமும் ஒரு குறிப்பிட்ட
அளவைத் தாண்டுமானல், அதற்கும் அவர் வரி கட்டவேண்டும்!

எவ்வொரு நாட்டிலும் பணக்காரர்கள் என்போர் 1% மட்டுமே. இந்த ஒரு
சதவீதத்தினர் ஏணைய 99% மக்களின் நலன்களுக்கு எதிராகச்செயல்படுகிறார்
கள் என்பதை எப்போது 99% உணரப்போகிறார்கள்?  இவ்வளவிற்கும், அவர்கள்
சப்தமின்றி, போரின்றி, ஆரவாரமின்றி, அமைதியாக தங்களுடைய கயமைத்
தனம், பேராசை, சுயநலம், நரித்தந்திரம், பொய், ஏமாற்று, ஆகியவற்றுடன்
அரசின் ஆசீர்வாதங்களையும் கொண்டு 99% மக்களை ஏழ்மையிலாழ்த்தி
ஏய்த்து மேய்த்து வருகின்றனர்!

பணக்காரர்களின் சொத்து மதிப்பு ஒரு எல்லையைத் தாண்டும் போது, இந்திய
அரசாயினும், அல்லது வேறு எந்த நாட்டு அரசாயினும், அப்பணக்காரர்களுக்கு
அடிமையாக மாறுவது என்பதைத் தவிர்க்க முடியாது!  மேலும், அவர்களது
விருப்பத்திற்கேற்பத்தான் ஆட்சிசெய்யவும் முடியும்!

மா.கணேசன் • 08-03-2018
----------------------------------------------------------------------------

Sunday, 11 February 2018

தமிழ்நாடு திறந்துகிடக்கும் வீடல்ல!



(கமல ஹாசனின் உண்மையான நிறம்!)


   "தமிழ் என்பது உங்கள் விலாசம், அது உங்கள் தகுதியல்ல! .....
   நான் தமிழன் அதன்னால எனக்கு இதக் கொடுங்கன்னு கேட்க
   முடியாது! நான் இந்த வீட்ல குடியிருக்கறன் என்பது உங்க விலாசம்;
   அது இருக்கட்டும் நீங்க என்ன பண்ணுறீங்கன்னு அடுத்தது 
   உடனே கேட்பாங்க!...."             
                                         -- கமல ஹாசன்
                           ✦
                   

இனியும் தமிழ் நாட்டு மக்களை அடுக்கு மொழியில் பேசிக்கொண்டு, கவிதை
கலந்த பூடகமான தமிழில் பேசிக்கொண்டு ஏமாற்றமுடியாது எனும் கட்டத்தை
நாம் அடைந்துள்ளோம்! தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டிய மிகவும்
சோதனையான காலம் இது! இப்போதும்கூட நாம் விழித்துக்கொள்ளவில்லை
யென்றால் நமக்கு விடிவுகாலம் என்பதே இல்லாமல் போய்விடும்! நம் வீட்டை
கொள்ளையடித்துச் சென்றுவிடுவார்கள் அந்நியர்கள்!

என்னை அறிந்தவர்களுக்கு என்னை நன்றாகத்தெரியும், நான் ஒரு குறுங்குழு
வாதியல்ல என்பது! நான் பிரபஞ்சமளாவிய பார்வை கொண்டவன்! நான்
காலம், இடம், தேசம், வர்த்தமானம், இனம், மொழி, மதம், கலாச்சாரம், கடந்த
வனாகத்தான் நேற்றுவரை வாழ்ந்துவந்திருக்கிறேன்!

   இந்தியாவில் பிறந்ததால் நான் ஒரு இந்தியன்; ஆப்பிரிக்காவில்
   பிறந்திருந்தால் நான் ஒரு ஆப்பிரிக்கன்! எங்கே பிறந்தாலும் நான்
   நான் தான்! என்று பேசி வந்தேன்.

"மனிதன்" என்பதுதான் எனது முதல் அடையாளம்!  நேற்றுவரை நான் ஊமை
யாக இருந்துவிட்டேன்; இப்போது நான் பேசவேண்டிய கட்டாயத்திற்குத்
தள்ளப்பட்டுள்ளேன்! அப்படியானால் ஒரு மனிதன் எந்த மொழியில் பேசுவான்?
எனது தாய்மொழி தமிழ், நான் தமிழில் தானே பேசவேண்டும்? இது நாள்வரை
ஒரு மனிதனாகத் தமிழில் பேசிவந்த என்னை இன்று ஒரு தமிழனாகப் பேச
வைத்து விட்டார் கமலஹாசன்!

இது கெட்ட நேரத்திலும், ஒரு நல்ல நேரம்! இல்லையென்றால், கமலஹாசன்
இப்படிச் சொல்லி யிருப்பாரா? அதுவும் அவர் புதிதாக அரசியல்கட்சி ஆரம்பிக்
கப்போகும் இந்த தொடக்கக் கட்டத் திலேயே அவர் இப்படிப்பேசியிருப்பது
அவரது உண்மையான நிறத்தை நமக்குக் காட்டியிருக்கிறது என்றுதான்
சொல்லவேண்டும்! அதற்காக நான் அவருக்கு என் நன்றியைத்தெரிவித்துக்
கொள்கிறேன்!

நான் தமிழன் அதனால, எனக்கு இதக்குடுங்க, அதக்குடுங்கன்னு நான் பிச்சை
கேட்கவில்லை! எந்தத் தமிழனும் அவ்வாறு கேட்கமாட்டான்! நான் இந்த
வீட்டுல வெறுமனே குடியிருக்கவில்லை; நான் இந்த வீட்டுல பிறந்தவன்,
இது என் வீடு, இது என் நாடு, என் தமிழ்த்திருநாடு! ஆக, நான் கேட்பது
ஒன்றே ஒன்று தான் : தமிழர்களாகிய எங்களுக்குத்தகுதி இருக்கிறதோ,
இல்லையோ; எங்களை இனி நாங்களே ஆண்டு கொள்கிறோம்! தமிழர்களல்
லாத பிறருக்கு வேறு எல்லா தகுதிகளும் இருந்தாலும், தமிழன் எனும் தகுதி
இல்லாத எவரும் எங்களை ஆளத்தகுதியற்றவரே!

தமிழனுக்கு தமிழன் எனும் தகுதியைத்தாண்டி அவனிடம் வேறு என்ன தகுதி
இல்லை? எல்லாத் துறையிலும் சிறந்து விளங்கும் தகுதி தமிழனுக்கு உண்டு!

தமிழ் கற்றுக்கொண்டவர்கள், தமிழ் பேசுபவர்கள், தமிழில் கவிதை எழுதுப
வர்கள், பிழைப்புத் தேடி தமிழ் நாட்டிற்கு வந்தவர்கள், வியாபாரம் செய்ய
வந்தவர்கள், இங்கேயே தங்கிவிட்டவர்கள், இங்கே  பிறந்தவர்கள், வளர்ந்த
வர்கள், ..... என எல்லோரும் தமிழர்களாக ஆகிவிடமுடியாது! 

தமிழ் என்பது எனது தாய் மொழி மட்டுமல்ல, அது எனது அடையாளம் மட்டு
மல்ல; தமிழ் எனது தகுதியும் தான்! தமிழனல்லாதவனுக்கு அது புரியாது!
தமிழ் என்றால் இனிமை மட்டுமல்ல; அறம், மறம், திறம் யாவுமாகும்!

"வந்தாரை வாழ்விக்கும் தமிழகம்!" என்பதற்கிணங்க தமிழை, தமிழ் நாட்டை
புகலிடமெனத் தேடிவருபவர்கள் வாருங்கள், வந்து வாழுங்கள்! ஆனால்,
எங்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியை, கூடாரத்திற்குள் கொஞ்சம் இடம் கேட்ட
ஒட்டகம் போல, உள்ளே புகுந்த பிறகு எங்களை எங்கள் வீட்டிலிருந்து
வெளியே தள்ளிவிடும் எண்ணத்தை மறந்துவிடுங்கள்! இனி எவ்வகை சூழ்ச்
சிக்கும் தமிழன் பலியாகமாட்டான்!

எவ்விடத்தில் புல் முளைக்கிறதோ அவ்விடத்திலேயே வாழ்வதற்குரிய முழு
சுதந்திரமும் அதற்கு உள்ளது! இதற்குப் பெயர்தான் "இயற்கைச் சுதந்திரம்".
இதுதான் "மண்ணின் மைந்தன்" என்பதற்கும், "தமிழ்த்தேசியம்" என்பதற்குமான
அடிப்படையும் ஆகும்! இவ்வாறு மொழி அடிப்படையிலான பல தேசியங்களின்
கூட்டமைப்பு தான் இந்திய தேசியம் என்பது!

நான் சொல்கிறது கமலஹாசனுக்கு எட்டுகிறதோ இல்லையோ, என் தமிழ்ச்
சொந்தங்களுக்கு எட்டினால் சரி!

(தொடரும்)
மா.கணேசன்/15:55 11-02-2018
----------------------------------------------------------------------------

Monday, 5 February 2018

நிறைவான சந்தோஷத்துடன் வாழ எவ்வளவு பணம் வேண்டும்?



   அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
   என்னுடைய ரேனும் இலர்.


"நிறைவான சந்தோஷத்துடன் வாழ ஒருவருக்கு, அல்லது ஒரு குடும்பத்துக்கு
எவ்வளவு பணம் வேண்டும்?" என்பதுதான் கேள்வியானால், முதலிடத்தில்,
அடிப்படையிலேயே இந்தக்கேள்வி தவறானது! ஆம், "நிறைவான சந்தோஷத்
துடன் வாழ ஒருவருக்கு, அல்லது ஒரு குடும்பத்துக்கு என்ன வேண்டும்
என்பது தான் சரியான கேள்வியாக இருக்க முடியுமே தவிர எவ்வளவு பணம்
வேண்டும், பொருள் வேண்டும், தங்கம் வேண்டும் என்ற கேள்வி தவறானது,
தலைகீழானது, ஆகவே அர்த்தமற்றது!

அடுத்து, இப்போது நாம் சரியான கேள்வியைக் கேட்போம். ஆம், "நிறைவான
சந்தோஷத்துடன் வாழ ஒருவருக்கு, அல்லது ஒரு குடும்பத்துக்கு என்ன
வேண்டும்?" இக்கேள்வியில், மிக மையமான அம்சம் வாழ, வாழ்வதற்கு,
வாழ்க்கை என்பவை தான்! மிக எளிமையாக இக்கேள்வியை நாம் கேட்போ
மெனில், அதாவது, வாழ்க்கையை வாழ்வதற்கு என்ன, (அல்லது, பன்மையில்)
என்னென்ன தேவை என்று கேட்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும்!
ஆம், என்ன, அல்லது, என்னென்ன என்பது வாழ்க்கைத்தேவைகளையே குறிக்
கிறது. ஆம், வாழ்க்கை என்றதுமே பிரதானமாக "வாழ்க்கைத்தேவைகள்"
உள்ளே வந்துவிடும்! ஏனெனில், தேவைகளை எடுத்துவிட்டால், வாழ்க்கையே
நமக்கு சூன்யமாகிவிடும்; அதோடு, தேவைகளைக்கடந்து வாழ்க்கையைப்
பார்க்கும், அணுகும், பக்குவமும் அறிவார்ந்த தன்மையும் நம்மிடம் இன்னும்
துளிர்த்திடவில்லை!

உண்மையில், வாழ்க்கைக்கு "தேவைகள்" என்பவை இருக்கின்றன; ஆனால்,
தேவைகளே வாழ்க்கை அல்ல! நல்லது, தேவைகளைக்கடந்து வாழ்க்கையைப்
பார்க்கும் விஷயத்தை நாம் பிறகு பார்ப்போம்; இப்போதைக்கு, வாழ்க்கைத்
தேவைகள் என்பவை எவையெவை என்பது குறித்துப் பார்ப்போம்.

மிகவும் அடிப்படையான தேவைகள் எவை என்பதை நாம் அனைவருமே
அறிவோம்! "உணவு", "உடை", உறைவிடம்" ஆகியவையே அவை. இவற்றை
நாம் "அடிப்படைத்தேவைகள்" என்கிறோம்; ஆனால், எந்தவகையில் இவை
அடிப்படையானவை என்பதை நம்மில் அநேகர் (99% பேர்) அறிய மாட்டோம்!
அடிப்படைத்தேவைகள் என்பவை அடிப்படைத் தேவைகள் தான், ஆனால்,
அவையே அனைத்தும் அல்ல, அதாவது ஒட்டுமொத்த வாழ்க்கையும் அல்ல!

அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றாமல், பூர்த்தி செய்யாமல் நாம் உயிர்
வாழ முடியாது என்கிற வகையில் மட்டுமே அவை அடிப்படையானவை!
ஐயா! அடிப்படைத்தேவைகளை நாம் நிறைவேற்றிடுகிறோம், அடுத்தது என்ன?
இக்கேள்விக்கு பதில் கண்டறியாமல் ஒருபோதும் நாம் நம் வாழ்க்கையை
முழுமையாக, அர்த்தபூர்வமாக வாழவோ, அல்லது சந்தோஷமாக வாழவோ
முடியாது!

ஏனெனில், தேவைகளின் நிறைவேற்றமே சந்தோஷத்தைத் தந்திடுவதில்லை!
நமக்குப் பசிக்கிறது, உணவு உட்கொள்கிறோம், பசி அடங்கிப்போவதனால்
ஒருவகை நிறைவு ஏற்படுகிறது, அந்த நிறைவை, ஒருவகையான சந்தோஷம்
என்று கூட வைத்துக்கொள்ளலாம்! ஆனால், பசியாறிய நிலை ஒருபோதும்
வாழ்வின் அர்த்தத்தை அளிப்பதில்லை! உணவு இல்லாமல் நாம் உயிர் வாழ
இயலாது என்பது உண்மையே, உணவு தான் அடிப்படைத்தேவைகளில் மிக
அடிப்படையான தேவையாகும்!

"சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்!" என்று நாம் தத்துவம் பேசு
கிறோம்; ஆனால், சுவர் இருக்கிறது, சித்திரம் நம்மிடம் இல்லை என்பது தான்
நமது வாழ்வின் பெரும் துரதிருஷ்டம்! உணவு உட்கொண்டுவிட்டோம்;
அடுத்தது என்ன? நன்றாக உடுத்திக்கொண்டோம்; அடுத்தது என்ன? உறைவிட
மும் அமைத்துக்கொண்டோம்; அடுத்தது என்ன? "இந்த அடுத்தது என்ன?"
என்ற கேள்வி நம்மில் அநேகருக்குத் தோன்றுவதேயில்லை! ஆயினும், நாம்
உணவு உட்கொண்ட பிறகு சும்மா இருப்பதில்லை; மாறாக, அடுத்தடுத்த
வேளைகளுக்கான உணவைப் பெறுவதற்கான உழைப்பில், பணியில், உத்தி
யோகத்தில் ஈடுபடுகிறோம்!

உயிர்-வாழ்வதற்கு அடிப்படைத்தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதன் அவ
சியம் மறுக்கமுடியாதது! அதேவேளையில், அடிப்படைத் தேவைகளின் நிறை
வேற்றம், நம்மை, நமது வாழ்வை நிறைவுசெய்யவில்லை, என்பதை ஏதோ
ஒருவகையில் உணர்வதன் விளைவாகவே நாம், அடிப்படைத்தேவைகளைத்
தாண்டிய வேறு பல தேவைகளை, அதாவது, தேவையற்ற தேவைகளை,
அந்தஸ்து, மரியாதை, செல்வாக்கு ஆகியவற்றின் பெயர்களில், அலங்கார
ஆடம்பரத்தேவைகளைத் துரத்திச் செல்கிறவர்களாக இருக்கிறோம்!

அதாவது, நிறைவு தராத உயிர்-வாழ்தலை பலவகைகளிலும் அலங்கரித்துக்
காண்பதன் வழியாக நிறைவையும், அர்த்தத்தையும் பெற்றுவிடலாம் எனும்
தவறான நம்பிக்கையில், பொருளாதார ரீதியாக, முன்னேற வேண்டும் என்ப
தற்காக சமுதாயத்தில் ஒருவரை ஒருவர் முந்திச்செல்லும் வகையில் போட்டி
போட்டுக்கொண்டு வாழ்க்கையை ஒரு பெரும் பொருளாதாரப் பந்தயமாகவும்,
சமுதாயத்தை பெரும் போட்டிக்களமாகவும் மாற்றியுள்ளோம்! இந்த அர்த்த
மற்ற பந்தயத்தினால், மேன்மேலும் நாம் வாழ்க்கையை அர்த்தமற்றதாக்கிக்
கொள்வதுடன், பெருவாரியான சகமனிதர்களை வறுமையிலும் ஏழ்மையிலும்
தள்ளிவிட்டுள்ளோம்!

ஏதோ வாழ்க்கை என்றாலே அது, ஒவ்வொருவரும் தமது உயர் பொருளாதார
நிலையை, செல்வ நிலையை, அந்தஸ்தை, பிறருக்கு நிரூபித்துக்காட்டுவதில்
தான் அடங்கியுள்ளது என்பது போல கருதிக்கொண்டிருக்கிறோம்! ஆகவேதான்,
நாம் ஒவ்வொருவரும் மேன்மேலும், பணம் சம்பாதிக்கவும், சொத்து, செல்வம்
சேர்க்கவும் பெரிதும் விரும்புகிறோம்! ஆனால், இன்றைய அளவில், சொத்து,
சுகம், செல்வாக்கு, செல்வம் என அனைத்தையும் பணத்தைக் கொண்டே
அளவிடுகிறோம்! ஏனென்றால், பணம், ஏராளமான பணம் இருந்தால் அது
அனைத்தையும் வாங்கித் தந்துவிடும் எனக்கருதப்படுகிறது! அதாவது,
வாழ்க்கை பற்றிய இன்றைய சமுதாயத்தின் பொதுவான எழுதப்படாத ஒரு
சமன்பாடு என்னவெனில்:

   குறைவான பணம் = குறைவான, (நிறைவற்ற, சந்தோஷமற்ற) வாழ்க்கை
   அதிக பணம்       = அதிகமான, (நிறைவான, சந்தோஷமான) வாழ்க்கை

என்பதே அந்த வாழ்க்கைச் சமன்பாடு, அல்லது வாழ்க்கை விதி ஆகும்!
ஆனால், இது தவறானது, தாறுமாறானது, தலைகீழானது, ஆகவே சிறிதும்
அர்த்தமற்றது! முக்கியமாக, வாழ்க்கையையும், அனைத்தையும் பணம் எனும்
ஒற்றைக் குறியீட்டின் வழியாகக் காண்பது; அதாவது, பணத்தின் அளவைக்
கொண்டு அனைத்தையும் மதிப்பிடுவது என்பது பிறழ்ச்சியின் உச்சமாகும்!
இதுவே மானிட குலத்தின் வீழ்ச்சியுமாகும்!

உண்மையில், அசலான வாழ்க்கைத்தேவைகள் என்பவை குறைவானவை,
அளவிற்கு உட்பட்டவை; அவை எதுவும் விலை குறிக்கப்பட்டவையல்ல!
நெல் விளையும் வயல்களுக்கு விலை குறித்தது யார்? விளையும் நெல்லும்,
காய்கறிகளும், எதுவும் விலைச்சீட்டுடன் விளைவதில்லை! யாவற்றையும்
விளைவிக்கும் விவசாயியின் உழைப்புக்கு எவ்வளவு விலை குறிக்கலாம்?
உலகின் பொருள் வளங்கள் அனைத்தையும் உற்பத்தி செய்துதரும் உழைப்
பாளிகள், தொழிலாளர்களின் உழைப்புக்கு என்ன விலை? தொழிலாளர்கள்,
உழைப்பாளர்களின் பெரும்பகுதி உழைப்பு சேராத எவ்வொரு பொருளாதாரச்
செயல்பாடும் இருக்கிறதா என்றால் அப்படி எதுவுமே இல்லை! ஆனால்,
அவர்கள் அனைவருமே ஏழைகளாகவே இருப்பதன் காரணம் என்ன? பொருட்
செல்வங்களை, வளங்களை உருவாக்கவும், உற்பத்திசெய்வதற்காகவும்;
மட்டுமே பயன்படுத்தப்படும் கருவிகளா அவர்கள்? வெறுமனே உயிர்-பிழைத்
திருக்கப் போதுமான கூலியைப் பெற்றுக்கொண்டு உழைத்துத்தேய்ந்து மாயும்
எந்திரங்களா அவர்கள்?

இப்பூமியில் தோன்றியுள்ள எல்லா உயிரினங்களும், தாவரங்களும், விலங்கு
களும், மனிதஜீவிகளும் வாழ்ந்திட வேண்டும். அந்தந்த உயிர் ஜீவிக்கான

வாழ்க்கைத்தேவைகளுக்குரிய உணவும், இருப்பிடமும் பிற பொருட்களும்
இயற்கையிலேயே இருக்கின்றன! ஆனால், மனித இனத்திற்கு மட்டும்தான்
வாழ்க்கை என்பது கட்டாய உழைப்பு முகாம் என்பதாக மாற்றப்படுள்ளது!
 
வாழ்க்கையை வாழ்வதற்கு, அடிப்படையான வாழ்க்கைத் தேவைகளை
அனைவரும் கூடவும் இல்லாமல், குறையவும் இல்லாமல் பெறுவதற்கும்
நிறைவேற்றிக் கொள்வதற்குமான உரிமை அனைவருக்கும் சமமாக உள்ளது!

ஆனால், நடைமுறை எதார்த்தம் முற்றிலும் வேறாக உள்ளது!

உலக வங்கியின் புதிதாகத் திருத்தப்பட்ட வறுமைக்கோட்டின் படி ( $1.90 ஒரு
நாளுக்கு, அதாவது ரூ.122/-க்குக் கீழ் அமைந்த சம்பாத்தியம்) உலகில் வறுமை
யில் வாடுவோரின் எண்ணிக்கையானது 800 மில்லியன், அதாவது, என்பது
கோடியை (80,00,00,000), எட்டியுள்ளது. அதாவது, ஒட்டுமொத்த உலக மக்கள்
தொகையில் 10 % (2015-ல்). உழைக்கும் ஏழைகள், உழைத்தும் ஒரு நாளைக்கு
122 ரூபாய்க்கும் குறைவான கூலியைக் கொண்டு வாழ்பவர்கள் உலகின்
உழைக்கும் மக்களில் 10% எனப்படுகிறது. அதாவது, ஒன்பதில் ஒருவர் பசியில்
வாடுகிறார். கிட்டத்தட்ட இந்தியாவிலும், சீனாவிலும் மக்கள் தொகையில்
பாதிக்கும் மேற்பட்டவர் ஏழைகளாக இருக்கிறார்கள். மேலும், 20 நாடுகளில்,
85% பேர்கள் ஏழைகளாக உள்ளனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை, 132 கோடி மொத்த மக்கள் தொகையில், தற்
போது 77% மக்கள், அதாவது, 100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமைக்
கோட்டிற்குக் கீழே வாழ்கிறார்கள் என்று ஒரு கணக்கீடு சொல்கிறது. ஆனால்,
இன்னொரு பக்கம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி உயர்ந்துள்ளதாக ஆட்சி
யாளர்கள் பெருமை பேசுகிறார்கள்! அதேவேளையில், நாட்டில் ஏராளமானோர்
பசியும் பட்டினியோடும், கந்தைகளைச் சுற்றிக்கொண்டு, வீடின்றி நடைபாதை
களில் படுத்துறங்குகிறார்கள்! இத்தகைய அவல நிலை எத்தகைய தர்க்கத்துட
னும் பொருந்துவதில்லை!

நமக்குத்தெரிந்தே, நமக்கு அருகிலோ, அல்லது தொலைவிலோ, மக்கள் பலர்
பட்டினியில் வாடுகின்றனர்; ஆனால், மழை பொய்த்துப்போனதால், அறுவடை
குறைந்துவிட்டது என்பதால் அல்ல! நாட்டில், வறட்சியோ, பஞ்சமோ கூட
இல்லை! நாட்டின் தானிய சேமிப்பு நிறையவே உள்ளது. எல்லா உணவுப்
பொருட்களும் ஏராளமாக உள்ளன! ஆனால், ஏராளமானோர் பட்டினியில்
வாடிக்கொண்டிருக்கின்றனர். நமக்குத்தெரிந்தே மக்கள் பலர் தெருவில், நடை
பாதைகளில் வசித்து வருகின்றனர். நாட்டில் கட்டுமானப்பொருட்கள் உற்பத்தி
செய்யப்படாமல் இல்லை! மக்கள் கந்தையைச் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்;
நாட்டில், நூற்பாலைகள் இல்லாமலில்லை! எல்லாக்கடைகளிலும், எல்லாப்
பொருட்களும் அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன! எல்லாப்பொருட்களும்,
எல்லாமக்களுக்கும் அன்றாடம் தேவையான பொருட்களே! மக்கள் யாவருமே
ஒரே மானிட இனத்தின் மக்களேயாவர்!

உணவுப்பொருட்கள், துணிமணிகள், தட்டுமுட்டுச் சாமான்கள் எல்லாமே
கடைகளில் வீற்றிருக்கின்றன! ஆனால், ஏராளமானோர் உண்ண உணவின்றி,
உடுக்க உடையின்றி, இருக்க வீடின்றி இருக்கிறார்கள் என்பது எதை உணர்த்
துகிறது? நாம் எத்தகைய மனித ஜீவிகள்? நாம் மனிதஜீவிகளா அல்லது,
குரூரமான சுயநல விலங்குகளா?

எல்லாப்பொருட்களும், எல்லாக்கடைகளிலும் இருக்கின்றன. ஆனால், அவை
மக்களின் பயன்பாட்டிற்காக, அன்றாட உபயோகத்திற்காக அங்கே அடுக்கி
வைக்கப்பட்டிருக்கவில்லை! மக்களின் தேவைகளோ, பொருட்களின் பயன்
பாடோ நமக்கு முக்கியமில்லை! பொருட்கள் யாவும் வியாபாரத்திற்காக
வைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பொருளுக்கும் உரிய குறிக்கப்பட்ட
விலையைக் கொடுத்து வாங்க முடிந்தவர்களுக்கு மட்டுமே பொருட்கள்
உள்ளன!

ஆம், நமக்கு நாமே உருவாக்கிக்கொண்ட சமூக அமைப்பு, மதிப்பீட்டு-அமைப்பு,
சட்ட திட்டங்கள், விதிகள், நடைமுறைகள், வழக்கங்கள், படிமுறை அமைப்பு
கள், சமூக-பொருளாதார-அரசியல் நிறுவனங்கள், இன்னபிற யாவும் வாழ்க்கை-
-விரோதமானவையாகும்! ஏனெனில், நம்மிடம் யாதொரு வாழ்க்கைப்பார்வை
யும் கிடையாது. அல்லது நமது வாழ்க்கைப்பார்வை தலைகீழானது! இதுதான்
நடைமுறை உலகம்! கடைகளில் மக்களுக்குத்தேவையான எல்லாப் பொருட்
களும் இருந்தாலும், அவற்றை மக்கள் பயன்படுத்த முடியாது! மக்களின்
தேவைகளுக்கு மதிப்பில்லை, பொருட்களின் பயன்பாடு முக்கியமல்ல! பணம்
இல்லையென்றால், மக்களின் வாழ்க்கைக்கும் மதிப்பில்லை! ஆக, நிலவுகிற
நடைமுறை மாற்றமுடியாதது! சட்டத்தில் இடமில்லை! புதிய பொருளாதாரக்
கொள்கைகள் இயற்றப்படவேண்டும், எவ்வாறேனும் வறுமை ஒழிக்கப்பட
வேண்டும்! எங்கள் கட்சியைத்தேர்ந்தெடுங்கள்! நாங்கள் வறுமையை ஒழித்து
நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வோம்! நாங்கள் நாட்டை
ஒளிரச்செய்வோம்! இன்னும் ஓரிரு ஆண்டுகளில் நம்நாடு வல்லரசாகிவிடும்
என முழங்குகின்றன அரசியல் கட்சிகள்!

உண்மையிலேயே, நாம் சித்த சுவாதீனமுள்ள ஜீவிகளாயிருந்தால், வாழ்க்
கையை நாம் வேறுவகையில், முறையாக அணுகியிருப்போம்! அதாவது,
வாழ்க்கைத்தேவைகளை பணத்தைக்கொண்டு அளக்க மாட்டோம்! உயிர்-வாழ்
வதற்கு உணவு அவசியமானது; ஆகவே நாம் உணவின் தேவையைத்தான்
பிரதானமாகக் கருதவேண்டுமே தவிர, அதாவது, நமக்குப் பசிக்கும் போது,
"உணவு வேண்டும்!" என்று சொல்லாமல், "பணம் வேண்டும்!" என்று சொல்
வது தலைகீழானது, அபத்தமானது! 'பணம்' என்பது பரிவர்த்தனைக்கான
அடையாளச்சீட்டாக, பின்னால் வருகிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள
முடியும்! இவ்வாறே வாழ்க்கைத் தேவைகள் கோரும் ஒவ்வொரு பொருளின்
பயன்பாடு மட்டுமே முக்கியமானதே தவிர, அப்பொருளின் மீது குறிக்கப்பட்ட
விலைமதிப்பு அல்ல!

"கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!" என்று சொல்லப்பட்டது! ஆனால், மனித
சமுதாயமானது கூடிச் செயல்படுகிறது, எவ்வொரு பொருளாதாரச் செயல்
பாட்டிலும் உழைக்கு மக்களின் பங்கேற்பு இல்லாமல், ஒரு சிறு குண்டூசியை
யும் கூட உற்பத்திசெய்யமுடியாது! ஆனால், அக்கூட்டு உழைப்பின் பலன்கள்
என்று வரும்போது, 90% -த்தை, முதலாளிகள் அள்ளிக்கொண்டு போய்விடுகின்
றனர்! ஆக, நாம் கூடிச் செயல்படுகிறோம், உழைக்கிறோம்; ஆனால், உழைப்
பின் பலன்களை நியாயமாகப்பகிர்ந்து கொண்டு வாழ்வதில்லை! அதாவது,
நாம் கூடி உழைக்கிறோம், ஆனால், கூடி வாழ்வதில்லை!

மானிட வாழ்க்கைக்குரிய எல்லாப்பொருட்களையும், அம்சங்களையும், மதிப்பு
களையும் நாம் பணத்தைக்கொண்டே அளப்பதால், "பணம்" என்பது பிரதான
மாக்கப்பட்டு பிறவனைத்தும் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன! பணம், ஏராள
மான பணம் இருந்தால், எதையும் வாங்கலாம், எல்லாவற்றையும் வாங்
கலாம் எனும் கணக்கு மனித ஜீவிகளை பணத்தை வழிபடும் பிறழ்ச்சியான
ஜந்துக்களாக மாற்றிவிட்டது! பணத்தின் முன்னே, மனிதஜீவிகளும், வாழ்க்
கையும், எல்லாமும் மதிப்பற்றுப்போயின!

"பணம் என்பது அச்சடிக்கப்பட்ட சுதந்திரம்!" என்று கார்ல் மார்க்ஸ் கூறினார்.
ஆனால், இன்றைய அளவில், பணம் என்பது "அச்சடிக்கப்பட்ட வாழ்க்கை
நலம்!" என்பதாகவும், "அச்சடிக்கப்பட்ட சந்தோஷம்!" என்பதாகவும், "அச்சடிக்
கப்பட்ட ஆரோக்கியம்!" என்பதாகவும், "அச்சடிக்கப்பட்ட பாதுகாப்பு!" என்பதாக
வும், இன்னும், அச்சடிக்கப்பட்ட அனைத்துமாகவும் கருதும் கீழ்மையுள் மனித
இனம் ஆழ்ந்துள்ளது!

பணம், ஏராளமான பணம் இருந்தால் எல்லாவற்றையும், இந்த பூமியையே
வாங்கிட முடியும்! ஆனால், நிறைவான சந்தோஷத்துடன் வாழ எவ்வளவு
பணம் வேண்டும்? எவ்வளவு பணம் இருந்தாலும் போதாது! பணத்தைக்
கொண்டு பொருட்களை வாங்கலாம், ஆட்களை, அடிமைகளை, வேலைக்
காரர்களை வாங்கலாம், ஆனால், உண்மையான உறவுகளை வாங்கமுடியாது;
இன்னும் வாழ்க்கையையும், வாழ்க்கையின் அர்த்தத்தையும் விலைக்கு
வாங்க முடியாது!

அடுத்து ஒருவன் தன் வாழ் நாளில் எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும்?
பணம் சம்பாதிப்பதற்கு ஒரு எல்லை எதுவும் இல்லை? ஒரு ரூபாய், இரண்டு
ரூபாய்கள், மூன்று, .... பத்து, நூறு, ஆயிரம், என அனந்தம்வரை அது போய்க்
கொண்டேயிருக்கும்! கீழே பாருங்கள்:

ஒன்று, one(1)
பத்து, ten (10)
நூறு, hundred (100)
ஆயிரம், thousand (1,000)
பத்தாயிரம், ten thousand (10,000)
லட்சம், one lakh (1,00,000 )
பத்து லட்சம், மில்லியன், one million (1,000,000)
கோடி,  one crore, ten million (10,000,000)
பத்துகோடி, one hundred million  (100,000,000)
நூறு கோடி,  பில்லியன் one billion (1,000,000,000)
டிரில்லியன், trillion (1,000,000,000,000)
குவாட்ரில்லியன், quadrillion  (1,000,000,000,000,000)
க்விண்டில்லியன், quintillion (1,000,000,000,000,000,000)
செக்ஸ்டில்லியன், sextillion (1,000,000,000,000,000,000,000)
செப்டில்லியன், septillion (1,000,000,000,000,000,000,000,000)
ஆக்டில்லியன், octillion (ஒன்றையடுத்து  27  பூஜ்ஜியங்கள்)
நானில்லியன், nonillion (ஒன்றையடுத்து  30 பூஜ்ஜியங்கள்)
டெஸில்லியன், decillion (ஒன்றையடுத்து  33  பூஜ்ஜியங்கள்)
அண்டெஸில்லியன், undecillion (ஒன்றையடுத்து 36 பூஜ்ஜியங்கள்)
டுவோடெஸில்லியன், duodecillion(ஒன்றையடுத்து 39 பூஜ்ஜியங்கள்)
ட்ரெடெஸில்லியன், tredecillion (ஒன்றையடுத்து 42 பூஜ்ஜியங்கள்)
க்வாட்யோர்டெஸில்லியன், quattuordecillion
                                          (ஒன்றையடுத்து 45 பூஜ்ஜியங்கள்)
க்வின்டெஸில்லியன், quindecillion (ஒன்றையடுத்து 48 பூஜ்ஜியங்கள்)
செக்ஸ்டெஸில்லியன்,,sexdecillion   (ஒன்றையடுத்து 51 பூஜ்ஜியங்கள்)
ஸெப்டென்டெஸில்லியன், septendecillion
                                          (ஒன்றையடுத்து 54 பூஜ்ஜியங்கள்)
ஆக்டோடெஸில்லியன், octodecillion (ஒன்றையடுத்து 57 பூஜ்ஜியங்கள்)
நோவெம்டெஸில்லியன், novemdecillion (ஒன்றையடுத்து 60 பூஜ்ஜியங்கள்)

உலகில் பணக்காரர்கள் -- லட்சாதிபதி, கோடீஸ்வரன் என்றெல்லாம் அழைக்
கப்பட்டார்கள்; இன்றோ, மில்லியனர், பில்லியனர் என்று அழைக்கப்படுகின்
றனர்! ஒரு பில்லியன் என்பது நூறு கோடியாகும், 1,000,000,000, அதாவது,
ஒன்றையடுத்து ஒன்பது பூஜ்ஜியங்களைக் கொண்ட ஒரு பெரிய எண்! இன்
றைய அளவில், உலகின் முதல் பணக்காரர் என பொறாமையுடன் பாராட்டப்
படும் நபர், அமெரிக்க நாட்டைச்சேர்ந்த பில் கேட்ஸ் என்பவராவார்; அவருக்கு
வயது 60, அவர் தான் மைக்ரோஸாஃப்ட் கணினி நிறுவனத்தின் சக நிறுவனர்
ஆவார்; அவரிடம் தற்போது, 86 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு
கொண்ட சொத்துக்கள் உள்ளன! ஆனால், அவர் ஒப்பீட்டு ரீதியில் மட்டுமே
பெரும் பணக்காரர்! அவர் ஒரு பில்லியனர் மட்டுமே; அவர் ஒரு டிரில்லியனர்
என்கிற இலக்கைத் தொடுவதற்கு இன்னும் 25 ஆண்டுகள் ஆகலாம் என
நிதி நிலை முன்னறிவிப்பாளர்கள் 2014-ம் ஆண்டில் கணக்கிட்டுச் சொல்லியுள்
ளனர்!

ஆனால், எண்கள், டிரில்லியன், அதாவது, ஆயிரம் கோடி என்பதுடன் முடிந்து
விடுவதில்லை! அது டிரில்லியனைத்தாண்டி, குவாட்ரில்லியன், க்விண்டில்லி
யன், செக்ஸ்டில்லியன், செப்டில்லியன், ஆக்டில்லியன்,.... என நீண்டு போய்க்
கொண்டேயிருக்கிறது! ஆக, பணம் சம்பாதிக்க, அல்லது சேர்க்க ஒரு எல்லை
என்பது இல்லை! இதன் அர்த்தம், ஒருவர் முடிவேயில்லாமல் பணம் சேர்க்க
வேண்டும், சம்பாதிக்க முடியும் என்பதல்ல! அதாவது, நம்மைச்சுற்றி, காற்று
மண்டலம் காற்றினால் நிரம்பியுள்ளது என்பதால், அனைத்துக் காற்றையும்
சுவாசித்தாக வேண்டும் எனும் எண்ணம் எவ்வளவு முட்டாள் தனமானதோ
அவ்வளவு முட்டாள் தனமானது ஒருவன் முடிவேயில்லாமல் பணத்தைச்
சம்பாதிக்க வேண்டும் என்பது! இதே போல, ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு
ஓடுகிறது, குளம், ஏரி எல்லாமும் நீரால் நிரம்பியுள்ளது என்பதால், எல்லாத்
தண்ணீரையும் ஒருவன் குடித்தாக வேண்டும் எனும் எண்ணம் எவ்வளவு

பைத்தியக்காரத்தனமானதோ, அவ்வளவு பைத்தியக்காரத்தனமானது முடிவே
யில்லாமல், பணத்திற்காக பணத்தைச் சம்பாதிப்பது என்பது!

தேவைகளுக்கு மேலாக பணம் சம்பாதிப்பது ஒருவகை முட்டாள்தனம், பைத்
தியக்காரத்தனம் என்றால், அவ்வாறு பணம் சம்பாதித்த பணக்காரர்களைப்
பார்த்து பல் இளிப்பதும், பொறாமைப்படுவதும், வியந்துபேசுவதும் அதைவிடப்
பெரிய முட்டாள்தனமும், பைத்தியக்காரத்தனமும் ஆகும்!

"அறிவுடையார் எல்லாம் உடையார்!" என்று சொல்லப்பட்டது! ஆம், ஒருவன்,
அசலான வாழ்க்கைத்தேவைகளை உணர்ந்தறிந்து அவைகளை நிறைவேற்றிக்
கொள்ளத்தேவையான பணத்தை ஈட்டி, புறப்பொருட்களை, சம்பத்துக்களைப்
பெற்று வாழ்வதும், யாவற்றுக்கும் மேலாக, வாழ்வின் உட்பொருளை ஆழ்ந்
தாராய்ந்துணர்ந்தறிவதும் மட்டுமே நிறைவான நீங்காத சந்தோஷம் நிறைந்த
வாழ்க்கையாக அமையும், வாழும் போதும், மரணத்திற்குப்பிறகும்!

மா.கணேசன்/ 28-01-2018
----------------------------------------------------------------------------

Wednesday, 24 January 2018

பெரும்பணக்காரர்கள் - மானிடகுலத்தின் புற்றுநோய்!





   தனியொருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை
   அழித்திடுவோம்!
                    - பாரதி

   பகட்டு நிறைந்த செல்வச்செழிப்பு என்பது அபத்தமான வகையில்
   அலங்கரிக்கப்பட்ட அன்றாடம், பிறழ்ச்சியாக மதிப்பேற்றப்பட்ட
   சாதாரணம், அதாவது வீண் ஆடம்பரமே தவிர வேறல்ல!

                    - அர்த்தமற்ற அரசியல்/மா.கணேசன்

பணக்காரர்களுடைய பொருளதார அந்தஸ்து என்பது வானளாவிய செல்வத்
திற்கு அவர்கள் தகுதியானவர்கள் என்பதன் -- அதாவது அவர்களுடைய கடின
உழைப்பு, புத்திசாலித்தனம், மற்றும், சீரிய முயற்சியின் பிரதிபலிப்பு என்பதாக
பரவலாக எல்லோரும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள், அல்லது நம்பவைக்கப்
பட்டிருக்கிறார்கள்! ஆனால், இது சிறிதும் பொருந்தாதக் கூற்றாகும்! ஏனெனில்,
வெறும் ஒரு சதவிகிதத்தினர் (அமெரிக்காவில்), அல்லது வெறும் 10% பேர்கள்
மட்டுமே (இந்தியாவில்) வானளாவிய செல்வத்திற்குத் தகுதியானவர்கள்;
அவர்கள் மட்டுமே கடினமாக உழைக்கிறார்கள், புத்திசாலிகள், சீரிய முயற்சி
யாளர்கள் என்பது எவ்வகையிலும் உண்மையல்ல!

"நான் பணக்காரனாக ஆகப்போகிறேன் என்பதை நான் எப்போதும் அறிந்திருந்
தேன். அது குறித்து எப்போதாகிலும் ஒரு நிமிடம் கூட நான் சந்தேகித்தேன்
என நான் எண்ணவில்லை!" என அமெரிக்காவின் பணக்காரர்களில் இரண்டாம்
இடத்தில் இருக்கும் வாரண் பஃபெட் (Warren Buffett)கூறுகிறார். ஆனால்,
அதேநேரத்தில், அவர் எப்போதாவது தான் ஒரு மனிதனாக இருப்பது என்றால்
என்ன என்பது பற்றியும், என்றாவது ஒரு நாள் மனிதனாக ஆவது பற்றியும்
சந்தேகம் கொண்டிருப்பாரா என்பது சந்தேகமே!

தற்போது 85 வயதாகும் வாரண் பஃபெட், தனது மொத்த சொத்துக்களில்
பாதியை தானமாகத் தருவதற்கான ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளதாகச்
சொல்லப்படுகிறது! இது தேவையற்ற வேலை; முதலிடத்தில் தனது உண்மை
யான தேவைகளை உணர்ந்து அதற்குரிய அளவிற்கு பணம் சம்பாதித்து
வாழாமல், எதற்காக அளவிற்கு மீறி பணம் சம்பாதிக்கவேண்டும், பிறகு அதி
லிருந்து தானமாக அளித்திடுகிறேன் பேர்வழி என்று விளம்பரப்படுத்த
வேண்டும்?

இக்கட்டுரை பணக்காரர்கள் மீதான காழ்ப்புணர்ச்சியினால் எழுதப்பட்டதல்ல;
மாறாக, அவர்களுடைய அதீதமான பிறழ்ச்சி மனப்பான்மை, குறிப்பாகச்சொன்
னால், அவர்களுடைய தகுதியற்ற உயர்வு மனப்பான்மையைச் சகிக்க முடியா
மையால் எழுதப்பட்டதாகும்! அதாவது, வானளாவிய பெரும் செல்வத்திற்கு
அவர்கள் மட்டுமல்ல, எவருமே தகுதியானவர்கள் அல்ல! செல்வம் என்பது
ஒருவருக்கோ, அல்லது, குறிப்பிட்ட ஒரு சிலருக்கோ சொந்தமானதல்ல!
செல்வம் என்பது ஒரு ஆற்றைப் போல, அல்லது சமுத்திரத்தைப் போல
யாவருக்கும் பொதுவானதாகும்! ஒரு ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீரை
எவரும் தமக்குத் தேவையான அளவிற்கு எடுத்துக் கொள்ளலாமே தவிர,
மொத்த ஆற்றையோ, சமுத்திரத்தையோ எவரும் சொந்தம் கொண்டாட முடி
யாது! செல்வம் என்பதும் ஆற்றையும், சமுத்திரத்தையும் போலத்தான்!

செல்வம் என்பது முற்றிலும் ஒரு சில பணக்காரர்களின் உருவாக்கமோ,
படைப்போ அல்ல!

செல்வம், அல்லது, பொருள்-வளங்களுக்கான அடிப்படை, பணம் படைத்தவர்
களின் முதலீடு மட்டுமே அல்ல! அதாவது செல்வத்தின் அடிப்படைகளில்
ஒரே ஒரு காரணி மட்டுமே பணம், அல்லது, முதலீடு என்பதாகும்! மிகவும்
அடிப்படையான காரணிகளானவை பூமி, பூமியின் இயற்கை வளங்கள், நிலம்,
நீர், காற்று, சுற்றுச்சூழல், பல்லுயிர் வளங்கள், முக்கியமாக சக மனிதர்கள்,
அதாவது, மக்கள் சமுதாயம், மற்றும் அவர்களது உழைப்பும், யாவற்றுக்கும்
மேலாக அனைவருக்கும் பொதுவான வாழ்க்கைத் தேவைகளும்தான் பொருள்
வளங்களின் (செல்வத்தின்) உருவாக்கத்திற்கும், உற்பத்திக்குமான அடிப்படை
களாகும்!

பொருளாதார நடவடிக்கைகள் என்ற போர்வையில், நாம் சுரண்டி கொள்ளை
யடிக்கும் இயற்கை வளங்களுக்கு, அதாவது, நாம் உருவாக்கும் பொருள்
வளங்கள், அல்லது, செல்வத்தின் ஒவ்வொரு ரூபாய்க்கும், டாலருக்கும் நாம்
இப்பூமிக்கும், பிற உயிரினங்களுக்கும், உழப்பைத்தரும் ஒவ்வொரு மனிதருக்
கும், சுற்றுச்சூழலுக்கும் நாம் கடன்பட்டிருக்கிறோம் என்பதை மறந்துவிட்டு,
"நான்தான் முதலீடு செய்தேன், ஆகவே, ஒட்டுமொத்த செல்வத்தையும் நானே
எடுத்துக்கொள்வேன், எல்லாமே எனக்குத்தான் சொந்தம், என உரிமை கொண்
டாடுவதற்கு இப்பூமியில் எவருக்கும் உரிமை கிடையாது! அவ்வாறு உரிமை
கோருபவன் ஒரு கடைந்தெடுத்த பிற்போக்குவாதியாகவும், முட்டாளாகவும்,
பேராசை பிடித்த மிருகமாகவும்தான் இருக்க முடியும்! அத்தகைய தொரு
முட்டாளின் பெயர் தான் "பெரும்பணக்காரன்" (மில்லியினர், பில்லியினர்)
என்றால், இனியும் அத்தகைய நடைமுறையை நாம் அனுமதிக்கலாகாது!

உலகின் ஒட்டுமொத்த 760,00,00,000 (760 கோடி) மக்கள்தொகையில்,  மிகவும்
வறுமையிலுள்ள பாதி மக்கள், அதாவது, 360,00,00,000 (360 கோடி) மக்களின்
சொத்துக்களுக்குச் சமமான சொத்துக்களை, வெறும் 62 பேர்கள் (உலகின்
பெரும் பணக்காரர்கள்) வைத்திருக்கிறார்கள்! அதாவது, 360,00,00,000 பேர்கள்
கூட்டாக பகிர்ந்து அனுபவிக்கும் மொத்த சொத்து சுகங்களை வெறும் 62 பேர்
கள் மட்டுமே உடமையாகக் கொண்டிருக்கிறார்கள், அனுபவிக்கிறார்கள்!
அதாவது, 62 = 360,00,00,000 (வெறும் 62 பேர்கள் 360,00,00,000 பேர்களுக்குச்சமம்!)
எனும் இச் சமன்பாட்டை அறிவார்ந்த எந்த ஒரு மனிதனும் ஏற்றுக்கொள்
வானா?

பணக்காரர்களிடமுள்ள செல்வம் அவர்களைப் போலவே பயனற்றதாகும்!
மண்ணிற்குள் புதைக்கப்பட்டு மறைந்துகிடக்கும் புதையலைப் போன்றதே
பணக்காரர்களிடம் சிக்கிய செல்வம்!

ஆகவே, செல்வம் சேர்ப்பதற்கு ஒரு உச்சவரம்பு நிர்ணயிக்கப்படவேண்டும்!
ஒவ்வொரு மனிதனுக்கும் இவ்வளவு தான் நிலம், மனை, பிற ஏணைய
சொத்துக்கள் உடமையாக இருக்கவேண்டும்; ஒரு குறிப்பிட்ட அளவிற்குமேல்
சொத்துக்களைச் சேர்ப்பது என்பது அடுத்தவர்களுக்கான வாய்ப்புக்களைப்
பறிப்பதாகும் எனக் கருதப்படவேண்டும்! ஒருவர் எத்தனை தொழிற்சாலை
களை அமைக்கலாம், பராமரிக்கலாம் என்பதற்கும் ஓர் உச்சவரம்பு வேண்டும்!

ஒரு 'தொழிலதிபர்' என்பவர், எண்ணற்ற தொழிற்சாலைகளைக் கொண்டிருந்
தாலும், சங்கிலித்தொடர் போன்ற வியாபார நிறுவனங்களைக் கொண்டிருந்
தாலும், ஏற்கனவே மேலே குறிப்பிட்ட படி, அவருடைய தொழிற்சாலைகளில்
பணிபுரியும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் ஒட்டுமொத்த லாபத்திலிருந்து
ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படவேண்டும்;
அதே போல, ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் சுற்றுச்சூழலைக் காப்பதற்கும்
(உயிரியல் மண்டலத்திற்கு ஏற்படும் பாதகங்களைச் சரிகட்டுவதற்கும்), இயற்
கையிடமிருந்து எடுக்கப்பட்ட வளங்களைச் சரிகட்டுவதற்கும், அல்லது புதுப்
பிப்பதற்குமான தொழில் நுட்பங்களுக்குச் செலவிடவேண்டும்! அனைத்து
லாபங்களையும் தொழிலதிபதிரே சுருட்டிக்கொண்டு போய்விடுவதை இனியும்
அனுமதிக்கலாகாது! அவர் போட்ட முதலீட்டிற்குரிய நியாயமான சதவிகிதம்
மட்டுமே அவருக்குச் செல்லவேண்டும்! அந்த சதவிகிதமும் ஒரு குறிப்பிட்ட
அளவைத் தாண்டுமானல், அதற்கும் அவர் வரி கட்டவேண்டும்!

இத்தகைய யோசனைகள், ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் சிலருக்கு
கிறுக்குத்தனமாகத் தோன்றினால், அவர்கள் முன்வந்து பொருளாதார ஏற்றத்
தாழ்வை சரி செய்வதற்கான சரியான யோசனைகளைக் கூறட்டும்! அல்லது
உலக மக்களின் கூட்டுழைப்பினால் உருவாக்கப்பட்ட செல்வம் மற்றும்
பொருள் வளங்களில் ஐந்தில் நான்கு பகுதியானது எவ்வாறு மொத்த உலக
மக்கள் தொகையில் வெறும் ஒரு சதவிகிதம் பேர்களின் உடமையாக ஆனது
என்பதற்கான நியாயத்தை சொல்லட்டும்!

பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்குமிடையிலான இடைவெளியானது கடந்த
பத்தாண்டில் மலைக்கும் மடுவுக்குமான அளவு அதிகரித்துள்ளது. பணக்காரர்
கள் தொடர்ந்து மேன்மேலும் செல்வங்களையும், சொத்துக்களையும் அடையப்
பெறுகிறார்கள்! ஏழைகளோ ஏழைகளாகவே தங்கிவிடுகின்றனர். இருவருக்கு
மான இந்த இடைவெளியானது வருமானப்பங்கீட்டில் உள்ள சமமின்மையைச்
சுட்டுவதாயுள்ளது! இதற்கான காரணங்கள் யாவை! எவ்வாறு இந்த பெரும்
இடைவெளியைப் போக்குவது? கல்வி வாய்ப்புக்கள் பணம் படைத்தவர்களுக்கு
மட்டுமே கிடைப்பதாயுள்ளது; ஆகவே, அவர்கள் மட்டுமே குறிப்பிட்ட துறை
களில் முதலிடமும், தலைமையும் பெறுவதற்கான தளத்தை எட்டுகிறார்கள்!
சிலர், கல்வி எனும் ஆசிர்வாதம் ஏழைகளுக்கும் எளிதாக, அல்லது இலவச
மாகக் கிட்டும் வகையில் அரசு ஆவன செய்யவேண்டும், அவ்வழியே, ஏழைக்
கும், பணக்காரனுக்கும் இடையேயுள்ள இடைவெளியைக் குறைக்க முடியும்
என்கிறார்கள்!

ஒரு ஆய்வறிக்கையானது, இந்த இடைவெளிக்குக் காரணம், கலாச்சாரம்,
உள்ளார்ந்த திறன், உலகமயமாதல், கல்வி, தொழில் சந்தைகள், வரி விதிப்பு
திருத்தங்கள், அரசுக்கொள்கைகள், தொழில் நுட்ப மாற்றங்கள், பாலினம்,
இனவாதம், சம்பள வித்தியாசங்கள் போன்றவை பிரதானமானவை என்கிறது!

ஆனால், மேற்குறிப்பிட்ட காரணிகளில், "உள்ளார்ந்த திறன்" எனும் விஷயம்
உண்மையில் விஷமத்தனமானதாகும்! ஏனெனில், மனிதஜீவிகள் இப்பூமியில்
உயிர்-வாழ்வதற்கு, தனித்திறன், அல்லது விசேடத் திறன் ஏதும் வேண்டுமா?
திறன் குறைந்தவர்கள், அல்லது, விசேடத் திறமையற்றவர்கள் கௌரவமான
வகையில் வாழ்வதற்கான உரிமை இல்லையா? அல்லது, ஏழைகள், வறிய
வர்கள், எனப்படுவோர், புழு பூச்சிகளைப் போல் வெறுமனே உயிர்-பிழைப்
பதற்கு மட்டும்தான் தகுதியானவர்களா? அப்படித்தானே இப்பூமியின் மீது
360,00,00,000 (அதாவது,360 கோடி) மக்கள் உயிர்-பிழைத்துக்கொண்டிருக்கிறார்
கள்! இந்த ஈனப் பிழைப்பிற்காக அவர்கள் மிகக் கடுமையாக உழைக்கவும்
வேண்டும், அதனுடன், உயிர்- பிழைத்திருப்பதற்கு அரசுக்கு வரியும் கட்ட
வேண்டும்! ஆனால், வெறும் 62 பேர்கள், பெரும் பணக்காரர்கள், அவர்கள்
மட்டும்தான் அபரிமிதமான செல்வங்களோடு ஆடம்பரமாகவும், ஊதாரித்தன
மாகவும் வாழ்வதற்கான தகுதியுடையவர்களா? அவர்கள் வாழ்கிற விதத்தை
"ஆடம்பரம்" என்கிற சொல்லைக்கொண்டு குறிப்பிட முடியுமா என்று தெரிய
வில்லை! அதாவது, அளவுகடந்த ஆடம்பரத்தை "அபத்தம்" என்றுதான் கூற
முடியும்!

மனிதர்கள் மனிதர்களாக இருக்கும் பட்சத்தில், அவர்கள் ஏழைகளாகவும்
இருக்க மாட்டார்கள், பணக்காரர்களாகவும் இருக்க மாட்டார்கள்! ஏனெனில்,
'ஏழை', 'பணக்காரன்' எனும் பட்டங்கள் மனிதனை இழிவு படுத்துபவை! ஏழை
கள் என்போர் தங்களுடைய விருப்பத்தினால் ஏழைகளாக இருப்பதில்லை;
மாறாக, சமுதாயத்தால் கொண்டாடப்படும் தவறான, தலைகீழான மதிப்பீடு
களை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அவற்றை அடைவதற்காக சமுதாயத்தின்
"எலிப்பந்தயத்தில்" எல்லோரும் கலந்துகொள்வதன் தவிர்க்கவியலாத விளை
வாகவே ஏழைகள், 'இல்லாதவர்கள்' என்போர் உருவாகிறார்கள்! பணக்காரர்கள்
தங்கள் விருப்பத்தினால், பெரு முயற்சியினால், திறமைகளால், புத்திசாலித்
தனத்தினால் பணக்காரர்களாக ஆனவர்கள் என்று அவர்கள் சொல்லிக்கொள்
ளலாம்! ஆனால், பணக்காரராக ஆவது, அல்லது, ஆகவிரும்புவது என்பது
மதிக்கத்தக்க, அல்லது, அர்த்தமுள்ள, வாழ்வின் இலக்கு நிலை அல்ல!

பலர், "பொருளாதார சமத்துவம்" பற்றிப் பேசுகிறார்கள். "பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லை!" என்று சொல்லப்பட்டது! ஆனால், இவ்வுலகிலேயே
நாம் எவரும் நிரந்தரமாக என்றென்றுமாய் தங்கி வாழப்போவதில்லை!
மேலும், இவ்வுலகம் நமக்கு மட்டுமே சொந்தமானதல்ல; வருங்காலச் சந்ததி
யினருக்கும் சொந்தமானதாகும்; இன்னும் பிறவனைத்து உயிரினங்களுக்கும்
சொந்தமானதாகும்! உயிர்-வாழ்க்கைக்கு பொருள் மிகவும் அவசியமே! ஆனால்,
வாழ்க்கைக்கு பொருள் என்பது ஒரு ஆதாரம் மட்டுமே தவிர அதுவே வாழ்
வின் ஒட்டுமொத்தமும் அல்ல! இதன் அர்த்தம், வாழ்க்கை என்பது "உயிர் -
வாழ்தல்" என்பதுடன் முடிந்துவிடுவதோ முழுமையடைவதோ கிடையாது!
ஏனெனில் நாம் எலிகளோ, தவளைகளோ அல்ல, வெறுமனே உயிர்-வாழ்ந்து
செல்வதற்கு! நாம் மனித ஜீவிகள்! நம்முடைய வாழ்க்கை பிற விலங்குஜீவி
களுடையதைப் போன்றதல்ல! "மேன்மைபடுத்தப்பட்ட எலியின் வாழ்க்கை"
(A Glorified Rat Life)ஒருபோதும் மனித வாழ்க்கையாகிடாது!

செல்வச் செழிப்புமிக்க வாழ்க்கை என்பது என்ன? 'உயிர்-வாழ்தலை' மிகச்
சௌகரியமாகவும், அலங்காரமாகவும், ஆடம்பரமாகவும், பகட்டாகவும் மேற்
கொள்ளுதல் என்பதற்குமேல், அதாவது, "மேன்மைபடுத்தப்பட்ட ஒரு எலியின்
வாழ்க்கை" என்பதற்குமேலாக, அதில் வேறென்ன தனிச்சிறப்பு உள்ளது? 

உலகில் பொருளாதார ஏற்றத்தாழ்வு நிலவுகிறது; ஏழைக்கும், பணக்காரனுக்
கும் உள்ள இடைவெளி விரிந்துகொண்டே போகிறது என்பதால், உடனே
"பொருளாதார சமத்துவம்" பற்றிப் பேசுவது பொருத்தமாகப் படலாம்! ஆனால்,
அவர்கள் எண்ணுகிற பொருளாதாரச் சமத்துவம் என்பது எத்தகையது?
அதாவது, எல்லோருக்கும் ஒரே மாதிரியான உயரிய "வாழ்க்கைத் தரத்தை"
சாத்தியப்படுத்துவது என்பதுதானே! ஆனால், வாழ்க்கைத்தரம் என்பது என்ன?
உண்மையில் அது எதைக்குறிக்கிறது, அல்லது எதைப் பற்றியது? வாழ்க்கைத்
தரம் என்பது "வாழ்க்கை" யைப் பற்றியதா என்றால் இல்லை என்பதுதான்
அதற்கான சரியான பதிலாகும்!

ஆம், வாழ்க்கைத்தரம் என்பது பிரதானமாக பொருட்களின் (பல்வேறுபட்ட
கருவிகள், பயன்பாட்டுச் சாதனங்களின்) தரத்தையும், எண்ணிக்கையையும்
பற்றியதாகும்! இப்பொருட்களும், அவற்றின் தரமும், எண்ணிக்கையும்
இவற்றைப் பெறுவதற்கான அடையாளச் சீட்டான பணமும் சேர்ந்து தான்
செல்வமாகவும், சொத்தாகவும் கருதப்பட்டு கொண்டாடப்படுகிறது! ஆனால்,
இந்த பொருட்களின் தரம் ( பணம், சொத்து, செல்வம்) எதுவும், எவ்வகை
யிலும் வாழ்க்கையை, வாழ்க்கையின் தரத்தை அளப்பதற்கான பொருத்தமான
அளவுகோல் அல்ல! ஆகவேதான், இத்தகைய செல்வச்செழிப்பால் அலங்கரிக்
கப்பட்ட, சௌகரியம் மிக்க, உயிர்- பிழைத்தல் எனும் விவகாரத்தை நாம்
"மேன்மைபடுத்தப்பட்ட எலியின் வாழ்க்கை" என்று இங்கு குறிப்பிடுகிறோம்!

ஆனால், இந்த உயர் வாழ்க்கைத்தரம் என்று சொல்லப்படுகின்ற, மேன்மை
படுத்தப்பட்ட எலியின் வாழ்க்கையை, உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்
கும்படிச் செய்யவியலாது! இதன் அர்த்தம், வெறும் ஒரு சதவிகித பெரும்
பணக்காரர்களுக்கு மட்டுமே இத்தகைய வாழ்க்கை கிடைக்கமுடியும், அவர்கள்
மட்டுமே அதற்குரிய தகுதிபடைத்தவர்கள் என்பது அல்ல!

ஏனெனில், அளவில்லா மக்கள் தொகைப் பெருக்கம், அதற்கிணையான பொரு
ளாதார நடவடிக்கைகளுக்கு இட்டுச்செல்கிறது! பெருகிடும் நுகர்வுத்தேவை
களுக்கான பொருட்களை உற்பத்தி செய்யும் வகையில், இயற்கை வளங்கள்
குன்றுதல், நீர் வளம் குறைவுபடுதல், நிலவளம் குன்றுதல் உடன்விளைவாக
நிகழ்கிறது; இவற்றினால் பூமியின் சுற்றுச்சூழல் மாசடைந்து  புவிக்கோளம்
சூடேறுதலில் முடிவடைகிறது! மனித இனம் தொடர்ந்து இப்பூமியில் வாழ்
வதற்குரிய அனைத்து ஆதார வளங்களையும் பெருநிறுவன முதலாளிகள்
தங்களது லாப வெறிக்கு இலக்காக்கிடும்வகையில், அதாவது, சுரண்டிக்
கொள்ளையடிப்பதனால் மனித இனத்தின் எதிர்காலம் என்பதே கேள்விக்குறி
யாகிக் கொண்டிருக்கிறது! முதலில், இம்மாபெரும் சுரண்டலையும், பொருளா
தாரச் செயல்பாடுகளினூடே மக்களிடமிருந்து உறிஞ்சப்படும் மாபெரும்
உழைப்புச் சுரண்டலையும் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

முடிவில்லாத வளர்ச்சி, முன்னேற்றம், வாழ்க்கைத்தரம் என்பவை வெறும்
மாயையே தவிர வேறல்ல!

வறுமை (ஏழ்மை) என்பது நிச்சயமாக ஒழிக்கப்பட வேண்டியதே என்பதில்
துளியும் சந்தேகம் இல்லை! அதேபோல, வளமை (செல்வம்) என்பதும் ஒழிக்
கப்பட வேண்டியதே! ஏனெனில், வளமை, அதாவது, செல்வச்செழிப்பு மிக்க
வாழ்க்கை பற்றிய கற்பனைகளும், கற்பிதங்களும், கனவுகளும்தான் வறுமை
யைத் தோற்றுவித்தன!

'வறுமை' ஏன் ஒழிக்கப்படவேண்டும் என்றால், அது உயிர்-வாழ்தல் எனும்
அடிப்படையையே குலைப்பதாகிறது; மனித ஜீவிகள் உயிர்-பிழைப்பதற்காக
பிற சகமனிதர்களுடன் போட்டியிடவும் போரடவும் வேண்டும் என்பது மிகவும்

அவமானகரமானதாகும்! அது மனித குலத்திற்கே பெரும் இழுக்கு ஆகும்!
அடுத்து, 'வளமை' ஏன் ஒழிக்கப்படவேண்டும் என்றால், வளமை என்பது
மனித வாழ்க்கைக்கு போலியான இலக்கையும், பொய்யான அர்த்தத்தையும்
அளிப்பதாகிறது! ஆக, வளமை, வறுமை இவ்விரண்டும் அசலான மானிட
வாழ்க்கைக்கு எதிராகச் செயல்படும் இரட்டைத் தீமைகள் ஆகும்!

ஏழைக்கும், பணக்காரனுக்கும் இடையேயுள்ள பெரும் இடைவெளிக்கு ஒரு
பிரதான காரணமாக இருப்பது வருமான ஏற்றத்தாழ்வே ஆகும்! அதாவது,
ஒவ்வொருவரும் அளிக்கக்கூடிய சேவை அல்லது உழைப்புக்குப் பெறக்கூடிய
சம்பளம் மற்றும் கூலிகளில் உள்ள பெரும் வித்தியாசம் தான் பொருளாதார
ஏற்றத்தாழ்வுக்கான பிரதான காரணமாக உள்ளது! அதாவது, ஒருவருடைய 
உழைப்புக்கான (அதாவது சேவை, பணி, உத்தியோகத்திற்கான) கூலி, சம்பளம்
எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது? இக்கேள்விக்கான பதில் யாருக்கும் தெரியாது!
ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம், அதாவது, கூலி அல்லது சம்பள நிர்ணயம்
என்பது யாதொரு முறைமையும், நியதியும், அடிப்படையும் இல்லாமல் குத்து
மதிப்பாகத்தான் செய்யப்படுகிறது! இவ்வாறு செய்வதுதான் சம்பிரதாயமாக
உள்ளது; அதையே தான் நாம் அனைவரும் "பொன்விதி" யாக கடைப்பிடித்து
வருகிறோம்!

ஒரு குழாய் பொருத்துபவருக்கும், ஒரு மென்பொருள் பொறியாளருக்கும்
உள்ள சம்பள வித்தியாசத்தை எவ்வாறு சமன்செய்வது என்று கேட்டால், நம்
எவரிடமும் எந்தப்பதிலும், தீர்வும் கிடையாது - 'சமன் செய்யப்பட முடியாதது!'
என்பதைத்தவிர! "இல்லை, இந்த வித்தியாசத்தைச் சமன் செய்யமுடியும்
என்று எவராவது சொன்னால், நாம் அனைவரும் திகைத்துப் போவோம்!
ஆனால், சமன் செய்யமுடியும்! முடியும் என்று சொல்வதைவிட செய்து
முடித்தாகவேண்டும்! உண்மையிலேயே நாமனைவரும் சிந்திக்கிறவர்களாக,
சமூக அக்கறை கொண்டவர்களாக இருக்கிறோம் என்றால், நிச்சயம் ஒரு
குழாய் பொருத்துபவருக்கும், ஒரு மென்பொருள் பொறியாளருக்கும் உள்ள
சம்பள வித்தியாசத்தை, ஏற்றத்தாழ்வைச் சமன் படுத்திட முனைவோம்!

இப்போது, நாம் இப்பிரச்சினைக்கான தீர்வுக்கு வருவோம்! அதாவது, "குறைந்த
பட்ச ஊதியம்" என்ற ஒன்றை நாம் அனைவரும் அறிவோம்; இந்த குறைந்த
பட்ச ஊதியத்தைக்கொண்டே சிறப்பாக வாழமுடியும் என்பதை எவ்வாறோ
அறிந்ததன் காரணத்தினால் தானே அரசாங்கம் "குறைந்தபட்ச ஊதியம்" என்ற
ஒன்றை நிர்ணயித்துள்ளது? மேலும், நாட்டில் ஏராளமானோர் இந்த குறைந்த
பட்ச ஊதியத்தைக்கொண்டுதான் சிறப்பாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்
எனும் பட்சத்தில், தேவையில்லாமல் சிலருக்கு மட்டும் எதற்கு அதிகபட்ச
ஊதியம் வழங்கிட வேண்டும்? பாரபட்சமின்றி எல்லோருக்கும் குறைந்த பட்ச
ஊதியத்தையே வழங்கிடலாமல்லவா? இவ்வழியே எல்லோருமே சுபிட்சமாக
வாழலாமே!

சந்தை மயமாகிப்போன நம்முடைய இன்றைய உலகில், ஒவ்வொரு பொரு
ளுக்கும் ஒரு விலை குறிக்கப்பட்டுள்ளது; அப்பொருட்கள் அத்தியாவசியத்

தேவைகளுக்குரியவையாயினும், அல்லது அத்தியாவசியமற்ற ஆடம்பரத்

தேவைகளுக்குரியவையாயினும்; அவற்றுக்கான விலை நிர்ணயம் எவரால்,
எங்கு, எவ்வாறு செய்யப்படுகிறது என்பது ஒருபுறமிருக்கட்டும்! அடிப்படை
வாழ்க்கைத் தேவைகளுக்குரிய பொருட்கள் எல்லா மக்களுக்கும் வேண்டு
மில்லையா? ஆனால், பொருட்களின் விலை ஒவ்வொருவருடைய ஊதியம்
அல்லது கூலிக்கு ஏற்றாற்போலில்லாமல், யாவருக்கும் பொதுவாக கறாராக
ஒரே மாதிரியாக இருக்கையில் ஒவ்வொருவருக்குமான சம்பளம், அல்லது
கூலியானது சமமாக இருப்பதில்லை என்றால் எல்லா மக்களும் எவ்வாறு
உணவு, உடை, உறைவிடம் ஆகிய அடிப்படைத்த்தேவைகளைப் பெற்று
கௌரவமான வகையில் மனித வாழ்க்கையை வாழமுடியும்?

கீரைக்கட்டுகளை வாங்கி காலை முதல் மதியம் வரை பனியில் நனைந்து,
வெயிலில் காய்ந்து விற்றுப் பிழைப்பு நடத்துகிறாள் ஒரு கீரைக்காரி! அவள்
படிக்காதவள், பட்டம் பெறாதவள், விசேடத்திறன் அற்றவள் என்பதால்
அவளுடைய வாழ்க்கைத் தேவைகள் சுருங்கிவிடுகின்றனவா? அல்லது
இன்னொரு பெண், அவள் படித்துப்பட்டம்பெற்று ஒரு மருத்துவராக பணி
செய்கிறாள் என்பதால் அவளுடைய வாழ்க்கைத் தேவைகள் திடீரென பெருகி
விடுகின்றனவா? அதாவது, ஒரு மருத்துவர் என்பதால், அதிகபட்ச சம்பளம்
பெறுவதற்கும், அதைக்கொண்டு அடிப்படைத்தேவைகள் மட்டுமின்றி, ஆடம்
பரத் தேவைகளையும் பூர்த்தி செய்து பகட்டாக வாழ்வதற்கான உரிமத்தை
அவளது உயர்-படிப்பு பெற்றுத்தந்துள்ளதா? அதிகச் சம்பளம் பெறுவதற்கான
வழிதான் உயர்கல்வியா?

வாழ்க்கைத்தேவைகள் என்பவை மனிதனுக்கு மனிதன் வேறுபடக்கூடிய
வையா? கட்டுமானத் தொழிலில், ஆண் சித்தாளுக்கு அதிகக் கூலியும், பெண்
சித்தாளுக்கு குறைந்த கூலியும் கொடுக்கப்பட வேண்டும் என்று, எந்த சட்டப்
புத்தகத்தில், அல்லது புனித நூலில் எழுதப்பட்டுள்ளது? இன்னும், பழைய
காகிதங்களையும், 'பிளாஸ்டிக்' பொருட்கள், 'பாட்டில்'களையும் பொறுக்கி
சீவனம் நடத்தும் மனிதர்கள் எத்தகைய வாழ்க்கையை வாழ்கிறார்கள்? அவர்
கள் மனித ஜீவிகள் இல்லையா?

"அரிது, அரிது மானிடனாய்ப்பிறப்பது அரிது" என்று சொல்லப்பட்டது! ஆனால்,
பணம், செல்வம், என பொருளாதார நிலையை, தர அளவீடாகக்கொண்டு
மனிதர்களை அளப்பதன் வழியே அவர்களை ஏழைகள், வறியவர்கள், இல்லா
தவர்கள், பிச்சைக்காரர்கள் என்பதாகக் காண்கிறோமே தவிர, அவர்களை நாம்
மனிதர்களாக  காணமுடிவதில்லை என்பதற்குக் காரணம் நாம் பொருளாதார
ஏணியில் மேன்மேலும் உயர்-நிலைக்குச் செல்லவிரும்புகிறோம் என்பதைவிட
நாம் மனிதர்களாக இல்லை என்பதே ஆகும்!

இந்தியாவின், பத்து சதவிகித பணக்காரர்கள் 2000 மாம் வருடத்திலிருந்து
தொடர்ந்து மேன்மேலும் பணக்காரர்களாகிக் கொண்டிருக்கின்றனர், தற்போது
நாட்டின் ஒட்டுமொத்த சொத்துக்களில், நான்கில் மூன்று பகுதி அவர்களுடை
யதாய் உள்ளது என புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. நாட்டின் பத்து சதவிகித
பணக்காரர்களில் வெறும் 8 பேர்கள் முதல் எட்டு இடங்களில் உள்ளனர்!
அவர்களுடைய சொத்து மதிப்பு இதோ:

1. முகேஷ் அம்பானி (Chairman and MD of RIL)
     $19.3 billion அதாவது, 12335595000000 ரூபாய்.
2. திலீப் ஷங்க்வி (Founder of Sun Pharmaceuticals)
     $16.7 billion. அதாவது, 1233559500000 ரூபாய்.
3. அஸிம் பிரேம்ஜி (Chairman of Wipro Ltd.)
     $15 billion.அதாவது,   958875000000 ரூபாய்.
4. ஷிவ் நடார்  (Founder and Chairman of HCL)
     $11.1billion.அதாவது,  709567500000 ரூபாய்.
5.  ஸைரஸ் பூனாவாலா (who set up Serum Institute
     of India, a biotec company)
     $8.5billion. அதாவது,  543362500000 ரூபாய்.
6. லக்ஷ்மி மிட்டல் (Chairman and CEO of Arcelor Mittal)
     $8.4billion. அதாவது,  536970000000 ரூபாய்.
7. உதய் கோட்டக் (Executive vice Chairman and MD of
     Kotak Mahindra Bank)
     $6.3billion. அதாவது,  402727500000 ரூபாய்.
8. குமார் மங்களம் பிர்லா (Chairman of Aditya Birla Group)
     $6.1billion. அதாவது,  389942500000 ரூபாய்.

பணக்காரர்கள் என்றவுடன் அவர்களிடம் உள்ள பணத்தை மட்டுமே பார்த்து
வாய் பிளக்கக்கூடாது; மாறாக, அவ்வளவு பணத்தால் அவர்கள் எவ்வளவு
கேட்டை அடைகிறார்கள், பெரும் பணத்தைச் சம்பாதிக்கும் அவர்களுடைய
பேராசையால் எவ்வாறு ஏராளமான மக்களின் சோற்றில் மண்ணை அள்ளிப்
போடுகிறார்கள் என்பதையும், முக்கியமாக, "பணம்" குறித்து நாம் ஒவ்வொரு
வரும் கொண்டிருக்கும் தவறான தலைகீழான மதிப்பீடுகளையும் பார்க்க
வேண்டும்! ஒவ்வொருவரும் பணத்திலிருந்து வாழ்க்கையைப் பார்க்காமல்,
வாழ்க்கையிலிருந்து பணத்தையும், யாவற்றையும் பார்க்கமுடியுமானால்,
உலகிலுள்ள அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்! 

நாட்டின் ஒட்டுமொத்த சொத்துக்களில், நான்கில் மூன்று பகுதியானது பத்து
சதவிகித பணக்காரர்களின் வசம் உள்ளது என புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
நாட்டின் பத்து சதவிகித பணக்காரர்களில் வெறும் 8 பேர்கள் முதல் எட்டு
இடங்களில் உள்ளனர்! இந்திய நாட்டின் மொத்த மக்கள் தொகை 134, 00,00,000
பேர்கள்! இந்த 134 கோடி மக்களில் 10 % என்பது 134,00,00,00 பேர்கள், அதாவது,
வெறும் பதிமூன்று கோடியே நாற்பது லட்சம் பேர்கள்; அதில் வெறும் 8 நபர்
களின் வசம் நாட்டின் உச்ச பட்ச சொத்துக்கள் உள்ளன!

ஆனால், "நம்நாடு பல லட்சம் கோடி கடனில் இருக்கிறது என்று சொல்லப்
படுகிறது! ஒரு சதவிகிதம் பணக்காரர்களும், அரசியல்வாதிகளும் கோடீஸ்
வரர்களாக உள்ளனர்! மக்களோ வரிச்சுமைகளையும், பல்வேறு கடன்சுமை
களையும் சுமந்து கொண்டுள்ளனர்! யாருக்காக இவ்வளவு கடன்கள் வாங்கப்
பட்டன? நாட்டிலுள்ள பணக்காரர்களும், அரசியல்வாதிகளும் பல லட்சம்
கோடிகளுக்கு அதிபதிகளாக இருக்கையில், நம் நாடு கடனில் இருக்கிறது
என்பதன் அர்த்தம் என்ன? இதில் எந்த முரண்பாடும் இல்லையா? இவர்கள்
இங்கே நம் நாட்டின் பிரஜைகள் தானா? அல்லது, வேறு அயல் நாடுகளைச்
சேர்ந்தவர்களா?

இந்தியாவின் பணக்காரர்களது சொத்துக்குவிப்பு குறித்து ஏற்றத்தாழ்வுகளுக்கு
எதிரான செயலார்வலர்கள், மற்றும், வளர்ச்சி மீது அக்கறை கொண்ட பொரு
ளாதாரவியலாளர்களும் கவலை தெரிவித்துள்ளனர். 2016-ம் ஆண்டு, நாட்டின்
58% வருமானமானது இந்தியாவின் 1%  பணக்காரர்களிடம் சென்று சேர்ந்தன
என ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது! சென்ற ஆண்டு, 2017-ல், 73% சொத்துகள்
அதே 1% பணக்காரர்களின் வசமே சேர்ந்துள்ளது என சர்வதேச நிறுவனமான
ஆக்ஸ்ஃபாம் (Oxfam),22.01.2018 அன்று தனது ஆய்வறிக்கையை வெளி
யிட்டுள்ளது. உலக அளவில் இந்தியாவில் தான் வருமான ஏற்றத்தாழ்வு மிக
மோசமாக உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"இத்தகைய நிலை "99% க்கு எதிரான 1%" எனும் போக்கை குறிக்கிறது! இது
எவ்வகையிலும் பகல் கொள்ளைக்கு குறைந்ததல்ல. இதனால் தான் பட்டினிச்
சாவுகளை நீங்கள் இந்தியாவில் காண்கிறீர்கள்" என உரிமைகளுக்காகப்
போராடும் செயலார்வலரும்  MKSS எனும் தொழிலாளர் சமூகத்தின் நிறுவன
ருமான நிகில் டெய் என்பவர் அல் ஜஸீரா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்
துள்ளார்.

"இந்தியாவின் பணக்காரர்களுக்கு எவ்வெவ்வழிகளிலெல்லாம் முடியுமோ அந்த
எல்லாவழிகளிலும் சலுகைகளும், மானிய உதவிகளும் அளிக்கப்படுகின்றன.
ஏழைகள் செயல்படுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. நிலங்கள் எடுத்துக்
கொள்ளப்படுகின்றன. வேலை வாய்ப்புகள் அறவே இல்ல. பள்ளிகள் தனியார்
மயமாக்கப்படுகின்றன."

இந்தியாவின் முன்னனி ஆடை நிறுவனத்தின் உயர் அதிகாரி 17.5 நாட்களில்
பெறுகிற சம்பளத்தை குறைந்தபட்ச கூலி பெறும் ஒரு சாதாரண தொழிலாளி
எட்டுவதற்கு அவரது வாழ்நாட்கள் மொத்தமும் பிடிக்கும் (50 ஆண்டுகள் அவர்
வேலை செய்கிறார் எனக்கொண்டால்) என்கிறது ஆக்ஸ்ஃபாம் அறிக்கை!

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் பலன் ஒரு சில கோடீஸ்வரர்கள்
மட்டுமே அனுபவிப்பதாக ஆக்ஸ்ஃபாம் முதன்மைச் செயல் அதிகாரி (சிஇஓ)
நிஷா அகர்வால் தெரிவிக்கிறார். கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
பொருளாதார வளர்ச்சியை உணர்த்தும் காரணி அல்ல என குறிப்பிட்ட அவர்,
இது பொருளாதார வளர்ச்சியில் காணப்படும் தவறான போக்கை உணர்த்துவ
தாக உள்ளது. நாட்டின் வேளாண் உற்பத்தியில் பாடுபடும் விவசாயி, கட்ட
மைப்பு வசதிக்காக உழைக்கும் உழைப்பாளி, தொழிற்சாலை பணியாளர்கள்
தங்கள் குழந்தைகளின் கல்விவளர்ச்சிக்கு பெரிதும் போராடுகின்றனர். குடும்ப
முதியவர்களின் மருத்துவ செலவுகளை ஈடுகட்டமுடியாமல் திணறுகின்றனர்.
இவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவுக்கு சம்பாதிப்பதே
பெரும் போராட்டமாக உள்ளது. இத்தகைய ஏற்றத்தாழ்வு அதிகரித்தால்
நாட்டில் லஞ்சம் அதிகரிக்கவும், குரோனி முதலாளித்துவம் உருவாக வழி
ஏற்படுத்தும் என்றும் நிஷா அகர்வால் எச்சரித்துள்ளார். [ குறிப்பு: 'குரோனியி
ஸம்' (Cronyism) என்பது, தனக்கு வேண்டியவர்களையும், உறவினர்களை
யும் வேலைவாய்ப்பு, மற்றும், அதிகார நிலைகளில் அமர்த்துதல் என்பதைக்
குறிக்கிறது. அதாவது, அதிகாரிகள் அதிகாரிகளுக்கும், முதலாளிகள் முதலாளி
களுக்கும் மட்டுமே உதவிக்கொண்டு முன்னேறிச் செல்லுதலைக் குறிக்கிறது!]

"பொருளாதாரச் சமநிலை இல்லாமையைக் குறைப்பதற்கான இந்திய அரசாங்
கத்தின் முயற்சிகள் வருத்தமளிக்கக்கூடிய அளவில் மிகவும் போதாமையாக
உள்ளது. பெரும் பணக்காரர்கள் மற்றும் கார்ப்பரேட்டுகள் தொடர்ந்து இந்திய
நாட்டின் சொத்துகளை, வளங்களைக் கொள்ளையடிப்பதை அரசாங்கம் தடுத்து
நிறுத்திடவேண்டும்" எனவும் நிஷா அகர்வால் கூறியுள்ளார்.

நமக்காக ஆடைகளை உருவாக்கும், நமக்காக கைப்பேசிகளை ஒன்று சேர்க்கும்,
நமக்கான உணவு தானியங்களை விளைவிக்கும் மக்கள் - அதாவது, மலிவான
பொருட்களை தொடர்ந்து சந்தைகளுக்கு விநியோகம் செய்யப்படும்வகையில்
பெரும் கார்ப்பரேட் முதலாளிகள், மற்றும், கோடீஸ்வர முதலீட்டாளர்கள்
தங்களுடைய லாபங்களைப் பெருகச் செய்வதற்காக - பெருமளவில் ஏய்க்கப்
படுகிறார்கள் என ஆக்ஸ்ஃபாம் நிறுவனத்தின் செயல் இயக்குனர் விண்ணி
பையானிமா (Winnie Byanyima) கூறுகிறார்.

தி கார்டியன் பத்திரிகை, ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையேயுள்ள
இடைவெளியை, பொருளாதார ஏற்றத்தாழ்வை நீக்குவதற்கு முக்கியமானவை
எனக் கருதப்படுகின்ற ஏழு நடவடிக்கைகளில் (கீழே கொடுக்கப்பட்டுள்ளன)
எது அதிமுக்கியமானது என்று கருத்து கேட்டுள்ளது.

1.இலவசமாகவும் உயர்தரக்கல்வியையும் அரசாங்கம் வழங்கவேண்டும்.
2.குறைந்த பட்ச ஊதியத்தை உயர்த்த வேண்டும்.
3.பணக்காரர்களுக்கு வரிகளை உயர்த்தவேண்டும்.
4.ஊழலை ஒழிக்கவேண்டும்.
5.ஏழைகளுக்கு அதிக சமூகப்பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.
6.அரசியலில் பணக்காரர்களின் தாக்கத்தை நிறுத்தவேண்டும்.
7.வேலையற்றோருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கவேண்டும்.

ஆனால், 99% மக்களின் வாழ்க்கை மூழ்கிக்கொண்டிருக்கையில், கருத்துகளை
கேட்டு, திட்டங்களைத்தீட்டி சாவகாசமாக செயல்படுவதற்கான நேரம் அல்ல
இது; உடனடியாகச் செயல்படவேண்டிய தருணம் இது! ஆயினும், இந்த 7
அம்சங்களின் பொருத்தப்பாடுகளைப் பார்ப்போம்!  இந்த ஏழில், அதிமுக்கிய
மானது என்றால், "வேலையற்றோருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கவேண்டும்"
என்பதைச் சொல்லலாம், ஏனெனில், 2 வது அம்சமான "குறைந்த பட்ச
ஊதியத்தை உயர்த்த வேண்டும்" என்பதைவிட அவசர அவசியம் வேலையற்
றோருக்கு வேலைவாய்ப்புகள் வழங்குவதாகத்தான் இருக்கமுடியும்; ஏனெனில்,
ஏதாவதொரு தொழிலில், உத்தியோகத்தில் குறைந்த பட்ச ஊதியம் பெறுபவர்
களைவிட மிக அவலமான நிலையில் இருப்பவர்கள் வேலையற்றோர்களே
ஆவர்! ஆக, வேலையற்றோருக்கு வேலைவாய்ப்புகள் வழங்குவதுடன்சேர்த்து
குறைந்த பட்ச ஊதியத்தையும் உயர்த்திட வேண்டும்.

அடுத்தபடியாக, உடனடியாகச் செய்யமுடியக் கூடியவைகளில், முதலாவதாக
இரண்டு அம்சங்களைச் சொல்லலாம். ஒன்று, பணக்காரர்களுக்கு வரிகளை
உயர்த்துவது, இரண்டாவது, அரசியலில் பணக்காரர்களின் தாக்கத்தை நிறுத்து
வது. இவ்விரண்டு அம்சங்களும் அவசியமானது, ஏழைகளின் மீது அக்கறை
கொண்ட அரசாங்கமாயிருந்தால், இவற்றை உடனடியாக அமல்படுத்தமுடியும்.

அடுத்து, "இலவசமாகவும் உயர்தரக்கல்வியையும் அரசாங்கம் வழங்கவேண்
டும்" என்பது முக்கியமான அம்சமே எனினும், இதன் பலன்களை அறுவடை
செய்ய அதிக காலம் எடுத்துக்கொள்ளும் என்பதால், உடனடி நடவடிக்கைகள்
பட்டியலில் விடுபட்டுவிடாமல் இரண்டாவது கட்டத்தில் முதலாவது அம்ச
மாக இதை அமல்படுத்திடவேண்டும்.

இவையெல்லாவற்றையும் செயல்படுத்துவதுடன் இணைந்ததாக ஊழலை
ஒழிப்பது என்பதை, அரசாங்கமும்,மக்களனைவரும் கடைப்பிடித்தாகவேண்டும்.

தி கார்டியன் பத்திரிகை முன்வைத்த 7 அம்சங்களில் இடம்பெறாத எட்டாவது
அம்சம், மிக மையமான அம்சம் ஒன்று உள்ளது! அது என்னவென்றால்,
மானிடவாழ்வு முழுவதும் சந்தைமயமாக்கப்பட்டுவிட்ட நிலையில், அமைப்பு
சாராத எண்ணற்ற தொழிலாளர்கள், எடுபிடிகள், சிறுவியாபாரிகள் (கீரைக்காரி
கள்), விவசாய தினக்கூலிகள், மூட்டைத்தூக்குபவர்கள், வீட்டுவேலை செய்ப
வர்கள், .... இன்னும் எண்ணற்ற வகைகளில் உழைப்பவர்கள் அனைவருக்கும்
தங்களுடைய உழைப்புக்கும், சேவைக்கும் உரிய, கௌரவமான வகையில்
தங்களது அன்றாடத்தேவைகளை நிறைவுசெய்து கொள்வதற்குப் போதிய
அளவிலான கூலியை, சம்பளத்தை, விலையை நிர்ணயம் செய்து கொள்ளும்
உரிமையை அவர்களே எடுத்துக்கொள்ளவேண்டும் என்பது தான் அந்த மைய
மான அம்சம் ஆகும்!

ஆம், நாளையிலிருந்து ஒரு கட்டு கீரையின் விலை 50 ரூபாய் + 10 ரூபாய்
வரி ( இது உழைப்பவருக்குச் சேரவேண்டிய கௌரவ வாழ்விற்கான நியாய
மான வரியாகும்) என்றால், நிரந்தர வருவாய் பெறும் வர்க்கத்தைச்சேர்ந்தவர்
கள் அதிர்ச்சியடையக்கூடாது! இல்லை, " இது அநியாயம், பகல் கொள்ளை!"
நாங்கள் அதிர்ச்சியடையத்தான் செய்வோம் என்றால், அதே அதிர்ச்சி இந்தியா
வின் 73 சதவீத சொத்துக்கள் ஒரு சதவீதம் வசதிபடைத்தவர்கள் வசம் ஏன்
இருக்கிறது? எவ்வாறு அவர்களிடம் போய்க் குவிந்தது? என்பது குறித்து ஏன்
ஏற்படவில்லை என்று யோசிக்கட்டும்! இது குறித்து காங்கிரஸ் தலைவர்
ராகுல்காந்தி ட்விட்டரில் பிரதமர் மோடிக்கு 23-01-2018 அன்று கேள்வி எழுப்பி
யுள்ளார்.

பிரதமர் மோடி அவர்கள், ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும்
சர்வதேச பொருளாதார மாநாட்டின் தொடக்க விழாவில் 23-01-2018 அன்று
பங்கேற்று பேசினார். (அதாவது, அந்நிய பெரு முதலீட்டாளர்களுக்கு சிவப்புக்
கம்பளம் விரித்துவிட்டு அப்படியே உள்ளூர் சிறுமுதலீட்டாளர்களுக்கு கோடித்
துணி வாங்கிவருவதற்காக டாவோஸ் நகருக்குச் சென்றுள்ளாரா? - இது இக்
கட்டுரையாளரின் தார்மீகக் கோபத்தின் வெளிப்பாடு!) டாவோஸ் மாநாட்டில்
திரு மோடி பேசியது (காண்க: தி இந்து/ 24-01-2018) :

"இந்தியாவில் முன்பிருந்த சிவப்பு நாடா முறை முற்றிலுமாக நீக்கப்பட்டு
முதலீட்டாளர்களுக்கு சிவப்புக்கம்பளம் போட்டு வரவேற்கும் நிலை உருவாகி
யுள்ளது என்று டாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்...."

அந்நிய முதலீட்டாளர்கள் எவ்வித அனுமதிக்காகவும் காத்திருக்கத் தேவை
யில்லை. தனது தலைமையிலான மூன்றரை ஆண்டுக் கால ஆட்சியின்
வர்த்தக, முதலீட்டு ஏற்புடைமை சாதக சூழ்நிலைகளைப் பட்டியலிட்ட மோடி,
ஏறக்குறைய நடைமுறைக்கு ஏற்பில்லாத 1,400 விதிமுறைகள் முற்றிலுமாக
நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்......"

அந்நிய முதலீட்டாளர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது.
சாத்தியமான வகையில் வளர்ச்சிக்கான வழிமுறைகள் இந்தியாவில் வகுக்கப்
பட்டுள்ளன. இந்தியாவில் பல துறைகளில் வெளிநாட்டு முதலீடுகள் 90 சத
வீதம் வரை அனுமதிக்கப்படுகின்றன......"

சர்வதேச அளவில் தீவிரவாதம், புவி வெப்பமடைதல், உள்நாட்டு தொழில்
மற்றும் வர்த்தகத்தை பாதுகாக்க அந்தந்த நாடுகள் மேற்கொள்ளும் பாதுகாப்பு
வாத கொள்கைகள் மிகுந்த அச்சுறுத்தலாக உருவாகி வருகின்றன என்று
பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்."

பிரதமர் நரேந்திர மோடியின் இந்த பேச்சின் கடைசியில் அவர் சொல்லிய ஒரு
கருத்தாம்சம், அதாவது, "உள்நாட்டு தொழில் மற்றும் வர்த்தகத்தை பாதுகாக்க
அந்தந்த நாடுகள் மேற்கொள்ளும் பாதுகாப்புவாத (Protectionism) கொள்
கைகள் மிகுந்த அச்சுறுத்தலாக உருவாகி வருகின்றன" என்பது குறித்து நாம்
எச்சரிக்கையாக இருக்கவேண்டும்! அவரது அக்கறை உலகமயமாக்கலைப்
பற்றியதாக இருக்கிறதே தவிர நாட்டுமக்களைப்பற்றியதாக இருக்கவில்லை!

மக்களாகிய நாம் 99% என்பதை நாம் மறந்துவிடவேண்டாம்! வெறும்1% பணக்
காரர்களுடைய பணபலம், மற்றும், செல்வாக்கின் முன் 99% மக்களின் சக்தியும்,
உழைப்பும் கௌரவமும் கைகட்டி நிற்கின்றன!

உண்மையில், அரசு, அரசாங்கம் யாருக்காக, யாருடைய நலன்களைப் பாது
காப்பதற்காக இருக்கிறது? என்கிற கேள்வி இன்னும் பதில் கண்டடையப்படாத
தால் மீண்டும் மீண்டும் மேற்புறத்திற்கு எழுந்து வருகிறது! உண்மையில்
அரசுக்கு மக்கள் தேவைப்படுகிறார்களா? எனும் கேள்வியும் முக்கியமானதே!
உண்மையில் பார்த்தால் (அரசுக்கு மக்கள்) தேவையில்லை தான்!  ஆனால்,
வேறு பல காரணங்களுக்காக அரசுக்கு மக்கள் தேவைப்படவே செய்கிறார்கள்!

அதாவது, அரசு, அரசாங்கம் என்பதன் பின்புலத்தில் உள்ள தனிநபர்கள், குழுக்
கள், மேட்டுக்குடிகள், ஆதிக்க சக்திகள், செல்வந்தர்கள், பெருமுதலாளிகள் . . .
ஆகியோரது சொந்த நலன்களைக் காப்பதற்கு, ஒரு நிலையான இராணுவமும்,
அவர்களுடைய அனைத்துத் தேவைகளுக்கும் உரிய பொருட்களை உற்பத்தி
செய்துதருவதற்குரிய பலவகைப்பட்ட தொழிலாளர்களும், வினைஞர்களும்,
கலைஞர்களும், நிபுணர்களும், விஞ்ஞானிகளும், தொழில்நுட்ப வல்லுநர்களும்,
உணவுப்பொருட்களை விளைவித்துத் தரும் விவசாயிகளும், பணிவிடை
செய்வதற்கான வேலையாட்களும் தேவைப்படுகின்றனர்!

இவர்களின், அதாவது, இந்த ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களின்
பார்வையில், "மக்கள்" என்போர் கூலிக்காரர்கள், வேலைக்காரர்கள், காவல்
காரர்கள், உழைப்பாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், பணிவிடை செய்
பவர்கள், அவ்வளவு தான்!

இந்த 1% பணக்காரர்கள் 99% மக்களின் நலன்களுக்கு எதிராகச்செயல்படுகிறார்
கள் என்பதை எப்போது 99% உணரப்போகிறது? இவ்வளவிற்கும், அவர்கள்
சப்தமின்றி, போரின்றி, ஆரவாரமின்றி, அமைதியாக தங்களுடைய கயமைத்
தனம், பேராசை, சுயநலம், நரித்தந்திரம், பொய், ஏமாற்று, ஆகியவற்றைக்
கொண்டு 99% மக்களை ஏய்த்து மேய்த்து வருகின்றனர்!

இந்நிலை, இந்தியாவில் மட்டுமல்ல, உலகநாடுகள் அனைத்திலும் முறையே,
1 % பணக்காரர்கள் தான்  உலக மக்களின் உழைப்பினால் உருவாக்கப்பட்ட
பொருள் வளங்களையும், அனைவருக்கும் சொந்தமான சொத்துக்களையும்,
செல்வங்களையும், நயவஞ்சகமாகக் கொள்ளையடித்து வைத்துக்கொண்டு
பொருளாதாரத்தின் உச்சியில் இருந்துகொண்டிருக்கிறார்கள்! இந்த 1% பணக்
காரர்களை மானிட குலத்தைப் பீடித்துள்ள உள்ளிருந்தே அழிக்கும் புற்றுநோய்
என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது?

குறிப்பு : இக்கட்டுரையானது பெரிதும் ஆக்ஸ்ஃபாம் நிறுவனத்தின் புள்ளி
விபரங்களையும் செய்தித்தாட்களில் வெளியான செய்திகளையும் தரவுகளாகக் கொண்டு எழுதப்பட்டதாகும்.

மா.கணேசன் / 10-01-2018
----------------------------------------------------------------------------

Monday, 15 January 2018

அநீதித்துறையில் அமளி!




    "தலைமை நீதிபதி மற்ற நீதிபதிகளை விட உயர்ந்தவர் அல்ல!"
          -- நான்கு மூத்த நீதிபதிகள்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பேட்டி எத்தகையது?
'உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை; நிர்வாகம் சரியாக நடைபெற
வில்லை' என 4 மூத்த நீதிபதிகள் கூட்டாக பேட்டியளித்திருப்பதும், தலைமை
நீதிபதிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பதும்..

1. நீதித்துறையின் உள்விவகாரமா?
2. கவனிக்கத்தக்க பிரச்சினையா?
3. தேசிய மாண்புக்கு பின்னடைவா?
4 .ஜனநாயக அக்கறையா?
5. அதிகாரப் போட்டியா?

நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் 4 மூத்த நீதிபதிகள்; அரசு தமது அதிகாரத்தை
மிகத் தவறாக பயன்படுத்துவது குறித்தும், அதற்கு நீதித்துறைத் தலைமை
அரசுக்குத் துணை போவது குறித்தும் கண்டித்து; பத்திரிக்கை நிருபர்களை
அழைத்து கூட்டாக பேட்டியளித்தது உலக வரலாற்றில் இதுவே முதல்முறை
எனவும், இது ஒரு உலக அதிசயம் எனவும் பரவலாகப் பேசப்படுகிறது!

ஒரு வகையில், இவ்வாறு பகிரங்கமாக பத்திரிக்கையாளர்களுக்குப் பேட்டி
அளித்தது என்னவோ முதல்முறையாக இருக்கலாம்! ஆனால், இதற்குமுன்
நீதித்துறையில் எவ்வொரு குழப்பமும், குளறுபடியும், பிரச்சினையும், பூசலும்
இருந்ததில்லை என்று அர்த்தமாகாது!

இவ்வாறு பகிரங்கப்படுத்தப்பட்டதன் விளைவாக மக்கள் நீதித்துறையின் மீது
நம்பிக்கை இழந்துவிடுவார்கள் என்று சொல்லி நீலிக்கண்ணீர் வடிப்பது அபத்
தத்தின் உச்சம் ஆகும்! ஏனெனில், மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல;
மக்கள் பொதுவாக சட்டத்தையும், அரசையும், அரசியல் அமைப்பையும் மதிப்
பவர்களே! அதேநேரத்தில், தாங்கள் சுரண்டப்படுகிறோம், ஏமாற்றப்படுகிறோம்,
வஞ்சிக்கப்படுகிறோம் என்பதை அவர்கள் அறியாதவர்கள் அல்ல! கப்பலைச்
செலுத்துபவர்கள் ஒழுங்காக நம்மைக்கொண்டு கரை சேர்ப்பார்கள் என்று
மக்கள் இந்த ஜனநாயகத்தை நம்புகிறார்கள்!

ஆம், உண்மையான ஜனநாயகம் எதை, யாரைக் குறிக்கிறது என்பவற்றையும்,
அதில் தங்களுக்குள்ள உண்மையான அதிகாரத்தையும், மக்கள் அனைவரும்
தெளிவாக உணரும்வரை மக்கள் ஏமாற்றப்படுவது தொடரும்!

'உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை; நிர்வாகம் சரியாக நடைபெற
வில்லை' என 4 மூத்த நீதிபதிகள் பகிரங்கமாக பத்திரிக்கையாளர்களுக்குப்
பேட்டி அளித்ததில் தவறு இல்லை! ஆனால், பலர், ஓய்வுபெற்ற நீதிபதிகள்
உள்பட, இப்பிரச்சினையை "நீதித்துறையின் உள்விவகாரம்" என்று குறிப்பிடு
வதுதான் பொருத்தமற்றது! ஏனெனில், நீதித்துறை என்பது எவருடைய சொந்த
விவகாரத்தையும் பற்றியது அல்ல; மாறாக, அது பொதுமக்களின் விவகாரங்
களுக்கான ஒரு அமைப்பு ஆகும்! அதில் வெளிப்படைத்தன்மை இதுகாறும்
இல்லை என்பதால் தொடர்ந்து இருட்டிலேயேதான் பராமரிக்கப்பட வேண்டும்
என்பது சரியல்ல! நீதி தவறும் நீதியரசர் மீதான புகார் நீதித்துறையின் உள்
விவகாரம் அல்ல; நாட்டு மக்களை அநீதியிலிருந்து காத்திடுவதற்கான
அபாயச் சங்கொலியாகும்! இந்த எச்சரிக்கை ஒலி உள் நோக்கத்துடன் எழுப்பப்
பட்டிருந்தாலும்கூட அது குறித்தும் நாம் சீரிய கவனம் கொள்வது அவசியம்!

அப்படியெனில், இது "கவனிக்கத்தக்க பிரச்சினையா" என்றால், ஆம், சந்தேகம்
இன்றி நிச்சயம் கவனிக்கத்தக்க பிரச்சினை தான் இது!

அடுத்தது, இத்தகைய பகிரங்கப் பேட்டி, "தேசிய மாண்புக்கு பின்னடைவு" என்
றாகுமா? என்றால், இல்லாதவொன்று பின்னடைவு காண்பதற்குச் சிறிதும்
வாய்ப்பில்லை என்றுதான் சொல்லவேண்டும்! மாண்பு என்பது, பெருமை,
சிறப்பு, மேன்மை என்பவற்றைக் குறிக்கும் ஒரு சொல் ஆகும்! ஆக, "தேசிய
மாண்பு' பற்றிப் பேசுவதற்கு முன்பு 'தேசியம்', 'தேசம்' என்பவை எதைக்குறிக்
கிறது என்பதைப் பார்ப்பது அவசியம்!

'தேசியம்' என்பது, ஒட்டு மொத்த நாட்டின் நலன் மற்றும் ஒற்றுமை சார்ந்த
எண்ணமும், செயலும் என்பதைக்குறிக்கிறது! ஆனால், ஒட்டுமொத்த நாட்டின்
நலன் மற்றும் ஒற்றுமையை நம்தேசம் சாதித்துள்ளதா? அல்லது, இனியாவது
சாதிக்குமா? இந்த தேசத்தில் இரவு பட்டினியுடன் நடை பாதைகளில் படுத்து
உறங்குபவர்கள் எத்தனை லட்சம்? பொருளாதார ஏற்றத்தாழ்வு நிலையில்
தாழ்வுக்கும் தாழ்வாக வாடும் 10% மக்களுக்கு (ஒட்டுமொத்த மக்கள் தொகை
யில்) எப்போது நீதி கிடைக்கும்? தொடரும் தீண்டாமைக் கொடுமையை ஜன
நாயகத்தின் மூன்று பெரும் தூண்களான சட்டத்துறை, நீதித்துறை, நிர்வாகத்
துறை களைந்தனவா? சமூக நீதியில் அக்கறையில்லாத ஒரு நீதித்துறையின்
குளறுபடிகள் பகிரங்கப்படுத்தப்பட்டதால் இல்லாத தேசிய மாண்புக்கு பின்ன
டைவு ஏற்பட்டுவிடுமா?

'உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை; நிர்வாகம் சரியாக நடைபெற
வில்லை' என 4 மூத்த நீதிபதிகள் கூட்டாக பத்திரிக்கையாளர்களுக்குப் பேட்டி
யளித்திருப்பது அவர்களது ஜனநாயக அக்கறையைக் காட்டுகிறதா? அல்லது,
"தலைமை நீதிபதி மற்ற நீதிபதிகளை விட உயர்ந்தவர் அல்ல!" எனும் அவர்
களுடைய கூற்றுக்கு அதிகாரப்போட்டி தான் உள்ளமைந்த காரணமா? இருக்
கலாம்! ஆம், அதிகாரம், எத்துறையாயினும் ஓரிடத்தில், அல்லது ஒருவரிடத்
தில் மையப்படுத்தப்படுமெனில் இவ்வாறுதான் நிகழும்! இச்செய்தி இன்னும்
ஓரிரு நாட்களுக்குப் பேசப்பட்டு, விவாதிக்கப்பட்டு, பிறகு மறக்கப்பட்டுவிடும்!
அதற்குள் எவ்வாறோ, இப்பிரச்சினை பூசிமெழுகப்பட்டு தீர்க்கப்பட்டுவிட்ட
தாகச் சொல்லப்படும்! ஏனெனில், எவ்வாறேனும் தேசியமாண்பு காப்பாற்றப்பட வேண்டுமல்லவா! 'உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை; நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை' என புகார் கூறும் மூத்த நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்துக்கு வெளியே ஜனநாயகம் நிலவுகிறதா என்பதை உணர்ந்துள்ளனரா என்பது கேள்விக்குறியே!

ஆக, காரணம் எதுவாயினும், ஜனநாயக அமைப்பில் எல்லாத் துறைகளிலும்,
எல்லாவிஷயங்களிலும் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதை வெடித்து
வெளியே வந்திடும் இத்தகைய விவகாரங்கள் உணர்த்துகின்றன எனலாம்!
ஆக, மக்களாகிய நாம் இனியாவது விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்!
ஜனநாயகத்தில் எந்தத்துறையும் மூடிய அறையாக இருப்பதாகாது; எல்லாவற்
றிலும் வெளிப்படைத்தன்மை வேண்டும்! ரகசியம் ஆபத்தானது!


மா.கணேசன் / 14-01-2018
----------------------------------------------------------------------------

வழக்கத்திற்கு மாறான கேள்விகளும் அசாதாரணமான பதில்களும் - 1

              கேள்வி - 1 நீங்கள் இறந்தபிறகு, அந்த, வாழ்க்கைக்குப் பிறகான வாழ்க்கையில் (In the After Life) உங்களுக்கு மிகவும் பிடித்த, தாய், ...