
முக நூல் (Facebook)மற்றும் பிற சமுக வலைத்தலங்களும் ஒருவித
கலாச்சாரமாக கண்ணா பிண்ணா வென்று வளர்ந்து உலகம் முழுவதும்
பரவியுள்ளது ! தற்போது மேற்குலகில் ,சமுக வலைத்தளங்களின், குறிப்பாக
முக நூலின் தாக்கத்திலிருந்து எவ்வாறு விடுபடுவது என்பது குறித்த
சிந்தனைகளும், ஆய்வுகளும் விரிவாக நடந்து கொண்டுள்ளன.
முக நூலின் பிடியிலிருந்து எவ்வளவு விரைவாக வெளியேற முடியுமோ
அவ்வளவுக்கு நல்லது என வலியுறுத்தப்படுகிறது!
முக நூல், முதன் முதலாக பிப்ரவரி 2004 ல்,மார்க் ஸுக்கர்பர்க் (Mark
zuckerberg) அவர்களால் அமெரிக்காவில் சிறிய அளவில் தொடங்கப்
பட்டது. இன்று அதன் உறுப்பினர்கள் 1000 கோடி பேர்களுக்கும் மேலாக
அதிகரித்துள்ளனர்.
இன்னும் என்னைப்போன்றவர்கள் புதிது புதிதாக முக நூலில் இணைந்த
வண்ணம் உள்ளனர். நான் முதலில் ஆகஸ்ட் 2013 ல் முக நூலைத் தொடங்கி
அப்படியே மூடி வைத்து விட்டு பிறகு தற்போது மீண்டும் ஜனவரி 2016 ல்
திறந்துள்ளேன்.
இப்போது நான் அலச வந்தது, "பிரச்சினை முக நூலில் உள்ளதா அல்லது
நம்மிடம் உள்ளதா? " என்பதைப்பற்றித்தான். முக நூல் என்பது ஒரு கருவி
போன்றதே. அதை நாம் எவ்வாறு ,எந்தெந்த நோக்கத்திற்காக,எப்படியெல்லாம்
பயன் படுத்துகிறோம்; அவ்வழிமுறைகளின் ஊடே நாம் என்னவாக ஆகிறோம்
என்பதில் தான் சிக்கல் எழுவதாகத்தெரிகிறது.
முக நூல் ஈடுபாடு என்பது ஒரு வகை போதைப்பழக்கம் (addiction)
போல மாறிவிடுவதாகக் கூறப்படுகிறது. அதில் உண்மை இல்லாமலும் இல்லை!
எந்த ஒரு கருவி அல்லது பொருள், அல்லது விஷயத்திலும் நேர்மறையானதும்,
எதிர்மறையானதுமான விஷயங்கள், விளைவுகள் நிச்சயம் இருக்கும்.எப்பொழுது
பிரச்சனை என்றால் , எதிர் மறை விஷயங்கள் நேர்மறை விஷயங்களை
விழுங்கிவிடும் போதுதான் !
முதலில்,நாம் நேர்மறையான அம்சங்களைப் பார்ப்போம் :
சமுக வலைத்தளம் என்கிற பெயருக்கு ஏற்றால் போல முக நூலானது சமுக
உறவாடலுக்கு பெரிதும் உதவுகிறது. அது முதலில் குடும்பத்திலிருந்து
தொடங்குகிறது. முக நூலின் வழியாக வெகு சுலபமாக நாம் நம் குடும்பத்தினருடன்
(அவர்கள் உலகின் எந்த கோடியில் இருந்தாலும் சரி)பரஸ்பரம் உடனடியாக தொடர்பு
கொள்ளவும்,பேசவும், குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ளவும் முடியும்.சமுக
உறவுகளின் விஷயத்திலும் அப்படியே. நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள்,உடன்
பணியாற்றுபவர்கள், இன்னும் தொடர்பு-பட்டியல் வழியே நண்பர்களாக சேர்ந்து
கொள்பவர்கள் என முக நூலின் வழியே எளிதாக எல்லோருடனும் தொடர்புகொள்ள
முடியும்.
ஆம், முக நூல்-கணக்கை தொடங்கிவிட்டால் போதும், வீட்டில் உட்கார்ந்திருக்கும்
இடத்திலிருந்தபடியே உலகத்துடன் உடனடியாக தொடர்பு கொள்ளமுடியும்.
இவ்விஷயத்தில் முக நூலைவிட வேறுசிறந்த ஊடகம் எதுவுமில்லை எனலாம். தொலைபேசி
மூலம் பேச வேண்டி எடுக்கும் பெரிய முயற்சி எதுவும் தேவையில்லை ! ஒரே ஒரு
வாக்கியம் அல்லது ஒரே ஒரு வார்த்தை-- எழுத்துக்களைத்தட்டிச் சேர்த்துவிட்டால்
போதும். அடுத்து, அதை அனுப்புவதற்கான ஒரு பொத்தானை அழுத்தினால் போதும்,
உடனுக்குடன் முக நூலில் நம்முடன் இனைந்திருக்குமத்தனை நபர்களுக்கும் நம்
செய்தி சென்று சேர்ந்துவிடும்.
முக நூல் தொடங்கப்பட்ட போது , அது பல்கலைக்கழகங்களின் வளாகங்களுக்குள்
தான் பகிர்ந்து கொள்ளப்பட்டது. பிறகு அது கல்வி,வியாபாரம்,சமுகம் . . .என பல
தளங்களுக்கும் விரிவடைந்தது. . . . .
சமுக வலைத்தளம் என்கிற பெயரில் முக நூல் தற்போது நம் வாழ்வின் பெரும்
பகுதியை ஆக்கிரமித்துள்ளது. சமுகத்தொடர்பு, சமுக உறவுகள்,செய்திப் பரிமாற்றம்,
தகவல் மற்றும் அறிவுப் பகிர்தல், . . . ஆகிய களங்களில் முக நூலின் சேவை மகத்தானது
என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், நாம் , முக நூலை என்னென்ன நோக்கங்களுக்காக
பயன் படுத்துகிறோம் என்பதில் தான் பிரச்சினை எழுகிறது. அது பற்றி இரண்டாம்
பகுதியில் பார்ப்போம்.
No comments:
Post a Comment