அறையப்படுவது குறித்து கலக்கமடைய மாட்டீர் என்றால்,தொடர்ந்து வாசியுங்கள் !
தன்னை உயர்ந்தவன்,உயர் சாதி என்றும்,பிறனை தாழ்ந்தவன்,தாழ்ந்த சாதி என்றும்
சொல்பவன் மன நலம் இழந்த சாதியாவான்.
வரலாற்று உண்மைகள் என்பவை விபத்து போன்றவை~அவை இறுதியானவை அல்ல.
ஆகவே,அவை உண்மையானவையல்ல.
`உயர்வு-மனப்பான்மை`,`தாழ்வு-மனப்பான்மை` இரண்டுமே தவறான மனப்பான்மைகளே.
ஏனெனில்,`சரியான-மனப்பான்மை` உடையவன் எவரையும் `உயர்வு`, `தாழ்வு` என்கிற
சொற்களில் காண்பதில்லை. உலகம் பல துண்டுகளாகப் பிளவுபட்டிருப்பதற்கும் பரஸ்பரம்
முரண்பட்டு தாக்கி அழித்துக்கொள்வதற்கும், ஒன்று மற்றொன்றை அடக்கியொடுக்குவதற்கும்
தவறான-மனப்பான்மைகளே காரணம்.
மனிதர்களில் உயர்ந்த சாதியும் இல்லை, தாழ்ந்த சாதியும் இல்லை.` இந்த இரண்டில் நீங்கள்
எந்த சாதி?` என்று ஒருவரைப்பார்த்துக் கேட்பது அர்த்தமற்றது. ஏனெனில், மனிதன் என்பவன்
தனது மன-நலத்தை இழக்காத நிலையில் அவன் நிச்சயம் மனித சாதியைச் சேர்ந்தவனாகத்தான்
இருக்க முடியும். தனது` சித்த-சுவாதீனத்தை` இழந்து விட்ட ஒருவன் தன்னை உயர்ந்தவனாகவோ,
உலகைக் காக்க வந்த இரட்சகனாகவோ,கடவுளாகவோ, அல்லது, பூதமாகவோ பாவித்துக்கொள்ள
முடியும் !
ஆனால்,அர்த்தமுள்ள மனித வாழ்க்கையில் எது முக்கியமெனில் ஒவ்வொருவரும் `தான்` எத்தகைய
மெய்ம்மை அல்லது நிஜம் என்பதை நேரடியாக உணர்வார்ந்த முறையில் கண்டுபிடிப்பது ஒன்றே.
இதை விடுத்து , ஒருவர் தன்னை ஒரு பொறியாளர்,மருத்துவர்,அல்லது குழாய்-பொருத்துவர்,தச்சர் ...
என்பதாக அடையாளப்படுத்திக் கொள்வது ஒருவரது சாரமான மனிதத்தை தொடுவதில்லை,
வெளிப்படுத்துவதுமில்லை -அவை ஒருவரது பணி அல்லது தொழிலைக் குறிப்பது மட்டுமே !
ஒருவர் தன்னை லட்சாதிபதி,கோடீஸ்வரர்,அல்லது பிச்சைக்காரர் என்பதாக இனம் காண்பதும்
அர்த்தமற்றது-அவை அவரது உடமைகளை,வங்கிக் கணக்கை மட்டுமே குறிப்பன !
ஒவ்வொரு மனிதனும் தன்னையறியும்,தன்னில் தான் உண்மையில் எத்தகைய நிஜம் என்பதை
நேரடியாக கண்டறியும் உன்னதத்திற்கு மாற்றாக,பதிலாக வேறெதுவும் இவ்வுலகிலும் வேறெவ்வுலகிலும்
கிடையாது ! {மீண்டும் தொடர்வோம்}
தன்னை உயர்ந்தவன்,உயர் சாதி என்றும்,பிறனை தாழ்ந்தவன்,தாழ்ந்த சாதி என்றும்
சொல்பவன் மன நலம் இழந்த சாதியாவான்.
வரலாற்று உண்மைகள் என்பவை விபத்து போன்றவை~அவை இறுதியானவை அல்ல.
ஆகவே,அவை உண்மையானவையல்ல.
`உயர்வு-மனப்பான்மை`,`தாழ்வு-மனப்பான்மை` இரண்டுமே தவறான மனப்பான்மைகளே.
ஏனெனில்,`சரியான-மனப்பான்மை` உடையவன் எவரையும் `உயர்வு`, `தாழ்வு` என்கிற
சொற்களில் காண்பதில்லை. உலகம் பல துண்டுகளாகப் பிளவுபட்டிருப்பதற்கும் பரஸ்பரம்
முரண்பட்டு தாக்கி அழித்துக்கொள்வதற்கும், ஒன்று மற்றொன்றை அடக்கியொடுக்குவதற்கும்
தவறான-மனப்பான்மைகளே காரணம்.
மனிதர்களில் உயர்ந்த சாதியும் இல்லை, தாழ்ந்த சாதியும் இல்லை.` இந்த இரண்டில் நீங்கள்
எந்த சாதி?` என்று ஒருவரைப்பார்த்துக் கேட்பது அர்த்தமற்றது. ஏனெனில், மனிதன் என்பவன்
தனது மன-நலத்தை இழக்காத நிலையில் அவன் நிச்சயம் மனித சாதியைச் சேர்ந்தவனாகத்தான்
இருக்க முடியும். தனது` சித்த-சுவாதீனத்தை` இழந்து விட்ட ஒருவன் தன்னை உயர்ந்தவனாகவோ,
உலகைக் காக்க வந்த இரட்சகனாகவோ,கடவுளாகவோ, அல்லது, பூதமாகவோ பாவித்துக்கொள்ள
முடியும் !
ஆனால்,அர்த்தமுள்ள மனித வாழ்க்கையில் எது முக்கியமெனில் ஒவ்வொருவரும் `தான்` எத்தகைய
மெய்ம்மை அல்லது நிஜம் என்பதை நேரடியாக உணர்வார்ந்த முறையில் கண்டுபிடிப்பது ஒன்றே.
இதை விடுத்து , ஒருவர் தன்னை ஒரு பொறியாளர்,மருத்துவர்,அல்லது குழாய்-பொருத்துவர்,தச்சர் ...
என்பதாக அடையாளப்படுத்திக் கொள்வது ஒருவரது சாரமான மனிதத்தை தொடுவதில்லை,
வெளிப்படுத்துவதுமில்லை -அவை ஒருவரது பணி அல்லது தொழிலைக் குறிப்பது மட்டுமே !
ஒருவர் தன்னை லட்சாதிபதி,கோடீஸ்வரர்,அல்லது பிச்சைக்காரர் என்பதாக இனம் காண்பதும்
அர்த்தமற்றது-அவை அவரது உடமைகளை,வங்கிக் கணக்கை மட்டுமே குறிப்பன !
ஒவ்வொரு மனிதனும் தன்னையறியும்,தன்னில் தான் உண்மையில் எத்தகைய நிஜம் என்பதை
நேரடியாக கண்டறியும் உன்னதத்திற்கு மாற்றாக,பதிலாக வேறெதுவும் இவ்வுலகிலும் வேறெவ்வுலகிலும்
கிடையாது ! {மீண்டும் தொடர்வோம்}
No comments:
Post a Comment