Wednesday, 29 November 2017

அரசியல்கட்சிகள் எனும் வியாபார நிறுவனங்கள்!



   நாம் ஒருவருக்கொருவரும், நம்முடைய குழந்தைகளின் குழந்தைகளுக்கும்
   தான் விசுவாசம் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம், கட்சி அரசியலுக்கு
   அல்ல!
              - டாச்ஷேன் ஸ்டோக்ஸ்

அரசியல் கட்சிகள் என்பவை உண்மையில் மக்களின் நலன்களைப் பிரதிநிதித்
துவம் செய்வதற்கான அமைப்புகள் அல்ல! மக்களின் நலன்களைப் பிரதிநிதித்
துவம் செய்வதற்கான அமைப்புகளே என்றால், நாட்டில் ஏன் ஒம்பத்தெட்டுக்
கட்சிகள் உள்ளன; இன்னும் புதிது புதிதாக கட்சிகள் முளைத்த வண்ணம்
உள்ளன? ஒரு கட்சியைவிட இன்னொரு கட்சி மக்கள் நலன்களைச் சிறப்பாக
பிரதிநிதித்துவம் செய்து, பிரமாதமாக நிறைவேற்றப்போகின்றதா?

இல்லை, இல்லை, இல்லவே இல்லை! அரசியல் கட்சிகள்  உண்மையில்
மக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்வதற்கான அமைப்புகள் அல்ல!
அவை 'சோப்பு' தயாரிக்கும் போட்டி நிறுவனங்களைப்போல, "தங்களுடைய
நிறுவனம் தயாரிக்கும் சோப்புகள் தான் தரமானவை!" என்று போட்டிபோட்டுக்
கொண்டு விளம்பரம் செய்யும் வியாபார நிறுவனங்களைப் போன்றவையே!

ஆம், மக்கள் தங்களது விருப்பத்தேர்வின்படி எந்தக்கட்சியிலும் (வியாபார
நிறுவனத்திலும்) உறுப்பினராகச் சேர்ந்துகொள்ளலாம்! பிறகு அந்தக்குறிப்பிட்ட
கட்சியின் வாடிக்கையாளர் சேவை திருப்தியாக இல்லையென்றால், மக்கள்
வேறு கட்சியில் (வியாபார நிறுவனத்தில்) சேர்ந்துகொள்ளலாம்! ஏன் ஒரு
கட்சியின், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை உறுப்பினர்கள் கூட
வேறொரு கட்சிக்குத் தாவிக்கொள்ளலாம்! இத்தகைய நடப்புக்கள் ஜனநாயகத்
தையே கேலிக்கூத்தாக ஆக்குகின்றன!

ஒவ்வொரு கட்சியும் தங்களது ஆட்சிக்காலத்தில்தான் பாலங்களைக்கட்டி
னோம், சாலைகளை அமைத்தோம்; ஏரிகளைத் தூர் வாரினோம், இன்னும்
அதைச் செய்தோம், இதைச் செய்தோம் என்று பட்டியலிட்டு பெருமை பேசு
கிறது! ஆனால், பாலங்கள், சாலைகள், மின்சார இணைப்புகள், மருத்துவ
மனைகள், பள்ளிக்கூடங்கள் ஆகியவை அன்றாடத் தேவைகளுக்கான அடிப்
படை அம்சங்களா, அல்லது ஆடம்பரத் தேவைகளா? அவற்றைச் சாதனைகள்
என்று விளம்பரப்படுத்துவதன் அர்த்தம் என்ன? இந்த அடிப்படை வசதிகளைப்

பூர்த்திசெய்வதற்காகத்தானே மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்தல்கள்
மூலமாகத் தேர்ந்தெடுக்கிறார்கள்?

எல்லா அரசியல் கட்சிகளும் தங்களுக்குக் 'கொள்கைகள்' இருப்பதாகவும்,
அவை பிற கட்சிகளைவிட சிறப்பானவை என்பதாகவும், தங்களது கட்சி
மட்டுமே மக்களை வாழ வைப்பதற்காகவே தோன்றியிருப்பதாகவும் சொல்லி
மக்களை நம்பவைத்து ஏமாற்றி வருகின்றன! எவ்வொரு வியாபார நிறுவன
மும் தாங்கள் தயாரிக்கும் பொருட்களை விற்று லாபம் சம்பாதிப்பதற்காகத்
தான் இருக்கிறதே தவிர, மக்களுக்குச் சேவை செய்வதற்காக இருப்பதில்லை!
ஆம், வியாபார நிறுவனங்களைப் போலவேதான் அரசியல் கட்சிகளும் செயல்
படுகின்றன! ஆனால், எல்லா அரசியல் தலைவர்களும், தங்களை மக்களுக்குப்
படியளப்பவர்களாகப் பாவித்துக்கொள்ளும் விஷயத்தில் ஒன்றாக இருக்கிறார்
கள்! ஒரு மாநிலத்தின் நன்குவளர்ந்த 'பிரதான', அல்லது, 'பெரிய' கட்சிகள்
எனப்படுபவை பெருநிறுவனங்களைப் போன்றவையாகும்! புதிதாக முளைத்த
கட்சிகள், 'சிறு', அல்லது, 'குறு' நிறுவனங்களைப் போன்றவையாகும்!

அரசியல் கட்சிகள் நம்மை திசை திருப்பிவிடுவதற்காகவே இருக்கின்றன;
அரசின் செயல்பாடுகள் மீதான நமது கவனத்தை மாற்றி கட்சிகளின் மீது
செலுத்தும்படிச் செய்கின்றன - ஏதோ, மக்களாகிய நம்முடைய நலன்கள்,
நல்வாழ்வு யாவும் தேர்தலில் வெற்றிபெறப்போகும் கட்சியை மட்டுமே சார்ந்
திருக்கிறது என்பது போன்ற மாயையைத் தோற்றுவிக்கின்றன!

அரசியல் கட்சிகளிடமுள்ள பிரச்சினை என்னவென்றால், எந்தக்கட்சியிடமும்
மக்களுக்கான உண்மையான "செயல்திட்டம்" எதுவும் இல்லை; ஆட்சியைப்
பிடிப்பது என்ற ஒன்றைத்தவிர! எல்லாக் கட்சிகளும் சுய-ஆதாயத் திட்டத்தில்
ஆழ்ந்திருக்க, மீத அரசியல் செயல்பாடுகள் என்பது, மக்களின் கவனத்தை
அற்ப விஷயங்கள் மீதும், போட்டிக்கட்சிகளுக்கு எதிராகவும் திருப்பிவிடுவதும்;
ஓட்டுப்போடுவது தான் மக்களின் உயர்ந்த ஒரே ஜனநாயகக் கடமையும், ஒரே
அரசியல் செயல்பாடும் என்பதாகச் சிந்திக்கவைக்கும்படியான, வெறும் கவர்ச்
சித்திற அரசியல் சொல்லாடல்களும், வெற்று ஆரவார முழக்கங்களும் மாத்
திரமேயாகும்!

எல்லா மாநிலங்களிலும், நாடுகளிலும் அரசியல்வாதிகள் என்போர் மக்களிட
மிருந்து தனித்த மிக வலிமையான தொரு பிரிவினராக உருவாகிறார்கள்.
அடுத்து, எவ்வொரு மாநிலத்திலும் பிரதானமாக இரு கட்சிகள் உள்ளன;
அவை மாறி மாறி ஆட்சிக்கு வருவதென்பது வழக்கமாயுள்ளது! எல்லா இடங்
களிலும் அரசு எனும் அதிகார அமைப்பு தம்மை, சமூகத்துடனான தொடர்பிலி
ருந்து தனித்துச் சுதந்திரமாக வைத்துக்கொள்கிறது! மேலும், ஊக-வாணிக
அரசியல் சூதாட்ட கும்பல்களான (political speculators)இரு பிரதான
கட்சிகளும் மாறி மாறி ஆட்சியதிகாரத்தைப் பிடித்து அவ்வதிகாரத்தை மிகப்
பிறழ்ச்சியான இலக்குகளை அடைய ஊழல்மிகு வழிகளில் ஏய்த்துக்கொள்
கின்றன! இவ்விரு கும்பல்களுக்கு எதிராக தேசமும், மக்களும் வலிமையற்ற
வையாக நிர்க்கதியாக நிற்கின்றன! முறையாக மக்களின் சேவகர்களாக
இருக்கவேண்டிய அக்கும்பல்கள், நடைமுறையில் மேலாதிக்கம் புரிபவையாக
வும், பகல்-கொள்ளையடிப்பவையாகவும் திகழ்கின்றன!

எல்லோரும் - மெத்தப்படித்தவர்களும், படிக்காதவர்களும் சொல்கிறார்கள்,
ஓட்டுப்போடுவது என்பது தவிர்க்கக்கூடாத உன்னத ஜனநாயகக் கடமை என்
கிறார்கள்!  ஒவ்வொரு தேர்தலின் போதும் மக்கள் தமது கடமையை நிறை
வேற்றத் தவறுவதில்லை! ஆனால், ஒவ்வொருமுறையும் மக்களால் தேர்ந்
தெடுக்கப்படும் எந்த அரசியல்கட்சியும் தமது உன்னத ஜனநாயகக் கடமையை
ஒரு போதும் முறையாக நிறைவேற்றியதில்லை!

உண்மையில், அரசியல்வாதிகள் ஏன், எதற்காக, யாருக்காக இருக்கின்றனர்
என்று மக்கள் எவருக்கும் தெரியாது! அரசாங்கம் என்பது மக்களுக்காக இருக்
கிறது எனவும், அரசியல்வாதிகள் நம்முடைய பிரதிநிதிகளாகச் செயல்படு
வதற்காக இருக்கிறார்கள் எனவும், மக்கள் நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம்!
ஆனால், அரசியல்வாதிகளுக்கு மட்டுமே தெரியும், அரசாங்கம் என்பது அவர்
களுக்காகவே இருக்கிறது; அவர்கள் தங்களுக்காகவே இருக்கிறார்கள் என்கிற
உண்மை!

ஜனநாயக ஆட்சிமுறையில், நேராட்சி முறை எனவும், பிரதிநிதித்துவ முறை
எனவும் இரண்டு வகைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது! நேராட்சி முறை
என்பது மிகவும் குறைவான மக்கள்தொகையைக் கொண்ட நாட்டில், அல்லது
மாநிலத்தில் மட்டுமே செயல்படுத்த முடியும் எனவும், அதிக மக்கள்தொகை
யைக்கொண்ட நாடுகளில், மாநிலங்களில் செயல்படுத்த முடியாது எனவும்
அரசியல் ஆய்வறிஞர்கள் கூறுகின்றனர்! அதிக மக்கள்தொகையைக் கொண்ட
நாடுகளில், மாநிலங்களில் பிரதிநிதித்துவ ஜனநாயக ஆட்சிமுறை மட்டுமே
சாத்தியப்படும் என்கிறார்கள்! ஆனால், பிரதிநிதித்துவ ஆட்சிமுறை என்றாலே
அங்கு அரசியல்கட்சிகள் தவிர்க்கவியலாதவையாகிவிடும்!  அடுத்து மக்கள்
தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பது எவ்வாறு எனும்போது, தேர்தல்
எனும் சடங்கு உள்ளே நுழைவது தவிர்க்க வியலாது! அதாவது, மக்களுடைய
நலன்களையும், அடிப்படைத்தேவைகளையும் பிரதிபலிக்கும் பிரதிநிதிகள்தான்
அரசியல்வாதிகள் எனும் வில்லங்கமான, விபரீதமான வகையினர்!

ஆனால், நம்மால் தேர்ந்தெடுக்கப்படும் நம்முடைய பிரதிநிதிகளான அரசியல்
வாதிகள்  நம்மைப்போன்று, பொதுவான சமூகத்தின் அங்கத்தினர்களோ, தனி
நபர்களோ அல்ல! அவர்கள் அரசியல் கட்சி எனும் தனி-வகைச் சமூகத்தின்
உறுப்பினர்கள் ஆவர்! அதாவது, ஒரு அரசியல் கட்சி என்பது வெறுமனே ஒரு
தனி-வகைச் சமூகம் மட்டுமல்ல! அது ஒரு அதிகாரப் படிமுறை அமைப்பு
ஆகும்; அந்த அமைப்பின்  உயர்-படிகளுக்கு அல்லது உயர்-பதவிகளுக்கு
உரியவர்களாக, தொடர்ந்து தங்களது சொந்த முயற்சி, மற்றும், செல்வாக்கு
மூலம் தங்களை உருவாக்கிக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தங்களை
உள்ளாக்கிக் கொண்டவர்களாவர்! அரசியல் கட்சி எனும் அதிகார படிமுறை
அமைப்பின் உச்சிப் படியை எட்டிய ஒருவர்தான் கட்சியின் 'தலைவர்' ஆவார்;
அவரே கட்சிக்குள் ( ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு கட்சிக்கு வெளியேயும்)
அனைத்து அதிகாரங்களையும் கொண்டவர்! அரசியல்வாதிகள் என்போர் வித்தி
யாசமான சூழலில்,(அதிகாரப்போட்டிச் சூழலில்), தனிவகை வளர்ப்பு-முறையில்
உருவாகிறவர்களாவர்! அதாவது, 'அதிகாரம்' என்பது மட்டுமே அவர்களுடைய
ஒரே நோக்கம், குறிக்கோள், இலக்கு யாவுமாகும்!

ஆனால், மக்களாகிய நாம் இத்தகைய அரசியல்வாதிகளின் குட்டையிலிருந்து
தான் தங்களுக்கான அரசியல் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும்!
பெயரளவிற்கு மட்டுமே அவரகள் நம்முடைய பிரதிநிதிகளாவர்; மற்றபடி
அவர்களுக்கு வேறுவகை 'செயல் திட்டம்' உள்ளது; அதன்படியே அவர்கள்
செயல்படுவர்! தேர்தலின்போது தமக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதுடன்
மக்களின் ஜனநாயகக் கடமையும், உரிமையும், தேர்வுச் சுதந்திரமும் முடிந்து
போகிறது! தேர்தலின்போது, ஓட்டுக்கேட்க வரும்போது, தாங்களே மக்களின்
உண்மையான உத்தமமான பிரதிநிதிகள், மக்களின் சேவகர்கள், மக்களின்
பாதுகாவலர்கள், . . .என்றெல்லாம் பசப்பு மொழிகளைப்பேசி, மக்களைத் தேடி
வந்து கெஞ்சிக்கூத்தாடும் அரசியல்வாதிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு,
மக்களின் எஜமானர்களாக, மக்களை ஆள்பவர்களாக ஆகிவிடுகிறார்கள்!
அதன்பிறகு அவர்கள் மக்களால் அணுகமுடியாத உயரத்திற்குச் சென்றுவிடு
கிறார்கள்!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆட்சியமைத்து ஆட்சிக்கட்டில்
அமர்ந்தபிறகு, மக்கள் தங்கள் பிரச்சினைகளை, குறைகளை, கோரிக்கைகளை
-விண்ணப்பங்கள், மனுக்கள் மூலமும்; சாலைகளில் இறங்கி -உண்ணாவிரதம்,
ஊர்வலம், சாலை மறியல் ஆகிய பல்வேறு போராட்டங்கள், இயக்கங்கள்
மூலமும்  தெரியப்படுத்தவேண்டும்! போராட்டத்தின் போது, கண்ணீர்ப்புகை,
தடியடி, கைது நடவடிக்கை, துப்பாக்கி சூடு ஆகியவைகளையும் மக்கள் சந்தித்
தாகவேண்டும்! இவ்வாறெல்லாம், மக்கள் தங்களது பிரச்சினைகளை, கடைசி
யாக, வேறு வழியில்லாமல், தாங்களே பிரதிநிதித்துவம் செய்துகொள்ள
வேண்டும்! எந்த அரசியல்வாதிகளை மக்கள் தங்களது நலன்களைக் காப்பதற்
கான அரசியல் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்தார்களோ, அவர்களிடமே சென்று
மக்கள் கையேந்தி நிற்கும் அடிமை நிலைக்கும், அவல நிலைக்கும் பெயர்தான்
"பிரதிநித்துவ ஜனநாயக ஆட்சிமுறை!"  இதில், பிரதிநிதித்துவம் இருக்கிறது,
ஆட்சிமுறையும் இருக்கிறது; ஆனால் ஜனநாயகம் மட்டும் இல்லை!

மா.கணேசன்/ நெய்வேலி/ 28-11-2017
----------------------------------------------------------------------------

Monday, 27 November 2017

பிரிவினைகளைக் கடந்த மக்கள் சமூகத்தின் கட்சி!



   
           "வாழ்க்கை" தான் நம் அனைவரின் ஒரே அசலான
                    உண்மையான மதம் ஆகும்!
            உண்மை மட்டுமே ஒரே உண்மையான கடவுள்!

மக்கள் அனைவரும் தங்களிடையே சாதி, மதம், இனம், நிறம், மொழி என
எவ்வொரு அடிப்படையிலும், பிரிவினை பாராட்டாமல் ஒற்றுமையாக ஒரே
கட்சியாக, அதாவது, மக்களாகவே இருப்பார்களேயானால், அரசியல்வாதி
களின் வாக்கு வங்கி அரசியலுக்கும் இடமிருக்காது, மக்களுடைய பிரிவினை
வாதத்தில் குளிர்காயும், பிரித்தாளும் அரசியலும் இருக்காது! ஆனால், மக்கள்
அனைவரும் ஒற்றுமையாக இருக்க முடியாது, இருக்க மாட்டார்கள் என்பது
அடிப்படையற்ற வாதமாகும்! ஏனென்றால், மக்கள் அனைவரும் ஒற்றுமை
கொள்வதற்கு ஒரு அற்புதக் காரணி உள்ளது! அது, அனைத்து மக்களுக்கும்
"பொதுவான அடிப்படை வாழ்க்கைப் பிரச்சினைகள்" தான்! மேலும்,பெரும்பான்
மையினரின் நலன்கள், சிறுபான்மையினரின் நலன்கள், சாதிவாரியான நலன்
கள், இனரீதியான நலன்கள் என தனித்தனி நலன்கள் என்று எதுவும் இல்லை!
ஏனெனில், பசி என்பது பொதுவானது; பசிக்கு எந்த சாதியும் இல்லை, மதமும்
இல்லை! ஆகவே,மக்களின் "பொதுவான அடிப்படை வாழ்க்கைப்பிரச்சினைகள்"
தான் மக்களை ஒருமைப்படுத்தும், ஒற்றுமைப்படுத்தும் அற்புத அம்சம் ஆகும்!

இனம், மதம், சாதி, நிறம், மொழி, கலாச்சாரம் போன்ற அம்சங்களைப் பற்றிக்
கொண்டிருப்பது என்பது மனிதஇனத்தின் முதிர்ச்சியின்மையின் அடையாளங்
கள் ஆகும்! ஏனெனில், இவ்வம்சங்கள் மனிதர்களிடம் "மனிதம்" எனும்
பண்பை வளரவிடாமல் தடுத்து அழித்துவிடுகிற பணியையே செய்கின்றன!
மேலும், மனிதர்களில் குள்ளமானவர்களும், உயரமானவர்களும், நடுத்தர
உயரமானவர்களும் இருக்கிறார்கள்; அவர்களில் குள்ளமாக உள்ளவர்களை
நாம் மனிதர்களே இல்லை என்று சொல்லிவிட முடியுமா? இன்னும், ஒல்லி
யான மனிதர்களும், குண்டான மனிதர்களும் இருக்கிறார்கள்; சிலர் கருப்பாக
வும், சிலர் சிகப்பாகவும், சிலர் மாநிறமாகவும் உள்ளனர்! ஆனால், மனிதர்
களின்தோலின் நிறம், அவர்களுடைய உண்மையான நிறத்தை (மனிதத்தை)
காட்டுவதில்லை!

உண்மையில், முகத்தோற்றத்தில், அளவில், நிறத்தில் ஒரு மனிதனைப்போல
இன்னொரு மனிதன் இல்லை! இவை இயற்கையான வேறுபாடுகள் என்றால்;
இன்னொருபுறம், சமூகத்தில் செயற்கையும், போலியுமாக கற்பிக்கப்பட்ட பல
வேறுபாடுகளும் உள்ளன -- சமூக அந்தஸ்து, உத்தியோகநிலை, கல்வி, பதவி,
பொருளாதார நிலை, அறிவுத்திறன், திறமை, . . . . போன்றவையே அவை!
அதாவது, இவ்வாறான இயற்கையானதும், செயற்கையானதுமான, மேலோட்
டமான வேறுபாடுகளுடன் இனம், மதம், சாதி, நிறம், மொழி, கலாச்சாரம்
போன்ற வேறுபாடுகளையும் சேர்த்துக்கொண்டு எவ்வாறு நாம் ஒரு தேசத்தின்
பிரஜைகளாக, மக்களாக அமைதியாகவும், இணக்கத்தோடும் வாழ இயலும்?

மிகவும் ஆழமான இன அடிப்படையிலான பிளவுகளைக்கொண்ட சமூகங்
களில் ஜனநாயகம் என்பது மிகக் கடினமாகும். . .  இத்தகைய சமூகங்களில்
ஜனநாயகம் முறிந்து போகும் என்கிறார், ஆஸ்திரேலிய அரசியல் விஞ்ஞான
ஆய்வறிஞர் பெஞ்ஜமின் ரெய்லி. ஆகவே, பூசல்களை நிர்வாகம் செய்யும்
முகமாக 'தேர்தல் பொறியியலை' (electoral engineering)பயன்படுத்து
வதற்கான சாத்தியம் பற்றி அவர் ஆராய்ந்தார். தேர்தல் பொறியியல் மூலமாக
மிகவும் பிளவுபட்ட சமூகங்களிலும் கூட  ஜனநாயகத்தை தக்கவைக்க
முடியும் என அவர் சில நாடுகளை உதாரணமாகக் காட்டுகிறார்! ஆனால்,
பெஞ்ஜமின் ரெய்லி போன்ற ஆய்வறிஞர்கள் பிளவுகளின் வேர்களைக் கண்ட
றிந்து அவற்றைக் களையாமல், மேலோட்டமான உத்திகள் மூலமாக பூசல்
களைத் தற்காலிகமாகக் களைவதற்கான வழிகளையே கண்டறிந்து கூறுகின்
றனர்!

பிளவுண்ட சமூகங்களில் ஜனநாயகம் தழைக்க முடியுமா, முடியுமென்றால்,
எவ்வாறு எனும் கேள்வி அரசியல் விஞ்ஞானத்தில் நெடுங்காலமாக சர்ச்சைக்
குரிய விஷயமாக இருந்து வந்துள்ளது. சில பெரும் அரசியல் சிந்தனையாளர்
கள், 'நிலையான ஜனநாயகம் கிட்டத்தட்ட ஒருபடித்தான தன்மையைக்
கொண்ட சமூகங்களில் மட்டுமே சாத்தியம்!' என்பதாக வாதம் செய்தனர்.
"பல்வேறு இனங்களைக்கொண்ட சமூக அமைப்பும், ஜனநாயகமும் சேர்ந்து
செல்லாது!" என ஜான் ஸ்டூவர்ட் மில் அவர்கள் கூறினார்.

இனவாதம் என்பது அடிப்படையிலேயே தவறான அடையாளப்படுத்துதலில்
இருந்து தான் முளைத்தெழுகிறது!  மக்கள், அதாவது சமூகக் குழுக்கள்
தங்களுடைய உள்ளார்ந்த அம்சங்களைக்கொண்டு தங்களைக் காண்கிறது,

அடையாளப்படுத்திக்கொள்கிறது எனும் பட்சத்தில், பெரிதாக பிற குழுக்களி
டையே பிரச்சினைகள் எதுவும் எழ வாய்ப்பில்லை! மாறாக, மேல்பூச்சாக
வரித்துக்கொள்ளும் செயற்கையான கற்பிதமான விஷயங்கள், கொள்கைகள்,
கோட்பாடுகளின் வழியாகத் தங்களைக் காணும்போதும், அவற்றுடன் தம்மை
அடையாளப்படுத்திக் கொள்ளும்போதும், அவ்வடையாளங்களை முன்னிறுத்
தும் போதும், சமூகக் குழுக்களிடையே பிரச்சினைகளும், பூசல்களும், தீராப்
பகையும் ஏற்படுவது தவிர்க்கவியலாததாகிவிடுகிறது!

பிளவுகள், பிரிவினைகள் சமூகத்தில் இருக்கவே செய்கின்றன. பிளவுகளற்ற
ஒற்றுமையான சமூகம்; சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை
வெறும் விரும்பத்தக்க தொலை-தூரத்து லட்சியநிலைகளாகவே உள்ளன!
ஆனால், பிளவுகள், பிரிவினைகள் என்பவை மானிட இனத்தின் அடிப்படை
களோ, அல்லது எவ்வகையிலும் இறுதியான அம்சங்களோ அல்ல! மாறாக,
அவை சிறு பிள்ளைத்தனமான பிடிவாதப் போக்குகளேயாகும்! பிரிவினை
வாதம் என்பது புறவயமாக வெளியே தெரிகின்ற மேலோட்டமான அம்சங்
களை பெரிதுபடுத்திப் பின்னப்பட்ட அகவயமான கோட்பாடுகளே! அகவயமான
விஷயங்கள், அம்சங்கள், நம்பிக்கைகள் யாவும் சொந்த விவகாரங்கள் எனும்
கோளத்தைச் சேர்ந்தவையாகும்; அவைகளை அம்பலத்திற்குக் கொண்டுவந்து
அரங்கேற்றம் செய்வது அபத்தமானது!

பிரிவினை வாதங்களை நிறுவுவதன் மூலம் ஒரு பிரிவினர் பெறுகின்ற
சொற்பப் பயன்களையும், இலாபங்களையும்விட, மொத்தசமூகமும் அடையும்
நஷ்டங்களும், இழப்புக்களும்தான் அதிகம்! பிரிவினைகள், பிளவுகள் நாட்டிற்
குள் மட்டுமல்ல; ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் உள்ளன! ஆனால், வீட்டிற்குள்
ளும், குடும்பத்திற்குள்ளும் அவை ஒருவாறு கட்டுக்குள் வைக்கப்படுகின்றன!
கட்டுக்களை மீறிடும் போது அவை குடும்பத்தையே அழித்துவிடுகின்றன!

ஒரு குடும்பத்திலுள்ள அங்கத்தினர்கள் யாவரும் ஒருபடித்தானவர்களாக
இருப்பதில்லை! குடும்ப அங்கத்தினர்கள், வயதிலும், தோற்றத்திலும், அளவி
லும், கல்வியிலும், திறமையிலும், புத்திசாலித்தனத்திலும் வேறுபடவே செய்
கின்றனர்! குறிப்பாக, குழந்தைகளும், முதியவர்களும் உதவியற்றவர்களாகவும்,

பலவீனமானவர்களாகவும் உள்ளனர்! ஒருவர் பலசாலியாக இருக்கலாம்; இன்
னொருவர் ஊனமுற்றவராக இருக்கலாம்! ஒரு குடும்பத்தில் ஆண்கள், பெண்
கள், குழந்தைகள், இளையவர்கள், முதியவர்கள், ஊனமானவர்கள், நோயாளி
கள், மன-வளர்ச்சி குன்றியவர்கள், என பலதரப்பட்ட மனிதஜீவிகள் உள்ளனர்!
ஆனால், அனைத்து வித்தியாசங்களையும், வேறுபாடுகளையும் தாண்டி ஒரு
குடும்பத்தின் அங்கத்தினர்கள் அனைவரையும் பிணைப்பது எது? அதேவேளை
யில் சொத்து தகராறில் அண்ணன் தம்பிகள் ஒருவரையொருவர் வெட்டிச்
சாய்த்துக் கொள்வது எதனால் நிகழ்கிறது?

ஆம், அனைத்து வேறுபாடுகளையும் தாண்டி ஒவ்வொருவரும், அனைவரும்

உயிர்-பிழைத்தாகவேண்டும், வாழ்ந்தாக வேண்டும் என்பது முக்கியத்துவம்
பெறும்போது, இணக்கமும், இசைவும் இயல்பாக வெளிப்படுகின்றன! பணம்,
பொன், பொருள், சொத்து ஆகியவை முக்கியத்துவம் பெறும்போது, அதாவது,
உயிரைவிடவும், வாழ்க்கையைவிடவும் அவை முதலிடம் வகிக்கும்போது;
அண்ணன், தம்பி என்ற உறவுப்பிணைப்பு அறுந்து போகிறது! பரஸ்பரம் ஒரு
வரையொருவர் வெட்டிச் சாய்த்துக் கொள்வதன் மூலம், மனிதர்கள் மட்டும்
செத்துப் போவதில்லை! மாறாக, அம்மனிதர்களின் வழியாக வெளிப்படவேண்
டிய வாழ்க்கையும் செத்துப்போகிறது!

உண்மையில், நாடு, தேசம், சமூகம் என்பதும் ஒரு பெரும் குடும்பம் போன்ற
தேயாகும்! ஒரு நாட்டின் மக்கள் பிரிவினை வாதங்களால் பிளவுபட்டு தங்க
ளுக்குள் சண்டையிட்டுக் கொள்வாரேயானால், (எதிரி நாடுகளின் படையெடுப்
புக்கள் இல்லாமலேயே), அந்நாடு விரைவில் வீழ்ந்திடும்! உலக வரலாற்றில்,
எத்தனையோ சாம்ராஜ்யங்களும், நாகரிகங்களும் வீழ்ந்து மறைந்து போயின!
சாம்ராஜ்யங்களும், நாகரிகங்களும் வீழ்ந்து அழிந்து போவதற்கு பல காரணங்
கள் இருக்கலாம்! உள்-நாட்டுப் பிரச்சினைகள், கலகங்கள், பிரிவினைவாதப்
போக்குகள், பொருளாதாரத் தேக்கம்; அயல்நாட்டுப் படையெடுப்புகள், ஆக்கிர
மிப்புகள், . . . என பல காரணங்கள் இருக்கலாம்! ஆனால், அவற்றில் எதுவும்
மையமான காரணம் அல்ல! ஏனெனில், பண்டைய பல நாகரிக சமூகங்கள்
பொருளாதாரத்திலும், தொழில்நுட்பத்திலும், உற்பத்தி முறைகளிலும், ராணுவ
பலத்திலும் முன்னேற்றம் கண்டிருந்தன! ஆனால், அவை வாழ்க்கையின்
மையமான நோக்கத்தையும், குறிக்கோளையும், இலக்கையும் அறிந்து நிறை
வேற்றத் தவறிவிட்டதால், மனம்போன போக்கில் செயற்கையும், போலியுமான
நோக்கங்களை, இலக்குகளை கைக்கொண்டதால் தறிகெட்டுப்போய் வீழ்ந்தன!

பொதுவாக, 'வாழ்க்கை' என்பதை, நாம் விரும்பியவற்றைச் செய்வதற்கான
ஒரு வாய்ப்பு என்பதாகக்கருதுகிறோம்! அதாவது, நாம் பிறந்துவிட்டதாலேயே,
வாழ்க்கை எனும் வாய்ப்பை நாம் உடமையாகக் கொண்டுவிட்டோம் என எண்
ணுகிறோம்! அதாவது, நாம் வாழ்க்கையின் சொந்தக்காரர்களாக நம்மைக்காண்
கிறோம்! அதாவது, உலகம் முழுவதும் தனக்கே உரியதென, படைபலத்தாலும்,
தடையில்லா வர்த்தகத்தாலும் உலகை வெற்றி கொள்ளவும், நம்முடைய
சொந்த சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்பவும் முயல்கிறோம்! ஆனால், உண்மை
யில் நாம் மரணத்தின் சாம்ராஜ்யத்திற்குத்தான் சொந்தக்காரர்களாகத்தான்
இருக்கிறோம்! 

அலெக்ஸாண்டரை நாம் எல்லோரும் மாவீரன் எனக் கொண்டாடுகிறோம்!
உலகம் என்பது நம் ஒவ்வொருவருடைய அதிகாரத்தையும், ஆதிக்கத்தையும்
செயல்படுத்துவதற்கான களம் என்பதாக எண்ணுகிறோம்! வாழ்க்கை எனும்
புத்தகத்தைத் திறந்து பார்ப்பதற்கு முன்னே, முட்டாள் தனமாக, உலகை
வெற்றிகொள்ள, அல்லது நம்மால் முடிந்த அளவு சிறு தாக்கத்தையேனும்
உலகின் மீது ஏற்படுத்திடவேண்டும் எனக் கிளம்பிவிடுகிறோம்!

அடிப்படையில் வாழ்க்கையை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதைப்
பொறுத்தே, அதாவது, நம்முடைய "வாழ்க்கைப் பார்வை"யைப் பொறுத்தே
நம்முடைய சமூக, பொருளாதார, அரசியல் அமைவுநிலைகளை நாம்
உருவாக்கிக்கொள்கிறோம்! "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, இல்லையேல்
அனவருக்கும் தாழ்வு!", "ஒற்றுமையே வலிமை!", நாடு, தேசம் என்பதும் ஒரு
குடும்பம் போலத்தான் என்றெல்லாம் உணர்ச்சிக்கனிவு மிக்க சொற்களைக்
கொண்டு மக்களை ஒற்றுமைப்படுத்திடலாம் என எண்ணுவது சிறுபிள்ளைத்
தனமானது! இவ்வாறான, எளிய அறிவுரைகளைக் கேட்டு மக்கள் உடனே
திருந்திவிடுவதற்கு அவர்கள் பிழைக்கத்தெரியாத முட்டாள்கள் அல்லவே!
ஏனெனில், மக்கள் அடிபட்டுத்தான், அழிந்துதான் பாடம் கற்றுக்கொள்வார்கள்!
அப்போதும் கூட அவர்கள் வாழ்க்கையை புரிந்துகொள்வார்கள் என்று எதிர்
பார்க்க முடியாது!

மனிதர்களிடம் காணப்படும் வித்தியாசங்கள், வேறுபாடுகள்; மனிதர்களுக்கு
இடையே நிலவும் பாகுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் யாவும் மேலோட்டமானவை
யாகும்! அவை மனிதர்களின் உண்மையான சாரத்தை உருவாக்குவதோ,
விளக்குவதோ, வெளிப்படுத்துவதோ கிடையாது! இன்னும், மனிதர்களிடம்
வெளிப்படும் விசேடத்திறமைகளும், அறிவுக்கூர்மையும், எதுவும் அம்மனிதர்
களை முழுமைப்படுத்துவதுமில்லை, நிறைவுசெய்வதுமில்லை! வரங்களாகத்
தெரியும் அவற்றை முறையாக வாழ்க்கைக்குச் சேவை செய்யும் வகையில்

பிரயோகிக்கவில்லையெனில், முடிவில் அவை சாபங்களாக மாறிவிடக்கூடும்!

உலகில் தனிநபர்கள் எத்தனை கோடி பேர்கள் இருக்கின்றனரோ அத்தனை
கோடி வித்தியாசங்கள் உள்ளன எனலாம்! ஆனால், எத்தனை கோடி வித்தியா
சங்கள் இருந்தாலும், அவற்றுக்கடியில் எல்லா மனிதர்களிடமும் இருப்பது
ஒரே மானிட உட்பொதிவு (உள்ளுறையாற்றல்) மட்டுமே! ஆம், எல்லா
மனிதர்களிடமும் அந்த உட்பொதிவு உள்ளது, ஆனால், எவரெல்லாம் அந்த
உட்பொதிவை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்கிறார்களோ அவர்கள்
மட்டுமே உண்மையான, அல்லது முழுமையான மனிதர்களாக எழுகிறார்கள்!

மனிதர்களுக்கிடையேயுள்ள வித்தியாசங்களை, வேறுபாடுகளை, மனிதர்களிட
மிருந்து மனிதர்களை அந்நியப்படுத்தும், வெட்டிப்பிரிக்கும் ஆயுதங்களாகக்
கொள்வது தவறு! ஏனெனில், வித்தியாசங்கள், வேறுபாடுகளினால் விளையக்
கூடிய பயன்களை நாம் பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதால் பெறக்கூடிய பயன்
களும், நன்மைகளும் பன்மடங்குகளாகப் பெருகும்! ஒவ்வொருவருக்கும் ஒவ்
வொருவித திறமை உள்ளதெனில், கூட்டாக அத்திறமைகளை நாம் பயன்
கொள்வதுதான் அறிவார்ந்த செயலாக இருக்கமுடியும்! இன்று நாம் அனுபவிக்
கின்ற அனைத்துப் பொருள்வளங்களும் அவ்வாறு பரிமாற்றம் செய்யப்பட்ட
வைகளே, பகிர்ந்துகொள்ளப்பட்டவைகளே! ஒருவர் தனது திறமையின் விளை
வாகப் பெற்றவைகளை தான் மட்டுமே பயன்கொள்வேன் என்று பதுக்கியிருந்
தால் நாம் இன்றுள்ள நாகரிக நிலையை அடைந்திருக்க முடியாது! மேலும்,
மனிதர்கள் யாவரும் மண்புழுக்களைப்போல ஒரே மாதிரியாக எவ்வித வித்தி
யாசமும், வேறுபாடுமின்றி இருந்திருப்போமெனில், நாமும் மண்புழுக்களாகத்
தான் இருப்போம்!

ஆகவே, மக்களாகிய நாம், சிறு சிறு வேறுபாடுகளை, மேலோட்டமான வித்தி
யாசங்களைப் பெரிது படுத்தி நமக்கிடையே பிளவுகளை, பிரிவினைகளை
மேன்மேலும் ஆழப்படுத்திடுவோமெனில், அரசியல்வாதிகள் அவற்றைப் பயன்
படுத்திக்கொண்டு நம்மைப் பிரித்தாள்வதற்கு இடமளித்துவிடுவோம்! அதாவது,
ஏற்கனவே நாம் மதம், இனம், சாதி, மொழி ஆகியவற்றின் அடிப்படையில்
பிரிந்து கிடக்கிறோம்! அதில் அரசியல் கட்சிகள் புகுந்து, ஒவ்வொரு கட்சியும்
ஒரு பிரிவினரை பிரதிநிதித்துவம் செய்கிறோம் பேர்வழி என்று தத்தெடுத்துக்
கொள்ளும் பட்சத்தில், அதாவது மக்களைக் கட்சி பிரித்துக் கொள்வதனால்
சமூகத்தில் தேவையில்லாத இறுக்கமும், பகைமையும், மேலதிகப்பிரச்சினை
களும் தான் விளையும்!

மக்களின் வாழ்க்கை நலன்கள் என்பவை பொதுவானவையாகும்! அசலான
வாழ்க்கை நலன்களைப் பொறுத்தவரை நாமனைவரும் ஏற்கனவே ஒரே
கட்சியாகத்தான் உள்ளோம்! அதில், வெவ்வேறு அரசியல் கட்சிகள் - வெவ்
வேறு கொடிகளுடன், சின்னங்களுடன் உட்புகுந்து தத்தம் கொள்கைகளைக்
கொண்டு விசேடமாக எந்த, அல்லது, எவருடைய நலன்களை நிறைவேற்றப்
போகின்றன? மக்களின் நலன்களையா, அல்லது தங்களுடைய சொந்த நலன்
களையா? மீண்டும், மீண்டும், எத்தனை முறை சொன்னாலும், மக்களின்
"வாழ்க்கைத்தேவைகள்" என்பதைவிட வேறு கொள்கை கோட்பாடுகள் எதுவும்
இருக்கமுடியாது! மேலும், ஒரு மனிதனை அவனைத்தவிர வேறு எவரும்,
எந்த அரசியல் கட்சியும், தலைவரும், இன்னும் கடவுளும் கூட சிறப்பாகவும்,
உண்மையாகவும், முழுமையாகவும் பிரதிநிதித்துவம் செய்யமுடியாது!

அவ்வாறே பொதுவான வாழ்க்கை நலன்களைக் கொண்ட மக்களையும் அம்
மக்களைத்தவிர வேறு எவரும், எதுவும் பிரதிநிதித்துவம் செய்யமுடியாது!
இதுவரை, ஜனநாயக ஆட்சிமுறையைக் கொண்ட, குறிப்பாக பிரதிநிதித்துவ
ஜனநாயக ஆட்சியமைப்பு கொண்ட எந்த நாட்டிலும், எந்த அரசியல் கட்சியும்
மக்களின் நலன்களை, உரிமைகளை முழுமையாக நிறைவேற்றியதில்லை!
அவ்வாறே, மக்களின் எப்பிரச்சினையையும் முழுமையாகத் தீர்த்ததுமில்லை!
அப்படியே விதிவிலக்காக ஏதாவதொரு நாடு இருக்கமுடியுமெனில், அது,
தங்களுக்கிடையேயான வித்தியாசங்களையும், வேறுபாடுகளையும்,
பிரிவினைகளையும் கடந்த, அந்நாட்டு மக்களின் ஒருமித்த விழைவின்
வெற்றியாக மட்டுமே இருக்கமுடியும்!

மா.கணேசன்/ நெய்வேலி/ 17-11-2017
----------------------------------------------------------------------------

Friday, 24 November 2017

யாருக்காக நான் பேசுகிறேன்?





      எனது அரசியல், வாழ்க்கையைப் பற்றியது!
      எனது வாழ்க்கை, மெய்ம்மையைப் பற்றியது!
      வாழ்க்கைக்கு வெளியே ஒரு அரசியலும் இருக்கமுடியாது!
      அரசியல் எனும் சிமிழுக்குள் வாழ்க்கை ஒருபோதும் அடங்காது!


நான் மக்களைப்பற்றி பேசுகிறேன்; மக்களின் நலன்கள் குறித்துப்பேசுகிறேன்;
ஆனால், நான் அரசியல்வாதியும் அல்ல; அதேநேரத்தில், நான் மக்களின்
பிரதிநிதியும் அல்ல! இன்னும் மக்களின் சார்பாகவும் நான் பேசவில்லை!
ஏனெனில், நான் வேறு, மக்கள் வேறு அல்ல! நான் மக்களுக்காகப் பேச
வில்லை; மாறாக, நான் எனக்காகவே பேசுகிறேன்!  நான் மக்களில் ஒருவன்
என்பதால் மக்களிடமிருந்து என்னைப் பிரித்துவிட முடியாது! இதன் அர்த்தம்
நான்தான் மக்கள்; மக்கள்தான் நான்; நானும், மக்களும் ஒன்றாயிருக்கிறோம்!

நானும், மக்களும் ஒன்றாயிருக்கிறோம்; அதேநேரத்தில், மக்களிலிருந்து நான்
வேறாகவும் இருக்கிறேன்! ஏனெனில், நான் என்னிலிருந்தும் வேறானவனாக
வும் இருக்கிறேன்; அதாவது, தொடர்ந்து என்னையே நான் கடந்து செல்பவ
னாக இருக்கிறேன்! அவ்வாறே மக்கள் ஒவ்வொருவரும் தம்மைக் கடந்து
செல்ல வேண்டியது "உயர்" வாழ்க்கையின் முக்கிய விதியாகும்! ஆம்,
ஒவ்வொரு மனிதனும் ஒருகட்டத்தில் உயிர்-வாழ்க்கையைக் கடந்து உயர்-
வாழ்க்கைக்குச் சென்றாகவேண்டும்! இல்லாவிடில், உயிர்-வாழ்க்கையானது
சாரமற்றதாக, அர்த்தமற்றதாகப் போய்விடுவதுடன், உயிர்-வாழ்வதென்பதே
பெரும் நெருக்கடிக்குள்ளாகிவிடும்; அதாவது, விரைவில் மனித இனம் பூமிக்
கிரகத்தில் பூண்டோடு இற்றழிந்து போகும்!

உயர்-வாழ்க்கை விதியின் கோணத்திலிருந்து காணும்போது, மக்களைவிடவும்,
என்னையும் சேர்த்து எவ்வொரு தனி மனிதனையும் விடவும் அதி முக்கிய
மானதாக வேறொன்றை நான் காண்கிறேன்! அதை நான் "வாழ்க்கை" என்று 
அழைக்கிறேன்! உண்மையான வாழ்க்கை என்பது உணர்வின் அளவில்
மட்டுமே அளக்கப்படமுடியும் -- ஒருபோதும், பணத்தின், பொன்னின், பொருட்
களின் அளவைக்கொண்டு அளக்க முடியாது! மனித வாழ்க்கையின் அசலான
மதிப்புகளைத் தழுவிடாமல், செயற்கையும் போலியுமான மதிப்புகளைத் துரத்
திச் செல்லுவோமெனில், தவறாமல் தீமைகள் நம்மைத் தழுவிக்கொள்ளும்!

ஆனால், பணம், பொன், பொருள் ஆகியவற்றை முக்கியமானவையாகக்
கருதும் மனித சமூகம் எவ்வளவு அறிவீனமானது! கழுதைகளுக்குக் கூடத்
தெரியும் தங்கத்தை விட வைக்கோல் தான் மதிப்பு மிக்கது என்பது! இதுதான்
அர்த்தமுள்ள மதிப்பீட்டின் உதாரணம் ஆகும்!

"மக்களின் சமூகம்" என்பதற்கும், "சமூகத்தின் மக்கள்" என்பதற்கும் மாபெரும்
வித்தியாசம் உள்ளது என்பதை நம்மில் அநேகர் அறியார்! தங்களுக்குத் தாங்
களே சுயமாகச் சிந்திப்பவர்களின் சமூகம்தான் மக்களின் சமூகம் என்பதாகும்!
சுய-சிந்தனையற்று பிறரது கருத்துக்களையும் வழிகளையும், மதிப்புகளை
யும் பின் பற்றுபவர்கள் "சமூகத்தின் மக்கள்" ஆவர்!  ஆகவேதான், "மானிட
இனத்தில் சேருங்கள்!" என்று மக்களிடம் நான் தொடர்ந்து கூறிவருகிறேன்!

ஆம், வாழ்க்கையின் மீது நான் கொண்ட அக்கறையினால் தான் நான் மக்க
ளைப் பற்றியும், மக்களின் நலன்களைப் பற்றியும் பேசுகிறேன்! மக்கள்
முதலில் மக்களாக ஆகவேண்டும் என்பதை நான் வலியுறுத்திச் சொல்கிறேன்!
அதாவது, மக்கள் முதலில் தங்களது சிந்தனைகளை, பார்வைகளை, அக்கறை
களை வாழ்க்கைமீது குவிக்குமாறு, செலுத்துமாறு வேண்டுகிறேன்! வாழ்க்கை
யல்லாத, வாழ்க்கைக்குத் தொடர்பில்லாத விஷயங்கள், நடைமுறைகள்,
மதிப்புகள் யாவும் இனம் காணப்பட்டு தயவுதாட்சண்யம் இன்றி அகற்றப்பட
வேண்டும்!

முதலிடத்தில், மக்களாகிய நமக்கு அரசியல் எதற்காக வேண்டும்? அரசியலுக்
கும், வாழ்க்கைக்கும் என்ன தொடர்பு உள்ளது? அரசியல்வாதிகள், அதாவது,
ஆட்சியாளர்கள்  மக்கள் நலன்களைக் கருதாமல், என்ன ஆட்சிபுரிகிறார்கள்,
எதை ஆட்சிசெய்கிறார்கள்? நாட்டில், மாநிலம்தோறும் விவசாயிகள் அல்லல்
படுகிறார்கள்; சிலர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். படித்த இளைஞர்கள்,
பட்டதாரிகள் வேலையில்லாமல் திண்டாடுகிறார்கள். ஏழைகள் மேன்மேலும்
ஏழைகளாகிக் கொண்டிருக்கிறார்கள்; விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய மிகக்
குறைந்த எண்ணிக்கையிலான பணக்காரர்கள் மேன்மேலும் அர்த்தமில்லாமல்
லட்சலட்சமாக கோடிகளைச் சேர்த்துக்கொண்டே செல்கிறார்கள்!

நாட்டின் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன! ஆறுகளில்
தண்ணீரும் இல்லை; மணலும் இல்லை என்ற அவலநிலை ஏற்பட்டுள்ளது!
ஒரு புறம் குடிநீர்ப் பஞ்சம், இன்னொரு புறம் பாசனநீர்ப் பஞ்சம்! கிராமப்புறங்
களிலும், நகர்ப்புறங்களிலும் எங்குமே முறையான சாலைவசதிகள் இல்லை!
. .இத்தகைய இன்னபிற பல அடிப்படைப் பிரச்சினைகள் யாவும் கடந்த பத்து
பன்னிரெண்டு ஆட்சிக்காலங்களாக, தொடர்கதையாகத் தொடர்பவையாகும்!
அடிப்படையான இப்பிரச்சினைகளைத் தீர்க்கமுடியவில்லையெனில், அரசியல்,
அரசியல்வாதிகள், தேர்தல்கள், தலைவர்கள், அரசாங்கம், பிரதிநிதித்துவ ஜன
நாயகம் . . . .இவையெல்லாம் எதற்காக, யாருக்காக? யாருடைய நலன்களுக்
காக? முறையான பள்ளிக் கட்டடங்கள், சாலைகள், குடிநீர், மின்சார இணைப்
புகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்புகள் இல்லாமல் எவ்வாறு மக்கள் வாழ
இயலும்? நம் நாடு மிக வறிய நாடாக இருக்கிறதென்றால், இந்த இல்லாமை
யைச் சகித்துக்கொள்ளமுடியும்! இது, இல்லாமையா? அல்லது, ஆட்சியாளர்
களின் இயலாமையா?

நாம் இருக்கும் ஆட்சிமுறை ஜனநாயகம், மக்களாட்சி என்று சொல்லப்படுவ
தால் தான் இக்கேள்விகளை நாம் கேட்கிறோம்! அதே நாம் ஒரு சர்வாதிகார
ஆட்சியின் கீழிருந்தால் இக்கேள்விகளை நாம் கேட்க மாட்டோம்! ஆனால்,
ஜனநாயக ஆட்சிமுறையிலும், பலமுறை, உரிமைகளுக்காகப் போராடும்
தொழிலாளர்கள் அடக்குமுறை, பணி நீக்கம் ஆகியவற்றிற்கு உள்ளாக்கப்பட்
டுள்ளனர்! அரசின் தவறான, மக்கள் விரோதக் கொள்கைகளை விமர்சித்தால்,
குண்டர்சட்டம் பாய்கிறது, தேசவிரோதி பட்டம் சூட்டப்படுகிறது, சிறைவாசம்
கிடைக்கிறது! ஆனால், மக்களை தங்கள் பிழைப்பை விட்டுவிட்டு சாலை
களில் இறங்கிப் போராடச் செய்வது எது? பிழைப்பு கெட்டுப்போன, அல்லது,
பிழைக்க வழியில்லாத நிலைமை தானே! போராட்டங்கள் சட்டவிரோத
மானவை என நீதிமன்றம் ஆணைபிறப்பிப்பது மிகவும் வேடிக்கையானதாகும்!
"சட்டம்-ஒழுங்கு" பிரச்சினை பற்றி ஆட்சியாளர்கள் பேசுவது அபத்தமானது!
ஏனெனில், எந்த அரசியல் சட்டத்தையும், ஒழுங்கையும் பின்பற்றி ஆட்சியா
ளர்கள் ஆட்சி நடத்துகிறார்கள்?

மக்களாகிய நாம் இனியாவது வழக்கத்திலிருக்கும் போலி அரசியல் விஷயங்
களையும், விவகாரங்களையும் பேசிக்கொண்டிராமல், அவற்றில் ஈடுபடாமல்,
வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்கவேண்டும்! அரசியலானது உண்மையிலேயே
நம் வாழ்க்கையுடன் தொடர்புடையதாயிருக்கிறதா, அதாவது, எவ்வகையி
லேனும் நம்வாழ்க்கைக்கு (குறைந்த பட்சமாவது) உதவும்வகையில் உள்ளதா
என்பதை நாம் கண்டறிந்தாக வேண்டும்! ஏனெனில், உயிர்- பிழைத்திருப்
பதற்கே நாம் அன்றாடம் போராட வேண்டியிருக்கும் ஒரு சமூக-பொருளாதார-
அரசியல் அமைப்பில் எவ்வாறு, எப்போது உண்மையிலேயே நாம் வாழத்
தொடங்குவது? உண்மையில் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை நாம்
இன்னும் இழந்துவிட வில்லை; ஆகவே தான் தொடர்ந்து தேர்தலின் போது
வாக்களித்துவருகிறோம்! ஆனால், மக்களாகிய நாம் ஜனநாயகத்தை மதித்து
நடக்கும் பிரஜைகளாக இருப்பது மட்டும் போதாது; நம்முடைய அரசியல்வாதி
களும் ஜனநாயகத்தை மதித்து நடப்பவர்களாக இருக்க வேண்டும்! மேலும்,
தீவிரமாக நேரடியாக அரசியலில் ஈடுபட்டிருந்தாலும், அரசியல்வாதிகளும்
இந்நாட்டின் "பிரஜைகளே" என்பதை அவர்கள் மறந்துவிடாதிருக்கவேண்டும்!

ஜன நாயக அமைப்பு முறையில், அரசியல் என்பது பொறுப்புமிகுந்த சமூகப்
பணியாகும்! அப்பணியைச் செய்யும் அரசியல்வாதிகள் எனும் பிரஜைகள், பிற
பொதுவான அதாவது, சமூகத்தின் பல்வேறு தேவைகளுக்குரிய பொருட்களை
உற்பத்தி செய்யும் பிரஜைகளைவிட மேலானவர்களோ, பிரத்யேக சலுகை
களுக்குரியவர்களோ, பிரதானமானவர்களோ, எதிலும், எவ்வகையிலும் முன்
னுரிமை பெற்றவர்களோ; அதிகம் மதிக்கத்தக்கவர்களோ அல்ல! அதாவது,
அரசியல்வாதியும் மக்களில் ஒருவரே!

மனிதர்கள் எப்பணியை, தொழிலைச்செய்தாலும், அடிப்படையில் எல்லோரும்
மக்கள்-சமூகத்தின் பிரஜைகளே, எல்லோரும் மனிதஜீவிகளே என்பதை நாம்
மறந்துவிடலாகாது! ஒரு நாட்டின், சமூகத்தின் "பிரஜை" என்பதுகூட இரண்
டாம் நிலை அடையாளமே தவிர, மனிதஜீவி என்பதுதான் ஒருவரைப்பற்றிய
உண்மையான, கருவான, உள்ளார்ந்த அடையாளத்திற்கான அடிப்படையாகும்!
ஆம், 'மனித ஜீவி' என்பதும்கூட உண்மையான அடையாளத்திற்கான ஒரு
அடிப்படை மாத்திரமே! ஏனெனில், தன்னைக் கண்டடைபவனே உண்மையான
மனிதனாகிறான்! அதாவது, தனது இருப்பை முழுமையாக உணர்வுகொள்ளும்
வழிமுறையில் மட்டுமே மனிதன் உண்மையில் வாழ்கிறான்! மனிதஜீவிகள்
வெறுமனே எலிகளைப்போல உயிர்-பிழைத்திருப்பதையே "வாழ்க்கை" எனக்
கொண்டாடமுடியாது!

ஆனால், உயிர்-பிழைத்திருப்பதற்கே மக்கள் அன்றாடம் போராடவேண்டும்
எனில், அந்த சமூக-பொருளாதார-அரசியல் அமைப்பு மக்கள்-விரோதமானதும்,
வாழ்க்கை-விரோதமானதும் ஆகும்! ஆகவே, அந்நிலைமையை மாற்றியமைப்
பதற்கும்; மேலும், திண்டாட்டமோ, போராட்டமோ இல்லாமல் உயிர்-வாழ்வ
தற்கு மட்டுமல்லாமல் உயர்-வாழ்க்கைக்கும் உதவும்வகையிலான ஒரு சமூக
அமைப்பும், பொருளாதாரமும், ஆட்சிமுறையும் ஒருங்கே அமைந்த, இலட்சிய
பூர்வமான தொரு அமைப்பை தங்களுக்காக ஏற்படுத்திக் கொள்வதற்குமான
முழு உரிமையும், சுதந்திரமும் மக்களுக்கு உள்ளது!

ஒரு குறிப்பிட்ட ஆட்சிமுறை மட்டுப்பாடானதாக இருக்கலாம்; மக்களுக்குச்
சேவைபுரிவதாக இல்லாமலிருக்கலாம்! அதாவது, தற்போதைய ஜனநாயக
முறை செயல்படாததாக இருக்கலாம்; அரசியல்வாதிகளும் செயல்படாதவர்
களாக, மக்கள் நலன் மீது அக்கறையற்றவர்களாக இருக்கலாம்! அதற்காக,
மக்களின் வாழ்க்கையும் இடர்ப்படத்தான் வேண்டுமென்று யாதொரு நிர்ப்பந்த
மும், விதியும் இருக்கிறதா, என்ன? இந்த அளவிற்குள், எல்லைக்குள், வரம்
பிற்குள் மட்டுமே மக்கள் வாழவேண்டும் என்று சட்டம் போட்டு மக்களை,
அவர்களுடைய வாழ்க்கையை முடக்க முடியுமா? தற்போதைய ஜனநாயக
முறை செயல்படவில்லையென்றால், வேறொரு ஜனநாயக முறையை
மக்களாகிய நாம் ஏற்படுத்திட என்ன தடை இருக்கமுடியும்; நம்முடைய
செயலின்மை, மற்றும் ஊக்கமின்மையைத் தவிர!

மா.கணேசன்/ நெய்வேலி/ 22-11-2017
----------------------------------------------------------------------------

Tuesday, 21 November 2017

மக்களின் தேர்தல் அறிக்கை!



   ஒருவருடைய பசி இன்னொருவருடைய பசியைவிட அதிக
   மதிப்பிற்கும், கவனிப்பிற்கும் உரியதாக இருக்க முடியுமா?


தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை நாம்
அறிவோம்! ஒரு மாறுதலுக்காக நாம் ஏன் "மக்களின் தேர்தல் அறிக்கை"யை,
அதாவது, நம்முடைய கோரிக்கைகளை ஒரு அறிக்கையாகத் தயாரித்து, 
வாக்கு சேகரிக்க வருகின்ற போட்டியிடும் அரசியல் கட்சிகளிடம் கொடுத்து
எங்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதானால், உங்கள்
கட்சியைத்தேர்ந்தெடுப்பதில் எங்களுக்கு உடன்பாடே என்று ஏன் சொல்லக்
கூடாது? எந்தக் கட்சி நம்முடைய "தேர்தல் அறிக்கை"யை ஏற்கிறதோ அந்தக்
கட்சியை நாம் தேர்ந்தெடுக்கலாமே! ......

அரசியல் கட்சிகளின் வழக்கமான ஒரு தேர்தல் அறிக்கை என்ன சொல்லும்?
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தேனும் பாலும் தெருவில் ஆறாய் ஓடும்!
வறுமையை நாங்கள் முற்றாக ஒழித்துவிடுவோம்! வேலையில்லாத் 
திண்டாட்டத்தை அடியோடு அழித்து விடுவோம்! இடிந்து விழும் பள்ளிக்கட்ட
டங்களை இடித்துவிட்டு புதிதாக பள்ளிக்கட்டடங்களைக் கட்டுவோம்! கிராமத்
துச் சாலைகளை நெடுஞ்சாலைகளாக மாற்றுவோம்! சாலை ஓரங்களில்
நிழல் தரும் மரங்களை நடுவோம்! குடிநீர்ப்பஞ்சம் என்றால் என்ன என்று
கேட்கும்படி செய்வோம்! ஓட்டைப் பாலங்களை ஓரங்கட்டிவிட்டு அவ்விடங்
களில் புதிய பாலங்களைக் கட்டுவோம்! தலை நகரில் சாலைகளில் மழைநீர்
ஆறாய் ஓடுவதால் எல்லோருக்கும் மிதவை வீடுகளை வழங்குவோம்! அரசுப்
பேருந்துகளுக்குப் பதிலாக அரசுப் படகுப் போக்குவரத்தை அறிமுகப்படுத்து
வோம்! மீனவர் பிரச்சினையை உடனே தீர்க்குமாறு மத்திய அரசுக்கு கடிதம்
மேல் கடிதம் எழுதி கின்னஸ் சாதனை புரிவோம்! கடலில் எல்லை தாண்டும்
பிரச்சினையைத் தவிர்ப்பதற்காக எல்லைக்கோடுகளை வரைவோம்! இல்லை
யெனில், எந்தப் பிரச்சினையும் இன்றி  சொகுசாக மீன்பிடிப்பதற்கு வசதியாக
மெரினா கடற்கரை ஓரமாக புதிய கடல்களை உருவாக்குவோம்!  என்பன
போன்ற சாத்தியமற்ற அம்சங்களைக்கொண்ட அதே பழைய பல்லவி தானே!

ஆனால், "தேர்தல் அறிக்கை" என்பது தேர்தல் கால அறிக்கை தானே தவிர,
அவை வெற்று வாக்குறுதிகளே தவிர அவை நிறைவேற்றப்படுவதற்கானவை
யல்ல! ஆட்சிக்கு வந்த எவ்வொரு கட்சியும், பலமுறை மீண்டும் மீண்டும்
ஆட்சியைப் பிடித்த கட்சிகளும்கூட தமது தேர்தல் அறிக்கையை முறையாக
நிறைவேற்றியதில்லை! அவ்வாறு நிறைவேற்றினால், அடுத்தடுத்த முறை
தேர்தல் அறிக்கையை வெளியிட இயலாதல்லவா! அதாவது மக்களின் அடிப்
படைப் பிரச்சினைகளை முழுமையாகத் தீர்த்துவிடும் பட்சத்தில், அடுத்தடுத்து
தேர்தல் அறிக்கை வெளியிட வாய்ப்பு இல்லாமல் போய்விடும்; அரசியல்வாதி
களுக்கு வேலையில்லாமல் போய்விடும் என்பதால் தானோ என்னவோ
ஆட்சியைப் பிடிக்கும் எந்தக்கட்சியும் தமது தேர்தல் வாக்குறுதிகளை ஒரு
போதும் நிறைவேற்றுவதில்லை போலும்!

வழக்கமான 'சாக்கடை' அரசியலுக்குப் பழகிப்போன நம்மில் பலருக்கு இந்த
"மக்களின் தேர்தல் அறிக்கை" என்பது ஒரு கிறுக்குத்தனமான, நடைமுறைச்
சாத்தியமற்ற  யோசனை என்பதாகத் தோன்றக்கூடும்! அந்த அளவிற்கு நாம்
மிகவும் தவறான, தலைகீழான அரசியல் நடைமுறைக்கு பழக்கப்படுத்தப்
பட்டுள்ளோம்! மக்களால், நம்மால், நடப்பு அரசியல் நடைமுறைகளை மாற்ற
முடியாது என்றால், பிறகு "மக்களாட்சி", "ஜனநாயகம்" என்பதற்கான அர்த்தம்
தான் என்ன? அரசியல்வாதிகளைத் திருத்தமுடியாது என்று எவரேனும் சொல்
வாரெனில், திருத்தப்பட வேண்டியவர்கள் அரசியல்வாதிகள் அல்ல; உண்மை
யில் திருந்த வேண்டியவர்கள் நாம் தான்! நம்மை நாமே திருத்திக் கொள்ள
வேண்டும் என்பதுதான் சரியான பார்வை ஆகும்!

உண்மையில், பிரச்சினை, பலவீனம், குறைபாடு யாவும் மக்களாகிய நம்மிடம்
தான் உள்ளன! நன்றாகக் கவனித்தோமெனில், "மக்களால், நம்மால், நடப்பு
அரசியல் நடைமுறைகளை மாற்ற முடியாது!" என்பது எதைச் சுட்டுகிறது
என்றால், நாம் மக்களாக இல்லாமல் வெறும் உதிரிகளாக, உதவியற்ற தனித்
தனி நபர்களாக பிரிந்து கிடக்கிறோம்! அரசியல்வாதிகள் நம்மைப் பார்த்துப்
பேசும்போது, "மக்களே" என்று ஒருமையில் தான் குறிப்பிடுகிறார்கள்! ஆனால்,
நாமோ, "மக்களாக" ஒருமையில் (அதாவது கட்டுக்கோப்பாக) இல்லை; மாறாக,
நாம் பன்மையில், உதிரிகளாக நிற்கிறோம்! ஏனெனில், நமக்கிடையே எவ்வித
ஒற்றுமையுணர்வும், உறுதியான பிணைப்பும், மனம் ஒருநிலைப்பட்டதன்மை
யும் இல்லை! ஆகவே, "ஓநாயைப் பொறுத்தவரை எத்தனை செம்மறியாடுகள் 
இருக்கின்றன என்பது ஒரு பிரச்சினை யல்ல!"

அரசியல் ஆய்வறிஞர் கெல்ஸென் (Kelsen 1988: 29) அவர்கள், " தனித்
தனியே உதிரியாக நிற்கும் தனிநபர்களால் "பொது ஒப்புதலை" உருவாக்கும்
விஷயத்தில் யாதொரு விளைவையும் ஏற்படுத்த இயலாது; ஏனென்றால்,
தனி நபர்கள் கட்சிகளின் வாயிலாகத்தான் அரசியல் ரீதியான இருப்பைப்
பெறுகிறார்கள்." என்கிறார். ஆனால், கெல்ஸெனின் கூற்று பொருத்தமற்றது.
ஏனென்றால், எவ்வொரு அரசியல் கட்சியும் படிமுறை அமைப்பிலானதே;
கட்சிக்குள்ளும் தனிநபர்கள் (தொண்டர்கள்) குரலற்றவர்களே! கட்சித்தலைமை
யின் முடிவை குலவையிடமட்டுமே தொண்டர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்!
உள்கட்சி ஜனநாயகம் என்பது வெறும் கானல்நீரே ஆகும்! ஜனநாயகம் என்பது
கட்சிகளுக்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி உலகில் எங்கேயும் இல்லை!

மேலும், கட்சிகள் மக்களை(சமூகத்தை) இனவாரியாக, சாதிவாரியாக,அல்லது
'கொள்கை' என்ற பெயரில் துண்டாடுவதையே செய்கின்றன! மக்களைக் கட்சி
பிரிப்பதன் வாயிலாக அரசியல்வாதிகளின் பிரித்தாளும் தந்திரம் நிறைவேறு
கிறது! இனம், மதம், சாதி, நிறம், மொழி, கலாச்சாரம் போன்ற அம்சங்கள்
மனித இனத்தின் முதிர்ச்சியின்மையின் அடையாளங்கள் ஆகும்! ஏனெனில்,
இவ்வம்சங்கள் மனிதர்களிடம் "மனிதம்" எனும் பண்பை வளரவிடாமல்
தடுத்து அழித்துவிடுகிற பணியையே செய்கின்றன! ஒருவருடைய பசி இன்
னொருவருடைய பசியைவிட அதிக மதிப்பிற்கும், கவனிப்பிற்கும் உரியதாக
இருக்க முடியும் என்றால், நாம் இனம், சாதி, மதம், இத்யாதி பாகுபாடுகளை
ஏற்றுக்கொள்ளலாம்! பசி என்பது பொதுவானது; பசிக்கு எந்தசாதியும் இல்லை,
மதமும் இல்லை! ஆகவே, மக்களின் "பொதுவான அடிப்படைப் பிரச்சினைகள்"
தான் மக்களை ஒருமைப்படுத்தும், ஒற்றுமைப்படுத்தும் அற்புத அம்சமாகும்!

ஆக,"மக்களால், நம்மால், நடப்பு அரசியல் நடைமுறைகளை மாற்றமுடியாது!"
என்ற வாதம் மொன்னையான பொய்மையாகும்! அப்படியே நம்மால், அரசிய
லில் எவ்வொரு மாற்றத்தையும் கொண்டுவரமுடியாது என்பதுதான் முடிவான
நிலையெனில், நமக்கு "வாழ்க்கை" என்பதே இல்லை என்றாவிடும்! அதாவது
தற்போது நாம் அனுபவித்துவரும் அனைத்து சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்
வுகளும், அநீதிகளும், அடிப்படை வாழ்வாதார நலிவும், யாவும் தொடர்ந்திடும்!

அடிப்படையில், ஒரு அரசியல் கட்சியைவிட இன்னொரு அரசியல் கட்சி
சிறந்ததாகவோ, ஒப்பற்றதாகவோ இருக்க வாய்ப்பில்லை! ஒரு கட்சியின்
கொள்கைகளைவிட இன்னொரு கட்சியின் கொள்கைகள் மக்களுக்கு பெரிதாக
சேவை செய்துவிடப் போவதில்லை! மக்களின் வாழ்க்கைத் தேவைகளைவிட
வேறு தனித்துவமான கொள்கைகள் எதுவும் தேவையா என்ன? அத்தேவை
களை சரிவர நிறைவேற்றுவதில் ஏன் இத்தனை சுணக்கம்? அலட்சியம்?

முக்கியமாக, மக்கள் என்போர் பிச்சைக்காரர்களோ, சும்மாயிருக்கும் சேமப்
படையோ அல்ல! மக்கள் என்போர் உழைப்பாளிகள்! ஒட்டுமொத்தப் பொருளா
தாரத்தின் ஆதாரமே மக்கள் தான்! அனைத்துப் பொருட்களும், பண்டங்களும்,
செல்வ வளங்களும் மக்களின் உடலுழைப்பு, மற்றும் மூளை உழைப்பின்
விளைபொருட்களே! மக்கள் இல்லாமல் நாடு, நகரம், மாடமாளிகைகள், 
குண்டூசி முதல் செயற்கைக்கோள்கள்வரை எதுவும் இல்லை! ஒட்டு மொத்தச்
சமூகத்தின் அனைத்துத்தேவைகளுக்கும் உரிய பொருட்களை மக்கள் தான்
உற்பத்தி செய்து தருகிறார்கள். அரசியல்வாதிகள் சமூகத் தேவைகளுக்குரிய
எப்பொருளையும், தம் பங்கிற்கு உருவாக்குவதோ, உற்பத்தி செய்து தருவதோ
இல்லை - வரிச்சுமைகளையும், தீராத வறுமையையும் தவிர!

உணவு தானியங்களை உற்பத்தி செய்யும் ஒரு விவசாயி, தனது போக்குவரத்
துக்கான சாலைகளையும், பாலங்களையும் தானே கட்டிக்கொள்ள முடியாது
என்பதால் தான் அவன் அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்த்திருக்கிறான். தன்
தேவைகளுக்குரிய அனைத்துப்பொருட்களையும் அவனால் உருவாக்கிக்
கொள்ள முடிந்தால் அவனுக்கு அரசும் தேவையில்லை, அரசியலும், அரசியல்
வாதிகளும் தேவையில்லை! மக்கள் இலவசங்களுக்காக கையேந்திக்கொண்
டிருப்பவர்கள் அல்ல! அவ்வாறான நிலைமைக்கு மக்களைத் தள்ளியது ஆட்சி
யதிகாரத்தை கைப்பற்றுவதற்காக அரசியல்வாதிகள் செய்த நயவஞ்சக சூழ்ச்சி
யேயாகும்! இலவசங்கள் எனும் தூண்டில் புழுக்களைக் காட்டி, மக்களின்
நலத்திட்டங்களுக்குச் செலவு செய்ய வேண்டிய வரிப்பணத்தை கோடிக்கோடி
யாகக் கொள்ளையடித்து அயல் நாட்டு வங்கிகளில் பதுக்கும் அரசியல்வாதி
கள் தான் நம்முடைய ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் ஒப்பற்ற பிரதிநிதிகள்!
இத்தகைய ஜனநாயகத்திற்குப் பெயர்தான் "பிரதிநிதித்துவ ஜனநாயகம்!"

ஆனால், மக்கள் ஏன் இன்னும் இத்தகைய அரசியல்வாதிகளை நம்பிக்கொண்
டும், ஏமாந்துகொண்டும் இருக்கவேண்டும்? ஏனென்றால், மக்களுக்குத் தங்கள்
வலிமை எத்தகையதென்று தெரியவில்லை; மக்கள் தங்களின் உண்மையான
வலிமை மற்றும் ஆற்றலைத்தெரிந்து கொள்ள விடாமல் அரசியல்வாதிகள்
மக்களுக்கிடையே பிரிவினைகளை உருவாக்கி பகைமைத் தீயை வளர்த்து
அதில் குளிர்காய்ந்து வருகிறார்கள்! எல்லா வளங்களையும் உருவாக்கித்தரும்
மக்களுக்குத் தமது ஒன்றுபட்ட சக்தியின் மகிமை தெரியாமல் தமக்கிடையே
பூசல் கொண்டு பிளவு பட்டு நிற்பதால், "ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக்
கொண்டாட்டம்!" என்பது போல அரசியல்வாதிகள் நடுவே புகுந்து தங்களது
குரங்குப்பஞ்சாயத்தை அரசியல் என்ற பெயரில் அரங்கேற்றி மக்களை ஏய்த்து
மேய்த்து ஏகபோகமாக வாழ்ந்து வருகிறார்கள்!

உண்மையில், மக்கள் தான் உண்மையான தலைவர்கள், அவர்களுக்கு வேறு
மதத்தலைவர்களோ, அரசியல் தலைவர்களோ, இனத்தலைவர்களோ, எவரும்
தேவையில்லை! மக்களை எவரும் வழிநடத்தவும் தேவையில்லை; வழிநடத்
தப்படுவதற்கு அவர்கள் ஆடுகளோ, மாடுகளோ அல்ல! உழைக்கும் மக்கள்
தம் இயல்பிலேயே சுதந்திரமானவர்கள்! மக்கள் தம் சகமக்களுடன் பரஸ்பரம்
பொருளியல் ரீதியாகச் சார்ந்திருப்பது தவிர்க்க இயலாதது!  மக்கள் இணக்க
மாகக் கூடிவாழ்வதன் மூலமும், சுமுகமான பண்டமாற்றுப் பரிவர்த்தனையின்
மூலமும் தங்களுடைய அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றிக்கொண்டு
சுகமாகவும், சுதந்திரமாகவும் வாழமுடியும்! மக்களுக்கிடையே எவ்வகையிலும்
யாதொரு இடைத்தரகரும், நாட்டாண்மையும், அரசரும், அமைச்சரும் எவரும்
தேவையில்லை!

தாங்கள் சுதந்திரமானவர்கள் என்பதை மக்கள் தெளிவாக உணர்வார்களேயா
னால், அவர்கள் இயற்கை, உழைப்பு, சகமக்கள் ஆகியவற்றைத் தவிர வேறு
எதற்கும், எவருக்கும் கடமைப்பட்டவர்கள் அல்ல! மேலும், மக்கள் என்போரே
ஒரு கட்சி தான், ஆகவே மக்களுக்குத் தனியே அரசியல் கட்சிகள் எதுவும்
தேவையில்லை! மக்களின் நலன்களையும், தேவைகளையும் பிரதிநிதித்துவம்
செய்வது என்பது தேவையா என்பது குறித்து நாம் எப்போதாவது சிந்தித்திருக்
கிறோமா? ஒருவரது பசியை வேரொருவர் பிரதிநிதித்துவம் செய்து உணவைப்
பெறுவதற்கான திட்டங்களை வகுத்து, அவற்றைச் செயல்படுத்திய பிறகுதான்
ஒருவர் தனக்கான உணவைப் பெறமுடியும் என்பதாயிருந்தால் அவர் உயிர்
வாழ முடியுமா? அவர் பட்டினியால் செத்துத்தான் போவார்!

பிறந்த குழந்தை கூட தனது பசியை தனது அழுகையின் மூலம் தெரிவித்து
தன்னைத் தானே பிரதிநிதித்துவம் செய்துகொள்வதில்லையா! ஆக, வளர்ந்த
மனிதர்களாகிய நாம் நம்முடைய தேவைகளையும், நலன்களையும் நாமே
நிறைவேற்றிக்கொள்வதை விடுத்து நாம் ஏன் அரசியல்வாதிகளை நமக்கான
பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டு நாமே ஏன் அரசியல் எனும் பொறி
யில் சிக்கித் தவிக்கவேண்டும்? அரசியல்வாதிகள் என்போர் யார்? அவர்கள்
எங்கிருந்து முளைத்தார்கள், அவர்கள் என்ன, வானத்திலிருந்து இறங்கி வந்த
வர்களா? நம்முடைய பிரதிநிதிகள் என்ற பெயரில் அரசியல்வாதிகள் நம் பிரச்
சினைகளை எடுத்துக்கொண்டு எங்கே எவரிடம்போய் முறையிட்டுத் தீர்க்கப்
போகிறார்கள்?

உண்மையில், சட்டமன்றம், நாடாளுமன்றம் என்பது என்ன? அவை மக்களின்
பிரச்சினைகளையும், துன்பங்களையும் தீர்ப்பதற்கான நீதிமான்களின் மன்றங்
களா என்ன? இல்லவேயில்லை! மக்களால், நம்மால், தேர்ந்தெடுக்கப்பட்ட
நம்முடைய பிரதிநிதிகளின் மன்றங்களே அவைகள்! அதாவது, நம்முடைய
பிரதிநிதிகளும் அவர்களே, நமக்குப் படியளப்பவர்களும், நீதி பரிபாலனம் செய்
பவர்களும் அவர்களேயாவர்! அரசியல்வாதிகள்,அரசியல்தலைவர்கள் என்போர்
உண்மையிலேயே நம்முடைய, நமக்கான பிரதிநிதிகளே என்றால், நம்முடைய
பிரச்சினைகள், அவலங்கள் என்றோ தீர்க்கப்பட்டிருக்கும் அல்லவா? இவ்விடத்
தில்தான் நாம் புரிந்து கொள்ளவேண்டும், அரசியல் கட்சிகளும்,தலைவர்களும்
மக்களுக்குச் சேவை செய்வதற்காக கடுமையாகத் தங்களுக்குள் போட்டிபோடு
கின்றனரா, அல்லது ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றித் தங்களது சொந்த நலன்
களைச் சாதித்துக்கொள்வதற்காகப் போட்டியிடுகின்றனரா என்பதை!

உண்மையில்,அரசியல்வாதிகள் நமக்கான பிரதிநிதிகளா, அல்லது ஜனநாயகம்
என்ற போர்வையைப் போர்த்திக்கொண்டு, நம்மை பகடைக்காய்களாகப் பயன்
படுத்திக்கொண்டு, பெரு முதலாளிகளுடன் பேரம் பேசிக்கொண்டு தங்களை
வளர்த்துக்கொள்ளும் இடைத்தரகர்களா, (இன்னும் துல்லியமாகச்சொன்னால்)
இரட்டை உளவாளிகளா என்றால், இரண்டாவது குறிப்பிடப்பட்ட அம்சமே
அவர்களுக்கு மிகவும் பொருந்தும் எனலாம்! ஏனெனில், வெளிப்படையாகத்
தெரிகின்ற அரசாங்கத்தை ஒரு மறைப்பாகக் கொண்டு அதற்குப்பின்னால்
திரை மறைவிலிருந்து ஆட்சிபுரியும் கண்ணுக்குத்தெரியாத அரசாங்கம் ஒன்று
உள்ளது என கார்ல் மார்க்ஸிலிருந்து, அமெரிக்க ஜனாதிபதி, தியோடர் ரூஸ்
வெல்ட், சமூகவியலாளர் சார்ல்ஸ் ரைட் மில்ஸ் (C. Wright Mills)வரை
குறிப்பிட்டுள்ளனர்!

உண்மையில், அரசியல்வாதிகளின் அயோக்கியத்தனத்துக்கும், கயமைத்தனத்
துக்கும் அவர்கள் மட்டுமே காரணமல்ல; அவர்கள் அதீதமான சுய-நலன்
கருதிகள் என்பதற்கான பொறுப்பைத்தவிர! .. ..  . . . ...

1956-ல் அமெரிக்க சமூகவியல் ஆய்வறிஞர், சார்ல்ஸ் ரைட் மில்ஸ், "ஆதிக்க
மேட்டுக்குடி" (The Power Elite) எனும் நூலை எழுதினார்; அதில்,
"அமெரிக்க ஜனநாயகம் என்பது பெருநிறுவன முதலாளிகள், உயர் இராணுவ
அதிகாரிகள், மற்றும், அரசியல் மேட்டுக்குடியினர் ஆகியோரைக்கொண்ட
ஆதிக்க மேட்டுக்குடிகளின் மறைமுக ஆட்சிக்கான ஒரு மறைப்புத்திரையே!"
என்றார். அதே நேரத்தில், அம்மேட்டுக்குடிகளின் ஆட்சியை சமூக இயக்கங்
களைக் கொண்டு முறியடித்திடமுடியும் என்று மில்ஸ் நம்பினார். ஆனால்,
ஆதிக்க மேட்டுக்குடிகளை அம்பலப்படுத்துவதன் மூலமும், அதன் சித்தாந்
தத்தை மதிப்பற்றதாகச் செய்வதன் மூலமும் மட்டுமே அது சாத்தியமாகும்
என்பதாக மில்ஸ் கருதினார்! சமூகவியலாளர் மில்ஸ்-ன் இக்கருத்துக்கள்
அமெரிக்க ஜனநாயகத்திற்கு மட்டுமல்ல, ஜனநாயகம் எனும் போர்வையில்
எங்கேயெல்லாம் ஆதிக்க மேட்டுக்குடிகளின் மறைமுக ஆட்சி  நிலவுகிறதோ
அந்நாடுகள் அனைத்திற்கும் பொருந்தும்!

ஒரு நூற்றாண்டிற்கு முன்பே கார்ல் மார்க்ஸ் கூறினார், அதாவது, "பிரதி
நிதித்துவ ஜனநாயகம் - அரசியல் சட்டங்கள், தேர்தல்கள், சட்டத்தின் ஆட்சி
ஆகியன உள்ளிட்ட முறையான (வெளிப்படையான) அரசியல் பொறியமைப்
புக்களை உருவாக்குவது என்பதே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்
மக்களுக்குக் கடமைப் பட்டவர்களாக இருப்பர் என்பதற்கான உத்திரவாதமாக
இருக்காது" என்றார்!

ஆம், தேர்தல் நேரத்தில், அரசியல்வாதிகள் மக்களைத்தேடி வருகிறார்கள்,
சந்திக்கிறார்கள், வாக்குகளைப் பெறுவதற்காக தாராளமாக வாக்குறுதிகளை
அள்ளி வழங்குகிறார்கள்! தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியிலமர்ந்த பிறகு,
அவர்கள் திடீரென முற்றிலும் வேறொரு இனமாக, தாம் வேறு, மக்கள் வேறு,
என்பதாக, அந்நியர்களாக மாறிவிடுகிறார்கள்! மக்களும் இத்தகைய ஏமாற்று
வித்தைக்குப் பழகிப்போனவர்களாக தம்தம் பிழைப்பைப் பார்க்கச் சென்றுவிடு
கின்றனர்!

அண்டோனியோ கிராம்ஸி,  20-ம் நூற்றாண்டின் ஆரம்ப கால இத்தாலிய
சமூகச் சிந்தனையாளர், முஸோலினியின் பாஸிச இத்தாலியச் சிறையில்
இருந்து எழுதினார், மக்கள் எவ்வளவுதான் துன்பப்பட்டாலும், நடப்பிலிருக்கும்
ஆட்சியின் சித்தாந்த மேலாண்மையை (hegemony) எதிர்ப்பின்றி ஏற்றுக்
கொள்கிறார்கள் என்று குறிப்பிட்டார். மேலும், எண்ணற்ற பல இத்தாலி
யர்கள் ஏன் முஸோலியின் அடக்குமுறை காரணத்திற்காக திரண்டுசென்றனர்
என்பதை புரிந்துகொள்ளவேண்டும் என கடுமையாகச் சிந்தித்தார் கிராம்ஸி!
காலதேச வர்த்தமானம் கடந்து எங்கும் இதே கதைதான் நிகழ்ந்தேறுகிறது!
சாதாரண மக்கள், உழைப்பாளிகள், தொழிலாளிகள் யாவரும் வரலாறு
முழுவதும் வஞ்சிக்கப்பட்டும், சுரண்டப்பட்டும்தான் வந்திருக்கிறார்கள்! ஆளும்
அரசின் சித்தாந்த மேலாண்மை என்பது மக்களை மூளைச்சலவை செய்யும்
வகையில் திட்டமிட்டு இயற்றப்பட்டு, பிரச்சாரம் செய்யப்பட்டு, நிறைவேற்றப்
படுகிறது! அரசு இழைக்கும் எல்லாக் கொடுமைகளையும், அவலங்களையும்,
அநீதிகளையும், வரிச்சுமைகளையும், தாங்கிக்கொள்ளும் மக்களின் அலாதி
யான சகிப்புத்தன்மை தான் போலி-ஜனநாயகத்தின் வெற்றியாகும்!

அது ஒரு நிலாக்காலம் போல, அது ஒரு தேர்தல் காலம்! கா.கா.கூ.கி கட்சியி
னர் தங்கள் தலைவர், மக்களின் பாதுகாவலர், மக்கள் நலப் போராளி, ஓட்டுக்
கேட்க வருகிறார் என்பதை அறிவித்துக்கொண்டே சாரி சாரியாக பல்வேறு
ஊர்திகளின் அணிவகுப்புடன் ஆரவாரமாக அந்த கிராமத்திற்குள் நுழைந்தனர்!
ஆனால், ஒரு தெருவிலும், ஒருவீட்டிலிருந்தும், ஒருவர் கூட எட்டிக்கூடப்
பார்க்கவில்லை! என்ன, திடீரென்று எல்லோரும் ஊரைக்காலி செய்துவிட்டு
எங்கோ போய்விட்டனரோ என்ற சந்தேகம் எழ, அந்த நேரம் ஒலி பெருக்கி
வழியே ஒரு அறிவிப்பு கேட்டது! ஊர் மக்கள் யாவரும் தண்ணீர் இல்லாத
வரண்ட ஏரியின் நடுவே கா.கா.கூ.கி கட்சியின் தலைவரை சந்திப்பதற்காக
காத்திருப்பதாக அந்த ஒலி பெருக்கி சொல்லிற்று! சிறிது குழப்பத்துடனும்,
சிறிது அச்சத்துடனும் கா.கா.கூ.கி கட்சியினர் தங்களது தலைவருடன் ஊர்தி
களை தொலைவிலேயே நிறுத்திவிட்டு ஏரிக்குள் சென்றனர்! ஊர்மக்கள்
அனைவரும் சலனமின்றி அமைதியாக ஏரியின் நடுவே அமர்ந்திருந்தனர்!
ஒரு சிறுவன் வெள்ளையும்-சள்ளையுமாக கரைவேட்டி சகிதம் இருப்பவர்தான்
தலைவர் என்று இனம் கண்டு அவரிடம் சென்று ஒரு துண்டு காகிதத்தை 
அளித்தான்! அதில் ஏதோ எழுதப்பட்டிருந்தது! அதற்கு ஒரு தலைப்பும்
கொடுக்கப்பட்டிருந்தது : "மக்களின் தேர்தல் அறிக்கை!"

மா.கணேசன்/ நெய்வேலி/ 16-11-2017
----------------------------------------------------------------------------

Saturday, 18 November 2017

வாருங்கள், அர்த்தமுள்ள அரசியலை அறிவோம்!




 இன்றைய அரசியல் அர்த்தமுள்ளதாக இல்லை; ஏனெனில்,
 அரசியல்வாதிகள் மனிதர்களாக இல்லை. ஏனெனில்,
 மக்களாகிய நாம் மக்களாக இல்லை!
                 •••

நாம் ஏன் அரசியல் குறித்துப் பேச வேண்டும்?
-----------------------------------
"அரசியல்" என்பது, முற்றிலும் ஒரு தனி விஷயமோ, துறையோ, மிகவும்
விசேடமான, அல்லது வித்தியாசமான ஒரு சிலருக்கு மட்டுமே உரியதோ
அல்ல! அரசியலை வெறும் அதிகாரம் என்பதாகச் சுருக்கிக் காண்பவர்கள்
மிகவும் நயவஞ்சகமாக, வாழ்வின் எவ்வொரு விஷயமும், அம்சமும் அரசிய
லுக்கு உட்பட்டதே என்கிறார்கள்! எங்கும், எதிலும், எல்லாவற்றிலும் அரசியல்
உள்ளது என்கிறார்கள்! ஆனால், இப்பேச்சு தவறானது, தலைகீழானது! மாறாக,
மனிதனின் புற-வாழ்க்கையில், பலவித விஷயங்களுள் அரசியலுக்கும் ஓர்
இடமுள்ளதே தவிர, நம் வாழ்வனைத்தையும் ஆக்கிரமிக்கும் வகையில் அரசி
யலுக்கு மட்டுமல்ல, வேறு எவ்வொரு விஷயத்திற்கும் இடமில்லை! மேலும்,
மனித வாழ்க்கை என்பது வெறுமனே உணவு, உடை, உறையுள் என "புற-
வாழ்க்கை" யுடன் முடிந்து போகிற விஷயமல்ல; புற-வாழ்க்கையை அர்த்தம்
உள்ளதாகச் செய்யக்கூடிய "அக-வாழ்க்கை", எனும் "ஆன்மீக வாழ்க்கை" என்
பதும் உள்ளது!

இந்த அக-வாழ்க்கை, அல்லது ஆன்மீக வாழ்க்கை குறித்து அதற்குரிய இடத்
தில் பார்ப்போம். முதலில், உயிர்-வாழ்க்கையைத் தக்க வைத்துக்கொள்வோம்,
அதையடுத்து, "உயர்-வாழ்க்கைக்குச் செல்லுவோம்! இப்போதைக்கு, உடனடி
யாக மக்களை, நம் அனைவரையும் பாதிக்கின்ற அதாவது அடிப்படை உயிர்-
வாழ்க்கைக்குத் தடைகளாக விளங்கும் விவகாரங்களை, காரணிகளைப் பார்ப்
போம்! முதலில், நாம் ஏன் அரசியல் குறித்துப் பேச வேண்டும்? ஏனெனில்,
நாம் வாழ்ந்தாக வேண்டும்; அதில், நம் வாழ்க்கையில், குறுக்கிடுகின்ற, தடை
களாக நிற்கின்ற விஷயங்களை நாம் அகற்றியாக வேண்டும்! நம் வாழ்க்கைப்
பாதையில் கல், முள், போன்றவைகள் இல்லாமல் அவ்வப்போது பராமரிப்பது
நம்முடைய பணியாகும்! ஆகவே, நாம் அரசியலைப் பற்றியும் பேசியாக
வேண்டும்!

ஆனால், நம்மில் பெரும்பான்மையோர் அரசியல் பக்கம் திரும்பிப்பார்ப்பதுகூட
இல்லை! ஏனெனில், நகரத்தைச் சுத்தமாக வைத்திருப்பது நகராட்சியின், துப்
புரவுப் பணியாளர்களின் பொறுப்பு எனவும்; குற்றங்களைத் தடுப்பது, திருடர்
களைப் பிடிப்பது என்பது காவல்துறையின் பொறுப்பு எனவும்; மாநிலத்தை
நிர்வகிப்பது என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான அரசியல்வாதிகளின்
பொறுப்பு எனவும் எண்ணிக்கொண்டு, நாம் நம்முடைய அன்றாட அலுவல்
களில் மூழ்கிக் கிடக்கிறோம்! ஆனால், "வேலியே பயிரை மேய்வது போல",
காவலர்களே திருடர்களாக மாறிடும்போது, ஆட்சிப்பொறுப்பில் இருப்பவர்களே
ஊழல், லஞ்சம் என்று மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கும்போது,
நாம் விழித்துக்கொண்டே தூங்கிக்கொண்டிருக்கிறோம்! அதாவது, நாம் நம்
முடைய அன்றாடத்தில் - வருமானத்திற்காக உத்தியோகம், தொழில், வியா
பாரம் என ஆழ்ந்திருக்கும் போது, அரசியல்வாதிகள் பாவம், அவர்கள் என்ன
செய்வார்கள்? அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் அரசியல் மட்டும் தானே!

ஒரு முறை அரசியலில் ஈடுபட்ட பிறகு, "அரசியல்வாதி" எனும் வேடத்தைத்
தரித்துக்கொண்டுவிட்ட பிறகு, அவர்களால் வேறு எந்த உத்தியோகத்தையும்,
தொழிலையும் செய்ய முடியாத, எண்ணிப்பார்க்க முடியாத நிலையில், ஒரு
வழிப்பாதையில் அவர்கள் சிக்கிக்கொள்கிறார்கள் என்பது பரிதாபகரமானதே!
ஆகவேதான், அரசியல்வாதிகள் தங்களது ஆட்சிக்காலத்திற்குள்ளேயே பல
தலைமுறைகளுக்கு வேண்டிய சொத்துக்களை சேர்த்துக்கொள்ள வேண்டிய
நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்படுகிறார்கள்! "காற்றுள்ள போதே தூற்றிக்கொள்!"
எனும் தருமத்தை மிகச் சரியாகப் பின்பற்றுபவர்கள் அரசியல்வாதிகள்தான்!

தங்களைத்தாங்களே தேர்வு செய்துகொள்ளும் அரசியல் தலைவர்கள்!
----------------------------------------------------
தேர்தலின் வழியாக வாக்குகளைச் செலுத்துவதன் மூலம் நம்முடைய பிரதி
நிதிகளை நாம் தேர்ந்தெடுக்கிறோம் என்பது ஒரு கண்-துடைப்பு விஷயமாகும்!
உண்மையில், நம்முடைய அரசியல் பிரதிநிதிகளை நாம் தேந்தெடுப்பதில்லை!
தற்போது நடைமுறையிலிருக்கும் போலி-மக்களாட்சியில், உண்மையில்,
மக்களாகிய நாம் நம்முடைய அரசியல் பிரதிநிதிகளை (தலைவர்களை)தேர்வு
செய்வதில்லை! மாறாக, அரசியல்வாதிகள் ஏற்கனவே தாங்களே தங்களை,
மக்களின் தலைவர்களாவும், பாதுகாவலர்களாகவும், தவிர்க்கவியலாதவர்க
ளாகவும், முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகவும் அறிவித்துக்கொண்டு, சிலந்தி
வலைபின்னுவது போல, தம்மைச்சுற்றி ஒரு கட்சியைக் கட்டிக்கொண்டு,
தொண்டர்படையைச் சேர்த்துக்கொண்டு நம்மிடம் வந்து வாக்கு கேட்கிறார்கள்!
இவ்வாறு வாக்கு வேட்டையாட வரும் பல கட்சியைச் சேர்ந்த தலைவர்களி
லிருந்து நாம் ஒருவரைத் தேர்வு செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறோம்! இந்த
நிர்ப்பந்தத்திற்குப் பெயர்தான் தேர்தல் என்பதாகும்! இத்தகைய நிர்ப்பந்தம்,
அதாவது, 'தேர்தல்' நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்படுவதாக வேறு
சொல்கிறார்கள்!

ஆம்,  நமக்கான அரசியல் பிரதிநிதிகளை உண்மையில்,நாம் தேர்ந்தெடுப்ப
தில்லை! அதாவது, தங்களுக்குள் கடுமையாகப் போட்டி போடுகின்ற இரண்டு
பெரிய பிராந்திய கட்சிகளில், ஏதாவதொரு கட்சியைத் தேர்வுசெய்யும்படி
நாம் நிர்ப்பந்திக்கப்படுகிறோம்! வலுவான இரு பிராந்தியக்கட்சிகளைத் தாண்டி
வேறு கட்சிகள் இருந்தாலும், அவை சிறியனவாகவும், வலுவற்றதாகவும்
இருக்கும்பட்சத்தில் அவைகளை நாம் தேர்வு செய்வதில்லை! அப்படியே,
மூன்றாவதாக வளர்ந்துவரும் ஒரு சிறுகட்சி, சில தொகுதிகளில் தேர்ந்தெடுக்
கப்பட்டாலும், அதிக தொகுதிகளை வென்ற ஆனால், பெரும்பான்மை பெறாத
ஒரு பெரிய கட்சியானது தம்முடன் அச்சிறு கட்சியை இணைத்துக்கொண்டு

ஆட்சியைப்பிடித்துவிடக்கூடும்! கட்சிகள் சிறியதோ, பெரியதோ அவற்றிற்கு
எவ்வாறேனும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவது மட்டுமே நோக்கமாகும்!

'வலுவான' கட்சி, 'பெரிய' கட்சி என்பதெல்லாம் ஒரு கட்சி எவ்வாறு தனது
பிம்பத்தை, கவர்ச்சித்திற சொல்லாட்சி (Political Rhetoric) மற்றும்
விளம்பரம் மூலமாகவும் நிறுவிக்கொள்கிறது என்பதைப் பொறுத்ததாகும்!
"மக்கள் நலன்கள்", "சமூக நீதி", "பொருளாதாரச் சமத்துவம்", "சுதந்திரம்",
"நல்லாட்சி" போன்றவை வெறும் கவர்ச்சித் திற அரசியல் சொல்லாடல்களே
தவிர வேறல்ல!

அரசியல் கட்சி என்பது ஒரு விபரீத ஜந்து ஆகும்! குறிப்பிட்ட ஒரு கட்சி
தேர்தலில் தோற்றுப்போனாலும் அக்கட்சி உயிருடன் இருப்பதாகவே கருதப்
படுகிறது! 'எதிர்க்கட்சி' என்ற அந்தஸ்த்தில் அது தன் இருப்பைத் தொடர்ந்து
தக்கவைத்துக்கொள்கிறது; அவ்வப்போது ஆளுங்கட்சியின் நடவடிக்கைகளை
விமர்சிப்பதன் வழியாக அது தனது இருப்பை நியாயப்படுத்திக்கொள்கிறது!
எவ்வாறு ஒரு கால்பந்தாட்ட அணியானது ஒரு குறிப்பிட்ட போட்டியில்
தோற்றுப்போனாலும், தொடர்ந்து அந்த அணி பயிற்சியில் ஈடுபட்டு, அடுத்த 
போட்டிக்குத் தன்னைத் தயார் செய்துகொள்கிறதோ அவ்வாறே தேர்தலில்
தோற்றுப்போன கட்சியும் தொடர்ந்து அரசியல் பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது!
இத்தகைய நடைமுறை கால்பந்து அணிகளுக்கு வேண்டுமானால் பொருத்த
மாக இருக்கலாம்; அரசியல் கட்சிகளுக்குப் பொருத்தமாக இருக்கமுடியுமா
என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும்! அதாவது, தொடர்ந்து ஒரே
கட்சியோ, அல்லது தலைவரோ மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவது
தவிர்க்கப்படவேண்டும்!

எவ்வொரு அரசியல் கட்சியும் தொடர்ந்து நீடித்து நிலைப்பதான ஒரு அமைப்
பாக, நிறுவனமாக நீடிக்க அனுமதிக்கலாகாது! மாறாக, அரசியல் கட்சி என்பது
ஒரு தற்காலிக அமைப்பாக மட்டுமே இருக்கவேண்டும்! அல்லது ஆட்சியாளர்
களைத் தேர்வுசெய்யும் வழிமுறை மாற்றப்படவேண்டும். அல்லது ஒருமுறை
ஆட்சியதிகாரத்திற்கு தேர்வு செய்யப்பட்ட ஒருவர், ஒரு தலைவர், மறுமுறை
யும் தேர்வுசெய்யப்படுவது தவிர்க்கப்படவேண்டும்! ஏனெனில்,தொடர்ந்து ஒரு
அரசியல் கட்சியோ, ஒரு தலைவரோ மீண்டும் மீண்டும் ஆட்சியதிகாரத்தில்
அமர்வதன் மூலம் அவர் மிகச் சுலபமாக தமது சொந்த நலன்களையும், தன்
குடும்ப நலன்களையும் பன்மடங்காகப் பெருக்கிக் கொள்ள வழி வகுத்திடும்!
மேலும், அத்தலைவருக்குப் பின், அவரது புதல்வர் அல்லது உறவினர் என்று
வாரிசு அரசியலுக்கு வழிவகுத்திடும். வாரிசு அரசியல் என்பது மக்களாட்சிக்கு
விரோதமானதாகும்!

ஆடுகள் நனைவது குறித்து கண்ணீர் வடிக்கும் ஓநாய்கள்!
---------------------------------------------
அரசியல் வாதிகள் என்போர் வித்தியாசமானவர்கள் மட்டுமல்ல, விபரீதமான
வர்களும் கூட! அதாவது, மனிதத் திரளிலிருந்து எவ்வாறு, எதற்காக ஒரு
சிலர் மட்டும் தன்னலம் துறந்தவராக, பொதுநலவாதியாகத் தோன்றுகிறார்?
அவர்கள் என்ன வேற்றுக்கிரகத்திலிருந்து இங்கே பூமிக்கு வந்தவர்களா? ஏன்,
அல்லது, எவ்வாறு அவர்களிடம் ரிச்சர்ட் டாக்கின்ஸ் கூறும் சுயநலம்கொண்ட
மரபணுக்கள் இல்லாமல் போனது? அல்லது இருந்தும் அவை வேலை செய்ய
வில்லையா? இல்லை! நமது கணிப்பு முற்றிலும் தவறானது, ஏனெனில், சுய
நல மரபணுக்கள் மக்களாகிய நம்மிடம் வேலைசெய்வதைவிட அரசியல்வாதி
களிடம் தான் பன்மடங்கு வேலை செய்கிறது! ஆனால், அவர்கள் அதை
மறைத்து பொதுநலவாதிகளைப் போல வேடமணிந்து பசப்புகிறார்கள்! நமது
நாட்டில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்காத அரசியல்வாதிகள்,
தலைவர்கள் மிக மிக மிகக் குறைவே!

மக்களின் நலன்களை முன்னிறுத்தி மேடையில் முழங்கும் நம் தலைவர்கள்
உண்மையில் தமது சொந்த நலன்களையே பிரதானமாக மனதில் கொண்டுள்
ளனர்! அரசியலில் ஈடுபடுபவர்களும் நம்மைப்போலவே சாதாரண சராசரி
மனிதர்களே! ஆடுகள் நனைவது குறித்து கண்ணீர் வடித்துக் கவலைப்படும்
ஓநாய்கள் போன்றவர்கள் அவர்கள்! இந்த ஓநாய்த் தந்திரத்தைத்தான் அவர்
கள் "அரசியல் ஞானம்" என்றும், "ராஜ தந்திரம்" என்றும் பசப்புகிறார்கள்!
மக்களின் விருப்பங்களையும், அவர்களது அறியாமையையும், பலவீனங்களை
யும் தெரிந்துகொண்டிருக்கும் அரசியல்வாதிகள், மக்களுடைய பிரச்சினை
களையும், உரிமைகளையும் பற்றி மேடையில் உணர்ச்சி பொங்க முழங்கு
வதன் மூலமும், தமது பேச்சாற்றல் மூலமும் மக்களைத் தங்கள் பக்கம்
ஈர்த்துக் கொண்டுவிடுகிறார்கள்! மக்கள் கூட்டமும் புகழ்ச்சியின் போதையை
வெகுவாக விரும்புவதால், "மக்களின் பாதுகாவலன்" என்று அறிவித்துக்
கொள்ளும் ஒரு மகா பொய்யனை ஆட்சியதிகாரத்தில் ஏற்றிவிடுகிறார்கள்!
மக்களின் பிரச்சினைகளையும், விருப்பங்களையும் பற்றி பேசுவதன் வழியே
அரசியல்வாதியானவன் குரலற்ற மனிதர்களின் குரலாகவும், மக்களின் நலன்
களைப் பிரதிநிதித்துவம் செய்வதாகச்சொல்லி, தான் அணிந்து கொள்ளும்
முகமூடியைக்கொண்டு முகமற்ற மக்களின் முகமாகவும், அரசியல்வாதியான
வன் தன்னை நிறுவிக்கொண்டுவிடுகிறான்!

ஆனால், தேர்தலின்போது, பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், "நான்", "நீ"
என்று மக்களுக்குச் சேவைசெய்வதற்காகப் போட்டிபோட்டுக்கொண்டு களத்தில்
இறங்குவதைப் பார்க்கும்போது அப்படியே நமக்குப் புல்லரித்துப்போகிறது!
ஆனால், அவர்கள் எவரும் மக்களுக்குச் சேவை செய்வதற்காகப் போட்டி
போடுவதில்லை! மாறாக, ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றவே படாத பாடுபடு
கிறார்கள்!

அரசியல்வாதிகள் தனியொரு இனம் அல்ல!
---------------------------------
அரசியல் என்பது ஒரு தொழிலோ, வியாபாரமோ, ... அல்ல! குறிப்பாக, அது
பரம்பரை பரம்பரையாகத் தொடரும் குடும்பத் தொழிலும் அல்ல! இவ்வாறு
அமையுமானால், அது மக்களாட்சிக்கு நேர் எதிரானது! ஆதிக் காலத்து அரசர்
களாயினும், இன்றைய அரசியல்வாதிகளாயினும், அவர்கள் ஒரு தனி இனம்
அல்ல! அவர்களும் சாதாரண மக்கள் தான், சராசரி மனிதர்கள் தான்! இந்த
உண்மை அன்றைய புராதன காலத்து மக்களுக்குப் புரிந்திருக்காது. அன்றைய
நடப்புகள் யாவும் விபத்து போன்ற சூழ்நிலைகளில் நிகழ்ந்தேறின. அன்று
அரசனை தெய்வமாகக் கண்டனர்! அந்த ஆண்டான்-அடிமை காலங்கள் முற்றி
லும் மறைந்து போயின! இன்று நாம் நாகரிகத்திலும், பண்பாட்டிலும் வளர்ச்சி
யடைந்துள்ளோம். இன்று நாம் ஜனநாயக அமைப்பினுள் இருந்து கொண்டு
பேசிக்கொண்டும், எழுதிக்கொண்டும்  இருக்கிறோம். இன்றும்கூட நாம் விழிப்
புடன் இல்லாவிட்டால் அரசியல்வாதிகள் தங்களைத் தனியொரு இனமாக,
அதிகாரத்துவ இனமாக, ஆளப்பிறந்தவர்களாக நிலைப்படுத்திக்கொண்டு
நம்மை மீண்டும் மன்னராட்சிக் காலத்திற்கு கொண்டு போய்விடலாம். நாம்
முக்கியமாகப் புரிந்து கொள்ளவேண்டியது யாதெனில், அரசியல்வாதிகள் தனி
யொரு இனமல்ல; அவர்களும் நம்மைப்போலவே சராசரி ஆசைகளையும்,
விருப்பு வெறுப்புகளையும், உணர்ச்சிகளையும்கொண்ட சாதாரண மனிதர்களே!

நாம் நன்கறிவோம் நமது அண்டைவீட்டுக்காரர் எவ்வாறு ஒரு அரசியல்வாதி
யாக உருவானார் என்பதை! நேற்றுவரை அவர் நம்மில் ஒருவராக, சாதாரண
மனிதராக, முகமற்ற ஒருவராக இருந்தார்! இன்று அவர் செய்தித்தாள்களில்
இடம் பெறுகிறார், தொலைக்காட்சியில் தோன்றிப் பேசுகிறார்! நேற்றுவரை
அவர் குரலற்ற மனிதராக இருந்தார், இன்று அவர் மக்களவையில் குரல்
கொடுக்கிறார், இன்று அவர் மக்களின் பிரதிநிதி! நேற்றுவரை அவர் மக்களில்
ஒருவர், நம்மில் ஒருவர், நமது அண்டைவீட்டுக்காரர், நேற்றுவரை யாரோ
ஒருவராக இருந்த அவர் இன்று தவிர்க்கவியலாத ஒருவராக, அரசியல்வாதி
யாக, அரசியல் தலவராக, மந்திரியாக மாறியுள்ளார்! இனி அவர் தம்மை எப்
போதும் தவிர்க்கவியலாத ஒருவராக தம்மை நிலை நிறுத்திக்கொள்வார்!
ஆனால், மக்களில் - நம்மில் - தவிர்க்கவியலாதவர் என்றும், முக்கியமானவர்
என்றும், எவரேனும் இருக்கிறார்களா? முக்கியத்துவம் வாய்ந்தவர், முக்கியத்
துவம் அற்றவர் என்று மக்களை வகைப்பிரிக்க இயலுமா?

ஆனால், மக்கள் எனும் செம்மறியாட்டுக் கூட்டத்திலிருந்து பிரிந்து நமது
அண்டைவீட்டுக்காரர் ஏன், என்ன காரணத்துக்காக அரசியல்வாதியாக, ஒரு
'கறுப்பாடாக' மாறுகிறார்? ஆம், அரசியல் என்பது முதலீடு தேவையில்லாத
ஒரு வியாபாரம்; அரசியல் என்பது அதிகார ஏணி; வாய்ப்புகளின் தலைவாசல்!
நமது அண்டைவீட்டுக்காரர் எவ்வளவு புத்திசாலி என்பது நமக்குத்தெரியும்!
நம்மைப்போலவே, அவரும் ஒரு பேராசைக்காரர், பொறாமைக்காரர், மற்றும்
ஒரு பகட்டு விரும்பி! ஆனால், இன்று அவர் ஒரு முதலமைச்சர், அரசியல்
தலைவர்! இந்த நபர் ஒரு போதும் நன்னெறியாளனாக மாற முடியாது! பிறகு
எவ்வாறு அவருக்குக் கீழேயுள்ள அமைச்சர்களும், அலுவலர்களும் நன்னெறி
யாளர்களாக விளங்க முடியும்? பிறகு எவ்வாறு தொழிலாளர்களும், சாதாரண
மனிதர்களும், நகரத்தாரும், கிராமத்தாரும் நன்னெறியாளர்களாக இருக்க முடி
யும்? அரசியல்வாதிகளின் ஒழுக்கக்கேடான அம்சங்களை, ஊழல்களை, வரு
மானத்திற்கு மேலாக சேர்த்துக்கொண்ட சொத்துக்குவிப்பு வழக்குகளை நாடே
அறியும்!

ஆனால், நாம் பொழுது போகாதபோது, அல்லது பொழுதைப் போக்குவதற்காக
சில வேளைகளில் அரசியல் பேசுகிறோம்! அப்போது நாம் கூறுகிறோம், "அந்த
அதிகார நிலைகளை நாம் அடையும் போது ஊழல் நிறைந்த அரசியல்வாதி
களைப் போலத்தான் நாமும் இருப்போம். இப்பொழுது நாமிருக்கும் சாதாரண
நிலையில் நியாயம், நேர்மை, ஒழுக்கம், தருமம் பற்றியெல்லாம் பேசிக்
கொண்டிருக்கலாம்!" என்கிறோம். இக்கூற்றில் உண்மையில்லாமல் இல்லை!
ஆம், சுய சிந்தனையும், பொறுப்புமற்ற இக்கூற்றினை கூறிடும் எவருமே ஒரு
அரசியல்வாதியாக ஆவதற்கான முழுத்தகுதியையும் உடையவரே. ஜனநாயக
அமைப்பில் யார் வேண்டுமானாலும் தலைவராகலாம், மந்திரியாகலாம் என்ப
தால் அல்ல. உண்மையில் எல்லோருமே அரசியல்வாதிகளாகிவிடுவதில்லை!
ஏனெனில், மக்கள் அனைவருமே ஒழுக்கக் கேடானவர்களோ, தீயவர்களோ
அல்ல. சில சந்தர்ப்பங்களில் சூழ்நிலைகளில் நல்லவர்களும் அரசியலில்
ஈடுபட்டுவிடுவதுண்டு!

ஆக, விதிவிலக்கான ஒரு சில 'நல்ல' அரசியல் தலைவர்களையும், அரசியல்
வாதிகளையும் தவிர, ஏனையோர் பொதுவான மக்கள் கூட்டத்திலிருந்து
பிரிந்து செல்லும்,  பொருளாசை கொண்ட, பேராசை மிக்க, சுயநலம் மிகுந்த,
பகட்டு விரும்பிகளான கறுப்பாடுகளே அரசியலில் ஈடுபடுகின்றன! இதன்
அர்த்தம் அரசியல்வாதிகள் அனைவரும் அயோக்கியர்கள் என்பதல்ல! ஏனெ
னில், நாம் எந்த மண்ணில், நிலத்தில் விளைகிறோமோ அதே நிலத்திலிருந்து
தான் அரசியல்வாதிகளும், திருடர்களும், பொய்யர்களும், புரட்டர்களும், நல்ல
வர்களும், ஞானிகளும், வள்ளல்களும் விளைகிறார்கள்! அதாவது, மக்கள் எவ்
வாறோ அவ்வாறே மன்னன், அல்லது தலைவன் அமைகிறான்! மக்களின்
பொதுவான பண்பு நிலைகளில் எப்பண்பு, விழைவு, நாட்டம் மேலோங்கி
நிலவுகிறதோ, அதற்கேற்பவே அரசியலும், ஆட்சியும் அமைகின்றன! நாம் நம்
அண்டைவீட்டுக்காரரை மறந்து விட வேண்டாம்! அவரது பொறாமைக்குணத்
தையும், பேராசையையும், அவரது மனக்கோணல்களையும், தந்திர புத்தியை
யும் மறந்து விட வேண்டாம்! மேலும், இக்குணாதிசயங்கள் எந்தெந்த விகிதங்
களில் நம்மிடமும் உள்ளன என்பதையும் நாம் நினைவில் கொள்வோமாக!

உண்மையான மக்களாட்சியை நோக்கி!
-----------------------------
தற்போது நம் நாட்டில் நடைமுறையிலிருக்கும் ஆட்சி முறை எத்தகையது?
நாம் நினைத்துக்கொண்டிருப்பது போல தற்போதைய ஆட்சிமுறை உண்மை
யான மக்களாட்சி முறை தானா? ஆனால், மக்களாகிய நாம் எவ்வகையிலும்
ஆட்சியில் அங்கம் வகிப்பதில்லை! நம்முடைய பிரதிநிதிகளாக, ஆட்சியாளர்
களைத் தேர்ந்தெடுத்து ஆட்சியதிகாரத்தை அவர்கள் கைகளில் ஒப்படைப்பது
டன் நம்முடைய பங்கும், பணியும் முடிந்து விடுகின்றன! ஆட்சியாளர்களைத்
தேர்ந்தெடுப்பது, தேர்தலின்போது வாக்களிப்பது என்பது மக்களுடைய "கடமை"
என்று புகழ்ந்து சொல்லப்படுகிறது! ஆனால், வாக்களிப்பது என்பது வெறும்
கடமை யல்ல! மாறாக, மக்களாகிய நாம் நம்முடைய வாழ்க்கையைச் செயல்
படுத்துவதற்கான பொறுப்பையும், அதிகாரத்தையும் வாக்குச்சீட்டுகளின் வாயி
லாக அரசியல்வாதிகளின் கைகளில் வழங்குகிறோம்!  ஒவ்வொரு தேர்தலின்
போதும், இம்முறை நம் வாழ்வு வளம்பெறும் என நாம் தேர்ந்தெடுக்கும்
அரசியல் தலைவரை மலைபோல நம்புகிறோம்!  ஆனால், நம் அரசியல்வாதி
களும், தலைவர்களும் ஆட்சியதிகாரத்தைப் பெறுவதற்காக, நம் வீடுகளைத்
தேடி வந்து கெஞ்சிக் கும்பிட்டுக் கூத்தாடி வாக்குகளைச் சேகரிக்கின்றனர்!
ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவுடன் அவர்கள் நாம் அணுகவே முடியாத உயரத்
திற்குச் சென்று விடுகின்றனர்! இதுதான் பிரதிநிதித்துவ ஜனநாயகம் என்பது!

ஆனால், வேறு ஒரு சிறந்த ஜனநாயக ஆட்சிமுறையை நாம் கண்டுபிடிக்கும்
வரை, பிரதிநிதித்துவ ஜனநாயக முறையை விட்டால் வேறு வழியில்லை!
இப்போதைக்கு நம்முன்னேயுள்ள பிரதான சவால் என்னவென்றால். நாம்
தேர்ந்தெடுக்கும் நம்முடைய பிரதிநிதிகளை எவ்வாறு நாம் ஆள்வது,அதாவது,
எவ்வாறு அவர்களை உண்மையாக மக்களுக்குச் சேவை புரியுமாறு செயல்பட
வைப்பது என்பதுதான்! இது குறித்தும், இன்னும் ஜனநாயகத்திற்கு பாதகமாக
விளங்கும் பல்வேறு காரணிகளை இனம் கண்டறிந்து எவ்வாறு ஜனநாயகத்
தைக் காப்பாற்றுவது என்பது குறித்தெல்லாம் ஒவ்வொன்றாக அடுத்தடுத்த
கட்டுரைகளில் காண்போம்!

மா.கணேசன்/ நெய்வேலி/ 15-11-2017
----------------------------------------------------------------------------

Wednesday, 15 November 2017

எனது அரசியல் பிரவேசம்!




   "எது நம்மை ஆள வேண்டும், வழி நடத்திச்செல்லவேண்டும்?" என்பதே
    மிகவும் முக்கியமான அடிப்படையான அரசியல் கேள்வியாகும்! இக்
    கேள்வியுடன்தான் அசலான அரசியல் பார்வை அல்லது பிரக்ஞை
    தொடங்குகிறது! இக்கேள்வியின் முக்கியத்துவத்தை நாம் ஆழமாக
    உணர்வது அவசியமாகும்! ஏனெனில், இக்கேள்வியை இதற்கு முன்னர்
    நாம் கேட்டிருக்கவில்லை! கேட்டிருப்பின், அக்கேள்விக்குரிய பதிலை
    கண்டடைந்திருப்பின், நாம் வேறு வகையான அரசாங்க அமைப்பை,
    அரசியல் அமைப்பை உருவாக்கியிருப்போம்! தற்போதுள்ளது போன்ற
    ஒரு போலியான சனநாயக அமைப்பினுள் அடைபட்டிராமல், உண்மை
    யான சனநாயக அமைப்பை, மக்களாட்சியை நாம் ஏற்படுத்தியிருப்போம்!
               - மா.கணேசன்/ "அர்த்தமற்ற அரசியல்"/ சாத்தியமற்ற புரட்சி!

இந்த மேற்கோள், இன்னும் பிரசுரிக்கப்படாத "சாத்தியமற்ற புரட்சி" எனும்
நூலின் "அர்த்தமற்ற அரசியல்" என்ற தலைப்பிலமைந்த 5-வது அத்தியாயத்தி
லிருந்து எடுக்கப்பட்டது.
                          •••


"என்ன, நல்லாத்தானே இருந்தார் கணேசன்! திடீரென்று, அரசியல் பிரவேசம்,
அது இது என்று பேச ஆரம்பித்துவிட்டாரே!" என்று எனது நண்பர்கள், வாசகர்
கள் அதிர்ச்சியடைய வேண்டாம்! என்னைப் போன்ற ஒரு சாதாரண தனி நபர்,
"அரசியலில் குதிக்கப்போகிறேன், பேர்வழி!" என்று அறிவித்தால் கோமாளித்
தனமாகத் தான் அது இருக்கும். ஆனால், இன்று, சினிமா-பிரபலங்கள் சிலர்
தங்களது அரசியல் பிரவேசம் குறித்து தினமும் அறிவிப்புகளை வெளியிட்டுக்
கொண்டிருக்கின்றனர்! அதாவது, இத்தகைய அறிவிப்புகள் பொது மக்களாகிய
நம்மைக் கோமாளிகளாக ஆக்கிவிடக்கூடாதே என்பதற்காகத் தான் இப்பதிவு!

உண்மையில், யார், யாரெல்லாம் அரசியலுக்கு வரலாம், வரக்கூடாது என்று
வரைமுறைகள் ஏதும் இருக்கிறதா என்றால், உடனே, "இது சனநாயக நாடு,
எவர் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்!"  என்று சொல்வர். ஆனால்,
சனநாயக நாட்டில் எவர் வேண்டுமானாலும் அரசியல் பேசலாம், ஏதாவது
ஒரு கட்சியில் ஒரு தொண்டனாக ஒரு ஓரத்தில் ஈடுபடலாமே தவிர,
உண்மையிலேயே மக்களின் மீது அக்கறைகொண்ட, அரசியல் ஞானம் உள்ள
ஒருவர் ஒரு போதும் அரசியலில் தலையெடுக்க இயலாது என்பது தான்
எதார்த்தம்! அதே நேரத்தில், உண்மையிலேயே மக்களின் மீது அக்கறை
கொண்டவர், உண்மையிலேயே அரசியல் ஞானம் உள்ளவர் நாட்டில் சிலரா
வது இருக்கக்கூடும்! ஆனால், அவர்கள் அரசியலில் ஈடுபட முடியாத அராஜ
கச் சூழல் நாட்டில் நிலவுகிறது! 

நம்மில் பலருக்கு, அரசியல் என்றாலே, முதலாவது நினைவிற்கு வருவது
"அதிகாரம்" என்பதும், இரண்டாவது, "கட்சி" என்பதும் தான்! உண்மையில்,
"அரசியல் கட்சி" என்பது ஆட்சி-அதிகாரத்தை எட்டுவதற்கான ஒரு ஏணியே
தவிர வேறு எதுவுமல்ல! ஏனெனில், அதிகார-நாற்காலியை அடைய விரும்பும்
ஒருவர் தன்னந்தனியாக நேரடியாக அடைந்திடமுடியாது! அதற்காகத் தான்
தொண்டர்-படைகளைக் கொண்ட, 'கட்சி' எனும் அமைப்பும், கொடியும், சின்ன
மும்; "தேர்தல்" எனும் சடங்கும், பிற இத்யாதி விஷயங்களும் உருவாக்கப்
பட்டுள்ளன!

அரசியலில் ஈடுபடுவது என்றால், எல்லோருமே அரசியல்வாதிகளாகவோ,
தலைவர்களாகவோ ஆவது என்று அர்த்தமல்ல! பொதுவாக அரசியலில் இரு
வித நிலைகள் இருக்கின்றன! ஒன்று, ஏதாவதொரு கட்சியில் உறுப்பினராக,
தொண்டனாக மட்டுமே இருப்பது! இரண்டாவது, ஏதாவதொரு கட்சியின்
தலைவராக ஆவது! அடுத்து, ஒருவர் வெறும் உறுப்பினராக அரசியலில்
ஈடுபட இருவழிகள் உள்ளன!  ஒன்று ஏதாவதொரு கட்சியின் வழியாக, அதா
வது, கட்சியில் ஒரு உறுப்பினராக, அல்லது, தொண்டனாக இணைவதன்
வழியாக! இரண்டாவது, எவ்வொரு கட்சியிலும் இணையாமல் அரசியல்
விழிப்புணர்வுடன் தனித்துச் செயல்படுவது! பொதுவாக, இந்த இரண்டாவது
வகையினர் எந்தக்கட்சியிலும் உறுப்பினராக இல்லாமலிருப்பர், அதேநேரத்தில்,
முறையான அரசியல்-விழிப்புணர்வும் இல்லாமல் இருப்பர்; அதாவது, இவர்
களின் அரசியல் ஈடுபாடும், கடமையும் தேர்தலின் போது, வாக்களிப்பதுடன்
முடிந்து போகும்!

அடுத்து, அரசியல்வாதியாக, அல்லது தலைவராக ஆக விரும்புகிறவர்களது
அரசியல்! இவர்களும் ஏதாவதொரு கட்சியில் இணைந்து படிப்படியாக
தலைவர் பதவிக்கு உயர வேண்டும்; இதற்கு அதிக காலம் ஆகும்! ஆனால்,
குறைவான காலத்தில், உடனடியாகத் தலைவராவதற்கான ஒரு வழி, தாமே
ஒரு புதிய கட்சியை ஆரம்பிப்பதாகும்! அதாவது, இன்றைய குழப்பமான
அரசியல் சூழலானது, உடனடித் தலைவர்களுக்கும், கட்சிகளுக்கும் மிகவும்
சாதகமானது என்பதாகக் கருதப்படுகிறது! அதிலும், ஏதாவதொரு துறையில்
பிரபலமாக விளங்கும் நபர்களுக்கு இன்னும் சாதகமானது எனலாம்! குறிப்பாக,
அதிக எண்ணிக்கையில் ரசிகர்களைக்கொண்ட சினிமா நட்சத்திரங்கள் புதிதாக
கட்சி தொடங்கினால், ரசிகர்கள் படையை தொண்டர் படையாக மாற்றிக்
கொள்ளலாம்!

ஒருவர் அரசியல் தலைவராக ஆவதற்கு சிறப்புத்தகுதிகள் எதுவும் தேவை
யில்லை! ஒருவர் பிரபலமாக இருத்தல் வேண்டும், பெரிய தொண்டர்-படை
வேண்டும், பணபலம் வேண்டும். ஏற்கனவே ஆளுகின்ற அரசியல் கட்சியின்
நடவடிக்கைகளில் உள்ள குற்றம் குறைகளை சுட்டிக்காட்டும், விமர்சிக்கும்
'திறமை' வேண்டும்! முக்கியமாக, மக்கள் பிரச்சினைகளைத் துருவித்தேடிக்
கண்டுபிடித்து மக்களைக் கவரும் வண்ணம் முழங்க வேண்டும்! பொதுவாக,
எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும்  தங்களது கட்சிக்கு தனிச்சிறப்பான
கொள்கைகள், கோட்பாடுகள் இருப்பதாகச் சொல்வதுண்டு! ஆனால், மக்களின்
மிகவும் அடிப்படையான தேவைகளைப் பூர்த்தி செய்வதையும், வாழ்வாதாரங்
களைப் பெருக்குவதையும் விட வேறு கொள்கைகோட்பாடுகள் என்ன இருக்க
முடியும்? பன்னெடுங்காலமாக நாட்டில் நிலவும் வறுமை, வேலையில்லாத்
திண்டாட்டம், மோசமான வாழ் நிலைமைகள், சமூக ஏற்றத்தாழ்வுகள் ஆகிய
வையே இவர்களது கொள்கை கோட்பாடுகள் எனும் மோசடியை அம்பலப்
படுத்தும் சாட்சியங்கள் அல்லவா! ஆக, கட்சிகளின் கொள்கை கோட்பாடுகள்
என்பவை அர்த்தமற்ற வெற்று முழக்கங்களே என்பதை மக்கள் இனியாவது
புரிந்துகொள்ளவேண்டும்!

அரசியல் என்பது நெருப்பைக் கையாள்வது போன்று, கவனத்துடன் மேற்
கொள்ளப்பட வேண்டியதொரு விஷயமாகும்! 'அரசியல்' என்றாலே 'அதிகாரம்'
என்பதைக் குறிக்கும் ஒரு சொல்தான் என்பதை நாம் மறுக்கமுடியாதுதான்!
ஆனால், அதிகாரம் என்பது "எதற்கான அதிகாரம்?", "யாருக்கான அதிகாரம்?"
என்பதையெல்லாம் இனியும் நாம் அறியாமல் இருப்பது அறிவீனமாகும்!
நீங்களோ, அல்லது உங்கள் அண்டைவீட்டுக்காரரோ ஒரு அரசியல் தலைவ
ராக ஆகலாம்! முதலமைச்சராக ஆட்சியதிகாரம் உங்களுக்கு வழங்கப்படலாம்!
ஆனால், அந்த அதிகாரத்தை உங்களுக்கு வழங்குவது யார்? மக்கள்தானே!
மக்கள் எவ்வளவு பரிதாபமானவர்கள் பாருங்கள்! அதாவது, ஆட்சியதிகாரத்தை
ஒரு அரசியல்தலைவருக்கு வழங்கும்வரை மக்களுக்கு இருக்கும் அதிகாரம்,
வழங்கியவுடன் எங்கோ காணாமல் போய்விடுகிறது! இதுதான் ஜனநாயகத்தின்
பெரும் சாபக்கேடு ஆகும்! இந்நிலை தலை நேராக மாற வேண்டும்; அப்போது
தான் மக்களாட்சி என்பது உண்மையில் மக்களாட்சியாக விளங்க முடியும்!
ஏனெனில், அடுப்பில் நெருப்பைப் பற்ற வைத்துவிட்டு, பிறகு அதைக் கட்டுப்
படுத்தமுடியாவிட்டால், அதனால் நன்மைகளைவிட தீமைகளே விளையும்!

ஆட்சியதிகாரம், (ஆட்சி+அதிகாரம்) என்பது, ஆளுதல் என்பதையும், நிர்வாகம்,
செயல் பொறுப்பு, மற்றும், மேலாண்மை என்பவற்றையும் குறிக்கும் சொற்
றொடர் ஆகும்! ஆட்சியதிகாரத்தைப் பெற்ற ஒரு கட்சியின் தலைவர் எதை
ஆளுவார், மேலாண்மை செய்வார்? அவரது அதிகாரத்தின் எல்லை எது?
முதலில், ஆட்சியதிகாரத்தைப் பெற்று முதலமைச்சரான தலைவருக்கு என்ன
ஆளுமை உள்ளது? தன்னை முறையாக ஆளத்தெரிந்த ஒருவர் தான்
"ஆளுமை" கொண்டவர் ஆவார்! அவரால் தான் பிறரை ஆளமுடியும்! ஆனால்,
நாம் தேர்ந்தெடுத்த தலைவர் 'ஆளுமை" உள்ளவரா என்பது கேள்விக்குறியே!

அடுத்து, ஆட்சியதிகாரம் என்பது,  நிர்வாகம், மற்றும் செயல் பொறுப்பைக்
குறிக்கிறது! ஆனால், நம் தலைவர் தனது சொந்த குடும்ப நலன்களையும்,
பொருளாதாரத்தையும் மட்டுமே நிர்வகிப்பவராக இருக்கிறார்! அவருடைய
செயல் பொறுப்பு என்பது, பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவிப்பதுட
னும், அடிக்கல் நாட்டுவதுடனும் முடிந்து விடுகிறது! தேர்தல்நேர வாக்குறுதி
கள் யாவும் காற்றுடன் கலந்து கரைந்து போகின்றன! தங்களது ஆட்சிக்கு
நெருக்கடி நேரும்போது, அல்லது அடுத்த தேர்தல் நெருங்கும் போது ஆளும்
கட்சியினர், நாங்கள் அங்கே ஒரு பாலம் கட்டினோம், இங்கே சாலைகள்
போட்டோம் என்று சிறுபிள்ளைத்தனமாக, சாதனைப்பட்டியலை வாசித்து
தங்களைத்தாங்களே பாராட்டிக் கொள்கின்றனர்! எதிர்க்கட்சியோ ஆளும் கட்சி
யின் குறைபாடுகளை விமர்சித்து, தாராளமாக வாக்குறுதிகளை வழங்கும்
தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தேர்தல் களத்தில் இறங்கத் தன்னைத்
தாயார் செய்துகொள்கின்றது!

"எது, அல்லது, யார் நம்மை ஆட்சி செய்யவேண்டும், வழிநடத்திச்செல்ல
வேண்டும்?" என்ற கேள்வி அதிமுக்கியமானது என்று ஆரம்பத்திலேயே குறிப்
பிட்டோம்! நிச்சயமாக மனிதர்களே மனிதர்களை ஆட்சி செய்ய முடியாது.
மனிதனை உருவாக்கிய அல்லது, மனிதனை விஞ்சியதொரு சக்தி மட்டுமே
மனிதர்களை ஆட்சி செய்யவும், வழி நடத்திடவும் வேண்டும்! நிச்சயமாக,
எவ்வொரு அரசாங்கமோ, அரசியல் அமைப்போ, அல்லது சமூக அமைப்போ,
சமூக நிறுவனமோ எதுவும் மனிதர்களை உருவாக்கிடவில்லை! மாறாக,
இவை யாவும் மனிதர்கள் உருவாக்கிய கருவிகளைப் போன்றவையே!
உண்மையில், ஆளுதல், ஆட்சி செய்தல் போன்ற சொற்கள் அருவருக்கத்தக்க
வையாகும்! மனிதர்கள் சுய-உணர்வற்ற விலங்குகள் அல்ல, ஆட்சி செய்யப்
படுவதற்கும், மேய்க்கப்படுவதற்கும்! ஆனால், மனிதர்கள் முதலில் உண்மை
யில் மனிதர்களாக, அதாவது, உள்ளீடு பெற்றவர்களாக ஆகிடவேண்டும்! ஆம்,
வாழ்க்கையை ஒவ்வொருவரும் நேரடியாக வாழ்ந்துபெறும் அறிவும், புரிதலும்
தான் அந்த உள்ளீடு ஆகும்!

ஆம், மனிதர்கள் சிற்றுணர்வு, மற்றும் சிற்றறிவின் சொந்தக்காரகளாக இருப்ப
தால், உயர்-அறிவு, அல்லது உயர்-உணர்வு தான் மனிதர்களை ஆளவும் வழி-
நடத்தவும் முடியும்! அதாவது, வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் வழிமுறை
யில் மனிதர்கள் தங்களது அறிவையும், உணர்வையும் பெருக்கிக் கொள்ள
வேண்டும்!

மேலும், மனிதனை உருவாக்கிய சக்தி, அல்லது, மனிதனை விஞ்சிய சக்தி
எங்கிருக்கிறது? அது எத்தகையது?  மனிதனை உருவாக்கிய சக்தி, அல்லது,
மனிதனை விஞ்சிய சக்தி என்றதும், அது "கடவுள்" என்பதைக் குறிப்பதாக
நீங்கள் எண்ணலாம்! அதில் தவறில்லை; ஆனால், அக்கடவுளை ஒவ்வொரு
வரும், வாழ்க்கையை உணர்வு கொண்டு வாழ்வதன் வழியே நேரடியான
உணர்வார்ந்த அனுபவத்தில் கண்டடைந்தாக வேண்டும்! அதாவது, மனிதனும்,
வாழ்க்கையும் சந்திக்கும் உச்சப் புள்ளியே அக்கடவுள்!

அதாவது, "வாழ்தல்" என்பது மனிதத் தரத்திற்குரியதாக மேற்கொள்ளப்பட
வேண்டும்! வெறுமனே அடிப்படைத்தேவைகளை பூர்த்தி செய்வதையே பொது
வாக நாம் அனைவரும் வாழ்க்கை என வாழ்ந்து வருகிறோம்! இத்தேவை
களையே அலங்காரமாகவும், ஆடம்பரமாகவும் பூர்த்தி செய்துகொள்வதையே
"உயர்-வாழ்க்கைத்தரம்" எனவும், உயரிய மதிப்பீடு, உயரிய வாழ்க்கை, மற்றும்
வாழ்வின் இலக்கு எனவும் கொண்டாடுகிறோம்! இவற்றைப் பெறுவதற்கான
வழிவகைகளை அடைவதிலேயே நம் வாழ்க்கை முழுவதும் செலவிடப்பட்டு
விடுகிறது!

நாம் அன்றாடம், அந்தந்த வேளைக்கு வயிற்றுக்கு உணவிடுகிறோம் என்பது,
ஒரு ஊர்திக்கு எரிபொருள் நிரப்புவதைப் போன்றதேயாகும்; அது அவசியமும்
கூட; ஆகவேதான் உணவை நாம் அடிப்படைத்தேவைகளில் மிகவும் அடிப்
படையானது எனக் காண்கிறோம்! ஆனால், எரிபொருள் நிரப்பப்பட்ட ஒரு
ஊர்தியை நாம் பலவகைகளில், பலவிதமான அலுவல்களைச் செய்வதற்காகப்
பயன்படுத்துகிறோம்; அதாவது, ஊர்தியை நாம் நம் பணியிடத்திற்குச் செல்ல
வும், கடைத்தெருக்களுக்குச் சென்று பலவிதப்பொருட்களை வாங்குவதற்காக
வும், இவ்வாறு பலவகைகளில் பயன்படுத்துகிறோம்! ஒரு ஊர்தியைப்பொறுத்
தவரை, அவ்வப்போது எரிபொருள் நிரப்புவதற்காக அந்த ஊர்தியை நாம்
இயக்குவதில்லை! ஆனால், அவ்வப்போது, "உணவு" எனும் எரிபொருளை
நிரப்புவதற்காக மட்டுமே நாம் எண்ணற்ற வேலைகளை, அலுவல்களை,
காரியங்களைச் செய்கிறோம்! இது மிகவும் குறுகிய ஒரு விபரீதச் சுற்றாக,
இருக்கிறது, அதாவது, மனிதத்தரத்திற்குக் கீழாக இருக்கிறது என்பது எவ்வாறு
நமது அறிவுக்கு எட்டாமல் போனது?

ஆம், உணவில்லாமல் நாம் உயிர்-பிழைத்திருக்க முடியாது என்பது உண்மை
யே! ஆனால், நாம் (தொடர்ந்து) உயிர்-பிழைத்திருப்பதே உண்பதற்காகத்தான்
எனும்பட்சத்தில், நம் வாழ்வின் அர்த்தம், உண்மை, குறிக்கோள், இலக்குதான்
என்ன? இத்தகைய நம்வாழ்க்கையில், அரசியல் எவ்விடத்தில் பொருந்துகிறது
என்பதை நாம் அறிந்தாக வேண்டுமில்லையா?

வெறும் உயிர்-பிழைத்தலையே வாழ்வின் இலக்காகக்கொண்ட நம்முடைய 
குறுகிய மதிப்பீடுகள் எதுவும் அசலான வாழ்க்கை மதிப்புகளுடன் எவ்வகை
யிலும் தொடர்பற்றதாக, வெறுமனே பொருள்வகைப்பட்டவையாகவே
உள்ளதால் தான், "பொருளாதாரம்" என்பது நம் வாழ்வில் பிரதான இடத்தைப்
பெற்றுள்ளது! பொருளாதாரம் என்று வரும்போது, பங்கீட்டுப் பிரச்சினையும்,
பொருளாதார சமத்துவமின்மை என்பதும் வருகிறது! இவற்றை அடியொற்றி
அரசியல் உள்ளே வருகிறது! அதாவது, அரசியல்ரீதியான சமத்துவத்தின்
வழியாக, அதாவது, பெரும்பான்மையினரின் சட்டத்தின் மூலமாக அரசியல்
பலத்தைப் பெறுவதன் மூலமாக, பொருளாதார சமத்துவத்தை அடையலாம்
என்கிற சமன்பாடு, ஏழைகளான பெரும்பான்மை மக்களின் உள்ளார்ந்த விழை
வின் வெளிப்பாடாக, அதாவது, ஜனநாயகம் அல்லது, மக்களாட்சி எனும்
ஆட்சிமுறையைக் கொண்டுவந்தது! ஆனால், இச்சமன்பாடு இன்றுவரையிலும்
மக்களாட்சி முறையிலும் பெரிதாகப் பலனளிக்கவில்லை!

பூனைக்குட்டிகளுக்கு அப்பத்தை சமமாகப் பங்கிட்டுத் தருவதாகச் சொல்லி
முன்வந்த குரங்கு அப்பத்தை முழுவதுமாகத் தின்றுவிட, ஏமாந்துபோன
பூனைக்குட்டிகளின் கதையைப் போலாகிவிட்டது மக்களாட்சியின் பரிதாபமான
உறுப்பினர்களான நம் கதையும்! நம்முடைய நலன்களைப் பிரதிநிதித்துவம்
செய்வதற்காக நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் ஆட்சியதிகாரத்
தில் அமர்ந்ததும் அவர்கள் கோடி கோடியாகச் சொத்துக்களைச்சேர்த்து தங்கள்
சொந்த நலன்களை பொறுப்பாகக் கவனித்துக்கொள்வதில் இறங்கிவிடுகிறார்
கள்! இதற்காகத்தான் பலர் அரசியலில் ஈடுபடுகிறார்கள், அதாவது, அதிகார-
நிலைகளை எட்டிப்பிடிப்பதற்காகவும், அவற்றைக்கொண்டு தங்களுடைய
சொந்த நலன்களை சாதித்துக்கொள்வதற்காகவும்! இவைதான் அவர்களுடைய
உள்ளார்ந்த அரசியல் கொள்கையும், மறைவான நோக்கமும் ஆகும்!

ஆக, வெறும் உயிர்-பிழைத்தலையே வாழ்க்கையாகக்கொண்டிருக்கும் வரை,
பொருளாதாரம் (உடமைகள், சொத்து-சுகம்) என்பது பிரதானமாக இருக்கும்;
ஆகவே, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் நீடிக்கும்! குரங்குப் பஞ்சாயத்து
செய்யும் அரசியல்வாதிகளும், 'மக்களாட்சி' என்ற பெயரில் மக்களை ஏய்த்துச் 
சுரண்டி அரசியல் செய்து கொண்டிருப்பர்!

உண்மையில், "பொருளாதாரம்" என்பதற்கு மனித வாழ்வில் இடமுள்ளது;
ஆனால், அது நம் வாழ்க்கை முழுவதையும் ஆக்கிரமிக்கும் அளவிற்கு
முக்கியத்துவம் கொண்டதல்ல! இதன் உப-தேற்றம் என்னவென்றால், பொரு
ளாதாரத்தைப்போலவே, அரசியலும்  நம் வாழ்க்கை முழுவதையும் ஆக்கிர
மிக்கும் அளவிற்கு முக்கியத்துவம் கொண்டதல்ல! உண்மையில், வாழ்க்கை
யின் அர்த்தம், உண்மை, குறிக்கோள், மற்றும், இலக்கு பற்றியெல்லாம் ஆழ
மாகச் சிந்திக்கும் நேரத்தில் மட்டும் தான் நாம் உண்மையில் வாழ்கிறோம்!
மற்ற நேரங்களில், நாம் எலிகளைப்போல உணவுத்தேடலிலும், பிறதேவை
களைப் பூர்த்தி செய்யும் விவகாரங்களிலும், அலுவல்களிலும் தான் ஈடுபட்
டிருக்கிறோம்! "பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை!" என்று சொல்லப்
பட்டதன் அர்த்தம், பொருள் இல்லாமல் உயிர்-வாழ்க்கை சாத்தியமில்லை
என்பதே! அதேபோல, "அருள் இல்லாமல் அவ்வுலகம் இல்லை!" என்பதன்
அர்த்தம், அருள், அதாவது, அருள் எனும் ஆசீர்வாதத்தை உணர்வதற்குரிய
பக்குவம் இல்லாமல் உயர்-வாழ்க்கை சாத்தியமில்லை! இந்த உயர்-வாழ்க்கை
யை நாம் வீடுபேறு அல்லது மரணம் கடந்த பெருவாழ்வு என்றும் கொள்ள
லாம்! ஆனால், மிகவும் துரதிருஷ்டவசமாக பொருள் மீதிருந்த அதீதப் பற்றி
னால், அருளை அவ்வுலகத்திற்குரிய ஒன்றாக விலக்கிவிட்டோம்!

அதே வேளையில், உயர்-வாழ்க்கைக்கு நாம் உயர்ந்து செல்லவேண்டுமானால்,
உயிர்-வாழ்க்கையின் விவகாரங்களிலேயே எப்போதும் நாம் மூழ்கியிருக்கும்
வகையில், உயிர்-வாழ்க்கையானது போராட்டம் மிகுந்ததாக இல்லாமலிருக்க
வேண்டும்! அப்படியானால், ஆடம்பரமும், வீணடிப்புத்தரமும் கொண்ட தொரு
பொருளாதார நிலையை இலக்காகக்கொண்ட அபத்தமான 'பொருளாதாரச்
சமத்துவம்' குறித்து பிரயாசைப்படுவதை விடுத்து; கூடவும் இல்லாத, குறைய
வும் இல்லாத அர்த்தமுள்ள, நடுத்தரமானதொரு பொருளாதார நிலையை நாம்
எல்லோருக்கும் சாத்தியமாக்கிட வேண்டும்! இதன் அர்த்தம் நாம் நம் தேவை
களைச் சுருக்கிக் கொள்ளவேண்டும் என்பதல்ல! மாறாக, நம் தேவைகளை
அர்த்தமுள்ள வகையில் நிறைவேற்றிக் கொள்வதையும்; அடிப்படையற்றதும்,
அர்த்தமற்றதுமான தேவைகளை முற்றாகக் கைவிடுவதையும் பொறுப்புமிக்க
சமூகப் பிரஜைகளாக நாம் கடைப்பிடிக்க வேண்டும்!

ஆக, தொடர்ந்து நாம் பழைய இலட்சியங்களான, "பொருளாதார சமத்துவம்",
போலியானதும் உள்ளீடற்றதுமான "சமூக சமத்துவம்" போன்றவைகளை உரு
வாக்கிட முயற்சிக்கும்வரையில், மக்களாட்சி என்ற போர்வையில், சுய-ஆதாய
ஆர்வம் கொண்ட  ஊழல் அரசியல்வாதிகளின் அரசியல் மட்டுமே தொடரும்!
"ஊழல்" என்பது அரசியல் வாதிகளின் தனிப்பண்பு மட்டுமல்ல! மாறாக, ஊழல்
என்பது நம்மையறியாமல் நம்முள் ஊடுருவியிருக்கும் நம் அனைவரின்
பொதுப்பண்பு ஆகும்! ஏனெனில், ஊழல் என்பது முழுக்கமுழுக்க பொருளியல்
ரீதியான நம் மதிப்பீட்டு-அமைப்பின் தவிர்க்கவியலாத தீமையாகும்! மேலும்,
மக்களும், தனிமனிதர்களுமான நாம் நமது அன்றாட உயிர்-பிழைத்தலின்
விவகாரங்களிலேயே மூழ்கியிருக்கும்வரை, அதாவது, ஐந்தாண்டுகளுக்கு ஒரு
முறை வாக்களிப்பதுடன் நமது ஜனநாயக அரசியல் கடமை முடிந்துவிடுகிறது
என்பதாக எதையும் கண்டுகொள்ளாமல் சென்றுகொண்டிருக்கும்வரை அரசியல்
அமைப்பைச் சீரமைக்கவோ, மாற்றியமைக்கவோ இயலாது! நாம் மாறாவிடில்,
அரசியல்வாதிகளும் மாறமாட்டார்கள்! வெறுமனே ஐந்தாண்டுகளுக்கு ஒரு
முறை அரசியல் தலைவரையும், கட்சியையும் மாற்றுவதன் மூலம் உருப்படி
யான எந்த மாற்றமும் ஏற்படாது!

அதாவது, எங்கும் அரசியல், எதிலும் அரசியல் என வாழ்க்கை முழுவதும்
அரசியலாக்கப்பட்டிருக்கும் அபத்தமான நிலையிலிருந்து வாழ்க்கையை நாம்
அரசியலில் இருந்து பிரித்து மீட்டெடுத்தாக வேண்டும்! அதற்காகவே நாம்
அனைவரும், ஒவ்வொருவரும் செயலூக்கத்துடன் அரசியலில் ஈடுபடுவது
அவசியமாகும்! இவ்வாறு நாம் பேசுவது கூட ஒருவகை அரசியல்தான் என்று
சிலர் சொல்லக்கூடும்; பரவாயில்லை! ஆனால், "இதுவும் ஒருவகை அரசியல்"
என்று அவர்கள் சொல்வதுதான் தவறு! ஏனெனில், இதுதான் உண்மையான
அரசியல்; "வாழ்க்கையின் அரசியல்" ஆகும்! அர்த்தமறிந்து வாழப்படும் மனித
வாழ்க்கையையும், மனிதஜீவிகளையும் விட வேறெதுவும் முக்கியமானதல்ல!
அரசியல், பொருளாதாரம், சட்டம், ... ஆகிய அனைத்தும் வாழ்க்கையை
முழுமையாக வாழ்வதற்கு நமக்குச் சேவை புரிவதற்கான கருவிகள் மட்டுமே!

ஆனால், செயலூக்கத்துடன் அரசியலில் ஈடுபடுவது என்றால் என்ன? ஒரு
தொடக்கமாக, இதுநாள்வரை நாம் தூங்கிக்கொண்டிருந்தது போல் இல்லாமல்
முதலில் விழித்துக்கொள்ளவேண்டும்! அரசியல் என்பது வாழ்க்கையில் எந்த
இடத்தில் பொருந்துகிறது என்பதைக் கண்டறிய வேண்டும்! "எது, அல்லது,
யார் நம்மை ஆட்சி செய்யவேண்டும், வழிநடத்திச்செல்ல வேண்டும்?" என்ற
கேள்விக்குரிய பதிலைக் கண்டுபிடித்தாக வேண்டும்! குறிப்பாக, மக்களாட்சித்
தத்துவத்தின் மாண்பினையும், மகத்துவத்தையும் நாம் நன்கு உணர்ந்திருக்க
வேண்டும்! ஏனெனில், அரசியல் என்பது அரசியல்வாதிகளின் களம் அல்ல;
அது நம் அனைவரது அடிப்படை வாழ்வாதாரத்தையும், அதன் மீது எழுப்பப்பட
வேண்டிய உயர்-வாழ்வின் தன்மையையும் தீர்மானிக்கும் களம் ஆகும்!

ஆகவே, இனியும் நாம், "ராமன் ஆண்டால் என்ன. இராவணன் ஆண்டால்
என்ன?" என்கிற மெத்தனப்போக்கில் செல்வது தகாது! நம்மால் தேர்ந்தெடுக்கப்
பட்ட நம்முடைய பிரதிநிதிகள் நம்முடைய வாக்குகளால் பெற்ற ஆட்சியதி
காரத்தை முறையாக, மக்களாகிய நமக்குப் பயனளிக்கும் வகையில் செயல்
படுத்துகிறார்களா, கடமையாற்றுகிறார்களா, என்பதை நாம் விழிப்புடன்
கவனித்து அவர்களைச் செயல்பட வைக்கவேண்டும்! அவ்வாறு அரசியல்வாதி
களைச் செயல்பட வைக்கும் வழிமுறைகளை நாம் நாளும் கண்டுபிடித்துச்
செயல் படுத்திடவேண்டும்! முறையான அரசியலில், அதாவது, மக்களாட்சி
முறையில் மக்கள் தான் தலைவர்களாக இருக்கவேண்டும்; அரசியல்வாதிகள்
யாவரும் தொண்டர்களாக இருக்கவேண்டும்! ஆனால், நடப்பு அரசியலில்
யாவும் தலைகீழாக உள்ளன!

தற்போது நடைமுறையிலிருக்கும் பிரதிநிதித்துவ ஜனநாயக அரசியல்முறை
யில், ஒவ்வொரு தொகுதியிலும் நாம் ஒரு நல்லவரை தேர்ந்தெடுக்க வேண்
டும் என்கிறார்கள்! நாம் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து
ஒரு நல்லவரை முதலமைச்சராக தேர்ந்தெடுப்பார்களாம்! ஆனால், தற்போது
உள்ள ஆட்சிமுறையில் உள்ள பெரிய சிக்கல் என்னவென்றால், தேர்தலில்
போட்டியிடும் பிரதிநிதிகளில் எவர் நல்லவர், எவர் கெட்டவர் என்று அறிவது
சாத்தியமில்லை! ஏனெனில், அவ்வாறு அறிவதற்கான அளவுகோல்கள் ஏதும்
நம்மிடம் கிடையாது! மேலும், இவ்வாறு, அரசாள்பவரின், அதாவது, அரசியல்
தலைவரின் நற்குணத்தை, அல்லது தீய குணத்தைப் பொறுத்துதான் நாட்டு
மக்களின் வாழ்வு தீர்மானிக்கப்படும் என்றால், நம் வாழ்க்கை சூதாட்டம்
போலாகிவிடும்! ஆகவே, வாழ்க்கையானது எவ்வொரு அரசரையோ, அரசியல்
தலைவரையோ, முதலமைச்சரையோ, பிரதம மந்திரியையோ சார்ந்ததாக
இருக்க முடியாது, கூடாது! உண்மையில், வாழ்க்கையைப் பொறுத்தவரை,
அரசரோ, அரசியல் தலைவரோ, எவருமே முக்கியமானவர்களும் அல்ல;
தவிர்க்கவியலாதவர்களும் அல்ல! ஆகவே, எவ்வொரு அரசரையோ, அரசியல்
தலைவரையோ பொறுத்து மக்களும், அவர்களுடைய வாழ்க்கையும் அமைவ
தாக இருக்க வியலாது!

ஏனெனில், மக்கள், மனிதர்கள், அதாவது தனிமனிதர் ஒவ்வொருவரும் தான்
முக்கியமானவர்! இவ்வகையில், அதாவது, மக்களில், மனிதஇனத்தில் ஒருவர்
என்றவகையில், நம்முடைய அரசரும், முதலமைச்சரும், பிரதம மந்திரியும்
முக்கியமானவரே! ஆகவேதான், அரசியல்வாதிகள் என்போர் ஒரு தனி இனம்
அல்ல என்று நாம் கூறுகிறோம்! மேலும், மக்கள் இன்று, இப்போதே தங்களது
வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டும்! நிறைவேற்றப்படாத வெறும் தேர்தல்
அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை வைத்துக்கொண்டு மக்கள்
வாழமுடியாது! மேலும், தவறான பிரதிநிதியை, அரசியல் தலைவரை தேர்ந்
தெடுத்துவிட்ட குற்றத்திற்காக, மக்கள் தம்மையே நொந்துகொண்டு அடுத்த
தேர்தலை எதிர் நோக்கியவாறு வாழ்க்கையை வாழ முடியாது! ஏனெனில்,
அடுத்த தேர்தல், இன்னொரு அரசியல் கட்சி, இன்னொரு தலைவர் வந்தாலும்,
கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை ஓரிரவிற்குள்ளோ, அல்லது, முதல்
ஓராண்டுக்குள்ளோ மாறிவிடப்போவதில்லை!
.. . .. .......

இவ்வாறு, நடப்பிலுள்ள "அர்த்தமற்ற அரசியல்" பற்றிய விவரிப்புக்களையும்,
"அர்த்தமுள்ள அரசியல்" என்பது எத்தகையதாக இருக்கவேண்டும் என்பது
பற்றிய எனது புரிதல்களையும், பார்வைகளையும் தொடர்ந்து நான் பேசிக்
கொண்டும், எழுதிக்கொண்டும் இருக்க முடியும். ஆனால், ஒரே கட்டுரையில்
அனைத்து விஷயங்களையும் கொட்டித் தீர்த்துவிட இயலாது! ஆயினும்,
இது தான் என்னுடைய அரசியல் பிரவேசத்தின் முன்னுரை, அல்லது அறிமுக
உரை ஆகும்! "வாழ்க்கை" என்பது பிரபஞ்சம் தழுவியதாக இருப்பதால்,
வாழ்க்கையை பிரதானப்படுத்தும் "வாழ்க்கையின் அரசியல்" என்பதும் அகில
உலகையும், அனைத்து மக்களையும் தழுவியதாகத்தான் இருக்க முடியும்!
ஆகவே, நான் முன்வைக்கும் எனது கட்சிக்கு, அனைத்து மக்களின் கட்சிக்கு
ஒரு பெயர் வேண்டுமல்லவா! ஆம், "மானிட ஒருமைக்கழகம்" என்பதுதான்
நமது கட்சியின் பெயர்! நமது கட்சிக்கு ஒரு கொடி வேண்டாமா? ஆம், நமது
ஒவ்வொருவருடைய கைக்குட்டை தான் கொடி! நமது கட்சியின் சின்னம் 
"  ", ஆம், கேள்விக்குறி தான் நம்முடைய கட்சியின் சின்னம் ஆகும்!

முதலில் நாம் செய்ய வேண்டியது, நம்மைச் சுற்றிலும், குறிப்பாக அரசியல்
களத்தில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது, என்பதை விழிப்புடன் கவனிப்பது
தான்! ஏனெனில், மக்களாகிய நாம் இல்லாமல், அரசியலும் இல்லை, அரசியல்
வாதிகளும் இல்லை! அரசியல் என்பது, வாழ்க்கை எனும் பெரும் களத்தின்
ஒரு பகுதியாக, ஒரு கருவியாக மட்டுமே இருக்க முடியும்! இதற்கு மாறாக,
தற்போதுள்ளது போல, தலை கீழாக, அரசியலின் பகுதியாக நமது வாழ்க்கை
அமைதல் கூடாது!

மக்களாட்சி உண்மையில் மக்களாட்சியாக அமைய வேண்டுமானால், ஆட்சி -
அதிகாரத்தை முழுவதுமாக அரசியல்வாதிகளிடம் அளித்துவிடல் கூடாது!
ஆட்சியதிகாரத்தின் "கடிவாளம்" மக்களாகிய நம் கைகளில் இருக்கவேண்டும்!
கடிவாளத்தை விட்டுவிட்ட்டால், மாடுகள் வண்டியை அதன் இஷ்டத்துக்கு
எங்கேயாவது இழுத்துக்கொண்டு போய்ச் சேர்த்துவிடும்; நாம் சேரவேண்டிய
இடத்திற்குச் செல்ல முடியாது!

ஆக, நான் எனது அரசியல் பிரவேசத்தை அறிவித்துவிட்டேன்; அது போல
மக்களே, நண்பர்களே, வாசகர்களே நீங்களும் தாமதியாமல் உங்களுடைய
அரசியல் பிரவேசத்திற்குத் தயாராகிடுங்கள்! தொடர்ந்து அரசியல் பற்றிய
கட்டுரைகள் முக நூலிலும், எனது  vicharamarg.blogspot.in எனும்
எனது வலைத்தளத்திலும் வெளியாகும். நாம் பரஸ்பரம் ஒருவருக்கொருவர்
அரசியல் விழிப்புணர்வை ஊட்டிப் பகிர்ந்து கொள்வதன் மூலம் நிச்சயம்
அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தமுடியும்! நினைவில் கொள்ளுங்கள் நாம்
பேசிக்கொண்டிருப்பது வெறும் அரசியல் அல்ல; நம் வாழ்க்கையையும், நமது
சுதந்திரத்தையும் பாதுகாத்துக்கொள்வதற்கான ஆயத்தங்கள் ஆகும்!

மா.கணேசன்/ நெய்வேலி/ 29-10-2017
---------------------------------------------------------------------------

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...