அவசியத்தீமை என்பது அவ்வளவாக சாதகமல்லாத ஆனால்
அப்போதைக்குத் தேவைப்படும் ஒரு விஷயம், அல்லது அம்சத்தைக்
குறிப்பதாகும். அவ்விஷயம் இல்லாவிடில் அதிக பாதகம் விளைவதா
யிருக்கும்! மேலும், அவ்விஷயத்திற்கு மாற்றாக வேறு எதுவும்
தற்போதைக்கு இல்லாததினால் அவ்விஷயம் அவசியமான தீமை
எனப்படுகிறது!
பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் அடித்தளம் என்று கருதப்படும் அரசியல் கட்சி
களின் மீதான பொது மக்களின் நம்பிக்கையின்மை சமீபகாலமாக பரவலாக
எல்லா நாடுகளிலும் நிலவுகிறது! இன்று மிகக் குறைவான பிரஜைகள் தான்
அரசியல் கட்சிகளை நம்புகிறார்கள்! இந்நிலைமையானது ஜனநாயக அரசிய
லின் தன்மையையே மறுவடிவாக்கம் செய்துகொண்டிருக்கிறது என்பதாக
அரசியல் ஆய்வறிஞர்கள், ரஸ்ஸல் ஜெ. டால்டன் (RUSSELL J. DALTON),
மற்றும் ஸ்டீவென் எ. வெல்டான் (STEVEN A. WELDON)ஆகியோரது ஆய்வு
முடிவுகள் தெரிவிக்கின்றன!
அரசியல் கட்சிகளைப்போல வேறு எந்நிறுவனமும் பிரதிநிதித்துவ ஜனநாயக
வழிமுறையுடன் மிக நெருக்கமாக அடையாளப்படுத்தப்படவில்லை! மிகவும்
புகழ் வாய்ந்த அரசியல் விஞ்ஞானி E.E. Schattschneider அவர்களின்
அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் முடிவு என்னவெனில், "அரசியல் கட்சிகள்
இன்றி வேறு எதைக்கொண்டும் நவீன ஜனநாயகத்தை எண்ணிப்பார்க்க இய
லாது!" அடுத்து, James Bryce அவர்களின் கூற்று என்னவெனில், "அரசியல்
கட்சிகள் தவிர்க்கவியலாதவை. ஏனெனில், அவையின்றி எவ்வாறு பிரதிநிதித்
துவ அரசாங்கத்தை நடத்துவது என்பது பற்றி எவரும் எடுத்துச் சொல்ல
வில்லை"
மேலும் பல அரசியல் விஞ்ஞானிகளும், ஆய்வாளர்களும், மேற்குறிப்பிட்ட
பார்வைகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். குறிப்பாக அமெரிக்க அரசியல் விஞ்
ஞானக் கழகமானது, "அதிக பொறுப்புகொண்ட அரசியல் கட்சியின் அரசாங்கம்
வேண்டும்" என 1999,Economist இதழின் ஒரு கட்டுரையில் அழைப்பு
விடுத்தது! அக்கட்டுரையானது, ஜனநாயகத்தின் அடித்தளமாகக் கருதப்படும்
அரசியல் கட்சிகளின் பணி, பாத்திரம் குறித்து பரிசீலித்தது.
ஜனநாயகத்திற்கு அரசியல் கட்சிகள் மிகவும் அடிப்படையானவை என்று
பொதுவாகப் பார்க்கப்பட்டாலும், அரசியல் கட்சிகளின் பங்களிப்பு குறித்து
கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஒருபுறம், கட்சி அரசாங்க ஏடுகள்,
கட்சிகள் ஆற்றுகின்ற நேர்மறையான பாத்திரம் குறித்து வலியுறுத்திக் கூறு
கின்றன! மறுபுறம், அரசியல் கட்சிக்கு எதிரான நெடிய வரலாற்றைக் கொண்ட
அபிப்பிராயம், ரூஸோ (Rousseau) முதல் மேடிஸன் (Madison) வரை,
இருக்கிறது. அவ்வபிப்பிராயம், அரசியல் கட்சிகள் புரியும் தீங்கு குறித்தும்,
எவ்வெவ்வழிகளில் அவை ஜனநாயக வழிமுறைகளைத் தடுக்கின்றன என்பது
குறித்தும் விமர்சிப்பதாயுள்ளன! பிரெஞ்சு நாட்டு சமூகவியலாளரும், அரசியல்
கோட்பாட்டாளருமான அலெக்ஸி டி டாக்குவில் (Alexis de Tocqueville)
என்பவர், "அரசியல் கட்சிகள் சுதந்திர அரசாங்கங்களின் உள்ளார்ந்த தீமையாக
விளங்குகின்றன!" என்றார்.
இவ்வபிப்பிராயங்களே, பேல் (Bale), மற்றும் ராபர்ட்ஸ் (Roberts) அவர்
களின், நியூஸிலாந்து நாட்டின் சமீபத்திய தேர்தல்முறை சீர்திருத்தம் குறித்த
சர்ச்சைகள் மீதான மதிப்பாய்வுரையில் எதிரொலித்தன: "வாக்காளர்களைப்
பொறுத்தவரை அரசியல் கட்சிகள் குறித்த விஷயம் குறிப்பிடத்தக்க வகையில்
போற்றுதலுக்குரியதாயில்லை; மாறாக, அவர்கள் தயக்கத்துடன் இனம் கண்டு
ணர்வது என்னவெனில், அரசியல் கட்சிகள் என்பவை அவசியமான தீமை
என்பதே"
அரசியல் கட்சிகளின் அரசியல் பாத்திரம் குறித்த கோட்பாட்டுரீதியான விவாத
மானது நெடுங்காலமாக இருந்து வரும் ஒன்றாகும். ஆனால், சமீப காலத்தில்
இவ்விவாதங்கள் மேலதிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றன;
அதாவது, அரசியல் கட்சிகள் மீதான பொதுமக்களின் அதிகரிக்கும் ஆர்வமிழந்த
நிலை மேற்கத்திய ஜனநாயகங்கள் இடையே பரவியுள்ளது இதற்கு சான்றாக
வுள்ளது (Dalton and Wattenberg 2000). பெரும்பாலான ஸ்தாபிதமான
கட்சிகளில் உறுப்பினர்களின் பதிவுகள் குறைந்துள்ளன (Scarrow 2000;
Mair and van Biezen 2001). தேர்தல்களில் வாக்குகள் பதிவும் சரிவு
கண்டுள்ளன. அரசியல் கட்சிகளின் மீதான உளவியல் ரீதியான பிடிப்புகளும்,
கட்சியுடன் அடையாளப்படுத்திக்கொள்வதும் கூட தளர்வு கண்டுள்ளன. முடி
வாக, இடது, மற்றும் வலது சாய்ந்த ஸ்தாபன-விரோத எதிர்ப்புக் கட்சிகளின்
எழுச்சியும் இவ்விடர்பாட்டின் மேலுமொரு அடையாளமாக உள்ளது!
கூடுதலாக, அரசியல்கட்சிகள் குறித்த இவ்வபிப்பிராயங்கள் நிறுவன ரீதியான
மாற்றத்திற்கான கோரிக்கைகளைத் தூண்டுகின்றன. அரசியல் கட்சிகள்மீதான
பொதுமக்களின் பரவிப்பெருகும் அதிருப்தியின் காரணமாக இத்தாலி, ஜப்பான்,
மற்றும், நியூஸிலாந்து ஆகிய நாடுகள் சமீபத்தில் தேர்தல் அமைப்புமுறை
களை மாற்றியமைத்தன (Shugart and Wattenberg 2001). மேலும்,
தற்போது இங்கிலாந்து, நெதர்லாந்து, பெல்ஜியம், கனடா ஆகிய நாடுகளிலும்
தேர்தல் அமைப்புமுறையில் சீர்திருத்தம்வேண்டும் என கோரிக்கைகள் எழுந்
துள்ளன (Norris 1995).
தற்போது, புதிய மதிப்பாய்வு முறைகள், பொது மக்கள் எவ்வாறு அரசியல்
கட்சிகளைப் பார்க்கிறார்கள் என்பது குறித்து நேரடியாகவும், மிக ஆழமாகவும்
பரிசீலிக்க உதவுகின்றன. முதலில், Comparative Study of Electoral
Systems (CSES, module I) மேற்கொண்ட மதிப்பாய்வின் படி, இரண்டு
அடிப்படையான கேள்விகள் குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன: ஒன்று, ஜன
நாயகத்திற்கு அரசியல் கட்சிகள் அவசியமா? இரண்டு, உண்மையிலேயே
மக்களின் எண்ணங்கள் ( நலன்கள்) குறித்து அரசியல் கட்சிகள் அக்கறைப்படு
கின்றனவா?
இக்கேள்விகள், நடப்பு அபிப்பிராயங்களின் புதிரான தன்மையை பிரதிபலிப்பதா
யுள்ளன! அதாவது, 'அரசியல் கட்சிகள் அவசியமா?' என்ற கேள்விக்கு, 13 ஜன
நாயக நாடுகளின் நான்கில் மூன்று பங்கு பொதுமக்கள், அரசியல் கட்சிகள்
அவசியமே என்று பதிலளித்துள்ளனர்! இக்கருத்தானது, அமெரிக்க அரசியல்
விஞ்ஞானி, ஷாட்ஸ்னெய்டர் (Schattschneider)அவர்களின் பார்வையான,
"பெரும்பாலான பிரஜைகளைப் பொறுத்தவரை அரசியல் கட்சிகள் இல்லாத
ஜனநாயகம் என்பது எண்ணிப்பார்க்க முடியாதது!" என்பதை ஆதரிப்பதாக
உள்ளது. ஆயினும், அதேநேரத்தில், 'அரசியல் கட்சிகள் பொதுமக்களின் நலன்
கள் குறித்து அக்கறைப் படுகின்றனவா?' என்பது குறித்து சமகாலப் பொது
மக்கள் பெரும் ஐயப்பாடு கொண்டுள்ளனர்.
இக்கேள்வியைப் பொறுத்தவரை, சராசரியாக மூன்றில் ஒரு பங்குக்கும் குறை
வான பொதுமக்கள் மட்டுமே நேர்மறையாகக் காண்கின்றனர்! இத்தகைய
வேறுபாடுகள் கவனத்தைக் கோருவதாகும். 80% ஸ்வீடன் மக்கள், அரசியல்
அமைப்பு செயல்படுவதற்கு கட்சிகள் அவசியமானவை என்கின்றனர்; ஆனால்,
வெறும் 23% பேர்கள் மட்டுமே கட்சிகள் சாதாரண மக்கள் குறித்து அக்கறைப்
படுகின்றன என நம்புகின்றனர்.
அதே போல், 80% ஜெர்மனியர்கள், அரசியல் கட்சிகள் அவசியமே என எண்ணு
கின்றனர், ஆனால், 18% பொதுமக்கள் மட்டுமே கட்சிகள் மக்கள் நலன் மீது
அக்கறை கொண்டுள்ளன என்கின்றனர்.
ஆயினும், நெடிய காலப்பகுதியை உள்ளடக்கிய ஆய்வின் புள்ளிவிவரங்கள்
அரசியல் கட்சிகள் மீதான நம்புக்கையிழப்பையே சுட்டுகின்றன! கனடாவில்,
1979-ல் 30% இருந்த நம்பிக்கை, 1999-ல் 11% மாகக் குறைந்து போனது! ஜெர்ம
னியில், 1979-ல் 43% இருந்தது, 1993-ல் வெறும் 26% மாகக் குறைந்து போனது!
சுவீடனில், 1968-ல், 'ஓட்டுக்களுக்காக மட்டுமே கட்சிகள் மக்கள் மீது அக்கறை
காட்டுகின்றன' என்ற கருத்தை மறுத்துச் சொன்ன முழு 68% மக்கள், 1998-ல்
வெறும் 23% மாகக் குறைந்து போயினர்! அதேபோல், பிரிட்டிஷ் பொதுமக்க
ளும் கடந்த இருபதாண்டுகளில், அரசியல் கட்சிகளை மிகக் குறைவாகவே
நம்புகின்றனர்! 1960-ல் 40% அமெரிக்கர்கள், அரசியல்கட்சிகள் பொதுமக்களின்
ஆர்வங்களுக்குச் செவி சாய்ப்பதாக எண்ணினர். ஆனால், 1970 களில், 30%
மாகக் குறைந்து போயினர்; 1980 களில், 20% மாக மேலும் குறைந்துபோயினர்.
இதற்கிணையாக, நார்வேஜிய நாட்டிலும் அரசியல் கட்சிகள் மீது பொதுமக்கள்
விரிவான அதிருப்தி கொண்டுள்ளதற்கான சான்று உள்ளது.
இவ்வாறே புள்ளிவிவரங்களை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். ஆக,
சுருக்கமாகச் சொன்னால், சமகாலத்திய பொதுமக்கள் அரசியல் கட்சிகளை
ஜனநாயகத்தின் அவசியத்தீமை எனக் காண்பதாகவே தெரிகிறது -- அதாவது,
தேர்தல்களை நடத்துவதற்கும், அரசாங்கம் அமைப்பதற்கும் அரசியல் கட்சிகள்
தேவைப்படுகின்றன, ஆனால், இவ்வழிமுறைக்குள் எவ்வாறு அரசியல் கட்சி
கள் பொதுமக்களின் ஆர்வங்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன என்பது
குறித்து சந்தேகத்துடன் பார்க்கின்றனர். மேலும், அரசியல் கட்சிகள் குறித்த
எதிர்மறை உணர்வுகள் சென்ற தலைமுறைக்கும் பரவியுள்ளது. ஒரு காலத்
தில், கல்வியாளர்களும், பிரஜைகளும், ஒரே மாதிரியாக, அரசியல் கட்சிகள்
ஜனநாயகத்தின் தூண்கள் எனக்கண்டனர். ஆனால், இப்போது, சமகாலத்திய
பொதுமக்கள், அரசியல் கட்சிகளை அசட்டைமிக்கவையாக, நம்பிக்கைக்குப்
பாத்திரமில்லாதவையாக, பிரதிநிதித்துவம் பாராட்டாதவையாகக் காண்கின்ற
னர்! அரசியல் கட்சிகள் இல்லாத ஜனநாயகம் எண்ணிப்பார்க்கவியலாதது
என்றால், பல பிரஜைகள், கட்சிகள் எவ்வளவு சிறப்பாக தமது பாத்திரத்தைச்
செயல் படுத்துகின்றன என்பது குறித்து சந்தேகிக்கின்றனர்!
அரசியல் கட்சிகள் மீதான பரவிப்பெருகும் அவநம்பிக்கையின் ஓர் உள்ளார்ந்த
விளைவு என்னவெனில், தேர்தல்களிலும், கட்சி அரசியலின் பிற அம்சங்களி
லும் மக்களின் ஈடுபாடு வெகுவாகக் குறைந்து போகிறது என்பதேயாகும்!
மேலும், வாக்களிப்பு குறைந்து போதலும், கட்சிப்பிரச்சார நடவடிக்கை, கட்சிப்
பணியாற்றுதல், ஊர்வலம் போன்றவற்றில் பங்கெடுத்தல் ஆகியவைகளும்
குறைந்து போயின!
அரசியல் கட்சிகள் மீதான நம்பிக்கையிழப்பு தனிநபர்களை வேறு வகைகளில்
அரசியலில் ஈடுபடுவதற்கான வழிகளை, அதாவது மரபல்லாத, மற்றும் கட்சி-
சாராத வழிகளை, அதாவது நேரடியாக அரசியல்வாதிகளைத் தொடர்பு கொள்
வது, மற்றும், வேறு வடிவங்களில் நேரடிச்செயல்பாட்டில் ஈடுபடுவது போன்ற
வழிகளைத் தேடும்படித் தூண்டுகிறது! இவ்வாறு, கட்சிகளின் மீதான சந்தேகம்
அரசியல் பங்கெடுப்பின் வடிவங்களை மறுவடிவமைப்பு செய்வதுடன், பிரஜை
களின் தாக்கம், மற்றும், ஜனநாயக வழிமுறையின் செயல்படும் தன்மையில்
மாற்றம் ஏற்படுத்தும் முகமாக புதிய வழி வகைகளைக் கண்டுபிடிக்கும்படி
கொண்டு செல்கிறது!
பிரஜைகள் ஓட்டுப்போடுகிறார்கள் எனும் பட்சத்தில், எவ்வாறு கட்சியின்
பிம்பமானது வாக்காளர் தெரிவுகளை பாதிக்கும்? இது முக்கியமானது, ஏனெ
னில், பலருக்கு, தேர்தல்கள் தான் நவீன ஜனநாயக நிகழ்வுமுறையை வரை
யறை செய்வதாயுள்ளது. தேர்தல்கள்தான் மிகவும் முக்கியமான தருணங்கள்,
அப்போது தனி நபர்கள் தங்கள் அரசியல் நிலைப்பாட்டையும், மனச்சார்பை
யும் ஒரு ஒற்றை ஓட்டுத் தேர்வாக ஒருங்கிணைத்து முடிவெடுக்கிறார்கள்.
இவ்வாறான ஓட்டுக்களின் மொத்தம்தான் அரசாங்கம் அமைப்பதை தீர்மானிப்
பதாகிறது!
அரசியல் கட்சிகள் மீதான நம்பிக்கையிழப்பானது வாக்காளர்களின் தெரிவை
பெரிதும் பாதிக்கிறது! அதாவது, கட்சிகளின்மீது அவநம்பிக்கை கொண்டவர்கள்
ஓட்டுப்போடுவதை தவிர்க்குமாறு செய்கிறது! எனினும், ஓட்டுப்போடாதிருப்பது
மட்டுமே ஒரே தெரிவு என்பதில்லை! அவர்கள் தங்கள் ஓட்டுக்களை, புது
மாதிரியாக அரசியல் நடத்தப்போவதாகச் சொல்லுகிற ஒரு கட்சிக்குப் போடக்
கூடும்! அல்லது, அவர்கள் தங்கள் ஓட்டுக்களை பிரதான எதிர்க்கட்சிக்கும் --
அக்கட்சி தனது நடத்தையை மாற்றிக்கொள்ளுமென்ற நம்பிக்கையில்-- போடக்
கூடும்!
சமீபத்திய பத்தாண்டுகள், முன்னேறிய தொழில்துறை ஜனநாயக நாடுகளில்
"கட்சிக்கு-எதிரான கட்சி"களின் எழுச்சியைக் கண்டுள்ளன. கட்சிக்கு-எதிரான
இந்தக் கட்சிகள் மாறுபட்ட சித்தாந்தங்களையும், கொள்கை இலக்குகளையும்
கொண்டுள்ள அதேநேரத்தில், அவை ஒரு பொதுவான செய்தியை எதிரொலித்
தன : "ஸ்தாபிதமான கட்சிகள் யாவும் சுய-சேவை நோக்கம் கொண்டவை,
ஊழல் நிறைந்தவை, மக்கள் நலன்களைக் கண்டு கொள்ளாதவை!" என்பதே
அந்தச்செய்தி!
ஆம், அரசியல் கட்சிகளின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்ட பிரஜைகள்,
பொதுமக்களின் முன்னே மூன்று தெரிவுகள் உள்ளன; ஒன்'று, ஓட்டுப்போடு
வதைத் தவிர்த்தல், இரண்டாவது, கட்சிக்கு-எதிரான கட்சிக்கு ஓட்டுக்களைப்
போடுதல், இறுதியாக, ஏற்கனவே தாபிதமான ஒரு கட்சிக்கு ஓட்டுக்களைப்
போடுதல் ஆகியன! ஜனநாயக அமைப்பு முறையில், தேர்தலை விட்டால்
பொதுமக்களுக்கு வேறு ஒரு வழியும் இருப்பதாகத் தெரியவில்லை! ஆனால்,
தேர்தலின்போது ஓட்டுக்களைச் செலுத்தாமல் இருப்பதால் எவ்வித பயனும்,
மாற்றமும், விளையப் போவதில்லை! அதேபோல, ஓட்டுக்களைச் செலுத்து
வதாலும், பொதுமக்களின் வாழ்வில் பெரிதாக யாதொரு மாற்றமும், பயனும்
விளையப் போவதில்லை! இதுதான் பிரதிநிதித்துவ ஜனநாயக அமைப்புமுறை
யின் சாபக்கேடான நிலையாகும்!
பொதுமக்கள் அரசியல் கட்சிகள் மீது அவநம்பிக்கை கொள்வதற்கும், அரசியல்
கட்சிகளை வெறுப்பதற்கும், அவை ஊழல், அவதூறான நடத்தைகள், முறை
கேடுகள் போன்ற பல காரணங்களையும் புகார்களையும் கொண்டிருக்கின்றன
என்பதையும் தாண்டி, பிரதானமாக மக்கள் நலன்களை அவை கண்டுகொள்வ
தில்லை! ஆனால், வெறுமனே அரசியல் கட்சிகளை வெறுப்பதாலும், விமர்சிப்
பதாலும் எதுவும் நிகழாது!
அதேநேரத்தில், பொதுமக்களாகிய நாம், அவ்வளவு சீக்கிரமாக அரசியல் கட்சி
களின் மரண-அறிவிப்பை எழுதிவிடமுடியாது! ஏனெனில், அரசியல்வாதிகளுக்
கும், பெருமுதலாளிகளுக்கும் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தைப் போன்ற பொன்
முட்டை இடும் வாத்து வேறெங்கு கிடைக்கும்! ஆகவே,அவர்கள் தங்களுக்குச்
சாதகமான ஒன்றை அவ்வளவு எளிதாக விட்டுக்கொடுத்திடுவார்களா என்ன?
ஜனநாயக நிகழ்வுமுறையில் மாற்றம், சீர்திருத்தம், புதுமை, என்கிற பெயர்
களில் சில மேலோட்டமான திருத்தங்களைச் செய்துவிட்டு ஜனநாயகத்தை
நாங்கள் தழைத்தோங்கச் செய்துவிட்டோம் என அரசியல்வாதிகள் சொல்லக்
கூடும்!
மேலும், அரசியல் கட்சிகள் ஜனநாயக முறையின் மிகவும் அவசியமான,
முக்கியமான அம்சம் என்பதாக அரசியல் கோட்பாடும், பரவலாக பொதுமக்க
ளும் ஏற்றுக்கொள்கின்ற நிலைமை தொடர்கிறது என்பதால், அரசியல் கட்சி
களை விட்டால் வேறுவழியே இல்லை என்று அர்த்தமில்லை; மாறாக, வேறு
வழிமுறைகள் இன்னும் நம்மால் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கிறது எனவும்
அர்த்தம் கொள்ளப்படவேண்டும்! சிலர், அரசியல் கட்சிகளின் நேர்மறையான
பங்களிப்புகளை மறுக்கமுடியாது என்று சொல்வதன்வழியே அரசியல் கட்சி
கள் இன்றி ஜனநாயகத்தை எண்ணிப்பார்க்கவும் இயலாது என்ற முடிவிற்கு
வருகிறார்கள். இக்கூற்று பார்வைக்கோளாறு கொண்டதாகும்! ஏனென்றால்,
நேர்மறையான பங்களிப்புகளைச் செய்வதற்காகத்தானே அரசியல் கட்சிகளை
தேர்தல் மூலம் நாம் தேர்வுசெய்கிறோம்? அரசியல் கட்சிகளாகட்டும், அரசியல்
வாதிகளாகட்டும் அவர்கள் எங்கிருந்து, எதற்காக, யாருக்காக வருகிறார்கள்?
அவர்கள் என்ன வானத்திலிருந்து இறங்கி வந்த தேவர்களா? அவர்களும்
மக்களைச் சேர்ந்தவர்கள் தானே? ஆக, அரசியல்வாதிகளும், அரசியல் கட்சி
களும் இல்லாமல் பொதுமக்களாகிய நாம் வாழவே இயலாது என்று சொல்வ
தன் அர்த்தம் என்ன?
ஆனால், முதலிடத்தில், அரசியல் கட்சிகள் எதற்காக நமக்குத் தேவைப்படு
கின்றன என்பது பற்றி நாம் தெளிவுபடச் சிந்திக்க வேண்டாமா? ஆம், பொது
மக்களாகிய நம்மை, நமது நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்வதற்காக
அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் தேவைப்படுகின்றன! அதாவது,
கட்சிகள் இல்லாமல் அரசியல்வாதிகள் இல்லை! அரசியல்வாதிகள் இல்லை
யேல், நம்மைப் பிரதிநிதித்துவம் செய்வதற்கு எவரும் இருக்கமாட்டார்கள்!
என்பதுதானே நம் தலைவிதியை நிர்ணயிக்கும் மரணகரமான (Fatal)அந்த
எளிய சமன்பாடு? ஆனால், மக்களின் நலன்கள் அரசியல் கட்சிகளாலும், அரசி
யல்வாதிகளாலும் காற்றில் பறக்க விட்டுவிடும்போதும் ஜனநாயகம் என்பதை
நாம் எண்ணிப்பார்க்கவியலாது என்பதையும் நாம் எண்ணிப்பார்க்கவேண்டாமா?
தொடக்கத்தில், கட்சி அரசியல் எனும் தீங்கானது ஒவ்வொரு நாட்டின் தனிப்
பட்ட வரலாற்றுடன் தொடர்பு கொண்டுள்ளதாகக் கருதப்பட்டது! அமெரிக்க
மக்கள் அரசியல் கட்சிகளின் மீதான நம்பிக்கையை இழந்து போனதற்கு
அரசியல்வாதிகளின் இழி-நடத்தைகளும், அரசாங்கத்தின் கொள்கைத் தோல்வி
களும் காரணங்களாக அமைந்தன! இத்தாலிய மக்கள் அந்நியப்பட்டுப்போன
தற்கு, அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புக்களில் மலிந்திருந்த ஊழல்
கள் பகிரங்கப்படுத்தப்பட்டதே காரணம் எனப்படுகிறது! கனடா நாட்டு மக்களின்
நம்பிக்கையிழப்பிற்கு பிராந்திய பூசல்கள் கட்சி அமைப்பில் பிரதிபலித்தது
தான் எனப்படுகிறது! ஜெர்மானிய மக்களின் விரக்திக்கு ஒருங்கிணைப்பு தான்
காரணம் எனக் கருதப்பட்டது! சந்தேகமில்லாமல் அந்தந்த நாட்டிற்குரிய தனிப்
பட்ட இத்தகைய நிலைமைகளும் உள்ளன. ஆனால், அரசியல் கட்சிகள்,
மற்றும் பிற பிரதிநிதித்துவ ஜனநாயக அமைப்புகளின் மீது பொதுமக்களின்
பரவிப்பெருகும் அதிருப்திக்கு மேற்கத்திய ஜன நாயகங்கள் அனைத்துக்கும்
பொதுவான வடிவமைப்பு உள்ளதென ஆய்வு முடிவுகளும், புள்ளிவிவரங்க
ளும் காட்டுகின்றன என்று அரசியல் ஆய்வறிஞர்கள் காண்கின்றனர்.
இத்தகைய எதார்த்தங்கள் உணர்த்துவது என்னவென்றால், அரசியல் கட்சிகள்
மீதான மக்களின் நம்பிக்கையிழப்பானது தொடர்ந்து அதிகரிக்கும் என்பதே!
இதன் விளைவாக வாக்களிப்பு குறைந்து போதலும், கட்சிச் செயல்பாடுகளில்
மக்களின் பங்கெடுப்பு குறைந்து போதலும் நிகழ்ந்துள்ளன! அதாவது, மக்கள்
நலன்களில் அரசியல் கட்சிகள் அக்கறை காட்டாதபோது, மக்கள் ஏன் வாக்க
ளிப்பது பற்றி கவலைப்படவேண்டும் என்பதே பிரதிவினையாக உள்ளது!
கட்சிகள் மீதான அவநம்பிக்கை, கட்சி-சாராத அரசியல் செயல்பாடுகளை
தோன்றச் செய்கின்றன -- அதாவது, நேரடியாக அரசியல்வாதிகளைத் தொடர்பு
கொள்வது, மரபல்லாத வழிகளில் பங்கேற்றல், பிரஜை நலக்குழுக்கள், ஆகிய
பிற வடிவங்களில் நேரடிச் செயல்பாடுகளில் ஈடுபடுதல் தோன்றியுள்ளன!
அடுத்து, அதிருப்தியடைந்த பொதுமக்கள், முற்றிலுமாக அரசியல் கட்சிகளை
புறக்கணிக்காத நிலையில் வாக்களிக்க முன் வருகிறார்கள் எனும் பட்சத்தில்,
அவர்கள் இருவகை கட்சிகளைத் தேர்வு செய்வதாகத் தெரிகிறது! அதாவது,
தாபிதமான கட்சிகளில் எதிக்கட்சியையும், இல்லாவிடில், தீவிர வலதுசாரிக்
கட்சியையும் தேர்வு செய்கிறார்கள்! இவ்விரண்டில், முதல் வகைத் தேர்வு,
தாபிதமான பெருங்கட்சிகளை மக்கள்நலன்களில் அதிக அக்கறை கொள்ளும்
படித் தூண்டும் வகையில் அமைகிறது! இரண்டாவது வகைத் தேர்வு, மரபான
கட்சி-அரசியலை முற்றாகப் புறம்தள்ளி, புறத்தேயிருந்து பிரதிநிதித்துவ ஜன
நாயக முறையை மாற்றியமைத்து பெருமாற்றம் கொணர விரும்பும் கட்சி
களை வரவேற்பதாய் அமைகிறது!
தாபிதமான, ஊழல் பாரம்பரியத்தில் துறைபோன, அரசியல் கட்சிகளை
நிராகரிப்பதையும், தாபிதமான எதிர்க்கட்சிக்கு வாக்களித்து, ஆளும் கட்சி,
எதிர்க்கட்சி ஆகிய இரு துறைபோன கட்சிகளுக்கும் புத்தி புகட்டுவதையும்
கடந்து, கட்சி-சாராத அம்சங்களை விரிவுபடுத்துவது இன்னொரு வகை
சீர்திருத்த முயற்சியாகும். அதாவது, அரசின் கொள்கை முடிவுகள் மீதான
பொதுமக்களின் கருத்தை நேரடியாக அறிவதற்கான பொதுவாக்கெடுப்புகள்
(Referendums),பிரஜைகள் தங்கள் பிரச்சினைகளை தெரியப்படுத்துவதற்கு
வாய்ப்பளிப்பது, மற்றும் பிற நேரடிச்செயல்பாடுகளை அதிகரிப்பது! இவ்வழி
கள், வாக்காளர்கள் ஓரளவிற்கு கட்சி அரசியலை தவிர்த்துக் கடந்து செல்ல
உதவக்கூடும்! மேலும், கொள்கை நிர்வாகத்திலும் மாற்றங்களைச் செய்தல்
என்பதும் இவற்றைப் பின்தொடர்ந்து நிகழக்கூடும்! ஏனெனில், பொதுமக்கள்
அரசியல் கட்சிகள் மீது மிகுந்த அவநம்பிக்கை அடைந்துள்ளபடியால், அரசிய
லில் நேரடியாகத் தங்கள் குரல் இடம்பெற வேண்டும் எனக் கோருகிறார்கள்!
முடிவாக, அரசியல் கட்சிகளின் மீதான அவநம்பிக்கை என்பது, உலகில்
மேற்கு, கிழக்கு என வித்தியாசமின்றி, பிரதிநிதித்துவ ஜனநாயக ஆட்சிமுறை
யைக்கொண்ட அனைத்து நாடுகளிலும் உள்ள பொதுமக்களின் பொதுவான
அம்சமாக விளங்குகிறது! அதே நேரத்தில், அரசியல் கட்சிகள் தொடர்ந்து தமது
மையமான பாத்திரத்தை தக்கவைத்துக்கொள்ளும் பொருட்டு அனைத்து வழி
களிலும் முனைப்பாகச் செயல்படும் என்பதில் சந்தேகமில்லை! ஆனால், ஜன
நாயக அரசியல் அமைப்புமுறையில், கட்சிகளின் பரந்த பாத்திரம் என்பது
சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது!
ஆக, எவ்வாறு பார்த்தாலும், அரசியல் கட்சிகள் என்பவை அவசியத் தீமை
என்ற நிலையிலிருந்து கீழிறங்கி பெரும் தீமையாக மாறி ஜனநாயகத்தை
உள்ளேயிருந்து அரித்து அழித்துவருகிறது என்பது மட்டும் நிச்சயமாகும்!
"பிரதிநிதித்துவ ஜனநாயக அமைப்புமுறை"யில் உள்ள ஒரே பிரச்சினை "பிரதி
நிதித்துவம்" என்பது தான்! அதாவது, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதி
களாகிய அரசியல்வாதிகள்தான்! அவர்கள் புரிகின்ற மக்களுக்கெதிரான, மக்கள்
நலன்களுக்குப் புறம்பான அரசியல்தான்! அதாவது,அரசியல்வாதிகள் நமக்கான,
நம்முடைய பிரதிநிதிகளாகச் செயல்படுவதில்லை என்பதுதான்! ஆனால்,
அரசியல் வாதிகள் இவ்வாறு தங்களுடைய ஜனநாயகக் கடமைகளிலிருந்தும்,
பொறுப்புகளிலிருந்தும் வழுவிப்போவதற்கான காரணம், மக்களாகிய நாம்
அவர்களை நம்முடைய பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்து அவர்களின் கைகளில்
நாம் வழங்கிய "ஆட்சியதிகாரம்" தான்! இந்த ஆட்சியதிகாரம் தான் அரசியல்
வாதிகளை மிகவும் பிறழ்வான வழிகளில் செல்லுமாறு செய்கிறது!
இப்போது நாம், அரசியல்வாதிகளின் மீதும், அரசியல் கட்சிகளின் மீதும்
நம்பிக்கையிழந்து அரசியல்வாதிகளையும், அரசியல் கட்சிகளையும் முற்றாகப்
புறக்கணிப்பு செய்கிறோம் எனும்பட்சத்தில், நம்மைப் பிரதிநிதித்துவம் செய்வ
தற்கு எதுவும், எவரும் இல்லை என்றாகிவிடும்! பிறகு பொதுவான அராஜக
நிலை, அதாவது, அரசு இல்லாத குழப்பமான நிலையும், அமைதிக்கேடும்,
சட்ட விதிமுறைகளுக்கு மாறான செய்கையும் ஏற்பட ஏதுவாகிடும் வாய்ப்பு
உள்ளது என்பதை நாம் மறுக்கமுடியாது தான்! ஆனால், அரசு என்பது இங்கே
இருக்கும்போதே அரசியல் கட்சிகளாலும், அரசியல்வாதிகளாலும் ஏற்படுத்தப்
படும் குழப்ப நிலையையும், அமைதிக்கேட்டையும், சட்ட விதிமுறைகளை
மீறிய செய்கைகளையும் எங்கே, எவரிடம் போய் முறையிடுவது?
ஆனால், "அரசு". "அரசாங்கம்" என்பது என்ன? மக்களாகிய நம்மால், தேர்தல்
மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் அமைப்பல்லாமல் வேறென்ன?
அதாவது, நம்முடைய பிரதிநிதிகளும் அரசியல்வாதிகள் தான்; அரசு, அரசாங்
கம் என்பதும் அரசியல்வாதிகளே தான்! உண்மையில், மக்களாகிய நாம் நமக்
கான பிரதிநிதிகள் என்ற பெயரில், நம்மை ஏய்த்து மேய்க்கும் ஆட்சியாளர்
களைத்தான் தேர்ந்தெடுக்கிறோம்! நம்முடைய பிரதிநிதிகளும், நம்மை ஆள்ப
வர்களும் ஒன்றாக, அதே அரசியல்வாதிகளாக இருப்பது தான் அனைத்துத்
தீமைகளுக்கும் அடிப்படைக் காரணம் ஆகும்! அரசியல் கட்சிகள் எனும்
தீமையை மக்களாகிய நம்மால் அவசியமற்றதாக ஆக்கிடவும், அகற்றிடவும்
முடியும்! அதற்கு மக்களாகிய நாம் பிளவுகள் இன்றி, பிரிவினை இன்றி ஒரே
கட்சியாக இருக்கவேண்டும்! அதாவது, நமக்கிடையேயுள்ள அனைத்து வேறு
பாடுகளையும், வித்தியாசங்களையும் விட முக்கியமானது, மேன்மையானது
நம்முடைய "மனிதம்" தான்!
நாம் நமக்குள் பிளவுண்டு, பிரிந்து கிடக்கும்வரை, அரசியல்வாதிகளுக்குத்
தான் சாதகமாயிருக்கும்! ஆகவே, நமக்கிடையேயுள்ள அனைத்து வேறுபாடு
களையும், வித்தியாசங்களையும் கடந்து, அனைத்து மக்களின் பொதுவான
அடிப்படையான நலன் களையும், வாழ்வையும் காப்பாற்றிக் கொள்ளவேண்டு
மெனில், ஜனநாயத்தை நாம் அரசியல் கட்சிகளிடமிருந்தும், அரசியல்வாதி
களிடமிருந்தும் காப்பாற்றியாக வேண்டும்!
•( இக்கட்டுரை, அரசியல் ஆய்வறிஞர்கள் RUSSELL J. DALTON and
STEVEN A. WELDON ஆகியோரது "Public Images of Political
Parties: A Necessary Evil?" எனும் தலைப்பிலான அறிக்கையின்
புள்ளிவிவரங்களையும், சில தரவுகளையும் ஆதாரமாகக் கொண்டு எழுதப்
பட்டதாகும் )•
மா.கணேசன்/ நெய்வேலி/ 29-11-2017
----------------------------------------------------------------------------