Saturday, 30 December 2017

2018 புத்தாண்டுச் செய்தி!




அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

இவை போன்ற இன்சொற்கள் , பாராட்டுக்கள், புகழுரைகள், உணர் ச்சிப் பெருக்கின் உதட்டளவு வாழ்த்துக்கள் .... இவை மட்டுமே இந்த ஆண்டு முழுவதையும் இனிமை நிறைந்ததாகவும், சந்தோஷம் பொங்கச்செய்வதாகவும், வளம் பெருகவும், சகமனிதர்களுக்கு இடையேயான துவேஷங்களையும், ஏற்றத்தாழ்வுகளையும் களைந்துவிடுவதாகவும்  செய்துவிடுமா என்ன?

நாம் சற்று தொலைநோக்கோடு சிந்தித்துச் செயல்படுவது மட்டுமே இந்த ஆண்டு மட்டுமல்லாமல், அடுத்தடுத்த ஆண்டுகளுக்கும் இனிமையையும், சந்தோஷத்தையும், வளங்களையும் பெற்றுத்தருவதாக அமையும்!

குறிப்பாக, அடுத்த ஆண்டு, 2019 என்பது, அதைத் தொடர்ந்து வரப்போகும் ஐந்து ஆண்டுகளின் நம்முடைய வாழ்-நிலையை யும், சந்தோஷத்தையும் தீர்மானிக்கும்  'சோதனை-ஆண்டு'
ஆகும்!  ஆகவே, அதற்குள் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய அரசியல்  விழிப்புணர்வின் முக்கியத்துவம் மகத்தானதாகும்!

இதுவரை தத்துவ ஆன்மீக விஷயங்களைப் பேசிக்கொண்டு இருந்தவன் தற்போது திடீரென அரசியல் பேசுவதாக நம் நண்பர்கள் சிலர் அதிர்ச்சியடையக்கூடும் ! ஆனால், விஷயம் என்னவெனில், கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கிறது! இப்போது தத்துவம் பேசிக்கொண்டிருப்பது தவறல்ல; மாறாக,  கப்பல் மூழ்கிக் கொண்டிருப்பதற்கான காரணிகளை அறிந்து அவற்றைக் களைந்து கப்பலைக் காப்பாற்றுவதற்குரிய  தத்துவத்தைப் பேசுவதே இப்போதைய அவசர அவசியமாகும்!

உண்மையில், நாம் 'அரசியல் ' பேசிக்கொண்டிருக்கவில்லை; மாறாக, நம்முடைய வாழ்வின் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் பற்றிப்பேசிக் கொண்டிருக்கிறோம்! நம்முடைய வாழ்வுரிமைகளையும், வாழ்வாதரங்களையும் காப்பாற்றிக்கொள்வது பற்றிப்பேசிக்கொண்டிருக்கிறோம்! நம்மை நாம்தான் காப்பாற்றிக்கொள்ளவேண்டும்; நம்மை நாம் காப்பாற்றிக்கொள்ளவேண்டுமானால் நாம் பயணித்துக் கொண்டிருக்கும் கப்பலைக்  காப்பாற்றிட வேண்டும்; ஆம், "ஜன நாயகம்" என்பதுதான் அந்தக்கப்பல்! நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் நம்மைக் காப்பாற்றப்போவதில்லை; அவர்களுக்குத் தம் சொந்த நலன்களைப் பெருக்கிக்கொள்ளவும், தம் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ளவுமே நேரம் போதவில்லை!

உலகில் மொத்தம் 195 நாடுகள் உள்ளன, அதில், மொத்தம் 167 நாடுகளில் ஜனநாயக ஆட்சிமுறை நடைமுறையில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது! ஆனால், வெறும் 20 நாடுகளில் மட்டுமே முழு ஜனநாயகம் நடைமுறையில் உள்ளதாகவும், கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் குறைபாடுடைய ஜனநாயகம் (flawed democracy) நிலவுவதாகவும் சொல்லப்படுகிறது.  குறைபாடுடைய ஜனநாயக நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெறுவதாகச் சொல்லப்படுகிறது!

குறைபாடுடைய ஜனநாயகம் என்பது வளர்ச்சி குன்றிய அரசியல் கலாச்சாரம் கொண்டதாகவும், குறைந்த அளவிலான அரசியல் பங்கேற்பு  கொண்டதாகவும், ஆட்சிமுறையில் கோளாறுகள் நிறைந்ததாகவும் இருப்பதைக் குறிக்கிறது! பெரும்பாலான ஜனநாயக நாடுகளின் பிரச்சினை என்பது அவற்றின் பிரதிநிதித்துவக் குறைபாடுகளிலேயே அடங்கியுள்ளது. ஆனால், பெரும்பாலான அரசியல் ஆய்வறி ஞர்களும், தத்துவச் சிந்தனையாளர்களும் 'பிரதிநிதித்துவ ஜனநாயக' முறையை விட்டால்,  ஜனநாயகத்திற்கு  வேறு வழியே இல்லை  என்கிறார்கள்! 

மக்களால், மக்களுக்காக, மக்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் பிரதிநிதிகள் உண்மையில் மக்களை, மக்களின் நலன்களை, ஆர்வங்களை, அடிப்படை வாழ்வாதாரங்களை பிரதிபலிப்பதில்லை, பிரதிநிதித்துவம் செய்வதில்லை எனும் போது, 'பிரதிநிதித்துவ ஜனநாயக' முறையில் இருந்துகொண்டு அரசியலில் எவ்வாறு, எத்தகைய மாற்றத்தை மக்களால் செய்விக்க  முடியும் என்பது தான் இன்றைய முக்கியத்துவம் வாய்ந்த பிரதான அரசியல் கேள்வியாகும்! தேர்தல் மூலம் ஒரு 'நல்ல' அரசியல் தலைவரை தேர்ந்தெடுப்பது சாத்தியமில்லை! தேர்தல் என்பதே ஒரு "சூதாட்டம்" போலுள்ளது! அதில் எப்போதும் மக்களே தோற்பவர்களாக இருக்கிறார்கள்!
வேறு என்ன செய்வது? வாக்களிக்காமல் இருக்கலாமா? ஒரு வகையில் வாக்களிப்பதும், வாக்களிக்காமல் இருப்பதும் ஒன்றாக -பயனற்றதாக- த்தான் இருக்கிறது! ஆனால், வாக்களிக்காமலிருப்பதன் வழியாக நாம் நம்முடைய ஒரே அரசியல் செயல்பாட்டிலிருந்தும் ஒதுங்கிவிடுவதாக உள்ளது!

அப்படியானால்,  புரட்சி செய்யலாமா?  செய்யலாம், ஆனால், அது முற்றிலும் புதுவகையான புரட்சியாக இருக்கவேண்டும்!
 அதாவது, புறத்தே சாலையில் நம்முடைய எழுச்சியையும், கிளர்ச்சியையும், கோபத்தையும் காட்டுவதற்குப்பதிலாக, நம்முடைய அகத்தே செய்யப்படும் புரட்சியாக இருக்க  வேண்டும்! அப்புரட்சி  'அரசியல் ' பற்றிய தெளிவான, தீர்க்கமான பார்வையாக, அறிவாக நம்முள் உருவாகி நம்மைச்  செலுத்துவதாக இருக்கவேண்டும்! இத்தகைய புதுமையான ஆயுதத்தைக்கொண்டு நாம் நம்முடைய அரசியல் பிரதிநிதி களைச் செலுத்தவேண்டும்! ஆம், நாம் அனைவரும் தவறாமல் வாக்களிக்கவேண்டும்! ஆனால், வாக்களித்து விட்டு வழக்கம் போல வெறுங்கையோடு வீடு திரும்பி விதியே என்று வாளாதிருக்கலாகாது!

மாறாக,  நம்முடைய பிரதிநிதிகளை நமக்காகப் பணியாற்றும் படிச் செய்யவேண்டும்! அதை எவ்வாறு செய்வது, எவ்வெவ்வாறெல்லாம் செய்யலாம் என்பதை ஆராய்ந்து கண்டு பிடிப்பதில் தான் நம் ஒவ்வொருவருடைய அரசியல் பங்களிப்பும், உண்மையான அரசியல் ஞானமும் (தந்திரமும்) அடங்கியுள்ளது!

இதுதான் உண்மையான அரசியல், மக்களின் அரசியல்! ஆனால், இதுவரை  'அரசியல் ' என  அரசியல்வாதிகளால் பொதுமக்களுக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டதும், பொதுவாக மக்கள் பேசிவந்ததும் அரசியல்வாதிகளின், அரசியல் கட்சிகளின் பயனற்ற அரசியலாகும்! "இந்த தேர்தலில் எந்தக்கட்சி வெற்றி பெறும்; எந்தக்கட்சி தோல்வியடையும்?" என்பது போன்ற பேச்சுகளும், கூட்டணி பேரம் பற்றியும், உள்கட்சி விவகாரங்கள் பற்றியுமான பேச்சுகளும் மக்களுக்குப் பயன்படாதவை, ஆகவே தேவை யில்லாதவையாகும்!

இவ்வாறு நம்முடைய பிரதிநிதிகளை நமக்காகப் பணியாற்றும் படிச் செய்வதற்கான அடிப்படைகள், நியாயங்கள், முகாந்தரங்கள் உள்ளனவா? உள்ளன! உள்ளன! உள்ளன! நிச்சயமாக உள்ளன!  முதலிடத்தில், ஜனநாயக ஆட்சிமுறையில் 'பிரதிநிதிகள்' என்போர் மக்களின், மக்களுக்கான பிரதிநிதிகள் என்பதாயில்லாமல் வேறு யாருக்கான பிரதிநிதிகள் அவர்கள்?வேறு யாருக்கு அவர்கள் கடமைப்பட்டவர்கள்? நாம் அளிக்கும் நம் ஒவ்வொருவருடைய 'வாக்கு' எனும் அதிகாரத்தின் ஒட்டுமொத்தம் தானே அரசியல்வாதிகளை அமைச்சர்களாக, முதலமைச்சராக ஆட்சியதிகாரத்தில் அமர்த்துகிறது? ஆகவே, அவர்களை நமக்காகப் பணியாற்றும் படிச் செய்வதற்கான அதிகாரமும் நம்முடைய உரிமைகளில் ஒன்றாக அடங்கியுள்ளது! ஆக, வாக்களிப்பதுடன் நம்முடைய ஜனநாயகக் கடமை முடிந்து போவதில்லை; மாறாக, அதனுடன் தான் தொடங்குகிறது!
  ✦
மா.கணேசன்/31.12.2017
-------------------------------------------------------------------------------------------------------------------------

Wednesday, 27 December 2017

இங்கேயும் எங்கேயும் இனி அரசியல் பேசுங்கள்!





"இங்கே அரசியல் பேசாதீர்கள்!" என்று பல உணவு விடுதிகளிலும், முடிதிருத்
தகங்களிலும் எழுதிப்போடப்பட்டிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால்,
இந்த அறிவிப்பின் அர்த்தம் என்ன என்று நாம் எப்போதாவது யோசித்துப்
பார்த்ததுண்டா? அதாவது அரசியல் பேசினால், வீண் விவாதங்களும், சண்டை
களும், கைகலப்புகளும், சில வேளைகளில், வெட்டு, குத்தும் நிகழலாம் என்ப
தாலேயே அவ்வாறு எழுதிப்போடப்பட்டுள்ளது என நாம் மிகச் சுலபமாகப்
புரிந்துகொள்கிறோம்! இதன் காரணமாகவே, நம்மில் பெரும்பாலானோர் பொது
இடங்களில் எவ்வகை அரசியலையும் பேசுவதில்லை! ஆனால், அரசியல்
பேசினாலேயே ஏன் வீண்வாதங்களும், சண்டை சச்சரவுகளும், அடி தடிகளும்
ஏற்படவேண்டும்?

ஆனால், உண்மையில், அரசியல் பேசுவதால், அதாவது, உண்மையான அர்த்த
முள்ள அரசியலைப் பேசுவதால் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்பில்லை!
மாறாக, "கட்சி அரசியல்" பேசுவதால் தான் ஏற்படுகின்றன! மேலும், அரசியல்
பேசவேண்டுமென்றாலேயே மக்கள் பரஸ்பரம் ஒன்றையொன்று எதிர்க்கும்
வகையிலான அணிகளாகவும், கட்சிகளாகவும் தான் பிரிந்து நிற்கவேண்டுமா
என்ன?

அப்படியானால், இது எத்தகைய அரசியல்? பெரும்பாலான மக்கள் ஏன் அரசி
யல் பேசுவதில்லை, அரசியல் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் காட்டுவ
தில்லை, தீவிரமாக ஈடுபடுவதில்லை? பெரும்பாலான மக்கள் அரசியலில்
ஆர்வம் கொள்ளாதிருப்பதற்கு ஒரு முக்கிய காரணம், அரசியல் என்பது
மக்களின் வாழ்க்கையிலிருந்து வெகு தொலைவு விலகியிருக்கிறது; அதாவது,
மக்களின் உண்மையான வாழ்க்கையுடன் (மக்களின் நலன்களுடன்) அரசியல்
தொடர்பற்றதாக உள்ளது என்பதுதானாகும்!

இதுவரை 'அரசியல்' என்று மக்களுக்குக் கற்பிக்கப்பட்டிருப்பது, மக்களுக்கான
அரசியல் அல்ல; மாறாக, அரசியல்வாதிகளின் அரசியலே ஆகும்! அதாவது,
அரசியல் என்றாலே அது கட்சி கட்டுவது, தேர்தலில் நிற்பது, ஆட்சியதிகாரத்
தைப் பிடிப்பது; ஆட்சியைப் பிடித்தபிறகு அதைத் தக்கவைத்துக் கொள்வதற்
கான விவகாரங்களில் ஈடுபடுவது; எதிர்க்கட்சிகளைச் சமாளிப்பது; அல்லது
இருக்கவே இருக்கிறது, உள்கட்சி விவகாரங்கள் அவற்றைச் சமாளிப்பது ....
போன்ற இவை யாவும் அரசியல்வாதிகளின் அதிகார மோகத்தின் அரசியல்
ஆகும்!

ஆண்டு முழுவதும் ஆளும் கட்சியின் உள்கட்சிப் பிரச்சினைகளை, அல்லது
எதிர்க்கட்சியின் விமர்சனங்களை பரபரப்புச் செய்திகளாக்கி ஊடகங்கள்
தம்முடைய வியாபாரத்தை நடத்திச்செல்கின்றன! அவ்விவகாரங்களில் மக்கள்
ஈடுபாடு கொள்வதற்கு எதுவுமில்லை! அரசியல் கட்சிகளின் விசுவாசத்
தொண்டர்களுக்கு வேண்டுமானால் அவை முக்கியத்துவம் வாய்ந்த அரசியல்
நிகழ்வுகளாகத் தெரியலாம்! ஏனெனில், கட்சித்தொண்டர்கள் தங்களுக்கு
எப்போதாவது ஏதேனும் ஆதாயம் கிடைக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பில்
முதலீடுசெய்துவிட்டு, தம் கடன் கட்சிப்பணியாற்றிக்கிடப்பதே என்று

தங்களதுசுய-முக்கியத்துவத்தைத் தொலைத்துவிட்டவர்களாவர்!

ஜனநாயகத்தின் சாபக்கேடு என்னவென்றால், அரசியல் கட்சிகள், அதாவது,
கட்சிகளின் பிரதானத் தலைவர்கள் அரசியலை, குறிப்பாக, தேர்தலில் வெற்றி
பெறுவதைத் தங்களது சொந்த விவகாரமாகக் கொண்டுவிடுவதேயாகும்!
இதன்விளைவாக, ஒரு கட்சியானது, தனது ஒட்டுமொத்த சக்தியையும் இன்
னொருகட்சி ஆட்சிபுரிவதற்கு தகுதியற்றது என நிரூபிப்பதிலேயே அர்ப்பணம்
செய்கிறது! பரஸ்பரம் ஒவ்வொரு கட்சியும் இதையே செய்வதன் மூலம்
எந்தக் கட்சியும் ஆட்சிபுரிவதற்கு தகுதியற்றது என்பதை மெய்ப்பித்துவிடுகின்
றன! ஆட்சியதிகாரத்தை மட்டுமே இலக்காகக்கொண்ட இந்த அர்த்தமற்ற
போட்டா போட்டியில், அரசியல் கட்சிகள் மக்களை, மக்களின் நலன்களை
மறந்து விடுகின்றன! மக்களும் தங்களது மையமான பிரச்சினைகளை மறந்து
கட்சி அரசியல் விவகாரங்களில் ஆழ்ந்துவிடுகின்றனர்! பெரும்பாலான மக்கள்

கட்சிகளுக்கிடையேயான போட்டியை, இரு அணிகளுக்கிடையேயான கால்
பந்தாட்டப் போட்டியை ரசிப்பதுபோல வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கின்
றனர்! இவ்வழியே மக்களும் அரசியல்வாதிகளின் கட்சி அரசியல் எனும் கால்
பந்தாட்டத்தில் சேர்ந்துகொண்டு தங்களுக்கு எதிராக "கோல்" போட்டு ஒவ்
வொரு முறையும் தோற்றுப் போகின்றனர்!

மக்கள் தம் விருப்பத்தேர்வின்படி இந்தக்கட்சி அல்லது அந்தக்கட்சியுடன்
இணைந்துகொள்வதன் மூலம் பிளவுண்டு போவதை அரசானது தனக்குச்
சாதகமாகக் கொண்டுவிடுகிறது

ஆனால், உண்மையான, அர்த்தமுள்ள அரசியல் என்பது, குறிப்பாக ஜனநாயக
அமைப்பைப்பொறுத்தவரை, மக்கள் தங்கள் ஆர்வங்கள், அடிப்படை நலன்கள்,
ஆகியவை தங்களால் தேர்வுசெய்யப்பட்ட அரசியல் பிரதிநிதிகளால் முறை
யாக நிறைவேற்றப்படுகின்றனவா, இல்லையா என்பதை கண்ணும் கருத்து
மாகக் கவனிப்பதைத் தவிர வேறு எதுவாகவும் இருக்கமுடியாது! பிரதிநிதித்
துவ ஜனநாயக அமைப்புமுறையில், அரசியல் கட்சிகள் தவிர்க்கமுடியாதவை
எனக் கொண்டாலும், கட்சிகளுக்கிடையேயான பூசல்கள், பிரச்சினைகள்;
மற்றும், ஒரு கட்சியின் உள்-கட்சி விவகாரங்கள் போன்ற எதுவும் மக்களின்
கவனிப்பிற்கும், அக்கறைக்கும் உரியவை அல்ல!

நாடகக் கலைஞர்கள் மேடையேறிய பிறகு, தங்களுக்கிடையே, "நான்தான்
தலைமை வேடத்தில் நடிப்பேன்!" " இல்லை, நான்தான் அந்த வேடத்தில்
நடிப்பேன்!" என்று தங்களுக்குள் அணி பிரிந்து சண்டையிட்டுக் கொண்டு
நேரத்தைக் கடத்திக்கொண்டிருப்பதையே நாடகம் என நிகழ்த்துவார்களேயா
னால், பார்வையாளர்கள் எவ்வாறு அதைச் சகித்துக் கொள்வார்கள்? ஆனால்,
நிஜ வாழ்வில் இத்தகைய அபத்தம் தான் அரசியல் மேடையில், 'உள்கட்சிப்
பூசல்', 'கூட்டணி பேரம்' என்றெல்லாம் நிகழ்த்தப்பட்டுவருகிறது, அதையும்
மக்களாகிய நாம் அரசியல் என எடுத்துக்கொண்டு சகித்துக்கொண்டுதான்
செல்கிறோம்! இத்தகைய அவலத்தில் இனியும் நாம் பங்குகொள்ளாமல்
இருப்போமாக! ஏனெனில், கிஞ்சித்தும் இவை எதுவும் நேர்முகமாகவோ,
அல்லது மறைமுகமாகவோ மக்களாகிய நம்முடைய அடிப்படை நலன்களைப்
பற்றியவையோ, தொடர்புடையவையோ அல்ல! இதன் அர்த்தம், அரசியல்
வாதிகள் எப்போதும் மக்கள் நலன்களைப்பற்றியே சிந்தித்துக்கொண்டும்,
பேசிக்கொண்டும், செயல்பட்டுக்கொண்டும்தான் இருக்கவேண்டும் என்பதல்ல!
மாறாக, முதலிடத்தில் இருக்க வேண்டிய மையமான இவ்வம்சம் ( மக்கள்
நலன்கள்) அரசியல்வாதிகளின் அரசியல் நிகழ்ச்சிநிரலில் கடைசி இடத்தில்கூட
இல்லை என்பதையே நாம் இவ்வாறு இங்கு சுட்டிக்காட்டுகிறோம்!

முதலிடத்தில், 'அரசியல்' என்பது எதற்காக? 'அரசியல்வாதிகள்' எதற்காக?
தேர்தல்கள் எதற்காக? மக்கள் எதற்காக வாக்களிக்க வேண்டும்? 'அரசாங்கம்'
'அரசு' எதற்காக? இவையெல்லாம், மனிதவாழ்வில் எந்த இடத்தில் எவ்வகை
யில் பொருந்துகின்றன? மனித வாழ்வில் இவற்றின் பங்கு, பணி, பாத்திரம்
என்ன? இந்த ஒவ்வொன்றையும் நாம் மறு பரிசீலனை செய்தாக வேண்டும்!
இனி மக்களாகிய நாம் கூடுகின்ற எல்லாஇடங்களிலும், எப்போதும் நமக்கான
அரசியலைப் பேசியாக வேண்டும்! நமக்கான அரசியல் எது என்பதை முதலில்
நாம் ஒவ்வொருவரும் இனம்கண்டாக வேண்டும். இதற்காகவே நாம் அரசியல்
பேசியாக வேண்டும்! இதுவரை, அர்த்தமற்ற 'கட்சி அரசியலின்' வெறும்
பார்வையாளர்களாக நாம் இருந்தது போதும்; இனி அர்த்தமுள்ள மக்களின்
அரசியலில் ஆர்வத்துடன் பங்கு கொள்வோமாக!

மா.கணேசன்/  22-12-2017
----------------------------------------------------------------------------

Sunday, 10 December 2017

பொதுவாக மக்கள் ஏன் அரசியலில் ஈடுபாடு கொள்வதில்லை?




   பொதுமக்களுக்கு, 'அரசியல்' என்பது ஒரு அசுத்தமான சொல்லாகும்.
   எனினும், 'ஜனநாயகம்' என்பது ஒரு நேர்மறையான கருத்தியலாக
   உள்ளது. சமகாலத்திய பிரச்சினை என்னவாகத் தெரிகின்றதென்றால்,
   பெருமளவிலான பொதுமக்கள் அரசியல் இல்லாத ஜனநாயகத்தையே
   விரும்புகிறார்கள்.     - மேத்யூ ஃப்ளிண்டெர்ஸ் 
                                                (Matthew Flinders, director of the
                                                          Bernard Crick Centre)
                                                                      • • •

பொதுவாக மக்களும், இன்னும் இளைஞர்களும் ஏன் அரசியலை விரும்புவ
தில்லை; அரசியலில் ஈடுபடுவதில்லை? ஏனெனில், தமது தலைவிதியை,
வாழ்-நிலையைத் தீர்மானிக்கும் இடம் "அரசியல் களம்" தான் என்பதை அவர்
கள் இன்னும் அறியாதிருப்பது தான் காரணமாகும்! மேலும், அரசியல் என்பது
விசேடமான சிலருக்கு மட்டுமே உரிய துறை என்பதான ஒரு பிம்பத்தை
தொடக்கத்திலிருந்தே அரசியல்வாதிகள் உருவாக்கிவிட்டுள்ளனர். முக்கியமாக,
அரசு, அரசாங்கம் என்பது அதிகார மையமாகத் திகழ்வதால், மிகத் தந்திரமாக
மக்களை அரசியல் பக்கம் அண்டவிடாமல் பார்த்துக்கொண்டனர்! மேலும், நய
வஞ்சகமாக, "அரசியல் என்பது ஒரு சாக்கடை!" என்று சொல்லி அரசியலை
அருவருக்கத்தக்க ஒரு விஷயமென அச்சுறுத்தி மக்களை அருகே நெருங்கவி
டாமல் செய்த அரசியல்வாதிகள் அரசியலை தங்களுக்கான ஏகபோக சரணா
லயமாகக் கொண்டுவிட்டனர்!

"அரசியல்" என்றாலே தந்திரம், நயவஞ்சகம், சூழ்ச்சி, சதி, மோசடி, ஏமாற்று,
துரோகம், பொய்ம்மை, சூது . . .ஆகிய அர்த்தங்கள் தொனிக்கின்ற வகையில்
ஒருவகை ஒவ்வாமை தோன்றும்படி செய்துள்ளனர்!

மேலும், தேர்தல் எனும் ஒற்றைச் சடங்கைத் தவிர, அரசியல் நிகழ்வுகள்,
செயல்பாடுகள் ஆகிய எதிலும் மக்கள் பங்கெடுக்கும் வகையில் அரசியல்
அமைந்திருக்கவில்லை! சட்டமன்றம், நாடாளுமன்றம் என இரு அவைகளுக்
கும் தங்களுக்கான உறுப்பினர்களை, அதாவது, பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்
பதுடன் மக்களின் அரசியல் செயல்பாடும், பங்கெடுப்பும் முடிந்து விடுகிறது!
இவ்வுறுப்பினர்கள் பெயரளவிற்குத்தான் மக்களின் பிரதிநிதிகள்; மற்றபடி
எதார்த்தத்தில் அவர்கள் மக்களை ஏய்த்து மேய்த்து சர்வாதிகாரம் செய்யும்
எசமானர்களைப் போலவே நடந்து கொள்கின்றனர்!

அடுத்து, தேர்தலில் அதிக வாக்குகளைப்பெற்று ஆட்சியதிகாரத்திற்கு தேர்வான
ஒரு கட்சியானது ஆட்சியமைத்ததிலிருந்து அடுத்த ஐந்து ஆண்டுகள் வரை
அக்கட்சியின் ஒரே செயல்பாடு என்பது உள்-கட்சி விவகாரங்களை, பூசல்களை

அலசிக்கொண்டிருப்பதும், பஞ்சாயத்து பண்ணுவதும் மட்டுமே யாகும்! ஆக,
உள்-கட்சிப்பூசல்களிலும், விவகாரங்களிலும் - பத்திரிகைகள் மற்றும் ஊடகங்
களைத்தவிர - மக்களுக்கும், இளைஞர்களுக்கும் என்ன பங்கு, பணி, பாத்திரம்
இருக்க முடியும்?

அடுத்து, ஆளுகின்ற கட்சியின் ஆட்சிக்காலம் முடிவுறும் கட்டத்தில், அடுத்த
தேர்தலுக்குத் தயாராவதற்குரிய பிரச்சாரம், பொதுக்கூட்டம், மாநாடு, கூட்ட
ணிப் பேரங்கள், போன்ற சடங்குகள் மட்டுமே பிரதான அரசியல் விஷயங்கள்
ஆகும்! இத்தகைய சடங்குகளில் கட்சி உறுப்பினர்கள், தொண்டர்கள் மட்டுமே
பங்குபெறுகிறார்கள்; ஏனெனில், கட்சித் தொண்டர்கள் தங்களுக்கு ஏதேனும்
ஆதாயம் கசியக்கூடும் என்ற நம்பிக்கையில், கட்சி எனும் படிமுறை அமைப்
பில் கீழ்ப்படியாயிருந்தாலும் கட்சியில் தங்களுக்கு ஒரு இடமும், உரிமையும்
உள்ளதாக, கட்சியில் உறுப்பினரல்லாத பொதுமக்களைவிட முன்னுரிமை
பெற்றவர்களாகத் தங்களை எண்ணிக்கொள்கிறார்கள்!

அதாவது, "அரசியல்", குறிப்பாக "ஜனநாயக அரசியல்" என்பது மக்களையும்,
மக்களின் நலன்களையும் மையமாக, (முதலீடாகக்) கொண்டு எழுப்பப்பட்ட
ஸ்தாபனம் ஆகும். ஆனால், அரசியல்வாதிகளோ முதலுக்கே மோசம் விளை
யும்படியாக அனைத்து அரசு வருமானத்தையும் தாங்களே சுருட்டிக்கொண்டு
போய்விடுகின்றனர்! அதாவது, மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரிப்பணத்தி
லிருந்துகூட மக்களுக்கு கட்டடங்கள், சாலைகள், பாலங்கள், மின்சார
இணைப்புகள் போன்ற அடிப்படைக்கட்டமைப்பு வசதிகளைக்கூட நிறைவேற்று
வதில்லை!

மிக முக்கியமாக, பொதுமக்களும், இளைஞர்களும், சமூக நோக்கும், அக்கறை
யும் கொண்ட அறிவு-ஜீவிகளும் அரசியலில் ஈடுபடவேமுடியாத அளவிற்கான
இரும்புக்கோட்டையாக அரசியல் களமானது, ஏற்கனவே கட்சி-அரசியலில்
தங்களை ஸ்தாபித்துக்கொண்ட தனிநபர்களாலும், கும்பல்களாலும்; பணபலம்,
ஆள்பலம், மற்றும் செல்வாக்கு கொண்டவர்களாலும்; குறிப்பாக, அதிகார
மோகம்கொண்ட சில விபரீத புத்திக்காரர்களாலும் மேலாதிக்கம் செய்யப்பட்டு
வருகிறது! இத்தகைய மேலாதிக்கம், மேலாண்மை, ஜனநாயக விரோதமானது
என்பதில் சந்தேகமில்லை!

நம்முடைய பிரதிநிதித்துவ ஜனநாயக அமைப்பில், மக்களாகிய நாம், நமக்கான
பிரதிநிதிகளை தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுத்து ஆட்சியதிகாரத்தை அவர்கள்
கைகளில் கொடுத்துவிட்டாலே போதும், மற்றவைகளை அவர்கள் பார்த்துக்
கொள்வார்கள்! அதாவது, அரசியல் செய்வது அரசியல்வாதிகளின் வேலை;
அதைப்பற்றி மக்கள் கண்டுகொள்ள வேண்டாம்; மக்களுக்கு அரசியல் என்பது
வேண்டாத வேலை என்பதாக நாம் பழக்கப்படுத்தப்பட்டுள்ளோம், அதாவது,
ஓரம் கட்டப்பட்டுள்ளோம்!

உண்மையில், அரசியல் என்பது அல்ஜீப்ரா, அல்லது, உயர்-கணிதம் போலக்
கடினமானதல்ல! உண்மையான, மக்களுக்கான, அர்த்தமுள்ள அரசியல்
என்பது எளிய மக்களைப்போலவே எளிமையானது! அரசியலில் ஈடுபட
யாதொரு ராஜ-தந்திரமும், விசேட அரசியல் ஞானமும், தருக்க சாஸ்திரமும்,
எதுவும் வேண்டியதில்லை! சாதாரண மக்களுக்கு அரசியலில் ஆர்வம்
இல்லை என்பதாக, பலமுறை பலராலும், சொல்லப்பட்டு வந்துள்ளது;
ஆனால், போலியான அரசியலில்தான் மக்களுக்கு ஆர்வம் இல்லை என்பது
தான் உண்மையாகும்!

மேலும், தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் அரசியலில், கோணல் புத்திக்
காரர்களும், அதிகாரமோகம் கொண்ட சோம்பேறிகளும், ஒரு மனிதஜீவியாக
வாழ்வது என்றால் என்னவென்பதை சிறிதும் அறியாத மனிதத்தன்மையற்ற
சிலர் மட்டுமே தீவிரமாக அரசியலில் ஈடுபடவிரும்புவர்!

பொதுமக்கள் அரசியலில் பங்குபெறுவது குறித்து பல ஆட்சேபங்கள் தெரிவிக்
கப்படுகின்றன; ஆனால், அந்த ஆட்சேபங்கள் அனைத்தும் அடிப்படையற்ற
வையும், அபத்தமானவையுமாகும்! சாதாரண மக்கள் பொதுவாக புத்திசாலித்
தனத்தில் குறைந்தவர்கள், திறம் குறைந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது;
அதனால், அவர்களால் அரசியலில் திறம்படச் செயல்படமுடியாது என்று சிலர்
ஆட்சேபம் தெரிவிக்கிறார்கள். ஆனால், இந்த ஆட்சேபம் அடிப்படையற்றது.
ஏனெனில், அரசியலாகட்டும், பொருளாதாரமாகட்டும், வேறு எவ்வொரு அம்ச
மாகட்டும், யாவும் எதற்காக இருக்கின்றன? யாவும் வாழ்க்கைக்குச் சேவை
செய்வதற்காகத்தானே? மனிதர்கள் தம் வாழ்க்கையை முழுமையாக வாழ்வ
தற்கு உதவி புரிவதற்கான கருவிகள் தானே அவை? இவ்வுலகின் அதிமேதா
விகள், அறிவுஜீவிகள், தத்துவவாதிகள், சிந்தனையாளர்கள் எனப்படுபவர்களில்
எத்தனை பேர், அடிப்படை உயிர்-வாழ்க்கையைக் கடந்த உயர்-வாழ்க்கையின்
அசலான அர்த்தத்தையும், குறிக்கோளையும், இலக்கையும் புரிந்துகொண்டவர்
களாக இருக்கின்றனர்?

அதி புத்திசாலிகள் என்று தங்களைக் கருதிக்கொள்பவர்களும், பெரும் பணக்
காரர்களும், 'சாதாரண' மனிதர்கள் வாழும் அதே வாழ்க்கையை, மிகவும்
பிறழ்ச்சியான வகையில் அலங்காரமாகவும், ஆடம்பரமாகவும் வாழ்கிறார்கள்,
அவ்வளவு தானே? அதிகப் பணத்தையும், பொருட்களையும் கொண்டு எவரும்
எவரைவிடவும் அதிகமாகவோ, மேலான வகையிலோ வாழ்ந்துவிடமுடியாது!
அதாவது, கோடி கோடியாக பணம் சம்பாதிப்பதும், தேவைக்கு மேலாக பெரும்
செல்வம் சேர்ப்பதும் வாழ்க்கையின் குறிக்கோளாகவோ, இலக்காகவோ
இருக்கமுடியாது!

மக்கள், சாதாரண மக்கள் கௌரவமான வகையில் உயிர்-வாழ்வதற்கு எல்லா
உரிமையும் உள்ளது! யாவற்றுக்கும் மேல் அவர்களிடம் "உழைப்பு" உள்ளது!
ஆம், 'சாதாரண' மக்கள் உண்மையில் சாதாரண மக்கள் அல்ல; அவர்கள்
உழைப்பாளிகள், அவர்கள் பிச்சைக்காரர்களோ, அல்லது அடுத்தவர்களின்
உழைப்பில் வாழும் சோம்பேறிகளோ அல்ல! உண்மையான அறிவும், புத்தி
சாலித்தனமும் பணத்தையும், செல்வத்தையும் சம்பாதிப்பதை உயரிய மதிப்
பீடாக ஒரு போதும் கொள்ளாது! மாறாக, "எல்லோரும் இன்புற்று வாழ
வேண்டும்!" என விரும்புவதுதான் உண்மையான புத்திசாலித்தனமும்,மேலான
அறிவும் ஆகும்!

ஆகவே, அன்றாடம் தங்கள் உழைப்பில் ஆழ்ந்து சமூகத்தின் அனைத்துப்
பொருட்களையும் வளங்களையும் உருவாக்கித் தந்திடும் உழைக்கும் மக்களை
புத்திசாலித்தனத்தில் குறைந்தவர்கள், திறம் குறைந்தவர்கள் என்று சொல்வது
அபத்தமானதாகும். மேலும், அவர்கள் நேரடியாக அரசியலில் பங்குபெற்றுத்
தான் அவர்களுக்குரிய நியாயமான அடிப்படைக் கட்டமைப்புகளை, வசதிகளை
அடைந்தாகவேண்டும் என்பது தேவையற்றது! ஏனெனில் மக்களின் பெயரால்
அமைக்கப்பட்ட ஜனநாயக அரசியல் அமைப்பில், 'சாதாரண' மக்களால் தேர்ந்
தெடுக்கப்படும் அரசியல் பிரதிநிதிகளுக்கு மக்களின் தேவைகளையும், நலன்
களையும் குறிப்பால் அறிந்து தங்களது அரசியல் பணியை முறையாக நிறை
வேற்றுவதை விட வேறு வேலை என்ன இருக்கமுடியும்?

இன்னொரு பொதுவான ஆட்சேபம் என்னவென்றால், பெரும்பாலான மக்கள்
அரசியலில் ஆர்வம் காட்டுவதில்லை! இன்னும் அவர்கள் வாக்களிப்பதுபற்றிக்
கூட பொருட்படுத்துவதில்லை எனப்படுகிறது! உண்மைதான், ஏனெனில், அம்
மக்களின் நலன்களையும், ஆர்வங்களையும் எவரும் கண்டு கொள்வதில்லை;
அவை பிரதிநிதித்துவம் செய்யப்படுவதில்லை எனும் பட்சத்தில், வாக்குச்
சாவடிக்குச் செல்வது என்பது கூட நேர-வீணடிப்பு என்பதாக அவர்கள் கருது
கின்றனர்! அதேநேரத்தில், ஸ்விட்சர்லாந்து போன்ற பல ஜனநாயக நாடுகளில்
பொதுமக்களின் அரசியல் ஆர்வமும், ஈடுபாடும் அதிக அளவில் உள்ளது!

ஆனால், உண்மையான பிரச்சினை பொதுமக்கள் அரசியலில் ஆர்வம் காட்டு
வதில்லை என்பது அல்ல! மாறாக, மக்களின் நலன்களை, ஆர்வங்களை,
மக்கள் பிரதிநிதிகள் கவனியாமல் இருப்பதுதான்! அதற்குக்காரணம், அரசியல்
பிரதிநிதிகளின் சொந்த நலன்களும், அரசியல்வாதிகளைப் பின்னால் இருந்து
இயக்குகின்ற பிற ஆதிக்கசக்திகளின் நலன்களும், ஆர்வங்களும் முதன்மை
பெறுவதே யாகும்!

இன்று பெரும்பாலான வாக்காளர்கள், தேர்தலில் போட்டியிடும் அரசியல்
கட்சிகளில் இந்தக்கட்சியா, அல்லது அந்தக்கட்சியா என ஒன்றைத் தேர்ந்
தெடுப்பது தான் ஜனநாயகம் என்பதாக கருதிக்கொண்டிருக்கிறார்கள்! ஆனால்,
இப்பிரமை கடந்த பல நூற்றாண்டுகளாக முடியாட்சி, மற்றும் பிரபுத்துவ
ஆட்சிமுறைகளிலிருந்து மாறி வருவதற்கு வழியமைத்துக்கொடுத்தது. ஆனால்,
இன்று அது புதிய ஆதிக்க எந்திரத்தையும், ஒரு புதிய மேட்டுக்குடியையும்
உருவாக்கியுள்ளது; அது எவ்வகையைச் சேர்ந்ததோ, ஆனால், அது ஜனநாயக
பூர்வமானதல்ல! அரசியல்வாதிகள் பெயரளவிற்கு மட்டுமே மக்களின் பிரதி
நிதிகள்; உண்மையில் அவர்கள் ரகசிய ஆதிக்க அமைப்புக்களின் சார்பாக
மக்களிடம் பேரம் பேசும் முகவர்களே யாவர்! ஏனெனில், அந்த ஆதிக்கச்
சக்திகள்தான் அரசியல்வாதிகளை பின்புலத்திலிருந்து ஆதரிப்பவையும், அவர்
களது பதவிகளைப் பாதுகாப்பவையும் ஆகும்!

மேலும், பொதுமக்கள் அதிக அளவில் அரசியலில் ஆர்வம் கொள்வதையும்,
ஈடுபடுவதையும் பதவி வெறியும், அதிகார வெறியும் கொண்ட அரசியல்வாதி
கள் விரும்பவோ, ஊக்குவிக்கவோ  செய்வார்கள் என்று நாம் எதிர்பார்ப்பது
அர்த்தமற்றது; அது ஒருபோதும் நிகழாது! ஏனெனில், பொதுமக்களின் தீவிர
அரசியல் பங்கேற்பு என்பது கடைசியில் அரசியல் வாதிகளின் போலியான
முக்கியத்துவத்தை வெகுவாகக் குறைத்துவிடும்!

உண்மையில் இன்று நாம் இருக்கும் ஜனநாயக அமைப்புமுறை எவ்வாறு
நம்மை வந்தடைந்தது என்பதை மக்களாகிய நாம் அறிந்தோமில்லை!
ஜனநாயக அமைப்பை ஸ்தாபிப்பது என்பது ஒரு விஷயம் என்றால், அதைப்
பாதுகாப்பது என்பது இன்னொரு விஷயம் ஆகும்! குறிப்பிட்ட ஒரு இடத்தில்,
காலத்தில், அதிக ஜனநாயகம் இருக்கலாம்; ஆனால், எக்காலத்திலும் சிலர்
அல்லது சில ஸ்தாபன சக்திகள் ஜனநாயகத்தை மட்டுப்படுத்தி தமக்கு அதிக
அதிகாரத்தைப் பெற முயல்வது நிகழும். வேறு சொற்களில் சொன்னால்,
சுதந்திரத்தைப்போலவே ஜனநாயகமும் தொடர்ந்து பாதுகாக்கப்படவும்,
பராமரிக்கப்படவும் வேண்டும்! தொடர்ந்து பராமரிக்கப்படாது விடப்படும்
வீடானது நாளடைவில் சிறிது சிறிதாக வலுவிழந்து, ஒரு நாள் இடிந்து விழக்
கூடும்! அந்த ஒரு நாள் எந்த நாள் என்பது இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொள்ளும்
போது நிச்சயம் தெரியவரும்!

"ஜனநாயக அமைப்பின் பிரஜைகளாகிய மக்கள் அரசியலில் பங்கெடுப்பதன்
மூலம் மட்டுமே அரசியல் பூர்வமாக 'உயிர்ப்புடன்' இருக்கமுடியும். பலருக்கு
(எல்லோருக்கும் அல்ல) அரசியல் பூர்வமாக 'உயிர்ப்புடன்' இருப்பது என்பது
சுவாசிக்க முடிவதற்குச் சமமானது." என்பதாக நூலாசிரியர் இவோ மோஸ்லே
குறிப்பிடுகிறார்! ஆனால், அரசியல் பூர்வமாக 'உயிர்ப்புடன்' இருப்பதைவிட
முதலில் மனிதர்கள் உயிர்-பிழைத்திருக்க வேண்டுமல்லவா? மேலும் மனிதர்
கள் உருவாக்கிய கருவிகளே மனிதர்களை அடிமைப்படுத்துவதாக, அழிப்பதாக
மாறுவதற்கு இடம் தரலாமா? ஆம், எத்தகைய சமூகத்தை நமக்கு நாமே உரு
வாக்கிக்கொள்ள விரும்புகிறோம் என்பதே இப்போதைய அதிமுக்கியத்துவம்
வாய்ந்த கேள்வியாகும்! உண்மையான ஜனநாயக சமூகங்களில், அரசியல்
பங்கெடுப்பு என்பது ஒரு உத்தியோகம் அல்ல; மாறாக, அது ஒரு உரிமையும்,
கடமையும் ஆகும்!


மா.கணேசன்/ நெய்வேலி/ 04-12-2017
----------------------------------------------------------------------------

Monday, 4 December 2017

அரசியல் கட்சிகள் - அவசியத் தீமையா, அல்லது தீமையா ?



   அவசியத்தீமை என்பது அவ்வளவாக சாதகமல்லாத ஆனால்
   அப்போதைக்குத் தேவைப்படும் ஒரு விஷயம், அல்லது அம்சத்தைக்
   குறிப்பதாகும். அவ்விஷயம் இல்லாவிடில் அதிக பாதகம் விளைவதா
   யிருக்கும்! மேலும், அவ்விஷயத்திற்கு மாற்றாக வேறு எதுவும்
   தற்போதைக்கு இல்லாததினால் அவ்விஷயம் அவசியமான தீமை
   எனப்படுகிறது!


பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் அடித்தளம் என்று கருதப்படும் அரசியல் கட்சி
களின் மீதான பொது மக்களின் நம்பிக்கையின்மை சமீபகாலமாக பரவலாக
எல்லா நாடுகளிலும் நிலவுகிறது! இன்று மிகக் குறைவான பிரஜைகள் தான்
அரசியல் கட்சிகளை நம்புகிறார்கள்! இந்நிலைமையானது ஜனநாயக அரசிய
லின் தன்மையையே மறுவடிவாக்கம் செய்துகொண்டிருக்கிறது என்பதாக
அரசியல் ஆய்வறிஞர்கள், ரஸ்ஸல் ஜெ. டால்டன் (RUSSELL J. DALTON),
மற்றும் ஸ்டீவென் எ. வெல்டான் (STEVEN A. WELDON)ஆகியோரது ஆய்வு
முடிவுகள் தெரிவிக்கின்றன!

அரசியல் கட்சிகளைப்போல வேறு எந்நிறுவனமும் பிரதிநிதித்துவ ஜனநாயக
வழிமுறையுடன் மிக நெருக்கமாக அடையாளப்படுத்தப்படவில்லை! மிகவும்
புகழ் வாய்ந்த அரசியல் விஞ்ஞானி  E.E. Schattschneider அவர்களின்
அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் முடிவு என்னவெனில், "அரசியல் கட்சிகள்
இன்றி வேறு எதைக்கொண்டும் நவீன ஜனநாயகத்தை எண்ணிப்பார்க்க இய
லாது!" அடுத்து, James Bryce அவர்களின் கூற்று என்னவெனில், "அரசியல்
கட்சிகள் தவிர்க்கவியலாதவை. ஏனெனில், அவையின்றி எவ்வாறு பிரதிநிதித்
துவ அரசாங்கத்தை நடத்துவது என்பது பற்றி எவரும் எடுத்துச் சொல்ல
வில்லை"

மேலும் பல அரசியல் விஞ்ஞானிகளும், ஆய்வாளர்களும், மேற்குறிப்பிட்ட
பார்வைகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். குறிப்பாக அமெரிக்க அரசியல் விஞ்
ஞானக் கழகமானது, "அதிக பொறுப்புகொண்ட அரசியல் கட்சியின் அரசாங்கம்
வேண்டும்" என 1999,Economist இதழின் ஒரு கட்டுரையில் அழைப்பு
விடுத்தது! அக்கட்டுரையானது, ஜனநாயகத்தின் அடித்தளமாகக் கருதப்படும்
அரசியல் கட்சிகளின் பணி, பாத்திரம் குறித்து பரிசீலித்தது.

ஜனநாயகத்திற்கு அரசியல் கட்சிகள் மிகவும் அடிப்படையானவை என்று
பொதுவாகப் பார்க்கப்பட்டாலும், அரசியல் கட்சிகளின் பங்களிப்பு குறித்து
கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஒருபுறம், கட்சி அரசாங்க ஏடுகள்,
கட்சிகள் ஆற்றுகின்ற நேர்மறையான பாத்திரம் குறித்து வலியுறுத்திக் கூறு
கின்றன! மறுபுறம், அரசியல் கட்சிக்கு எதிரான நெடிய வரலாற்றைக் கொண்ட
அபிப்பிராயம், ரூஸோ (Rousseau) முதல் மேடிஸன் (Madison) வரை,
இருக்கிறது. அவ்வபிப்பிராயம், அரசியல் கட்சிகள் புரியும் தீங்கு குறித்தும்,
எவ்வெவ்வழிகளில் அவை ஜனநாயக வழிமுறைகளைத் தடுக்கின்றன என்பது
குறித்தும் விமர்சிப்பதாயுள்ளன! பிரெஞ்சு நாட்டு சமூகவியலாளரும், அரசியல்
கோட்பாட்டாளருமான அலெக்ஸி டி டாக்குவில் (Alexis de Tocqueville)
என்பவர், "அரசியல் கட்சிகள் சுதந்திர அரசாங்கங்களின் உள்ளார்ந்த தீமையாக
விளங்குகின்றன!" என்றார்.

இவ்வபிப்பிராயங்களே, பேல் (Bale), மற்றும் ராபர்ட்ஸ் (Roberts) அவர்
களின், நியூஸிலாந்து நாட்டின் சமீபத்திய தேர்தல்முறை சீர்திருத்தம் குறித்த
சர்ச்சைகள் மீதான மதிப்பாய்வுரையில் எதிரொலித்தன: "வாக்காளர்களைப்
பொறுத்தவரை அரசியல் கட்சிகள் குறித்த விஷயம் குறிப்பிடத்தக்க வகையில்

போற்றுதலுக்குரியதாயில்லை; மாறாக, அவர்கள் தயக்கத்துடன் இனம் கண்டு
ணர்வது என்னவெனில், அரசியல் கட்சிகள் என்பவை அவசியமான தீமை
என்பதே"

அரசியல் கட்சிகளின் அரசியல் பாத்திரம் குறித்த கோட்பாட்டுரீதியான விவாத
மானது நெடுங்காலமாக இருந்து வரும் ஒன்றாகும். ஆனால், சமீப காலத்தில்
இவ்விவாதங்கள் மேலதிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றன;
அதாவது, அரசியல் கட்சிகள் மீதான பொதுமக்களின் அதிகரிக்கும் ஆர்வமிழந்த
நிலை மேற்கத்திய ஜனநாயகங்கள் இடையே பரவியுள்ளது இதற்கு சான்றாக
வுள்ளது (Dalton and Wattenberg 2000). பெரும்பாலான ஸ்தாபிதமான
கட்சிகளில் உறுப்பினர்களின் பதிவுகள் குறைந்துள்ளன (Scarrow 2000;
Mair and van Biezen 2001). தேர்தல்களில் வாக்குகள் பதிவும் சரிவு
கண்டுள்ளன. அரசியல் கட்சிகளின் மீதான உளவியல் ரீதியான பிடிப்புகளும்,
கட்சியுடன்  அடையாளப்படுத்திக்கொள்வதும் கூட தளர்வு கண்டுள்ளன. முடி
வாக, இடது, மற்றும் வலது சாய்ந்த ஸ்தாபன-விரோத எதிர்ப்புக் கட்சிகளின்
எழுச்சியும் இவ்விடர்பாட்டின் மேலுமொரு அடையாளமாக உள்ளது!

கூடுதலாக, அரசியல்கட்சிகள் குறித்த இவ்வபிப்பிராயங்கள் நிறுவன ரீதியான
மாற்றத்திற்கான கோரிக்கைகளைத் தூண்டுகின்றன. அரசியல் கட்சிகள்மீதான
பொதுமக்களின் பரவிப்பெருகும் அதிருப்தியின் காரணமாக இத்தாலி, ஜப்பான்,
மற்றும், நியூஸிலாந்து ஆகிய நாடுகள் சமீபத்தில் தேர்தல் அமைப்புமுறை
களை மாற்றியமைத்தன (Shugart and Wattenberg 2001). மேலும்,
தற்போது  இங்கிலாந்து, நெதர்லாந்து, பெல்ஜியம், கனடா ஆகிய நாடுகளிலும்
தேர்தல் அமைப்புமுறையில் சீர்திருத்தம்வேண்டும் என கோரிக்கைகள் எழுந்
துள்ளன (Norris 1995).

தற்போது, புதிய மதிப்பாய்வு முறைகள், பொது மக்கள் எவ்வாறு அரசியல்
கட்சிகளைப் பார்க்கிறார்கள் என்பது குறித்து  நேரடியாகவும், மிக ஆழமாகவும்
பரிசீலிக்க உதவுகின்றன. முதலில், Comparative Study of Electoral
Systems (CSES, module I) மேற்கொண்ட மதிப்பாய்வின் படி, இரண்டு
அடிப்படையான கேள்விகள் குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன: ஒன்று, ஜன
நாயகத்திற்கு அரசியல் கட்சிகள் அவசியமா? இரண்டு, உண்மையிலேயே
மக்களின் எண்ணங்கள் ( நலன்கள்) குறித்து அரசியல் கட்சிகள் அக்கறைப்படு
கின்றனவா?

இக்கேள்விகள், நடப்பு அபிப்பிராயங்களின் புதிரான தன்மையை பிரதிபலிப்பதா
யுள்ளன! அதாவது, 'அரசியல் கட்சிகள் அவசியமா?' என்ற கேள்விக்கு, 13 ஜன
நாயக நாடுகளின் நான்கில் மூன்று பங்கு பொதுமக்கள், அரசியல் கட்சிகள்
அவசியமே என்று பதிலளித்துள்ளனர்! இக்கருத்தானது, அமெரிக்க அரசியல்
விஞ்ஞானி, ஷாட்ஸ்னெய்டர் (Schattschneider)அவர்களின் பார்வையான,
"பெரும்பாலான பிரஜைகளைப் பொறுத்தவரை அரசியல் கட்சிகள் இல்லாத
ஜனநாயகம் என்பது எண்ணிப்பார்க்க முடியாதது!" என்பதை ஆதரிப்பதாக
உள்ளது. ஆயினும், அதேநேரத்தில், 'அரசியல் கட்சிகள் பொதுமக்களின் நலன்
கள் குறித்து அக்கறைப் படுகின்றனவா?' என்பது குறித்து சமகாலப் பொது
மக்கள் பெரும் ஐயப்பாடு கொண்டுள்ளனர்.

இக்கேள்வியைப் பொறுத்தவரை, சராசரியாக மூன்றில் ஒரு பங்குக்கும் குறை
வான பொதுமக்கள் மட்டுமே நேர்மறையாகக் காண்கின்றனர்! இத்தகைய
வேறுபாடுகள் கவனத்தைக் கோருவதாகும். 80% ஸ்வீடன் மக்கள், அரசியல்
அமைப்பு செயல்படுவதற்கு கட்சிகள் அவசியமானவை என்கின்றனர்; ஆனால்,
வெறும் 23% பேர்கள் மட்டுமே  கட்சிகள் சாதாரண மக்கள் குறித்து அக்கறைப்
படுகின்றன என நம்புகின்றனர்.

அதே போல், 80% ஜெர்மனியர்கள், அரசியல் கட்சிகள் அவசியமே என எண்ணு
கின்றனர், ஆனால், 18% பொதுமக்கள் மட்டுமே கட்சிகள் மக்கள் நலன் மீது
அக்கறை கொண்டுள்ளன என்கின்றனர்.

ஆயினும், நெடிய காலப்பகுதியை உள்ளடக்கிய ஆய்வின் புள்ளிவிவரங்கள்
அரசியல் கட்சிகள் மீதான நம்புக்கையிழப்பையே சுட்டுகின்றன! கனடாவில்,
1979-ல் 30% இருந்த நம்பிக்கை, 1999-ல் 11% மாகக் குறைந்து போனது! ஜெர்ம
னியில், 1979-ல் 43% இருந்தது, 1993-ல் வெறும் 26% மாகக் குறைந்து போனது!
சுவீடனில், 1968-ல், 'ஓட்டுக்களுக்காக மட்டுமே கட்சிகள் மக்கள் மீது அக்கறை
காட்டுகின்றன' என்ற கருத்தை மறுத்துச் சொன்ன  முழு 68% மக்கள், 1998-ல் 
வெறும் 23% மாகக் குறைந்து போயினர்! அதேபோல், பிரிட்டிஷ் பொதுமக்க
ளும் கடந்த இருபதாண்டுகளில், அரசியல் கட்சிகளை மிகக் குறைவாகவே
நம்புகின்றனர்! 1960-ல் 40% அமெரிக்கர்கள், அரசியல்கட்சிகள் பொதுமக்களின்
ஆர்வங்களுக்குச் செவி சாய்ப்பதாக எண்ணினர். ஆனால், 1970 களில், 30%
மாகக் குறைந்து போயினர்; 1980 களில், 20% மாக மேலும் குறைந்துபோயினர்.
இதற்கிணையாக, நார்வேஜிய நாட்டிலும் அரசியல் கட்சிகள் மீது பொதுமக்கள்
விரிவான அதிருப்தி கொண்டுள்ளதற்கான சான்று உள்ளது.

இவ்வாறே புள்ளிவிவரங்களை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். ஆக,
சுருக்கமாகச் சொன்னால், சமகாலத்திய பொதுமக்கள் அரசியல் கட்சிகளை
ஜனநாயகத்தின் அவசியத்தீமை எனக் காண்பதாகவே தெரிகிறது -- அதாவது,
தேர்தல்களை நடத்துவதற்கும், அரசாங்கம் அமைப்பதற்கும் அரசியல் கட்சிகள்
தேவைப்படுகின்றன, ஆனால், இவ்வழிமுறைக்குள் எவ்வாறு அரசியல் கட்சி
கள் பொதுமக்களின் ஆர்வங்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன என்பது
குறித்து சந்தேகத்துடன் பார்க்கின்றனர். மேலும், அரசியல் கட்சிகள் குறித்த
எதிர்மறை உணர்வுகள் சென்ற தலைமுறைக்கும் பரவியுள்ளது. ஒரு காலத்
தில், கல்வியாளர்களும், பிரஜைகளும், ஒரே மாதிரியாக, அரசியல் கட்சிகள்
ஜனநாயகத்தின் தூண்கள் எனக்கண்டனர். ஆனால், இப்போது, சமகாலத்திய
பொதுமக்கள், அரசியல் கட்சிகளை அசட்டைமிக்கவையாக, நம்பிக்கைக்குப்
பாத்திரமில்லாதவையாக, பிரதிநிதித்துவம் பாராட்டாதவையாகக் காண்கின்ற
னர்! அரசியல் கட்சிகள் இல்லாத ஜனநாயகம் எண்ணிப்பார்க்கவியலாதது
என்றால், பல பிரஜைகள், கட்சிகள் எவ்வளவு சிறப்பாக தமது பாத்திரத்தைச்
செயல் படுத்துகின்றன என்பது குறித்து சந்தேகிக்கின்றனர்!

அரசியல் கட்சிகள் மீதான பரவிப்பெருகும் அவநம்பிக்கையின் ஓர் உள்ளார்ந்த
விளைவு என்னவெனில், தேர்தல்களிலும், கட்சி அரசியலின் பிற அம்சங்களி
லும் மக்களின் ஈடுபாடு வெகுவாகக் குறைந்து போகிறது என்பதேயாகும்!

மேலும், வாக்களிப்பு குறைந்து போதலும், கட்சிப்பிரச்சார நடவடிக்கை, கட்சிப்
பணியாற்றுதல், ஊர்வலம் போன்றவற்றில் பங்கெடுத்தல் ஆகியவைகளும்
குறைந்து போயின!

அரசியல் கட்சிகள் மீதான நம்பிக்கையிழப்பு தனிநபர்களை வேறு வகைகளில்
அரசியலில் ஈடுபடுவதற்கான வழிகளை, அதாவது மரபல்லாத, மற்றும் கட்சி-
சாராத வழிகளை, அதாவது நேரடியாக அரசியல்வாதிகளைத் தொடர்பு கொள்
வது, மற்றும், வேறு வடிவங்களில் நேரடிச்செயல்பாட்டில் ஈடுபடுவது போன்ற
வழிகளைத் தேடும்படித் தூண்டுகிறது! இவ்வாறு, கட்சிகளின் மீதான சந்தேகம்
அரசியல் பங்கெடுப்பின் வடிவங்களை மறுவடிவமைப்பு செய்வதுடன், பிரஜை
களின் தாக்கம், மற்றும், ஜனநாயக வழிமுறையின் செயல்படும் தன்மையில்
மாற்றம் ஏற்படுத்தும் முகமாக புதிய வழி வகைகளைக் கண்டுபிடிக்கும்படி
கொண்டு செல்கிறது!

பிரஜைகள் ஓட்டுப்போடுகிறார்கள் எனும் பட்சத்தில், எவ்வாறு கட்சியின்
பிம்பமானது வாக்காளர் தெரிவுகளை பாதிக்கும்? இது முக்கியமானது, ஏனெ
னில், பலருக்கு, தேர்தல்கள் தான் நவீன ஜனநாயக நிகழ்வுமுறையை வரை
யறை செய்வதாயுள்ளது. தேர்தல்கள்தான் மிகவும் முக்கியமான தருணங்கள்,
அப்போது  தனி நபர்கள் தங்கள் அரசியல் நிலைப்பாட்டையும், மனச்சார்பை
யும் ஒரு ஒற்றை ஓட்டுத் தேர்வாக ஒருங்கிணைத்து முடிவெடுக்கிறார்கள்.
இவ்வாறான ஓட்டுக்களின் மொத்தம்தான் அரசாங்கம் அமைப்பதை தீர்மானிப்
பதாகிறது!

அரசியல் கட்சிகள் மீதான நம்பிக்கையிழப்பானது வாக்காளர்களின் தெரிவை
பெரிதும் பாதிக்கிறது! அதாவது, கட்சிகளின்மீது அவநம்பிக்கை கொண்டவர்கள்
ஓட்டுப்போடுவதை தவிர்க்குமாறு செய்கிறது! எனினும், ஓட்டுப்போடாதிருப்பது
மட்டுமே ஒரே தெரிவு என்பதில்லை! அவர்கள் தங்கள் ஓட்டுக்களை, புது
மாதிரியாக அரசியல் நடத்தப்போவதாகச் சொல்லுகிற ஒரு கட்சிக்குப் போடக்
கூடும்! அல்லது, அவர்கள் தங்கள் ஓட்டுக்களை பிரதான எதிர்க்கட்சிக்கும் --
அக்கட்சி தனது நடத்தையை மாற்றிக்கொள்ளுமென்ற நம்பிக்கையில்-- போடக்
கூடும்!

சமீபத்திய பத்தாண்டுகள், முன்னேறிய தொழில்துறை ஜனநாயக நாடுகளில்
"கட்சிக்கு-எதிரான கட்சி"களின் எழுச்சியைக் கண்டுள்ளன. கட்சிக்கு-எதிரான
இந்தக் கட்சிகள் மாறுபட்ட சித்தாந்தங்களையும், கொள்கை இலக்குகளையும்
கொண்டுள்ள அதேநேரத்தில், அவை ஒரு பொதுவான செய்தியை எதிரொலித்
தன : "ஸ்தாபிதமான கட்சிகள் யாவும் சுய-சேவை நோக்கம் கொண்டவை,
ஊழல் நிறைந்தவை, மக்கள் நலன்களைக் கண்டு கொள்ளாதவை!" என்பதே
அந்தச்செய்தி!

ஆம், அரசியல் கட்சிகளின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்ட பிரஜைகள்,
பொதுமக்களின் முன்னே மூன்று தெரிவுகள் உள்ளன; ஒன்'று, ஓட்டுப்போடு
வதைத் தவிர்த்தல், இரண்டாவது, கட்சிக்கு-எதிரான கட்சிக்கு ஓட்டுக்களைப்
போடுதல், இறுதியாக, ஏற்கனவே தாபிதமான ஒரு கட்சிக்கு ஓட்டுக்களைப்
போடுதல் ஆகியன! ஜனநாயக அமைப்பு முறையில், தேர்தலை விட்டால்
பொதுமக்களுக்கு வேறு ஒரு வழியும் இருப்பதாகத் தெரியவில்லை! ஆனால்,
தேர்தலின்போது ஓட்டுக்களைச் செலுத்தாமல் இருப்பதால் எவ்வித பயனும்,
மாற்றமும், விளையப் போவதில்லை! அதேபோல, ஓட்டுக்களைச் செலுத்து
வதாலும், பொதுமக்களின் வாழ்வில் பெரிதாக யாதொரு மாற்றமும், பயனும்
விளையப் போவதில்லை! இதுதான் பிரதிநிதித்துவ ஜனநாயக அமைப்புமுறை
யின் சாபக்கேடான நிலையாகும்!

பொதுமக்கள் அரசியல் கட்சிகள் மீது அவநம்பிக்கை கொள்வதற்கும், அரசியல்
கட்சிகளை வெறுப்பதற்கும், அவை ஊழல், அவதூறான நடத்தைகள், முறை
கேடுகள் போன்ற பல காரணங்களையும் புகார்களையும் கொண்டிருக்கின்றன
என்பதையும் தாண்டி, பிரதானமாக மக்கள் நலன்களை அவை கண்டுகொள்வ
தில்லை! ஆனால், வெறுமனே அரசியல் கட்சிகளை வெறுப்பதாலும், விமர்சிப்
பதாலும் எதுவும் நிகழாது!

அதேநேரத்தில், பொதுமக்களாகிய நாம், அவ்வளவு சீக்கிரமாக அரசியல் கட்சி
களின் மரண-அறிவிப்பை எழுதிவிடமுடியாது! ஏனெனில், அரசியல்வாதிகளுக்
கும், பெருமுதலாளிகளுக்கும் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தைப் போன்ற பொன்
முட்டை இடும் வாத்து வேறெங்கு கிடைக்கும்! ஆகவே,அவர்கள் தங்களுக்குச்
சாதகமான ஒன்றை அவ்வளவு எளிதாக விட்டுக்கொடுத்திடுவார்களா என்ன? 
ஜனநாயக நிகழ்வுமுறையில் மாற்றம், சீர்திருத்தம், புதுமை, என்கிற பெயர்
களில் சில மேலோட்டமான திருத்தங்களைச் செய்துவிட்டு ஜனநாயகத்தை
நாங்கள் தழைத்தோங்கச் செய்துவிட்டோம் என அரசியல்வாதிகள் சொல்லக்
கூடும்!

மேலும், அரசியல் கட்சிகள் ஜனநாயக முறையின் மிகவும் அவசியமான,
முக்கியமான அம்சம் என்பதாக அரசியல் கோட்பாடும், பரவலாக பொதுமக்க
ளும் ஏற்றுக்கொள்கின்ற நிலைமை தொடர்கிறது என்பதால், அரசியல் கட்சி
களை விட்டால் வேறுவழியே இல்லை என்று அர்த்தமில்லை; மாறாக, வேறு
வழிமுறைகள் இன்னும் நம்மால் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கிறது எனவும்
அர்த்தம் கொள்ளப்படவேண்டும்! சிலர், அரசியல் கட்சிகளின் நேர்மறையான
பங்களிப்புகளை மறுக்கமுடியாது என்று சொல்வதன்வழியே அரசியல் கட்சி
கள் இன்றி ஜனநாயகத்தை எண்ணிப்பார்க்கவும் இயலாது என்ற முடிவிற்கு
வருகிறார்கள். இக்கூற்று  பார்வைக்கோளாறு கொண்டதாகும்! ஏனென்றால்,
நேர்மறையான பங்களிப்புகளைச் செய்வதற்காகத்தானே அரசியல் கட்சிகளை
தேர்தல் மூலம் நாம் தேர்வுசெய்கிறோம்? அரசியல் கட்சிகளாகட்டும், அரசியல்
வாதிகளாகட்டும் அவர்கள் எங்கிருந்து, எதற்காக, யாருக்காக வருகிறார்கள்?
அவர்கள் என்ன வானத்திலிருந்து இறங்கி வந்த தேவர்களா? அவர்களும்
மக்களைச் சேர்ந்தவர்கள் தானே? ஆக, அரசியல்வாதிகளும், அரசியல் கட்சி
களும் இல்லாமல் பொதுமக்களாகிய நாம் வாழவே இயலாது என்று சொல்வ
தன் அர்த்தம் என்ன?

ஆனால், முதலிடத்தில், அரசியல் கட்சிகள் எதற்காக நமக்குத் தேவைப்படு
கின்றன என்பது பற்றி நாம் தெளிவுபடச் சிந்திக்க வேண்டாமா? ஆம், பொது
மக்களாகிய நம்மை, நமது நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்வதற்காக
அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் தேவைப்படுகின்றன! அதாவது,
கட்சிகள் இல்லாமல் அரசியல்வாதிகள் இல்லை! அரசியல்வாதிகள் இல்லை
யேல், நம்மைப் பிரதிநிதித்துவம் செய்வதற்கு எவரும் இருக்கமாட்டார்கள்!
என்பதுதானே நம் தலைவிதியை நிர்ணயிக்கும் மரணகரமான (Fatal)அந்த
எளிய சமன்பாடு? ஆனால், மக்களின் நலன்கள் அரசியல் கட்சிகளாலும், அரசி
யல்வாதிகளாலும் காற்றில் பறக்க விட்டுவிடும்போதும் ஜனநாயகம் என்பதை
நாம் எண்ணிப்பார்க்கவியலாது என்பதையும் நாம் எண்ணிப்பார்க்கவேண்டாமா?

தொடக்கத்தில், கட்சி அரசியல் எனும் தீங்கானது ஒவ்வொரு நாட்டின் தனிப்
பட்ட வரலாற்றுடன் தொடர்பு கொண்டுள்ளதாகக் கருதப்பட்டது! அமெரிக்க
மக்கள் அரசியல் கட்சிகளின் மீதான நம்பிக்கையை இழந்து போனதற்கு
அரசியல்வாதிகளின் இழி-நடத்தைகளும், அரசாங்கத்தின் கொள்கைத் தோல்வி
களும் காரணங்களாக அமைந்தன! இத்தாலிய மக்கள் அந்நியப்பட்டுப்போன
தற்கு, அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புக்களில் மலிந்திருந்த ஊழல்
கள் பகிரங்கப்படுத்தப்பட்டதே காரணம் எனப்படுகிறது! கனடா நாட்டு மக்களின்
நம்பிக்கையிழப்பிற்கு பிராந்திய பூசல்கள் கட்சி அமைப்பில் பிரதிபலித்தது
தான் எனப்படுகிறது! ஜெர்மானிய மக்களின் விரக்திக்கு ஒருங்கிணைப்பு தான்
காரணம் எனக் கருதப்பட்டது! சந்தேகமில்லாமல் அந்தந்த நாட்டிற்குரிய தனிப்
பட்ட இத்தகைய நிலைமைகளும் உள்ளன. ஆனால், அரசியல் கட்சிகள்,
மற்றும் பிற பிரதிநிதித்துவ ஜனநாயக அமைப்புகளின் மீது பொதுமக்களின்
பரவிப்பெருகும் அதிருப்திக்கு மேற்கத்திய ஜன நாயகங்கள் அனைத்துக்கும்
பொதுவான வடிவமைப்பு  உள்ளதென ஆய்வு முடிவுகளும், புள்ளிவிவரங்க
ளும் காட்டுகின்றன என்று அரசியல் ஆய்வறிஞர்கள் காண்கின்றனர்.

இத்தகைய எதார்த்தங்கள் உணர்த்துவது என்னவென்றால், அரசியல் கட்சிகள்
மீதான மக்களின் நம்பிக்கையிழப்பானது தொடர்ந்து அதிகரிக்கும் என்பதே!
இதன் விளைவாக வாக்களிப்பு குறைந்து போதலும், கட்சிச் செயல்பாடுகளில்
மக்களின் பங்கெடுப்பு குறைந்து போதலும் நிகழ்ந்துள்ளன! அதாவது, மக்கள்
நலன்களில் அரசியல் கட்சிகள் அக்கறை காட்டாதபோது, மக்கள் ஏன் வாக்க
ளிப்பது பற்றி கவலைப்படவேண்டும் என்பதே பிரதிவினையாக உள்ளது!
கட்சிகள் மீதான அவநம்பிக்கை, கட்சி-சாராத அரசியல் செயல்பாடுகளை
தோன்றச் செய்கின்றன -- அதாவது, நேரடியாக அரசியல்வாதிகளைத் தொடர்பு
கொள்வது, மரபல்லாத வழிகளில் பங்கேற்றல், பிரஜை நலக்குழுக்கள், ஆகிய
பிற வடிவங்களில் நேரடிச் செயல்பாடுகளில் ஈடுபடுதல் தோன்றியுள்ளன!

அடுத்து, அதிருப்தியடைந்த பொதுமக்கள், முற்றிலுமாக அரசியல் கட்சிகளை
புறக்கணிக்காத நிலையில் வாக்களிக்க முன் வருகிறார்கள் எனும் பட்சத்தில்,
அவர்கள் இருவகை கட்சிகளைத் தேர்வு செய்வதாகத் தெரிகிறது! அதாவது,
தாபிதமான கட்சிகளில் எதிக்கட்சியையும், இல்லாவிடில், தீவிர வலதுசாரிக்
கட்சியையும் தேர்வு செய்கிறார்கள்! இவ்விரண்டில், முதல் வகைத் தேர்வு,
தாபிதமான பெருங்கட்சிகளை மக்கள்நலன்களில் அதிக அக்கறை கொள்ளும்
படித் தூண்டும் வகையில் அமைகிறது! இரண்டாவது வகைத் தேர்வு, மரபான
கட்சி-அரசியலை முற்றாகப் புறம்தள்ளி, புறத்தேயிருந்து பிரதிநிதித்துவ ஜன
நாயக முறையை மாற்றியமைத்து பெருமாற்றம் கொணர விரும்பும் கட்சி
களை வரவேற்பதாய் அமைகிறது!

தாபிதமான, ஊழல் பாரம்பரியத்தில் துறைபோன, அரசியல் கட்சிகளை
நிராகரிப்பதையும், தாபிதமான எதிர்க்கட்சிக்கு வாக்களித்து, ஆளும் கட்சி,
எதிர்க்கட்சி ஆகிய இரு துறைபோன கட்சிகளுக்கும் புத்தி புகட்டுவதையும்
கடந்து, கட்சி-சாராத அம்சங்களை விரிவுபடுத்துவது இன்னொரு வகை
சீர்திருத்த முயற்சியாகும். அதாவது, அரசின் கொள்கை முடிவுகள் மீதான
பொதுமக்களின் கருத்தை நேரடியாக அறிவதற்கான  பொதுவாக்கெடுப்புகள்
(Referendums),பிரஜைகள் தங்கள் பிரச்சினைகளை தெரியப்படுத்துவதற்கு
வாய்ப்பளிப்பது, மற்றும் பிற நேரடிச்செயல்பாடுகளை அதிகரிப்பது! இவ்வழி
கள், வாக்காளர்கள் ஓரளவிற்கு கட்சி அரசியலை தவிர்த்துக் கடந்து செல்ல
உதவக்கூடும்! மேலும், கொள்கை நிர்வாகத்திலும் மாற்றங்களைச் செய்தல்
என்பதும் இவற்றைப் பின்தொடர்ந்து நிகழக்கூடும்! ஏனெனில், பொதுமக்கள்
அரசியல் கட்சிகள் மீது மிகுந்த அவநம்பிக்கை அடைந்துள்ளபடியால், அரசிய
லில் நேரடியாகத் தங்கள் குரல் இடம்பெற வேண்டும் எனக் கோருகிறார்கள்!

முடிவாக, அரசியல் கட்சிகளின் மீதான அவநம்பிக்கை என்பது, உலகில்
மேற்கு, கிழக்கு என வித்தியாசமின்றி, பிரதிநிதித்துவ ஜனநாயக ஆட்சிமுறை
யைக்கொண்ட அனைத்து நாடுகளிலும் உள்ள பொதுமக்களின் பொதுவான
அம்சமாக விளங்குகிறது! அதே நேரத்தில், அரசியல் கட்சிகள் தொடர்ந்து தமது
மையமான பாத்திரத்தை தக்கவைத்துக்கொள்ளும் பொருட்டு அனைத்து வழி
களிலும் முனைப்பாகச் செயல்படும் என்பதில் சந்தேகமில்லை! ஆனால், ஜன
நாயக அரசியல் அமைப்புமுறையில், கட்சிகளின் பரந்த பாத்திரம் என்பது

சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது!

ஆக, எவ்வாறு பார்த்தாலும், அரசியல் கட்சிகள் என்பவை அவசியத் தீமை
என்ற நிலையிலிருந்து கீழிறங்கி பெரும் தீமையாக மாறி ஜனநாயகத்தை
உள்ளேயிருந்து அரித்து அழித்துவருகிறது என்பது மட்டும் நிச்சயமாகும்!
"பிரதிநிதித்துவ ஜனநாயக அமைப்புமுறை"யில் உள்ள ஒரே பிரச்சினை "பிரதி
நிதித்துவம்" என்பது தான்! அதாவது, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதி
களாகிய அரசியல்வாதிகள்தான்! அவர்கள் புரிகின்ற மக்களுக்கெதிரான, மக்கள்
நலன்களுக்குப் புறம்பான அரசியல்தான்! அதாவது,அரசியல்வாதிகள் நமக்கான,
நம்முடைய பிரதிநிதிகளாகச் செயல்படுவதில்லை என்பதுதான்! ஆனால்,
அரசியல் வாதிகள் இவ்வாறு தங்களுடைய ஜனநாயகக் கடமைகளிலிருந்தும்,
பொறுப்புகளிலிருந்தும் வழுவிப்போவதற்கான காரணம், மக்களாகிய நாம்
அவர்களை நம்முடைய பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்து அவர்களின் கைகளில்
நாம் வழங்கிய "ஆட்சியதிகாரம்" தான்! இந்த ஆட்சியதிகாரம் தான் அரசியல்
வாதிகளை மிகவும் பிறழ்வான வழிகளில் செல்லுமாறு செய்கிறது!

இப்போது நாம், அரசியல்வாதிகளின் மீதும், அரசியல் கட்சிகளின் மீதும்
நம்பிக்கையிழந்து அரசியல்வாதிகளையும், அரசியல் கட்சிகளையும் முற்றாகப்
புறக்கணிப்பு செய்கிறோம் எனும்பட்சத்தில், நம்மைப் பிரதிநிதித்துவம் செய்வ
தற்கு எதுவும், எவரும் இல்லை என்றாகிவிடும்! பிறகு பொதுவான அராஜக
நிலை, அதாவது, அரசு இல்லாத குழப்பமான நிலையும், அமைதிக்கேடும்,
சட்ட விதிமுறைகளுக்கு மாறான செய்கையும் ஏற்பட ஏதுவாகிடும் வாய்ப்பு
உள்ளது என்பதை நாம் மறுக்கமுடியாது தான்! ஆனால், அரசு என்பது இங்கே
இருக்கும்போதே அரசியல் கட்சிகளாலும், அரசியல்வாதிகளாலும் ஏற்படுத்தப்
படும் குழப்ப நிலையையும், அமைதிக்கேட்டையும், சட்ட விதிமுறைகளை
மீறிய செய்கைகளையும் எங்கே, எவரிடம் போய் முறையிடுவது?

ஆனால், "அரசு". "அரசாங்கம்" என்பது என்ன? மக்களாகிய நம்மால், தேர்தல்
மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் அமைப்பல்லாமல் வேறென்ன?
அதாவது, நம்முடைய பிரதிநிதிகளும் அரசியல்வாதிகள் தான்; அரசு, அரசாங்
கம் என்பதும் அரசியல்வாதிகளே தான்! உண்மையில், மக்களாகிய நாம் நமக்
கான பிரதிநிதிகள் என்ற பெயரில்,  நம்மை ஏய்த்து மேய்க்கும் ஆட்சியாளர்
களைத்தான் தேர்ந்தெடுக்கிறோம்! நம்முடைய பிரதிநிதிகளும், நம்மை ஆள்ப
வர்களும் ஒன்றாக, அதே அரசியல்வாதிகளாக இருப்பது தான் அனைத்துத்
தீமைகளுக்கும் அடிப்படைக் காரணம் ஆகும்! அரசியல் கட்சிகள் எனும்
தீமையை மக்களாகிய நம்மால் அவசியமற்றதாக ஆக்கிடவும், அகற்றிடவும்
முடியும்! அதற்கு மக்களாகிய நாம் பிளவுகள் இன்றி, பிரிவினை இன்றி ஒரே
கட்சியாக இருக்கவேண்டும்! அதாவது, நமக்கிடையேயுள்ள அனைத்து வேறு
பாடுகளையும், வித்தியாசங்களையும் விட முக்கியமானது, மேன்மையானது
நம்முடைய "மனிதம்" தான்!

நாம் நமக்குள் பிளவுண்டு, பிரிந்து கிடக்கும்வரை, அரசியல்வாதிகளுக்குத்
தான் சாதகமாயிருக்கும்! ஆகவே, நமக்கிடையேயுள்ள அனைத்து வேறுபாடு
களையும், வித்தியாசங்களையும் கடந்து, அனைத்து மக்களின் பொதுவான
அடிப்படையான நலன் களையும், வாழ்வையும் காப்பாற்றிக் கொள்ளவேண்டு
மெனில், ஜனநாயத்தை நாம் அரசியல் கட்சிகளிடமிருந்தும், அரசியல்வாதி
களிடமிருந்தும் காப்பாற்றியாக வேண்டும்!

   •( இக்கட்டுரை, அரசியல் ஆய்வறிஞர்கள் RUSSELL J. DALTON and
   STEVEN A. WELDON ஆகியோரது "Public Images of Political
   Parties: A Necessary Evil?" எனும் தலைப்பிலான அறிக்கையின்
    புள்ளிவிவரங்களையும், சில தரவுகளையும் ஆதாரமாகக் கொண்டு எழுதப்
    பட்டதாகும் )•

மா.கணேசன்/ நெய்வேலி/ 29-11-2017
----------------------------------------------------------------------------


Wednesday, 29 November 2017

அரசியல்கட்சிகள் எனும் வியாபார நிறுவனங்கள்!



   நாம் ஒருவருக்கொருவரும், நம்முடைய குழந்தைகளின் குழந்தைகளுக்கும்
   தான் விசுவாசம் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம், கட்சி அரசியலுக்கு
   அல்ல!
              - டாச்ஷேன் ஸ்டோக்ஸ்

அரசியல் கட்சிகள் என்பவை உண்மையில் மக்களின் நலன்களைப் பிரதிநிதித்
துவம் செய்வதற்கான அமைப்புகள் அல்ல! மக்களின் நலன்களைப் பிரதிநிதித்
துவம் செய்வதற்கான அமைப்புகளே என்றால், நாட்டில் ஏன் ஒம்பத்தெட்டுக்
கட்சிகள் உள்ளன; இன்னும் புதிது புதிதாக கட்சிகள் முளைத்த வண்ணம்
உள்ளன? ஒரு கட்சியைவிட இன்னொரு கட்சி மக்கள் நலன்களைச் சிறப்பாக
பிரதிநிதித்துவம் செய்து, பிரமாதமாக நிறைவேற்றப்போகின்றதா?

இல்லை, இல்லை, இல்லவே இல்லை! அரசியல் கட்சிகள்  உண்மையில்
மக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்வதற்கான அமைப்புகள் அல்ல!
அவை 'சோப்பு' தயாரிக்கும் போட்டி நிறுவனங்களைப்போல, "தங்களுடைய
நிறுவனம் தயாரிக்கும் சோப்புகள் தான் தரமானவை!" என்று போட்டிபோட்டுக்
கொண்டு விளம்பரம் செய்யும் வியாபார நிறுவனங்களைப் போன்றவையே!

ஆம், மக்கள் தங்களது விருப்பத்தேர்வின்படி எந்தக்கட்சியிலும் (வியாபார
நிறுவனத்திலும்) உறுப்பினராகச் சேர்ந்துகொள்ளலாம்! பிறகு அந்தக்குறிப்பிட்ட
கட்சியின் வாடிக்கையாளர் சேவை திருப்தியாக இல்லையென்றால், மக்கள்
வேறு கட்சியில் (வியாபார நிறுவனத்தில்) சேர்ந்துகொள்ளலாம்! ஏன் ஒரு
கட்சியின், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை உறுப்பினர்கள் கூட
வேறொரு கட்சிக்குத் தாவிக்கொள்ளலாம்! இத்தகைய நடப்புக்கள் ஜனநாயகத்
தையே கேலிக்கூத்தாக ஆக்குகின்றன!

ஒவ்வொரு கட்சியும் தங்களது ஆட்சிக்காலத்தில்தான் பாலங்களைக்கட்டி
னோம், சாலைகளை அமைத்தோம்; ஏரிகளைத் தூர் வாரினோம், இன்னும்
அதைச் செய்தோம், இதைச் செய்தோம் என்று பட்டியலிட்டு பெருமை பேசு
கிறது! ஆனால், பாலங்கள், சாலைகள், மின்சார இணைப்புகள், மருத்துவ
மனைகள், பள்ளிக்கூடங்கள் ஆகியவை அன்றாடத் தேவைகளுக்கான அடிப்
படை அம்சங்களா, அல்லது ஆடம்பரத் தேவைகளா? அவற்றைச் சாதனைகள்
என்று விளம்பரப்படுத்துவதன் அர்த்தம் என்ன? இந்த அடிப்படை வசதிகளைப்

பூர்த்திசெய்வதற்காகத்தானே மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்தல்கள்
மூலமாகத் தேர்ந்தெடுக்கிறார்கள்?

எல்லா அரசியல் கட்சிகளும் தங்களுக்குக் 'கொள்கைகள்' இருப்பதாகவும்,
அவை பிற கட்சிகளைவிட சிறப்பானவை என்பதாகவும், தங்களது கட்சி
மட்டுமே மக்களை வாழ வைப்பதற்காகவே தோன்றியிருப்பதாகவும் சொல்லி
மக்களை நம்பவைத்து ஏமாற்றி வருகின்றன! எவ்வொரு வியாபார நிறுவன
மும் தாங்கள் தயாரிக்கும் பொருட்களை விற்று லாபம் சம்பாதிப்பதற்காகத்
தான் இருக்கிறதே தவிர, மக்களுக்குச் சேவை செய்வதற்காக இருப்பதில்லை!
ஆம், வியாபார நிறுவனங்களைப் போலவேதான் அரசியல் கட்சிகளும் செயல்
படுகின்றன! ஆனால், எல்லா அரசியல் தலைவர்களும், தங்களை மக்களுக்குப்
படியளப்பவர்களாகப் பாவித்துக்கொள்ளும் விஷயத்தில் ஒன்றாக இருக்கிறார்
கள்! ஒரு மாநிலத்தின் நன்குவளர்ந்த 'பிரதான', அல்லது, 'பெரிய' கட்சிகள்
எனப்படுபவை பெருநிறுவனங்களைப் போன்றவையாகும்! புதிதாக முளைத்த
கட்சிகள், 'சிறு', அல்லது, 'குறு' நிறுவனங்களைப் போன்றவையாகும்!

அரசியல் கட்சிகள் நம்மை திசை திருப்பிவிடுவதற்காகவே இருக்கின்றன;
அரசின் செயல்பாடுகள் மீதான நமது கவனத்தை மாற்றி கட்சிகளின் மீது
செலுத்தும்படிச் செய்கின்றன - ஏதோ, மக்களாகிய நம்முடைய நலன்கள்,
நல்வாழ்வு யாவும் தேர்தலில் வெற்றிபெறப்போகும் கட்சியை மட்டுமே சார்ந்
திருக்கிறது என்பது போன்ற மாயையைத் தோற்றுவிக்கின்றன!

அரசியல் கட்சிகளிடமுள்ள பிரச்சினை என்னவென்றால், எந்தக்கட்சியிடமும்
மக்களுக்கான உண்மையான "செயல்திட்டம்" எதுவும் இல்லை; ஆட்சியைப்
பிடிப்பது என்ற ஒன்றைத்தவிர! எல்லாக் கட்சிகளும் சுய-ஆதாயத் திட்டத்தில்
ஆழ்ந்திருக்க, மீத அரசியல் செயல்பாடுகள் என்பது, மக்களின் கவனத்தை
அற்ப விஷயங்கள் மீதும், போட்டிக்கட்சிகளுக்கு எதிராகவும் திருப்பிவிடுவதும்;
ஓட்டுப்போடுவது தான் மக்களின் உயர்ந்த ஒரே ஜனநாயகக் கடமையும், ஒரே
அரசியல் செயல்பாடும் என்பதாகச் சிந்திக்கவைக்கும்படியான, வெறும் கவர்ச்
சித்திற அரசியல் சொல்லாடல்களும், வெற்று ஆரவார முழக்கங்களும் மாத்
திரமேயாகும்!

எல்லா மாநிலங்களிலும், நாடுகளிலும் அரசியல்வாதிகள் என்போர் மக்களிட
மிருந்து தனித்த மிக வலிமையான தொரு பிரிவினராக உருவாகிறார்கள்.
அடுத்து, எவ்வொரு மாநிலத்திலும் பிரதானமாக இரு கட்சிகள் உள்ளன;
அவை மாறி மாறி ஆட்சிக்கு வருவதென்பது வழக்கமாயுள்ளது! எல்லா இடங்
களிலும் அரசு எனும் அதிகார அமைப்பு தம்மை, சமூகத்துடனான தொடர்பிலி
ருந்து தனித்துச் சுதந்திரமாக வைத்துக்கொள்கிறது! மேலும், ஊக-வாணிக
அரசியல் சூதாட்ட கும்பல்களான (political speculators)இரு பிரதான
கட்சிகளும் மாறி மாறி ஆட்சியதிகாரத்தைப் பிடித்து அவ்வதிகாரத்தை மிகப்
பிறழ்ச்சியான இலக்குகளை அடைய ஊழல்மிகு வழிகளில் ஏய்த்துக்கொள்
கின்றன! இவ்விரு கும்பல்களுக்கு எதிராக தேசமும், மக்களும் வலிமையற்ற
வையாக நிர்க்கதியாக நிற்கின்றன! முறையாக மக்களின் சேவகர்களாக
இருக்கவேண்டிய அக்கும்பல்கள், நடைமுறையில் மேலாதிக்கம் புரிபவையாக
வும், பகல்-கொள்ளையடிப்பவையாகவும் திகழ்கின்றன!

எல்லோரும் - மெத்தப்படித்தவர்களும், படிக்காதவர்களும் சொல்கிறார்கள்,
ஓட்டுப்போடுவது என்பது தவிர்க்கக்கூடாத உன்னத ஜனநாயகக் கடமை என்
கிறார்கள்!  ஒவ்வொரு தேர்தலின் போதும் மக்கள் தமது கடமையை நிறை
வேற்றத் தவறுவதில்லை! ஆனால், ஒவ்வொருமுறையும் மக்களால் தேர்ந்
தெடுக்கப்படும் எந்த அரசியல்கட்சியும் தமது உன்னத ஜனநாயகக் கடமையை
ஒரு போதும் முறையாக நிறைவேற்றியதில்லை!

உண்மையில், அரசியல்வாதிகள் ஏன், எதற்காக, யாருக்காக இருக்கின்றனர்
என்று மக்கள் எவருக்கும் தெரியாது! அரசாங்கம் என்பது மக்களுக்காக இருக்
கிறது எனவும், அரசியல்வாதிகள் நம்முடைய பிரதிநிதிகளாகச் செயல்படு
வதற்காக இருக்கிறார்கள் எனவும், மக்கள் நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம்!
ஆனால், அரசியல்வாதிகளுக்கு மட்டுமே தெரியும், அரசாங்கம் என்பது அவர்
களுக்காகவே இருக்கிறது; அவர்கள் தங்களுக்காகவே இருக்கிறார்கள் என்கிற
உண்மை!

ஜனநாயக ஆட்சிமுறையில், நேராட்சி முறை எனவும், பிரதிநிதித்துவ முறை
எனவும் இரண்டு வகைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது! நேராட்சி முறை
என்பது மிகவும் குறைவான மக்கள்தொகையைக் கொண்ட நாட்டில், அல்லது
மாநிலத்தில் மட்டுமே செயல்படுத்த முடியும் எனவும், அதிக மக்கள்தொகை
யைக்கொண்ட நாடுகளில், மாநிலங்களில் செயல்படுத்த முடியாது எனவும்
அரசியல் ஆய்வறிஞர்கள் கூறுகின்றனர்! அதிக மக்கள்தொகையைக் கொண்ட
நாடுகளில், மாநிலங்களில் பிரதிநிதித்துவ ஜனநாயக ஆட்சிமுறை மட்டுமே
சாத்தியப்படும் என்கிறார்கள்! ஆனால், பிரதிநிதித்துவ ஆட்சிமுறை என்றாலே
அங்கு அரசியல்கட்சிகள் தவிர்க்கவியலாதவையாகிவிடும்!  அடுத்து மக்கள்
தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பது எவ்வாறு எனும்போது, தேர்தல்
எனும் சடங்கு உள்ளே நுழைவது தவிர்க்க வியலாது! அதாவது, மக்களுடைய
நலன்களையும், அடிப்படைத்தேவைகளையும் பிரதிபலிக்கும் பிரதிநிதிகள்தான்
அரசியல்வாதிகள் எனும் வில்லங்கமான, விபரீதமான வகையினர்!

ஆனால், நம்மால் தேர்ந்தெடுக்கப்படும் நம்முடைய பிரதிநிதிகளான அரசியல்
வாதிகள்  நம்மைப்போன்று, பொதுவான சமூகத்தின் அங்கத்தினர்களோ, தனி
நபர்களோ அல்ல! அவர்கள் அரசியல் கட்சி எனும் தனி-வகைச் சமூகத்தின்
உறுப்பினர்கள் ஆவர்! அதாவது, ஒரு அரசியல் கட்சி என்பது வெறுமனே ஒரு
தனி-வகைச் சமூகம் மட்டுமல்ல! அது ஒரு அதிகாரப் படிமுறை அமைப்பு
ஆகும்; அந்த அமைப்பின்  உயர்-படிகளுக்கு அல்லது உயர்-பதவிகளுக்கு
உரியவர்களாக, தொடர்ந்து தங்களது சொந்த முயற்சி, மற்றும், செல்வாக்கு
மூலம் தங்களை உருவாக்கிக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தங்களை
உள்ளாக்கிக் கொண்டவர்களாவர்! அரசியல் கட்சி எனும் அதிகார படிமுறை
அமைப்பின் உச்சிப் படியை எட்டிய ஒருவர்தான் கட்சியின் 'தலைவர்' ஆவார்;
அவரே கட்சிக்குள் ( ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு கட்சிக்கு வெளியேயும்)
அனைத்து அதிகாரங்களையும் கொண்டவர்! அரசியல்வாதிகள் என்போர் வித்தி
யாசமான சூழலில்,(அதிகாரப்போட்டிச் சூழலில்), தனிவகை வளர்ப்பு-முறையில்
உருவாகிறவர்களாவர்! அதாவது, 'அதிகாரம்' என்பது மட்டுமே அவர்களுடைய
ஒரே நோக்கம், குறிக்கோள், இலக்கு யாவுமாகும்!

ஆனால், மக்களாகிய நாம் இத்தகைய அரசியல்வாதிகளின் குட்டையிலிருந்து
தான் தங்களுக்கான அரசியல் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும்!
பெயரளவிற்கு மட்டுமே அவரகள் நம்முடைய பிரதிநிதிகளாவர்; மற்றபடி
அவர்களுக்கு வேறுவகை 'செயல் திட்டம்' உள்ளது; அதன்படியே அவர்கள்
செயல்படுவர்! தேர்தலின்போது தமக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதுடன்
மக்களின் ஜனநாயகக் கடமையும், உரிமையும், தேர்வுச் சுதந்திரமும் முடிந்து
போகிறது! தேர்தலின்போது, ஓட்டுக்கேட்க வரும்போது, தாங்களே மக்களின்
உண்மையான உத்தமமான பிரதிநிதிகள், மக்களின் சேவகர்கள், மக்களின்
பாதுகாவலர்கள், . . .என்றெல்லாம் பசப்பு மொழிகளைப்பேசி, மக்களைத் தேடி
வந்து கெஞ்சிக்கூத்தாடும் அரசியல்வாதிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு,
மக்களின் எஜமானர்களாக, மக்களை ஆள்பவர்களாக ஆகிவிடுகிறார்கள்!
அதன்பிறகு அவர்கள் மக்களால் அணுகமுடியாத உயரத்திற்குச் சென்றுவிடு
கிறார்கள்!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆட்சியமைத்து ஆட்சிக்கட்டில்
அமர்ந்தபிறகு, மக்கள் தங்கள் பிரச்சினைகளை, குறைகளை, கோரிக்கைகளை
-விண்ணப்பங்கள், மனுக்கள் மூலமும்; சாலைகளில் இறங்கி -உண்ணாவிரதம்,
ஊர்வலம், சாலை மறியல் ஆகிய பல்வேறு போராட்டங்கள், இயக்கங்கள்
மூலமும்  தெரியப்படுத்தவேண்டும்! போராட்டத்தின் போது, கண்ணீர்ப்புகை,
தடியடி, கைது நடவடிக்கை, துப்பாக்கி சூடு ஆகியவைகளையும் மக்கள் சந்தித்
தாகவேண்டும்! இவ்வாறெல்லாம், மக்கள் தங்களது பிரச்சினைகளை, கடைசி
யாக, வேறு வழியில்லாமல், தாங்களே பிரதிநிதித்துவம் செய்துகொள்ள
வேண்டும்! எந்த அரசியல்வாதிகளை மக்கள் தங்களது நலன்களைக் காப்பதற்
கான அரசியல் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்தார்களோ, அவர்களிடமே சென்று
மக்கள் கையேந்தி நிற்கும் அடிமை நிலைக்கும், அவல நிலைக்கும் பெயர்தான்
"பிரதிநித்துவ ஜனநாயக ஆட்சிமுறை!"  இதில், பிரதிநிதித்துவம் இருக்கிறது,
ஆட்சிமுறையும் இருக்கிறது; ஆனால் ஜனநாயகம் மட்டும் இல்லை!

மா.கணேசன்/ நெய்வேலி/ 28-11-2017
----------------------------------------------------------------------------

Monday, 27 November 2017

பிரிவினைகளைக் கடந்த மக்கள் சமூகத்தின் கட்சி!



   
           "வாழ்க்கை" தான் நம் அனைவரின் ஒரே அசலான
                    உண்மையான மதம் ஆகும்!
            உண்மை மட்டுமே ஒரே உண்மையான கடவுள்!

மக்கள் அனைவரும் தங்களிடையே சாதி, மதம், இனம், நிறம், மொழி என
எவ்வொரு அடிப்படையிலும், பிரிவினை பாராட்டாமல் ஒற்றுமையாக ஒரே
கட்சியாக, அதாவது, மக்களாகவே இருப்பார்களேயானால், அரசியல்வாதி
களின் வாக்கு வங்கி அரசியலுக்கும் இடமிருக்காது, மக்களுடைய பிரிவினை
வாதத்தில் குளிர்காயும், பிரித்தாளும் அரசியலும் இருக்காது! ஆனால், மக்கள்
அனைவரும் ஒற்றுமையாக இருக்க முடியாது, இருக்க மாட்டார்கள் என்பது
அடிப்படையற்ற வாதமாகும்! ஏனென்றால், மக்கள் அனைவரும் ஒற்றுமை
கொள்வதற்கு ஒரு அற்புதக் காரணி உள்ளது! அது, அனைத்து மக்களுக்கும்
"பொதுவான அடிப்படை வாழ்க்கைப் பிரச்சினைகள்" தான்! மேலும்,பெரும்பான்
மையினரின் நலன்கள், சிறுபான்மையினரின் நலன்கள், சாதிவாரியான நலன்
கள், இனரீதியான நலன்கள் என தனித்தனி நலன்கள் என்று எதுவும் இல்லை!
ஏனெனில், பசி என்பது பொதுவானது; பசிக்கு எந்த சாதியும் இல்லை, மதமும்
இல்லை! ஆகவே,மக்களின் "பொதுவான அடிப்படை வாழ்க்கைப்பிரச்சினைகள்"
தான் மக்களை ஒருமைப்படுத்தும், ஒற்றுமைப்படுத்தும் அற்புத அம்சம் ஆகும்!

இனம், மதம், சாதி, நிறம், மொழி, கலாச்சாரம் போன்ற அம்சங்களைப் பற்றிக்
கொண்டிருப்பது என்பது மனிதஇனத்தின் முதிர்ச்சியின்மையின் அடையாளங்
கள் ஆகும்! ஏனெனில், இவ்வம்சங்கள் மனிதர்களிடம் "மனிதம்" எனும்
பண்பை வளரவிடாமல் தடுத்து அழித்துவிடுகிற பணியையே செய்கின்றன!
மேலும், மனிதர்களில் குள்ளமானவர்களும், உயரமானவர்களும், நடுத்தர
உயரமானவர்களும் இருக்கிறார்கள்; அவர்களில் குள்ளமாக உள்ளவர்களை
நாம் மனிதர்களே இல்லை என்று சொல்லிவிட முடியுமா? இன்னும், ஒல்லி
யான மனிதர்களும், குண்டான மனிதர்களும் இருக்கிறார்கள்; சிலர் கருப்பாக
வும், சிலர் சிகப்பாகவும், சிலர் மாநிறமாகவும் உள்ளனர்! ஆனால், மனிதர்
களின்தோலின் நிறம், அவர்களுடைய உண்மையான நிறத்தை (மனிதத்தை)
காட்டுவதில்லை!

உண்மையில், முகத்தோற்றத்தில், அளவில், நிறத்தில் ஒரு மனிதனைப்போல
இன்னொரு மனிதன் இல்லை! இவை இயற்கையான வேறுபாடுகள் என்றால்;
இன்னொருபுறம், சமூகத்தில் செயற்கையும், போலியுமாக கற்பிக்கப்பட்ட பல
வேறுபாடுகளும் உள்ளன -- சமூக அந்தஸ்து, உத்தியோகநிலை, கல்வி, பதவி,
பொருளாதார நிலை, அறிவுத்திறன், திறமை, . . . . போன்றவையே அவை!
அதாவது, இவ்வாறான இயற்கையானதும், செயற்கையானதுமான, மேலோட்
டமான வேறுபாடுகளுடன் இனம், மதம், சாதி, நிறம், மொழி, கலாச்சாரம்
போன்ற வேறுபாடுகளையும் சேர்த்துக்கொண்டு எவ்வாறு நாம் ஒரு தேசத்தின்
பிரஜைகளாக, மக்களாக அமைதியாகவும், இணக்கத்தோடும் வாழ இயலும்?

மிகவும் ஆழமான இன அடிப்படையிலான பிளவுகளைக்கொண்ட சமூகங்
களில் ஜனநாயகம் என்பது மிகக் கடினமாகும். . .  இத்தகைய சமூகங்களில்
ஜனநாயகம் முறிந்து போகும் என்கிறார், ஆஸ்திரேலிய அரசியல் விஞ்ஞான
ஆய்வறிஞர் பெஞ்ஜமின் ரெய்லி. ஆகவே, பூசல்களை நிர்வாகம் செய்யும்
முகமாக 'தேர்தல் பொறியியலை' (electoral engineering)பயன்படுத்து
வதற்கான சாத்தியம் பற்றி அவர் ஆராய்ந்தார். தேர்தல் பொறியியல் மூலமாக
மிகவும் பிளவுபட்ட சமூகங்களிலும் கூட  ஜனநாயகத்தை தக்கவைக்க
முடியும் என அவர் சில நாடுகளை உதாரணமாகக் காட்டுகிறார்! ஆனால்,
பெஞ்ஜமின் ரெய்லி போன்ற ஆய்வறிஞர்கள் பிளவுகளின் வேர்களைக் கண்ட
றிந்து அவற்றைக் களையாமல், மேலோட்டமான உத்திகள் மூலமாக பூசல்
களைத் தற்காலிகமாகக் களைவதற்கான வழிகளையே கண்டறிந்து கூறுகின்
றனர்!

பிளவுண்ட சமூகங்களில் ஜனநாயகம் தழைக்க முடியுமா, முடியுமென்றால்,
எவ்வாறு எனும் கேள்வி அரசியல் விஞ்ஞானத்தில் நெடுங்காலமாக சர்ச்சைக்
குரிய விஷயமாக இருந்து வந்துள்ளது. சில பெரும் அரசியல் சிந்தனையாளர்
கள், 'நிலையான ஜனநாயகம் கிட்டத்தட்ட ஒருபடித்தான தன்மையைக்
கொண்ட சமூகங்களில் மட்டுமே சாத்தியம்!' என்பதாக வாதம் செய்தனர்.
"பல்வேறு இனங்களைக்கொண்ட சமூக அமைப்பும், ஜனநாயகமும் சேர்ந்து
செல்லாது!" என ஜான் ஸ்டூவர்ட் மில் அவர்கள் கூறினார்.

இனவாதம் என்பது அடிப்படையிலேயே தவறான அடையாளப்படுத்துதலில்
இருந்து தான் முளைத்தெழுகிறது!  மக்கள், அதாவது சமூகக் குழுக்கள்
தங்களுடைய உள்ளார்ந்த அம்சங்களைக்கொண்டு தங்களைக் காண்கிறது,

அடையாளப்படுத்திக்கொள்கிறது எனும் பட்சத்தில், பெரிதாக பிற குழுக்களி
டையே பிரச்சினைகள் எதுவும் எழ வாய்ப்பில்லை! மாறாக, மேல்பூச்சாக
வரித்துக்கொள்ளும் செயற்கையான கற்பிதமான விஷயங்கள், கொள்கைகள்,
கோட்பாடுகளின் வழியாகத் தங்களைக் காணும்போதும், அவற்றுடன் தம்மை
அடையாளப்படுத்திக் கொள்ளும்போதும், அவ்வடையாளங்களை முன்னிறுத்
தும் போதும், சமூகக் குழுக்களிடையே பிரச்சினைகளும், பூசல்களும், தீராப்
பகையும் ஏற்படுவது தவிர்க்கவியலாததாகிவிடுகிறது!

பிளவுகள், பிரிவினைகள் சமூகத்தில் இருக்கவே செய்கின்றன. பிளவுகளற்ற
ஒற்றுமையான சமூகம்; சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை
வெறும் விரும்பத்தக்க தொலை-தூரத்து லட்சியநிலைகளாகவே உள்ளன!
ஆனால், பிளவுகள், பிரிவினைகள் என்பவை மானிட இனத்தின் அடிப்படை
களோ, அல்லது எவ்வகையிலும் இறுதியான அம்சங்களோ அல்ல! மாறாக,
அவை சிறு பிள்ளைத்தனமான பிடிவாதப் போக்குகளேயாகும்! பிரிவினை
வாதம் என்பது புறவயமாக வெளியே தெரிகின்ற மேலோட்டமான அம்சங்
களை பெரிதுபடுத்திப் பின்னப்பட்ட அகவயமான கோட்பாடுகளே! அகவயமான
விஷயங்கள், அம்சங்கள், நம்பிக்கைகள் யாவும் சொந்த விவகாரங்கள் எனும்
கோளத்தைச் சேர்ந்தவையாகும்; அவைகளை அம்பலத்திற்குக் கொண்டுவந்து
அரங்கேற்றம் செய்வது அபத்தமானது!

பிரிவினை வாதங்களை நிறுவுவதன் மூலம் ஒரு பிரிவினர் பெறுகின்ற
சொற்பப் பயன்களையும், இலாபங்களையும்விட, மொத்தசமூகமும் அடையும்
நஷ்டங்களும், இழப்புக்களும்தான் அதிகம்! பிரிவினைகள், பிளவுகள் நாட்டிற்
குள் மட்டுமல்ல; ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் உள்ளன! ஆனால், வீட்டிற்குள்
ளும், குடும்பத்திற்குள்ளும் அவை ஒருவாறு கட்டுக்குள் வைக்கப்படுகின்றன!
கட்டுக்களை மீறிடும் போது அவை குடும்பத்தையே அழித்துவிடுகின்றன!

ஒரு குடும்பத்திலுள்ள அங்கத்தினர்கள் யாவரும் ஒருபடித்தானவர்களாக
இருப்பதில்லை! குடும்ப அங்கத்தினர்கள், வயதிலும், தோற்றத்திலும், அளவி
லும், கல்வியிலும், திறமையிலும், புத்திசாலித்தனத்திலும் வேறுபடவே செய்
கின்றனர்! குறிப்பாக, குழந்தைகளும், முதியவர்களும் உதவியற்றவர்களாகவும்,

பலவீனமானவர்களாகவும் உள்ளனர்! ஒருவர் பலசாலியாக இருக்கலாம்; இன்
னொருவர் ஊனமுற்றவராக இருக்கலாம்! ஒரு குடும்பத்தில் ஆண்கள், பெண்
கள், குழந்தைகள், இளையவர்கள், முதியவர்கள், ஊனமானவர்கள், நோயாளி
கள், மன-வளர்ச்சி குன்றியவர்கள், என பலதரப்பட்ட மனிதஜீவிகள் உள்ளனர்!
ஆனால், அனைத்து வித்தியாசங்களையும், வேறுபாடுகளையும் தாண்டி ஒரு
குடும்பத்தின் அங்கத்தினர்கள் அனைவரையும் பிணைப்பது எது? அதேவேளை
யில் சொத்து தகராறில் அண்ணன் தம்பிகள் ஒருவரையொருவர் வெட்டிச்
சாய்த்துக் கொள்வது எதனால் நிகழ்கிறது?

ஆம், அனைத்து வேறுபாடுகளையும் தாண்டி ஒவ்வொருவரும், அனைவரும்

உயிர்-பிழைத்தாகவேண்டும், வாழ்ந்தாக வேண்டும் என்பது முக்கியத்துவம்
பெறும்போது, இணக்கமும், இசைவும் இயல்பாக வெளிப்படுகின்றன! பணம்,
பொன், பொருள், சொத்து ஆகியவை முக்கியத்துவம் பெறும்போது, அதாவது,
உயிரைவிடவும், வாழ்க்கையைவிடவும் அவை முதலிடம் வகிக்கும்போது;
அண்ணன், தம்பி என்ற உறவுப்பிணைப்பு அறுந்து போகிறது! பரஸ்பரம் ஒரு
வரையொருவர் வெட்டிச் சாய்த்துக் கொள்வதன் மூலம், மனிதர்கள் மட்டும்
செத்துப் போவதில்லை! மாறாக, அம்மனிதர்களின் வழியாக வெளிப்படவேண்
டிய வாழ்க்கையும் செத்துப்போகிறது!

உண்மையில், நாடு, தேசம், சமூகம் என்பதும் ஒரு பெரும் குடும்பம் போன்ற
தேயாகும்! ஒரு நாட்டின் மக்கள் பிரிவினை வாதங்களால் பிளவுபட்டு தங்க
ளுக்குள் சண்டையிட்டுக் கொள்வாரேயானால், (எதிரி நாடுகளின் படையெடுப்
புக்கள் இல்லாமலேயே), அந்நாடு விரைவில் வீழ்ந்திடும்! உலக வரலாற்றில்,
எத்தனையோ சாம்ராஜ்யங்களும், நாகரிகங்களும் வீழ்ந்து மறைந்து போயின!
சாம்ராஜ்யங்களும், நாகரிகங்களும் வீழ்ந்து அழிந்து போவதற்கு பல காரணங்
கள் இருக்கலாம்! உள்-நாட்டுப் பிரச்சினைகள், கலகங்கள், பிரிவினைவாதப்
போக்குகள், பொருளாதாரத் தேக்கம்; அயல்நாட்டுப் படையெடுப்புகள், ஆக்கிர
மிப்புகள், . . . என பல காரணங்கள் இருக்கலாம்! ஆனால், அவற்றில் எதுவும்
மையமான காரணம் அல்ல! ஏனெனில், பண்டைய பல நாகரிக சமூகங்கள்
பொருளாதாரத்திலும், தொழில்நுட்பத்திலும், உற்பத்தி முறைகளிலும், ராணுவ
பலத்திலும் முன்னேற்றம் கண்டிருந்தன! ஆனால், அவை வாழ்க்கையின்
மையமான நோக்கத்தையும், குறிக்கோளையும், இலக்கையும் அறிந்து நிறை
வேற்றத் தவறிவிட்டதால், மனம்போன போக்கில் செயற்கையும், போலியுமான
நோக்கங்களை, இலக்குகளை கைக்கொண்டதால் தறிகெட்டுப்போய் வீழ்ந்தன!

பொதுவாக, 'வாழ்க்கை' என்பதை, நாம் விரும்பியவற்றைச் செய்வதற்கான
ஒரு வாய்ப்பு என்பதாகக்கருதுகிறோம்! அதாவது, நாம் பிறந்துவிட்டதாலேயே,
வாழ்க்கை எனும் வாய்ப்பை நாம் உடமையாகக் கொண்டுவிட்டோம் என எண்
ணுகிறோம்! அதாவது, நாம் வாழ்க்கையின் சொந்தக்காரர்களாக நம்மைக்காண்
கிறோம்! அதாவது, உலகம் முழுவதும் தனக்கே உரியதென, படைபலத்தாலும்,
தடையில்லா வர்த்தகத்தாலும் உலகை வெற்றி கொள்ளவும், நம்முடைய
சொந்த சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்பவும் முயல்கிறோம்! ஆனால், உண்மை
யில் நாம் மரணத்தின் சாம்ராஜ்யத்திற்குத்தான் சொந்தக்காரர்களாகத்தான்
இருக்கிறோம்! 

அலெக்ஸாண்டரை நாம் எல்லோரும் மாவீரன் எனக் கொண்டாடுகிறோம்!
உலகம் என்பது நம் ஒவ்வொருவருடைய அதிகாரத்தையும், ஆதிக்கத்தையும்
செயல்படுத்துவதற்கான களம் என்பதாக எண்ணுகிறோம்! வாழ்க்கை எனும்
புத்தகத்தைத் திறந்து பார்ப்பதற்கு முன்னே, முட்டாள் தனமாக, உலகை
வெற்றிகொள்ள, அல்லது நம்மால் முடிந்த அளவு சிறு தாக்கத்தையேனும்
உலகின் மீது ஏற்படுத்திடவேண்டும் எனக் கிளம்பிவிடுகிறோம்!

அடிப்படையில் வாழ்க்கையை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதைப்
பொறுத்தே, அதாவது, நம்முடைய "வாழ்க்கைப் பார்வை"யைப் பொறுத்தே
நம்முடைய சமூக, பொருளாதார, அரசியல் அமைவுநிலைகளை நாம்
உருவாக்கிக்கொள்கிறோம்! "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, இல்லையேல்
அனவருக்கும் தாழ்வு!", "ஒற்றுமையே வலிமை!", நாடு, தேசம் என்பதும் ஒரு
குடும்பம் போலத்தான் என்றெல்லாம் உணர்ச்சிக்கனிவு மிக்க சொற்களைக்
கொண்டு மக்களை ஒற்றுமைப்படுத்திடலாம் என எண்ணுவது சிறுபிள்ளைத்
தனமானது! இவ்வாறான, எளிய அறிவுரைகளைக் கேட்டு மக்கள் உடனே
திருந்திவிடுவதற்கு அவர்கள் பிழைக்கத்தெரியாத முட்டாள்கள் அல்லவே!
ஏனெனில், மக்கள் அடிபட்டுத்தான், அழிந்துதான் பாடம் கற்றுக்கொள்வார்கள்!
அப்போதும் கூட அவர்கள் வாழ்க்கையை புரிந்துகொள்வார்கள் என்று எதிர்
பார்க்க முடியாது!

மனிதர்களிடம் காணப்படும் வித்தியாசங்கள், வேறுபாடுகள்; மனிதர்களுக்கு
இடையே நிலவும் பாகுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் யாவும் மேலோட்டமானவை
யாகும்! அவை மனிதர்களின் உண்மையான சாரத்தை உருவாக்குவதோ,
விளக்குவதோ, வெளிப்படுத்துவதோ கிடையாது! இன்னும், மனிதர்களிடம்
வெளிப்படும் விசேடத்திறமைகளும், அறிவுக்கூர்மையும், எதுவும் அம்மனிதர்
களை முழுமைப்படுத்துவதுமில்லை, நிறைவுசெய்வதுமில்லை! வரங்களாகத்
தெரியும் அவற்றை முறையாக வாழ்க்கைக்குச் சேவை செய்யும் வகையில்

பிரயோகிக்கவில்லையெனில், முடிவில் அவை சாபங்களாக மாறிவிடக்கூடும்!

உலகில் தனிநபர்கள் எத்தனை கோடி பேர்கள் இருக்கின்றனரோ அத்தனை
கோடி வித்தியாசங்கள் உள்ளன எனலாம்! ஆனால், எத்தனை கோடி வித்தியா
சங்கள் இருந்தாலும், அவற்றுக்கடியில் எல்லா மனிதர்களிடமும் இருப்பது
ஒரே மானிட உட்பொதிவு (உள்ளுறையாற்றல்) மட்டுமே! ஆம், எல்லா
மனிதர்களிடமும் அந்த உட்பொதிவு உள்ளது, ஆனால், எவரெல்லாம் அந்த
உட்பொதிவை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்கிறார்களோ அவர்கள்
மட்டுமே உண்மையான, அல்லது முழுமையான மனிதர்களாக எழுகிறார்கள்!

மனிதர்களுக்கிடையேயுள்ள வித்தியாசங்களை, வேறுபாடுகளை, மனிதர்களிட
மிருந்து மனிதர்களை அந்நியப்படுத்தும், வெட்டிப்பிரிக்கும் ஆயுதங்களாகக்
கொள்வது தவறு! ஏனெனில், வித்தியாசங்கள், வேறுபாடுகளினால் விளையக்
கூடிய பயன்களை நாம் பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதால் பெறக்கூடிய பயன்
களும், நன்மைகளும் பன்மடங்குகளாகப் பெருகும்! ஒவ்வொருவருக்கும் ஒவ்
வொருவித திறமை உள்ளதெனில், கூட்டாக அத்திறமைகளை நாம் பயன்
கொள்வதுதான் அறிவார்ந்த செயலாக இருக்கமுடியும்! இன்று நாம் அனுபவிக்
கின்ற அனைத்துப் பொருள்வளங்களும் அவ்வாறு பரிமாற்றம் செய்யப்பட்ட
வைகளே, பகிர்ந்துகொள்ளப்பட்டவைகளே! ஒருவர் தனது திறமையின் விளை
வாகப் பெற்றவைகளை தான் மட்டுமே பயன்கொள்வேன் என்று பதுக்கியிருந்
தால் நாம் இன்றுள்ள நாகரிக நிலையை அடைந்திருக்க முடியாது! மேலும்,
மனிதர்கள் யாவரும் மண்புழுக்களைப்போல ஒரே மாதிரியாக எவ்வித வித்தி
யாசமும், வேறுபாடுமின்றி இருந்திருப்போமெனில், நாமும் மண்புழுக்களாகத்
தான் இருப்போம்!

ஆகவே, மக்களாகிய நாம், சிறு சிறு வேறுபாடுகளை, மேலோட்டமான வித்தி
யாசங்களைப் பெரிது படுத்தி நமக்கிடையே பிளவுகளை, பிரிவினைகளை
மேன்மேலும் ஆழப்படுத்திடுவோமெனில், அரசியல்வாதிகள் அவற்றைப் பயன்
படுத்திக்கொண்டு நம்மைப் பிரித்தாள்வதற்கு இடமளித்துவிடுவோம்! அதாவது,
ஏற்கனவே நாம் மதம், இனம், சாதி, மொழி ஆகியவற்றின் அடிப்படையில்
பிரிந்து கிடக்கிறோம்! அதில் அரசியல் கட்சிகள் புகுந்து, ஒவ்வொரு கட்சியும்
ஒரு பிரிவினரை பிரதிநிதித்துவம் செய்கிறோம் பேர்வழி என்று தத்தெடுத்துக்
கொள்ளும் பட்சத்தில், அதாவது மக்களைக் கட்சி பிரித்துக் கொள்வதனால்
சமூகத்தில் தேவையில்லாத இறுக்கமும், பகைமையும், மேலதிகப்பிரச்சினை
களும் தான் விளையும்!

மக்களின் வாழ்க்கை நலன்கள் என்பவை பொதுவானவையாகும்! அசலான
வாழ்க்கை நலன்களைப் பொறுத்தவரை நாமனைவரும் ஏற்கனவே ஒரே
கட்சியாகத்தான் உள்ளோம்! அதில், வெவ்வேறு அரசியல் கட்சிகள் - வெவ்
வேறு கொடிகளுடன், சின்னங்களுடன் உட்புகுந்து தத்தம் கொள்கைகளைக்
கொண்டு விசேடமாக எந்த, அல்லது, எவருடைய நலன்களை நிறைவேற்றப்
போகின்றன? மக்களின் நலன்களையா, அல்லது தங்களுடைய சொந்த நலன்
களையா? மீண்டும், மீண்டும், எத்தனை முறை சொன்னாலும், மக்களின்
"வாழ்க்கைத்தேவைகள்" என்பதைவிட வேறு கொள்கை கோட்பாடுகள் எதுவும்
இருக்கமுடியாது! மேலும், ஒரு மனிதனை அவனைத்தவிர வேறு எவரும்,
எந்த அரசியல் கட்சியும், தலைவரும், இன்னும் கடவுளும் கூட சிறப்பாகவும்,
உண்மையாகவும், முழுமையாகவும் பிரதிநிதித்துவம் செய்யமுடியாது!

அவ்வாறே பொதுவான வாழ்க்கை நலன்களைக் கொண்ட மக்களையும் அம்
மக்களைத்தவிர வேறு எவரும், எதுவும் பிரதிநிதித்துவம் செய்யமுடியாது!
இதுவரை, ஜனநாயக ஆட்சிமுறையைக் கொண்ட, குறிப்பாக பிரதிநிதித்துவ
ஜனநாயக ஆட்சியமைப்பு கொண்ட எந்த நாட்டிலும், எந்த அரசியல் கட்சியும்
மக்களின் நலன்களை, உரிமைகளை முழுமையாக நிறைவேற்றியதில்லை!
அவ்வாறே, மக்களின் எப்பிரச்சினையையும் முழுமையாகத் தீர்த்ததுமில்லை!
அப்படியே விதிவிலக்காக ஏதாவதொரு நாடு இருக்கமுடியுமெனில், அது,
தங்களுக்கிடையேயான வித்தியாசங்களையும், வேறுபாடுகளையும்,
பிரிவினைகளையும் கடந்த, அந்நாட்டு மக்களின் ஒருமித்த விழைவின்
வெற்றியாக மட்டுமே இருக்கமுடியும்!

மா.கணேசன்/ நெய்வேலி/ 17-11-2017
----------------------------------------------------------------------------

Friday, 24 November 2017

யாருக்காக நான் பேசுகிறேன்?





      எனது அரசியல், வாழ்க்கையைப் பற்றியது!
      எனது வாழ்க்கை, மெய்ம்மையைப் பற்றியது!
      வாழ்க்கைக்கு வெளியே ஒரு அரசியலும் இருக்கமுடியாது!
      அரசியல் எனும் சிமிழுக்குள் வாழ்க்கை ஒருபோதும் அடங்காது!


நான் மக்களைப்பற்றி பேசுகிறேன்; மக்களின் நலன்கள் குறித்துப்பேசுகிறேன்;
ஆனால், நான் அரசியல்வாதியும் அல்ல; அதேநேரத்தில், நான் மக்களின்
பிரதிநிதியும் அல்ல! இன்னும் மக்களின் சார்பாகவும் நான் பேசவில்லை!
ஏனெனில், நான் வேறு, மக்கள் வேறு அல்ல! நான் மக்களுக்காகப் பேச
வில்லை; மாறாக, நான் எனக்காகவே பேசுகிறேன்!  நான் மக்களில் ஒருவன்
என்பதால் மக்களிடமிருந்து என்னைப் பிரித்துவிட முடியாது! இதன் அர்த்தம்
நான்தான் மக்கள்; மக்கள்தான் நான்; நானும், மக்களும் ஒன்றாயிருக்கிறோம்!

நானும், மக்களும் ஒன்றாயிருக்கிறோம்; அதேநேரத்தில், மக்களிலிருந்து நான்
வேறாகவும் இருக்கிறேன்! ஏனெனில், நான் என்னிலிருந்தும் வேறானவனாக
வும் இருக்கிறேன்; அதாவது, தொடர்ந்து என்னையே நான் கடந்து செல்பவ
னாக இருக்கிறேன்! அவ்வாறே மக்கள் ஒவ்வொருவரும் தம்மைக் கடந்து
செல்ல வேண்டியது "உயர்" வாழ்க்கையின் முக்கிய விதியாகும்! ஆம்,
ஒவ்வொரு மனிதனும் ஒருகட்டத்தில் உயிர்-வாழ்க்கையைக் கடந்து உயர்-
வாழ்க்கைக்குச் சென்றாகவேண்டும்! இல்லாவிடில், உயிர்-வாழ்க்கையானது
சாரமற்றதாக, அர்த்தமற்றதாகப் போய்விடுவதுடன், உயிர்-வாழ்வதென்பதே
பெரும் நெருக்கடிக்குள்ளாகிவிடும்; அதாவது, விரைவில் மனித இனம் பூமிக்
கிரகத்தில் பூண்டோடு இற்றழிந்து போகும்!

உயர்-வாழ்க்கை விதியின் கோணத்திலிருந்து காணும்போது, மக்களைவிடவும்,
என்னையும் சேர்த்து எவ்வொரு தனி மனிதனையும் விடவும் அதி முக்கிய
மானதாக வேறொன்றை நான் காண்கிறேன்! அதை நான் "வாழ்க்கை" என்று 
அழைக்கிறேன்! உண்மையான வாழ்க்கை என்பது உணர்வின் அளவில்
மட்டுமே அளக்கப்படமுடியும் -- ஒருபோதும், பணத்தின், பொன்னின், பொருட்
களின் அளவைக்கொண்டு அளக்க முடியாது! மனித வாழ்க்கையின் அசலான
மதிப்புகளைத் தழுவிடாமல், செயற்கையும் போலியுமான மதிப்புகளைத் துரத்
திச் செல்லுவோமெனில், தவறாமல் தீமைகள் நம்மைத் தழுவிக்கொள்ளும்!

ஆனால், பணம், பொன், பொருள் ஆகியவற்றை முக்கியமானவையாகக்
கருதும் மனித சமூகம் எவ்வளவு அறிவீனமானது! கழுதைகளுக்குக் கூடத்
தெரியும் தங்கத்தை விட வைக்கோல் தான் மதிப்பு மிக்கது என்பது! இதுதான்
அர்த்தமுள்ள மதிப்பீட்டின் உதாரணம் ஆகும்!

"மக்களின் சமூகம்" என்பதற்கும், "சமூகத்தின் மக்கள்" என்பதற்கும் மாபெரும்
வித்தியாசம் உள்ளது என்பதை நம்மில் அநேகர் அறியார்! தங்களுக்குத் தாங்
களே சுயமாகச் சிந்திப்பவர்களின் சமூகம்தான் மக்களின் சமூகம் என்பதாகும்!
சுய-சிந்தனையற்று பிறரது கருத்துக்களையும் வழிகளையும், மதிப்புகளை
யும் பின் பற்றுபவர்கள் "சமூகத்தின் மக்கள்" ஆவர்!  ஆகவேதான், "மானிட
இனத்தில் சேருங்கள்!" என்று மக்களிடம் நான் தொடர்ந்து கூறிவருகிறேன்!

ஆம், வாழ்க்கையின் மீது நான் கொண்ட அக்கறையினால் தான் நான் மக்க
ளைப் பற்றியும், மக்களின் நலன்களைப் பற்றியும் பேசுகிறேன்! மக்கள்
முதலில் மக்களாக ஆகவேண்டும் என்பதை நான் வலியுறுத்திச் சொல்கிறேன்!
அதாவது, மக்கள் முதலில் தங்களது சிந்தனைகளை, பார்வைகளை, அக்கறை
களை வாழ்க்கைமீது குவிக்குமாறு, செலுத்துமாறு வேண்டுகிறேன்! வாழ்க்கை
யல்லாத, வாழ்க்கைக்குத் தொடர்பில்லாத விஷயங்கள், நடைமுறைகள்,
மதிப்புகள் யாவும் இனம் காணப்பட்டு தயவுதாட்சண்யம் இன்றி அகற்றப்பட
வேண்டும்!

முதலிடத்தில், மக்களாகிய நமக்கு அரசியல் எதற்காக வேண்டும்? அரசியலுக்
கும், வாழ்க்கைக்கும் என்ன தொடர்பு உள்ளது? அரசியல்வாதிகள், அதாவது,
ஆட்சியாளர்கள்  மக்கள் நலன்களைக் கருதாமல், என்ன ஆட்சிபுரிகிறார்கள்,
எதை ஆட்சிசெய்கிறார்கள்? நாட்டில், மாநிலம்தோறும் விவசாயிகள் அல்லல்
படுகிறார்கள்; சிலர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். படித்த இளைஞர்கள்,
பட்டதாரிகள் வேலையில்லாமல் திண்டாடுகிறார்கள். ஏழைகள் மேன்மேலும்
ஏழைகளாகிக் கொண்டிருக்கிறார்கள்; விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய மிகக்
குறைந்த எண்ணிக்கையிலான பணக்காரர்கள் மேன்மேலும் அர்த்தமில்லாமல்
லட்சலட்சமாக கோடிகளைச் சேர்த்துக்கொண்டே செல்கிறார்கள்!

நாட்டின் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன! ஆறுகளில்
தண்ணீரும் இல்லை; மணலும் இல்லை என்ற அவலநிலை ஏற்பட்டுள்ளது!
ஒரு புறம் குடிநீர்ப் பஞ்சம், இன்னொரு புறம் பாசனநீர்ப் பஞ்சம்! கிராமப்புறங்
களிலும், நகர்ப்புறங்களிலும் எங்குமே முறையான சாலைவசதிகள் இல்லை!
. .இத்தகைய இன்னபிற பல அடிப்படைப் பிரச்சினைகள் யாவும் கடந்த பத்து
பன்னிரெண்டு ஆட்சிக்காலங்களாக, தொடர்கதையாகத் தொடர்பவையாகும்!
அடிப்படையான இப்பிரச்சினைகளைத் தீர்க்கமுடியவில்லையெனில், அரசியல்,
அரசியல்வாதிகள், தேர்தல்கள், தலைவர்கள், அரசாங்கம், பிரதிநிதித்துவ ஜன
நாயகம் . . . .இவையெல்லாம் எதற்காக, யாருக்காக? யாருடைய நலன்களுக்
காக? முறையான பள்ளிக் கட்டடங்கள், சாலைகள், குடிநீர், மின்சார இணைப்
புகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்புகள் இல்லாமல் எவ்வாறு மக்கள் வாழ
இயலும்? நம் நாடு மிக வறிய நாடாக இருக்கிறதென்றால், இந்த இல்லாமை
யைச் சகித்துக்கொள்ளமுடியும்! இது, இல்லாமையா? அல்லது, ஆட்சியாளர்
களின் இயலாமையா?

நாம் இருக்கும் ஆட்சிமுறை ஜனநாயகம், மக்களாட்சி என்று சொல்லப்படுவ
தால் தான் இக்கேள்விகளை நாம் கேட்கிறோம்! அதே நாம் ஒரு சர்வாதிகார
ஆட்சியின் கீழிருந்தால் இக்கேள்விகளை நாம் கேட்க மாட்டோம்! ஆனால்,
ஜனநாயக ஆட்சிமுறையிலும், பலமுறை, உரிமைகளுக்காகப் போராடும்
தொழிலாளர்கள் அடக்குமுறை, பணி நீக்கம் ஆகியவற்றிற்கு உள்ளாக்கப்பட்
டுள்ளனர்! அரசின் தவறான, மக்கள் விரோதக் கொள்கைகளை விமர்சித்தால்,
குண்டர்சட்டம் பாய்கிறது, தேசவிரோதி பட்டம் சூட்டப்படுகிறது, சிறைவாசம்
கிடைக்கிறது! ஆனால், மக்களை தங்கள் பிழைப்பை விட்டுவிட்டு சாலை
களில் இறங்கிப் போராடச் செய்வது எது? பிழைப்பு கெட்டுப்போன, அல்லது,
பிழைக்க வழியில்லாத நிலைமை தானே! போராட்டங்கள் சட்டவிரோத
மானவை என நீதிமன்றம் ஆணைபிறப்பிப்பது மிகவும் வேடிக்கையானதாகும்!
"சட்டம்-ஒழுங்கு" பிரச்சினை பற்றி ஆட்சியாளர்கள் பேசுவது அபத்தமானது!
ஏனெனில், எந்த அரசியல் சட்டத்தையும், ஒழுங்கையும் பின்பற்றி ஆட்சியா
ளர்கள் ஆட்சி நடத்துகிறார்கள்?

மக்களாகிய நாம் இனியாவது வழக்கத்திலிருக்கும் போலி அரசியல் விஷயங்
களையும், விவகாரங்களையும் பேசிக்கொண்டிராமல், அவற்றில் ஈடுபடாமல்,
வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்கவேண்டும்! அரசியலானது உண்மையிலேயே
நம் வாழ்க்கையுடன் தொடர்புடையதாயிருக்கிறதா, அதாவது, எவ்வகையி
லேனும் நம்வாழ்க்கைக்கு (குறைந்த பட்சமாவது) உதவும்வகையில் உள்ளதா
என்பதை நாம் கண்டறிந்தாக வேண்டும்! ஏனெனில், உயிர்- பிழைத்திருப்
பதற்கே நாம் அன்றாடம் போராட வேண்டியிருக்கும் ஒரு சமூக-பொருளாதார-
அரசியல் அமைப்பில் எவ்வாறு, எப்போது உண்மையிலேயே நாம் வாழத்
தொடங்குவது? உண்மையில் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை நாம்
இன்னும் இழந்துவிட வில்லை; ஆகவே தான் தொடர்ந்து தேர்தலின் போது
வாக்களித்துவருகிறோம்! ஆனால், மக்களாகிய நாம் ஜனநாயகத்தை மதித்து
நடக்கும் பிரஜைகளாக இருப்பது மட்டும் போதாது; நம்முடைய அரசியல்வாதி
களும் ஜனநாயகத்தை மதித்து நடப்பவர்களாக இருக்க வேண்டும்! மேலும்,
தீவிரமாக நேரடியாக அரசியலில் ஈடுபட்டிருந்தாலும், அரசியல்வாதிகளும்
இந்நாட்டின் "பிரஜைகளே" என்பதை அவர்கள் மறந்துவிடாதிருக்கவேண்டும்!

ஜன நாயக அமைப்பு முறையில், அரசியல் என்பது பொறுப்புமிகுந்த சமூகப்
பணியாகும்! அப்பணியைச் செய்யும் அரசியல்வாதிகள் எனும் பிரஜைகள், பிற
பொதுவான அதாவது, சமூகத்தின் பல்வேறு தேவைகளுக்குரிய பொருட்களை
உற்பத்தி செய்யும் பிரஜைகளைவிட மேலானவர்களோ, பிரத்யேக சலுகை
களுக்குரியவர்களோ, பிரதானமானவர்களோ, எதிலும், எவ்வகையிலும் முன்
னுரிமை பெற்றவர்களோ; அதிகம் மதிக்கத்தக்கவர்களோ அல்ல! அதாவது,
அரசியல்வாதியும் மக்களில் ஒருவரே!

மனிதர்கள் எப்பணியை, தொழிலைச்செய்தாலும், அடிப்படையில் எல்லோரும்
மக்கள்-சமூகத்தின் பிரஜைகளே, எல்லோரும் மனிதஜீவிகளே என்பதை நாம்
மறந்துவிடலாகாது! ஒரு நாட்டின், சமூகத்தின் "பிரஜை" என்பதுகூட இரண்
டாம் நிலை அடையாளமே தவிர, மனிதஜீவி என்பதுதான் ஒருவரைப்பற்றிய
உண்மையான, கருவான, உள்ளார்ந்த அடையாளத்திற்கான அடிப்படையாகும்!
ஆம், 'மனித ஜீவி' என்பதும்கூட உண்மையான அடையாளத்திற்கான ஒரு
அடிப்படை மாத்திரமே! ஏனெனில், தன்னைக் கண்டடைபவனே உண்மையான
மனிதனாகிறான்! அதாவது, தனது இருப்பை முழுமையாக உணர்வுகொள்ளும்
வழிமுறையில் மட்டுமே மனிதன் உண்மையில் வாழ்கிறான்! மனிதஜீவிகள்
வெறுமனே எலிகளைப்போல உயிர்-பிழைத்திருப்பதையே "வாழ்க்கை" எனக்
கொண்டாடமுடியாது!

ஆனால், உயிர்-பிழைத்திருப்பதற்கே மக்கள் அன்றாடம் போராடவேண்டும்
எனில், அந்த சமூக-பொருளாதார-அரசியல் அமைப்பு மக்கள்-விரோதமானதும்,
வாழ்க்கை-விரோதமானதும் ஆகும்! ஆகவே, அந்நிலைமையை மாற்றியமைப்
பதற்கும்; மேலும், திண்டாட்டமோ, போராட்டமோ இல்லாமல் உயிர்-வாழ்வ
தற்கு மட்டுமல்லாமல் உயர்-வாழ்க்கைக்கும் உதவும்வகையிலான ஒரு சமூக
அமைப்பும், பொருளாதாரமும், ஆட்சிமுறையும் ஒருங்கே அமைந்த, இலட்சிய
பூர்வமான தொரு அமைப்பை தங்களுக்காக ஏற்படுத்திக் கொள்வதற்குமான
முழு உரிமையும், சுதந்திரமும் மக்களுக்கு உள்ளது!

ஒரு குறிப்பிட்ட ஆட்சிமுறை மட்டுப்பாடானதாக இருக்கலாம்; மக்களுக்குச்
சேவைபுரிவதாக இல்லாமலிருக்கலாம்! அதாவது, தற்போதைய ஜனநாயக
முறை செயல்படாததாக இருக்கலாம்; அரசியல்வாதிகளும் செயல்படாதவர்
களாக, மக்கள் நலன் மீது அக்கறையற்றவர்களாக இருக்கலாம்! அதற்காக,
மக்களின் வாழ்க்கையும் இடர்ப்படத்தான் வேண்டுமென்று யாதொரு நிர்ப்பந்த
மும், விதியும் இருக்கிறதா, என்ன? இந்த அளவிற்குள், எல்லைக்குள், வரம்
பிற்குள் மட்டுமே மக்கள் வாழவேண்டும் என்று சட்டம் போட்டு மக்களை,
அவர்களுடைய வாழ்க்கையை முடக்க முடியுமா? தற்போதைய ஜனநாயக
முறை செயல்படவில்லையென்றால், வேறொரு ஜனநாயக முறையை
மக்களாகிய நாம் ஏற்படுத்திட என்ன தடை இருக்கமுடியும்; நம்முடைய
செயலின்மை, மற்றும் ஊக்கமின்மையைத் தவிர!

மா.கணேசன்/ நெய்வேலி/ 22-11-2017
----------------------------------------------------------------------------

Tuesday, 21 November 2017

மக்களின் தேர்தல் அறிக்கை!



   ஒருவருடைய பசி இன்னொருவருடைய பசியைவிட அதிக
   மதிப்பிற்கும், கவனிப்பிற்கும் உரியதாக இருக்க முடியுமா?


தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை நாம்
அறிவோம்! ஒரு மாறுதலுக்காக நாம் ஏன் "மக்களின் தேர்தல் அறிக்கை"யை,
அதாவது, நம்முடைய கோரிக்கைகளை ஒரு அறிக்கையாகத் தயாரித்து, 
வாக்கு சேகரிக்க வருகின்ற போட்டியிடும் அரசியல் கட்சிகளிடம் கொடுத்து
எங்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதானால், உங்கள்
கட்சியைத்தேர்ந்தெடுப்பதில் எங்களுக்கு உடன்பாடே என்று ஏன் சொல்லக்
கூடாது? எந்தக் கட்சி நம்முடைய "தேர்தல் அறிக்கை"யை ஏற்கிறதோ அந்தக்
கட்சியை நாம் தேர்ந்தெடுக்கலாமே! ......

அரசியல் கட்சிகளின் வழக்கமான ஒரு தேர்தல் அறிக்கை என்ன சொல்லும்?
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தேனும் பாலும் தெருவில் ஆறாய் ஓடும்!
வறுமையை நாங்கள் முற்றாக ஒழித்துவிடுவோம்! வேலையில்லாத் 
திண்டாட்டத்தை அடியோடு அழித்து விடுவோம்! இடிந்து விழும் பள்ளிக்கட்ட
டங்களை இடித்துவிட்டு புதிதாக பள்ளிக்கட்டடங்களைக் கட்டுவோம்! கிராமத்
துச் சாலைகளை நெடுஞ்சாலைகளாக மாற்றுவோம்! சாலை ஓரங்களில்
நிழல் தரும் மரங்களை நடுவோம்! குடிநீர்ப்பஞ்சம் என்றால் என்ன என்று
கேட்கும்படி செய்வோம்! ஓட்டைப் பாலங்களை ஓரங்கட்டிவிட்டு அவ்விடங்
களில் புதிய பாலங்களைக் கட்டுவோம்! தலை நகரில் சாலைகளில் மழைநீர்
ஆறாய் ஓடுவதால் எல்லோருக்கும் மிதவை வீடுகளை வழங்குவோம்! அரசுப்
பேருந்துகளுக்குப் பதிலாக அரசுப் படகுப் போக்குவரத்தை அறிமுகப்படுத்து
வோம்! மீனவர் பிரச்சினையை உடனே தீர்க்குமாறு மத்திய அரசுக்கு கடிதம்
மேல் கடிதம் எழுதி கின்னஸ் சாதனை புரிவோம்! கடலில் எல்லை தாண்டும்
பிரச்சினையைத் தவிர்ப்பதற்காக எல்லைக்கோடுகளை வரைவோம்! இல்லை
யெனில், எந்தப் பிரச்சினையும் இன்றி  சொகுசாக மீன்பிடிப்பதற்கு வசதியாக
மெரினா கடற்கரை ஓரமாக புதிய கடல்களை உருவாக்குவோம்!  என்பன
போன்ற சாத்தியமற்ற அம்சங்களைக்கொண்ட அதே பழைய பல்லவி தானே!

ஆனால், "தேர்தல் அறிக்கை" என்பது தேர்தல் கால அறிக்கை தானே தவிர,
அவை வெற்று வாக்குறுதிகளே தவிர அவை நிறைவேற்றப்படுவதற்கானவை
யல்ல! ஆட்சிக்கு வந்த எவ்வொரு கட்சியும், பலமுறை மீண்டும் மீண்டும்
ஆட்சியைப் பிடித்த கட்சிகளும்கூட தமது தேர்தல் அறிக்கையை முறையாக
நிறைவேற்றியதில்லை! அவ்வாறு நிறைவேற்றினால், அடுத்தடுத்த முறை
தேர்தல் அறிக்கையை வெளியிட இயலாதல்லவா! அதாவது மக்களின் அடிப்
படைப் பிரச்சினைகளை முழுமையாகத் தீர்த்துவிடும் பட்சத்தில், அடுத்தடுத்து
தேர்தல் அறிக்கை வெளியிட வாய்ப்பு இல்லாமல் போய்விடும்; அரசியல்வாதி
களுக்கு வேலையில்லாமல் போய்விடும் என்பதால் தானோ என்னவோ
ஆட்சியைப் பிடிக்கும் எந்தக்கட்சியும் தமது தேர்தல் வாக்குறுதிகளை ஒரு
போதும் நிறைவேற்றுவதில்லை போலும்!

வழக்கமான 'சாக்கடை' அரசியலுக்குப் பழகிப்போன நம்மில் பலருக்கு இந்த
"மக்களின் தேர்தல் அறிக்கை" என்பது ஒரு கிறுக்குத்தனமான, நடைமுறைச்
சாத்தியமற்ற  யோசனை என்பதாகத் தோன்றக்கூடும்! அந்த அளவிற்கு நாம்
மிகவும் தவறான, தலைகீழான அரசியல் நடைமுறைக்கு பழக்கப்படுத்தப்
பட்டுள்ளோம்! மக்களால், நம்மால், நடப்பு அரசியல் நடைமுறைகளை மாற்ற
முடியாது என்றால், பிறகு "மக்களாட்சி", "ஜனநாயகம்" என்பதற்கான அர்த்தம்
தான் என்ன? அரசியல்வாதிகளைத் திருத்தமுடியாது என்று எவரேனும் சொல்
வாரெனில், திருத்தப்பட வேண்டியவர்கள் அரசியல்வாதிகள் அல்ல; உண்மை
யில் திருந்த வேண்டியவர்கள் நாம் தான்! நம்மை நாமே திருத்திக் கொள்ள
வேண்டும் என்பதுதான் சரியான பார்வை ஆகும்!

உண்மையில், பிரச்சினை, பலவீனம், குறைபாடு யாவும் மக்களாகிய நம்மிடம்
தான் உள்ளன! நன்றாகக் கவனித்தோமெனில், "மக்களால், நம்மால், நடப்பு
அரசியல் நடைமுறைகளை மாற்ற முடியாது!" என்பது எதைச் சுட்டுகிறது
என்றால், நாம் மக்களாக இல்லாமல் வெறும் உதிரிகளாக, உதவியற்ற தனித்
தனி நபர்களாக பிரிந்து கிடக்கிறோம்! அரசியல்வாதிகள் நம்மைப் பார்த்துப்
பேசும்போது, "மக்களே" என்று ஒருமையில் தான் குறிப்பிடுகிறார்கள்! ஆனால்,
நாமோ, "மக்களாக" ஒருமையில் (அதாவது கட்டுக்கோப்பாக) இல்லை; மாறாக,
நாம் பன்மையில், உதிரிகளாக நிற்கிறோம்! ஏனெனில், நமக்கிடையே எவ்வித
ஒற்றுமையுணர்வும், உறுதியான பிணைப்பும், மனம் ஒருநிலைப்பட்டதன்மை
யும் இல்லை! ஆகவே, "ஓநாயைப் பொறுத்தவரை எத்தனை செம்மறியாடுகள் 
இருக்கின்றன என்பது ஒரு பிரச்சினை யல்ல!"

அரசியல் ஆய்வறிஞர் கெல்ஸென் (Kelsen 1988: 29) அவர்கள், " தனித்
தனியே உதிரியாக நிற்கும் தனிநபர்களால் "பொது ஒப்புதலை" உருவாக்கும்
விஷயத்தில் யாதொரு விளைவையும் ஏற்படுத்த இயலாது; ஏனென்றால்,
தனி நபர்கள் கட்சிகளின் வாயிலாகத்தான் அரசியல் ரீதியான இருப்பைப்
பெறுகிறார்கள்." என்கிறார். ஆனால், கெல்ஸெனின் கூற்று பொருத்தமற்றது.
ஏனென்றால், எவ்வொரு அரசியல் கட்சியும் படிமுறை அமைப்பிலானதே;
கட்சிக்குள்ளும் தனிநபர்கள் (தொண்டர்கள்) குரலற்றவர்களே! கட்சித்தலைமை
யின் முடிவை குலவையிடமட்டுமே தொண்டர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்!
உள்கட்சி ஜனநாயகம் என்பது வெறும் கானல்நீரே ஆகும்! ஜனநாயகம் என்பது
கட்சிகளுக்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி உலகில் எங்கேயும் இல்லை!

மேலும், கட்சிகள் மக்களை(சமூகத்தை) இனவாரியாக, சாதிவாரியாக,அல்லது
'கொள்கை' என்ற பெயரில் துண்டாடுவதையே செய்கின்றன! மக்களைக் கட்சி
பிரிப்பதன் வாயிலாக அரசியல்வாதிகளின் பிரித்தாளும் தந்திரம் நிறைவேறு
கிறது! இனம், மதம், சாதி, நிறம், மொழி, கலாச்சாரம் போன்ற அம்சங்கள்
மனித இனத்தின் முதிர்ச்சியின்மையின் அடையாளங்கள் ஆகும்! ஏனெனில்,
இவ்வம்சங்கள் மனிதர்களிடம் "மனிதம்" எனும் பண்பை வளரவிடாமல்
தடுத்து அழித்துவிடுகிற பணியையே செய்கின்றன! ஒருவருடைய பசி இன்
னொருவருடைய பசியைவிட அதிக மதிப்பிற்கும், கவனிப்பிற்கும் உரியதாக
இருக்க முடியும் என்றால், நாம் இனம், சாதி, மதம், இத்யாதி பாகுபாடுகளை
ஏற்றுக்கொள்ளலாம்! பசி என்பது பொதுவானது; பசிக்கு எந்தசாதியும் இல்லை,
மதமும் இல்லை! ஆகவே, மக்களின் "பொதுவான அடிப்படைப் பிரச்சினைகள்"
தான் மக்களை ஒருமைப்படுத்தும், ஒற்றுமைப்படுத்தும் அற்புத அம்சமாகும்!

ஆக,"மக்களால், நம்மால், நடப்பு அரசியல் நடைமுறைகளை மாற்றமுடியாது!"
என்ற வாதம் மொன்னையான பொய்மையாகும்! அப்படியே நம்மால், அரசிய
லில் எவ்வொரு மாற்றத்தையும் கொண்டுவரமுடியாது என்பதுதான் முடிவான
நிலையெனில், நமக்கு "வாழ்க்கை" என்பதே இல்லை என்றாவிடும்! அதாவது
தற்போது நாம் அனுபவித்துவரும் அனைத்து சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்
வுகளும், அநீதிகளும், அடிப்படை வாழ்வாதார நலிவும், யாவும் தொடர்ந்திடும்!

அடிப்படையில், ஒரு அரசியல் கட்சியைவிட இன்னொரு அரசியல் கட்சி
சிறந்ததாகவோ, ஒப்பற்றதாகவோ இருக்க வாய்ப்பில்லை! ஒரு கட்சியின்
கொள்கைகளைவிட இன்னொரு கட்சியின் கொள்கைகள் மக்களுக்கு பெரிதாக
சேவை செய்துவிடப் போவதில்லை! மக்களின் வாழ்க்கைத் தேவைகளைவிட
வேறு தனித்துவமான கொள்கைகள் எதுவும் தேவையா என்ன? அத்தேவை
களை சரிவர நிறைவேற்றுவதில் ஏன் இத்தனை சுணக்கம்? அலட்சியம்?

முக்கியமாக, மக்கள் என்போர் பிச்சைக்காரர்களோ, சும்மாயிருக்கும் சேமப்
படையோ அல்ல! மக்கள் என்போர் உழைப்பாளிகள்! ஒட்டுமொத்தப் பொருளா
தாரத்தின் ஆதாரமே மக்கள் தான்! அனைத்துப் பொருட்களும், பண்டங்களும்,
செல்வ வளங்களும் மக்களின் உடலுழைப்பு, மற்றும் மூளை உழைப்பின்
விளைபொருட்களே! மக்கள் இல்லாமல் நாடு, நகரம், மாடமாளிகைகள், 
குண்டூசி முதல் செயற்கைக்கோள்கள்வரை எதுவும் இல்லை! ஒட்டு மொத்தச்
சமூகத்தின் அனைத்துத்தேவைகளுக்கும் உரிய பொருட்களை மக்கள் தான்
உற்பத்தி செய்து தருகிறார்கள். அரசியல்வாதிகள் சமூகத் தேவைகளுக்குரிய
எப்பொருளையும், தம் பங்கிற்கு உருவாக்குவதோ, உற்பத்தி செய்து தருவதோ
இல்லை - வரிச்சுமைகளையும், தீராத வறுமையையும் தவிர!

உணவு தானியங்களை உற்பத்தி செய்யும் ஒரு விவசாயி, தனது போக்குவரத்
துக்கான சாலைகளையும், பாலங்களையும் தானே கட்டிக்கொள்ள முடியாது
என்பதால் தான் அவன் அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்த்திருக்கிறான். தன்
தேவைகளுக்குரிய அனைத்துப்பொருட்களையும் அவனால் உருவாக்கிக்
கொள்ள முடிந்தால் அவனுக்கு அரசும் தேவையில்லை, அரசியலும், அரசியல்
வாதிகளும் தேவையில்லை! மக்கள் இலவசங்களுக்காக கையேந்திக்கொண்
டிருப்பவர்கள் அல்ல! அவ்வாறான நிலைமைக்கு மக்களைத் தள்ளியது ஆட்சி
யதிகாரத்தை கைப்பற்றுவதற்காக அரசியல்வாதிகள் செய்த நயவஞ்சக சூழ்ச்சி
யேயாகும்! இலவசங்கள் எனும் தூண்டில் புழுக்களைக் காட்டி, மக்களின்
நலத்திட்டங்களுக்குச் செலவு செய்ய வேண்டிய வரிப்பணத்தை கோடிக்கோடி
யாகக் கொள்ளையடித்து அயல் நாட்டு வங்கிகளில் பதுக்கும் அரசியல்வாதி
கள் தான் நம்முடைய ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் ஒப்பற்ற பிரதிநிதிகள்!
இத்தகைய ஜனநாயகத்திற்குப் பெயர்தான் "பிரதிநிதித்துவ ஜனநாயகம்!"

ஆனால், மக்கள் ஏன் இன்னும் இத்தகைய அரசியல்வாதிகளை நம்பிக்கொண்
டும், ஏமாந்துகொண்டும் இருக்கவேண்டும்? ஏனென்றால், மக்களுக்குத் தங்கள்
வலிமை எத்தகையதென்று தெரியவில்லை; மக்கள் தங்களின் உண்மையான
வலிமை மற்றும் ஆற்றலைத்தெரிந்து கொள்ள விடாமல் அரசியல்வாதிகள்
மக்களுக்கிடையே பிரிவினைகளை உருவாக்கி பகைமைத் தீயை வளர்த்து
அதில் குளிர்காய்ந்து வருகிறார்கள்! எல்லா வளங்களையும் உருவாக்கித்தரும்
மக்களுக்குத் தமது ஒன்றுபட்ட சக்தியின் மகிமை தெரியாமல் தமக்கிடையே
பூசல் கொண்டு பிளவு பட்டு நிற்பதால், "ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக்
கொண்டாட்டம்!" என்பது போல அரசியல்வாதிகள் நடுவே புகுந்து தங்களது
குரங்குப்பஞ்சாயத்தை அரசியல் என்ற பெயரில் அரங்கேற்றி மக்களை ஏய்த்து
மேய்த்து ஏகபோகமாக வாழ்ந்து வருகிறார்கள்!

உண்மையில், மக்கள் தான் உண்மையான தலைவர்கள், அவர்களுக்கு வேறு
மதத்தலைவர்களோ, அரசியல் தலைவர்களோ, இனத்தலைவர்களோ, எவரும்
தேவையில்லை! மக்களை எவரும் வழிநடத்தவும் தேவையில்லை; வழிநடத்
தப்படுவதற்கு அவர்கள் ஆடுகளோ, மாடுகளோ அல்ல! உழைக்கும் மக்கள்
தம் இயல்பிலேயே சுதந்திரமானவர்கள்! மக்கள் தம் சகமக்களுடன் பரஸ்பரம்
பொருளியல் ரீதியாகச் சார்ந்திருப்பது தவிர்க்க இயலாதது!  மக்கள் இணக்க
மாகக் கூடிவாழ்வதன் மூலமும், சுமுகமான பண்டமாற்றுப் பரிவர்த்தனையின்
மூலமும் தங்களுடைய அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றிக்கொண்டு
சுகமாகவும், சுதந்திரமாகவும் வாழமுடியும்! மக்களுக்கிடையே எவ்வகையிலும்
யாதொரு இடைத்தரகரும், நாட்டாண்மையும், அரசரும், அமைச்சரும் எவரும்
தேவையில்லை!

தாங்கள் சுதந்திரமானவர்கள் என்பதை மக்கள் தெளிவாக உணர்வார்களேயா
னால், அவர்கள் இயற்கை, உழைப்பு, சகமக்கள் ஆகியவற்றைத் தவிர வேறு
எதற்கும், எவருக்கும் கடமைப்பட்டவர்கள் அல்ல! மேலும், மக்கள் என்போரே
ஒரு கட்சி தான், ஆகவே மக்களுக்குத் தனியே அரசியல் கட்சிகள் எதுவும்
தேவையில்லை! மக்களின் நலன்களையும், தேவைகளையும் பிரதிநிதித்துவம்
செய்வது என்பது தேவையா என்பது குறித்து நாம் எப்போதாவது சிந்தித்திருக்
கிறோமா? ஒருவரது பசியை வேரொருவர் பிரதிநிதித்துவம் செய்து உணவைப்
பெறுவதற்கான திட்டங்களை வகுத்து, அவற்றைச் செயல்படுத்திய பிறகுதான்
ஒருவர் தனக்கான உணவைப் பெறமுடியும் என்பதாயிருந்தால் அவர் உயிர்
வாழ முடியுமா? அவர் பட்டினியால் செத்துத்தான் போவார்!

பிறந்த குழந்தை கூட தனது பசியை தனது அழுகையின் மூலம் தெரிவித்து
தன்னைத் தானே பிரதிநிதித்துவம் செய்துகொள்வதில்லையா! ஆக, வளர்ந்த
மனிதர்களாகிய நாம் நம்முடைய தேவைகளையும், நலன்களையும் நாமே
நிறைவேற்றிக்கொள்வதை விடுத்து நாம் ஏன் அரசியல்வாதிகளை நமக்கான
பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டு நாமே ஏன் அரசியல் எனும் பொறி
யில் சிக்கித் தவிக்கவேண்டும்? அரசியல்வாதிகள் என்போர் யார்? அவர்கள்
எங்கிருந்து முளைத்தார்கள், அவர்கள் என்ன, வானத்திலிருந்து இறங்கி வந்த
வர்களா? நம்முடைய பிரதிநிதிகள் என்ற பெயரில் அரசியல்வாதிகள் நம் பிரச்
சினைகளை எடுத்துக்கொண்டு எங்கே எவரிடம்போய் முறையிட்டுத் தீர்க்கப்
போகிறார்கள்?

உண்மையில், சட்டமன்றம், நாடாளுமன்றம் என்பது என்ன? அவை மக்களின்
பிரச்சினைகளையும், துன்பங்களையும் தீர்ப்பதற்கான நீதிமான்களின் மன்றங்
களா என்ன? இல்லவேயில்லை! மக்களால், நம்மால், தேர்ந்தெடுக்கப்பட்ட
நம்முடைய பிரதிநிதிகளின் மன்றங்களே அவைகள்! அதாவது, நம்முடைய
பிரதிநிதிகளும் அவர்களே, நமக்குப் படியளப்பவர்களும், நீதி பரிபாலனம் செய்
பவர்களும் அவர்களேயாவர்! அரசியல்வாதிகள்,அரசியல்தலைவர்கள் என்போர்
உண்மையிலேயே நம்முடைய, நமக்கான பிரதிநிதிகளே என்றால், நம்முடைய
பிரச்சினைகள், அவலங்கள் என்றோ தீர்க்கப்பட்டிருக்கும் அல்லவா? இவ்விடத்
தில்தான் நாம் புரிந்து கொள்ளவேண்டும், அரசியல் கட்சிகளும்,தலைவர்களும்
மக்களுக்குச் சேவை செய்வதற்காக கடுமையாகத் தங்களுக்குள் போட்டிபோடு
கின்றனரா, அல்லது ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றித் தங்களது சொந்த நலன்
களைச் சாதித்துக்கொள்வதற்காகப் போட்டியிடுகின்றனரா என்பதை!

உண்மையில்,அரசியல்வாதிகள் நமக்கான பிரதிநிதிகளா, அல்லது ஜனநாயகம்
என்ற போர்வையைப் போர்த்திக்கொண்டு, நம்மை பகடைக்காய்களாகப் பயன்
படுத்திக்கொண்டு, பெரு முதலாளிகளுடன் பேரம் பேசிக்கொண்டு தங்களை
வளர்த்துக்கொள்ளும் இடைத்தரகர்களா, (இன்னும் துல்லியமாகச்சொன்னால்)
இரட்டை உளவாளிகளா என்றால், இரண்டாவது குறிப்பிடப்பட்ட அம்சமே
அவர்களுக்கு மிகவும் பொருந்தும் எனலாம்! ஏனெனில், வெளிப்படையாகத்
தெரிகின்ற அரசாங்கத்தை ஒரு மறைப்பாகக் கொண்டு அதற்குப்பின்னால்
திரை மறைவிலிருந்து ஆட்சிபுரியும் கண்ணுக்குத்தெரியாத அரசாங்கம் ஒன்று
உள்ளது என கார்ல் மார்க்ஸிலிருந்து, அமெரிக்க ஜனாதிபதி, தியோடர் ரூஸ்
வெல்ட், சமூகவியலாளர் சார்ல்ஸ் ரைட் மில்ஸ் (C. Wright Mills)வரை
குறிப்பிட்டுள்ளனர்!

உண்மையில், அரசியல்வாதிகளின் அயோக்கியத்தனத்துக்கும், கயமைத்தனத்
துக்கும் அவர்கள் மட்டுமே காரணமல்ல; அவர்கள் அதீதமான சுய-நலன்
கருதிகள் என்பதற்கான பொறுப்பைத்தவிர! .. ..  . . . ...

1956-ல் அமெரிக்க சமூகவியல் ஆய்வறிஞர், சார்ல்ஸ் ரைட் மில்ஸ், "ஆதிக்க
மேட்டுக்குடி" (The Power Elite) எனும் நூலை எழுதினார்; அதில்,
"அமெரிக்க ஜனநாயகம் என்பது பெருநிறுவன முதலாளிகள், உயர் இராணுவ
அதிகாரிகள், மற்றும், அரசியல் மேட்டுக்குடியினர் ஆகியோரைக்கொண்ட
ஆதிக்க மேட்டுக்குடிகளின் மறைமுக ஆட்சிக்கான ஒரு மறைப்புத்திரையே!"
என்றார். அதே நேரத்தில், அம்மேட்டுக்குடிகளின் ஆட்சியை சமூக இயக்கங்
களைக் கொண்டு முறியடித்திடமுடியும் என்று மில்ஸ் நம்பினார். ஆனால்,
ஆதிக்க மேட்டுக்குடிகளை அம்பலப்படுத்துவதன் மூலமும், அதன் சித்தாந்
தத்தை மதிப்பற்றதாகச் செய்வதன் மூலமும் மட்டுமே அது சாத்தியமாகும்
என்பதாக மில்ஸ் கருதினார்! சமூகவியலாளர் மில்ஸ்-ன் இக்கருத்துக்கள்
அமெரிக்க ஜனநாயகத்திற்கு மட்டுமல்ல, ஜனநாயகம் எனும் போர்வையில்
எங்கேயெல்லாம் ஆதிக்க மேட்டுக்குடிகளின் மறைமுக ஆட்சி  நிலவுகிறதோ
அந்நாடுகள் அனைத்திற்கும் பொருந்தும்!

ஒரு நூற்றாண்டிற்கு முன்பே கார்ல் மார்க்ஸ் கூறினார், அதாவது, "பிரதி
நிதித்துவ ஜனநாயகம் - அரசியல் சட்டங்கள், தேர்தல்கள், சட்டத்தின் ஆட்சி
ஆகியன உள்ளிட்ட முறையான (வெளிப்படையான) அரசியல் பொறியமைப்
புக்களை உருவாக்குவது என்பதே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்
மக்களுக்குக் கடமைப் பட்டவர்களாக இருப்பர் என்பதற்கான உத்திரவாதமாக
இருக்காது" என்றார்!

ஆம், தேர்தல் நேரத்தில், அரசியல்வாதிகள் மக்களைத்தேடி வருகிறார்கள்,
சந்திக்கிறார்கள், வாக்குகளைப் பெறுவதற்காக தாராளமாக வாக்குறுதிகளை
அள்ளி வழங்குகிறார்கள்! தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியிலமர்ந்த பிறகு,
அவர்கள் திடீரென முற்றிலும் வேறொரு இனமாக, தாம் வேறு, மக்கள் வேறு,
என்பதாக, அந்நியர்களாக மாறிவிடுகிறார்கள்! மக்களும் இத்தகைய ஏமாற்று
வித்தைக்குப் பழகிப்போனவர்களாக தம்தம் பிழைப்பைப் பார்க்கச் சென்றுவிடு
கின்றனர்!

அண்டோனியோ கிராம்ஸி,  20-ம் நூற்றாண்டின் ஆரம்ப கால இத்தாலிய
சமூகச் சிந்தனையாளர், முஸோலினியின் பாஸிச இத்தாலியச் சிறையில்
இருந்து எழுதினார், மக்கள் எவ்வளவுதான் துன்பப்பட்டாலும், நடப்பிலிருக்கும்
ஆட்சியின் சித்தாந்த மேலாண்மையை (hegemony) எதிர்ப்பின்றி ஏற்றுக்
கொள்கிறார்கள் என்று குறிப்பிட்டார். மேலும், எண்ணற்ற பல இத்தாலி
யர்கள் ஏன் முஸோலியின் அடக்குமுறை காரணத்திற்காக திரண்டுசென்றனர்
என்பதை புரிந்துகொள்ளவேண்டும் என கடுமையாகச் சிந்தித்தார் கிராம்ஸி!
காலதேச வர்த்தமானம் கடந்து எங்கும் இதே கதைதான் நிகழ்ந்தேறுகிறது!
சாதாரண மக்கள், உழைப்பாளிகள், தொழிலாளிகள் யாவரும் வரலாறு
முழுவதும் வஞ்சிக்கப்பட்டும், சுரண்டப்பட்டும்தான் வந்திருக்கிறார்கள்! ஆளும்
அரசின் சித்தாந்த மேலாண்மை என்பது மக்களை மூளைச்சலவை செய்யும்
வகையில் திட்டமிட்டு இயற்றப்பட்டு, பிரச்சாரம் செய்யப்பட்டு, நிறைவேற்றப்
படுகிறது! அரசு இழைக்கும் எல்லாக் கொடுமைகளையும், அவலங்களையும்,
அநீதிகளையும், வரிச்சுமைகளையும், தாங்கிக்கொள்ளும் மக்களின் அலாதி
யான சகிப்புத்தன்மை தான் போலி-ஜனநாயகத்தின் வெற்றியாகும்!

அது ஒரு நிலாக்காலம் போல, அது ஒரு தேர்தல் காலம்! கா.கா.கூ.கி கட்சியி
னர் தங்கள் தலைவர், மக்களின் பாதுகாவலர், மக்கள் நலப் போராளி, ஓட்டுக்
கேட்க வருகிறார் என்பதை அறிவித்துக்கொண்டே சாரி சாரியாக பல்வேறு
ஊர்திகளின் அணிவகுப்புடன் ஆரவாரமாக அந்த கிராமத்திற்குள் நுழைந்தனர்!
ஆனால், ஒரு தெருவிலும், ஒருவீட்டிலிருந்தும், ஒருவர் கூட எட்டிக்கூடப்
பார்க்கவில்லை! என்ன, திடீரென்று எல்லோரும் ஊரைக்காலி செய்துவிட்டு
எங்கோ போய்விட்டனரோ என்ற சந்தேகம் எழ, அந்த நேரம் ஒலி பெருக்கி
வழியே ஒரு அறிவிப்பு கேட்டது! ஊர் மக்கள் யாவரும் தண்ணீர் இல்லாத
வரண்ட ஏரியின் நடுவே கா.கா.கூ.கி கட்சியின் தலைவரை சந்திப்பதற்காக
காத்திருப்பதாக அந்த ஒலி பெருக்கி சொல்லிற்று! சிறிது குழப்பத்துடனும்,
சிறிது அச்சத்துடனும் கா.கா.கூ.கி கட்சியினர் தங்களது தலைவருடன் ஊர்தி
களை தொலைவிலேயே நிறுத்திவிட்டு ஏரிக்குள் சென்றனர்! ஊர்மக்கள்
அனைவரும் சலனமின்றி அமைதியாக ஏரியின் நடுவே அமர்ந்திருந்தனர்!
ஒரு சிறுவன் வெள்ளையும்-சள்ளையுமாக கரைவேட்டி சகிதம் இருப்பவர்தான்
தலைவர் என்று இனம் கண்டு அவரிடம் சென்று ஒரு துண்டு காகிதத்தை 
அளித்தான்! அதில் ஏதோ எழுதப்பட்டிருந்தது! அதற்கு ஒரு தலைப்பும்
கொடுக்கப்பட்டிருந்தது : "மக்களின் தேர்தல் அறிக்கை!"

மா.கணேசன்/ நெய்வேலி/ 16-11-2017
----------------------------------------------------------------------------

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...