Sunday, 12 March 2017

எது பிரும்மாண்டம்?






மனிதனைவிட   ஒரு யானை  பெரியது;   அதைவிட   ஒரு ஆலமரம்  இன்னும்
பெரியது!   அந்தக் காலங்களில்  அரசர்கள்  தங்கள்   பராக்கிரமங்களையும்,
வெற்றிகளையும்   உலகிற்கு  பறைசாற்றுவதற்காக வானளாவிய கோவில்க
ளையும், மண்டபங்களையும், பிரமிடுகளையும், தாஜ்மகால் போன்ற காதல்
சின்னங்களையும், பெரும் வளைவுகளையும், நுழை வாயில்களையும் எழுப்
பினர்!  ஒருவேளை,  இந்த அரசர்கள் தாங்கள் மனித ஜீவிகளாக இருப்பதின்
மேன்மையை,   சிறப்பை,   பெருமையை,  மகத்துவத்தை   உணராததினால்,
தமது உளக்குறைகளை ஈடுகட்டும் பொருட்டு இவ்வாறு பிரும்மாண்டமான
கட்டடங்களையும், சின்னங்களையும் எழுப்பியிருக்கலாம்! நவீனகாலத்தில்
சில அரசுகள், நிறுவனங்கள், பெரும் பணக்காரர்கள் வானளாவிய கட்டடங்
களையும், உலகிலேயே உயரமான கட்டடம் என்று பெயர் பெறுவதற்காகவே
போட்டி போட்டுக்கொண்டு அதி உயரக் கட்டடங்களையும் எழுப்புகின்றனர்.

ஆனால்,  உண்மையிலேயே எது பிரும்மாண்டமானது? மாபெரும் இப்பிரபஞ்
சத்தில்  பால்வீதி மண்டலம் எனப்படும் கோடானுகோடி  நட்சத்திரங்களைக்
கொண்ட    உடுமண்டலம்   என்பது    கோடானுகோடி    உடுமண்டலங்களில்
எங்கோ   ஒரு  ஓரத்தில்  இருக்கும்  ஒன்று  மட்டுமேயாகும்!   அந்தப் பால்வீதி
மண்டலத்தில்  உள்ள  கோடானுகோடி  நட்சத்திரங்களில்  ஒன்று தான் நமது
சூரியன்;   அச்சூரியனைச் சுற்றி  வரும்  ஒன்பது  கிரகங்களில்    ஒரு  கிரகம்
தான் நமது பூமிக்கிரகம்;  ஆக,  இவ்வாறு பரந்து விரியும் பிரும்மாண்டமான
இப்பிரபஞ்சத்தில் தூசியிலும் தூசி அளவிலான பூமிக்கிரகத்தின்மீது ஒட்டிக்
கொண்டிருக்கும்  'தூசு'  தான்  மனிதன் என்பதாக விஞ்ஞானிகளும், தத்துவ
வாதிகளும்,  சிந்தனையாளர்களும்  ஏதோ  பெரிய  அற்புத    உண்மையைச்
சொல்வதைப்  போலச்  சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்!   இத்தகைய  படு
மேலோட்டமான  ஒப்பீட்டுக் கூற்றுகள்   மனிதனைச்  சிறிதும்  புரிந்துகொள்
ளாததையே காட்டுகின்றன!

பிரும்மாண்டத்திற்கான  அளவுகோல்  எது?  எந்த அளவுகோலைக்கொண்டு
பிரபஞ்சத்தையும்,   மனிதனையும்   இன்னும்   வேறெதையும்   அளவிடுவது?
எந்த  அளவுகோலைக் கொண்டு    ஒன்றை  இன்னொன்றோடு  ஒப்பிடுவது?
பொருட்களின்  நீளம், அகலம், உயரம் ஆகியவை சேர்ந்து அமைந்த  கனபரி
மாண அளவைக்கொண்டு அளப்பதா,அல்லது பொருட்களின் பண்புகளைக்
கொண்டு அளப்பதா?  பொருட்களின்  கனபரிமாண அளவு என்பது அவற்றி
னுடைய  மேலோட்டமான பண்பைக் குறிப்பதாகும். மாறாக, பொருட்களின்
சாரமான உள்ளார்ந்த பண்புகள் மட்டுமே அவற்றின் அசலான தன்மையை
தீர்மானிப்பதாய் இருக்கும். ஆக, பிரபஞ்சமானது,  கனபரிமாணத்தில்  பெரி
தாய்  இருந்தாலும்,  பண்பினடிப்படையில்,  அது,  உயிரும்,  உணர்வும்  அற்ற
வெறும் பௌதீகச் சடப்பொருளே! பண்பினடிப்படையில் தரையில் ஊர்ந்து
செல்லும்  ஒரு புழு  இப்பிரபஞ்சத்தைவிட  உயர்ந்ததும்,  மதிப்பு வாய்ந்ததும்
ஆகும்! ஏனெனில், ஒரு புழு என்பது "உயிர்" என்ற பரிமாணத்தைக் கொண்ட
தாகும்!

ஆனால்,  மனிதன்  என்பவன்  "உணர்வு"  எனும் முற்றிலும் வேறு பரிமாணத்
தைக் கொண்டவனாக, வேறு எதனுடனும் ஒப்பிடவியலாத உயரத்தில் இருக்
கிறான்!  மேலும்,   அவன்  தற்போது   அடைந்துள்ள  உயரமும்  இறுதியானது
அல்ல! அவன் இன்னும் அதி உயரத்தை, உயரம் என்பதன் உச்சியை அடைவ
தற்காகவே  உருவானவனாக உள்ளான்!   ஆனால்,   பெரும்பாலான  மனிதர்
களுக்கு  தங்களது   உண்மையான   உயரம்  எதுவென்று தெரியாது; மாறாக,
அவரவரும்  தாம்  இருக்கும்  உயரமே  'அதி-உயரம்'   என்பதான பிரமையில்
ஆழ்ந்துகிடக்கின்றனர்!  மேலும், சுயத்தை அறியாமலேயே வெற்று சுய-முக்
கியத்துவம்     கொண்டாடுகின்றனர்!     யாதொரு    முனைப்பும்      (ஊக்கம்,
நோக்கம்,தீவிரம் எதுவும்)இல்லாமலேயே தன்-முனைப்பு கொண்டு திரிகின்
றனர்!

உணர்வில்லா  தவளைக்கு தற்பெருமையும், தன்முனைப்பும், சுய முக்கியத்
துவமும்  எவ்வாறு  கிட்டின?  உணர்வின்  நுனியை  எட்டியதற்கே  இவ்வளவு
சுய-திருப்தியும், சுய-திளைப்பும் என்றால்;உணர்வின் உச்சத்தை எட்டினால்,
கிட்டக்கூடிய   ஆனந்தமும்,    நிறைவும்,   எவ்வளவு    உண்மையானதாகவும்,
முழுமையாகவும், நிரந்தரமாகவும் இருக்கும்!

மனிதன்  தன்னில்  எதைக்கொண்டாடுவான்?  தனது  உருவத்தையா,  மனத்
தையா?  அறிவையா?  தனக்குத்தானே  கற்பித்துக்கொண்ட  பிம்பத்தையா,
அல்லது,    தனக்கு   மிகவும்  பொருத்தமாக  இருக்கும்  ஒரு   முகமூடியையா?
எதனுடனும்,  எவருடனும்  தன்னை  ஒப்பிட்டுக்காணாமல்,  நேரடியாக தனது
மகத்துவத்தை  அவனால்  கண்டறிய  முடியுமா?   உண்மையில்  தான்   யார்,
எத்தகைய நிஜம் என்பதை உணர்ந்தறியாமல் எவ்வாறு அவனால் தன்னைக்
கொண்டாட முடியும்?

பண்பினடிப்படையில்   எது  மேலானதோ,   மேலானதிலும்   இறுதியானதோ
அதுவே   பிரும்மாண்டமானது!    சந்தேகத்திற்கிடமில்லாமல்,    சடம்     (பருப்
பொருள்), உயிர் ஆகியவற்றைவிட மனித-உணர்வே பெரியது;  மனித உணர்
வைவிட உணர்வின் உச்ச நிலையே அனைத்தையும்விடப் பெரியது! அதுவே
இறுதி  மெய்ம்மையும்,   மூல முதல் மெய்ம்மையும் ஆகும்!   அறிந்துகொள்ள,
புரிந்துகொள்ள  பிரபஞ்சம் நிறைய விஷயங்கள் உள்ளன;  ஆனால், அனைத்
தையும்  அறிவது  என்னவோ  மனிதனின்   உணர்வு எனும்  ஒற்றை அம்சமே!
உலகை  உணர்வு  கொள்ளும் (புரிந்துகொள்ளும்) , மனித-உணர்வே உலகை
விடப் பெரியது!  இன்னும்,   தன்னை    உணர்வு கொள்ளும்    மனித-உணர்வு
அடையக்கூடிய நிலையே  அனைத்திலும் பெரியது!

மனிதன்  என்பவன்  சில காலம்  மட்டுமே  இருந்து  உதிர்ந்து  போகும்   மலர்
அல்ல!  ஏனெனில், அவன் வெறும் உடலல்ல, ஒரு நாள் உதிர்ந்து போவதற்கு;
மேலும்,  மனிதன்  என்பவன்  உடலின் பகுதியல்ல;  உடல்  தான்  மனிதனின்
பகுதியாகும்!      இன்னும்  அவன்  பிரும்மாண்டத்தின்  ஒரு  பகுதியும்  அல்ல;
மாறாக,  அவன் மட்டும் உணர்வுகொள்வானேயானால், அந்த இறுதிப்  பிரும்
மாண்டத்தில்  பங்கு கொள்பவனாகவும்,     பங்காளியாகவும்   ஆகக்கூடியவ
னாவான்!

மா.கணேசன்/ நெய்வேலி/ 05.03.2017
----------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...