Saturday, 30 April 2016

பட்டயத்தைக் கொண்டுவந்தவனின் செய்தி!



      (இயேசுவை மறு-கண்டுபிடிப்பு செய்தல்)

     இயேசுவைப் பற்றி எனக்கு (எனது பள்ளிப்    பருவத்திலிருந்து
     கல்லூரிப் படிப்பு முடித்த காலங்கள் வரையிலும்)   தெரிந்தது
     எல்லாம், 'ஏதோ காரணத்திற்காக ஒரு நல்ல மனிதரை பொய்
     யாகக் குற்றம் சுமத்தி, சிலுவையில் அறைந்து கொன்று   விட்
     டார்கள்!     ஆனால்,   அவர்  மூன்றாம் நாள்  '  உயிர்த்தெழுந்து
     விட்டார்'   என்று   சொல்லப்படுகிறது!     அவரை  மையமாகக்
     கொண்டு "கிறித்துவம்" எனும் மதம் உண்டாக்கப்பட்டது!' இம்
     மட்டும் தான் தெரியும்!
     'இயேசு'   என்பவர்    அன்பு    மயமானவர்    என நான் உள்ளூர
     உணர்ந்திருந்தேன்.    சிலுவையில் அவர் தன்னைத்  தியாகம்
     செய்தது   குறித்து  எனக்கு அவர்  மீது  இரக்கம் தோன்றியதே
     தவிர,   அவர்   மீது   எனக்கு   பெரிதாக   பிடிப்பு   ஏதும்   ஏற்பட
     வில்லை!ஏதொவொருவகையில், அவருக்கு அநீதி இழைக்கப்
     பட்டிருக்கிறது;  அவரும்   அதற்கு உடன் பட்டிருக்கிறார் என்ப
     தாகவே எனக்குப்பட்டது! அதோடு,  இயேசுவை நான் மறந்தே
     விட்டேன். பிறகு, எனது இருபத்திநான்காம் வயதில், எனக்குள்
     அந்த  விவரிக்கவியலாத  "உணர்வு-மாற்றம்"  நிகழ்ந்திட்டது!
     அந்த   வினோதமான,   விபரீதமான   நிகழ்வைச்     கொஞ்சம்
     கொஞ்சமாகச் செரித்துக் கொண்டும்,     பிரதிபலித்துப் பார்த்
     துக் கொண்டும் இருந்த காலக்கட்டத்தில்,   நான் சில கவிதை
     களைப்   போன்ற   பதிவுகளை    எழுதினேன்!     அதில் ஒன்று
     இயேசுவைப் பற்றியதாக இருந்தது :

            அன்பு செய்திடு என்றான்
            அன்பே செய்தான்!
            அவனை
            சிலுவையில் அல்லவா
            நாம் அறைந்தோம்!
            மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தான் என்பார்
            அது முற்றிலும் சுத்தப்பொய்யே, பொய்யே!
            நம் சிலுவைகளை நாம் சுமக்கும் வரை
            சிலுவை தான் அவனது சிம்மாசனம்!
            முட்கிரீடமே மணி மகுடம்!
            சாட்டையடிகளே நம் காணிக்கை!
                  {மா. கணேசன்/  1986}
           *  *   *
    இக் கவிதையை எழுதிய காலத்தில், இயேசுவின் ஒரு வசனத்
    தைக்கூட நான் வாசித்ததில்லை.     அவரைப் பற்றி    அறிவுப்
    பூர்வமாகவோ,  தத்துவ ரீதியாகவோ,  அவருடைய கொள்கை
    யையும்,    வாழ்க்கைப் பார்வையையும்   பற்றியோ      எதுவும்
    எனக்குத் தெரியாது! இயேசுவைப்பற்றிய அறிமுகவிபரங்கள்
    யாவும்,   வெகுசன கதைகள்,   பிம்பங்கள்  வழியாக   அறியப்
    பட்டவை  மட்டுமே.
    ஆனால்,     இயேசுவின்    வசனங்களை    நானே      நேரடியாக
    பைபிளிலிருந்து வாசித்தபோது தான் நான் முதன்முறையாக
    இயேசுவை உண்மையாகத் தெரிந்து கொண்டேன்.      அவரது
    வசனங்களிலிருந்து       அவரை    நேரடியாக    நான்   தெரிந்து
    கொண்டேன்!

    ஆம், 1.12.2007அன்றுதான் நான் இயேசுவை மறுகண்டுபிடிப்பு
    செய்தேன்!   நல்ல வேளையாக,  அதிகச்  சிரமமின்றி  அவரது
    வசனங்களை  மிகச் சரியாகப்  புரிந்து  கொள்ளக்கூடிய   ஒரு
    பக்குவமான  நிலையை நான்  ஏற்கனவே அடைந்திருந்தேன்!
    இயேசுவை  மறுகண்டுபிடிப்பு   செய்வதற்குத்  தூண்டுதலாக
    அமைந்தது,  அப்போது  நான்  வாசித்துக் கொண்டிருந்த பால்
    ப்ரண்ட்டன்  (Paul Brunton)-ன்,   "The Inner Reality"
    எனும் நூலே ஆகும்! அதில், திரு.ப்ரண்ட்டன் அவர்கள்,   'புதிய
    ஏற்பாட்டில்'   இடம் பெற்றுள்ள,    இயேசுவினுடைய    "மலைப்
    பிரசங்கம்"   எனும்   பகுதியின்    முக்கியத்துவத்தைப் பற்றிக்
    குறிப்பிட்டிருந்தார். அதைப் படித்தவுடன்,   உடனே ஒரு கிறித்
    துவ சகோதரியிடமிருந்து   'புதிய ஏற்பாடு' பைபிளை வாங்கி
    வாசிக்கத் தொடங்கினேன்; அதில், இயேசு ஆற்றிய  "மலைப்
    பிரசங்கம்"   மட்டுமல்ல,    அதைத்  தொடர்ந்த,   அடுத்தடுத்த
    வசனங்களையும்   வாசித்துக்   கொண்டே  சென்றேன்.  நான்
    இதுவரை கண்டிராத  கவித்துவமான தத்துவார்த்தமும், ஆழ
    மான,   ஆன்மீக  பூர்வமான உட்-பார்வைகளையும், உண்மை
    களையும்,  மிகவும்  தனித்துவம் வாய்ந்த  வெளிப்பாடுகளை
    யும்  இயேசுவினுடைய வசனங்களில் கண்டேன்!

   இனி நாம்,   நேரடியாக   இயேசுவினுடைய    வசனங்களுக்குச்
   செல்வோம். வசனங்களைத்தொடர்ந்து, என்னுடைய சிறுசிறு
   விளக்கக் குறிப்புகளையும் வழங்கியுள்ளேன்.       என்னுடைய
   சிறு விளக்கக்குறிப்புகள், ஒரு குறிப்பிட்ட வசனத்தை மட்டும்
   விளக்குபவையாக    அல்லாமல்,      இயேசுவினுடைய     ஒட்டு
   மொத்த   உபதேசத்தின்  சாரத்தைத்  தழுவியவையாக இருப்
   பவை,  அதாவது,   எவ்வொரு குறிப்பிட்ட  வசனமும், கருத்தும்
   அது  இயேசுவினுடைய முழு-பார்வையுடன்  கொண்டிருக்கும்
   தொடர்புறவில்   வைத்தே    விளக்கப்பட்டுள்ளது.          மேலும்,
   வசனங்கள் யாதொரு வரிசைக் கிரமத்திலும் தேர்வு செய்யப்
   படவில்லை;    மாறாக,      பேசப்படும்    தலைப்புகளுக்  கேற்ப
   தொகுக்கப்பட்டு  விளக்கமளிக்கப்பட்டுள்ளன   என்பதையும்
   இங்கு குறிப்பிடவிரும்புகிறேன்.

          <><<><><><><>><>

"பூமியின் மேல் சமாதானத்தை
         அனுப்ப வந்தேன் என்று
            எண்ணாதிருங்கள்;
               சமாதானத்தையல்ல,
                  பட்டயத்தையே
                       அனுப்பவந்தேன்"
                               -இயேசு.
                             ( மத்தேயு 10:34)

நல்லது,   இயேசுவின் இந்த வசனத்திலிருந்து அவர் எத்தகைய
மனிதர்,   அல்லது   ஆளுமை,   என்பதை  ஓரளவிற்கு    ஊகிக்க
முடியும். அவர் ஒரு "முழு-புரட்சியாளர்"!     எதனுடனும் சமரசம்
செய்து கொள்ளாத "கலகக் காரர்"! ஏழை, எளிய மக்களுக்காக
குரல் கொடுத்தவர்.     இப்படியே     சொல்லிக்கொண்டே போக
லாம். யாவற்றுக்கும்மேலாக, இயேசு அன்பு-மயமானவர்! அதே
வேளையில், அவர் மிகவும் கண்டிப்பானவர்!       ஆகவே   தான்
அவர் "சமாதானத்தையல்ல", "பட்டயத்தை" (அதாவது வாளை)
அனுப்ப   வந்ததாகச்     சொல்கிறார்!   மாறாக, அவர்  பூமியின்
மேல்  அமைதியையும்,  சமாதானத்தையும்   கொண்டு   வந்தா
ரெனில்,   நாம்    மகிழ்ச்சியுடன்    வரவேற்கவே       செய்வோம்;
ஆனால்,  நாம் செயல்படமாட்டோம்; மாறாக, நன்றாகத் தூங்கி
விடுவோம்!        இப்போது      நாம்      தூங்கிக்  கொண்டிருப்பது
போலவே!    ஆகவே,   அவர்,  நம்மை விழிப்புறச்  செய்யத்தான்
பட்டயத்தை  அனுப்ப   வந்ததாகச்  சொல்கிறார்!

இப்போது, நாம்,    இயேசுவின்    அதி-முக்கியத்துவம்    வாய்ந்த
முதல் வசனத்தை, அவர் தனது உபதேசத்தை முதன்முதலாகத்
தொடங்கியபோது பேசிய முதல் வசனத்தைக் காண்போம் :

"அது முதல் இயேசு: "மனந்திரும்புங்கள்
                                            பரலோகராஜ்யம்
                                                  சமீபித்திருக்கிறது"
                      என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்."
                                                           ( மத்தேயு 4:17)

இந்த வசனம்,   வெறும் ஆறு சொற்களைக் கொண்ட,    ஒற்றை
வாக்கியமாக, படு சாதாரணமாகத்தெரிவதாயுள்ளது. ஆனால்,
இது மிக மிக ஆழமான அர்த்தத்தைக் குறிப்பதாகும்!      'மனம்'
'திரும்புங்கள்' என்பது,   வெறுமனே  'மனம் திருந்துவதையோ',
அல்லது,   'மனம் மாறுவதையோ',     அதாவது,       'மன-மாற்றத்
தையோ'  குறிக்கவில்லை!      அதாவது,    ஒருவன் தான் செய்த
தவறுகளை உணர்ந்து, இனிமேல் தவறுகள் செய்யாமல்  நல்ல
வனாக  இருக்க,  நடந்து  கொள்ள   முயற்சிப்பேன்    என்பதான
தீர்மானத்தின்   அடிப்படையில் எடுக்கப்படும் மேலோட்டமான
தொரு முடிவைக் குறிக்கவில்லை!   மாறாக,    மனித மனத்தின்
அடிப்படையான,ஆதாரமான, உணர்வில் (பிரக்ஞையில்) ஏற்பட
வேண்டிய "உணர்வு-நிலை மாற்றத்தை"க் குறிப்பதாகும்! ஏனெ
னில், 'உனர்வு' தான் அனைத்து வித்தியாசத்தையும்செய்கிறது!
அதிலும்,  'முழுமையான  உணர்வு' தான் அனைத்தும்! அதாவது
முழுமையான உணர்வு  தான் உண்மையும்  , இறுதி மெய்ம்மை
யும்  ஆகும்!    ஆகவே,    உணர்வில்லாத     ஒரு   நல்லவனை விட
உணர்வுடன் கூடிய  ஒரு கெட்டவன் மேலானவன்!     என்றுதான்
சொல்லியாக வேண்டும்.
இயேசு,   தனது    உபதேசத்தை   தொடங்கும் போது,  "பரலோக
ராஜ்யம்"       பற்றிய      'இனிய செய்தி'  யுடன் தான்   தொடங்கு
கிறார்.   "பரலோக ராஜ்யம்"   என்பது   இயேசு   பயன் படுத்தும்
முக்கியமான சில குறியீடுகளில் மிகவும்  மையமானது ஆகும்!
மேலும், இது வெறும் குறியீடு மட்டும் அல்ல;     இது தான்  அந்த
இறுதி-மெய்ம்மையும் ஆகும்!  அதாவது, ஒவ்வொரு மனிதனும்
அடைந்தாக  வேண்டிய  "முழுமை-நிலை" யையே   அது   குறிக்
கிறது.   ஆனால்,   பரலோக ராஜ்யத்தை  நாம் அடைய வேண்டு
மானால்,  அதற்கு  நம்மை நாம்  தகுதியுள்ளவர்களாக  ஆக்கிக்
கொள்ளவேண்டும்!  ஆகவே,  இயேசுவின்  இந்த இனிய செய்தி
யானது,   ஒரு  நிபந்தனையுடன்  இணைக்கப்பட்டுள்ளது!   ஆம்,
"மனந்திரும்புங்கள்"    என்பது தான்  அந்த  கசப்பான,  அல்லது
கடினமான நிபந்தனையாகும்!
இயேசுவின் இந்த   நிபந்தனையை சரியாகப் புரிந்து கொள்ளா
மல்,  முழுமையாக  அதை  நிறைவேற்றாமல்,   இயேசுவின் பிற
வசனங்களையும்,    அவற்றுடன்     இணைக்கப்பட்டுள்ள     பிற
நிபந்தனைகளையும், சரியாகப்புரிந்துகொள்ளவோ, அவற்றை
பின் பற்றவோ,  அவற்றின்  பலன்களை  அறுவடை செய்யவோ
சிறிதும்  சாத்தியமேயில்லை!
இயேசுவின்    இந்த   முதல்   வசனத்தைப் பற்றிப் பேசும் போது,
யோவான்ஸ்நானன்     பற்றிப்    பேசாமல்       இருக்க   முடியாது.
ஏனெனில், யோவான்ஸ்நானன் தான் இயேசுவின் குரு, அல்லது
ஆசான்  ஆவார்!    யோவான்ஸ்நானன்   பற்றி    பைபிள் சார்ந்த
வரலாற்றுக்  குறிப்புகள்   என்ன   சொன்னாலும்,  இயேசு தனது
பிரசங்கத்தை,  எந்த வசனத்தைக்கொண்டு  தொடங்கினாரோ
அதே     வசனத்தைக்  கொண்டே,        இயேசுவிற்கு     முன்னரே
யோவான்ஸ்நானன்     தனது    பிரசங்கத்தைத் தொடங்கினார்!
இதோ, அந்த வசனம் :

"அந்நாட்களில்  யோவான்ஸ்நானன் யூதேயாவின் வனாந்திரத்
தில் வந்து :"   (மத்தேயு 3 :1)

"மனந்திரும்புங்கள்,  பரலோகராஜ்யம்
சமீபித்திருக்கிறது  என்று பிரசங்கம்
பண்ணினான்."      (மத்தேயு 3 :2)

இந்த  வசனம்,     யோவான்ஸ்நானன்-உடையது!       இதை, ஏன்,
இயேசு வழிமொழிந்திட வேண்டும்?  இயேசுவுக்கும், யோவான்
ஸ்நானனுக்கும் என்ன தொடர்பு?  மேலும், முக்கியமாக இயேசு
யோவான்ஸ்நானனிடம் ஞானஸ் நானம் பெற வேண்டிய அடிப்
படை, அல்லது,  அவசியம் தான் என்ன?    நிச்சயம்,     யோவான்
ஸ்நானன்    இயேசுவின்   குருவாக,   ஆசானாகத்தான்   இருக்க
வேண்டும்! இது, என்னுடைய ஊகம் அல்ல; இவ்விடத்தில்,  நான்
எனது அணுகுமுறை பற்றிச் சொல்லியாக வேண்டும். அதாவது
இயேசுவைப்பற்றியும்,  அவரது  வசனங்களைப்பற்றியும், நான்
எழுதும் இந்தப்பதிவு மட்டுமல்லாமல், அனைத்துப் பதிவுகளும்
இயேசு  சொன்னதாகச்  சொல்லப்பட்டுள்ள,   மத்தேயு,   மாற்கு,
லூக்கா, மற்றும் யோவான் ஆகியோர் எழுதப்பட்டதாகச் சொல்
லப்படும்    "சுவிசேஷங்களை"   ( நற்செய்திகளை),    அவற்றின்
வசனங்களைச்   சார்ந்தே,   அடிப்படையாகக் கொண்டே எனது
விளக்கங்களை அளித்துள்ளேன்!    எனது   இந்த   விளக்கங்கள்
முழுக்க, முழுக்க  பிரதியை  (வசனங்களை)   அடிப்படையாகக்
கொண்டவையே(solely Text-based).ஆனால், பின்நவீனத்
துவ வாதிகளைப் போல்  'பிரதியைக்கட்டுடைத்தல்'     (அல்லது
போட்டு உடைத்தல்),     அதாவது,    De-construction, எனும்
பாணியில்,  என் விளக்கங்களை நான்  வெளிப்படுத்தவில்லை.
மாறாக,"பிரதி-மறு உருவாக்கம்"(Textual Re-constrution)
எனும்   மிக  நுட்பமான,   படைப்புப்பூர்வமான    வழிமுறையில்
விளக்கமளித்துள்ளேன்.
அதில், வரலாற்றுப்பூர்வமானதும், மற்றும் கிறித்துவ  மத-இயல்
(Theological) ரீதியானதுமான   அணுகுமுறைகளை,   நான்
தொட்டுக்கவும் இல்லை, தொடர்பு கொள்ளவுமில்லை!      எனது
இந்த புதிய விளக்கவுரைகள் என்னுடைய,  நேரடியான ஆன்மீக
அனுபூதி அனுபவம், மற்றும் ஆன்ம தரிசனம் ஆகியவற்றினால்
விளைந்த     உயர்-உணர்வின் உதவியினாலும்;    மேலும், "ஞான
மடைதல்"   (Enlightenment)  என்பதன்      அடியோட்டமான
விஞ்ஞானம்  குறித்த எனது  25 ஆண்டுகால   நெடிய   ஆராய்ச்சி
யினால்  விளைந்த   தெளிவான புரிதலையும்,  பார்வையையும்
கொண்டு எழுதப்பட்டவையாகும்!

ஆம்,   மத்தேயுவின்   வசனங்களே சொல்லுகின்றன,  யோவான்
ஸ்நானன்  தான்  இயேசுவின்  'குரு'  என்று!   இதோ வசனங்கள் :

"அப்பொழுது  யோவானால் ஞானஸ் நானம் பெறுவதற்கு
இயேசு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு  அருகே
அவனிடத்தில் வந்தார்"      
            (மத்தேயு 3 :13)
"யோவான் அவருக்குத் தடைசெய்து: நான் உம்மாலே
ஞானஸ் நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர்
என்னிடத்தில் வரலாமா என்றான்."
           (மத்தேயு 3 :14)
"இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக : இப்பொழுது
இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது
நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது
அவருக்கு இடங்கொடுத்தான்."
           (மத்தேயு 3 :15)

மத்தேயுவின் வசனங்கள் மிகத் தெளிவாகச் சொல்லுகின்றன
'யோவானால் ஞானஸ் நானம் பெறுவதற்கு' இயேசு கலிலேயா
வைவிட்டு யோர்தானுக்குச்செல்கிறார். இவ்வாறு செல்வதற்கு
இயேசுவின் 'பணிவடக்கம்' மட்டுமே காரணமென சொல்வதற்
கில்லை;  பணிவடக்கத்தைத் தாண்டி,   குருவின் மீது கொண்ட
ஆழ்ந்த ஈடுபாடும், மரியாதையும் வசனத்தின்   குழப்படிகளை
மீறி      வெளிப்படுவதாயுள்ளது!     ஏதோ    காரணங்களுக்காக,
மத்தேயு,      இயேசுவை உயர்த்தியும்,       யோவான்ஸ்நானனை
தாழ்த்தியும் குறிப்பிடவேண்டியநிர்ப்பந்தம் செயல்பட்டுள்ளது.
ஆகவே தான்,     யோவான்ஸ்நானனுக்கு,    இயேசு அளித்திடும்
மரியாதையைக்கூட      மத்தேயு    அளித்திடத்    தவறிடுகிறார்!
விளைவு : 'அவனிடத்தில்' ,  'என்றான்' , இடங்கொடுத்தான்' என
யோவான்ஸ்நானனை  ஒருமையில் (ஏக வசனத்தில்) குறிப்பிடு
கிறார்!
யோவான்ஸ்நானனைப்    பொறுத்தவரை, அவரிடம் பணிவடக்
கம் உள்ளது தெரிகிறது. ஏனெனில்,
" . . . ..  எனக்குப்பின் வருகிறவரோ என்னிலும்
           வல்லவராயிருக்கிறார்"  . . . . . . .   (மத்தேயு 3 :11)
என்பதாக    யோவான்ஸ்நானன்    கூறியதிலிருந்து   தெரிகிறது.
அதே நேரத்தில்,   இயேசுவோ,    ஞானஸ் நானம் கொடுப்பதற்கு
யோவான்ஸ்நானன்    தடை சொன்ன போதிலும்,   'இப்பொழுது
இடங்கொடு,     இப்படி   எல்லா  நீதியையும்      நிறைவேற்றுவது
நமக்கு ஏற்றதாயிருக்கிறது'   என்று பதிலிறுக்கிறார்.   அதாவது
"நமக்கு ஏற்றதாயிருக்கிறது"   என்று  யோவான்ஸ்நானனையும்
தன்னையும்     (பிரித்துப் பார்க்காமல் ,  விட்டுக்கொடுக்காமல்)
இணைத்தே கூறுகிறார்!     "நமக்கு" என்ற சொல், இவ்விடத்தில்,
இருவருக்கும்  பொதுவான,  இருவரும்   பங்கு பெற்று  வந்துள்ள
ஒரு முக்கியமான   "ஆன்மீகப் பணி"    (Spiritual Mission)
யைக்  குறிப்பதாயுள்ளது!    இதிலிருந்து,      இருவருக்கும் உள்ள
தொடர்புறவு    'குருவுக்கும், சீடனுக்கும்'   உள்ள ஒன்றே என்பது
தெள்ளத்தெளிவாகிறது எனலாம்!

மேலும்,  ஏதோ காரணத்திற்காக, யோவான் காவலில் வைக்கப்
பட்டது பற்றிக் கேள்விப்பட்ட பிறகே,   இயேசு  தனது  உபதேசப்
பணியை, 'பரலோகராஜ்யம்' குறித்த    தன் குருவினுடைய   "நற்
செய்தி"யையே,      தன்னுடைய   "நற்செய்தி"      எனக் கொண்டு
தொடங்குகிறார்!  கிட்டத்தட்ட  தனது குரு விட்ட இடத்திலிருந்து  
இயேசு   தனது    ஆன்மிகப்   பணியைத்    தொடர்வதாகத் தெரி
கிறது!

அடுத்து, இயேசுவைப்   பற்றிப் பேசும் போது, புத்தரைப் பற்றிப்
பேசாமல் இருக்க முடியாது. ஏனெனில்,இயேசுவுக்கு 500 ஆண்டு
களுக்கும்  முன்னரே புத்தர் தனது வழியை நிறுவிச்சென்று விட்
டார். மானிடர்களை துன்பதிலிருந்துவிடுவிக்கும் "நடு-வழி"யை
புத்தர் தமது "நற்செய்தி"யாகப் போதித்தார். "ஆசையே துன்பத்
திற்கு காரணம்" என்று சொன்னார்.  ஆசைக்குக் காரணம் "அறி
யாமை"யே  என்றார்.   ஆகவே,   அறியாமையைப்        போக்கிடு
வதற்கு,  "எண்-வழிப்பாதை" யையும்     வகுத்துக்   கொடுத்தார்.
மேலும், "நிர்வாணம்" அல்லது   "உயர்-பேரறிவு" அடைவதையே
மனித- வாழ்க்கையின்    ஒப்பற்ற    இலக்கு   என  அறிவித்தார்!
ஆம்,  புத்தரின் "நிர்வாணம்" என்பதும்,    இயேசுவின் "பரலோக
ராஜ்யம்" என்பதும் ஒரே மெய்ம்மையைத்தான்  குறிக்கின்றன!

கிட்டத்தட்ட  எல்லா ஞானியரின், மகானின்  நற்செய்தியும் ஒரு
நிபந்தனையுடன்   இணைக்கப் பட்டதாகவே  உள்ளது!     எல்லா
வாக்குத் தத்தங்களும்,   வாக்குறுதிகளும்   நிபந்தனைகளுடன்
கூடியதாகவேயுள்ளன.   நிபந்தனைகளை   நிறை    வேற்றாமல்
யாதொரு   பயனையும்,   பலனையும்    பெற முடியாது,   என்பது
புத்தரின்,   அல்லது,   இயேசுவின்  குரூரமான சொந்த விருப்பம்
அல்ல!  மாறாக,  அது  "வளர்ச்சி"யைக்  கோரும் வாழ்க்கையின்
விதியாகும்! வளர்ச்சியின், அதாவது வாழ்க்கையின் விதிகளை
நிறைவேற்றியதன்     மூலமாகத்தான்    கௌதம சித்தார்த்தன்,
"புத்தர்" ஆனார்;  இயேசு, "கிறிஸ்து" ஆனார்.
                <<<><><><>><>>>

குறிப்பு:- "இயேசுவை மறுகண்டுபிடிப்பு செய்தல்" எனும் பெருந்
                   தலைப்பின்  கீழ்  வெவ்வேறு  சிறுசிறு தலைப்புகளில்
                   இயேசுவின்    அற்புதமான   வசனங்களுக்கான விளக்
                   கங்கள் அடுத்தடுத்த பதிவுகளில் வெளியாகும்.
                *   *    *    *
மா.கணேசன்/ 27.04.2016
 







No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...