Monday, 27 February 2017

மாற்றமனைத்தும் முடிவுறும்!





எங்கு கேட்டாலும்,  யார் பேசினாலும்  "மாற்றம் மட்டுமே மாறாதது!" என்கிற
கோஷத்தை தங்களது நிலையில் பல வருடங்களாக  சிறிதும் மாறாத; தமது
சிந்தனையில்   சிறிதும்  வளராத  மனிதர்கள்  கிளிப் பிள்ளைகளைப் போல
சிந்தனையின்றி திரும்பத் திரும்ப முழங்கி வருகிறார்கள்!

'மாற்றம்'  என்பது   நிச்சயம் உள்ளது!  ஆனால், "ஆதியில் மாற்றம் இருந்தது!"
என்று  சொல்லும்  வகையில்  நிச்சயம்  இல்லை!  அதாவது,  'மாற்றம்'  என்று
தனியே ஏதும் இல்லை!

மாற்றம் என்பது எப்போதும் ஒன்றை, ஒரு பொருளைச் சார்ந்தே  செயல்பாட்
டிற்கு  வருகிறது!   ஆனால்,  ஒரு பொருள்  முழுமையாக,   பூரணமாக   உள்ள
தென்றால்,   அப்பொருள் மாற்றத்திற்கு உட்படும் விதியைக் கடந்தது என்று
தான் கருதவேண்டும். ஆகவே,மாற்றம் என்பது நிரந்தரமான விதியாகவோ,
வகையினமாகவோ இருக்கவியலாது!ஆகவே,"மாற்றம் மட்டுமே மாறாதது!"
எனும் கோஷம் பிழையானது ஆகும்!

மேலும்,  மாற்றம்  என்பது  தன்னளவில் ஒரு விதியும் அல்ல! அது எப்போதும்
வேறு  ஒரு விதியின், செயல் திட்டத்தின் கருவி போன்றதே யாகும்! மாற்றம்
என்பது    எப்போதும்   ஒரு   இயக்கத்தின்  பகுதியாக,   கருவியாக   மட்டுமே
செயல்படமுடியும்!  இயக்கம் என்றாலே அது இலக்கையுடையது என்றுதான்
அர்த்தமாகும்;  இலக்கு  இல்லாமல் எவ்வொரு இயக்கமும் இருக்க முடியாது!
ஆக,   குறிப்பிட்டதொரு   இயக்கம்   தனது   இலக்கை   எட்டியதும்,  அதாவது
முழுமை பெற்றதும், மாற்றம் என்பதும் முடிவிற்கு வந்து விடும்!

ஒரு  விதையானது,  முளைத்து  செடியாக  வளர்ந்து, பிறகு மரமாக உயர்ந்து,
ஒரு கட்டத்தில்,பூக்கிறது,பிறகு பூக்கள் பிஞ்சுகளாக மாறுகின்றன; அடுத்து
பிஞ்சுகள்   காய்களாகின்றன;  பிறகு  காய்கள்  முற்றிக்  கனிகளாகின்றன.
ஆக,  ஒரு  விதையானது  கட்டம்  கட்டமாக  மாற்றத்திற்குள்ளாகி,   முடிவில்
கனிகளுக்குள் விதைகளாக தனது இலக்கை அடைந்ததும் மாற்றம் என்பது
முடிவிற்கு வந்து விடுகிறது!  

மாற்றம்  என்பது  வெறுமனே ஒரு பொருள் மாறுபாடு அடைவதைக் குறிப்ப
தற்கு மேல்,  குறிப்பாக  யாதொரு  அர்த்தத்தையும்,  நிலையையும்,  தன்மை
யையும்  குறிப்பதில்லை.  அதாவது,  வளர்ச்சி,  பரிணாமம்,  இயக்கம் ஆகிய
வற்றின்   கருவியாக   மட்டுமே   மாற்றம்   என்பது   அர்த்தம்    பெற முடியும்!
ஆகவே, மாற்றத்தைப் பெரிதாகச் சிலாகித்துப் பேசுவதற்கு ஒன்றுமில்லை!

மேலும்,  'மாற்றத்திற்காக மாற்றம்',   'முடிவில்லாத மாற்றம்'   என்று  எதுவும்
இல்லை! ஏனெனில்,  'மாற்றத்திற்காக மாற்றம்',  'முடிவில்லாத மாற்றம்' என்
பவை  இலக்கற்றவை,  ஆகவே அர்த்தமற்றவை!  போய்ச்சேருவதற்கு குறிப்
பாக  யாதொரு முடிவிடமும் இல்லாத முடிவேயில்லாத பயணத்தைப்போல!

ஒரு  விதையானது  தன் வளர்ச்சிப் போக்கையும், அல்லது, அடியோட்டமான
திட்டத்தையும்,   இலக்கையும்   தன்னுள்  உட்பொதிவாகக்   கொண்டுள்ளது!
ஆக  இவ்வம்சங்கள் தான்  முதன்மையானவை;  இவற்றைப்  பிரதானமாகக்
கணக்கில் கொள்ளாமல், வெறுமனே 'மாற்றம்' என்பதை பெரிதுபடுத்துவது
பொருத்தமற்ற பார்வையாகும்!

ஒரு  விதையிலிருந்து  முளைத்தெழுந்து, வளர்ந்து பரந்து விரிந்த மாபெரும்
விருட்சம் தான் இம்மொத்தப்பிரபஞ்சமும்; அதற்கென ஒரு வளர்ச்சிப் போக்
கும்,  அடியோட்டமான  திட்டமும்,  தொலைவான தொரு  இலக்கும்  உள்ளது!
ஆக,  "பிரபஞ்சம் மாறிக்கொண்டே இருக்கிறது!",   "நீங்கள்  நேற்று   குளித்த
அதே  ஆற்றில்  இன்று குளிக்க முடியாது!",   " பிரபஞ்சம்  என்பது   இயக்கத்தி
லுள்ள பொருள்!"   என்பதாகவெல்லாம்  மாற்றத்தைப் பிரதானப்படுத்துகிற
வகையில், மேலோட்டமாகப் பேசுவது பயனற்றது!

பிரபஞ்சம்  என்பது  பருப்பொருளை  ஊடகமாகக் கொண்டு  ஒப்பற்றதொரு
இலக்கு நோக்கிச்செல்லும் இயக்கம் எனக்காண்பதுதான் சரியான பார்வை
யும்,  புரிதலும்  ஆகும்!  இதற்கு மாறாக,  'பிரபஞ்சம்  மாறிக்கொண்டேயிருக்
கிறது!"   என்று  காண்பது  மிகவும் மொண்ணையான பார்வையாகும்! ஏனெ
னில்,பிரபஞ்சம் வெறுமனே மாறிக்கொண்டேயிருக்கவில்லை;அது வளர்ந்து
கொண்டே செல்கிறது; முக்கியமாக, குறிப்பானதொரு இலக்கு நோக்கி முன்
னேறிச் சென்று கொண்டுள்ளது என்று காண்பதுதான் சரியானது! இவ்விடத்
திலும்,   இன்னும் பிற இடங்களிலும்,  'மாற்றம்' என்ற சொல்லுக்குப் பதிலாக
"வளர்ச்சி" அல்லது "பரிணாமம்" எனும் சொற்களைப்பயன்படுத்துவது தான்
மிக்கப்பொருத்தமாக இருக்கும்!

இவ்வாறே,   ஒரு  ஆறு  என்பது  ஓடிக்கொண்டேயிருக்கிறது  என்பதால்,  ஒரு
முறை  நாம்  குளித்த  அதே  தண்ணீரில்,  இரண்டாவது முறை  நாம் குளிக்க
முடியாது  என்பது புரிந்து கொள்ளக்கூடியதே; ஆனால், அப்புரிதல் எவ்வகை
யிலும்  இறுதியானதல்ல!  ஏனெனில், எந்தவொரு ஆறும் முடிவேயில்லாமல் ஓடிக்கொண்டேயிருப்பதில்லை; மாறாக,எல்லா ஆறுகளும் முடிவில் கடலில்
சென்று கலக்கவே செய்கின்றன! ஆக, ஆற்றுக்கு இலக்கு உள்ளதைப்போல,
மனித  வாழ்க்கைக்கும்   இலக்கு   உள்ளது.   மனிதன்  வெறுமனே   வாழ்ந்து
கொண்டேயிருப்பதில்லை;  அதில்  அர்த்தமும் இல்லை!  இன்னும் அவன் எப்
போதும் ஆற்றில் குளித்துக்கொண்டேயிருக்கவும் முடியாது!

இவ்வாறே,பிரபஞ்சம் என்பதும் ஒரு ஆறுதான்!அது வெறுமனே ஒரு எந்திரம்
போல  இயங்கிக் கொண்டேயிருக்கும்  ஒன்றல்ல!  அது ஒரு ஒப்பற்ற இலக்கு
நோக்கிச் செல்லும் ஒரு பரிணாம இயக்கமாகும்!

ஆக,மாற்றத்தைக் கருவியாக, வழிமுறையாகக்கொண்ட எவ்வொரு வளர்ச்
சியும், பரிணாமமும், இயக்கமும் இறுதியில் முடிவைத்தழுவியே ஆகவேண்
டும்!   அதாவது,    இலக்கு  நிலையை அடைந்தேயாக வேண்டும்!  ஏனெனில்,
இலக்கு நிலைதான் எவ்வொரு வளர்ச்சி, பரிணாமம், அல்லது, இயக்கத்தின்
நிறைவும்,   முழுமையும்  ஆகும்!  இம் முழுமை நிலை  என்பது சாத்தியமான
மாற்றங்கள் அனைத்தையும் தீர்த்து முடித்த இறுதி நிலையாகும்!

ஆம், இறுதியில், இலக்குநிலை மட்டுமே முக்கியமாகும்! ஏனெனில், அனைத்
தின்    ஆரம்பமாகவும்,   மாற்றத்திற்கு   உட்படும்  வழிமுறையாக  அமைந்த
வளர்ச்சிப் போக்காகவும், பரிணாமத் திட்டமாகவும், நெடிய இயக்கமாகவும்
விரிந்த  "மெய்ம்மை"  மீண்டும்  தன்னை ஒருங்கே திரட்டி மீட்டிடும்  ஒருமை
யும்   முழுமையுமான நிலையே  இலக்கு ஆகும்!


மா.கணேசன்/ நெய்வேலி/ 16.02.2017
----------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...